Nov 2, 2009

M. K. T பாடல்கள் - 2

11. சொல்லு பாப்பா சொல்லு பாப்பா
சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா (சொல்லு)
வெல்லும் பகை ஒழிய சொல்லு பாப்பா
வெற்றிக் கொடி பறக்க சொல்லு பாப்பா
நல்ல தமிழ் வளர சொல்லு பாப்பா - மக்கள்
ஞான விலாசம் பெற சொல்லு பாப்பா (சொல்லு)
கைத்தொழில் ஓங்கும் என்று சொல்லு பாப்பா - மக்கள்
கஷ்டங்கள் தீருமென்று சொல்லு பாப்பா
வர்த்தகம் ஓங்குமென்று சொல்லு பாப்பா - மக்கள்
வாழும் விதங்களெல்லாம் சொல்லு பாப்பா (சொல்லு)
ஜாதி வித்யாசம் நீங்க சொல்லு பாப்பா - கோவில்
சன்னதி பொது என்று சொல்லு பாப்பா
போது மனத்துறுதி சொல்லு பாப்பா
ஓம் சக்தி என்றே நிதம் சொல்லு பாப்பா

12. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ (சுட்டும்)
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி (சுட்டும்)
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையோ உந்தன் நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரல் இனிமையடி
வாளைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் (சுட்டும்)

13. தீன கருணா கரனே நடராஜா நீலகண்டனே (தீன)
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனை யாண்ட நீலகண்டனே (தீன)
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌனகுருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே (தீன)
ஆதி அந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே (தீன)

14. த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம்தனில் தினம் (த்யானமே)
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் இரு
கண் மயங்கி சாவேனோ (த்யானமே)
லோகமும் அதிலே தோன்றும் இந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆகவும் (த்யானமே)

15. என்னுடல் தனில் ஒரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற்போல் இருந்தும்
என்னுடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண்ணுறங்காது உடல் இளைத்தும்
இன்னமுதூட்டி இன்பத்தாலாட்டி என்னை ஆளாக்கிய
பெருமைக்கு என்னிடம் இயற்கையில்
உங்கள் உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைமாறேது
என்னுயர் தவப்பயன் அம்மையே அப்பா
இம்மையில் எனது கண்கண்ட என்
அருட்கடவுள் அம்மையே அப்பா
எனக்கொரு நற்கதி உண்டோ என்னரும்
விதியா அம்மையே அப்பா
என் பிழை பொறுத்தருள்வீரோ
என்னுயிர் துணையாம் அம்மையே அப்பா
எங்கு சென்றுங்களைக் காண்பேன்
அம்மை அப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
எனதருமைத் தாயே தந்தையே

16. காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை
காண்பதும் எளிதாமோ மஹாத்மா (காந்தியை)
மாந்தரிலே ஞான யோகம் மேவும் தவ
மாந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா (காந்தியை)
அஹிம்சை தனிலே புத்தரவர்
ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்
அறுபகையும் வென்ற கர்ம சீலரவர்
நமது ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த (காந்தியை)
குழந்தை உள்ளமும் அன்பு கனிந்த மொழியும் கொண்டு
கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்
முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்
தகையப் பகையரும் கண்டஞ்சும் சுத்தன் - இனிமேல் (காந்தியை)

17. ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே
ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ (ஞானக்)
ஆன ப்ருந்தாவனமும் அதோ என் எதிரிலே
அனந்த கண்ணன் உருவம் அதோ தெரிவதாலே (ஞானக்)
வானவர் பணிந்திடும் மாதவன் பதம் தொழும்
அனந்தம் கிடைத்த பின்பு எது வந்தாலென்ன (ஞானக்)

18. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டு ரங்கன் அருள் இருந்தால் (இங்கும்)
பங்கஜ மலர் மது உண்ணும் வண்டு போல்
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு (இங்கும்)
உலகெல்லாம் மகிழவே தனது பொருள்
உடல் உயிர் உதவும் உதாரராம்
உலகிலே பொருளிலும் பற்றில்லா
உத்தம சத்குண வித்தகராம்
ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல் வரும்
துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இரவு பகல் ரங்கன் நினைவில் மனோலயமாம்
அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு (இங்கும்)

19. க்ருஷ்ணா முகுந்தா முராரே - ஜய (க்ருஷ்ணா)
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பரதாரி கோபாலா (க்ருஷ்ணா)
காளிய மர்த்தன கம்ச நிஷூதன
கமலாயத நயனா கோபாலா (க்ருஷ்ணா)
குடில குந்தளம் குவலய தள நீலம்
மதுர முரளீரவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
கோபி ஜன மன மோஹன வ்யாபக
குவலயதள நீலா கோபாலா (க்ருஷ்ணா)

20. மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் (மானிட)
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இக பர சுகம் தரும் கருணையாம் (மானிட)
கருவறையினுள் கிடந்து வெளியில் வருந்துயர் நினைந்தாலும் உடல்
கலங்குதே இங்கே திகில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இரு வினை வசமாம் இவ்வுடல் ஒரு நீர்க்குமிழி
இதனிடை உயர் நெறி அடையவே இறைவன் அருளை வேண்டி
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரிபுரமதில் ஒரு முறை கண்டு பணிந்து
ப்ரபோ பாண்டுரங்கா ஜய விட்டலா என்று பணிந்திட (மானிட)

No comments: