May 11, 2009

புரசை அருணகிரி பாடல்கள் - 5

1. எங்கெங்கு காணினும் காவடிகள்
என்றும் புகழ்ந்திடும் சேவடிகள்
கந்தனின் கோவிலில் காவடிகள்
என்றும் வந்தனை செய்திடும் பூவடிகள்
ஆனைமுகன் தம்பி காவடிகள்
மன ஆறுதல் தந்திடும் காவடிகள்
ஆறு படை வீட்டில் காவடிகள்
அன்பர் அன்புடன் தந்திடும் காவடிகள்
பால் பழம் விபூதி காவடிகள்
ஞான பாலகன் முருகன் காவடிகள்
சந்தனம் பன்னீர் காவடிகள்
உயர் செந்தமிழ் பாடிடும் காவடிகள்
தைப்பூசத் திருநாள் காவடிகள்
பல புண்ணியம் சேர்த்திடும் காவடிகள்
ஆடிக் கிருத்திகை காவடிகள்
எங்கும் ஆடிஆடி வரும் காவடிகள்

2. காவடியாட்டம் காணக்கண்கள் கோடி வேண்டுமே
கந்தன் அருளை தினமும் நாமும் நாட வேண்டுமே
நலமே தந்திடும் திருப்புகழ் தினமும் பாட வேண்டுமே
நம்மைத் தொடரும் தீவினையெல்லாம் ஓட வேண்டுமே
பாலில் காவடி எடுக்க நமது பாவம் போகுது
பலப் பழத்தால் காவடி எடுக்க நமக்கு பண்பு வளருது
ஆயிரம் காவடி கண்டதும் மனத்தில் அன்பு பெருகுது
அன்புடன் கந்தன் அடியைப் பணிந்தால் அருளும் சுரக்குது.
உலகில் என்றும் உயர்வை நமக்கு உணர்த்தும் காவடி
உயர்வுடன் அழைத்து நமக்கு காட்டும் முருகன் சேவடி
அது மணணில் அறமே தழைக்க வந்த மருகன் பூவடி
நம் கண்ணில் ஒளியாய் காட்சியைத் தருமே கந்தன் திருவடி

3. ஆடிஆடி வருகுது கந்தன் காவடி- எங்கும்
ஹரோஹரா எனச்சொல்லும் அழகுக் காவடி
அன்பர்களின் தோள்களிலே அரிய காவடி - நல்ல
ஆடிமாத கிருத்திகையில் ஆடும் காவடி
பாலனவன் சிறுவனுக்குப் பாலில் காவடி - ஞானப்
பழமான தெய்வத்திற்குப் பழத்தில் காவடி
பூமியெங்கும் புகழைப்பாடும் புஷ்பக் காவடி
மாலின்மருகன் முருகனுக்கு மச்சக் காவடி
கந்தன்புகழில் கனிந்துருகும் சந்தனக் காவடி
எந்தைமுருகன் எழிலைக் காணும் எளியக் காவடி
பாடம்சொன்ன முருகனுக்குப் பன்னீர்க் காவடி
பார்க்கப்பார்க்கத் திகட்டாது பழனிக் காவடி

4. காவடி எடுத்து ஆடிடுவோம் - நம்
கந்தனை எண்ணியே பாடிடுவோம்
வந்தனை செய்தே வாழ்ந்திடுவோம் - வெற்றி
வடிவேல் முருகனைத் துதித்திடுவோம்
பழனியில் முருகனைப் பார்த்திடுவோம் - சுவைப்
பழத்தால் காவடி சேர்த்திடுவோம்
செந்தில் வேலவன் சன்னதியில் உயர்
சேவல் கொடியினை வணங்கிடுவோம்
தணிகை மலைப்படி ஏறிடுவோம் - தீந்
தமிழில் திருப்புகழ் கூறிடுவோம்
வேலுடன் காவடி செலுத்திடுவோம் - வடி
வேலவன் திருவடி பணிந்திடுவோம்
மாலின் மருகனை நினைந்திடுவோம்
முருகனைத் துதித்து உயர்ந்திடுவோம்
வள்ளி மணாளனைப் புகழ்ந்திடுவோம் - நாம்
வாழ்வினில் என்றும் சிறந்திடுவோம்

5. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேனுனை நான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி அதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே

6. ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

7. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்தனன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே

8. காதின்மணி ஓலையிட்டு வருமானார்
காமவலை ஊடுபுக்கு மதிமாழ்கி
நீதிநெறி யேவிடுத்து மலையாதே
நீயுனிரு தாளளிக்க வரவேணும்
ஆதிமக மாயிபெற்ற குமரேசா
ஆறுமுக மேபடைத்த குருநாதா
தீதிலடி யார்மனத்தில் உறைவோனே
தேவர்குடி வாழவைத்த பெருமாளே

9. தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.

No comments: