Apr 16, 2009

நான் ஹிந்து, நான் ஹிந்துஸ்தானி-0

இந்த மண் எண்ணிலடங்கா புனிதர்களை பெற்று, பெருமை கொண்டு, இப்போது நம்மையும் சுமக்கிறது.
ஒவ்வொரு உயிரும் ஒரு வேலைக்காக இங்கு பிறக்கின்றன.
மனதை புத்தியால் சாரத்யம் செய்தவன் ஏதோ ஒரு விதத்திலாவது இந்த பூமியில் நல்ல அடையாளங்களை வருங்காலத்திற்கு விட்டுச்செல்கிறான்.
தினம் பலர் இறப்பதையும், பிறப்பதையும், வ்யாதி முதலான பல காரணங்களால் துன்பப்படுபவர்களையும் பார்த்தும் மனதை அடக்காமல், விஷயங்களில் அலையவிடுபவன் பூமிக்கு பாரமாக இருந்து, எவருக்கும் ப்ரயோஜனம் இல்லாமல், வாழும் போது கும்பலுடன் இருந்தாலும், சுமக்க ஆளின்றி பரிதாபமாக இறந்து, விரைவில் மறக்கவும்படுகிறான்.

ஸ்வர்க்கம், நரகங்களை நம்புபவர்களுக்கு ஒரு விஷயம். நாம் இங்கு செய்துவிட்டு போகும் செயல்கள், அதன் பலன்களை சொல்லிக்கொண்டாவது, நினைவில் வைத்துக்கொண்டாவது இருக்கும் கடைசி ஒருவன் இந்தப் பூமியில் உள்ளவரை நாம் செயல்களுக்குத் தகுந்தாற்போல் ஸ்வர்கத்திலோ, நரகத்திலோ இருப்போம் என்று நூல்கள் கூறுகின்றன.

நான் திருச்சி உருமு தனலக்ஷ்மி பள்ளியில் (U. D. College & School, தேவதானம், திருச்சி), பதினொன்னாவதுலேந்து, யு. ஜி வரைக்கும் படிச்சேன். அப்ப ராமர்னு ஒரு தமிழ் வாத்யார். அவர் சொல்வாரு, "ஸ்வர்க்கம், நரகம் இருக்குன்னு நம்பறவன் இங்க நல்லது பண்ணிட்டு செத்துப்போயி அப்படி ஒன்னு இல்லேன்னாலும் அதுனால ஒன்னும் நஷ்டம் இல்ல. நல்லதுதான். ஆனா அத நம்பாம இங்க கண்டத பண்ணிட்டு செத்துப்போயி, அப்படி ஒன்னு இருந்து மாட்டிக்கிட்டா ரொம்ப கஷ்டம்டா" ம்பாரு. நாம பயம் இல்லாட்டி ஒழுங்கா இருக்க மாட்டோம். தனிமனித ஒழுக்கம்ங்கறதெல்லாம் யாராவது பாத்துனு இருக்கும்போதுதான். சுத்தி ஒருத்தரும் பயப்படறா மாதிரி ஆள் இல்லேன்னா நாம வீட்ல, டி.வி. பாக்கற இடம், குளிக்கற இடம், சாப்பிடற இடம், ரோடு இன்னும் எல்லா எடத்துலயும் என்னென்னெல்லாம் பண்ணுவோம்னு நமக்கு மட்டுந்தான் தெரியும். அது பெரிய, மோசமான,... லிஸ்ட். எம்.ஜி.ஆர் மேல்நாட்டுல இருக்கறாமாதிரி நம்ம ஊர்லயும் ரோடுல ஆடோமேடிக் சிக்னல் போடனும்னு ஜப்பான்லேந்து இன்ஜினீயருங்களை கூட்டினு வந்தாராம். அவங்க ஒரு கூட்டு ரோடுல, (அதான் ஜங்க்ஷன்) சேந்து போக்குவரத்தப் பாத்துப் ப்ளான் பத்தி பேசினு இருந்தாங்களாம். நம்ம ஆளுங்க கொஞ்சம் பேர் அவங்க கிட்ட போயி, என்ன பண்ணினு இருக்கீங்க, பண்ணப்போறீங்கன்னு கேட்டாங்களாம். ஆட்டோமேடிக் சிக்னல் போடலாம்னு ப்ளான் பண்றோம். ஆளில்லாம அப்பப்ப சிக்னல் மாறும். நாம கவனிச்சு, நாமளா நின்னு போகனும்னாங்கலாம். நம்ம ஆளுங்க, "நிக்காம போனா" ன்னு கேட்டாங்களாம். ப்ளான் பண்ண வந்தவன் ஓடியேப்போயிட்டான்.

பயம். பயம் இருக்கணும். தேவை இல்லாம எல்லாருக்கும், எல்லாத்துலையும் தகுதி இல்லாம இடம் குடுக்கக்கூடாது. எல்லாருக்கும் எல்லாத்தையும் புரிய வைக்க முடியாது, சில பேர் புரிஞ்சுனு, நமக்கும் நாட்டுக்கும் நல்லதுன்னு பாலோ பண்ணுவான். மிச்ச பேர பயமுறுத்திதான் பாலோ பண்ண வைக்கணும். இங்க ரூல்ஸ் போடரவங்களுக்கே அது இல்லாம இருந்தாதான் நல்லதுன்னு தோணுது. அதான் ஊருக்குள்ள இருக்கறவன் கெடைக்கறதையும், ஏமாந்தவனையும் வெச்சு சொந்த மண்ணையும், சொந்த மக்களையும் சொரண்டறான். நம்ம இருக்கற நெலமைய, நம்ம கட்டமைப்புகள பாத்துனு இருக்கற பக்கத்து ஊர்க்காரன் படைய வெச்சு பார்டற சொரண்டறான். அமைப்புகளால நம்ம ஜாதி, மதம், படிப்பு, பலவீனங்கள அளந்து வளங்களையும் சொரண்டினே இருக்கான்.

நம்ம வெளி ஊர்ல இருக்கற நம்ம ஆளுங்களுக்கு குரல் கொடுத்துனு இருக்கோம். ஆனா நாம ஒரு பெரிய, பல சிறப்புகள், பெருமைகள் கொண்ட, பிரிக்க முடியாத ஒரு நாட்டோட பகுதிங்கறதுக்கு சண்டை வரும்போது ஒரு அமௌன்ட் அனுப்பறத தவிர வேற எந்த பங்களிப்பும் தேவையான அளவு குடுக்கறோமான்னு தெரியல. அதெல்லாம் அடிவாங்கறவனுக்குதான் தெரியும், புரியும், செய்வான். எந்த ஒரு படையெடுப்புளையும் நமக்கு வடக்க இருக்கறவங்கள தாண்டி, நம்ம கிட்ட வர்றதுக்குள்ள பல தடவ செத்து, செத்து பொழைக்கணும். ஒன்னு, ரெண்டு பேர் வந்து ஆண்டிருக்கலாம். ரொம்ப ரேர். அதான் நம்ம தனி மொழி, தனிநாடு, தனிமனுஷன், தனி இனம்ன்னு எல்லாத்தையும், எங்க போனாலும் தனியா, தனியா கேட்டுனு இருக்கோம். தனிச்சு இருக்கோம். பிரிக்க முடியாத எல்லா விஷயங்கள்லேந்தும் பிரிஞ்சு இருக்கணும்னு ப்ரியப்படறோம். ஊர் எரியுது, ஊர் வெள்ளத்துல மூழ்குது, ஊரு உருப்படுறது. ஊர் வளருது. ஆனா இது எதுலையும் நம்ம வீட்டுக்கு கவனம், பலன், பங்கு இல்ல. தமிழகம்னு இருந்தா பங்கு இருந்துருக்கலாம். இது தமிழ் நாடு இல்ல!! விசித்திரமான உருப்படாத சிந்தனை. நாட்டுக்குள்ள ஒரு நாடு. மத்த எல்லா ஊர்க்காரனும் எல்லா எடத்துக்கும் போறான், வரான், சத்தம் போடாம, சேந்து வளர்றான். அனுபவிக்கறான். நமக்கு மட்டும் எங்க போ, கூச்சல், கொழப்பம்தான் அடையாளம். இறையாண்மைக்கு எதிரா நெனைக்கறோம்னு ஒருத்தன் சொன்னாலே, இப்படிப் பண்ணிட்டோமேன்னு வெக்கப்படனும், கோவப்படனும். நமக்கு இறையும் இல்ல, இறையாண்மையும் இல்ல. என்ன பண்றது.

மன்னராட்சில இருந்த ஏகாதிபத்தியம், அடக்குமுறை, மோசமான மன்னர்கள், இப்படிப்பட்ட விஷயங்களுக்காக ஜனநாயக ஆட்சியக் கொண்டுவந்தோமாம். ஒரு நீண்ட அரச வம்சத்துல, மோசமான, மக்களுக்குப் பிடிக்காத மன்னர்கள விரல் விட்டு எண்ணிடலாம். அப்படி இருந்தாலும் அறிஞர்கள், பலம் வாய்ந்தவர்கள்னு ஒரு கூட்டம் தனியாவோ, பக்கத்துல இருக்கற இன்னொரு ராஜாவ துணைக்கு வெச்சினோ, அந்த மோசமான ராஜாவ தூக்கிடுவாங்க. இல்ல அவன் காலத்துக்கப்பறம் அவன் வாரிச நல்லவனா மந்திரிங்களும், மற்றவர்களும் கொண்டு வந்துடுவாங்க. இதெல்லாம் வரலாறுலயும், புராணங்கள்லையும் பாத்திருக்கோம்.

ஆனா இப்ப என்ன நடந்ததுனு இருக்கு. அதேதான். பலன்கள நெறையா பேர் அனுபவிக்கறாங்க. நெறையா ராஜா, நெறையா மந்திரி, அதே பரம்பரை ஆட்சிதான். ஒருத்தன் அடக்கினு இருந்தான். இப்ப நெறையா பேருக்கு பயந்துனு இருக்கோம். ஒவ்வொரு எலக்ஷன்லையும் பரவாயில்லங்கர திருடனுக்கு வாய்ப்பு குடுக்கறோம். தேர்தலுக்குப் பின்னாடி என்ன கெடைக்கும்னு யாருக்கும் தெரியாது. தேர்தலுக்கு முன்னாடியே கெடைக்கிறத, குடுக்கறவன்கிட்டேல்லாம் வாங்கிக்கறோம். எல்லாம் ஒரு கொடுக்கல், வாங்கல் அட்ஜெஸ்ட்மென்ட் தான்.
ராஜா மாதிரி பணக்காரங்க இல்ல இவங்க. ஏழையா இருக்கறவனும் செலவு பண்ணிதான் ஆகோணும். நெறையா செலவு பண்ணி, போட்டியெல்லாம் தாண்டி ஜெயிக்கறாங்க. அவங்க சாப்டு, மிச்சம் இருந்து அடுத்த வேளைக்கும் வெச்சினு, தலைமுறைகளுக்கும் வெச்சினு, இன்னும் அவங்களுக்கு வேண்டியவங்களுக்கு, உதவி பண்ணினவங்களுக்கு கொடுத்தது போக நமக்கு கெடைக்கணும். இவ்ளோ பேர், போறும்னு நெனைக்கறதுக்கு முன்னாடி ஆட்சி, போயிடலாம், தேர்தல் வந்துடலாம். ஜெயிச்சா ராஜா, இல்லாட்டி தாதா. காபி, சாராயத்துலேந்து எந்த விஷயத்தையும் அனுபவிக்காமலே இருக்கறது பெருசு இல்ல. அனுபவிச்சுட்டு விடறதுதான் ரொம்ப கஷ்டம்.

ஓட்டுப் போடறதோட நம்ம வேலைய பாக்கப் போய்டுவோம். ஆனா ஜயிச்சவனும், தோத்தவனும்? ப்ளான் பண்ணனும், சீட்டக் காப்பாத்திக்கணும், உழைக்கணும், சம்பாதிக்கணும், கடன் அடைக்கணும். எதிர்காலத்துக்கு சேத்துக்கணும். ப்ரமோஷன் வாங்கணும். பிச்சை எடுக்கறவன், பிளாட்பாரத்துல இருக்கறவன், படிக்காதவன், ஏழையா இருக்கறவன், பிற்படுத்தப்பட்ட வகுப்புல இருக்கவன், இப்படி நெறையா பேர அப்டியே இருக்க வெக்கணும். கூட்டம் நடத்தனும், சேந்து சாப்பிடனும், பேசணும், பேசினத சமாளிக்கணும், ... ரொம்ப கஷ்டம்பா. நம்ம நெனைக்கறா மாதிரி இல்ல ஜனநாயகம். காந்தி, காமராஜர் மாதிரி தலைவர்களுக்கு ஒன்னும் வேண்டாம். நேரு, எம்.ஜி.ஆர், மாதிரி தலைவர்களுக்கு இங்க சம்பாதிக்கனும்னு அவசியம் ஒன்னும் அவ்வளவா இல்ல. நாம நின்னாலும் இதே கதிதான். ஒரு ராஜா பணக்காரனா இருக்கான், அடக்கி ஆள்ரான்னு இன்னிக்கி நெறையா பேர உருவாக்கி இருக்கோம். சமையல்கட்டுல நெறையா சமையல்காரன் பூந்தா சாப்பாடு என்ன ஆகும்? நம்ம ஊர் மாதிரிதான் ஆகும்.

படிப்பறிவு இல்லாதவனுக்கும், விஷயம் தெரியாதவனுக்கும் படிப்பையும், விஷயங்களையும் சொல்லி குடுத்து அந்தந்த வேலைல ஒக்காத்தனும். இங்க ஒருத்தனுக்கு டிகிரில முதல் வகுப்புல பாஸ் பண்ணினா கெடைக்கற வேலைய, இன்னொருத்தனுக்கு ட்வெல்த்ல பாஸ் பண்ணி இருந்தா போறும்னு குடுக்கறோம். அவரு ட்வெல்த்ல எப்படி கஷ்டப்பட்டுப் பாஸ் பண்ணினாரோ, அப்படித்தான் வேலையையும் கத்துப்பாரு, செய்வாரு, அவ்ளோ தரம் தான் இருக்கும். வீட்டுக்குள்ள, தெருவுல, கோவில்ல, வேலை பாக்கற எடத்துல, அரசியல்ல எல்லா எடத்துலயும் யூனியன் வேற. மேல் அதிகாரி ஒருத்தர், அவர்பாட்டுக்கு இருந்துட்டு போக வேண்டியதுதான்.

நல்லதுக்கும், நாகரீகத்துக்கும் நாமதான் முன்னோடியா இருந்தோமாம். போற போக்கப்பாத்தா இனி நடக்கப்போற அவலங்களுக்கும், அனாகரீகங்களுக்கும், அவைகளால் வரும் அழிவுகளுக்கும் நாமதான் முன்னோடியா இருப்போம் போல.

த்யாகம் குறைந்து சுயநலத்தால் சொந்த வீட்லயே லாபம் பாக்க நெனைக்கறோம். ஆடும்போது ஆடவிட்டு, அசரும்போதுதான் ஆண்டவனும் அடிப்பான் போல. சக்கரம் சுத்தனும்ல

6 comments:

Loganathan said...

Romba azhagana samudhaya sindanai..
But yellamay yadharthama than irundhadhu...

Analum indraya samudhatha mattuvadhu romba kashtam nu nenakkiran, Even nalaikku neengalay oru arasiyal vadhi aanalum ippadiyellam seiya vendiyadu irukum..

Idhu pondra karuthukkala adikkadi mathavanga gavanathuku konduvaradhu nalayum oru sila nalladu nadakkalam..!

-keep continue such a truth topics..

Logesh G.K said...

"நான் ஹிந்து, நான் ஹிந்துஸ்தானி-0"--- illa yellarum therinjikavendiya onnu.

ஸ்வர்க்கம், நரகங்களை நம்புபவர்களுக்கு --- ippavaavadu irukku nu assume pannikka vendiyadu dhaan.

ல்லாருக்கும் எல்லாத்தையும் புரிய வைக்க முடியாது, சில பேர் புரிஞ்சுனு, நமக்கும் நாட்டுக்கும் நல்லதுன்னு பாலோ பண்ணுவான். --- Kandippa yellarukkum yellathayum puriya vakka mudiyadu nalladhu nu follow panna vundu.

....வாரிச நல்லவனா மந்திரிங்களும், மற்றவர்களும் கொண்டு வந்துடுவாங்க. --- nambalaaala mudiyuma theriyala.

டிகிரில முதல் வகுப்புல பாஸ் பண்ணினா கெடைக்கற வேலைய, இன்னொருத்தனுக்கு ட்வெல்த்ல பாஸ் பண்ணி இருந்தா போறும்னு குடுக்கறோம்--- idhanaala thaan NAM NADU ippdi irukku.

ட்டுப் போடறதோட நம்ம வேலைய பாக்கப் போய்டுவோம்.--- boova (Saapaadu)venumey!

ல்லதுக்கும், நாகரீகத்துக்கும் நாமதான் முன்னோடியா இருந்தோமாம்.--- irundhoom nu ninaikiren!

Kandippa சக்கரம் சுத்தனும்...

sugumar said...

Sir.. Entha Sir. Unagulu evalau matter theriyum Naan ethri pakkala.. Really Super message.. Really I'm proud to say , working with you..

ஜீவகவி said...

சார், நல்லா எழுதி இருக்கீங்க , நீங்க நினைக்கிற மாதிரி ஒரு அரசியல் சாம்ராஜியம் சீகரமே நிர்மாணிக்கப்படும்... சந்தோசம் தொலைவில் இல்லை ....

Anand said...

ஸ்வர்க்கம், நரகங்களை நம்புபவர்களுக்கு is something worth thinking. Its good but its not best. If you tell people to do good because you will get heaven then he may do it but when he or his children comes against something in life which shows them that it does not exist they turn full opposite and become the worst. I think we should not stick to such falsehoods, these has actually misled hindus to the current state of affairs. Do good because its good not because it gives you heaven after death. Its not permanent, may be few will follow you don't mind, one good follower is better than a billion dumbs.

comment will continue ...........

Anand said...

I agree to the fact that its lack of fear that's the reason for most of illegal and immoral practices. But the fear has to be created by the rulers. But we don't have rulers who want good things to happen, they don't themselves have fear. So only way is to get involved in activites that can make you a rule so that you can show a way to the crowd