41. ஞான ஸபையில் தில்லைக் கானந் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே.
ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே (ஞான)
மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ்-செவ்
வானம் நிகர் சடையாட இள நகை
அரும்பும் மதிமுகமும் திரு விழி யழகுமாய் (ஞான)
நேமியுடன் முழங்காழி யணி
சாரங்க பாணி ம்ருதங்கமும்
நி ஸ த நி ப ம ரி க ம ரி ஸ ஸ்வர
நாத நாரதர் வீணையும்
ஸாம கான விநோதனே-சிவ
காம ஸ¤ந்தரி நாதனே
ஸவாமி அடிமையை யாள் ஸகல ஜகன்
நாதனே பாதமே தீம் ததீம் இசையுடன் (ஞான)
42. இது நிஜமா - நீ
இவ்வடிமைக்கும் காட்சி தந்தது நிஜமா (இது)
ஐயனோடு கைலாசபதி அறியாத ஆதிமூலமே (இது)
(நின்) நாம மொரு முறை சொல்ல என் நாக்கு தந்த பாக்கியமோ
நாயடிமையின் தாய் தந்தையர் தரு நாள் அனுக்ரஹமோ
43. மாநில வாழ்வு பெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே (மாநில)
வான் அமுதம் எழில் மான் விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மன சம்மதம் உண்டோ இல்லியோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ (மாநில)
44. தமியேன் பைந்தமிழ் அன்னையின் பால் அருந்திய தமிழ் பாலன்
தமிழ் வளர உயிர் வாழும் ஊழியன் என்றுலகறியும் (தமியேன்)
தமிழரசி அங்கயற்கண் உமையன்னையே தயவில்லையா
தமிழெனக்கும் எதில் அமர இடம் இல்லையா தகவில்லையோ
தருணம் வதேனயாலை சரணடைந்தேன் இனித்தாளே
வரமருளாய் சபை நடுவே வருன் எழி உந்தனைச்சாரும்
45. சந்த்ர சூரியர் போங்கதி மாறினும் வீழினும் நமக்கென்ன
இந்த இன்பமே சொந்தமதானால் வானுலகும் வேண்டாம் (சந்த்ர)
காதலரன்பைத் தடைசெய்ய உலகிலோர் கருவிக்கு வலிமையுண்டோ?
சாதலே வரினும் அதிலும் இருவரும் பிரிந்திடா உண்மை கொண்டோம்
இந்த உலகிலென் உடல் பொருள் ஆவி நீயே எனதுயிரும்
என்னுடல் உமக்கே சொந்தமிவ்வடியாள் பேசவும் அறியேனே
46. உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது (உண்மை)
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரினும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது (உண்மை)
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
என்னவந்தும் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல் (உண்மை)
47. உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ நாணமுறாளோ?
பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன் பிறவி
பாவனமானேன்
நம்மிருவர் உள்ளம் நிறை காதலிளங்கே
வளர் பிறை போல் வளர்ந்தோங்கவும்
இறைவன் தாள் பணிவோமே
Nov 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment