Nov 30, 2009

ஜோக்ஸ்

மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணு நல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர்கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?

மனைவி: ஏங்க, என் கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா எதுங்க?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்

மனைவி: ஏங்க, சமையல்காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத் தானே.

மனைவி: நம்ம பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.
கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.

டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.

பிஸ்ஸா, பர்கர் கடைக்காரர்: சார், ஒங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச்சொல்வாங்க.

கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒரு ரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.

காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப் போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணு மாசம். மொதல்ல நீ தாலிய கட்டு.

போலீஸ் சர்தார்ஜி: வேகமா வண்டிய ஓட்டக்கூடாதுன்னு ஒனக்குத் தெரியாதா? எடு லைஸன்ஸ.
ட்ரைவர் சர்தார்ஜி: லைசன்ஸுன்னா என்னா, எப்டி இருக்கும்.
போலீஸ்: சதுரமா உன் போட்டோ ஒட்டி இருக்குமே, அது.
(ட்ரைவர் சர்தார்ஜி ஒன்னும் புரியாம ஒரு மூஞ்சி பாக்கற கண்ணாடிய எடுத்துத் தராரு போலீஸ் சர்தார்ஜி கிட்ட)
போலீஸ் சர்தார்ஜி: அட நீயும் போலீஸ் தானா, சாரிப்பா, தெரியாம நிறுத்திட்டேன். போங்க போங்க.

ஆபீஸ் பையன் தொப்பிய ஸ்டைலா திருப்பிப் போட்டுனு இருக்கறத பாத்த சர்தார்ஜி தானும் ஆசையா தன்னோட தலைப்பாகைய திருப்பி வச்சிக்கினாரு. சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவர பாத்த பக்கத்து வீட்டு சர்தார்ஜி: நீ ஆபிஸுக்கு போயிட்டு இருக்கியா, ஆபீஸ்லேந்து வந்துனு இருக்கியா?!!

ஒரு ஊர்ல சர்தார்ஜி நாட்டு வைத்தியர், அவரோட வ்யாபாரம் புதுசா வந்த ஒரு டாக்டரால படுத்துப் போச்சு. ரொம்ப யோசிச்சு புது டாக்டரோட வைத்தியம் சரியில்ல, வ்யாதி தீரலைன்னு நிரூபிச்சிடலாம்னு அவர்கிட்ட போயி, "டாக்டர், எனக்கு ருசியே தெரிய மாட்டேங்குது, எந்த மருந்து சாப்டாலும் சரியாகல" ன்னார். புது டாக்டர் அவர் அஸிஸ்டென்ட் கிட்ட, "அந்த 43 -ஆம் நம்பர் லேகியத்த எடு" ன்னார். அந்த லேகியத்த எடுத்து நம்ம சர்தார்ஜி வாயில் போட்டார். சர்தார்ஜி: அய்யய்ய, கருமம், கருமம், இது எருமை மாட்டு சாணிய்யா" ன்னார். புது டாக்டர், "ஒங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சிடிச்சு, பாத்தீங்களா நம்ம வைத்தியத்த" ன்னார். சர்தார்ஜி நொந்து போய் திரும்பி வந்துட்டார். கொஞ்ச நாள் கழிச்சு, திரும்பியும் புது டாக்டர்கிட்ட போயி, "ரொம்ப ஞாபக மறதியா இருக்கு டாக்டர், ஒண்ணும் தோண மாட்டேங்குது" ன்னார். புது டாக்டர் பாத்தார். அஸிஸ்டெண்ட் கிட்ட, "எடு அந்த 43 -ஆம் நம்பர் லேஹியத்த" ன்னார். அவ்ளோதான், சர்தார்ஜி உட்டார் ஓட்டம்.

நண்பர் வீட்டுக்கு வந்த சர்தார்ஜி கடும் மழைல மாட்டிக்கிண்டார். நண்பர் இரவு அங்கேயே தங்கிட்டுப் போக சொன்னார். கேக்காம ஓடிப்போன சர்தார்ஜி கொஞ்ச நேரத்துல நல்லா நனைஞ்சு போயி வந்தார். நண்பர்: எங்க போயிட்டீங்க நான் சொன்னத கேக்காம? சர்தார்ஜி: எப்டியும் நைட்டு வீட்டுக்குப் போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு இந்த மழைல. அதான் சொல்லிட்டு வந்தேன்

காபிக்கடையில் நண்பனிடம்: காபி ஆறிப்போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சு ரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.

தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

நண்பன் 1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர் எழுதற?
நண்பன் 2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.

ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர் 2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா

நண்பர் 1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர் 2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும் முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியதுதானே.
நண்பர் 1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல

பக்தை: fபாதர், என்னோட கிளிகள் எப்பப் பாத்தாலும் சினிமா பாட்டையே பாடினு இருக்குங்க, பக்திப் பாட்டே பாட மாட்டேங்குதுங்க.
Fபாதர்: என்னோட கிளிகள் எப்பவும் ப்ரேயர் தான். உன் கிளிகள என்னோடதோட பழக விட்டா கொஞ்ச நாள்ல உன்னோடதும் பக்திக்கு மாறிடும்.
(கொண்டாந்து விட்டாச்சு, Fபாதர் கிளிகள் ப்ரே பண்ணினு இருக்குங்க)
பக்தை கிளி: அழகிய அசுரா, அழகிய அசுரா, அத்து மீற ஆசை இல்லியா...
Fபாதர் கிளி: (நண்பன் கிளியிடம்) டேய், நம்ம ப்ரேயர்க்கு பலன் கெடச்சிடுச்சு.

பஸ்ஸுல மந்திரி, கலெக்டர்னு யார் ஏறினாலும் மொதல் சீட்டு ட்ரைவருக்குத் தான்.

மேல் உலகத்துல சாமி மொதல் ஆளுகிட்ட: நீ சின்ன வயசுல பண்ணின தப்புக்கு ஒனக்கு ஒரு எரிஞ்சு போன பொண்ண பரிசா தரேன்.
ரெண்டாவது ஆளுக்கு ஒரு அழகான பொண்ண பரிசா தரார்.
மொதல் ஆள்: என்னாங்க இப்டி பண்றீங்க.
சாமி: இது அந்த பொண்ணு சின்ன வயசுல பண்ணின தப்புக்கு

நண்பர் 1: எதுக்குடா உன் வீட்டுல மூணு நீச்சல் குளம் கட்டி இருக்க.
நண்பர் 2: ஒண்ணு ஜில் தண்ணில குளிக்கறவங்களுக்கு, இன்னொன்னு வெண்ணீர்ல குளிக்கறவங்களுக்கு, மூணாவது காலித்தொட்டி, நீச்சல் தெரியாதவங்களுக்கு.

ஒரு நேர்முகத்தேர்வு
கேள்வி கேட்பவர்: எலெக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்வி கேட்டவர்: யேய், யேய், யேய் நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....

காதலி: நாளைக்கு எனக்கு பொறந்த நாள், ஒரு ரிங் தரியா ப்ளீஸ்
காதலன்: லேண்ட் லைனுக்கா, செல்லுக்கா !!!

குண்டுப் பயணி: கண்டக்டர், எனக்கு ரெண்டு டிக்கெட் குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யா ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட்டு
பயணி: ம்... குண்டா இருகேன்ல, அதான். ஒனக்கேன் டிக்கெட்ட குடு.
கண்டக்டர்: இந்தா 2 டிக்கெட்டு, 21ஆவது சீட்டும், 37ஆவது சீட்டும் காலியா இருக்கு, போயி ஒக்காந்துக்க.

போலீஸ் 1: என் பையன் விவரம் தெரியாம திடீர்னு நேத்திக்குத் துப்பாக்கிய எடுத்து என் மனைவி நெத்திப் பொட்டுல சுட்டுப்புட்டான்.
போலீஸ் 2: அய்யய்யோ, என்னா ஆச்சு. எங்க இருக்காங்க, என்னாப்பா இப்டி சொல்ற.
போலீஸ் 1: ஏய் ஏய் ஏன் பயப்பட்ற, கண்ணாடில தானே ஒட்டி வெச்சிருந்தா, அது தூள் தூளா ஒடஞ்சு போச்சு போ.

மருமகள்: என் மாமியார் நேத்திக்கு கிணத்துல விழுந்து செத்துப் போயிட்டாங்க.
பக்கத்து வீட்டு மருமகள்: ம்.... எல்லார் வீட்லயும் தான் கிணறும் இருக்கு, மாமியாரும் இருக்காங்க. ம்... அதெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.
மருமகள்: எல்லாம் தன்னால விதிப்படி நடக்கும்னு கையக் கட்டிக்கிட்டு ஒக்காந்திருந்தா இருக்க வேண்டியது தான்.

எறும்பு சாக்பீஸ பாத்துட்டு ஒருத்தன்: இப்பத்தான் புரியுது, எதாவது கொலை நடந்துட்டா ஏன் போலீஸ் சாக்பீஸ்ல கோடு போட்றாங்கன்னு.

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.
ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.
நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.
ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.

ரயில்வே தேர்வாளர்: ரெண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனே என் தம்பியை வரச் சொல்லிடுவேன். அவன் இதுவரைக்கும் ஒரு ரயில் விபத்த கூட பாத்ததில்ல.

ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால் தோசை, ஒரு பொங்கல், ஒரு ஆமை வடை, ஒரு உளுந்து வடை, ...
ஜட்ஜ்:
ஷட் அப், ஷட் அப்
கைதி:
இல்ல, இல்ல ஒரு செவன் அப்

சர்வர்:
டெய்லி பார்சல் வாங்கினு போறீங்களே, இங்கயே சாப்ட வேண்டியது தானே சார்.
வந்தவர்:
டாக்டர் என்ன ஹோட்டல்ல சாப்ட கூடாதுன்னு சொல்லி இருக்காரு.

நண்பன் 1:
சண்டை போட்டுனே இருக்கியே, மனைவி செத்துட்டா என்னடா பண்ணுவ
நண்பன் 2:
பேச்சுலர்னு போட்டுப்பேன்

சர்தார் 1:
எதுக்குடா மெழுகுவத்தி ஏந்தி வைச்சிருக்க
சர்தார் 2:
கரண்ட் இல்ல
சர்தார் 1:
சரி, fபேனையாவது போடு
சர்தார் 2:
லூசு, போடாத, மெழுகுவத்தி அணைஞ்சுடும்

சர்தார்:
செக் புக் தொலைஞ்சு போச்சு சார்
மற்றவர்:
அட ராமா, எவனாவது கையெழுத்து போட்டு பணத்தையெல்லாம் எடுத்துடப் போறான்.
சர்தார்:
அப்டி ஒன்னும் நடந்துடாது, நான் ஏற்கனவே எல்லாத்துலையும் கையெழுத்த போட்டு வெச்சிட்டேன்

சர்தார் 1:
நாளைக்குப் படத்துக்குப் போறேன் வரியா
சர்தார் 2: முடிஞ்சா வரேன்
சர்தார் 1: முடிஞ்சுட்டா ஒண்ணும் புரியாது, ஆரம்பிக்கும்போதே வந்துடேன்

மூணு சர்தாருங்க ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு ட்ரெயின்ல ஏறினாங்க. இத பாத்த கூட வந்த 2, 3 வெள்ளைக்கார பயணிகளுக்கு ஒரே குழப்பம். எப்படி சமாளிக்கறாங்கன்னு பாக்கலாம்னு நினைச்சாங்க. டி.டி.ஆர் வரும்போது மூணு சர்தார்களும் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. டி.டி.ஆர் கதவ தட்டி டிக்கெட் கேட்டாரு. ஒருத்தர் மட்டும் கைய நீட்டி டிக்கெட்ட நீட்டினாரு. டி.டி.ஆர் செக் பண்ணிட்டுப் போய்ட்டாரு. வெள்ளக்காரர்களுக்கு ஏமாற்றமா போய்டுச்சு. திரும்பி வரும்போது அவங்களும் ஒரே ஒரு டிக்கெட் வாங்கிக்கிட்டாங்க. ஆனா இப்ப சர்தாருங்க டிக்கெட்டே வாங்கல. எப்படியோ மாட்டிக்கட்டும்னு ஏறியாச்சு எல்லாரும் வண்டில. டி.டி.ஆர் வராரு. வெள்ளக்காரங்க எல்லாரும் ஒடனே பாத்ரூம்குள்ள போய்ட்டாங்க. இப்ப ஒரு சர்தார் எழுந்து போயி பாத்ரூம் கதவ தட்டி "டிக்கெட், டிக்கெட்" னாரு. ஒரு வெள்ளக்காரர் மட்டும் கதவ திறந்து ஒரு டிக்கெட்ட நீட்டினாரு. நம்ம ஆளு அத வாங்கிட்டு வந்துட்டாரு.

ஒரு நண்பர் சர்தார்ஜிய சினிமா பாக்கக் கூட்டிட்டுப் போனார். படம் ஆரம்பிக்கும்போது "தேவர் பிலிம்ஸ்" னு போட்டாங்க. ஒடனே சர்தார்ஜி நான் இந்த சினிமா ஏற்கனவே பாத்துட்டேன்னு எழுந்து போயிட்டாரு.

செராக்ஸ் கடைக்காரர்: காப்பி அடிக்கக்கூடாதுன்னு ஒண்ணாங்க்ளாஸ்லேந்து சொல்லினு இருந்தாங்க எல்லாரும். எனக்கு என்னமோ அன்னிலேந்து இன்னி வரைக்கும் காப்பிதான் கை கொடுத்து வாழவைக்குது.

அப்பா: அழாதப்பா, அழாதப்பா ப்ளீஸ், அம்மாதானே அடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்ன மாதிரி என்னால தாங்கிக்க முடியல

டீச்சர்: பாக்டீரியா படம் வரைய சொன்னேனே, ஏன் வரையல நீ
பையன்: வரைஞ்சிட்டேன் மிஸ், ஆனா பாக்டீரியாதான் கண்ணுக்குத் தெரியாதே

அப்பா: என்னடா இவ்ளோ கம்மியா மார்க் வாங்கிருக்க
மகன்: பயங்கர விலைவாசிப்பா இப்பல்லாம், எதையுமே வாங்க முடியல

அப்பா: எங்கடீ சட்டைல வெச்சிருந்த 100 ரூபாயக் காணம்
அம்மா: நீங்க தானே புள்ள பரிச்சைக்குப் போறேன்னதுக்கு 10, 20 ன்னு எடுக்கக் கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்

டீச்சர்: ஏண்டா லேட்டு,
பையன்: ஸ்பீடாதான் டீச்சர் வந்தேன், வாசல்ல "பள்ளிப் பகுதி, மெதுவாகச் செல்லவும்" போட்ருந்துது. அதான் டீச்சர் லேட் ஆய்டுச்சு.

பையன் அப்பா குரலில் ஸ்கூலுக்குப் போன் போட்டு: ராமு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான் சார். அவனுக்கு ஒடம்பு சரியில்ல
ஸ்கூல்: நீங்க யாருங்க பேசறது.
பையன்: எங்கப்பாதான் பேசறேன்!!

அப்பா: என்னடா எக்ஸாம்ல கேள்வில்லாம் எப்டி இருந்துது.
மகன்: ஈஸியாதாம்ப்பா இருந்துது
அப்பா: நல்லா பண்ணியிக்கியா
மகன்: அதான் ரொம்ப கஷ்டம்ப்பா

சார்: ஒங்கிட்ட 100 ரூபா குடுக்கறேன். அதுல 25 ரூபாய திருப்பி வாங்க்கிகறேன். இப்ப உங்கிட்ட எவ்ளோ பாக்கி இருக்கும்.
பையன்: ஒண்ணும் இருக்காது சார்.
சார்: என்னடா, இந்த கணக்குக்கூடவா தெரியல.
பையன்: உங்களுக்குதான் சார் என்னப் பத்தி தெரியல
சார்: சரி, இப்ப உன் கிட்ட ஒரு ரூபா இருக்கு, ஒங்கப்பா கிட்ட ஒரு ரூபா கேக்கற. அப்ப ஒங்கிட்ட எவ்ளோ இருக்கும்
பையன்: ஒரு ரூபாதான் சார்
சார்: எப்டிடா
பையன்: ஒங்களுக்கு எங்கப்பா பத்தியும் தெரியல சார்

சார்: பயங்கரமான காட்டு மிருகங்கள் 10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலி சார்

சார்: கட்டபொம்மன எங்க தூக்குல போட்டாங்க
பையன்: கழுத்துல சார்

நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்த பேஷண்ட்டுக்கு பல்ஸ் கொறஞ்சுக்கிட்டே போகுது, என்ன பண்றது டாக்டர் இப்போ
டாக்டர்: அவங்க சொந்த காரங்கள ஒடனே பில்ல கட்ட சொல்லுங்க

டீச்சர் மற்றொரு டீச்சரிடம்: அந்தப் பையன தலைய சீவிட்டு வாடான்னு சொன்னா, யார் தலையன்னு கேக்கறாம்ப்பா.

அப்பா: ஒங்க சார் ஒங்களுக்கு எத்தன பாடம் சுமாரா நடத்துவாரு.
மகன்: அவர் எல்லாப் பாடத்தையுமே சுமாரா தாம்ப்பா நடத்துவாரு.

டீச்சர்: என்னடா கணக்குல பெரிய புலின்னு சொன்ன, சீரோ மார்க் வாங்கிருக்க.
பையன்: பதுங்கி இருக்கேன் டீச்சர்

டீச்சர்: நில நடுக்கம் எப்ப வரும்
பையன்: பூமிக்குக் குளுரும் போது வரும் டீச்சர்

டீச்சர்: அந்தமான் எங்க இருக்குன்னு சொல்லு
பையன்: எந்தமான் டீச்சர்
டீச்சர்: துடுக்காவா பேசற, பெஞ்ச்ல ஏறு.
பையன்: ஏறினாலும் தெரியல டீச்சர்

டீச்சர்: என்னது, தண்டவாளத்துல பஸ் போகுதா, எங்கடா போகுது.
பையன்: எங்க ஊர் லெவல் க்ராசிங்ல டீச்சர்.

டீச்சர்: பப்பூ எழுந்திரு, உங்கிட்ட ஒரு கேள்வி. தலைல எத்தன முடி இருக்கும்
பப்பூ: ஒரு லட்சம் டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒரு கேள்வி தானே டீச்சர் கேக்கறேன்னு சொன்னீங்க

மகன்: அப்பா, அப்பா, ஒங்களால கண்ண மூடிட்டே கையெழுத்துப் போட முடியுமாப்பா
அப்பா: ஓ முடியுமே
மகன்: இருங்க இங்கயே, ப்ராக்ரஸ் கார்ட கொண்டு வரேன்

கடைக்காரர்: பத்து பழம் பத்து ரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம் கொறைக்கக் கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டு பழம் எடுத்துக்கங்க

மகன்: அப்பா எனக்கு க்ளாஸ்ல போர்டே தெரிய மாட்டேங்குது
அப்பா: அடடே, என்னப்பா சின்ன வயசுலயே இப்டி சொல்ற, சரி நல்ல டாக்டரா பாத்து, போய் காமிக்கலாம்.
மகன்: அட, அது இல்லப்பா, முன்னாடி ஒருத்தன் ஒசரமா ஒக்காந்துருக்காம்ப்பா.

டீச்சர்: நீ வலது கைல எழுதுவியா, எடது கைல எழுதுவியா
பையன்: நான் பேனால தான் டீச்சர் எழுதறேன்.

டீச்சர்: பப்லு, ஒங்கப்பா என்ன வேல பாக்கறாரு.
பையன்: எங்கம்மா சொல்ற எல்லா வேலையையும் பாப்பாரு டீச்சர்

அப்பா: என்னடா போன தடவ 98 மார்க் வாங்கிட்டு, இந்த தடவ 2 மார்க் வாங்கிருக்க
மகன்: என்னப்பா நீ, போன தடவ என்னன்னா மிச்சம் ரெண்டு மார்க் எங்கன்னு கேட்ட, இப்ப என்னன்னா போன தடவ வாங்கினத கேக்கற.

கண்டக்டர்: யோவ் யோவ் இங்கெல்லாம் ஸ்டாப் கெடையாது, எறங்கு, எறங்கு
ஏறியவர்: ஏற மட்டும் கூடாது, எறங்கலாமாக்கும், ஸ்டாப்ல எறங்கிக்கறேன்.
(ஸ்டாப்ல எறங்கிட்டு திருப்பி ஏறிக்கறாரு)
கண்டக்டர்: என்னய்யா ஸ்டாப்ல எறங்கிக்கறேன்னு சொன்ன, திருப்பி ஏறிட்ட
ஏறியவர்: என்னய்யா ஸ்டாப்லயும் ஏறக்கூடாதா, பின்ன எங்க தான்யா ஏற.

அப்பா: உன் வயசுல நான் எப்டி நல்லவனா இருந்தேன் தெரியுமா
மகன்: யாருக்குத் தெரியும். சுவர்க்கத்துக்குப் போகும்போது பாட்டிகிட்ட கேக்கறேன்
அப்பா: பாட்டி நரகத்துக்குப் போயிருந்தா?
மகன்: நீ கேளு

டீச்சர்: என் க்ளாஸ்ல யாரும் தூங்க முடியாது.
பையன்: ஆமா கத்தினே இருந்தா எப்டி தூங்கறது.

டீச்சர்: காந்தி தாத்தா வாழ்நாள் முழுக்க சட்டையே போடல. இதுலேந்து என்ன தெரியுது.
பையன்: அவர் ஒடம்பு டீச்சர்

மகன்: அம்மா, அம்மா ஒரு ரூபா காயினை நான் முழுங்கிட்டேம்மா, வாம்மா டாக்டர்ட்ட போலாம்.
அம்மா: வேணாம், வேணாம், டாக்டர் 100 ரூபாய முழுங்கிடுவாரு.

Nov 10, 2009

சிறப்பாக வாழ்வது எப்படி?

http://www.puratchithalaivar.org/ சைட்ல போய் பாரு. இவர புடிச்சிருக்கோ இல்லியோ வாழும் வகையைத் தெரிஞ்சுக்கவாவது போய்ப் பாரு. தமிழ்லையும் இருக்கு.

Nov 2, 2009

M. K. T பாடல்கள் - 5

41. ஞான ஸபையில் தில்லைக் கானந் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே.
ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே (ஞான)
மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ்-செவ்
வானம் நிகர் சடையாட இள நகை
அரும்பும் மதிமுகமும் திரு விழி யழகுமாய் (ஞான)
நேமியுடன் முழங்காழி யணி
சாரங்க பாணி ம்ருதங்கமும்
நி ஸ த நி ப ம ரி க ம ரி ஸ ஸ்வர
நாத நாரதர் வீணையும்
ஸாம கான விநோதனே-சிவ
காம ஸ¤ந்தரி நாதனே
ஸவாமி அடிமையை யாள் ஸகல ஜகன்
நாதனே பாதமே தீம் ததீம் இசையுடன் (ஞான)

42. இது நிஜமா - நீ
இவ்வடிமைக்கும் காட்சி தந்தது நிஜமா (இது)
ஐயனோடு கைலாசபதி அறியாத ஆதிமூலமே (இது)
(நின்) நாம மொரு முறை சொல்ல என் நாக்கு தந்த பாக்கியமோ
நாயடிமையின் தாய் தந்தையர் தரு நாள் அனுக்ரஹமோ

43. மாநில வாழ்வு பெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே (மாநில)
வான் அமுதம் எழில் மான் விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மன சம்மதம் உண்டோ இல்லியோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ (மாநில)

44. தமியேன் பைந்தமிழ் அன்னையின் பால் அருந்திய தமிழ் பாலன்
தமிழ் வளர உயிர் வாழும் ஊழியன் என்றுலகறியும் (தமியேன்)
தமிழரசி அங்கயற்கண் உமையன்னையே தயவில்லையா
தமிழெனக்கும் எதில் அமர இடம் இல்லையா தகவில்லையோ
தருணம் வதேனயாலை சரணடைந்தேன் இனித்தாளே
வரமருளாய் சபை நடுவே வருன் எழி உந்தனைச்சாரும்

45. சந்த்ர சூரியர் போங்கதி மாறினும் வீழினும் நமக்கென்ன
இந்த இன்பமே சொந்தமதானால் வானுலகும் வேண்டாம் (சந்த்ர)
காதலரன்பைத் தடைசெய்ய உலகிலோர் கருவிக்கு வலிமையுண்டோ?
சாதலே வரினும் அதிலும் இருவரும் பிரிந்திடா உண்மை கொண்டோம்
இந்த உலகிலென் உடல் பொருள் ஆவி நீயே எனதுயிரும்
என்னுடல் உமக்கே சொந்தமிவ்வடியாள் பேசவும் அறியேனே

46. உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது (உண்மை)
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரினும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது (உண்மை)
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
என்னவந்தும் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல் (உண்மை)

47. உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ நாணமுறாளோ?
பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன் பிறவி
பாவனமானேன்
நம்மிருவர் உள்ளம் நிறை காதலிளங்கே
வளர் பிறை போல் வளர்ந்தோங்கவும்
இறைவன் தாள் பணிவோமே

M. K. T பாடல்கள் - 4

31. ஷ்யாமளா தேவி என் ஜீவப்ரியே (ஷ்யாமளா)
பாதை மேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ (ஷ்யாமளா)
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடுவாயே நீயே (ஷ்யாமளா)
ஆசை முகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ
ஆடி வந்து எந்தன் அன்பினை மேவி ஆனந்தம் தாராயோ (ஷ்யாமளா)

32. சிவபெருமான் க்ருபை வேண்டும் அவன்
திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
காம முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
ராமதாஸன் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

33. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ
அற்பப் பணப்பேய்ப் பிடித்தே
அறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய் மொழிவார்
பொருள் விரும்பி தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் உந்தன்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தையிதே அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே மாந்தர் (இவர்)
சிந்தை திருந்தி உய்ய குஹனே
உந்தன் திருவருள் புரியாயோ

34. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

35. தில்லையின் நாயகனே சிவகாம வள்ளி மனோஹரனே - என்
அல்லல் பிணிகள் அற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்
கனகசபேசன் திருநடம் காண விழைந்தேனே - என்
கனவிலும் வேறு நினைவின்றி கருத்தழிந்தேனே
தெள்ளிய நின் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்தோறும்
உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே (தில்லையின்)

36. உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில் (உனைக்)
அண்டத்திலே நில மண்டலமேல்
பல எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவ (உனைக்)
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே (உனைக்)
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே சரச கானத்தில் தேவ (உனைக்)

37. (வெள்ளிமலை) வள்ளலைப் பாடும் வாயால் அறுதலை பிள்ளையைப் பாடுவேனோ
எந்தன் ஸ்வாமியைப் பாடும் வாயால் தகப்பன் ஸ்வாமியைப் பாடுவேனோ
அம்மை அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப் பாடுவேனோ
வள்ளியின் கண்வலை வீசிலை வேடன் கள்ளனைப் பாடுவேனோ
அம்பிகை பாகன் எனும் அகண்ட சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும் தம்பியைப் பாடுவேனோ

38. வசந்த ருது மன மோஹனமே
மலர்ந்த மலரிதழ் மணம் கமழ் தென்றல் (வசந்த)
மல்லிகைப் பூங்கொடி குந்தள வராளி
மொய்த்த மலர் நகை குலுங்க விளங்கும்
நகைப் பைத்தியம் யதுகுலாம் போதிலும்
நனவிலும் கனவிலும் இதே சிந்தையா
சுருட்டி கொணர்ந்து கொடுத்தலுத்தார் போலவே
சொல்லுக்குப் பஞ்சம் இல்லை கொஞ்சும் குயிலின் இசை

39. வதனமே சந்த்ர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? (வதனமே)
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ? (வதனமே)
மின்னும் மோஹனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்
புன்னகை தவழ் பூங்கொடியாள்
புவன சுந்தரியோ? (வதனமே)

40. யானைத் தந்தம் போலே பிறைநிலா

M. K. T பாடல்கள் - 3

21. மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் (மனமே)
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரை புகழ்ந்து பாடாதே
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வேதனையில்
தடுமாறும் மனமோடு துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும் (மனமே)
விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலம் நீங்கும் (மனமே)

22. மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாள்வாய் (மனம்)
தனத்தையே தெய்வம் என நினைந்தாள்
சத்யவார்த்தை தன் உயர்வறியாளே (மனம்)
சாம்ப சதாசிவ சம்போ சிவ சங்கரி பரமேஸ்வரி
வீம்புடனே அஹங்காரம் கொண்டதால்
வேதனை கொண்டாள் பேதை இவள் - மனம்
வேதனை கொண்டாள் பேதையிடம் (மனம்)

23. மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பராமுகம் (மன்மத)
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான் மூன்று உலகிலும் (மன்மத)
என்னுடனே நீபேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கிடுமோ
உன்னை நயந்து நான் வேண்டியும் ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ மனம் கவர் (மன்மத)

24. மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன், யாரும் அறியாமல் (மறைவாய்)
கரையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ
பேதை சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ (மறைவாய்)
மருள்தீர் மெய்தவ ஞானப் பெரியோய் பேதை யான்
மெய்யாய் வடிவேல் அறிய நெஞ்சில் வஞ்சம் அறியேன் ஐயா
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர் களிமண் சுட்ட
கலம் போனால் என்ன செம்பொற் கலமே செய்து தருவேன் (மறைவாய்)

25. கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே (கவலையைக்)
நவரசங்களிலும் ஸ்ருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடெங்கும் இல்லையே (கவலையைக்)
புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி (கவலையைக்)

26. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற (ஒரு நாள்)
வெறு நாளாக்கிப் (நம் வாழ்நாளை) பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல் (ஒரு நாள்)
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம், இதைக்
கண்டு நெஞ்சில் மோகம்
கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை
கொள்ள வெகு வருத்தமே, முனிவர்
தொண்டுசெய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே அதனால் (ஒரு நாள்)

27. பவளமால் மலையை...

28. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை யேதுசெய்தேன் சுகுண (ராதே)
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ - நீ
எங்கு சென்றாலும் நானுன்னை விடுவேனோ ஓடாதே (ராதே)
கண்ணை யிழந்தவன் நீயோ நானோ
கண்ணா நீவேறு நான் வேறோ, எவன் சொன்னவன் (கண்ணை)
விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
விருப்பு வெறுப்பில் பரஞ்சோதி பொருளே இன்று (கண்ணை)

29. ராஜன் மஹராஜன்
திருவெற்றியூர் மேவும் திருவாளன் த்யாக (ராஜன்)
தேஜஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
ஸ்ரீவடிவுடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
மட்டிலா புகழ்மிகு பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை யாட்கொண்டு
பட்டினி பிணி மூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

30. சத்வ குணபோதன் சரணம் இது
சித்தமும் வீணே கலங்குவதேனோ (சத்வ)
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் (சத்வ)
கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மை காக்கும் தயாளன் (சத்வ)

M. K. T பாடல்கள் - 2

11. சொல்லு பாப்பா சொல்லு பாப்பா
சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா (சொல்லு)
வெல்லும் பகை ஒழிய சொல்லு பாப்பா
வெற்றிக் கொடி பறக்க சொல்லு பாப்பா
நல்ல தமிழ் வளர சொல்லு பாப்பா - மக்கள்
ஞான விலாசம் பெற சொல்லு பாப்பா (சொல்லு)
கைத்தொழில் ஓங்கும் என்று சொல்லு பாப்பா - மக்கள்
கஷ்டங்கள் தீருமென்று சொல்லு பாப்பா
வர்த்தகம் ஓங்குமென்று சொல்லு பாப்பா - மக்கள்
வாழும் விதங்களெல்லாம் சொல்லு பாப்பா (சொல்லு)
ஜாதி வித்யாசம் நீங்க சொல்லு பாப்பா - கோவில்
சன்னதி பொது என்று சொல்லு பாப்பா
போது மனத்துறுதி சொல்லு பாப்பா
ஓம் சக்தி என்றே நிதம் சொல்லு பாப்பா

12. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ (சுட்டும்)
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி (சுட்டும்)
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையோ உந்தன் நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரல் இனிமையடி
வாளைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் (சுட்டும்)

13. தீன கருணா கரனே நடராஜா நீலகண்டனே (தீன)
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனை யாண்ட நீலகண்டனே (தீன)
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌனகுருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே (தீன)
ஆதி அந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே (தீன)

14. த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம்தனில் தினம் (த்யானமே)
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் இரு
கண் மயங்கி சாவேனோ (த்யானமே)
லோகமும் அதிலே தோன்றும் இந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆகவும் (த்யானமே)

15. என்னுடல் தனில் ஒரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற்போல் இருந்தும்
என்னுடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண்ணுறங்காது உடல் இளைத்தும்
இன்னமுதூட்டி இன்பத்தாலாட்டி என்னை ஆளாக்கிய
பெருமைக்கு என்னிடம் இயற்கையில்
உங்கள் உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைமாறேது
என்னுயர் தவப்பயன் அம்மையே அப்பா
இம்மையில் எனது கண்கண்ட என்
அருட்கடவுள் அம்மையே அப்பா
எனக்கொரு நற்கதி உண்டோ என்னரும்
விதியா அம்மையே அப்பா
என் பிழை பொறுத்தருள்வீரோ
என்னுயிர் துணையாம் அம்மையே அப்பா
எங்கு சென்றுங்களைக் காண்பேன்
அம்மை அப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
எனதருமைத் தாயே தந்தையே

16. காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை
காண்பதும் எளிதாமோ மஹாத்மா (காந்தியை)
மாந்தரிலே ஞான யோகம் மேவும் தவ
மாந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா (காந்தியை)
அஹிம்சை தனிலே புத்தரவர்
ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்
அறுபகையும் வென்ற கர்ம சீலரவர்
நமது ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த (காந்தியை)
குழந்தை உள்ளமும் அன்பு கனிந்த மொழியும் கொண்டு
கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்
முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்
தகையப் பகையரும் கண்டஞ்சும் சுத்தன் - இனிமேல் (காந்தியை)

17. ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே
ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ (ஞானக்)
ஆன ப்ருந்தாவனமும் அதோ என் எதிரிலே
அனந்த கண்ணன் உருவம் அதோ தெரிவதாலே (ஞானக்)
வானவர் பணிந்திடும் மாதவன் பதம் தொழும்
அனந்தம் கிடைத்த பின்பு எது வந்தாலென்ன (ஞானக்)

18. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டு ரங்கன் அருள் இருந்தால் (இங்கும்)
பங்கஜ மலர் மது உண்ணும் வண்டு போல்
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு (இங்கும்)
உலகெல்லாம் மகிழவே தனது பொருள்
உடல் உயிர் உதவும் உதாரராம்
உலகிலே பொருளிலும் பற்றில்லா
உத்தம சத்குண வித்தகராம்
ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல் வரும்
துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இரவு பகல் ரங்கன் நினைவில் மனோலயமாம்
அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு (இங்கும்)

19. க்ருஷ்ணா முகுந்தா முராரே - ஜய (க்ருஷ்ணா)
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பரதாரி கோபாலா (க்ருஷ்ணா)
காளிய மர்த்தன கம்ச நிஷூதன
கமலாயத நயனா கோபாலா (க்ருஷ்ணா)
குடில குந்தளம் குவலய தள நீலம்
மதுர முரளீரவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
கோபி ஜன மன மோஹன வ்யாபக
குவலயதள நீலா கோபாலா (க்ருஷ்ணா)

20. மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் (மானிட)
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இக பர சுகம் தரும் கருணையாம் (மானிட)
கருவறையினுள் கிடந்து வெளியில் வருந்துயர் நினைந்தாலும் உடல்
கலங்குதே இங்கே திகில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இரு வினை வசமாம் இவ்வுடல் ஒரு நீர்க்குமிழி
இதனிடை உயர் நெறி அடையவே இறைவன் அருளை வேண்டி
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரிபுரமதில் ஒரு முறை கண்டு பணிந்து
ப்ரபோ பாண்டுரங்கா ஜய விட்டலா என்று பணிந்திட (மானிட)

Oct 29, 2009

M. K. T பாடல்கள் - 1

M. K. தியாகராஜ பாகவதர் (ஜனவரி 3, 1909 - நவம்பர் 1, 1959), கர்நாடக சங்கீத மேதை, ஏழிசை மன்னர், திரை இசை பாடகர், நாடக/திரைப்பட நடிகர், படத் தயாரிப்பாளர், தமிழ்த் திரைவுலகின் முதல் சூப்பர் ஸ்டார். மாயவரத்தில் (மயிலாடுதுறை) பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்தார். திருச்சியில் வளர்ந்தார்.

1934 ல் பவளக்கொடி நாடகத்தில் அவர் அர்ஜுனனாக நடித்ததைப் பார்த்த ஒருவர், அடையாரில் ஒரு இடத்தை வாங்கி ஸ்டுடியோ அமைத்து (மீனாக்ஷி ஸ்டுடியோ, அப்பறம் சத்யா ஸ்டுடியோ, இப்ப எம்.ஜி.ஆர் காலேஜ்) அவரை வைத்து அந்த நாடகத்தைப் படமாக உருவாக்கினார். சம்பளம் 4000 ரூபா. 50 பாடல்கள். பாபநாசம் சிவன் அவர்கள் பாடலாசிரியராக அறிமுகம்.

அதன் பின் நவீன சாரங்கதாரா (1936), சிந்தாமணி (1937), சத்தியசீலன் (1938), அம்பிகாபதி (1938), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1940), சிவகவி (1942), ஹரிதாஸ் (1944), ராஜமுக்தி (1948), அமரகவி (1952), ஷ்யாமளா (1953), புதுவாழ்வு (1957), சிவகாமி (1959) ஆகிய படங்களில் நடித்தார்.

மதுரை பொண்ணு ஐயங்கார் என்ற வயலின் வித்வான் இவரின் குரு. பாகவதர் தங்கத் தட்டில் சாப்பிடுவார். பட்டு பீதாம்பரம், வைர வைடுரியம் அணிவார். சொந்தமாக குதிரை, கார்கள், மோட்டார் சைக்கிள், பங்களாக்கள் வைத்திருந்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவர் சென்ற ரயில் 4, 5 மணி நேரம் தாமதமாகத்தான் செல்லும். வழி நெடுக ரசிகர்கள். படித்தவர், படிக்காதவர், சங்கீத வித்வான்கள், பணக்காரர்கள், ஏழைகள் என பல ரசிகர்கள். தாராள குணம் கொண்டவர். கோவில், கல்வி நிறுவனங்கள் போன்றவைகளில் நடக்கும் கச்சேரிகளுக்கு பணம் வாங்க மாட்டாராம். திருச்சி ரேடியோ ஸ்டேஷன் சங்கீத வித்வான்.

முக்யப் பிரமுகர்களைப் பற்றி அசிங்கமாக மஞ்சள் பத்திரிகையில் எழுதி சம்பாதித்துக் கொண்டிருந்த லக்ஷ்மீகாந்தன் என்பவர் 1944 ல் கொலை செய்யப்பட்டதில் MKT யும், NSK யும் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு பின் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். அதன் பின் அதிகமாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாத MKT பல கோவில்களில் தங்கி, பாடல்களைப் பாடிப் பொழுதைப் போக்கி, பலர் அழைத்தும் திரும்பித் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாது இறைவனடி சேர்ந்தார்.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இவர் சமாதி உள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள்
http://en.wikipedia.org/wiki/M._K._Thyagaraja_பாகவதர் லும், அதிலுள்ள reference link களிலும் உள்ளது.

பாடல் வரிகள் சில:

1. ஆனந்த நடன விநோதா தேவ - ஜகன்நாதா (ஆனந்த)
கண் மூன்றுடையாய் கதிநீ ஹரனே
கருணையோடெனைக் கடைக்கண்பார் தயாளா (ஆனந்த)
நஞ்சார் அரவும் பணியாய்க் கொண்டாய்
அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய்
தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லைவாழ் (ஆனந்த)

2. ஆரனங்கே நெஞ்சம் நீயறியாய்
ஆருயிர் தங்களின் நேயமதே பெரும் மாயமதே நீயறியாய் (ஆரனங்கே)
அதரங்கள் ரெண்டும் அணைந்திடா போது
ஆனந்த சொல்லே வருவதும் ஏது
யாழின் தந்திதனை விரல் மீட்டாவிடில்
அமர நாதமே இல்லை யன்றோ (ஆரனங்கே)
வாசிக்கா போது மூங்கில் அன்றோ
வாசித்த போதே முரளி அன்றோ
நேசமாக வண்டு பேசிய போது
வாசத்தேன் மலர் வாழ்வல்லவோ (ஆரனங்கே)
மங்கையின் போல் எல்லாம் மனம் வேண்டாம் என்றால்
மானிடர் சந்ததி மாயும் அன்றோ
இங்கிதம் தெரிந்தே அந்த பரம் பொருள்
இந்நிலம் யுகம் யுகம் தோன்றுவதே (ஆரனங்கே)

3. அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடியினைத் துணையென்றம்பா
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே சங்கரி ஜக (அம்பா)
பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)

4. அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம் (அன்னையும்)
தாயினும் கோவில் இங்கேது - ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு - புண்ய‌
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதிலுண்டு (அன்னையும்)
தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது - மரம்
ஆயின் விதை இன்றி காய் கனியேது (அன்னையும்)

5. அரவா பரணன் திருவடி மறந்து
அடிமையின் மோகம் கொண்டழிவாரே (அரவா)
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத் தறிவிழந் துழல்வாரே (அரவா)
மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை
மனந்தனில் சிவயோகம் பயிராமோ (அரவா)
வாத நோய்க் குலகில் மருந்துண்டு - பிடி
வாத நோயகல மருந்தேது
சாதனை யாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே (அரவா)

6. அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் (அற்புத)
சித்பரனே சிவனே உனதடியார்
செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திரு அபயவரக் கையனுன் (அற்புத)
பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
மாட்டுடையாய் தில்லை காட்டினிலே - அரு
ளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் உன்னைக்
காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் எம்பி
ராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை
துன்பம் ஓட்டுவாய் உந்தன் (அற்புத)

7. பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பதி
காலமும் செல்ல மடிந்திடவோ (பூமியில்)
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே (பூமியில்)
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லை எனில் நர ஜன்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரனே

8. சராசரங்கள் வரும் சுழன்றே
சகடு போலுன் அருளால் (சராசரங்கள்)
மலைகள் மாநதிகள்
அலை பொங்கும் ஆழி - பல்லூழி (சராசரங்கள்)
பரவும் நாதம் பறவைகள்
திருவிளையாடல் ஞானியார்
உணர்வார் ப்ரகாச நடேசா (சராசரங்கள்)

9. செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன் (செடி)
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாது மானே
பாடும் குயிலே பாரு இப்போதே (செடி)
துள்ளி ஓடும் புள்ளி மானை நீங்கள் பிடிக்க முடியுமோ
ஆமை அல்ல நானே, முயல் என்று சொல்ல மாட்டேன்
வண்ண மலர் தூண்டிலில் என் ஜடைப் பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை ஓடுவதால் ஒடியாதோ (செடி)

10. சிதம்பர நாதா திருவருள் தாதா-நின்
சித்தமிரங் காதா திருவடியல தொரு கதியிலன் (சிதம்பர)
பதஞ்சலியும் புலியும் பணியும்
குஞ்சித பதனே ஸஞ்சித மகலாதா (சிதம்)
நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றிலாடும் மணியே செந்தேனே
வாதா அறுபகைத் தீயில் வெந்தேனே (சிதம்பர)

Oct 14, 2009

ஹேப்பி தீபாவளி - 2009

உள்ளே...
மொழிப் ப்ரச்னை,
ஜாதிப் ப்ரச்னை,
மத ப்ரச்னை,
சோத்து ப்ரச்னை,
எல்லா கோர்ட்லையும் நிலுவையில் வழக்குகள்,
வக்கீல், போலீஸ், மாணவர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற பொருப்பானவர்களின் ஒத்துழையாமைப் போராட்டங்கள், அடிதடிகள்
விவசாய ப்ரச்னை,
உற்பத்தி ப்ரச்னை,
தண்ணீர் ப்ரச்னை,
சிலை ப்ரச்னை,
படிப்பு, பகுத்தறிவு ப்ரச்னை
தீவிரவாத ப்ரச்னை
போக்குவரத்துப் ப்ரச்னை
இயற்கையோட எதிர்த்து செயல்படறது,
லஞ்சம், பொருள்களின் தரக்குறைவு, ஆனால் விலை அதிகம்

வெளிலேந்து,

எல்லைப் ப்ரச்னை,
தமிழன், நான்-தமிழன் ப்ரச்னை,
இந்தியன், நான்-இந்தியன் ப்ரச்னை,
நம்மக் கடல்ல மற்ற நாட்டுக் கழிவுகள் கொட்றது,
நம்ம ஊர்க்குள்ள தரமற்ற, கேடான பொருள்களை விக்கறது,
தீவிரவாத, பயங்கரவாத ப்ரச்னை,
மத்த நாடுகளுடனான உறவு, ஒப்பந்தங்கள்ல ப்ரச்னை
நம்மள எதிர்க்கக் கூட்டு சேரும் நாடுகள், கூட இருந்தே குழி பறிக்கும் நாடுகள், நட்பு நாடுகள், நம்மள நம்பி இருக்கற நாடுகள்...

இந்த ப்ரச்னைகளால குளிர் காயறவங்க, பொழப்பு நடத்தறவங்க


இதுல நம்ம பங்க எதுலையாவது, எந்த விதத்துலையாவது, எப்படியாவது செயல்படுத்த யோசிக்கணும்,
நல்லதைத் தெரிஞ்சுக்கறதவிட இந்த மாதிரி கெட்டதுகள பத்தி நிறையா தெரிஞ்சுக்கணும். தயாராகனும். பதிலுக்கு எதுவும் கிடைக்குமான்னு தெரியல. பொறந்ததுக்கு ட்ரஸ் போட்டு, சாப்பிடறா மாதிரி இதெல்லாம் இப்ப இருக்கற நிலைமைல.
ஒவ்வொரு டாபிக்கையும் கவனிச்சு, விஷயத்தை தெரிஞ்சி, பங்கெடுத்துக்க எண்ணம் வந்தாலே நல்ல ஆரம்பம்.
அட்லீஸ்ட் யாராவது, என்னிக்காவது, எதுக்காவது கூப்டா போற, இல்ல உதவி பண்ற நிலைக்காவது தயாராகனும்.

மொதல்ல கல்யாணம் பண்ணிக்காத பசங்க எல்லாம், அதப் பண்ணினு கவர்மெண்ட் சொல்றத கேக்காம, எதப் பத்தியும் யோசிக்காம வீட்டுக்குன்னு மட்டும் புள்ள பெத்துக்காம, நாட்டுக்குன்னு ஒன்னாவது (நேந்து விட!!) பெத்து வளப்போம். இதுக்காகவே.

கெட்டவங்க தூங்கறதில்ல, ப்ளான் பண்ணி ஏதாவது பண்ணினே இருக்காங்க.

இங்லீஷ்ல இந்த ஃப்ளோ (flow) வராது. அதான் தமிழ்ல. நான்-தமிழ் பசங்களுக்கு யாராவது ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்புங்க ப்ளீஸ்.

ஜய் ஹிந்த்! ஹேப்பி தீபாவளி!! ஜய் சீதாராம் (என் பேருப்பா!!)

Oct 6, 2009

கோடைக்கானல் டூர்

யுனிவர்சிடி வேலைய விட்டு கம்பனி வேலைக்கு வந்தப்பறம் போற மொதல் டூர். ஞாயிற்றுக் கிழம மட்டுந்தான் லீவு கம்பனில. யுனிவர்சிடிலயும் அப்டிதான் இருந்துது. அப்பறம் ரெண்டு நாள்னு மாத்திட்டாங்க. வெள்ளி, சனி ரெண்டு நாள் முடிவா லீவு போட்டாச்சு. எங்க டூர் போறது, எவ்ளோ நாள் போறது, அங்க என்னென்ன இருக்கு பாக்க, தங்கறது, சாப்பிடறது எங்க இப்டி எல்லாமே வ்யாழக் கிழம (28.08.2009) தான் முடிவு எடுத்தது. வீட்ல தங்கற நேரம் கொறஞ்சதால இந்த டூருக்கு ரொம்ப முக்யத்துவம். ஆபீஸ் நெனப்பே இல்லாம இருக்கனும்னு.

வ்யாழக் கெழம நெட்ல பாத்து கொடைக்கானல் போலாம்னு முடிவு பண்ணி, அங்க என்னென்ன எடம்லாம் பாக்கனும்னும் லிஸ்ட் போட்டாச்சு. நாம நெனைக்கும்போது ட்ரைன், பஸ்ல டிக்கெட் கெடைக்குமா. மொதல் வெடி அங்கதான் ஆரம்பம். ட்ராவல்ஸ் சைட்டெல்லாம் செக் பண்ணி, பர்வீன் ட்ராவல்ஸ்ல மெட்ராஸ்லேந்து கொடைகானல்கே பஸ் இருக்கறத பாத்து, வீட்டுக்காரம்மாகிட்ட விஷயத்த சொல்லி, தயாரா இருக்க சொல்லியாச்சு. எங்க ஆபீஸ் அடையாறு சிக்னல்ல. அடையாறு பஸ் டிப்போகிட்ட, பர்வீன் ட்ராவல்ஸ் ஆபீஸ் இருக்கு. அங்க போயி டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒருத்தருக்கு நானூறோ, நானூத்தம்பதோ ஞாபகம் இல்ல. கடைசி வரிசைதான். இந்த மாதிரி ஏர் பஸ்ல புக் பண்ணி போறது இதுதான் மொதல் தடவ. A/C லாம் இல்ல. ஆனா பஸ் நல்லாத்தான் இருந்துது. தூக்கிப்போடும்போதும் தூளில இருந்தா மாதிரித்தான் இருந்துது. வீடு தாம்பரம். அதுனால பெருங்களத்தூர்ல போர்டிங் போட்டாச்சு.

ரோஹித், கமல் கூட சேந்து ஒரு டிஜிடல் ஃபோட்டோ கேமெராவும் வாங்கியாச்சு. நாலாயிரம், அஞ்சாயிரம்னு ஆரம்பிச்சு ஒரு பத்தாயிரம் அதுக்கு வெடி. நாங்க ஜாய்ண்டு ஃபேமிலி. ஒரு 13, 15 மனுஷங்க, ஒரு 26 பசு மாடுங்கன்னு. சோத்துக்கு வழி இருக்கோ இல்லியோ, ஷோஸியல் சர்வீஸ், உபன்யாசம்னு எல்லாரும் எப்போதும் பிஸி. நாங்க சின்னதா இருந்ததெல்லாம் அப்பா நெறையா ப்ளாக் அண்ட் வொயிட் ஃபோட்டோ எடுத்து வெச்சிருக்கார். அங்கேந்து வந்தது இந்த கேமெரா ஆசை. இந்த டூருக்கப்பறமே வீட்ல நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், குழந்தைங்க ஆட்டங்களையும் படம் எடுத்தாச்சு இந்த கேமெரால. உடனே, உடனே டிவி ல போட்டுக் காமிச்சா எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். நோ பிலிம், நோ ஸ்டுடியோ, நோ வெயிட்டிங் ஆல்பத்துக்கு, எடுக்கும்போது கொழந்த சிரிக்கலயே, கேமராவ பாக்கலயேன்னு கவலை இல்ல. ஒரு நாலஞ்சு எடுத்தா அதுல ஒன்னு, ரெண்டுல சிரிச்சிருக்கும்.

ம்... பஸ்சு வந்தாச்சு. ஒயரமான பஸ். ஏறியாச்சு. பர்வீன்னு எழுதின வெள்ளத்துணி போட்டு மூடின புஷ் பேக் சீட்டு. ஸ்க்ரீன் போட்ட கண்ணாடி ஜன்னல். சூப்பர்தான் போ. பர்வீன்லயே மெட்ராஸ்-கோடைக்கானல் டூர் அரேஞ்ஜ் பண்றாங்களாம். அவங்களும் இதுல தான். மீதி எடத்துல திருச்சி, கோடைக்கானல் போறவங்களயும் ஏத்தியாச்சு. சும்மா சொல்லக்கூடாது. செங்கல்பட்டு, மஹாபலிபுரம், பாண்டிச்சேரி, திருச்சின்னு எங்கேந்தெல்லாம் புக் பண்ணியிருக்காங்களோ, அங்கெல்லாம் போயி அவங்கள ஏத்தினு போச்சு. மஹாபலிபுரத்துல ஹோட்டல் மாமல்லன்னு ஒரு எடத்துல சாப்பாட்டுக்கு நிறுத்தினாங்க. சாப்டுத்தான் கெளம்பினோம். ஆனா டூர்னா சாப்பாடும் சேந்ததுதானே. நேரங்காலமில்லாம கிடைச்சத, கெடச்ச அளவு சாப்டுதான் பீமன் செத்தானாம். பெரியவங்க வழிய மீறலாமா. நாமும் சாப்டுவோம்னு சாப்டாச்சு. நல்லா இருந்துது. அப்பறம் தூக்கம் தான். இந்த மாதிரி பெரிய ட்ராவல் போகும்போது பாட்டுக்கேட்டுனே போக ஒரு பொட்டி வாங்கனும். நடு ராத்திரி கண்ண திறந்து பாத்தா, பாண்டிச்சேரில போயினுருக்கு வண்டி. திருப்பித் தூக்கம். திருச்சில இருக்கற அம்மா, அப்பாட்ட சொல்லாமலே, திருச்சிய தாண்டிப் போறோம். எங்க சொல்றது. நமக்கே நேத்தி சாயந்தரம் தான் தெரியும்.

29.08.2009 வெள்ளிக் கிழமை காலம்பற ஒரு ஆறு மணி. மலைக்குக் கீழ ஒரு எடத்துல டீ, காபி சாப்பிட நிறுத்தினார். ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு க்ராமத்துக் காலை. சுத்தி மலைகள். ஒரு குடிசைல ஒரு ஆயா ஆப்பம் போட்டு விக்கறாங்க. அந்த சிலு சிலு க்ளைமேட்ல அந்த குடிசை கீத்து வழியா வர்ற அந்த அடுப்புப் புகை. நம்ம கூடவே போட்டி போட்டுனு மலை, மரத்தையெல்லாம் தாண்டி வர்ற காலையிளம் கதிரவன். ஆஹா, காட்சி எல்லாரையும் கவிஞனாக்குது. பஸ்ஸு போகும்போது பின்னாடி திரும்பி வளைந்து, வளைந்து போகும் பாதை, மலை, கூட வர்ற சூரியன், வித விதமான வடிவேலு ஹேர் ஸ்டைல்ல இருக்கற மரங்கள்னு எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணியாச்சு.

ஒன்பது மணி. கோடைக்கானல் ஹோட்டல் சிவப்ரியா வாசல்ல எறக்கிவுட்டாங்க. ரூம்லாம் பயங்கர வாடகை. ஆயிரம், ரெண்டாயிரம்னு. ப்ரோக்கர் கண்ணுல படாம நைசா ஒரு மெடிக்கல் ஷாப்ல போயி, எங்கயாவது ஒரு நானூறு, ஐநூறு ரூபாய்க்கு ரூம் கெடைக்குமான்னு கேட்டோம். அவர் ஒடனே பக்கத்துல இருந்த ஒரு ப்ரோக்கர கூப்ட்டு ஹெல்ப் பண்ண சொன்னாரு!! அங்க எல்லாருமே அரசு அங்கீகாரம் பெற்ற கைடுன்னு ஒரு ஐடி கார்டு வெச்சிருக்காங்க. நாங்க அவர் கூட போனோம். ஏரி கிட்ட, ஒரு மேட்டுல விக்னேஷ் கெஸ்ட் ஹவுஸ் னு ஒரு எடத்துக்குக் கூட்டினு போனாரு. அவர் எங்களுக்காக எண்ணூறு ரூபால ஆரம்பிச்சு, அப்பறம் நாங்களும், கூட வந்த ப்ரோக்கரும் கேட்டுக்கொண்டதற்காக ஒரு நாளைக்கு நானூறு ரூபான்னு ஒரு ரூம காமிச்சார். பாத்தோம். ஓகே சொன்னோம். பல்ல தேச்சு, குளிச்சு வெளில கெளம்பியாச்சு.

என்னென்ன பாக்கனும்னு லிஸ்ட் இருக்கு. ஆனா எப்டி போறது. ஆட்டோ, பஸ்ஸு கெடையாது. ஒன்லி டாக்ஸி. மினிமம் அம்பது ரூபாவாம். ஒரு ட்ரைவர்ட்ட எங்க லிஸ்ட காமிச்சோம். அவரு முன்னூறு ரூபா குடுங்க. இன்னிக்கு சில எடங்கள காமிக்கறேன்னு சொன்னாரு.

செட்டியார் பார்க்,
குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
ஒரு ஜெயின் கோவில்,
கரடி அருவி,
பேரிக்கா மரங்கள் இதெல்லாம் காம்ச்சிட்டு போட் க்ளப் கிட்ட உட்டாரு. எவ்ளவோ செலவு பண்றோம். இத பண்ண மாட்டோமான்னு நமக்கு நாமே தேத்திண்டோம். நல்லா தான் இருந்துது. குறை ஒன்றும் இல்லை. நல்ல டிரைவர், ஏசி காரு, அடிச்சுப் புடிச்சு அடஞ்சு, அடங்கி ஒக்காராம ரெண்டே பேரு.

செட்டியார்!! பேர் ராசி போல. எத தொட்டாலும் துலங்குது. பேங்க் ஆரம்பிச்சாங்க, பிஸ்நெஸ் பண்ணினாங்க, அழகழகா அரண்மனை மாதிரி வீடு கட்டினாங்க, சமுதாயத்துக்கும், சமயத்துக்கும் நெறையா தொண்டு பண்ணினாங்க, இந்த வரிசைல இந்த செட்டியார் பார்க். நாங்க போகும்போது ஒன்னும் நுழைவுக் கட்டணம் இல்ல. அருமையான, அழகான, அமைதியான எடம். ஊட்டி கார்டன், இல்ல அதைவிட அழகா. அவங்க வெட்டி போட்ருக்கற செடி குப்பையெல்லாம் வூட்டுக்காரம்மா பொக்கே பண்ணப் போறேன்னு எடுத்துனு வந்தாங்க. அடுத்தது குறிஞ்சி ஆண்டவர். முருகன் அழகுன்னு சொல்லனுமா. கோயிலோட ரெண்டு பக்கத்துலயும் பழனி வ்யூ, கோயம்புத்தூர் வ்யூ ன்னு காமிச்சாங்க. ரெண்டு ஊர்லேந்தும் வந்துருந்தா ஓரளவு புரிஞ்சிருக்கும். நமக்கு வளந்த, வாழற ஊர்லையே இன்னும் பாதி எடம் பக்கத்துலேந்து பாத்தாலே புரியல. தெரியல. அதுலெல்லாம் மனைவி கிரேட் (பொதுவா எல்லா பொம்பளைங்களுமே!!). புது அபீஸ் சேந்தா பாதி நாள் பஸ் மாறி ஏறது, ஸ்டாப் மாறி ஏறங்கறது, நம்ம வீட்டு சந்த விட்டு வேற சந்து மாறி சுத்தறது இதெல்லாம்தான் நான் மறக்காம பண்றது.

ஜெயின் கோவில் வர்ற வழில பேரிக்கா பறிச்சு போடற ஒரு எடத்துல நிறுத்தி, நாலஞ்சு பேரிக்கா வாங்கிக் குடுத்தார். என்னா பெரிசு. இதெல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்கலாம். கடிச்சா ஜூஸ் கொட்றது. ஒரு லாபத்தையும் எதிர்பாக்காத பூமி மாதா எந்த கலப்படமும் இல்லாம அவ கொழந்தைங்களுக்காக தரா இதையெல்லாம். நம்ம ஊர்ல வண்டில, இல்ல ஒரு கூடைல ஒவ்வொரு சாமானா எடுத்துப் போட்டுப்போமே, அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லெல்லாம் இதுல பாதி சைஸு பேரிக்கா (+ கடை வாடகை + கரண்ட் பில்லு + தப்பு தப்பா பில்லு போடற ஆளுங்க சம்பளம் + வண்டி வாடகை + யாரும் வாங்காம வீணா போற சாமான்களோட விலை + கடை பராமரிப்பு + லாபம்) இருபது ரூபா வரை இருக்கும். வாட் வரி, இதெல்லாம் வேற. ஜெயின் கோவில் நம்மூர்ல அங்கங்க புள்ளையார் கோவில் கட்டி இருப்பாங்களே, அந்த சைஸு. ஆனா எல்லாம் மார்பிள். குட்டியா, ஆனா க்யூட்டா இருந்துது.

அருவிங்க கோடைக்கானல், அத சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் குடி நீர். சில்லுனு வேற இருக்கும். அதுனால குளிக்காதீங்கன்னாரு ட்ரைவர் அண்ணா. சொல்றத கேக்கற பழக்கம்? கார நிறுத்தின எடத்துலேந்து ஒரு அம்பது அடி ஒத்தையடிப் பாதைல போணும். பாதைக்கு ரெண்டு பக்கமும் கரண்ட் ஃபென்சிங் (இரும்புத் தடுப்பு !!) போட்ருக்காங்க. கரடி வருமாம். சல, சலன்னு சத்தம். சிலு, சிலுன்னு காத்து. மனைவிய குளிக்க வேண்டாம்னு சொல்லிட்டு, துண்டக் கட்டிக்கினு டமால்னு தலைய வுட்டேன் கொட்ற தண்ணீல. சில்லுனு இல்ல ஜில்லுனு, ஹூஹூம். என்னவோ. மூச்சு நின்னுது ரெண்டு நிமிஷம். சொல்லவே இல்ல!! ஏற்கனவே ரெண்டு, மூணு பேர் குளிக்கறாங்க. சொல்லி இருக்கலாம். கேக்க மாட்டோம்னு தெரிஞ்சவங்களா இருப்பாங்க. கொஞ்ச நேரம் ஒரு பாறைல ஒக்காந்து யோசிச்சேன். கொஞ்சம் காலு, கொஞ்சம் கையி, கொஞ்சம் ஒடம்பு, அப்பறம் தலைன்னு நனைச்சிருக்கலாம். ஒடம்பு அந்த ஜில்லுப்புக்கு ரெடின்னு தெரிஞ்சதும் கொஞ்ச நேரம் குளிச்சேன். என்ஜாய் பண்ணினேன். என் நிலைக்கு வந்ததும் மனைவியவும் சும்மா கூப்ட்டு ஃபோட்டோ எடுத்துண்டோம். ட்ரைவர் தேடினு வந்துட்டார். பொன்னியின் செல்வன் பழவேட்டரையர் மாதிரி ஒரு பார்வை பாத்தார். பம்மினு வெளில வந்தோம். ஏரி கிட்ட போட் ஹவுஸ்ல விட்டுட்டு போனாரு.

போட்டிங் போற ஐடியா இல்ல. நெறையா போயாச்சு. வேற எங்கயும் இல்ல, இங்க மட்டும் தான் இருக்குங்கறத மட்டும்தான் அனுபவிக்கனும்னு ப்ளான். ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துனு அப்டி ஜெமினி, சரோஜா தேவி மாதிரி போலாம்னு பாத்தேன். ஒரு தொப்பி விக்கற அம்மா, "பள்ளத்துக்கு ஓட்டிட்டு போகும்போது அப்டி இருக்கும், ஆனா மேட்டுக்குத் திருப்பி அமுத்தும்போது வில்லன் தொரத்தறா மாதிரி நினைச்சினா தான் அமுத்த முடியும்னுட்டாங்க". கல்யாணத்துக்கப்பறம் நெறையா பொண்ணுங்க சைக்கிள் ஓட்றது இல்ல. வண்டிக்கு மாறிடறாங்க. என் மனைவி என்னை விட சூப்பரா, பொறுப்பா எக்செல் ஹெவி ட்யூட்டி ஓட்றா. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்துல பொறுப்பு. நான் சூப்பரா பின்னாடி ஒக்காந்துப்பேன்.

ரூமுக்கு வந்தாச்சு. மணி சாயந்தரம் ஒரு அஞ்சு, ஆறு இருக்கும். மழை கொட்டுது, ரூமுக்குள்ளயும்!! அட்டாச்சுடு பாத் ரூம்ல பாத்தா கொச, கொசன்னு மம்மி படத்துல வர்றா மாதிரி அட்டைப் புழு. வெயில் அடிக்கும்போது மட்டும் தங்கற ரூம் போல இருக்கு காஷ்மீர் தலைநகரம் மாதிரி. இன்னும் ஒரு நாள் ஓட்டனும். நாலு எடத்தப் பாக்கணும். இது ஒன்னும் சரி படும்னு தோணல. எல்லாருக்கும் யூகலிப்டஸ் தைலம், பேரிக்கான்னு பைல ரொப்பினு போலாம்னு பாத்தா, இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல புழுவா ரொம்பிடும் போல இருக்கு. மத்த இடங்கள் காஸ்ட்லி நம்ம பட்ஜெட்டுக்கு. புழுவா, பணமா எதுக்கு பயப்படறது.

பணத்த கொடுத்துப் புழுவ தொரத்த வேண்டியதுதான். அண்ணாவுக்கு ஒடம்பு சரி இல்ல, ஊருக்குப் போறோம், காலி பண்ணிக்கறோம்னு சொன்னோம். ஒரு நாள் வாடகை (400), ப்ரோக்கர் கமிஷன் (150) போக மிச்சம் 250 தரேன்னு அன்பா சொல்லி குடுத்தாரு. யூகலிப்டஸ் தைலம் வாங்கலாம்னு பேசிண்டோம். எனக்குத் தெரிஞ்ச எடம் இருக்கு, விலை கொறச்சு வாங்கித் தரேன்னு சொன்னாரு. நாங்க விசாரிச்ச எடத்த விட இருபது ரூபா ஜாஸ்தி. அவர் த்ருப்திக்கு ஒண்ணு, ரெண்டு வாங்கிண்டோம்.

ஓடினோம் நேர சிவப்ரியா ஹோட்டல்க்கு. ஒரு நான் ஏசி டபிள் பெட் ரூம் வித் அட்டாச்சிடு பாத்ரூம் வித் சுடுதண்ணி, தொலைபேசி ஒரு நாளைக்கு எண்னூறோ, ஆயிரமோ சொன்னார். ஒரு தடவ முடிவு செஞ்சுட்டா நம்ம பேச்சையே நாம கேக்க மாட்டோமே. புக் பண்ணியாச்சு. ரொம்ப அருமை, ரூம், ரிசெப்ஷன், சாப்பாடு (விலை, டேஸ்ட்), கவனிப்பு, ஜோர், ஜோர். மெட்ராஸ் ரத்னா ஸ்டோர்ஸுக்கும் இவங்களுக்கும் தொடர்பிருக்கு. மெனு கார்டுல "விசிட் அவர் ஷோ ரூம்"னு போட்ருந்துது. நல்ல வ்யூன்னு சொல்லி ஒரு ரூம் குடுத்தார். இதெல்லாம் பாரதியார்க்குக் கெடச்சிருந்தா இன்னும் பத்துப் பாட்டாவது எழுதி இருப்பார். தூங்கறவங்களுக்கு என்ன யூஸு.

வெளில போயி அரசு டூரிஸ்ட் ஆபீஸக்கண்டுபுடிச்சோம். மிச்ச எடத்தப் பாக்கறதப் பத்திப் பேச. அவங்க ஒன்னும் அரேன்ஜ் பண்றதில்லையாம். லோக்கல் டூரிஸ்ட் ஆளுங்கள்ல ஒருத்தர நம்பிக்கையானவர்னு கூப்ட்டு எங்க பாக்கி லிஸ்ட குடுத்தார். அவர் சரின்னு சொல்லி தலைக்கு (எல்லாத்துக்கும்தான்) இருநூறு ரூபா போல சொன்ன ஞாபகம். சரின்னு பணத்தக் குடுத்தோம். வண்டி அடையாளங்கள சொல்லி காலைல ஹோட்டல்லையே வந்து பிக் அப் பண்ணிப்பாங்கன்னாரு. அப்டியே கொஞ்ச நேரம் சுத்திட்டு கொஞ்சம் பழங்கள வாங்கினு ஹோட்டல்க்கு வந்தோம்.
டிபன ஒரு கட்டு, கட்டிட்டு ஒரு தூக்கத்தைப் போட்டோம்.

30.08.2008 சனிக்கிழமை, வெளிச்சம் கண்ணத் தட்டியது, தொறந்தோம். எந்த க்ளைமேட்லயும் குளிக்கறதுக்கு ரெண்டு பேருமே அஞ்சறதில்ல. என்ன என் மனைவி வெளில போய்ட்டு வந்தா, மாலைக் குளியல்னு ஜமாய்ப்பா. நமக்கு நம்மூர் புழுதிய அலம்பி உட்ரதுல அவ்ளோ இஷ்டம் இல்ல. மனசு வலிக்கும். இப்பப்ப அதுவும் ஆரம்பிச்சாச்சு. டிபனும் சாப்டாச்சு. அலங்காரமும் ஆச்சு. வண்டி வந்தபாடில்ல. ரூம பூட்டிட்டு போலாம்னா, ரூம் க்ளீனிங்னு வந்துட்டாங்க. ரிஷப்ஷன்ல ஒடனே நீங்க வேற ரூம்க்கு போங்க சார். வெயிட் பண்ண வேணாம்னு உதவி பண்ணினார். கலைச்சுப் போட்ட ரூம்க்கும், புது ரூமுக்கும் வித்யாசம் இருக்கத்தான் இருக்கு. நான் கொஞ்சம் பெரிசு. என்னோட ஜிப்பா இன்னும் பெரிசு. போன் பேசற போட்டோல, மலை ஏற்ர போட்டோல காஷ்மீர் தீவிரவாதி மாதிரி இருக்கு. டூர் வண்டி வந்தாச்சுப்பா.

ஒரு மணி, ஒன்றை மணி நேரம் லேட்டு. விரட்டி, விரட்டி எதையாவது ஒண்ணு, ரெண்ட விட்டு கூட்டினு வந்திடப்போறானோ. ஒரு பதினஞ்சு, இருபது பேர் ஒக்காரலாம். என்னடா இவ்ளோ எடத்துக்கு 200 ரூபா வாங்கறாங்கலேன்னு பாத்தேன். இதான் விஷயம். வண்டில ரெண்டு, மூணு லிஸ்ட் கார்டு. க்ரூப், க்ரூப்பா ஒவ்வொரு டூரிஸ்ட்காரனும் புக் பண்ணி, ஒரே வண்டில ஏத்தி விட்ருக்காங்க. இது இன்னொரு விஷயம். எந்த க்ரூப் லிஸ்ட்ல இருக்கற எடம் கட் ஆகப் போறதுங்கறது சஸ்பென்ஸ். எதையோ காமிக்க போறாங்கன்னு நெனைச்சா ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஒரு எடத்துல நிறுத்தி இன்னும் ரெண்டு பேர ஏத்திக்கறாங்க. அவ்ளோதான். வண்டி கெளம்பியாச்சு. ஆட்டு மந்தை இருக்கற எடத்த பாக்க வன அதிகாரிகள்ட்ட பர்மிஷன் வாங்கனும்னு ஒவ்வொருத்தர்ட்டயும் இன்னும் முப்பது ரூபா வாங்கினாங்க. வழக்கம் போல கொஞ்சம் முனுமுனுப்பு, எதிர்ப்பு. அப்பறம் குடுத்தாச்சு. ஒவ்வொருத்தரும் அறிமுக உரையாடி முடிந்தது.

கிரீன் வாளீ !! பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ,
கோல்ஃப் க்ரவுன்ட்,
டாப் லேக் வ்யூ,
சின்மயா மிஷனோட அனுமார் கோவில்,
பைன் ஃபாரஸ்ட்,
பாம்பாறு அருவி,
மகாலக்ஷ்மி கோவில்,
பூம்பாறை க்ராம வ்யூ,
பில்லர் ராக் வ்யூ,
குணா கேவ்,
ஷீப் ஃபார்ம் இதெல்லாம் தான் இன்னிக்குப் பாத்தது.

பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ போற வழி முழுக்க ஊர்த் திருவிழாம்போது வழில ரெண்டு பக்கமும் பலகாரம், பொம்மை, எவர்சில்வர் சாமான்னு கடை போடுவாங்கல்ல, அது மாதிரி ட்ரை ஃப்ரூட், தேன், மூலிகை, பழங்கள்னு கடைகள். தாண்டிப் போனா இரும்பு வேலி போட்ருந்தாங்க. தாண்டிப் போகமுடியாதபடி. ஆனா கொரங்குங்க குடும்பம், குடும்பமா இங்க, அங்கன்னு போயிட்டு வருதுங்க. ஒரே பனி மூட்டம். ஏதோ ஆயிரக் கணக்குல ஆழம்னு சொன்னாங்க. ஒன்னும் சுத்தமா தெரியல. ரெண்டு, மூணு வகைல பெறிக்க வாங்கிண்டு, சுட்ட சோளக்கருது வாங்கித் தின்னுட்டு, ரோட க்ராஸ் பண்ணினா கோல்ஃப் க்ரவுண்ட். சுத்தி வலை போட்டு மூடி இருக்காங்க. ஓட்ட வழியா பாத்தோம். நாலஞ்சு அடிக்கு புல்வெளி தெரிஞ்சுது. அப்பறம் பனிதான். கீழ விக்கற விலைய விட இங்க பேரிக்கா கொஞ்சம் சீப்தான்.

அடுத்தது டாப் லேக் வ்யூ. கீழ இருக்கற ஏரிய மேலேந்து பாக்கறோம். ஸ்டார் வடிவத்துல தெரியும்னார் கைடு. மிஸ்ட் ஃபார்ம் (பனி மூட்டமாம்) ஆய்டுச்சாம். ஏரிய சுத்தி மரங்கள் வேற. தெரிஞ்சத பாத்துட்டு கெளம்பினோம். அடுத்தது சின்மயா மிஷன் சார்புல இருக்கற ஒரு சின்ன ஆஞ்சனேயர் கோவில். சூப்பரா இருந்தார். பைன் ஃபாரஸ்ட், சினிமால வில்லன் ஹீரோயின துரத்துவாரே அந்த இடம். சூப்பரா இருந்துது. குதிரை ரைடு கூப்டாங்க. ஏறல. குதிரை அன்னிக்கு இருக்கற மாதிரிதான் இருக்கு. ஆனா ஏதாவது ஆச்சுன்னா, இன்னிக்கு இருக்கற ஆளுங்க அத எம்.ஜி.ஆர் மாதிரி தடுத்து நிறுத்தி அடக்குவாங்களாங்கறதில அவ்ளோ நம்பிக்கை. ஃப்ரஷ்ஷா கேரட் வித்தாங்க, வாங்கி சாப்டோம். ஜம்முனு இருந்துது. இங்க ஒரு க்ராமத்து க்ரூப் அவங்கள போட்டோ எடுக்க சொன்னாங்க. ரெண்டு, மூணு எடுத்து, அவங்க ஊருக்கும் ப்ரிண்ட் போட்டு அனுப்ச்சு வச்சாச்சு. ரொம்ப நன்றின்னாங்க போன்ல. உருப்படியா ஒரு வேல.

முப்பது ரூபா வாங்கிண்ட ஆட்டு மந்தை காமிக்கல. மேயற எடத்த காமிச்சாரு. அங்க ஆட்டுப் புழுக்க கூட இல்ல. டீமுக்கு கோவம் வந்தாச்சு. சரின்னு ட்ரைவர் நான் ஒரு ஹேர் பின் பெண்டு போட்டு வரேன். நீங்க இப்டியே கைடு கூட கீழ எறங்கிப் போங்கன்னாரு. சூப்பர் புல்வெளி. பசங்கள்லாம் குதிச்சு, பொரண்டு, ஒருத்தன் மேல ஒருத்தன் விழுந்து, வித விதமான கெட் அப்புல போட்டோ எடுத்துண்டாங்க. நாங்க கொஞ்சம் பேர் கைடு கூட நடந்து வந்தோம். வழில அவரு ரத்தம் குடிக்கற அட்டைப் புழுன்னு ஒன்ன காமிச்சாரு. புழு சைஸ் தாங்க. நம்ம ஊரு அட்டைப் பூச்சி போல இல்ல. கருப்புக் கலர்ல ஒன்னு, ரெண்டு இன்ச் நீளத்துல இருக்கும் மெல்லீசா. யாரும் சொன்னா கேக்க மாட்டேங்கறீங்கன்னாரு. ஆட்டம் போடற பசங்கள்ட ஒடனே இதப் பத்தி சொன்னோம். அவ்ளோதான். எல்லாப் பயலும் கீழ ஒடியாந்துட்டான்க. அவனவன் செருப்பு, கோட், ஜெர்க்கின், ஷூ எல்லாத்தையும் கழட்டி ஒதறினாங்க. அங்கங்க விழுந்துது. நாலஞ்சு பேருக்கு கால் விரல் சந்துல சத்தம் போடாம ரத்தம் சாப்டுனு இருந்துது. எல்லாம் க்ளீன் பண்ணினு கெளம்பினோம்.

பாம்பாறு அருவி. நமக்குத்தான் அது பெரிய விஷயம் இதெல்லாம். உள்ளூர் காரங்களுக்கு அவசரத்துக்கு அலம்பிக்கற எடம். கீழ கொஞ்சம் மோசமா இருந்துது. மலை மேல ஏறி கொஞ்ச தூரம் போயி என்ஜாய் பண்ணினோம். அடுத்தது மஹாலக்ஷ்மி கோவில். இப்பத்தான் கட்டினு இருக்காங்க கேரளா ஸ்டைல்ல. சின்ன, சின்ன சன்னிதி, பூட்டி இருந்துது. சுத்தி அருமையான காட்சிகள், எல்லாத்தையும் போட்டோ எடுத்துனோம். பூம்பாறை க்ராமம் டூர்னு சொல்லிட்டு, இந்த எடத்துலேந்து கீழ இருக்கற பூம்பாறை க்ராமத்த காமிச்சாங்க.

அடுத்தது பசங்க அமக்களம் பண்ணினதுக்காக திருப்பி கொஞ்ச தூரம் நடந்து போயி குணா குகைகளுக்கு போலாம்னு கூட்டினு போனாரு கொல்லைப் பக்கம் வழியா. ஒரு ஒன்னு, ரெண்டு கி.மீ நடந்தோம். அருமையான சூழ்நிலை. பனி மூட்டம். அடர்ந்த மலைக் காட்டுக்குள்ள ஒத்தையடிப் பாதைல போறோம். வழில ராக் பில்லர் காமிச்சாரு. மலைகளே நாலு தூண் மாதிரி இருக்கு இயற்கையா. எங்களுக்கு ரெண்டுதான் தெரிஞ்சுது. மிஸ்ட்!! குணா குகைகளுக்குப் பேரு டெவில்ஸ் கிச்சன்னு வைச்சிருக்காங்க. நிறையா பேர் செத்துப் போயிருக்காங்க, காணாம போயிருக்காங்களாம். ஒடம்பு கூட கெடைக்காதாம். கல்வெட்டு கூட வெச்சிருந்தாங்க. ஷூட்டிங் நடந்த எடத்துக்கெல்லாம் இப்ப போக முடியாது. தரைல, சுத்தின்னு எல்லா எடத்துலையும் கனமான இரும்பு வேலி. அப்பறம் என்ன? அவ்ளோதான். அவனவன் கைல இருக்கற லிஸ்டுல இத காமிக்கல, அத காமிக்கலன்னு பொலம்பினே வந்தோம். ஹோட்டல் கிட்ட எறக்கி விட்டாங்க கொட்டற மழைல. புண்ணியம் போங்க. ஆனா ஒரு விஷயம். இந்த வேன்ல நாங்க ஒவ்வொரு எடத்தையும் பாத்துட்டு, வண்டில ஏறி கதை, கதையா பேசினு வந்தோம். ரெண்டு ஜோடி மட்டும் காச குடுத்துட்டு, கண்டக்டர், ட்ரைன் கார்டு மாதிரி எங்கயுமே எறங்கவே இல்லையே. ரூமுக்கு வந்தாச்சு. நல்ல டயர்டு. ரூம்லேந்தே நைட்டுக்கு வேண்டிய டிபன ஆர்டர் பண்ணி சாப்டுட்டு தூங்கினோம்.

31.08.2008, ஞாயிறு. திருச்சிக்கு வீட்டுக்கு் லஞ்ச்சுக்குப் போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு நைட் பஸ் ஏறலாமா, இல்ல இன்னும் பாக்கி இருக்கற எடத்துல பாக்க முடிஞ்சத பாத்துட்டு, திருச்சிக்கு ஈவினிங் போயிட்டு நைட் பஸ் ஏறலாமா. ஒரு டாக்ஸி அண்ணாச்சி கிட்ட கேட்டோம். செண்பகனூர் ம்யூஸியம் காமிச்சிட்டு, லா ஸலேத் சர்ச்சுல விடறேன்னாரு. நூறோ, இன்னும் ஒரு அம்பதோ குடுத்த ஞாபகம். செண்பகனூர் ம்யூஸியம் ஒரு க்றிஸ்டியன் காலேஜ் மெயின்டனென்ஸ்ல இருக்கு. அரிய, பழைய விலங்குகள், பறவைகள்னு எல்லாத்தையும் பதப் படுத்தி வெச்சிருக்காங்க. மூணு ரூபா ட்க்கெட்டு, போட்டோ எடுக்கக் கூடாதுன்னாரு ரிஸெப்ஷன்ல இருந்த ஃபாதர் தாத்தா. சரின்னு சொல்லி உள்ள போயி பாத்தோம். கொஞ்சம் பேர் ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துண்டாங்க. நல்லா இருந்துது. அடுத்தது லா ஸலேத் சர்ச்சு. 1863 ல அடிக்கல் நாட்டப்பட்டது, இங்க ஒரு கோவில், ஃப்ரான்ஸ்ல லா ஸலேத்துங்கற இடத்துல அன்னை காட்சி கொடுத்த எடத்துல இன்னொரு கோவில். இதெல்லாம் அங்க வெச்சிருந்த கல்வெட்டுல போட்டுருந்துது.

பக்கத்துலயே கூக்கர்ஸ் வாக். சர்ச்சுலேந்து ஏரிக்குப் போக இந்த ஒத்தையடி குறுக்குப் பாதைய கூக்கர் கண்டு புடிச்சாராம். இப்ப நாலஞ்சு பேர் நடக்கற அளவு டைல்ஸ் போட்டு, என்ட்ரன்ஸ், கேமிராக்குன்னு காசு வாங்கினு உட்றாங்க. இயற்கை எடம் குடுக்கற வரைக்கும் நம்ம எக்ஸ்டெண்டு பண்ணினே இருப்போமே. அது எதிர்ப்பு தெரிவிக்கும் போது பாத்துப்போம், இருந்தா!! அப்டியே நடந்து வந்தா ப்ரெயின் பார்க் கிட்ட கொண்டு வந்து விடறது அந்த பாதை. இது செட்டியார் பார்க் இல்ல. கவர்மெண்ட்டோடது. அவங்க ஆபீஸ் மாதிரியே இருக்கு. கோடைக்கானல்லயே செடி, மரம் அதிகம் இல்லாத இடம் இது. எதோ வேலை பார்த்துக் கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்காங்க இங்க. ஒரு போதி மரம் இருக்கு இங்க. அதுக்குக் கீழ சின்னதா ஒரு புத்தர் சிலைய வெச்சிருக்காங்க.

கவர்மெண்ட்டும் முன்ன மாதிரி இல்ல இப்பெல்லாம். சும்மா சாப்ட்டா திட்டு வாங்கறோம், மாட்டிக்கறோம் தெரிஞ்சிருக்கு. அதுனால புதுசு, புதுசா ஏதாவது வேலைய உண்டாக்கி எல்லாரும் எடுத்துண்டது போக திட்டத்துக்கு எவ்ளோ தேவைப்படும் கணக்குப்பாத்து நிதி ஒதிக்கித் தான் இப்பெல்லாம் ஆரம்பிக்கறது. நமக்கும் ரோடு (பின்னாடியே அத ஒடைக்கறதுக்கு கார்ப்பொரேஷன், ஈ. பி காரங்க, குடிநீர் வாரியம் ஆளுங்க, போன் ஆளுங்க,...) சாக்கடை வசதி (அப்பப்ப திறந்து இருக்கும் சூடு ஆறுவதற்காக, மழை காலத்துல இதுலேந்தும் தண்ணி வெளில வரும்), லைட் (டோல்கேட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும் கொஞ்ச தூரத்துக்கு, புதுப் பாலங்களுக்கு), பே அண்டு யூஸ் டாய்லெட் (சுத்தம் நாமளும் பண்ண வேண்டாம், அவங்களும் பண்ண மாட்டாங்க), நடைபாதை, (நடைபாதைக் கடைகள்), சிங்காரச் சென்னை 1950, 55, 60,65...இப்போ சிங்காரச் சென்னை 2010, புதுப் பாலங்கள்னு, ப்ளாஸ்டிக் சேர் மேல பெட்ஷிட் போட்ட மிதவை, சொகுசு, தாழ்தள, தங்கப் பேருந்துகள் (இரும்புல இருந்தா கொளுத்தும்போது த்ருப்தியா எரிய மாட்டேங்குதாம்), இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்துல ரெண்டு, மூணு ரூபாய் டிக்கெட்டுக்கு பஸ் (மதியம் 12 மணிலேந்து மாலை ஒரு 4 மணி வரை இந்தப் பேருந்துகள நீங்க பாக்கலாம்) நெறையா வசதிகள்.

மொழி, ப்ராந்திய, தேசியப் ப்ரச்சினைகள், தீவிரவாதம், விலைவாசி, புதுப் புது வ்யாதிகள் ஜாஸ்தி ஆயினே இருக்குன்னு நாம ஸ்டேட் கவர்மெண்ட் கிட்ட சொல்ல, அவங்க மத்திய அரசு கிட்ட சொல்ல, அவங்க ஐ. நா சபைல சொல்ல, அவங்க அமெரிக்கா, ப்ரிட்டன் கிட்ட சொல்ல, அவன் நிலால தண்ணி இருக்கா, புதுசா எதாவது க்ரகம் கிடைக்குதான்னு பாத்துட்டு வரேங்கறான். வெயிட் பண்ணுவோம், ப்ளீஸ். இல்ல நாமளும் இந்த தேசிய நீரோட்டத்துல கலந்துனு நம்ம பங்க ஆற்றுவோம், எடுத்துப்போம்

இதாம்பா டூர். 31ம் தேதி திருச்சி போயிட்டு, நைட் கெளம்பி மறுநாள் ரெஸ்ட் எடுக்க ஆபீஸ் வந்தாச்சு. ரொம்ப பிசி. அப்பறம் பாப்போம்.

ஜய் ஹிந்த்! ஜய் ஸ்ரீராம்!!

Sep 22, 2009

பெங்களூர் A. R. ரமணி அம்மாள் பாடியவைகளில் சில

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம், பொம்ம பொம்மத்தா, முத்தான முத்துக்குமரா, பிள்ளையார் பிள்ளையார், ... இவையில்லாத கோவில் திருவிழாக்களே இருக்காது. நான் கேட்டு ரஸித்த அத்தகைய பாடல் வரிகளில் சிலவற்றை இதோ கீழே தந்துள்ளேன். 24 பாடல்கள், சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்டவை சேர்ந்து இருக்கும்.

1. ஆடு மயிலே, கூத்தாடு மயிலே
கதிர்காம ஸ்கந்தனைக் கூத்தாடு மயிலே (ஆடு)

அருகினில் நின்று அருள் புரியும் குஹன் - ஸ்கந்தன்
அருமையாய் அந்தரங்கத்திருக்கும் குஹன்
கருவிழி வள்ளிமானுக் குகந்த குஹன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் - ஸ்கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

மனமது கனிந்திடில் மருவும் குஹன் - ஸ்கந்தன்
கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் (காக்கும்) குஹன்
தனதென தான் பரிந்து பேசும் குஹன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

அருகினில் நின்று அருள் புரியும் குஹன் - ஸ்கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறும் அடியார்கள் குறை (வினை) தீர்க்கும் குஹன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

2. அகரமு மாகி யதிபனு மாகி
யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே

3. ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

உத்தர நாளில் அவதரித்தாய்
சத்ரு சம்ஹாரம் செய்ய வந்தாய்
சரவண பவகுஹ சோதரனே
சபரி மாமலையின் நாயகனே (ஐயப்பா)

கார்த்திகை நல்லநாள் மாலையிட்டு
மார்கழி நல்லநாள் கட்டும்கட்டி
பஜனை செய்வோம் வீர மணிகண்டா
பம்பையின் பாலனே சரணம் பொன்னையப்பா (ஐயப்பா)

விரதம் உனக்காக இருந்தேனப்பா
இருமுடி சுமந்தே வந்தேனப்பா
கல்லோடும் முள்ளோடும் நடந்தேனப்பா
சொல்லாலே உன்புகழை சொன்னேனப்பா (ஐயப்பா)

இருமுடி சுமந்து எரிமேலி வந்து
ஒருமனதாக பேட்டை துள்ளி
நண்பராம் வாவரைத் தொழுதுநின்று
சபரிமாமலையை நாடிடுவோம் (ஐயப்பா)

சரணம் சரணம் என்று கூவிவந்தோம்
படி பதினெட்டும் ஏறிவந்தோம்
மகர ஜோதியின் அழகினிலே
அப்பா ஐயப்பா உந்தன் எழிலைக் கண்டோம் (ஐயப்பா)


4. ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணமென்றே
ஐயப்பா சரணமென்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
மோஹினி பாலனென்றும் மோஹன குமாரனென்றும்
வில்லாளி வீரனென்றும் வீரமணி கண்டனென்றும் (ஐயப்பா)

பந்தள வீரனென்றும் பதினெட்டும் படியென்றும்
பக்தர்கள் தாசனென்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம் (ஐயப்பா)

காந்தமலை ஜோதியென்றும் காருண்ய மூர்த்தியென்றும்
கம்பங்குடி தாஸனென்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம் (ஐயப்பா)

பம்பாநதிக் கரையில் பக்குவமாய் நீராடி
பத்துஎட்டுப் படிகளேறி எட்டுபத்துப் படிகளேறி
ஒம்பதுரெண்டு படிகளேறி ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
எட்டுபத்துப் படிகளேறி பதினெட்டாம் படிகளேறி ஆனந்தமாய்க் கூப்பிடுவோம் (ஐயப்பா)


5. பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா (பொம்ம)

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா (திம்மிகிடுகிட)

அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா (பொம்ம)


6. கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் - முருகன்

தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
சாமியாக நின்றான்

பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்

7. குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் (குன்றத்திலே)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா வெற்றிவேல் முருகா ஹரோஹரா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா வடிவேல் முருகா (குன்றத்திலே)


8. மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனை சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

சரணம் குஹாய சரணம் குஹாய சரவணபவ குஹ ஹரோஹரா
கஜமுக சோதர கார்த்திகேயா சரணம் சரணம் ஹரோஹரா


9. மஞ்சு நிகர் குந்தளமின்னே ஸப்தஸ்தலங்கள் விகசிதம் செய்
வாரிஜாசனத்தில் வாழ்பொன்னே செய்ய வண்ணமே ஒளிர் சொர்ணமே நடை
அன்னமே இடை பின்னமே பெற வந்தபுய பார வஞ்சியே
அதி விருப்பத்துடன் உரைக்கும் வார்த்தையைக் கேள் ஆசை மிஞ்சியே

ஐந்து வயதானபருவம் தனில் எனது சிறு மனை முன்
அங்கஜவேல் போல உருவம் பெற்றே அன்று வந்து நயந்து மாலையில்
நெஞ்சழிந்து மயங்கவே புணர் ஆறு முக வேலவனையே
நினைவு கொண்டே மதி மருண்டே ஆறுதில்லை என்ன வினையே

என்னிரண்டு கண்ணும் தேடுதே கனவிலும் மனது நினைத்தே
ஏக்கமுற் றலைந்து வாடுதே முன்னம் என்றன் ஆகம டொன்றவே புணர்ந்து
அன்று போன குஹன்தன் ஆவலை எண்ணி எண்ணி என்ன பயனே
உருகி நிதம் மருகி விழ இப்படி விதித்தான் அயனே

சென்னிக் குளமேவிய வாசன் இனிய துதி அனுதினமும்
செய்திடும் அண்ணாமலை தாஸன் பாடும் சிந்து மீது மிகுந்த நேசமும் கொண்ட
சீல குஹன் ஸரோருஹ திவ்விய முகங்கள் ஆறுமே
கண்களில் கண்டால் அன்பருக் கெல்லாம் சேவையின்ப வெள்ளம் ஊறுமே


10. முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா
தணிகாசலனே தவமா மணியே - அரஹரோஹரா
தானவர் போற்றும் தீனதயாளா - அரஹரோஹரா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா - அரஹரோஹரா
கந்தா கடம்பா கார்த்திகேயா - அரஹரோஹரா
செந்திலாண்டவா செங்கல்வராயா - அரஹரோஹரா
சிவஷண்முகனே சேனைத் தலைவா - அரஹரோஹரா

அக்கினிகர்ப்பா ஆறுபடை வீடா - அரஹரோஹரா
ஆவினன்குடிவாழ் அழகிய வேலா - அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா

மயில் வாஹனனே மாதவக் கொழுந்தே - அரஹரோஹரா
பழனியம் பதிவாழ் பாலகுமாரா - அரஹரோஹரா
சேவற் கொடியோய் செங்கதிர் வேலா - அரஹரோஹரா
சிவனார் மகனே செந்திலாதிபா - அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா

ஸ்வாமிநாதா சக்தி வேலா - அரஹரோஹரா
மூவர் முதல்வா முத்துக்குமாரா - அரஹரோஹரா
வள்ளி மணாளா வானவர் வேந்தே - அரஹரோஹரா
வடிவேல் முருகா திருமால் மருகா - அரஹரோஹரா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா - அரஹரோஹரா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா - அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா

11. முத்தான முத்துக்குமரா முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா வா

நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா (முத்தான)

பன்னீரில் குளிக்கவைத்து பட்டாடை உடுத்திவைத்து
சந்தனத்தில் சாந்தனுக்கு அங்கமெல்லாம் பூசிவைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்றுபூத்த மலரால் உன்னை அர்ச்சிப்போம் வருவாய் அப்பா (முத்தான)

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
க்ருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்
மயிலையும் அவன் திருக்கை அயிலையும்
அவன் கடைக்கண் இயலையையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ...
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து மெழுபுவி புறந்திரிக்கும்
அரசென நிறந்தரிக்க வாழலாம் - இங்கு (நாமும்)

சொல்லுங்கோ...

அடைபெறுவதென்று முக்தி அதிமதுர செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம், சித்தியாகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல் முருகா வேல் முருகா...

நாளை எம படர் தொடர்ந்தழைக்க - நம்மை
அவருடன் எதிர்ந்திருக்க இனிஎன முழங்கி வெற்றி பேசலாம் (எமனுடன்)
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல் முருகா வேல் முருகா...

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே - முருகன்
மெள்ளத் தவழ்ந்துவரும் பாலனாம்
தெள்ளித்தெளித்த தினை அள்ளிக்கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மணவாளனாம்

சொல்லுங்கோ...

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான்
உங்கள் உள்ளத்திலே முருகன் தோன்றுவான்
ஒவ்வொருவர் பக்கத்திலே முருகன் தோன்றுவான்
அவன் பாதத்தையே என்றும் பற்றிக்கொண்டால்
உங்கள் பக்கத்திலே முருகன் தோன்றுவான்

சொல்லுங்கோ...

வேலனுக்கு ஹரோஹரா முருகனுக்கு ஹரோஹரா
கந்தனுக்கு ஹரோஹரா எங்கப்பனுக்கு ஹரோஹரா
சிவபாலனுக்கு ஹரோஹரா வடிவேலனுக்கு ஹரோஹரா
சொல்லுங்கோ...

12. நீர்க்கொண்ட சடைமுடியோன் நெற்றி விழிகளில் பிறந்து
சீர்கொண்ட சரவணத்தின் செங்கமலமிசை வளர்ந்து
கார்த்திகையின் முலைப்பாலும் கௌரியின் முலைப்பாலும் உண்டு
ஆர்த்த திரைக்கடல் இடைச் சென்று அசுரர் குலங்களைத் தொலைத்து
தேவர் சிறைதனை மீட்டு தெய்வ மடப்பிடி மணந்து
மூவர் தொழும் திருத்தணிகை முதுகிரியில் எழும் சுடரே

பக்தியால் யானுன்னை பலகாலம்
பற்றியே மாத்திருப் புகழ்பாடி
முத்தனா மாறனைப் பெருவாழ்வில்
முக்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தம தான சத்குண நேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே

13. பாலும் பழம் உண்டு பக்திக்குப் பொருள் உண்டு
தேனும் தினை உண்டு தித்திக்கும் தமிழ் உண்டு
ஞானப் பழம் உண்டு பழனிமலை மேலே
வேலன் அருள் உண்டு வேண்டுவோர் மனம் போல
வேலன் துணை வருவான் நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு வேண்டிடும் அடியார்க்கு
வேலன் துணை வருவான்

கூவும் குயில் உண்டு குதூகலம் பல உண்டு
தாவும் மான் உண்டு மோஹனக் கிளி உண்டு
மாலைப் பொழுதினிலே சோலை அழகினிலே
மாலை நிலவொளியில் பன்னிரு கையோடு (வேலன் துணை )

சந்தனம் மணம் வீசும் ஷண்முக நதி உண்டு
சான்றோர்கள் நீராடும் சரவணப் பொய்கை உண்டு
சுந்தர வடிவேலன் சிங்கார மயில் ஏறி
அன்பர்கள் குறை தீர்க்க அருள் என்னும் பொருள் தந்து (வேலன் துணை )


வேற்காடு வாழ்ந்திருக்கும் தேவி கருமாரியம்மா
சந்ததமும் உந்தன் பாதம் பணிந்தோமம்மா

அண்டபகி ரண்டமெல்லாம் ஆண்டுவரும் சக்தி நீயே
அங்கமெல்லாம் கூசிடுதே அருட்ஜோதி வீசிடுதே
ஆதாரப் பெருக்குநீ ஆத்திரத்தைக் காத்திடுவாய்
அன்போடு வருவோர்க்கு அபயமே தந்திடுவாய்

ஓங்கார மானவளே உத்தமியே பத்தினியே
உன்னை வணங்குகின்றோம் உலகத்து நாயகியே
சிங்காரப் பொட்டழகி செந்தூரப் பொட்டழகி
சீரான ஆபரண அலங்காரப் பெட்டகமே

ஆத்தங்கரை ஓரத்திலே வேப்பமர நிழலிலே
காத்திருக்கும் காத்தாயி கண்பாரு மாரியம்மா
எத்தனையோ பேருனக்கு எடுத்துச் சொல்லலாகாது
எங்களைக் காத்திடுவாய் என்றும் துணைநீ யிருப்பாய்

ஆயிமகமாயி பத்ரகாளி உமையவளே
ஆயிரம் கண்ணுடையாய் ஆதாரம்நீ யிருப்பாய்
சமயபுரத்தாளே சங்கரி ஆத்தாளே
சந்ததமும் உந்தன் பாதம் பணிந்தோமம்மா


14. சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி
சரணம் சரணம் சரணம் சரணம் மாமலைவாசா மாமலைவாசா

தாயும் நீயே தந்தையும் நீயே சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வம் நீயே மாமலைவாசா
பூதநாதா விபூதிநாதா சரணம் ஐயப்பா
எங்களையும் காத்தருள்வாய் மாமலைவாசா

கலியுக வரதனேநீ சரணம் ஐயப்பா
காருண்ய ரூபணேநீ மாமலைவாசா
கற்பூர ஜோதியேநீ சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியேநீ மாமலைவாசா

ஏறாத மலைகளெல்லாம் சரணம் ஐயப்பா
எங்களையும் ஏறவைத்தாய் சரணம் ஐயப்பா
படிபதினெட்டு ஏறிவந்தோம் சரணம் ஐயப்பா
உன் திருவடி காணவந்தோம் மாமலைவாசா


15. சரணம் சரணம் ஜகதாம்பா
சரணம் தருவாள் ஓம்காரி
சோட்டாணிக்கரையில் நின்றிடுவாள்
சொல்லிய குறைகளைத் தீர்த்திடுவாள்
மதுரையில் வாழ்ந்திடும் மீனாட்சி
மனக்குறை எல்லாம் தீர்த்திடுவாள்
அங்கயற்கன்னி என்பவளாம்
அடியார் சக்தியைக் கொண்டவளாம்

நெல்லையிலே அவள் காந்திமதி
தில்லையிலே அவள் சிவகாமி
காஞ்சியில் வாழ்ந்திடும் காமாட்சி
காசியில் வாழும் விசாலாட்சி
திருக்கடையூரில் அபிராமி
திருவேற்காட்டில் கருமாரி
அழைத்ததும் ஓடி வந்திடுவாள்
அல்லலை எல்லாம் போக்கிடுவாள்

சமரச குணத்தைக் கொண்டவளாம்
சமத்துவ நீதியை சொல்பவளாம்
சமயபுரத்து மகமாயி
தக்கசமயத்தில் வந்திடுவாள்
தேவி மஹாத்ம்யம் சொல்பவர்க்கு
தெய்வங்கள் அனைத்தும் அருள் தருமாம்
தேவி ராஜேச்வரி யுமாவாள் - அவள்
தெய்வீக சக்தியை யாரறிவார்
குங்கும மஹிமையைத் தந்தவளாம்
கங்கண பூஜித ரஞ்சனியாம்
மங்கள கௌரி என்பவளாம்
மங்காத ஒளியாய் இருந்திடுவாள்



16. தணிகைமலை பெருந்துரையே வா வா வா
தயாநிதியே தர்மதுரையே வா வா வா
அடியவர்க்கு அருளும் அரசே வா வா வா
ஆலமுண்டோன் பாலகனே வா வா வா
பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தே வா வா வா
ஆறுமுக கருணைக் கோவே வா வா வா
என் ஆவிபிரியும் சமயம் முன்னே வா வா வா
பாவி என்னை மறந்திடாதே வா வா வா

வேல் பிடிக்கும் செஞ்சுடரே வா வா வா
வேல் எடுத்து வினையைத் தீர்க்க வா வா வா
என் மரண பயம் தீர்க்க நீயும் வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி வா வா வா
திருத்தணிகைமலை, ஸ்வாமிமலை, பழனிமலை,
சோலைமலை, பெருந்துரையே வா வா வா
தயாநிதியே தர்மதுரையே வா வா வா


சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா ...... ரம்பமாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா ...... நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே ...... துன்புறாமே
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ ...... யன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே ...... விஞ்சையூரா
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே ...... சன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ ...... தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் ...... தம்பிரானே.


17. வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
வள்ளி மணவாளனுக்கு ஹரோஹரா

வேலவா வடிவேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா (வேலவா)

சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா - உன்னை
சின்னஞ்சிறு சிவக்குமரா ஓடிவா (வேலவா)

முத்தே ரத்தினமே முருகையா
முழுமதி முகத்தவனே கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலய்யா,
வடி வேலய்யா, உன் கையில் வேலய்யா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா (வேலவா)


18. விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

யானைமுகம் கொண்டவர் ஐந்துகரங்கள் உடையவர்
பானைவயிறு படைத்தவர் பக்தர் குறையைத் தீர்ப்பவர்
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
ஓம் நம: சிவாய எனும் மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

கலியுகத்தின் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின்மீது ஏறியே இஷ்டம்போல சுற்றுவார்
ஜயகணேச ஜயகணேச ஜயகணேச பாஹிமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்



19. என் அப்பனே என் ஐயனே
கந்தப்பனே கந்தக் காருண்யனே
பன்னிருகை வேலவனே கன்னிவள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல் வேல்
வேல்முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

பார்வதியாள் பாலகனே பக்தர்களுக்கு அனுகூலனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல் வேல்
வேல்முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

எட்டுக்குடி வேலவனே சுட்டப் பழம் தந்தவனே - ஔவைக்கு
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல் வேல்
வேல்முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

கால்களில் பொற்சிலம்பு - முருகன் கைகளில் பொற்சதங்கை
கல் கல் கல் என வருவான்


20. உள்ளத்திலே கோயில் கட்டி உன்னை அங்கு குடிவைத்தேன்
எண்ணத்திலே தொட்டில் கட்டி என்னரசே தாலாட்டினேன் (உள்ளத்திலே)

கள்ளமில்லாத பிள்ளையப்பா கருணையுள்ள தெய்வமப்பா
வாழ்வுதரும் கந்தப்பா வந்தருள்வாய் வேலப்பா (உள்ளத்திலே)

உன்புகழைப் பாடிவந்தேன் உனதருளை நாடி நின்றேன்
ஓம்கார குருவே வா வா உயர் ஞான குருவே வா வா (உள்ளத்திலே)

தத்திமிதோம் என்று ஆடிவரும் வீரவேல்
தஞ்சமென்றோர்க்கருள் தருமமிகு சக்திவேல்
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல்
தயவுடன் அன்பர்க்கு அருள்தரும் ஞானவேல்
தஜ்ஜதம் தகிடஜம் என்றாடும் வைரவேல்
தத்துவப் புகழ்பாடும் ஷண்முகன் கைவேல்
வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் ஷண்முகன் கைவேல்

21. தென்பழனி தேவனடி கண்ணம்மா - முருகன்
தேவர்களின் தலைவனடி கண்ணம்மா

பொங்கல் வைத்துப் பூசையிட்டு
புதுமலரால் மாலையிட்டு
வாராயோ என்றழைத்தால் கண்ணம்மா - முருகன்
மாறாமல் வந்து நிற்பான் கண்ணம்மா

காவடிகள் ஆடிவரும் - கந்தன்
திருப்புகழைப் பாடிவரும்
வேலாடும் வண்ண மயிலாடும்
வேலன் கால் சிலம்பு தானாடும்
அலையாடும் தமிழ்க் கவிபாடும்
ஆறுமுகன் அன்புமனம் கூத்தாடும்
நெற்றியிலே நீறிருக்கும்
நெஞ்சில் அடியார்கள் நினைவிருக்கும்


22. ஸ்வாமியே சரணம் ஐயா - தர்ம
சாஸ்தாவே சரணம் ஐயா
அனுதினம் பூஜை செய்தோம் - உனக்கு
அனந்தகோடி நமஸ்காரம்

வன்புலியின் மீதினிலே - ஏறி
வீரமணிகண்டனே வா
வீரவிளையாடல்களை பாட
வாணி தடை கூறவில்லை

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி உந்தன்
பிஞ்சு மொழி கேட்டிடவே
அந்தப் பந்தளத்தோர் செய்த தவம்
இந்தப் பாமரன் நான் செய்யவில்லையா

பாலெடுக்கப் புலி எதற்கோ - உன்
பார்வையின் பால் சக்தியற்றதோ
உன் பார்வை ஒன்றே போதுமையா
எங்கள் மேல் பால் பொழிய வேண்டுமையா

வில்லும் அம்பும் கையில் எதற்கோ - அந்த
வாவரை நீ வெற்றி கொல்லவா
பக்தர் வினைகளின் துயர்களையே
வேட்டையாடி விரட்டிடவோ

காந்தமலை ஜோதி எங்களை
காந்தமின்றி இழுக்குதப்பா
அதை காமக்கோடி நாதன் உருவில்
காண அருள் வேண்டுமையா

23. பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே
பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே - அப்பப்பா
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

தேன் இருக்குது தினை இருக்குது தென் பழனியிலே
தெருவைச் சுற்றிக் காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்ப்பக் காவடி மச்சக்காவடி புஷ்பக்காவடியாம்
மலையைச் சுற்றிக் காவடியாட்டம் தினமும் நடக்குதாம்

வேலனுக்கு ஹரோஹரா
முருகனுக்கு ஹரோஹரா
கந்தனுக்கு ஹரோஹரா
அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தான்டி
அவன் போனா போறான்டி முருகன் தானா வாரான்டி

வேல் இருக்குது மயில் இருக்குது வ்ராலிமலையிலே
மலையைச் சுற்றிக் காவடியாட்டம் தினமும் நடக்குதாம் - வ்ராலி
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

24. யானைமுகன் சோதரனே சரணமே ஐயப்பா
ஆறுமுகன் தம்பியேநீ சரணமே ஐயப்பா
ஹரிஹரனார் புத்திரனே சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

கண்ணழகு கொண்டவனே சரணமே ஐயப்பா
கர்மவினை தீர்க்க வேண்டும் சரணமே ஐயப்பா
நீலவண்ண கட்டழகா சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

முடிவளர்த்தோம் தீக்ஷை கொண்டோம் சரணமே ஐயப்பா
இருமுடிகள் சுமந்துவந்தோம் சரணமே ஐயப்பா
சபரிமலை வாசனே சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

ஆறுவாரம் நோன்பிருந்தோம் சரணமே ஐயப்பா
ஆறு மலை தாண்டிவந்தோம் சரணமே ஐயப்பா
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

எரிமேலி வந்தடைந்தோம் சரணமே ஐயப்பா
வாவரைத் தொழுதுநின்றோம் சரணமே ஐயப்பா
திந்திமித்திப் பாடிவந்தோம் சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

துளசிமணி மார்பழகா சரணமே ஐயப்பா
துன்பமெல்லாம் தீர்க்க வேண்டும் சரணமே ஐயப்பா
ஆறுவாரம் நோன்பிருந்தோம் சரணமே ஐயப்பா
முப்போதும் பூஜைசெய்தோம் சரணமே ஐயப்பா

நீலிமலை ஏறிவந்தோம் சரணமே ஐயப்பா
சரங்குத்தி எடுத்துவந்தோம் சரணமே ஐயப்பா
அப்பாச்சிமேடு ஏறிவந்தோம் சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

Aug 4, 2009

how to know my mobile model

if it is nokia model, type *#0000#. You will know the model.
- type *#06#. This will display the IMEI (International Mobile Equipment Identity) number, 15 digits, used to trace the set when its lost.
- Nokia phone alarm works even when the phone is switched off.

Jul 3, 2009

what is 10th month?

Sir: 1st month january, 2nd month february, 3rd month march., what is 10th month?
Student: Delivery Sir

May 12, 2009

புரசை அருணகிரி பாடல்கள் - 7

1. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

2. பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வழி கொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலம் உறை இறையே

3. என்ன புண்ணியம் செய்தனை---நெஞ்சமே! இருங்கடல் வையத்து,
முன்னம் நீ புரி நல்வினைப் பயன்இடை, முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும்அதனாலே.

4. கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே.

5. படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே

6. நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

7. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் நீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

8. அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வலிவினை மூடாமுன்,
சிந்தை பராமரியா தென்திருஆரூர் புக்கு,
எந்தைபிரானாரை என்றுகொல் எய்துவதே?

9. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

10. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

11. மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.

12. சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

13. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்.

14. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

புரசை அருணகிரி பாடல்கள் - 6

1. எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே யேத்து ( 3267 )
முன்னவனே யானை முகத்தவனே முத்தி்நலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே – என்னவனே
சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்.( 1966 )
கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
கஜமுக குணபதி சரணஞ் சரணம்
தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
சரவண பவகுக சரணஞ் சரணம்
சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம் ( 2563 )

2. பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே ( 820 )

3. தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன் ( 3386 )
அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே
பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே
மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே
ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே ( 5066 - 5069 )
அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே ( 5115 )
இருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே ( 5116 )

4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே ( 4082 )

5. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் ( 3904 )

6. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம் ( 3906 )

7. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே ( 4128 )
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம் ( 4320 )
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் ஆடிய ( 4321 )

8. ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே ( 9 )
அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் ( 32 )
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் ( 34 )

9. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி ( 4615 )
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம் ( 5255 )

May 11, 2009

புரசை அருணகிரி பாடல்கள் - 5

1. எங்கெங்கு காணினும் காவடிகள்
என்றும் புகழ்ந்திடும் சேவடிகள்
கந்தனின் கோவிலில் காவடிகள்
என்றும் வந்தனை செய்திடும் பூவடிகள்
ஆனைமுகன் தம்பி காவடிகள்
மன ஆறுதல் தந்திடும் காவடிகள்
ஆறு படை வீட்டில் காவடிகள்
அன்பர் அன்புடன் தந்திடும் காவடிகள்
பால் பழம் விபூதி காவடிகள்
ஞான பாலகன் முருகன் காவடிகள்
சந்தனம் பன்னீர் காவடிகள்
உயர் செந்தமிழ் பாடிடும் காவடிகள்
தைப்பூசத் திருநாள் காவடிகள்
பல புண்ணியம் சேர்த்திடும் காவடிகள்
ஆடிக் கிருத்திகை காவடிகள்
எங்கும் ஆடிஆடி வரும் காவடிகள்

2. காவடியாட்டம் காணக்கண்கள் கோடி வேண்டுமே
கந்தன் அருளை தினமும் நாமும் நாட வேண்டுமே
நலமே தந்திடும் திருப்புகழ் தினமும் பாட வேண்டுமே
நம்மைத் தொடரும் தீவினையெல்லாம் ஓட வேண்டுமே
பாலில் காவடி எடுக்க நமது பாவம் போகுது
பலப் பழத்தால் காவடி எடுக்க நமக்கு பண்பு வளருது
ஆயிரம் காவடி கண்டதும் மனத்தில் அன்பு பெருகுது
அன்புடன் கந்தன் அடியைப் பணிந்தால் அருளும் சுரக்குது.
உலகில் என்றும் உயர்வை நமக்கு உணர்த்தும் காவடி
உயர்வுடன் அழைத்து நமக்கு காட்டும் முருகன் சேவடி
அது மணணில் அறமே தழைக்க வந்த மருகன் பூவடி
நம் கண்ணில் ஒளியாய் காட்சியைத் தருமே கந்தன் திருவடி

3. ஆடிஆடி வருகுது கந்தன் காவடி- எங்கும்
ஹரோஹரா எனச்சொல்லும் அழகுக் காவடி
அன்பர்களின் தோள்களிலே அரிய காவடி - நல்ல
ஆடிமாத கிருத்திகையில் ஆடும் காவடி
பாலனவன் சிறுவனுக்குப் பாலில் காவடி - ஞானப்
பழமான தெய்வத்திற்குப் பழத்தில் காவடி
பூமியெங்கும் புகழைப்பாடும் புஷ்பக் காவடி
மாலின்மருகன் முருகனுக்கு மச்சக் காவடி
கந்தன்புகழில் கனிந்துருகும் சந்தனக் காவடி
எந்தைமுருகன் எழிலைக் காணும் எளியக் காவடி
பாடம்சொன்ன முருகனுக்குப் பன்னீர்க் காவடி
பார்க்கப்பார்க்கத் திகட்டாது பழனிக் காவடி

4. காவடி எடுத்து ஆடிடுவோம் - நம்
கந்தனை எண்ணியே பாடிடுவோம்
வந்தனை செய்தே வாழ்ந்திடுவோம் - வெற்றி
வடிவேல் முருகனைத் துதித்திடுவோம்
பழனியில் முருகனைப் பார்த்திடுவோம் - சுவைப்
பழத்தால் காவடி சேர்த்திடுவோம்
செந்தில் வேலவன் சன்னதியில் உயர்
சேவல் கொடியினை வணங்கிடுவோம்
தணிகை மலைப்படி ஏறிடுவோம் - தீந்
தமிழில் திருப்புகழ் கூறிடுவோம்
வேலுடன் காவடி செலுத்திடுவோம் - வடி
வேலவன் திருவடி பணிந்திடுவோம்
மாலின் மருகனை நினைந்திடுவோம்
முருகனைத் துதித்து உயர்ந்திடுவோம்
வள்ளி மணாளனைப் புகழ்ந்திடுவோம் - நாம்
வாழ்வினில் என்றும் சிறந்திடுவோம்

5. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேனுனை நான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி அதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே

6. ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

7. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்தனன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே

8. காதின்மணி ஓலையிட்டு வருமானார்
காமவலை ஊடுபுக்கு மதிமாழ்கி
நீதிநெறி யேவிடுத்து மலையாதே
நீயுனிரு தாளளிக்க வரவேணும்
ஆதிமக மாயிபெற்ற குமரேசா
ஆறுமுக மேபடைத்த குருநாதா
தீதிலடி யார்மனத்தில் உறைவோனே
தேவர்குடி வாழவைத்த பெருமாளே

9. தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.