Nov 2, 2009

M. K. T பாடல்கள் - 4

31. ஷ்யாமளா தேவி என் ஜீவப்ரியே (ஷ்யாமளா)
பாதை மேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ (ஷ்யாமளா)
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடுவாயே நீயே (ஷ்யாமளா)
ஆசை முகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ
ஆடி வந்து எந்தன் அன்பினை மேவி ஆனந்தம் தாராயோ (ஷ்யாமளா)

32. சிவபெருமான் க்ருபை வேண்டும் அவன்
திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
காம முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
ராமதாஸன் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

33. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ
அற்பப் பணப்பேய்ப் பிடித்தே
அறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய் மொழிவார்
பொருள் விரும்பி தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் உந்தன்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தையிதே அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே மாந்தர் (இவர்)
சிந்தை திருந்தி உய்ய குஹனே
உந்தன் திருவருள் புரியாயோ

34. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

35. தில்லையின் நாயகனே சிவகாம வள்ளி மனோஹரனே - என்
அல்லல் பிணிகள் அற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்
கனகசபேசன் திருநடம் காண விழைந்தேனே - என்
கனவிலும் வேறு நினைவின்றி கருத்தழிந்தேனே
தெள்ளிய நின் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்தோறும்
உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே (தில்லையின்)

36. உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில் (உனைக்)
அண்டத்திலே நில மண்டலமேல்
பல எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவ (உனைக்)
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே (உனைக்)
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே சரச கானத்தில் தேவ (உனைக்)

37. (வெள்ளிமலை) வள்ளலைப் பாடும் வாயால் அறுதலை பிள்ளையைப் பாடுவேனோ
எந்தன் ஸ்வாமியைப் பாடும் வாயால் தகப்பன் ஸ்வாமியைப் பாடுவேனோ
அம்மை அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப் பாடுவேனோ
வள்ளியின் கண்வலை வீசிலை வேடன் கள்ளனைப் பாடுவேனோ
அம்பிகை பாகன் எனும் அகண்ட சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும் தம்பியைப் பாடுவேனோ

38. வசந்த ருது மன மோஹனமே
மலர்ந்த மலரிதழ் மணம் கமழ் தென்றல் (வசந்த)
மல்லிகைப் பூங்கொடி குந்தள வராளி
மொய்த்த மலர் நகை குலுங்க விளங்கும்
நகைப் பைத்தியம் யதுகுலாம் போதிலும்
நனவிலும் கனவிலும் இதே சிந்தையா
சுருட்டி கொணர்ந்து கொடுத்தலுத்தார் போலவே
சொல்லுக்குப் பஞ்சம் இல்லை கொஞ்சும் குயிலின் இசை

39. வதனமே சந்த்ர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? (வதனமே)
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ? (வதனமே)
மின்னும் மோஹனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்
புன்னகை தவழ் பூங்கொடியாள்
புவன சுந்தரியோ? (வதனமே)

40. யானைத் தந்தம் போலே பிறைநிலா

No comments: