Apr 20, 2009

பக்த மீரா பாடல் வரிகள்

1. கோபாலனே பாலகோபாலனே
கோபாலனே வேணுகோபாலனே
குஞ்சரிமாரில் கண்ட விலோலன
கோவிந்தனே தேவகி மைந்தனே
குவலய கனச்யாமளனே சுந்தர
முரளீதரவர மோஹன முரஹர
முகுந்தமாதவ பரமதயாபர

2. ச்யாமளவண்ணனே மாயவனே (கன)
மலர்தாமரை போலும் நயனனே
தாரகநாமனே தூயவனே (ஜய) - உயர்
த்வாரகை வாழும் அதிபனே (ச்யாமள)

சுரமாமுனியோரும் வந்தனை புரியும் - (ஹே ப்ரபோ)
திருநாரணனே பரிபூரணனே (ச்யாமள)

கருணாநிதியே எனது கதியே மாமதுரா பதியே
முரளீதரனே நந்தஸுதனே கோகுலநாயகனே - ஜய
மாதவனே உயர் யாதவனே
கோபியர் மாமன மோஹனனே (கனச்யாமள)

3. நந்தபாலா என் மணாளா இங்கு வாராய் கிரிதாரி
இந்த மாலை நீ சூடி அன்பு கூடி விளையாட இங்கு வாராய் என்னைப் பாராய் கிரிதாரி

முரளீ மோஹனா, ஹே முரளீ மோஹனா, மோஹனா, ஹே முரளீ மோஹனா,
கருணாலய சுந்தரா, முரளீ மோஹனா, மோஹனா
அபலை என்னையே அறியாப்பருவந்தன்னில்
அடிமை மிகுந்தனை அன்றே மறந்தாயோ
உன்னையல்லால் இன்பம் உண்டோ கிரிதாரி (நந்தபாலா)


4. காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் (காற்றினிலே)

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோஹன கீதம் - நெஞ்சினிலே
இன்பக் கனலையெழுப்பி
நினைவழிக்கும் கீதம் (காற்றினிலே)

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகனங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன் மாயப்பிள்ளை வேங்குழல் பொழி கீதம் (காற்றினிலே)

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலா விடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் (காற்றினிலே)


5. மறவேனே எந்நாளினுமே
கிரிதாரி உனதருளே (மறவேனே)

நஞ்சை நீ உண்டனையோ - இந்த
பஞ்சையைக் காத்தனையோ
ஒரு விந்தை புரிந்தனையோ (மறவேனே)

ஜய மீரா ப்ரபு கிரிதாரி


6. ஹே ஹரே! தயாநாதா! என் உயிர்க்கினிய மணவாளா
வேங்குழலின் நாதம் காதிலே ஆரமுதம் போலே பாயுதே

சன்னிதி தன்னை நானிகலேனே கருணாஸாகரா

என்னை வலிய வந்தாளும் இறைவா
கண்ணா என் ஜீவேச்வரா
உடையவா அடிமை யான் விடுவையோ
என் உடையவா உன் அடிமை யான் விடுவையோ

தேவகி பாலனே, தேவகி மைந்தனே, மீரா ப்ரபு மீரா ஜய
முகுந்தனே, மாயனே த்வாரகா நாதனே ஹே ப்ரபோ

No comments: