Nov 2, 2009

M. K. T பாடல்கள் - 3

21. மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் (மனமே)
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரை புகழ்ந்து பாடாதே
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வேதனையில்
தடுமாறும் மனமோடு துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும் (மனமே)
விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலம் நீங்கும் (மனமே)

22. மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாள்வாய் (மனம்)
தனத்தையே தெய்வம் என நினைந்தாள்
சத்யவார்த்தை தன் உயர்வறியாளே (மனம்)
சாம்ப சதாசிவ சம்போ சிவ சங்கரி பரமேஸ்வரி
வீம்புடனே அஹங்காரம் கொண்டதால்
வேதனை கொண்டாள் பேதை இவள் - மனம்
வேதனை கொண்டாள் பேதையிடம் (மனம்)

23. மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பராமுகம் (மன்மத)
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான் மூன்று உலகிலும் (மன்மத)
என்னுடனே நீபேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கிடுமோ
உன்னை நயந்து நான் வேண்டியும் ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ மனம் கவர் (மன்மத)

24. மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன், யாரும் அறியாமல் (மறைவாய்)
கரையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ
பேதை சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ (மறைவாய்)
மருள்தீர் மெய்தவ ஞானப் பெரியோய் பேதை யான்
மெய்யாய் வடிவேல் அறிய நெஞ்சில் வஞ்சம் அறியேன் ஐயா
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர் களிமண் சுட்ட
கலம் போனால் என்ன செம்பொற் கலமே செய்து தருவேன் (மறைவாய்)

25. கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே (கவலையைக்)
நவரசங்களிலும் ஸ்ருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடெங்கும் இல்லையே (கவலையைக்)
புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி (கவலையைக்)

26. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற (ஒரு நாள்)
வெறு நாளாக்கிப் (நம் வாழ்நாளை) பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல் (ஒரு நாள்)
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம், இதைக்
கண்டு நெஞ்சில் மோகம்
கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை
கொள்ள வெகு வருத்தமே, முனிவர்
தொண்டுசெய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே அதனால் (ஒரு நாள்)

27. பவளமால் மலையை...

28. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை யேதுசெய்தேன் சுகுண (ராதே)
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ - நீ
எங்கு சென்றாலும் நானுன்னை விடுவேனோ ஓடாதே (ராதே)
கண்ணை யிழந்தவன் நீயோ நானோ
கண்ணா நீவேறு நான் வேறோ, எவன் சொன்னவன் (கண்ணை)
விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
விருப்பு வெறுப்பில் பரஞ்சோதி பொருளே இன்று (கண்ணை)

29. ராஜன் மஹராஜன்
திருவெற்றியூர் மேவும் திருவாளன் த்யாக (ராஜன்)
தேஜஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
ஸ்ரீவடிவுடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
மட்டிலா புகழ்மிகு பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை யாட்கொண்டு
பட்டினி பிணி மூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

30. சத்வ குணபோதன் சரணம் இது
சித்தமும் வீணே கலங்குவதேனோ (சத்வ)
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் (சத்வ)
கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மை காக்கும் தயாளன் (சத்வ)

No comments: