15. கிரிதர கோபாலா - பாலா
ச்யாமள சரீர கௌஸ்துப ஹார
பீதாம்பரதர ப்ரபோ முராரே (கிரிதர)
நந்த ஸுகுமார மனமோஹனாசார
ப்ருந்தாவனசர துளஸீஹார (கிரிதர)
கிரிதரகோபால கம்ஸவிசார
மீரா மானஸ ஸரோவிஹார (கிரிதர)
16. கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே
லீலைகள் செய்வான் பால கோபாலன்
நீலமுஹில் மணிவண்ணன், கண்ணன் (லீலைகள்)
கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன்
வானவர் வாழ மாநிலம் மீது
ஆநிறை மேய்த்த என் நாதன் (கண்ணன்)
ஆயர் மனையில் வெண்ணை திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே
மாயப் புன்னகை செய்து மயக்கும்
மீராவின் ப்ரபு தானே (கண்ணன்)
ப்ரேம நதியின் தீரமதனில்
மீரா ப்ரபுவும் வருவார்
திருமுகமதனில் குறுநகை மலர
அகமும் புறமும் நிறைவான் (கண்ணன்)
மானமளந்தான் காலை நினைந்தால்
மாயவினை அகலாதோ
கனியிதழ் கூறும் குழலிசை கேட்டால்
கல் மனமும் கரையாதோ (கண்ணன்)
மானினைக் காண மாமுனிவோர்கள்
மா கடல் தேடியே வந்தார்
ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
காண்கினும் என்று வியந்தார் - அம்மை
சங்கரன் வந்தார் இந்திரன் வந்தார்
சந்திர ஸூரியர் வந்தார்
அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார்
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
பேதை மீரா ஹ்ருதயம் தன்னில், அடியாள் மீரா
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமை தந்தான் (கண்ணன்)
17. ஸராசரம் உன்னை யாவும் தேடுமே
மறைகளும் மகிழ்ந்துன்னைப் பாடுமே - ஹே ப்ரபோ!
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதார விந்தமே
உன்னையே எனதுயிர்த் துணையென்று
உவந்ததென் தவறோ ஐயா
கனவிலும் உன்னையன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களைக் கருதியதும் உண்டோ
இரங்குவதரிதில்லையா மறந்திடலாகாதையா
இரவெல்லாம் கண்ணில் நீரருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரி என நாவும் கதறும்
இதயமும் பதறும் ஐயா
பாதமலரினில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
அடியாள் மீரா அன்றும் இன்றும் - உன்
அடைக்கலம் ஐயா
18. யதுநந்தனா கோபாலா ஜய ப்ருந்தாவன லோலா
ஜய தீன வத்ஸலா ஜய வேணு கான லோலா (யதுநந்தனா)
ஹே வரதா! அருள் தருவாய் வனமாலி
ஜய மீரா ப்ரபு கிரிதாரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment