May 11, 2009

புரசை அருணகிரி பாடல்கள் - 4

1. எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகி
அழும் போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடலம்
விழும் போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் வேலவனே

2. ஓம் ஷண்முக பதயே நமோ நம, ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம, ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம, ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஓம் நவனிதி பதயே நமோ நம, ஓம் சுபனிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம, ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம, ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஓம் கவிராஜ பதயே நமோ நம, ஓம் தபராஜ பதயே நமோ நம:
ஓம் இஹபர பதயே நமோ நம, ஓம் புகழ்முனி பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம, ஓம் நயநய பதயே நமோ நம:
ஓம் மஞ்சுள பதயே நமோ நம, ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
ஓம் மல்லி பதயே நமோ நம, ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம, ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் ஷஷ்டீ பதயே நமோ நம, ஓம் இஷ்டீ பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம, ஓம் சுபோத பதயே நமோ நம:
ஓம் வியூஹ பதயே நமோ நம, ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம, ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம, ஓம் பிராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம, ஓம் முக்த பதயே நமோ நம:
ஓம் அகார பதயே நமோ நம, ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம, ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம, ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமார பதயே நமோ நம, ஓம் குமார பதயே நமோ நம:

3. சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

4. அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே

5. மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடிய னலையாமல்
இருநல்ல வாகுமுன தடிபேண
இனவல்ல மானமன தருளாயோ
கருநெல்லி மேனியரி மருகோனே
கனவள்ளி யார்கணவ முருகேசா
திருவல்லி தாயமதி லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.

6. ஆறுமுக விலாசமும், பன்னிரு கண்கள், ஈராறு கரமான அழகும்
அய்யனின் மகுடமுடி நவரத்ன ப்ரகாச அலங்கார ஜோதி அழகும்
கோரும் அடியார்கள் வினை தீர்த்திடும் ஆறுமுக குண்டல ஜொலிப்பின் அழகும்
குஞ்ஜரி தெய்வயானை குறவள்ளி ரஞ்ஜிதன் புன்சிரிப்பான முகமும்
ஏறுமயில் ஏறிவிளையாடவும் கரமதனில் ஈட்டி வேல் பார்வை அழகும்
இடையில் ஒட்டியாணமும் பட்டுகள் பளபளென இருபாத தண்டை அழகும்
பாருலகத்தோர் புகழும் பன்னிரு விழிக் கருணை பகவானின் மேனி அழகை
யாராலும் வர்ணிக்க முடியாத ஆறுமுக ஐயனை போற்றி செய்வோம்

7. இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே

8. ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி தீதுபுரியாத தெய்வமே
போரூர் தெய்வமே, நீதி தழைக்கின்ற போரூர் தெய்வமே ( தணிமுதலே)
நாயேன் பிழைக்கின்றவாறு நீபேசு தெய்வமே

9. நாத விந்துக லாதீ நமோநம, வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமி நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம, போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்;
சேத தண்டவி நோதா நமோநம, கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம, தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்;
ஈத லும்பல கோலா லபூஜையும், ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கம்பீர நாடா ளுநாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூ ராதோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே.

10. அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
அபயம் புகுவ தென்று நிலைக்காண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த பெருமாளே

11. விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே.

12. தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை பெருமாளே

13. பொறந்ததையா நல்லநேரம் எழுந்து பாருங்க
போய்வரலாம் பழனிமலை நடந்து வாருங்க
நடந்ததெல்லாம் நடந்ததையா மறந்து போடுங்க
நடக்கப்போற காரியத்தை நினைந்து வாருங்க
சேவல்கூவி அழைக்குதுகண் திறந்து பாருங்க
சிங்காரவேலன் புகழை உணர்ந்து பாடுங்க
காவல்செய்யும் முருகன்மலை அருகில் தானுங்க
கடவுள்பெயரை சொல்லி சொல்லி உருகிப் பாடுங்க
ஆணும்பெண்ணும் கூட்டம்கூடி ஆடிப் பாடுங்க
வரம்ஆறுமுக சாமியிடம் கேட்டுப் பாருங்க
வேணும்உந்தன் காட்சிஎன்று சொல்லிப் போடுங்க
அவன்வேறு வார்த்தை சொல்லவந்தால் தள்ளிப் போடுங்க
ஹரோஹரா சொல்வதற்குத் தொடங்கிப் போடுங்க
வரும் அசுரப்பய கொட்டமெல்லாம் அடங்கிப் போகுங்க
மோதவந்த துன்பமெல்லாம் விலகிப் போகுங்க
மோதகத்தான் தம்பிபலம் வந்து சேருங்க
தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க
சங்கரன்பெற்ற பிள்ளையப்பற்றி ராகம் பாடுங்க
கந்தனுக்கு நெஞ்சினுக்குள் கோலம் போடுங்க
கண்ணில்வரும் நீரைக்கொண்டு பாலம் போடுங்க

No comments: