Oct 9, 2018

கர்நாடகா தீர்த்த, தல யாத்திரை

நிர்மிதாவின் சாகசப் பயணங்கள் - கர்நாடகா தீர்த்த, தல யாத்திரை

4 நாட்களில் 40 கோவில்கள், முடிஞ்சதும் யாராவது அந்த கோவில்ல சாமி நின்னிட்டு இருந்தாரா, ஒக்காந்திட்டு இருந்தாரான்னு கேட்டா எங்களால சரியா சொல்ல முடியுமான்னு நிச்சயமா தெரியல,  ஆனா எல்லா சாமியும் எங்கள பாத்திட்டாங்க, 5-7 புராண ப்ரசித்தி பெற்ற நதிகளில் குளிச்சாச்சு.  இறையருள் இருந்தால் மறுமுறை நிதானமா போவோம்.

போறோம், இல்ல முடியல, நாலு நாள் போனா குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம ஆய்டும், எனக்கும் முடியவே முடியாதுங்கற மனைவியின் விசும்பலோடு 20 வருஷ டூர் ப்ளான் இப்ப நடந்தேறியது.

27 செப்டம்பர் 2018, வ்யாழக்கிழமை இரவு 1.35 க்கு தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நண்பர் கார்த்திக் மணிகண்டன் வீட்டில் சிற்றுண்டி விருந்து முடித்து, கார் அவரோடது, ட்ரைவர் அவர் ஏற்பாடு, மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஶ்ரவணபெலகொலா போய் சேர்ந்தோம்.  சிலை கீழே இருக்கும்னு பாத்தா 720 படிகளுள்ள மலைமேலே இருக்கிறார் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர கோமதீஶ்வரர் என்கிற பாஹுபலி.  டோலி விசாரிச்சா ஒருவருக்கு போய் வர ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாங்கிறான்.  மலையே சின்னதா தெரிந்தது அப்போ.  படிகளும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் படிகள் போல சப்பை, சப்பையா தான் இருக்கு, நடந்தே போய்டலாம்ன்டாங்க மனைவி.  ஏற 20 நிமிஷம், இறங்க 10 நிமிஷம்.  ஆசம் பாஹுபலி கோவில், நம் புராதன முறைப்படி அடுக்கி, அடுக்கி சேத்து வெச்சிருக்காங்க கோவில், சரிஞ்சிடாம இருக்க பிற்காலத்துல முட்டுக்குடுத்திருக்காங்க பாறாங்கற்களால்.  தொல்பொருள் இலாகா பார்வையில் இருக்கிறது கோவில் ஃபோட்டோ, வீடியோ கண்டிப்பா எடுக்கக்கூடாதுங்கற போர்ட கூட விடாம ஃபோட்டோ எடுக்கறாங்க நம்மாளுங்க.  பாஹுபலி கூட செஃல்பி, லைவ் வீடியோ,  ஒக்காந்து கொஞ்ச நேரம்  சிவத்யானம் செஞ்சிட்டு இறங்கினோம்.  மலைமேல பாஹுபலி, ஒரு சமண குரு, என் பையன் மூனு பேரும் ஒரே கோலத்தில் தரிசனம், பிறந்த நாள் ட்ரெஸ்ல.

விந்தியகிரி, சந்த்ரகிரின்னு ரெண்டு மலைகள் இருக்கு இங்க,  பாஹுபலி சிலை விந்தியகிரியில் இருக்கு.  தன் மகன்கள் 100 பேருக்கும் ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டு, சந்த்ரகிரியில் தங்கி விடுகிறார் சூர்ய வம்ச அரசர்,  முதல்வன் பாஹுபலி, இளையவன் பரதன், சகோதரர்கள் அனைவரையும் போரில் வென்ற பரதன், பாஹுபலியோடு ஒத்தைக்கு ஒத்த சண்டையில் தோற்று விடுகிறான்.  எனினும் ஆசைகளின் விபரீதமே சகோதரர்களுக்குள் நடந்த இந்த யுத்தம் என்று தெளிந்த பாஹுபலி ராஜ்யங்களை பரதனிடமே கொடுத்து விட்டு ஒட்டுத்துணியையும் துறந்து காட்டில் தவம் செய்து தம்பிக்கு தவத்தின், த்யாகத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.  12 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களால் நடத்தப்படும் மஹாமஸ்தகாபிஷேக விழாவில் இம்முறை புதுசா ஒரு படிக்கட்டு பாதை திறந்திருக்காங்க ப்ரதமர் மோடி.

பன்ஸ்ன்னு ஒன்னு விக்கறாங்க பெங்களூர் ஹோட்டல்களில், பொட்டிக்கடை பன் எண்ணைல வாட்டி எடுத்தாப்ல இருந்துது.  எல்லா கர்நாடகா ஹோட்டல்களிலும் இரவிலும் வெரைட்டி ரைஸ், மீல்ஸ் கிடைக்குது.  தமிழ்நாட்டு ஹோட்டல்களில் வெகு, வெகு, வெகு.... அரிதாகக் காணக்கிடைக்கும் காட்சி இது.  50-70 ரூபா மீல்ஸ் எப்ப முடியும்,  சாயந்தரம் எப்ப வரும், ஒரு கரண்டி மாவுல இட்லி, தோசை வகைகள், போதாக்குறைக்கு 10-15 வருஷங்களா நான், பட்டர் நான், சைட் டிஷ் க்ரேவி, செமி க்ரேவி வேற, கல்லா கட்டி கொள்ளையடிக்கும் நேரம் நம்மூர்ல காலை, மாலைகள்.  கர்நாடகா இன்னும் மக்களுக்கு இந்த கரிசனத்த காமிச்சிட்டு இருக்கு.  வெளிநாட்டு குளிர்பானங்களை இனிமேல் விற்க மாட்டோம்னு புருடா உட்ட பசங்க நம்ம வ்யாபாரிகள், இவனுங்களா நைட் மீல்ஸ் போடப்போறாங்க.  பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் கிட்ட மதி த்யேட்டருக்கு எதிரில் சபரி ஹோட்டலில் மட்டும் இன்றும் இரவு மீல்ஸ் கிடைக்குது.

இரவு குளிர், மழையில், இருளில் மலைப்பயணம் முடிந்து தர்மஸ்தலா சேர்ந்தோம்.  நைட் 10 மணிக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், மீல்ஸ், தோசை கிடைக்குது ஹோட்டல்களில் 30 ரூபாய்க்கு.  சாப்டுட்டு தேவஸ்தானத்து ஆஃபீஸ்ல ரூம் விசாரிச்சோம்,  300 ரூபா டபுள் பெட் அட்டாச்டு பாத்ரூமோட.   வர்றவங்களுக்கு ஒரு குறையும் இல்ல இங்க தங்கற இடம் தேவஸ்தானத்து சத்திரங்களில்,  மதியம் இரவு அன்னதான ப்ரசாதம் இலையில் பரிமாறி.  டூரின் இரண்டாம் நாள் காலையில் நேத்ராவதி நதியில் நீராடி, காலை சூரிய பூஜைகள் செய்து தர்மஸ்தலா மஞ்சுநாதர் தரிசனம்  முடித்தோம்.  சமணர்கள் பராமரிப்பில் குருக்கள்களின் பூஜை முறைகளோடு சிவபெருமானாகவும், சமண தீர்த்தங்கரராகவும் வழிபடப்படுகிறார் இங்கு.   நிர்வாகத்தார் சுற்று க்ராமங்களில் கல்வி, மருத்துவ சேவைகளையும் செவ்வனே செய்து வருகின்றனர்.

குமாரதாரா நதியில் மதியம் சூரிய பூஜையை முடித்து கரையில் குடிகொண்டிருக்கும் குக்கி சுப்ரமண்யஸ்வாமி தரிசனம் முடித்தோம்.  இங்கு நாகர்களுக்குக் காவலனாக முருகன் இருக்கிறார்.  ஆதி சுப்ரமண்யர் சன்னிதியில் நாகராஜனையே முருகனாக வழிபடுகின்றனர்.

உடுப்பி க்ருஷ்ணன் குட்டியா ரம்யமா இருக்கான், வெளில இல்ல நம்ம மனசுல.  ஆம், ஒன்பது த்வாரங்கள் கொண்ட நம் ஒவ்வொருவர் இதயத்திலுமே இந்தத் திருடன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் உடுப்பியில் ஒன்பது ஓட்டைகள் கொண்ட ஜன்னல் வழியாகத்தான் க்ருஷ்ண தரிசனம்,  ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.  நம்மூர் போல குறுக்க நெடுக்க யாரும் சன்னிதியில் நடந்து மறைக்கறதில்ல.    30-40 மாடுகளோட கோ சாலை இருக்கு, தரிசனம் செய்தோம்.   கோவிலுக்கு எதிரில் மீசையோடு சிவபெருமான் கோவில் தரிசனம் முடிந்து லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே கொல்லூர் மூகாம்பிகையை நோக்கிப் பயணம்,  இருட்டு, மழை, மலை, காடு, வழியில் ஒரு லைட்டு கூட இல்ல, கோவில்ல கும்பல் இருக்காதுன்னு பாத்தா, ஒரு 600-700 பேர் போல இருக்கு கும்பல்,  அம்பாள் புறப்பாடு நடந்து, மூலவர் தரிசனமும் முடித்தோம்.    இங்கயும் சுத்தமான அன்னதானம், சாப்பிட்டு முடித்து, கோவில் ரூம் 300 ரூபாய்க்கு, அயர்ந்து தூங்கினோம், இரண்டாம் நாளும் இனிதே முடிந்தது. 

மூன்றாம் நாள் கொல்லூர் சௌபர்ணிகா நதியில் நீராடி காலை சந்த்யா வந்தனம் முடித்து முருடேஶ்வர் சென்றோம்.  இன்னிக்கு ஸ்டைல்ல பெரிசா சிவன் சிலை பீச்சாங்கரையில், சுத்தி சுத்தி செல்ஃபி எடுத்தோம்,   10ரூபாய்க்கு ஒரு குகை மாதிரி அனுபவம், கன்னட குரலில் ஸ்தல வரலாறு அழகான சுதைகளோடு குகைக்குள்ள.  இங்க இருக்கற சிலைக்கு பணம் செலுத்தி பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்து மகிழ்கிறார்கள்.  ராவணன் சிவ தர்சனம் முடித்து, ப்ரசாதமாக அவருடைய விக்ரஹம் ஒன்றையும் தன் தேசத்திற்கென்று சிவனிடம் பெற்றுச் செல்கிறான்.   தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த ஸ்தலத்தில் சிறு பையனாக வழியில் இருந்த பிள்ளையாரிடம், மாலை சந்த்யா வந்தனம் செய்து விட்டு வந்து விடுவதாகவும், கீழே வைத்து விடாமல் சிலையை கையிலேயே வைத்துக்கொண்டிருக்குமாறும் கூறி கொடுத்து செல்கிறான்.    இவன் சொன்னபடி கேக்கவா அவர் இருக்கார்.  அவர் கீழே வைத்து விடுகிறார்.  அதை எடுக்க முயற்சிக்கையில் லிங்க மேனிதான் மாட்டுக் காது போல வளைந்ததே தவிர எடுக்க வரவில்லை.   அந்த இடமே கோகர்ணம் (பசுவின் காது),  நிஜ ஸ்வரூபத்தைக் காட்டிய பிள்ளையாரை வணங்கிச் செல்கிறான் பத்துத்தலையன்.  இதே வரலாறு கீழே     ஸ்ரீரங்கத்திலும் பின்னர் நடந்தது, அவன் தம்பி விபீஷணனிடம் ரெங்கநாதர் விக்ரஹத்திற்காக.    கோகர்ணம் போலாம்னு பாத்தா அங்க போயி மூனு மணி நேரம் கழிச்சி சாயந்தரம் 5 மணிக்கு தான் கோவில் திறப்பு, அவ்ளோ நேரம் அங்க இருந்தா மத்த ப்ளான் எல்லாம் டும் ஆய்டும்.  அதனால கோகர்ணத்த அடுத்த 30 கோவில் டூர்ல சேத்துக்கலாம்னு கூடலி ஶ்ருங்கேரி சங்கராச்சார்ய மடத்த நோக்கிப் பயணித்தோம்.  வழியில் உலகப்புகழ் ஜோக் நீர்வீழ்ச்சி பரவசமான காட்சி.


துங்கா நதியும், பத்ரா நதியும் கூடுவதால் கூடலின்னு பேரு இந்த க்ராமத்துக்கு.  ரெண்டு நதிகளுக்குமிடையில் ராமநாதர் கோவில், சங்கர மடங்கள் கரையில் இருக்கின்றன.   சரியான மழை ஒரு மணி நேரத்துக்கு,  மழை நின்னதும், குடும்பத்தோட துங்கபத்ரா நதிக்கூடலில் மாலைக் குளியல் அருமையாக,  மாலை சந்த்யாவந்தனம், ஜபம்,  தற்போதைய பீடாதிபதிகள் ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வருபவர் எல்லோருக்கும் பாகுபாடின்றி தர்மோபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.   குழந்தைகள், நடுத்தற, பெரிய வயது பெண்கள், ஆண்கள்னு ஒரு டீமுக்கு லீலா ஸரஸ்வதி, சுப்ரமண்யரோட 32 பெயர்களையும் உபதேசம் செய்து திரும்ப சொல்ல வைத்துக்கொண்டிருந்தார்,  கன்னட மொழியில் புஸ்தகமும் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார் தினமும் வ்யாதிகள், கஷ்டங்கள் நீங்கி, மெமரி பவர், கவனம் ஜாஸ்தியாக.  நாங்களும் சேர்ந்து சொன்னோம்.  இரவு ஶ்ருங்கேரிக்குப் போகப்போவதாக சொன்னோம்,  நேரமாகிவிடும் குழந்தைகள் வேற இருக்கு, சாப்டுட்டு போங்கோன்னு சொன்னார்.   பெரியவங்க சொன்னதையெல்லாம் கேட்டிருந்தா நாம ஏன் இப்டி இருக்கோம்.  சாரதாம்பாள நின்ன கோலத்துல தரிசனம் செய்து விட்டு,  சாப்டாம கெளம்பினோம்.  வழில சோத்துக்கு சிங்கியடிச்சி இரவு உணவா சிப்ஸ், பேக்கரி பப்ஸுன்னு ஹெல்த்தி ஃபுட்டா சாப்டுட்டு ஶ்ருங்கேரிக்குப் பயணம்..  இரவு ஶ்ருங்கேரி தேவஸ்தானத்து சத்திரத்தில் 300 ரூபாய்க்கு தங்கல்.





கூடலி ஶ்ருங்கேரி சங்கரமடம் ஶ்ருங்கேரி ஆச்சார்யரால் ஸ்தாபிக்கப்பட்டது.    ஆதி சங்கரர் மண்டனமிஶ்ரராக அவதரித்திருந்த ப்ரஹ்மாவை வாதத்தில் வென்று ஸுரேஶ்வரர் என்று தன் சீடனாக்கிக்கொண்டார்.  அவருடைய மனைவியான ஸரஸவாணி ஸரஸ்வதியின் அவதாரம்.   கணவனை சீடனாக்கிக்கொண்டு தன்னோடு வாதம் புரிந்த ஸரஸவாணியையும் இந்த க்ஷேத்ரத்தில் நின்ற கோலத்தில் வனதுர்கா மந்த்ரங்களால் ஸ்தாபனம் செய்து வழிபட்டார்.

 நான்காம் நாள், துங்கா நதிக்கரை, சாரதாம்பாள் கோவிலுக்கு எதிரில் சத்திரம்,  காலை 6.30 மணியளவில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் சாரதாம்பாள், வித்யா சங்கரர் தரிசனம், கோவிலுக்குள்ளேயே துங்கா நதியில் குளிக்க படிக்கட்டுகள்,  காலை சந்த்யாவந்தனம் முடித்து, 9 மணிக்கு ஆற்றைக்கடக்கும் பாலத்தை திறந்து விட்டதும் எதிர்க்கரைக்குப் பயணம்.   ஶ்ருங்கேரி சங்கர மடத்தில் சந்த்ரமௌளீஶ்வரர் பூஜா ஹாலில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஜபம்,   ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ விதுஶேகரேந்த்ர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் முடிந்து ஹொரநாடு அன்னபூர்னேஶ்வரி கோவில் தரிசனம்,  அங்கேயே மதிய அன்னதான சாப்பாடு.   மாலை தரிசனத்திற்கு பேலூர் சென்னகேசவ பெருமாள் கோவில்.  மரவேலைப்பாடுகள் போல கல்லுலயே பூந்து வெளையாடியிருக்காங்க நம்ம சிற்பிகள்,  ஹொய்சால ராஜாக்கள் காலத்து மாடல்,  நுணுக்கமான வேலைப்பாடுகள், சீலிங், சுத்து சுவர், கோபுரம்னு எல்லா இடங்களிலும், கோவில்ல இருக்கற மொத்த சிற்பங்களையும் இந்த சுத்தற தூண்ல செதுக்கியிருக்கேன், ஏதாவது மிஸ் ஆகியிருந்தா இந்த இடத்துல அதை செதுக்குங்கன்னு ஒரு இடத்த காலியா விட்டிருக்கான் தொழில் திமிர் கொண்ட அந்த சிற்பி.  நம்மாளுங்க பக்தி ஜாஸ்தியாகி கொஞ்சம் சிற்பங்கள உடைச்சிருக்காங்க.  இந்த தூணும் இப்ப சுத்தறதில்ல.

நைட் 1 மணி ஆய்ட்டதால, நாங்களும் டயர்டு, லேட்டா எழுந்திருந்து அவமானப்படாம இரவு கார்த்தி வீட்டுக்கிட்டயே ஒரு ரூம்ல தங்கிட்டோம்.  இவ்வளவு தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனப் பலன், காந்தி ஜயந்தி மதியம் கர்னாடக ஐராவதத்துல பயணம்.  இரவு 11 மணி போல மாமி சமைத்த சீரக மிளகு ரசம், மோர் சாதம் சாப்டுட்டு நல்ல ஓய்வு,

இயற்கை, குளிர், மழை, பீச், அடர்த்தியான காடுகள், சரிவான அடர்த்தியான, கடும் மலைப்பாதைகள், மின் விளக்குகள், ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லாத, பக்கத்துல போனா தான் கண்டுபிடிக்கவே முடியும்ங்கற மாதிரி க்ராமங்களில் இருக்கின்றன நாம் பயணித்த பாதி கோவில்கள்.   வழி நெடுகிலும் நீரோடு ஆறுகள், கடலோடு சங்கமிக்கும் பேக் வாட்டர் பாலங்கள், பொன்னி அரிசி, ரப்பர், வாழை, பாக்கு, தென்னை, அன்னாசி என கொழிக்கும் வட கர்னாடகா.    தண்ணிக்கு அடுத்த மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கு,  வேலைக்கும் ஆட்கள் கிடைக்கலன்னு பல காரணங்களால் விவசாயம் அருகிப்போய் கொண்டிருக்கும் நம்ம ஊரப் பாத்திட்டு, நாடி, நரம்பெல்லாம் விவசாய வெறி ஊறினாப்ல இன்னும் இந்த ஊர்கள விட்டு விலகாம, விவசாயத்தை செய்து கொண்டிருக்கும் இந்த மக்களயும், பச்சைப் பட்டு போர்த்திய மண்ணையும், மலைகளையும் பார்த்தா பெருமூச்சும், பொறாமையுமாதான் இருக்கு.  ஒவ்வொரு ஸ்தலமும் இங்கேயே தங்கி விடலாம் என இழுக்கின்றன.  தோ ஆஃபீஸ்லேந்து கால் வந்தாச்சு.  மீண்டும் சந்திப்போம்.

  • ஸ்ரவணபெலகொலா - வெண்குளம் - கோமதீஶ்வரர்
  • தர்மஸ்தலா - நேத்ராவதி - மஞ்சுநாதர்
  • கொக்கி - குமாரதாரா - சுப்ரமண்யர்
  • உடுப்பி - குளம் - க்ருஷ்ணன் - சந்த்ரமௌளீஶ்வரர்
  • கொல்லூர் - சௌபர்ணிகா - மூலவரே பஞ்சலோக மூகாம்பிகை (ஸ்வர்ண ரேகை உள்ள லிங்கரூபம்)
  • முருடேஶ்வர் - அரபிக்கடல் - முருடேஶ்வர் (உலகின் 2ஆவது பெரிய சிவன் சிலை, பக்தர்கள் மேலே சென்று பார்க்க லிஃப்ட் வசதி உள்ள ராஜகோபுரத்துடன்)
  • கூடலி - துங்கபத்ரா கூடல் - சாரதாம்பாள், கூடலி ஶ்ருங்கேரி சங்கர மடம்
  • ஶ்ருங்கேரி - துங்கா - சாரதாம்பாள், ஶ்ருங்கேரி சங்கர மடம்
  • பேலூர் - யாகாச்சி ஆறு - சென்னகேசவப் பெருமாள்

Sep 4, 2018

பர்வதமலை தரிசனம்

பர்வதமலை ப்ரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனர் தரிசனம்

வரலாற்றுக் குறிப்புகள்:

அர்ஜுனர் - மருதமரத்து நாதர் (மருதவாணர்),

ப்ரமர - வண்டு - சிவன் மேல் மட்டும் பற்று கொண்டு வண்டு உருவெடுத்து அவரை மட்டுமே வலம் வந்த ப்ருங்கி முனிவருக்கு நற்புத்தியளித்து ஆட்கொண்டதாலும், தன் படைகளோடு வண்டுகள் உருவில் ஒரு அசுரனை வென்றதாலும் ப்ரமராம்பிகை.  இந்த ப்ருங்கி முனிவர் தவமிருந்த மலை ப்ருங்கி மலை, இன்றைய பரங்கிமலை.

ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரம் அடி உயரம் கொண்டது. 
கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.  காஞ்சி மஹாஸ்வாமிகள் இந்த கிரிவலம் செய்துள்ளார்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு. 
பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது.  கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் உள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம்(தென்பாதி மங்கலம்) வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு.  வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர்.

தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் தான்.  ஆனால் இன்னும் கொஞ்சம் கடினம்.

இந்த மலையில் உச்சியில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.

வெள்ளியங்கிரி போன அனுபவம் இருந்ததால ஒரு சின்ன ஒப்பீடு, வழி காட்டுதல்:  வெள்ளியங்கிரி உயரம், தொலைவு அதிகம், 7 மலைகள், எல்லா க்ளைமேட்டும் ஒரு தடவ ஏறிட்டு வந்தா அனுபவிச்சிடலாம்.  ஆனா இப்படி பாறைகள் இல்ல, வெவ்வேறு படிவங்கள் பாறை, செம்மண், விபூதி மலைன்னு, தொடர்ந்து செங்குத்து இல்ல, தண்ணி, கடை வசதிகள் சின்ன சின்னதா இருக்கு சாதாரண நாட்களிலும்.  இங்க ஒரு 10-20 அடிகள் கூட சமதளத்துல நடக்கல.  முழுசா பாறைகள்.   எங்களுக்கு இது அத விட கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.  

நாங்க போய்ட்டு வந்த வழி: சென்னை - பூந்தமல்லி - ஸ்ரீ பெரும்புதூர் - இராணிப்பேட்டை - ஆரணி - போளூர் - தென்மதிமங்கலம் - பர்வதமலை - 200 கி.மீட்டர்

வருஷ ஆரம்பத்துல வெள்ளியங்கிரி போய்ட்டு வந்ததுலேந்தே இந்த பர்வதமலை, சதுர கிரியெல்லாமும் முடிச்சிடனும்னு ப்ளான்.  ஆனா தள்ளிட்டே போய்டுச்சு பல காரணங்களால்.  கடினமான மலையேற்றத்துக்கு பாய்சுக்கு கொஞ்சம் மூளை, மனசு திரும்ப தயாராகனும்.  அன்னமிட்ட அன்னை பால்பாண்டியோட அம்மாவும் இறைவனடி சேர்ந்து விட்டார் இடையில்.  ஒரு வழியா செயல் தலைவர் இளவரசனோட தொடர் முயற்சியால் 31 ஆகஸ்ட் 2018, வெள்ளிக்கிழமை ஆஃபீஸ் முடிச்சிட்டு கொஞ்சம் சீக்கரமா கெளம்பி நைட்டே மலையேறிடலாம்னு ப்ளான் பண்ணியாச்சு.   10-12 போல ரெடி.  நம்மளே ஓட்டிட்டுப் போனா மலையேறுவது, இறங்கி மீண்டும் ட்ரைவ் பண்றதெல்லாம் கஷ்டம்,  யாரும் இதுவரை எங்க டீம்ல போனதில்ல இந்த மலைக்கு.  வேன் விசாரிச்சா ரெண்டு நாள் பேட்டா, டோல் அது, இதுன்னு நெறையா ஆய்டும் போல.   நண்பன் ஸ்ரீகாந்த் வண்டி அரேஞ்ச் பண்ணினாரு.   ரெண்டு மூனு ப்ராஜெக்ட்ல இருந்தோம், எல்லாரும் அமெரிக்காவோட கஸ்டமர் மீட்டிங் முடிச்சி ஒரு வழியா 7 மணிக்கு சென்னை டி.எல்.எஃப் லேந்து கெளம்ப தயார்.  

எங்க டெலிவரி மேனேஜர் ஒரு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் பெர்சன்.  என்ன மாதிரி கிடையாது.  லெஹர் 7 அப் பாய் மாதிரி தான் இருப்பார்.   வெள்ளியங்கிரி மிஸ் ஆய்டிச்சின்னு இந்த தடவ கடைசி நிமிஷத்துல ஒரு வழியா செவுரேறி குதிச்சி அவரும் சேந்திட்டார்.  அவருக்கு மாத்துத் துணி எங்க வீட்லேந்து எடுத்திட்டு வரச்சொல்லியாச்சு.  ஏறும் போது ராத்திரி வசதி இருக்கோ, இல்லியோ, இறங்கியாவது எங்கயாவது வயக்காட்டுல பம்புசெட்ல ஜாலியா சோர்வு போக ஒரு க்ராமக் குளியல் குளிக்கலாம்னு ஒரு ப்ளான்.

என் பொண்ணு நாலாங்க்ளாஸ்,  ஏற்கனவே வெள்ளியங்கிரி, நாகலாபுரம்லாம் வந்திருக்கா.  அவள என் மனைவி கொண்டு வந்து விடுவாங்கன்னு ப்ளான்.  நாங்க ஒரு 7-8 வருஷங்களுக்கு முன்னாடி மனைவியோட குலதெய்வம் கோவில் இராமனாதபுரம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்குப் போயிருந்தப்ப வழில ஒரு வயசான அம்மா ஜடாமுடியோட, நீ பர்வத மலைக்குப் போய்ட்டு வா, எல்லாம் நல்லதா நடக்கும்னு சொல்லியிருந்தாங்க.   என் நண்பன் ரஞ்சித்தும் அவங்க அம்மா ஊரு அது தான், ஏதாவது ஹெல்ப் வேணுன்னா சொல்லுங்க, பண்ணிடலாம், போய்ட்டு வாங்கன்னாரு.  நெட்ல இந்த மலைய பத்தி, வழிய பத்தி செய்திகள, வீடியோஸ பாத்தா என் மனைவி வரமுடியும்னு தோணல, நாலஞ்சு ஆபரேஷன் ஆனவங்க.  உழைச்சி கொட்டி, ஏற்கனவே வீட்ல எங்க எல்லாரையும் மேச்சி நலிவாயாச்சு.   வெள்ளிக்கிழமை காலைல திடீர்னு நானும் வந்துடட்டுமான்னு கேட்டாங்க.  விஷயத்தையெல்லாம் சொல்லி, வீடியோவெல்லாம் பாத்திட்டு சாயந்தரம் உன்னால முடியும்னு தோணினா வான்னு சொல்டேன்.  பையனுக்கும் 4 வயசு கூட ஆகல, விட்டுட்டும் வர முடியாது.  முடிவு பண்ணி மொத்த குடும்பமும் கெளம்பியாச்சு சிவன் மேல பாரத்த போட்டுட்டு.  வண்டில என் மனைவியும் வராங்க, பையனோடன்னு சொன்னதும் எல்லாரும் அப்டியே ஷாக் ஆய்ட்டாங்க.   ஒன்னும் சொல்லவும் முடியாது இவன் கேக்க மாட்டான்,  எதாவது கஷ்டமாய்ட்டா என்னா பண்றதுன்னு அவங்களுக்கு பயம், கவலை.  கெளம்பியாச்சு இரவு 7.30 மணிக்கு

போரூர்ல ஆப்பிள், பொரி, கடலை, பொட்டுக்கடல, க்ளூகோஸ் டப்பா, க்ளூகோஸ் மிட்டாய், சாமிக்கு அபிஷேகத்துக்கு 5 எலுமிச்சை, பிஸ்கெட், ப்ரட்ன்னு வாங்கிட்டாங்க பசங்க டீமுக்கு.  20 லிட்டர் வாட்டர் கேன் ஒன்னு வண்டில போட்டாச்சு.  வழில ஒரு ஆரிய பவன்ல டின்னர் முடிச்சிட்டு கடலாடி மௌனகுரு விடோபானந்த ஸ்வாமிகள்  ஆஸ்ரமத்தை இரவு 1 மணி வாக்குல அடைந்தோம்.  மழை சூப்பரா பெஞ்சிட்டு இருக்கு.  பால்பாண்டி நாங்க குடும்பத்தோட இப்டி கெளம்பினதுமே ரஞ்சித் குடும்பத்துக்கு தெரிஞ்ச தென்மதிமங்கலத்துல இருக்கற 'சின்னப்பையன்' கூட பேசி அவரையும் வழித்துணைக்கு வரச்சொல்லிடுங்க, குழந்தைங்க, லேடீஸ்லாம் இருக்காங்கன்னு ஆர்டர் பண்ணிட்டாரு.  அந்த அண்ணனையும் ஃபோன் பண்ணி ஒரு 9.30 மணி போல எழுப்பி, நாங்க வந்திட்டு இருக்கோம், நீங்களும் எங்களோட வாங்கன்னு சொல்லிட்டோம்.  அவரும் நீங்க போளூர் வந்திட்டு ஃபோன் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு.  காலைலயே ஃபோன் பண்ணி இப்டி குடும்பத்தோட வரலாமான்னு கேட்டேன்.  அவரு அப்பவே இப்ப நீங்க மட்டும் வந்து பாருங்க, ராத்திரி நேரம், மழை வேற பெய்யுது,  அவங்க வேற முடியாதவங்க, பையனும் குழந்தைங்கறீங்க, அடுத்த தடவ வேணா, உங்களுக்கு சரின்னு தோணினா கூட்டிட்டு வரலாம்னு சொன்னாரு.  நமக்கு தான் சொல் பேச்சு கேக்கற பழக்கமே கிடையாதே,  ராத்திரி திருப்பியும் 1 மணிக்கு நாங்க கடலாடி ஆஸ்ரமம் வாசல்ல இருக்கோம்னு ஃபோன் பண்ணி வரச்சொன்னோம்.   அவரு அந்த வழி வேணாம், இப்ப கஷ்டமா இருக்கும், நீங்க திரும்பி போளூர் வழில வாங்க, நா உங்கள தென்மதிமங்கலத்துல பிக்கப் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டாரு.

இந்த விடோபானந்த ஸ்வாமிகள், திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் குழுவினர்னு கொஞ்சம் டீம் ஏற்கனவே சில வசதிகளையெல்லாம் பக்தர்களுக்காக, பக்தர்களைக்கொண்டே அவனருளால் அங்க செஞ்சிட்டு இருக்காங்க.  டொனேஷன்ல கெடச்ச சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணின்னு ஒவ்வொரு பொருளயும் மலையேறும் பக்தர்களை வேண்டி, இஷ்டமிருந்தா முடியும்னா எடுத்துட்டுப் போய், மலைல சேத்திடுங்கன்னு சின்ன, சின்ன துணிப்பைகள்ல, ஒரு லிட்டர் பாட்டில்கள்ல அனுப்சி, இன்னிக்கு மலை மேல இருக்கற முழு கட்டுமானங்களையும் முடிச்சிருக்காங்க.  புணரமைக்கப்பட்ட கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, வழில கடப்பாறை, வண்டிச்செயின், சங்கிலிகள் பிணைச்சி, காங்க்ரீட் படிகள், சைடு தடுப்புகள், இரும்புப் படிக்கட்டுகள்னு பல.    கீழ இருக்கற ஆஸ்ரமத்துலயே சித்தியாகியிருக்கும் விடோபா ஸ்வாமிகள் மேல வந்தவங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

வழில ஒரு சொட்டு தண்ணி வசதியும் கிடையாது, ஒரு கடையும் கிடையாது.   இவ்வளவு உயரமான செங்குத்து மலையேற்றத்துல இன்னி வரை யாருக்கும் எந்த குறையும் நடந்ததுமில்லை.    ஆளுக்கு ஒரு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வாட்டர் பாட்டில், ஆப்பிள், க்ளூகோஸ்னு சுமந்திட்டு போய்டலாம்னு கெளம்பிட்டோம்,  ஒன்னு ரெண்டு பேர் தான் ஷூ போட்டிட்டு வந்தாங்க.  விடிகாலை 2.30 மணிக்கு ஆரம்பிச்சி வழில பாம்பு, தேளெல்லாம் பாத்திட்டு, மழைல நனைஞ்சிட்டு 3 கி.மீட்டர் டார்ச் லைட் வெளிச்சத்துல ஒரு வழியா வீரபத்திரர் கோவிலுக்கு வந்து சேந்தோம்.  அந்த நேரத்துலயும் அங்க சுடா கஞ்சி ரெடி வர்றவங்களுக்கு.  நாங்க ஏற்கனவே சாப்டதால கெளம்பிட்டோம், மழையும் நின்று விட்டது.  1263 படிகளப்பா, அத்தனையும் முழங்கால் முறிச்சான் படிக்கட்டுகள்.  அத தாண்டினதும் ஏற்றமான சிறிய, பெரிய பாறைகள்.  டீம் பிரிஞ்சி போச்சு.  மணி சார் முதல் டீம்ல போய்ட்டாரு அவரும் வெயிட் கிடையாது, அவர்ட்ட எந்த லோடும் கிடையாது.  பையனும், பொண்ணும் ரைன் கோட்டுக்குள்ள.  ரெண்டு மணி நேரம் தூக்கிட்டு வந்திருப்பேன் அந்த குட்டிப்பையன நான்,  செர்மராஜ் நண்பேன்டான்னு தூக்கிட்டு போயே போய்ட்டாரு,  நானும் என் மனைவியும் ஸ்லோவா போறோம்னு சின்னப்பையன் அண்ணா எங்களோட வந்து சேந்திட்டாரு.  பெரிய பெரிய மரவட்டைகள் கறுப்பும், சிவப்புமா, தேரை, தவளைகள் ஓன்னு இரைச்சலோட, மழை மேகங்களால பௌர்ணமி முடிஞ்ச 5-6 நாள்லயே அவ்ளோ இருட்டு.  நாங்கதான் கடைசி, ஒக்காந்து ஒக்காந்து போறோம்னு பாத்தா, எங்க டீம்லயே ரெண்டு பசங்க சுத்தமா டயர்டாகி நடப்போமா, மாட்டோமான்னு வரானுங்க.   நாங்க அவங்களயும் விட்டு முன்னே போய்ட்டோம்,  "உன்னுடைய வேலொன்று உறுதுணையாய் வருகிறது, கும்மிருட்டுப் பாதையிலும் கோடாக தெரிகிறது" ன்னு மன தைரியத்துலயும், தெய்வபலத்துலயும்தான் எங்க குடும்பம் இந்த ப்ராஜெக்ட்ல மொத்தமா போயிட்டு இருக்கோம்.  நிச்சயமா ஏறிடுவோம் ஆனா என்னிக்குன்னெல்லாம் திட்டம் இல்ல :) அப்பப்ப என் கிட்ட இருந்த குட்டி சங்க எடுத்து முழு மூச்சோட ஊதிட்டு, பின்னாடி வர்ற பசங்களுக்கு சத்தம் குடுத்துட்டு.  வழில கடலாடி பாதையும் ஒன்று சேர்ந்தது.

விடிகாலை 5.30 மணி இருக்கும், டார்ச் லைட் அணைச்சிட்டு நடக்கறோம்.  குளிர்ல நடுங்குது உடம்பு, வேர்வையா ஊத்துது ஆனா.  ஒரு வழியா கடப்பாறை மலையடிவாரத்து வந்து எல்லாரும் கூடினோம்.  செர்மராஜ் குழந்தைய பக்கத்துலயே பாறையேற்றத்துல தூங்க வெச்சிட்டு பாத்துக்கிட்டு இருந்தாரு.  வெள்ளியங்கிரி முதல் ஆளா ஓடிப்போன கோபால் இங்கயும் அப்டி சாமி பாத்துட்டு வந்திட்டாரு போலன்னு பாத்தா, அவரு அந்த கடப்பாறை மலை செங்குத்து, இரும்புப் பாதைகள், கைப்பிடிகள், சங்கிலிகள், கீழ பாத்தா 1000 அடி உயரம், சுத்தி எங்க பாத்தாலும் பச்சைப்பட்டாடையில் பராசக்தி மலைத்தொடர்களாக.... பயந்து அங்கயே ஒக்காந்துட்டு இருக்காரு படபடன்னு.  போதாததுக்கு விடிய விடிய பசியோட இருந்ததோ என்னவோ, நாங்க தான் முதல் டீம்னு குரங்குகள் சூழ்ந்து விட்டன.  ப்ளாஸ்டிக் பைன்னு நெனச்சு ஒன்னு என் பையனோட ரைன் கோட்ட நவுத்தி பாக்குது,  செர்மராஜ் பைய ஒரு பக்கம் பிடிச்சிக்க, இன்னொரு பக்கம் அது பாட்டுக்கு ஒவ்வொரு சிப்பா தொறந்து பாக்குது, மலையேறுவோர் பேண்ட் பாக்கெட்ல உரிமையா கைய விட்டு கெடச்சத திருடுது.    நா வரல, என்னால முடியாது சொன்ன மொத்த கும்பலும் இந்த குரங்கு கூட்டங்களால வேற வழியே இல்லாம செர்மராஜ் பொறுப்புல மொத்த குரங்குகளையும் குத்தகைக்கு விட்டுட்டு, பொறுமையா ஏறினோம் கடப்பாறை மலைல.

என் பையனும் முழிச்சிட்டாரு.  நம்ம கிட்ட அப்புச்சி (ஸ்னாக்ஸ்) ஒன்னும் இல்ல, அதனால நம்ம கிட்ட வராது, அது ஆஞ்சனேயர் உம்மாச்சின்னு தைரியம் சொல்லி ஒரு வழியா ரெடி பண்ணியாச்சு.  இனிமே யாராலயும் யாரையும் தூக்கிட்டுப் போக முடியாது.  ஒவ்வொரு கடப்பாறை, வேல், சூலங்களையும் பிடிச்சி ஆட்டி பாத்து ரெண்டு கைகளிலும் ஒவ்வொன்ன பிடிச்சிட்டு, குழந்தைய அடுத்த கடப்பாறை கிட்ட தூக்கி வெச்சி, புடிச்சிக்க சொல்லி, அவர பாத்துக்கிட்டே நான் அடுத்த அடி ஏறி, அங்கேந்து அடுத்த அடின்னு இப்டியே கடப்பாறை மலை, தண்டவாளங்கள், இரும்பு தகரப்பாலங்கள், இரும்பு ஏணிகள்னு ஏத்தி, எறி, ஏத்தி, ஏறி ஒரு வழியா வந்தேன்.  குறுநிலமன்னர் நன்னன் கோட்டை வாசல்ல ஒக்காத்தி வெச்சி கொஞ்சம் ரெஸ்ட்டு, ஃபோட்டோக்கள், விடிஞ்சாச்சுல்ல, இனிமே எங்கள புடிக்க முடியாது விளம்பரத்துல,  கீழயே இந்த தடவ வீரபத்திரர் கிட்ட உங்களெயெல்லாம் நம்பித்தான் குடும்பத்தோட வந்திருக்கேன்,  என் திமிரு கொஞ்சம் கூட இல்லன்னு வேண்டிட்டேன்,  அவனருளால் அவன் தாள் வணங்குவோம்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.   திருப்பி ஒரு 100 படிகள் கான்க்ரீட் படிகளேறி 6.30 மணி போல கோவிலை அடைந்தோம்.  மணி சார் அங்க வெளையாடிட்டு இருக்காரு.  வீரபத்திரர் கோவில்ல சொன்னபடியே ஒரு பைரவர் (நாய்) எங்க டீம்ல யாரு கடைசில அப்பப்ப வராங்களோ, அவங்களோடயே தங்கி, தங்கி கூடவே வந்தது ரொம்ப ஆச்சர்யம்.   இந்த அனுபவம் எல்லாரும் சொல்றாங்க.

ஏறத்தாழ 600 வருஷங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்திருக்கிறது, கோவில் சூப்பரா இருக்கு, மழைல நனையாம ஒரு 50 பேர் தங்கலாம், மழைல நனஞ்சிட்டு ஒரு 400-500 பேர் மேல நிக்கலாம், அந்த அளவு இடத்த பாதுகாப்பு வேலி போட்டு வெச்சிருக்காங்க.  பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருள்களைக் கொண்டு அவங்களே உள்ள போயி, சாமிய தொட்டு பூஜை பண்ணலாம்.  நாங்களும் செய்தோம்.  வீட்ல ஒரு வில்வ மரம் இருக்கு, 200 இதழ்கள் போல பறிச்சிட்டு போயிருந்தேன்.  வில்வ இலையை ஒவ்வொரு முறையும் திரும்பவும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம், தோஷமில்லை.  பாஸ்கர் குடுத்திருந்த காப்பர் வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்திட்டு போயிருந்தோம்.  அதையும், 5 எலுமிச்சைப் பழத்தையும் வெச்சி கொஞ்சமா அபிஷேகம் செய்து, வில்வார்ச்சனை செய்து, சங்கு முழங்க ரெண்டு ஆப்பிள்களையும் இறைவனுக்கு கண்ணப்ப நாயனார் ஸ்டைல்ல படைத்து பூஜையை முடித்தோம்.    டீம் கொண்டு வந்திருந்த சாப்பாட்டையெல்லாம் முடிச்சாங்க.    அங்க இப்படி வந்தவங்களோட மேல ஏறி வந்த 3-4 நாய்கள் ஒரு குரங்கையும் நம்மள தொல்லை செய்ய விடாமல் கோவில்லேந்து விரட்டிட்டே இருந்துதுப்பா.

எங்களுக்குப் பின்னாடி ஒரு டீம்,  நாலு பாய்ஸ், நெறையா பூஜை பொருள்களோட வந்து சிறப்பா பூஜைகள் செஞ்சாங்க.  பேண்ட் சட்டைலேந்து வேஷ்டிக்கு மாறி, திருநீறு பூசி சுத்தமாக, சிவனின் பழைய ஆடை, அலங்காரங்களையும் கலைந்து சிறப்பாக அபிஷேகங்கள் செய்தார்கள்.  ரெண்டு அடியார்கள் பெரிய சங்குகள் கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.  மல்லிகார்ஜுனர் பூஜை முடித்து, ப்ரமராம்பிகையின் திருப்பாதங்களையும் இப்படியே சிறு அபிஷேகம், பூஜைகளை செய்து முடித்து, டீம் ஃபோட்டோல்லாம் எடுத்திட்டு 7.30 மணிக்கு இறங்க ஆரம்பித்தோம்.  மேல கோவில் கிட்ட ஒரு பாறைப்பள்ளம் இருக்கு, அதுல மழைத்தண்ணி சேந்திருக்கு, அதுதான் அந்த கோவிலுக்குக் குளம்.    யார்ட்டயும் சொட்டு தண்ணி இல்ல.  வழில ரெண்டு இடத்துல ஆட்டுக்கல்லுல மழைத்தண்ணி தேங்கி தெளிஞ்சிருந்துது,  நான், மனைவி, பையன் மூணு பேரும் அதத்தான் குடிச்சோம் கையால அள்ளி, அள்ளி.  பொண்ணு ஏற்கனவே டீம் கூட கீழ இறங்கி போயாச்சு.  சின்னப்பையன் அண்ணா இறங்கும்போது பையன தூக்கிட்டு வந்தார்,  நான் கடைசில ஒரு மணி நேரம் தூக்கிட்டு, நடத்திட்டு வந்தேன்,  வழில 10-15 நிமிஷம் படுத்து, தூங்க விட்டோம்.    என் பொண்ணுகிட்ட மலையேறும் ஒரு பக்தர், எங்கப்பன ஏறி வந்து பாத்திட்டல்ல, இனிமே உனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்னு ஆசிர்வதிச்சாரு.

அடிவாரத்துல வீரபத்ரர் கோவில்ல வந்து ஒரு ரெண்டு லிட்டர் தண்ணி முழுசா குடிச்சேன் டேங்க்குலேந்து.  மனைவி கஞ்சி குடிச்சாங்க அன்னதானம்னு.  பையன் ரெண்டு வடை வாங்கி சாப்ட்டாரு.  10.30 மணி போல கெளம்பி, பூந்தமல்லி பஸ் ஸ்டாப்ல இறங்கி, பிபி 66 டீலக்ஸ், ஆங் அதே ப்ளாஸ்டிக் சேர் போட்ட சரவணா ஸ்டோர் பொம்ம பஸ்தான்,  ஏறி வீட்டுக்கு வந்து சேந்தோம்.  வீட்டுக்கு வந்தும் ஒரு சுடு சாதம், சூப்பர் ரசம், கோஸ்-கேரட்-தேங்காய் பொறியல் அத்தனை களைப்பிலும் அமுது படைத்தாள் மனைவி.  ஃபோட்டோ பாத்துட்டு, பல் தேச்சி, சூப்பரா ஒரு வென்னீர் குளியல் போட்டு,, சாப்பாடு முடிச்சி,  தென்னைமரக்குடியெண்ணெய பசங்களுக்கு தடவி, நீவி விட்டு ஆசமா ஒரு தூக்கம்.    ஸ்கூல்ல போன வாரம் க்ருஷ்ண ஜயந்தி மாறுவேஷ போட்டில என் பையன் முதல் பரிசு வாங்கியிருக்காருன்னு இன்னிக்கு பாராட்டுச் சான்றிதழ் குடுத்திருக்காங்க.  எல்லாம் அவன் செயல்.









Aug 17, 2018

உலகளாவிய மதமாற்ற மிஷினரிகள்

போர்க்களத்திலும், எதிர்ப்பிலும் தோன்றியதாலோ என்னவோ, கிறிஸ்துவின், நபிகளின் மதக்கோட்பாடுகளில் ஹிம்ஸித்து மதமாற்றுவது, இல்லையென்றால் பெண்களுக்குக் கற்பழிப்பு, ஆண்களுக்குக் கொலை என்று கடைபிடிக்கப்படுகிறது போலும்.  ஏற்றுக்கொள்ளாதவர்களை பாவிகள், சாத்தான்கள் என்று பட்டியலிடுவது. 

வேத காலம் தொடங்கி பல அசுர சக்திகளையும், வேற்றுமைகளையும் தன்னுள் உள்வாங்கி என்று தோன்றினை என்று கூறவும் இயலாத தொன்மை வாய்ந்த, ஒருவரால், ஒரு மதநூலால் தோற்றுவிக்கப்படாத, முழு சிந்தனைக்கும், அவனவன் வாழ்வியலுக்கும் ஒத்த சுதந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் போதிக்கும் சனாதனமான ஹிந்து மதத்திற்கு புதிதாய் யாரையும், எதையும் ஏற்றுக்கொள்வதில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை.  என்னை மட்டுமே வழிபடவேண்டும் என்பதில் தான் ப்ரச்னை.   மதத்தை ஒழுங்காய் கடைபிடிப்பவர்களால் என்றுமே தேசத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பில்லை.

வேற்று மதமாற்றிகளில் ஒருவன் விஷத்தை வெளிப்படையாகக் கொடுக்கிறான், மற்றொருவன் அதை நாம் விரும்பும் வாழைப்பழத்தில் ஊசி போல் வைத்துக் கொடுக்கிறான்.


மலை வாழ் மக்கள், கடலோர மீனவக்குடும்பங்கள் என ஏழைகளை குறிபார்த்து மருந்து, படிப்பு, ப்ரார்த்தனை, நோட்டு, புஸ்தகம், விளையாட்டு, பண உதவி என நெருங்கி மதம் மாற்றி, ஏசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவிகள், அழிக்கப்படவேண்டியவர்கள் என மனம் மாற்றி ப்ரசாரம் செய்யவைத்தது அந்த காலம்.

எல்லாரும் படித்து, அறிவோடு சிந்திக்கத் தொடங்கி விட்டனர், இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்டு இந்து மத முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு என்று எல்லாமும் பரமபிதாவின் வழியில் வந்தவர்களே, பரம பிதாவிடம் திரும்புங்கள், இவர்கள் வேண்டாம், திருவாசகம், திருக்குறள் என எல்லா தர்ம நூல்களும் இயேசுவையே போதிக்கின்றன என்பதில் தொடங்கி, கோவில் கோபுரம், கலசம், மணி, விளக்கு, தேர், தீமிதி, தீச்சட்டி, ஜபம், பஜனை, ஐயப்பசாமி போல் விரதம் இருந்து மாலை, இருமுடிகள் என்று ஹிந்து மதத்தின் எல்லா சடங்குகள், சம்ப்ரதாயங்கள், பூஜை வழிபாட்டு முறைகளும் எங்களுடையதே, நீங்கள் பெயர் கூட மாற்றிக்கொள்ளவேண்டாம் (சௌகர்யமாக இருக்கும் போலி ப்ரச்சாரத்திற்கும், போராட்டங்களுக்கும்).

உலக அளவில் தசமபாகம் என்று கட்டாயப்படுத்தப்பட்ட பண வருமானம், உலக அளவிலான திட்டமிட்ட, அரசியல், பண, பதவி பலத்தோடு நாடு, மானிலங்கள், மொழி, ஜாதி வாரியாக க்றிஸ்தவ மத மாற்றம் செய்யும் செயல் பாடுகள்.
https://joshuaproject.net/
https://www.frontierventures.org/ministries/joshua-project
http://iyesuenge.blogspot.com/
http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/
https://tamil.thehindu.com/world/article24695796.ece

வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்), எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே, லோகா: ஸமஸ்தா ஸுகினோ பவந்து, ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து - உலகத்தார் யாவரும் சுகமாயிருக்கட்டும் - என்றெல்லாம் பாகுபாடு இன்றி எல்லா உயிர்களுக்கும் நன்மையை வேண்டுவது, போதிப்பது ஹிந்து மதம்.

Aug 16, 2018

போலி த்ராவிடமும், தலைவர்களும்

பஞ்ச த்ராவிடம் என்று வேத, புராண காலங்களில் போற்றப்படும் நிலப்பகுதிகளும், அரச வம்சத்தினரும், வஸிஷ்டரோடு காலத்தால் ஒத்த அகஸ்த்யர் வளர்த்த தமிழும் இன்றைய த்ராவிட வாதத்தாலும் சிதைந்து, திரிந்திருக்கிறது.  முதல், இடை, கடைச்சங்க கால புலவர்களைத் தாண்டி, தமிழை வளர்த்த தமிழ்த்தாத்தா உவேசா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கிவாஜ இவர்களைத் தாண்டி இன்று தமிழால் வாழ்பவர்கள் தான் இருக்கின்றனர் என்பது மிகையாகாது.

கீழே நான் லிஸ்ட் பண்ற கருத்துக்கு சில குழுக்கள்லேந்து சத்தம் :) வருது, பதில் வரல, அவர்களும் உண்மை புரிந்து தெளிவாக வேண்டும் என்பது அவா. கீழே உள்ள கருத்துக்கள் உண்மை என்று நம்புகிறவர்கள் மட்டும் பரப்புங்கள், உணர வையுங்கள். தெளிவாக வழிகாட்டுங்கள், தேச, தெய்வபக்தி வளரட்டும், பாரதம் உலக அரங்கில் ஒளிரட்டும்

  பகுத்தறிவு வ்யாபாரம் என்று விளம்பரம் செய்து 60 ஆண்டுகளாக தலைமுறைகளுக்கு அடிப்படை அறிவு கூட கிடைக்காமல் செய்த  போலி த்ராவிடம்

  இந்து தெய்வங்களையும்,பண்டிகைகளையும் மட்டுமே புறக்கணிக்கும், அவமதிக்கும்   போலி த்ராவிடம்

  மற்ற மதத்தவர்களின் பண்டிகைகள் கொண்டாடி, தவறுகளை தட்டிக்கேட்காத ஓட்டு ஆசை பிடித்த   போலி த்ராவிடம்

  தமிழை, தமிழ்நாடு, தமிழனை வளர்க்கிறேன் என்று பல பிரிவுகளோடு குடும்பத்தை செழிப்பாக வளர்த்த   போலி த்ராவிடம்

  அண்ணா, பெரியார், கலைஞர் முன்னாடி தமிழகமே இல்லாதிருந்தது போல் ஒரு மாயையை உண்டாக்க பஸ் ஸ்டாண்டு, தெரு எங்கும் இவர்கள் பெயர், சிலைகளையே வைத்த   போலி த்ராவிடம்

  உண்மையான சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களை, தமிழ் வளர்த்தவர்களை, சுதந்திர போராட்ட த்யாகிகளை கைக்கூலி வாங்கிக்கொண்டு திட்டமிட்டு பாடுபட்டு மறக்கடித்த வ்யாதி   போலி த்ராவிடம்

  தமிழ்நாட்டைத் தாண்ட முடியாமல் இஷ்டப்பட்டவர்களைக்கூட இன்னொரு மொழியைக் கற்காமல் செய்த   போலி த்ராவிடம்

  60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொண்டர்களை படிப்பறிவு இல்லாமல், குடிகாரர்களாக ஆட்டுமந்தைகளாக வைத்து ஏமாற்றி முன்னேற விடாமல் ஓட்டு வங்கியாக வைத்திருக்கும்   போலி த்ராவிடம்

  லட்சக்கணக்கில் நம்பியிருந்த தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்ற போதும் நாற்காலிகளை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த   போலி த்ராவிடம்
 
 காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு த்ரோகம் செய்து ஊரெங்கும் சாராய ஆறு ஓட விட்ட போலி த்ராவிடம்

தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊரு நீர் மோரு, பானகம்னு, குடிநீர்ப் பந்தல்னு திருவிழாவா இருந்த கலாச்சாரத்த மாத்தி குடிதண்ணி கூட இன்னிக்கு காசு குடுத்தா தான்னு செஞ்ச போலி த்ராவிடம்

 மத்திய அரசுக்கு ஒன்றுமே தெரியாத கச்சத்தீவை முழு உரிமையும், வரலாறும் தெரிந்தும் இலங்கையிடம் தாரை வார்த்த போலி த்ராவிடம்

குதிரை, காளை ரேக்ளா, கிடா, கோழிச்சண்டை, ஜல்லிக்கட்டு இவைகளை நாட்டு ரகமே இருக்கக்கூடாது என்பதற்காக பீட்டா குறி வைக்கிறது.  துணிவுள்ள, மக்களுக்கு நன்மை நினைக்கும் த்ராவிட அரசு, ஜல்லிக்கட்டுல வருடாவருடம் ஜயிக்கும் வீரர்களுக்கு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்புன்னு ஒரு சட்டம் இயற்றனும், அது தான் உண்மையான காப்பு, முடியுமா, செய்யுமா.

ராணுவத்தை, எல்லைகளை பலப்படுத்தாது, சிறப்பு அந்தஸ்து குடுத்து இன்று வரை ஜம்மு காஷ்மீரில் ஓயாத கலவரம்தான் காங்க்ரஸின் சாதனை

ஆன்மீகம் மூலமே ஒழுக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்,  பரம்பரை அரசியல் அதிகாரம் இல்லாத, மக்கள் குறைகளுக்கு செவி சாய்த்து தவறுகளை திருத்திக் கொள்பவனே நமக்கு தலைவனாக தேவை

பெண்களைத் தெய்வமாக போற்றும் குடும்பமே உயர்வடையும், அவர்கள் தகப்பனாலும், கணவனாலும், மகனாலும் பத்ரமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்னு போதித்து வளர்ந்த குடும்பம், சமூகம், சமுதாயத்தை பெண்ணியம், பெண் சுதந்திரம், சமத்துவம்னு தெருவுக்கு கொண்டு வந்து சீரழித்த போலி த்ராவிடம்

ஓசி ட்ராயர், ஓசி சட்டை, ட்ராயர், ஓசி மதிய உணவு, ஓசி சைக்கிள், ஓசி செருப்பு, ஓசி பாடப்புத்தகங்கள், ஓசி கம்ப்யூட்டர், ஓசி பஸ் பாஸ் இவைகளோடு ஒழுக்கமும், உழைப்பும், அர்ப்பணிப்பும், தேசபக்தியும் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் கற்றுக்கொண்டால் நாடு நலம் பெறும். நன்றியை வரியாக, தேசபக்தியாக, சகோதரத்துவமாக வெளிக்காட்டி பெருமிதம் பெறுவார்கள்.
இல்லையேல் உழைக்கத்தெரியாத குடிகாரர்களும், தேச த்ரோகிகளும், பாலியல் வன்முறை கூட்டங்களும், கைக்கூலிகளும், கொலை, கொள்ளைக்காரர்களும் டிகிரி படித்தவர்களாக உருவாகி உலவுவார்கள். இவர்களிலிருந்தே தலைவர்கள் தோன்றுவார்கள். நாடு நாசமாகும்.

கண் முன்னே வளர்த்த குடும்பம் ஜயிலுக்கு, கேசுக்கு, கோர்ட்டுக்கு அலைவதும், சொத்து சண்டை பார்ப்பதும், கொள்கைகளும்,கட்சிகளும் சின்னா பின்னமாவதை பார்ப்பதும், எம்ஜியாருக்கு பின் இன்று வரை அந்த சீட்டில் ஒருவர் உதவியுமின்றி உட்காராமல் போனது, இன்று வீட்டிலே நெனச்ச சீட்ல ஒக்காராம முடியாம போனது, கொடுமை, கொடுமை, கொடுமை

அண்ணே, காசுக்கு எழுதினது வேற, மக்கள் முன்னிலையிலும், சட்டசபையிலும் சொன்னவை:
பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய வசனங்கள், நாகரீகமற்ற, பதில் கூற முடியாத போது, கேள்வி கேட்போரை கூசி, குறுகி, வாயடைக்க வைக்கும் மரபைக் கொடுத்த த்ராவிட தலைவர்கள்

1. பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி..
2. நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?
3. காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.
4. வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்.
5. சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.
6. பாவாடை நாடா அனந்தநாயகி;
7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்;
8. வழிப்போக்கன் வாழப்பாடி;
9. மூப்பனார் மூளையில் கோளாறு;
10.செவிடன் ஜீவா;
11.நொண்டி ராமமூர்த்தி;
12.காவடி கல்யாணசுந்தரம்
13. மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்.,
14. இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா;
15. பண்டாரம் வாஜ்பாய்;
16. பரதேசி அத்வானி;
17. ஆக்டோபஸ் மோடி;
18. காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா.
19. செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்;
20. அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்;
21.போதை நடிகர் விஜயகாந்த்;
22. தரகர், தா.பாண்டியன்;
23.கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்;
24. மந்தபுத்தி திருமாவளவன்.
25. வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு;
26. ஓடுகாலி திருநாவுக்கரசு.
27. ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி;
28 .கள்ளத் தோணி, வைகோ.
29. இந்து என்றால் திருடன்;
30. ராமன் ஒரு குடிகாரன்;
31. கலாம் என்றாலே கலகம்
32. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்'  என்பதுதான்
33. ராஜீவ் காந்தியின் சினேகிதி ஜெயலலிதா

அவ்வப்போது தோன்றும் குறிப்புகளின் தொகுப்பே இது, ஒரு வரிசையாக, கோர்வையாக இல்லாமைக்கு மன்னிக்கவும்

பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள்

பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள்

- மீனாட்சி உனக்கெதுக்கடி மூக்குத்தி என்று கேட்டால் பகுத்தறிவு, செத்த பிணத்தை தங்க மோதிரத்தோடு அடக்கம் செய்வது ?
- ராமன் வேறு எங்கும் கோவில் கட்டினால் ஒப்புக் கொள்ள மாட்டாரா என்றது பகுத்தறிவு, அண்ணா சதுக்கம் அருகில் தான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது ?
- ஆதிமுதலே ப்ராஹ்மணர் அல்லாதோர் பூசாரிகளாக இருக்கும் ப்ரசித்தி பெற்ற பரம்பரை கோவில்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  யாரும் பூசாரியாகலாம் என்று புதிதாய்க் கூறுவது போல் கூறியது பகுத்தறிவு.  கட்சித்தலைவர், பொதுச்செயலாளர் போன்ற முக்ய பொருப்புகளில் அப்படி தாழ்த்தப்பட்ட எவரையும் இன்று வளர்த்து வராமல், குடும்ப பதிவிகளாகவே அவற்றைப் பார்த்துக் கொள்வது ?
- பெருமதிப்புள்ள சந்தனக்கட்டைகளில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் தலைவர்கள் அடக்கம் செய்யப்படுவது எந்த வகையில் பகுத்தறிவு ? கள்ளிப்பெட்டி போதாதா, இல்லை வெறும் உடம்பை புதைத்தால் போதாதா ?
- கடைசிவரை வாரிசுகளில் ஒருவரின் பிறந்த தேதி, அம்மா, அப்பா பெயரோடு வெளியிடாதது ஒழுக்கத்தின் தலைமைக்கு அழகா ?
- பெரியார் சேர்த்த சொத்தை  ஒரு பெண்ணிடம் மனைவியாக்கி விட்டுச்சென்றார்.  தனக்குப் பின் ஒரு வாரிசை கூட தொண்டர்களிடமிருந்து  உருவாக்காதது, நம்பாதது ஒரு கழகத்தின் சாதனை.
- ரியல் எஸ்டேட், ஒரு துறை விடாமல் எதிலும் பெரும் சொத்தை சேர்த்து குடும்பத்தின், வாரிசுகளின் சொத்தாக ஆக்கியது த்யாகத்தின் அடையாளமா ? ஒரு வீட்டை மருத்துவமனைக்கு எழுதி வைக்கும் போதே தெரிந்து கொள்ள வேண்டும் அது போனால் போகட்டும் என்று விட்டது என்று, அல்லது தொண்டர்கள் அதை நிச்சயம் நினைவு இல்லமாக்கி விடுவார்கள் என்று
- இந்து மத பண்டிகைகளில் சுடுசொல்லை விதைத்தது பகுத்தறிவென்றால், மற்ற மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவது ?
- மாநிலத்துக்குக் கொண்டு வந்த திட்டங்களால் குடும்பமும், தலைமுறைகளும் சுகமாய் பெருவாழ்வு வாழ்வது கண்கூடு
- சமத்துவபுரங்கள் கண்காட்சிகளாக மட்டுமே இருக்கும்.  ஏற்கனவே நகரங்கள், ஃப்ளாட்டுகள், ஹவுசிங் போர்டு வீடுகளில் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வாழ்கிறார்களா ?
- பகுத்தறிவு போதித்தவரின் குடும்பத்தார்களே, கட்சி வாரிசுகளே  இறப்பில் அழுகிறார்களே, கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்கிறார்களே ? இதுதான் இவ்வளவு வருட பகுத்தறிவு போதனையா ?
- தாலி அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி, அறுப்புப் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் மனைவி, மகள், மருமகள்களை யாராவது, எங்காவது அந்த போராட்டங்களில் முன்னுதாரணமாக அறுத்துக் கொண்டதைப் பார்த்தீர்களா ?
- அவர் சாமியை வழிபடுவார், கறுப்புத் துண்டு, கறுப்புச் சட்டை போட்டுக்கொள்ள மாட்டார்,  இறுதிக்காலத்தில் ஆழ்வார் வரலாற்றை எழுதுவார்.  குடும்பத்தார்களும் எல்லா கோவில்களுக்கும் போய் சாமி கும்பிடுவார்கள்.  தொண்டர்கள் இந்த வளையத்திற்குள் வராமல் பார்த்துக் கொள்வார்.
- இன்று வரை 60 வருடங்களாக மது ஒழிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏழைகள் மேல் அக்கறை கொண்டவர்கள்
- ஐஏஎஸ், ஐபிஎஸ், சிஏ, ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வுகள் என்று எதற்கும் தமிழர்களை இவர்கள் ஊக்குவித்து பேசியதில்லை, இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்ததில்லை
- 60 வருடங்களாக காவிரி ஆணையம் அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
- மத்திய அரசுக்கூட்டணியில் அங்கம் வகித்த போதும் இலங்கைத் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோதும், காவிரி நீருக்கும் ஒரு தீர்வும் கண்டதில்லை
- தவறு செய்தவர்கள் ப்ராஹ்மணர் என்றால் அவர்களை தண்டித்து ஒடுக்கியிருக்க வேண்டும்,  உலகின் ஆதி மதமான, உலகின் தத்துவ ஆராய்ச்சியாளர்கள் பாராட்டும் ஹிந்து மதத்தையே வேரோடொழித்து, மதமாற்றத்தையே ஆதிமுதல் நோக்கமாகக் கொண்டிருக்கும் மற்ற மதங்களுக்கு இடம் கொடுத்து வளர விட்டிருக்கக் கூடாது.   ஹிந்து மதமும், ப்ராஹ்மணர்களும் இவர்களால் அழியப்போவதுமில்லை.  தவறு செய்தவன் இராவணன் என்ற ப்ராஹ்மணன் என்றும், அவன் செய்த தவறுக்காக அவனை அழித்த க்ஷத்ரியனை ராமனைக் கொண்டாடுபவர்கள் அவர்கள்.
- இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுசரிக்கச் சொன்ன அன்னிய கைக்கூலிகள்.
- ஒழுக்கத்தை, ஒரு பத்னி விரதத்தை, அனியாயமாக சொத்து சேர்க்கக்கூடாது என்பவைகளையும் போதித்த இராமாயணமும், மஹாபாரதமும் இவர்களுக்கு இதனாலேயே ஒவ்வாமல் போனது. 
- பெற்றோர், கணவன், மகனின் பாதுகாப்பில் வைத்துப் போற்ற வேண்டிய குடும்பப்பெண்களைசுதந்திரம் என்ற பெயரில் ஏமாற்றி, வெளியில் கொண்டுவந்து படைப்பாக்கியது இவர்கள் சாதனை.  இவர்கள் குடும்பத்துப் பெண்கள் ? பாரதி அப்படி தன் மனைவியையும் கொண்டு வந்தான், பெரியார் கொண்டுவந்தார்.

Jul 30, 2018

சனாதன ஹிந்து தர்மம்

சனாதன ஹிந்து தர்மம்
  • நண்பர்களே உங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள்.  வாழ்க்கை முழுவதும் தூங்கி கழிப்பதா ? காலம் பறந்து கொண்டிருக்கிறது.  உங்கள் சாதனைகள் உலகத்தின் பார்வைக்கு வரட்டும்.   உங்களுக்கு ஆசிகள் பல வந்து குவியும்,  அதிகமான சாபங்களும் குவியும்.  அதுதான் உலகத்தின் இயல்பு.  இதுவே ஏற்ற காலம்
  • இறைவனான நம் குருதேவர் தனித்தன்மை வாய்ந்தவர்.  அவரைப் போன்றே நாமும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  இல்லையெனில் எதற்கும் பயனற்றவர்களாகவே ஆகிவிடுவோம்
  • குடும்ப வாழ்க்கையாகிய நெருப்பில் எரிந்து கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் குருவின் அமுத மொழிகளை கேட்டும், படித்தும் இன்று அமைதி கண்டு வருகின்றனர்.  நோயுற்று படுத்த படுக்கையாக கிடக்கும் காலங்களிலும் குருவின் அமுத மொழிகள் தான் நாம் வாழ்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது.
  • க்ருஷ்ணா! உன் அமுதமொழிகள் துன்பத்தைத் துடைப்பவை.  ஞானிகளால் போற்றப்படுபவை.  பாவங்களை போக்குபவை.  கேட்பதற்கு இனியவை.  செல்வத்தை அளிப்பவை.  உன் அமுத மொழிகளைப் பேசிடும் நல்லோர் புண்ணியம் செய்தவர்கள் - கோபிகா கீதம்
  • நம் குருவானவர் நமக்கு எப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலேயே மிகுந்த அக்கறையும் சிந்தனையும் கொண்டிருக்கிறார்
  • சமாதி, பரவசநிலை எல்லாம் பிரேமையின் விளைவு தான்.  நமது நுண்ணுடல் ஸ்ரீகிருஷ்ணனின் திருப்பாதங்களையே சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றும்
  • எனது கண்ணனின் இனிய நாமத்தை இன்பமாய் இசைக்க இயலாத அந்த வீட்டில் போக மாட்டேன்  - கோபிகா கீதம்
  • திருக்கோவில் போன்ற இடங்களில் தேவையில்லாத பேச்சுக்களையும், வேண்டாத வேலைகளையும் தவிர்த்து இறைவனைப் பற்றியே நினைக்க வேண்டும்
  • பெரிய மனிதர்கள் என்ற கோமாளிகளையும் முகஸ்துதி காரர்களையும் நம்முடன் வைத்துக் கொண்டிருந்தாலும் நம் குருவானவர் நம்மை கடைத்தேற்றி விடுவார்
  • நம்மிடமிருந்து ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று நம்முடனேயே நட்பு பாராட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் முகஸ்துதி காரர்கள் அவர்களுக்கு நம்மிடமிருந்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும் ஓடிவிடுகிறார்கள்.  எருதோடு சுற்றிக் கொண்டிருக்கும் நரியின் நிலைதான் அவர்களுக்கும்
  • உலகம் இறைவனிலிருந்து வேறானது என்றால் அதையும் நீ துறக்கலாம் - வசிஷ்டர்
  • ஞானமும் பக்தியும் ஒருசேர ஒருவரிடம் உண்டாக முடியாதா ?              அது மிக உயர்ந்த நிலையில் சைதன்யர் போன்ற ஈஸ்வர கோடிகளுக்கு உண்டாகும்.  சாதாரண மனிதர்களின் விஷயம் வேறு.  ஜோதி தரிசனம் ஐந்து விதமானது.  தீபம்,  அக்னி,  சந்திரன், சூரியன் மற்றும் சந்திர சூரியனுடைய ஒளி.  பக்தி சந்த்ரன், ஞானம் சூரியன்.  சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் போது சந்திரன் இருப்பதை காண முடிகிறது.  அவதார புருஷர்களிடம், இறையருள் பெற்றவர்களிடமும் பக்தியாகிய சந்திரனையும் ஞானமாகிய சூரியனையும் ஒரே சமயத்தில் காணலாம். ஒரு படி பாத்திரத்தில் 5 படி பாலை வைக்க முடியாது அல்லவா ? பக்தியின் வாயிலாக இரண்டும் கிடைக்கும்.  தேவையானால் இறைவனே பிரம்ம ஞானத்தையும் அருள்வார்
  • உருவ சாதனையை செய்யாமல் அருவ சாதனை முடியாதா ?  ஏன் முடியாது ? ஆனால் அந்தப் பாதை மிகவும் கடினமானது.  முனிவர்கள் தங்கள் குடிலில் இருந்து, அதிகாலையில் புறப்பட்டு நாள் முழுவதும் தவம் செய்து, மாலையில் சிறிது பழம், கிழங்குகளை உண்பார்கள். ப்ரஹ்மம் என்ன என்பதை கடும் தவத்தின் விளைவாக உணர்வில் உணர்ந்தனர், அனுபவத்தில் உணர்ந்தனர்.  இந்த சாதனையில் உலகப்பற்று ஒரு துளி இருந்தாலும் பலன் கிடைக்காது உலகப் பொருள்களின் சுவை, ஒளி, ஒலி, தொடு உணர்ச்சி, மணம் இவற்றின் நிழல் கூட மனதில் இருக்கக்கூடாது அப்போதுதான் மனம் தூய்மை ஆகும்.   தூய மனம் எதுவோ அதுவே ஆன்மா.   அப்போது மற்றொரு நிலை ஏற்படுகிறது நான் என்ற எண்ணம் அடியோடு மறைந்து எல்லாம் இறைவனே, நான் அல்ல என்ற அனுபவம் ஏற்படுகிறது.
மடத்து சாது ஒருவரை ஒரு தீயவன் அடித்து விடுகிறான்.  அவர் மயங்கி விழுந்து விடுகிறார்.  அவருக்கு மயக்கத்தை தெளியவைத்து பால் கொடுப்பவர்கள் சுவாமி!  இப்போது உங்களுக்கு யார் பால் தருகிறார்கள் என்று கேட்ட போது,  அவர் யார் அடித்தவனோ அவனே பால் தருகிறான் என்றார்.
 
உள்மன சமாதி என்று ஒன்று உண்டு.  சிதறிக்கிடக்கின்ற மனதை திடீரென்று ஒன்றுபடுத்துவது.  இந்த சமாதி நிலை அதிக நேரம் நிலைக்காது.  உலகியல் எண்ணங்கள் வந்து கலைத்துவிடும்.  அப்போது யோகிகள் யோகத்தில் இருந்து நழுவி விடுகிறார்கள்.
 
சுவற்றின் சந்துகளில் கீரிப்பிள்ளைகள் சுகமாக வசித்துக் கொண்டிருக்கும்.  சிலர் அதன் வாலில் கல்லைக் கட்டி விடுவார்கள், அதன் பாரத்தால் அது வெளியே விழுந்து விடும்.   மீண்டும் சுகமாக இருப்பதற்காக அது எத்தனை முயற்சி செய்தாலும், அத்தனை முயற்சியும் செங்கல்லின் பாரத்தால் பாழாகி விடும்.  உலகியல் எண்ணங்களும் இப்படித்தான்.
 
சாதாரண மனிதர்களுக்கு கூட எப்போதாவது சமாதி நிலை வாய்க்கலாம்.  சூரியன் உதித்ததும் தாமரை மலர்கிறது, ஆனால் மேகத்தால் சூரியன் மறைந்தால் அது கூம்பி விடுகிறது.  உலகியல்தான் அந்த மேகம்.   சேரவேண்டிய இடத்திற்கு முட்காடு வழியாகவும் போகலாம் நல்ல வழியாகவும் போகலாம்
  • அம்புப் படுக்கையில் படுத்திருந்த போது பீஷ்மர் அழுததற்கான காரணம், அம்பின் வேதனையால் அல்ல,  சாட்சாத் நாராயணனே அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தும் பாண்டவர்களின் துன்பங்களுக்கு முடிவு ஏற்படவில்லையே, இறைவனுடைய லீலையைப் பற்றி எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதை நினைத்து தான்
  • நாள், திதி, நட்சத்திரம் என்று எதுவும் எனக்குத் தெரியாது. என் நினைவெல்லாம் ராமர் மட்டுமே - ஹனுமான்
  • சன்னியாசிகளுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு ஆயிற்று.  பல சம்பிரதாயங்களை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள்.   எங்கள் சம்பிரதாய சாதுக்களுக்கு முதலில் சாப்பாடு.   பிறகு தான் மற்றவர்களுக்கு என்று எல்லோருமே சொன்னார்கள்.  ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.  நோக்கம் ஒன்றாக இருந்தாலும் இவர்களின் சடங்கு சம்பிரதாயங்களால் கடைசியில் எல்லோரும் போய்விட்டார்கள் அந்த விருந்து நடைபெறாமலே போயிற்று.  தங்கள் கடிகாரமே சரியான மணியைக் காட்டுகிறது என்றுதான் எல்லோருமே சொல்கிறார்கள்.
  • காட்டிலோ, எங்கோ குகையிலோ இருந்தாலும், பதவி, பணம், புகழ் இவற்றின் துணையேதுமின்றியே, ஒரு ஞானியினுடைய தவ வலிமையும், ஆன்மீக அனுபவமும் கண்ணுக்குத் தெரியாத அதிர்வலைகளாக வெளியில் கலந்து உலகத்தை உயர்த்தியே தீரும்

Jul 27, 2018

குமாரில பட்டர்

குமாரில பட்டர்:

வேத வழி முதலில் கெட்ட கார்யங்களில், எண்ணங்களில் நம் மனது செல்லாமலிருக்க இடைவிடாது வேலைகளை விதித்துக்கொண்டேயிருக்கிறது காலை முதல் இரவு வரை. நல்லோர் சேர்க்கை, நல்ல கார்யங்களில் மனதை ஈடுபடுத்தி செயல்படுத்துவது, நல்லதை கேட்பது, சொல்வது, பூஜை செய்வது என்று நம் மனஸும், கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்ற ஐந்து இந்திரியங்களும் இப்படி 50-70 வயதுகள் வரை தீய வழியில் செல்லாமல் நம்மை எப்போதும் நல்ல செயல்களில் பிசியாவே வைத்திருக்கும். இந்த பகுதியை, மந்திரங்களை பூர்வ (முதல்) பாகம் என்று சொல்வோம்.

இப்படி 4 மணிக்கு எழுந்திரு, இந்த குச்சிய வெச்சி பல் தேய், இந்தெந்த இடங்களில் பாத்ரூம் போ, இத்தன தடவ வாய் கொப்புளி, சுத்தம் செய்து கொள், நதி, குளங்களில் குளி, இந்தெந்த ஆடை உடுத்திக்கோ, சூர்ய பூஜை செய், உலக நன்மைகளை நினை, திட்டமிட்டுக்கொள், யோகா பண்ணு, த்யானம் பண்ணு, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை பூஜை செய், முன், 64 கலைகளையும், டைம் டேபிள் படி, படி, ப்ராக்டிஸ் பண்ணு. முன், பின் தெரியாத ஒருவனுக்கு சாப்பாடு போடு, கண்ணுக்குத் தெரியாத, தெரியும் மற்ற உயிரினங்களுக்கு உணவு கொடு, மாலை திருப்பிக் குளி, உலகம் நிம்மதியாகவும், பத்திரமாகவும் இருக்க ப்ரார்த்தனை செய்து கொண்டு தூங்கு. இதுல என்ன ஸ்பெஷல்னா இது எல்லாத்தையும் அது அதுக்குன்னு மந்திரங்களை சொல்லி செய்யனும். கர்மாக்களை (வேலை) உபதேசிப்பதால் இது கர்ம பாகம்.

இப்படி 60-70 வயது வரை இருந்து மந்திரங்களின் பொருளறிந்து, உலக நன்மைக்காக காலை முதல் இரவு வரை வேலைகள் செய்தவனுக்கு, வேதமே உபநிஷதங்கள் எனும் வேத சாரம் (ஜூஸ்) மூலம் இந்த எல்லா வேலைகளையும் விட்டொழித்து, இனி மீதமுள்ள ஆயுளை வெறும் உலக நன்மைக்கான த்யானத்தில் மட்டும் இறைவனை நினைத்து செய் என்று போதிக்கிறது. இதை எஸ்டாப்லிஷ் பண்ணத்தான் ஆதிசங்கரர் அவதாரம். வேதத்தின் இந்த பாகம் உத்தர பாகம் (பின், கடைசி, மோக்ஷ) வழி என்று உபதேசிக்கப்படுகிறது. இது ஞானத்தை போதிப்பதால் ஞான பாகம்.

குமாரில பட்டர், ஆதி சங்கரருக்கு ஒரு 50 வருடங்களுக்கு முன் அவதரித்தவர். பௌத்த மதம் பரவி எதுவும் மாயை என்று போதித்திருந்த காலம். ராஜாக்கள் உட்பட மக்கள் எவரும் எதிலும் பிடிப்பில்லாமல், பிக்ஷுக்களாக உருவகப்படுத்திக் கொண்டிருந்த நேரம். காரியங்கள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. இதிலிருந்து மீண்டு சனாதனமான வேத மார்க்கத்திற்கு எல்லோரும் திரும்ப வேண்டும் என்று முயற்சித்தால் வாதம் செய்து, பெரிய பெரிய சாதனைகள் செய்து காண்பித்தாலே சாத்தியம். பின் அவதரிக்கப்போகும் பரமசிவனின் அவதாரமான ஆதி சங்கரர் ஞான மார்க்கத்தை உபதேசிக்கப்போகிறார். அதற்கு ஸ்டேஜ் செட் பண்றாப்ல முதலில் சோம்பியிருக்கும் மக்களை எழுப்பி மீண்டும் வேதத்தில் கூறியிருக்கும் வேலைகளை செய்ய வைக்க வேண்டும். சங்கரர் குறுகிய காலமே பூமியில் இருக்கப்போகிறார் என்று முருகக்கடவுள் ஸுப்ரமண்யரே குமாரில பட்டராக அவதரிக்கிறார். உலகிற்கு பரமபிதாவான நான்முகனும், சரஸ்வதி தேவியும் குமாரில பட்டரின் சிஷ்யர்களாக மண்டனமிஶ்ரர்-சரஸவாணி என்று அவதரிக்கிறார்கள்.

இப்ப தான் முக்யமான கட்டம், இந்த குமாரில பட்டர் சும்மா போய் ஏய், எல்லாரும் இங்க வாங்க, வேதத்தில் சொல்லி இருக்கற வேலைகளை செய்யுங்க. உங்க வழி, குருமார்கள் வேஸ்ட்டுன்னு சொல்லல. அவங்க மார்க்கத்துக்கு மாறி முறையா புத்த விஹார்ல 7-8 வருஷங்கள் கடினமா முயற்சி செய்து அவர்களின் கொள்கைகள், விஷயங்கள் முழுவதையும் சூப்பரா படிச்சி, தலைமை சீடர்ங்கற அளவுக்கு தேறினார். அதுக்கப்பறம் தன்னை வெளிப்படுத்துக்கொண்டு அவங்கள வாதங்களில் ஜயித்தார்.

கடைசியா இவர் இப்படி ஏமாத்தினதால 7ஆவது மாடிலேந்து குதிக்கச் சொல்லி உத்தரவு குடுத்தாங்க. அவரும் "வேத மார்க்கம் சத்யமாயிருந்தால் என்னை அது காக்கும்"னு சொல்லி குதிச்சார், உயிருக்கு ஒரு பாதிப்பும் இல்லை, முழுசா நம்பாம "இருந்தால்" னு சொன்னதால் கண்ணு மட்டும் பாதிச்சிது. பௌத்தர்கள் இவர் வழிய ஏற்றுக்கொண்டு வேதம் விதித்த வேலைகளை செய்ய தயாராயினர். ஆனா இவர், உங்களுக்கு என்னோட சீடன் மண்டனமிஶ்ரன் வழிகாட்டுவான், பௌத்தனா மாறி குருவ ஏமாத்தினதுக்கு, நான் பண்ணின குரு த்ரோகத்துக்கு என்ன ப்ராயச்சித்தம்னு புத்தகங்கள்ல பாத்தேன். கொஞ்ச, கொஞ்சமா அனுபவித்து சாகறது தான் தண்டனைன்னு சொல்லி இருக்கு, அதனால நான் நெல் உமி கழுத்து வரை ரொப்பின குழியில் நெருப்பு வெச்சி, அனுபவித்து என் உடலை விடப்போகிறேன்னு தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார்.

அப்படி உயிர் விடும் தருவாயில் தான் அவரை சந்திச்ச ஆதிசங்கரர் அவரையும் வாதிட்டு ஞான மார்க்கத்தை போதித்து, மோக்ஷம் தந்து, அவர் சீடர் மண்டனமிஶ்ரரையும் அவர் மனைவி சரஸவானியையும் வாதம் செய்து அவர்களுடைய ஆயிரக்கணக்கான சீடர்களோடு ஞான மார்க்கத்துக்கு திருப்பினார் - இது வரலாறு. இன்று வரை காலங்காலமாய் நெறையா பேர் இந்த வழியில் குருமார்களாய் தோன்றி, மக்களையும் ஒழுக்கத்தோட, நிம்மதியோட, நம்பிக்கையோட, பயமில்லாம வாழ வெச்ச சரித்திரம்,

நம்ம பசங்க என்ன பண்றானுங்க, த்ராவிடம்னா என்னென்னு தெரியாது, ப்ராஹ்மணன், க்ஷத்ரியன்னா என்ன, எதுக்குன்னு தெரியாது, மனு ஸ்ம்ருதி, அட்லீஸ்ட் தமிழ் வேதங்கள் எதுவும் ஒன்ன கூட முழுசா படிச்சது கிடையாது, இதெல்லாம் தெரிஞ்ச, ப்ராக்டிஸ் பண்ற குருவையும் தேடிப் போய் கேட்டுத் தெரிஞ்சிக்கறதும் கிடையாது. முட்டாள் தனமா, மூர்க்கத்தனமா, அடிமைகள் மாதிரி, அடிப்படை அறிவு கூட இல்லாத எதிர்க்கறது.

சரி எதிர்க்கறானே, எதையாவது சாதிச்சானான்னா, இன்னி வரை தொண்டர்கள் உட்பட எல்லா மக்களையும் எல்லாத்துக்கும் அனாதைகளா, அடிமைகளா, பயத்தோட திண்டாட வெச்சி அவங்க மட்டும் குடும்பத்தோட சிறப்பா வாழ்வது தான் 60 ஆண்டு கால சாதனை. இப்படி ஒரு புக்குல ஒரு தண்டனை குரு த்ரோகத்துக்கு போட்டிருக்குன்னு தெரிஞ்சா அந்த புக்க நெருப்புல போட்டுடுவானுங்க இந்த பேட் பாய்ஸ். திட்டமிட்டு மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு.

நெறையா தேடித்தேடி நல்லவைகளைப் படிப்போம். ஆன்மீகம் வளர்ப்போம், தேசம் காப்போம். தலைமுறைகளுக்கு நல்ல பாதையை விட்டுச்செல்வோம்.

May 9, 2018

வெள்ளியங்கிரி இறைப்பயணம்

நிர்மிதாவின் சாகசப்பயணங்கள்

வெள்ளியங்கிரி இறைப்பயணம் - அவனருளாலே அவன் தாள் வணங்கி
தாயை வணங்கினாலும், ஒதுக்கினாலும், எதிர்த்தாலும் அவள் அருள் நமக்கு என்றும் உண்டு என்பது கண்கூடு.  தாயுமானவனும் அப்படியே, கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவளித்துக் காப்பவன் அவன்.  வடக்கே வெள்ளிப்பனிமலையில் குடி கொண்ட கைலாஸபதியை சென்று தரிசிக்க முடியாதவர்கள், வெள்ளியங்கிரீஶனை சென்று தரிசித்து பிறவிப் பயனை அடைகிறார்கள்.

வெள்ளியங்கிரி:
கோயம்புத்தூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த மலை அடிவாரத்தின் அருகில் தான் தற்போது ப்ரபலமாகிவரும் ஜக்கிவாசுதேவின் ஈஶா த்யான நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து ஒரு 6000 அடி உயரமுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலையை சேர்ந்தது.   தென் கயிலை என்று பெயர் பெற்றது.
விலங்குகள் நீரைத்தேடி கீழே இறங்கியிருக்கும் என்பதால்  ஃபிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை யாத்திரைக்கு உகந்தது.
பேறு காலத்தில் இருக்கும் பெண்கள் மலையேறுவதில்லை.  10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 40-45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே மலையேறுகின்றனர்.



 வயதானவர்கள் தனியே பயணிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.
கையில் ஒரு ஊன்று கோலுடன் பயணிப்பது அவசியம்.
தண்ணீர் அவரவர் உடல் நிலையைப் பொறுத்து 30-50 அடிகளுக்கு ஒரு முறை நிச்சயம் தேவைப்படும்.  ஏழு மலைகளைக் கொண்ட இந்த தொடரில் அடிவாரத்திலும், இரண்டாவது மலை முடிவிலும், ஆறாவது மலை முடிவிலுமே குடி நீர் கிடைக்கும்.
வெறுங்கால்களிலேயே யாத்திரை செல்வது உகந்தது.  ட்ரெக்கர்ஸ், முடியாதவர்கள் ஷூ, செப்பல் அணிந்தும் பயணிக்கிறார்கள்.


முதல் மலை முற்றிலும் ஒழுங்கில்லாத சுமார் 1000 படிகளால் ஆனது.  ஒரு சில படிகளில் முழு காலும் வைக்க முடியும், ஒரு சில படிகளில் பாதி கால் தான் வைக்க முடியும், செதுக்கப்படாத படிகள் என்பதால் கரடு முரடாக இருக்கும், செருப்பில்லாமல் பயணித்தால் எந்த ஒரு கால் ப்ரச்சினையும் சரியாகி விடும்.  காலில் கட்டை விரல், நுனிக்கால், குதிகால் என பல பகுதிகள் இருப்பதை இறங்கும் போது உணருவோம்.   முதல் மலை முடிந்ததும் ஒரு பிள்ளையார் கோவில், 30 ரூபாய்க்கு லெமன் சோடா, 20 ரூபாய்க்கு மோர், பிஸ்கெட், கடலை மிட்டாய், எள்ளுருண்டை, ஆரஞ்சு மிட்டாய் என கடை இரண்டு.  திருப்பதி- திருமலை ஏறும்போது காலி கோபுரத்தை அடையும் த்ருப்தி இந்த முதல் மலையை முடிக்கும் போது இருக்கும்.  ஒரு மணி நேரம் சுமாரில் இந்த மலையைக் கடப்போம் எந்த உடல் நிலையில் இருப்பவர்களும்.

இரண்டாவது மலை கல் பாறை மலை - 1974 ஆம் வருடம் யாத்திரை செல்பவர்களின் வசதிக்காக இந்த வழுக்குப்பாறைகளில் சிறு, சிறு படிகளை செதுக்கியிருக்கிறார்கள் தெய்வ நாயகி- பழனிச்சாமி கவுண்டர் தம்பதியர், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் படிகள் போல, அவ்வளவு அகலம் இல்லை ஆனால்.  2 ஆவது மலை முடியும் இடத்தில் பாம்பாட்டி சுனை என்ற ஒன்றில் நீர் வருகிறது.  மூங்கிலைச் சொருகியிர்ந்த இடத்தில் இப்போது ஓஸ் பைப்பை செருகி இருக்கிறார்கள்.  பொறுமையாக நீரை வயிற்றிலும், பாட்டில்களிலும் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடங்கலாம்.


இரண்டு, மூன்றாம், நான்காம் மலைகளை சுமார் மூன்று மணி நேரத்தில் கடப்போம்.  மூன்று, நான்கு மலைகளில் சில இடங்களில் ஒழுங்கற்ற படிகளும், பாறைகளும், மண் மேடுகளிலும் ஏறி பயணிப்போம்.  இந்த நான்கு மலை வரையிலேயே உயர்ந்த மரங்களும், ஓயாத காட்டு வண்டுகளின் ரீங்காரம் இடைவிடாது ங்கொய்ய்ய்ன்னு ஒலித்துக் கொண்டே இருக்கும்.  வெயில் அதிகமாக தெரியவில்லை.  பெண்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற சுற்றுலா தலங்களில், புனிதத் தலங்களில் நாம் காணும் ஜோடிகளும், அர்த்தமற்ற, பொழுது போக்குப் பேச்சுக்களும் கேட்கவில்லை,  எங்கு பார்த்தாலும் சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

ஐந்தாம் மலை முழுதும் சுத்தமான செம்மண்ணைக் காண முடிந்தது.  குச்சியை ஊன்றினாலே செக்கச்செவேலென்று காஞ்சி காமாக்ஷி கோவில் குங்குமம் போன்ற கலரில் ஐந்தாவது மலையின் மண்.  அதிக ஏற்றம் இல்லை 5-6 மலைகளில்.  சமவெளியில் நடக்க முடிந்தது.   5 மற்றும் 6 வது மலைகளை சுமார் ஒரு மணி நேரத்தில் கடப்போம்.   ஆறாவது மலை மண் முழுக்க எங்க தோண்டினாலும் விபூதி மாதிரியே இருக்கு.

ஆறாவது மலை சமவெளி முடியும் இடத்தில் சரிவாக இறங்கினால் ஆண்டி சுனை இருக்கிறது.  சுனை நீர் வந்து சேரும் நிலையில் ஒரு குட்டி சிவலிங்கம் நடுவில் இருக்கிறது நீருக்கு மேல் தெரியுமாறு.  அங்கு தண்ணீர் தேங்கி செல்லுமாறு தடுப்புச்சுவர் இடுப்பளவுக்குக் கட்டி இருக்கிறார்கள்.  ச்சிலீர் என்று இருக்கிறது நீர்.  சிவலிங்கம் இருக்கும் சுனையில் சுவரில் உட்கார்ந்து இறங்கி டக்குணு ஒன்னு ரெண்டு முக்கு போட்டு எழுந்தால் அட்டைப்பூச்சியின்றி பயணிக்கலாம்.  அங்க கொஞ்சம் இளைப்பா இருக்குன்னு ஆட்டம் போட்டா, ஒரு 15-20 நிமிஷத்துல முட்டிக்காலுக்குக் கீழ எங்கயாவது கூச்சமோ, ஊசி போட்டாப்ல வலியோ வரும்.  அப்ப பாத்தா தான் அந்த அட்டைப்புழுவே கண்ணுக்குத் தெரியும்.  நம்ம க்ராமங்கள்ல தட்டையா இருக்கற அட்டைப்பூச்சி இல்ல இவர்.  கொடைக்கானல், ஊட்டிலயெல்லாம் இருக்குமே,  நம்ம ரத்தத்தை ஓட்டைப் போட்டு ஆட்டையப் போட்டு தான் பெரிசாகி இவர் கண்ணுக்குத் தெரிவார்,  தரிசனம் செய்து கொள்ளலாம், ஒரு குச்சியால் பட படன்னு இருக்கறதையெல்லாம் தட்டி விட்டா எவ்வளவு பெரிசாகியிருக்கேன் பாருன்னு பெருமையா பூமில காமிக்கும்.  ஓட்டை போட்ட இடத்துல நமக்கு ரத்தம் வந்திண்டு இருக்கும்.  நாம பாட்டுக்கு அட்டைப்பூச்சி, அட்டைப்பூச்சின்னு விளம்பரம் பண்ணிட்டுப் போய்ட்டே இருக்கலாம்,  எவனும் கவனிக்கப்போறதில்ல, அவனும் குளிச்சிட்டு அப்படியே தான் வரப்போறான்.  மருந்தெல்லாம் நாங்க ஒன்னும் போட்டுக்கல.  கொஞ்ச நாள்ல மறந்துடுவோம்.  சொரண வந்து தட்டி விட்டுட்டதால, ஓட்ட போட்டு உடம்புக்குள்ள போய்டுமா, அப்ப என்ன ஆகும், என்ன பண்ணனும், எனக்கு அனுபவமில்ல.

ஆண்டி சுனைலேந்து ஏழாவது மலை ஒரு 45-55 டிகிரி செங்குத்து, மண்ணு மலை.  5, 6 மற்றும் ஏழாவது மலை முழுதும் பச்சைப் பசேலென்று இருக்கிறது.  நாம் உண்மையாகவே மேகங்களுக்குள் பயணிப்போம்.  ஏழாவது மலை உச்சியில் நட்டு வைத்திருக்கும் வேல், சூலங்களுக்கு நடுவே இயற்கையான ஒரு கல் பாறைக்கூரைக்குக் கீழே வெள்ளியங்கிரீஶன் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கிறான்.  நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாஶம் என்ற பஞ்ச பூதங்களின் ப்ரதிநிதியாய் நான்கு சுயம்பு லிங்கங்கள்.  பூமியின் சார்பாக அந்த மலையே லிங்கமாய்.  அவன் மகனை முதலில் தரிசித்துப் பின் சிவனை தரிசிக்கிறோம்.  பூசாரிகள் தரிசனத்திற்கு உதவி செய்கிறார்கள்.  கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து துரத்துவதில்லை எவ்வளவு கூட்டமிருந்தாலும், சிவனிடம் தேங்காய் குடுத்தால் உடைத்துக் கொடுக்கிறார்கள்.  காணிக்கைக் காசுகளை உண்டியலிலேயே போடச்சொல்கிறார்கள் அனைவரும்.  ஒரு மடக்கில் விபூதியைக் குழைத்து வைத்துக் கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் நெற்றியில் பட்டையாக பூசி விடுகிறார் பூசாரி.  சித்தர் ஒருவர் அங்கேயே சிவனுக்கு எதிரில் குடிசையில் இருக்கிறார்.  நம்மிடமிருந்து அவர்களெவரும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது தமிழக அறநிலையத் துறைக் கோவில்களில் தரிசனம் செய்து பழக்கப்பட்ட நமக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.   சூர்யோதயத்தின் போது சிவ தர்ஶனம் செய்ய பெரிதும் ஆர்வமாய் இருக்கிறார்கள் பலர்.  அவர்கள் ஆறாம் மலை முடிவிலேயே ஒரு டீக்கடை இருக்கிறது.  அதற்கு எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஷெட்டில் வேண்டுமானால் தங்கி வரலாம்.  மேலே ஒரு குழுவினரும் தங்க முடியாது.  5, 6 மற்றும் 7 ஆவது மலை மே மாதம் சென்றிருக்கும் போதே இரவில் தாங்க முடியாத குளிர், பனி.  சூழ் நிலையைப் பொறுத்து மழை வந்து இந்த 5, 6, 7 மலைகளில் மாட்டிக்கொண்டால் இருக்கும் இடத்திலேயே இருப்பது தான் உயிருக்கு உத்தரவாதம்.  எறங்கறேன்னு மழையில், மலையில் எங்கயாவது வழுக்கி விழுந்தா இன்னும் வழில இருக்கறவங்களயெல்லாம் சரிச்சு விட்டுனு விழுவோம்.  அப்பறம் காவல் துறை என்ன செய்தது, வனத்துறை என்ன செய்தது, இங்கு இருக்கும் டில்லியின் எடுபிடி அரசு என்ன செய்தது, ராணுவம் எங்கே, மத்திய பார்ப்பணீய அரசு தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் த்ரோகம் இழைக்கிறதுன்னு கத்தி ப்ரயோஜனமில்ல.   இது சுற்றுலாத் தலமல்ல.  உடல், மன உறுதி கொண்டவர்கள் வந்து தரிசியுங்கள்.  ஈசன் ஒருவனே காப்பவன்.

நிம்மதியா ஏறி, தரிசித்து இறங்க 12-13 மணி நேரம்.

பூண்டி அடிவாரத்திலேயே பழங்கால சிவன் கோவில் ஒன்றுள்ளது.  பாரம்பரியம் மிக்கது.  மலை ஏற முடியாதவர்கள், மலை ஏற்றி விட வந்த மனைவி, குடும்பத்துப் பெண்கள் எல்லாம் மேலே சென்றுள்ளவர்கள் பத்திரமாக தரிசனம் முடிந்து திரும்பி வர வேண்டும் என்று இங்கு விரதம் இருக்கிறார்கள்.  மலையேற்ற நாட்களில் ஏராளமாக அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  வருத்தி, வருந்தி உண்ண அழைத்து, உண்மையாய் உணவளிக்கிறார்கள்.  சொற்றுணை வேதியனை தரிசித்தோருக்கு அடிவாரத்தில் சோற்று மலை நிச்சயம்.    காவடிக் குழுவினர், அடிக்கடி மலையேறுவோர்கள், அப்பாவோடு ஏறும் குழந்தைகள், சிறு, பெரு வயது பெண்கள் என ஆர்வமாகப் பலர் மலை ஏறுகிறார்கள்.  அடிவாரத்திலேயே முடி இறக்க, காலைக்கடன்கள் கழிக்க, குளிக்க என்று வசதிகள் இருக்கிறது.

வனத்துறையினர் அடிவாரத்திலேயே பையில் இருப்பவைகளையெல்லாம் வெளியே எடுத்து வைக்கச் சொல்லி சோதனை செய்கிறார்கள் ப்ளாஸ்டிக் பேப்பர்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாதென்று.  வாட்டர் பாட்டிலில் சுற்றியிருக்கும் ப்ராண்ட் பேப்பர், கடலை மிட்டாய், பிஸ்கெட் கவர், சோத்து மூட்டை என்று எதுவாக இருந்தாலும் நீக்கி விடுகிறார்கள்.  உங்களுக்கு அப்படியும் மேலெ சென்று ப்ளாஸ்டிக் குப்பை போட வேண்டுமென்ற வேண்டுதல் இருந்தால் வழியில் உள்ள கடைகளில் குளிர்பான ப்ளாஸ்டிக் பாட்டில்கள், பிஸ்கெட், மிட்டாய் பாக்கெட்டுகள், மோர், கூழ் பேப்பர் டம்ளர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  ப்ளீஸ் தண்ணி பாட்டில் தவிர வேறெதையும் மேலே எடுத்து செல்லாதீர்கள்,  வழியில் ஒரு 100-200 செலவில் வாங்கி வேணுங்கறத தின்னுட்டு, குப்பையையெல்லாம் உங்க பையிலேயே எடுத்து வந்து அடிவாரத்துல ஸ்வச் பாரத் இருக்கு அங்க போடுங்க, க்ளீன் பண்ணிப்பாங்க.   அதிகமா யாரும சாப்டுட்டு நடந்து பாக்கல.  வெயில்ல பழக்கப்பட்ட நம்மவர்கள் பெரும்பாலும் காலை ஒரு நாலு மணி வாக்குல கீழேந்து கெளம்பி மாலை இருட்டறதுக்குள்ள தரிசனம் முடிச்சிட்டு, கீழ வந்துடறாங்க.  நம்மள மாதிரி சிட்டில, ஏசில வாழறவங்க ராத்திரி மலை ஏறுகிறார்கள்.  டார்ச் லைட் உதவியோடு,  அடிவாரத்துல 100 ரூபாலேந்து டார்ச் லைட், அதற்கான பேட்டரி கிடைக்கிறது.  வழித்துணையாம் ஈசன் தடி 30 ரூபாய்க்கு தேவஸ்தானம் விற்கிறது.  நீங்க கொண்டு வந்திருந்தாலும் எடுத்திட்டுப் போகலாம்.  இதை கீழ வந்ததும் வீட்ல பூஜைல வெச்சு பூஜிக்கறாங்க.

இதுவரை நீங்கள் படித்தது வெள்ளியங்கிரி யாத்திரையைப் பற்றிய பொதுக் குறிப்புகள், இனிமே தான் நாங்க அனுபவப்பட்ட எங்களோட பயணக்கட்டுரை.  மேல படிச்சா அவ்வளவு புண்ணியம்,  மல்டி லெவல் மார்கெட்டிங் மாதிரி ஒவ்வொருவரும் ஒரு பத்து பேருக்கு இந்த லிங்க்க அனுப்ச்சி படிக்க சொன்னா, பத்தே நாளில் உங்களுக்குள் நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்.    ட்ரெக்கர்ஸ்சுக்கும் உபயோகமா இருக்கும்.

04 மே 2018 வெள்ளிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு ரப்திசாகர் ட்ரெயின்ல ரிசர்வ் பண்ணியிருந்தோம்.  இப்ப பல வருடங்களுக்குப் பிறகு நெறையா இடத்துல ரயில் ட்ராக் எல்லாம் பாத்து, பாத்து மாத்தறாங்க.  ஜல்லியும்.  எங்க ட்ரெயின் அதனால சென்ட்ரல் வராது, நீங்க காட்பாடில வந்து ஏறிக்கோங்கன்னு டிஜிட்டல் இந்தியாலேந்து ஒரு எஸ். எம். எஸ். ரயில்வே டிபார்ட்மெண்ட்லேந்து,  நேர்ல புக் பண்ணினவங்களுக்கெல்லாம் தூதர்கள் அனுப்சிருக்காங்களா, முரசு அறிவிச்சிருக்காங்களான்னு தெரியல.    பாத்தா அந்த ட்ரெய்யின் காட்பாடிக்கு அஞ்சாம் தேதி காலை 1.30 மணிக்கு வரும்னு சொன்னாங்க முதல்ல, அப்பறம் அது 24 மணி நேரம் தாமதமா வருதுன்னு இன்னொரு மெசேஜ் மொபைலுக்கு.  இது சரிபடாதுன்னு தத்கல்ல நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல பாதிபேர், ஸ்லீப்பர் பஸ்ல பாதி பேர்.  ரெண்டு டீமும் தனியா போய்ட கூடாதுன்னு இறையருளால் எங்க ட்ரெயின் ஒரு நாலு, அஞ்சு மணி நேரம் கழிச்சு சனிக்கிழமை காலை 5 மணிக்குப் போகவேண்டியது, 10 மணிக்கு தான் போச்சு.  10-15 நாளா ப்ளாகு படிச்சு, லீடர் பால் கூடப் பேசி, என்னென்ன கஷ்டம் வரும், எப்படி சாதிக்கனும்னு எதிர்பார்ப்போட, தயாரிப்போட  ஆபீஸ்லேந்து சென்ட்ரல் வந்து ரயிலேறியாச்சு.  என் ஒரே மனைவி மற்றும் துணைவி பவானியம்மாள் என் பொண்ண தயார் பண்ணி கிண்டி ஸ்டேஷன்ல கொண்டு வந்து என்னயும் நம்பி வுட்டுட்டுப் போனாங்க.  நான் ரொம்ப அவங்கள விட்டு தனியா போனதில்ல.  வம்பிழுக்க யாராவது நமக்கு கூட வேணும்.  அதனால கொஞ்சம் ஃபீலிங்,  பட் பழைய தமிழ் பட லெவெல் தான், ரொம்ப யோசிக்க வேண்டாம் மேல.  ஆளுக்கொரு டப்பால தயிர்சாதம், மாங்காயோட, காலி பண்ணிட்டு தூங்கிட்டோம்.   திருச்சி-சென்னை ரயில்ல பழக்கமானதால நைட்டு தூங்க பயமா இருக்கும், ஸ்டேஷன விட்டுடுவோமோன்னு.  ஒரு தடவ சென்னை-பழனி, இப்ப சென்னை-கோவை, நிம்மதியா தூக்கம்,  ட்ரைவர் அண்ணன் புதுசா டூவீலர் கத்துக்கறாப்ல வெட்டி, வெட்டி ஓட்டினாரு, ஈரோடுல பிய்க்க முடியாத பூரி, குருமா ஜன்னல் வழியா வாங்கி குடுத்தேன், இனிமே பூரியே அவளுக்கு வெறுத்துப் போய்டனும்னு.  எனக்கு ஒரு பருப்பு வடை, ரென்டு ஆனியன் சம்சா,இறை பயணமோல்யோ.  என் பொண்ண பாய்னு போட்டு டிக்கெட் புக் பண்ணிட்டாரு லீடு.  அதனால் டிடியார் செக்கிங் முடியறவரைக்கும் பரம்பரை, பரம்பரையா அடுத்த பொட்டிக்குக் கூட்டிட்டுப் போவோமே, அதையே செய்தோம்.  நமக்கு எப்படிப்பட்ட டிடியார் வாய்ப்பாரோ, யார் கண்டா.   ஆனா நல்ல டிடியார்.

05 மே 2018, சனிக்கிழமை.  கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு.  அண்ணபூர்ணால தான் டிஃபன் சாப்டனும் அடம் புடிச்சு, நடத்தினு போய் சாப்டோம்.  அங்க ரோடுல விவேகானந்தர் டீம் ஒன்னு வேன்ல வெச்சிட்டு அன்லிமிடெட் அல்டிமேட் மோரு குடுக்கிட்டே இருந்தாங்கப்பா.   இந்த ஏடிஎம்கே டீம் ஒவ்வொரு சம்மர்லயும் பெரிசா வாழ மரம், தோரணம்னு, மைக் செட்டுனு போட்டு, அமைச்சர்கள கூப்டு ப்ரஹ்மாண்டமான கோடை கால குளிர் மோர் பந்தல்னு விளம்பரம் பண்ணி ஒரு ரெண்டு- மூனு மணி நேரம் இளநீர், மோர், தர்ப்பூசணின்னு அவங்களே அமக்களப்படுத்திட்டு போய்டறாங்க, அப்பறம் போய் பாத்தா பானை கூட இல்ல எங்கயும்.  இப்டியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான்.  சரி, எங்க டீம், வழக்கம் போல,

அண்ணன் பால்பாண்டி - குழுத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், கோவமே வரமாட்டேங்குதுப்பா இவருக்கு,
இளவரசன் - செயலாளர் (இன்னும் எவ்ளோ காசு கேக்கப்போறாரோ, பாப்பம்)
ஃபோட்டான் சிவக்குமார்
கோபால்
பழனி
சிவா
கார்த்திக்
மஹேந்திரன்
என் பொண்ணும் நானும்

என் பொண்ணு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செலக்ஷனுக்காக நாகலாபுரம் கூட்டினு போயிருந்தோம் (http://jagadhguru.blogspot.in/2018/04/blog-post_23.html).  வெற்றிகரமா முடிச்சதன் பரிசு இப்ப இந்த வெள்ளிமலைப் பயணம்.  குளிக்கறதுக்கு ஈசாவுக்குப் போனோம்.   ஜக்கி வாசுதேவின் கனவுகள் இன்னும் மெய்ப்படலன்னுதான் தோனுது அங்க இருக்கற செட்டிங் எல்லாம் பாக்கும் போது.  த்யான லிங்கம் நல்லா இருந்துது.  ஆனா இங்க இருக்கற மொத்த அமைப்புமே, ஆண்கள் குளிக்க சூர்ய குண்டம், பெண்கள் குளிக்க சந்த்ர குண்டம்னு சிவலிங்கம் நடுவில் வைத்து தனித்தனி குளம் வைத்திருக்கிறார்கள்.   சுத்தத்திற்காக ஷவர்ல குளிச்சதுக்கு அப்புறம் தான் அந்த குளத்துல குளிக்க அனுமதி.  ஜென்ட்ஸ்க்கு ஒரு காவித் துண்டு தராங்க. அத கட்டிட்டு தான் அந்த குளத்துல குளிக்கலாம்.  வ்யாதி உள்ளவர்கள், ஜில் தண்ணி ஒத்துக்காதவங்க தவிர்க்கவும்,  முடியாதவர்கள் துணையோடு செல்லவும்னு போர்டு, வீடியோ அந்த குளத்தில் குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்னன்னு.  ஹிந்து மதத்தோட அமைப்புன்னு சொன்னா எல்லாரும் வரமாட்டாங்க.  ஆனா எல்லாரையும் வரவழைக்கனும், ஏன்னா எல்லாரும் ஆதில ஹிந்துங்கற சனாதன மதம்தானே.  கட்டுமானங்களுக்கும் காசு நிறையா வேணும்.  இப்ப அங்கங்க ப்ரஹ்மாண்டமான சிலைகள் வடிக்கறதுதான் ட்ரெண்டு.  கொஞ்சம் திடீர் ரிச், ஹைஜீனிக், கார்ப்பரேட் கம்பெனில வேலைன்னு இருக்கறவங்களுக்கு இந்த இடம் புடிக்கும்.  அவங்கதான் டார்கெட்டும்.  த்யான லிங்கம் தவிர மற்ற எல்லா இடங்களும் பெர்மனென்ட் மாதிரி தெரியல.  எதிர்காலத்துக்குத் தேவைப்படும்போது ஸ்லாப் ஆக்கிக்கலாம்ங்கற அளவுக்கு ப்ரஹ்மாண்டமான பெரும் பெரும் கற்பாறைகள்.  தரைகள், படிக்கட்டுகள், நீர் நிலைகள், சுற்றுச்சுவர்கள்னு எல்லாமே ஒரு தற்காலிக அமைப்பா தெளிவா தெரியுது.  த்யான லிங்கத்தக்கு பக்கத்துலேயே இப்ப லிங்க பைரவின்னு ஒன்னு, ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தா சிவ ராத்ரி அன்னிக்கு டிவில காமிப்பாங்களே அந்த பெரிய ஆதியோகி சிலை. மோர் வெயிலுக்குக் குடுத்திட்டே இருக்காங்க.  நீங்க வேணும்னாலும் டொனேட் பண்ணலாம்.  அங்கங்க பிரிஞ்சு இருக்கற சிலைகள பாத்தா இன்னும் நெறையா திட்டங்கள் இருக்குன்னு தோணுது.  நாங்க போன தடவ குளிச்ச இடத்துலயே இந்த தடவ குளம் இல்ல.  ஜென்ட்ஸ் குளத்துலயோ, ஷவர்லயோ என் பொண்ண கூட்டிட்டு போக அனுமதிக்கல,  லேடீஸ் குளிக்கற குளத்துல டிக்கெட் வாங்கலாம்னா அங்கயும் 12 வயதுக்கு மேல தான் அனுமதின்னுட்டாங்க.  வெள்ளியங்கிரி யாத்திரைக்குப் போறோம்.  நீங்களாவது கூட்டிட்டுப் போய், ஷவர்லயாவது குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்கன்னு கேட்டேன், அனுமதி மறுக்கப்பட்டது.  நெறையா பாம்பு சிலைகள் எங்க பாத்தாலும். பாய்ஸ் குளிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாங்க. நானும் பொண்ணும் அடிவாரத்துல இருக்கற கோவில் தொட்டில குளிச்சக்கலாம்னு ஐடியா குடுத்தாங்க பசங்க.  கெளம்பினோம். இஸ்கான் கோவில் மாதிரி செப்பல், லக்கேஜ், மொபைல் பத்திரமா வாங்கி வெச்சிட்டு திருப்பித் தராங்க.    ஆனா அந்த வாலண்டியர்ஸோட அன்பு, நடை, உடை, பாவனை எல்லாமே க்றிஸ்தவ மிஷினரி, ஷெல் பெட்ரோல் பங்க் உறுப்பினர்கள் மாதிரி செயற்கையா, பயிற்சியின் வெளிப்பாடா தெரியுது.  என்னமோப்பா, நல்லது நடந்தா சரி.

ஜக்கி வாசுதேவின் ஆஶ்ரமத்திலிருந்து 20 ரூபா ஷேர் ஆட்டோ பூண்டி அடிவாரக்கோவிலுக்கு.  கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்லேந்து 40 ரூபா டிக்கெட் அரசு டீலக்குசு பஸ்ல ஈசாவுக்கு வர.  ஒன்றரை மணி நேரம் பயணம்.  அடிவாரக் கோவில், புராதனக்கோவில் கோவில் தான்,  நல்ல தெய்வீகம்,  எக்சிபிஷன் பாக்க வந்தா மாதிரி இல்லாம சாமி பாக்க வந்திருக்கோம்னு நம்பிக்கையான, பக்தியான மக்கள் கூட்டம்.   குளிக்கற தொட்டிக்குப் போற வழி ரொம்பவெல்லாம் நல்லா இல்ல, கவர்மெண்ட் கோவில் மெயின்டெனென்ஸ் நல்லா தெரியுது.  திருப்பதிக்காரன் வர்ற காச திருப்பி செலவு பண்ணி, நம்மள திரும்பவம் வரவழைக்கறான்.  காசு சம்பாதிக்கறான்.   இந்த தமிழ்நாட்டு அறநிலையத்துறை நாங்க குடுக்கற இம்சையெல்லாம் தாண்டி முடிஞ்சா திரும்பி வந்து பாருன்னு செய்யறான்.  பழனி கோவிலுக்கு வராத காசா,  மலைய சுத்தி மூச்சா நாத்தம்.  முருகன் எறங்கவே மாட்டார்.

மாலை 5.30 மணிக்குப் பயணத்தைத் தொடங்கினோம்.  ஆளுக்கு ஒரு க்ளூகோஸ் டப்பா, ரெண்டு பாக்கெட் க்ளூகோஸ் மிட்டாய் பாக்கெட், ரெண்டு ஆரஞ்சு பழங்கள் பிரிச்சு குடுத்தாங்க டீம்ல.  பேக்ல போட்டுட்டு, கீழ வைக்க வேண்டிய லக்கேஜ், செப்பல்லாம் லாக்கர்ல வெச்சிட்டு, டோக்கன் வாங்கிட்டு, குச்சி, டார்ச் லைட் வாங்கிட்டு, சாமி கும்பிட்டுட்டு, வேண்டிட்டு கிளம்பியாச்சு.  வனத்துறை செக்கிங் முடிஞ்சுது, அவங்க எதிர்பாத்த எடத்துலயெல்லாம் ப்ளாஸ்டிக் கவர், பேப்பர் எதுவும் கிடைக்கல,  நான் ப்ரஹ்மாண்டமா மூனு சரவணா ஸ்டோர் கவர ஒளிச்சு வெச்சிருந்தேன், மழைக்கு, மேலேந்து குப்பைப் பொறுக்கிட்டு வர யூஸ் ஆகும்னு.  மாலையிளம் கதிரின் வெளிச்சத்துல 6.30 மணிக்கு முதல் மலைய முடிச்சோம்.  முதல் தடவ போற டீம்ல ஒரு நாலு பேரு முன்னாடி போய்ட்டாங்க.  நாங்க சீனியர்ஸ்கூட, இல்ல அவங்க எங்கள கூட்டிட்டு, எங்களோட வந்தாங்க.  ரெண்டாவது வழுக்குப் பாறை மலைலேந்து இருட்டுல டார்ச் லைட் பயணம்.  சொல்லிக்கறாப்ல ஏதாவது கண்ணுக்குத் தெரிஞ்சாதானே வர்ணிக்க.  அங்கங்க ரெஸ்ட் எடுத்திட்டு, பாம்பாட்டி சுனைல தண்ணி ரொப்பிட்டு, மூனு, நாலாவது மலைகளைக் கடந்தோம்.

ஐந்து, ஆறாவது மலைல ஆளே தெரியாத அளவுக்குக் கடும் பனி, டார்ச் லைட் வெளிச்சம் ரெண்டு அடிக்கு மேல போகல.  நாரதர் நடக்கறாப்ல நம்மள சுத்தி மேகங்கள் பஞ்சு, பஞ்சா.  மண்ணு இன்னும் ஜில்லுப்பு ஏறல, நாமளும் காலு ஜில்லுன்னு ஆகறதுக்கு நிக்கல, நடந்திட்டே இருக்கோம்.  பொண்ணு காட்டன் கார்கோ பேண்ட் அங்கங்க பாக்கெட்டோட, முழுக்கை டீ சர்ட், பாக்கெட்டுகள்ல க்ளூகோஸ், மிட்டாய், பழங்கள், மூஞ்சிய கண்ண மட்டும் விட்டுட்டு அவங்கம்மாவோட காட்டன் சால்வையால சுத்தியாச்சு.  வழில கூட்டமா காட்டு எருமைகள் பாகுபலி படத்துல பல்வால் தேவனோட மோதுமே, அத விட பெரிசு, பெரிசா இயற்கையா வளர்ந்தவைகள், மேய்ந்து கொண்டிருந்தன.  எருமைகள் தானே என்ன இருந்தாலும், நம்மள கண்டுக்கல.  எதிர்க்க இறங்கி வந்தவங்களும் தொல்லை பண்ணாம போங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க.    டீம்ல எல்லாரும் பாத்தாங்க.  எனக்கு ப்ரச்னையே இல்ல, இந்த ஐ.டி இன்டஸ்ட்ரீக்கு வந்து நமக்கு பகல்லயே பசு மாடு தெரியல, நைட்டுல எங்க எருமைமாடு தெரியப்போகுது.   அதனால நோ பயம் சிவன் மலைல எல்லாம் அவன் மயம்.    பொண்ணு முழுசா பால் அண்ணே கவனிப்பு, பராமரிப்புல.  அதிகமான வேர்வை அந்த குளிர்லயும்.  சில பேருக்கு பத்து படிக்கு ஒரு தடவ மூச்சா.   ஒரு வழியா ஆறாவது மலைலேந்து மெதுவா இறங்கி சுனையத் தாண்டினோம்.  ராத்ரி நேரம், இதுவரை இப்படி பனிய பாத்ததில்ல, அங்க வேற அட்டப்பூச்சி இருக்கும், குளிக்க வேண்டாம்ட்டாங்க.  கனத்த இதயத்தோடு க்ராஸ் பண்ணினோம்.  இன்டர்வல்,  400 ரூபா பாப்கார்ன், 80 ரூபா பப்ஸ், ஒளிச்சுக் கொண்டு வந்த 5 ரூபா பாப்கார்ன் சாப்டனும்னா சாப்டுக்கோங்க,  சீட்டு நுனிக்கு வரப்போறீங்க இனிமே தான்.


ஏழாவது மலை அடிவாரம், டீக்கடை, எதிரில் ஒரு ஷெட்,  யார் காலு, கை எங்க இருக்குன்னு தெரியாத அளவுக்கு, மொத்தமா ஒரு ஆயிரம் பாம்புகள ஒன்னா போட்டாப்ல ஒரு 50 பேர் தூங்கறாங்க,  நாங்க ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்னு முடிவு பண்ணினோம். நா வேற மேல சிவன் கிட்ட போய் ஒரு நாலு மணி நேரம் சூரியோதயம் வரைக்கும் ருத்ரம், சமகம், சூக்தங்கள், உபநிஷத், சூர்ய நமஸ்காரம்னு வேத மந்த்ரங்கள் சொல்லலாம்னு திட்டம் போட்டு வந்தேன்.  நானும் பொண்ணும் ஷெட்டுல பக்கத்துல, பக்கத்துல ஒக்காந்து அவள மடில சாஞ்சு தூங்க சொன்னேன்.  ஒரு நிமிஷத்துல தூங்கிட்டா.  5 நிமிஷத்துல மழை, இடி, மின்னல்.  சூப்பரா ஒரு 15 நிமிஷத்துக்கு.  எங்கள்டேந்து முன்னே பிரிஞ்சு போன அந்த நாலு களவானிப்பசங்களயும் கொட்டகைல தேடினா, கூப்டா காணோம்.  பிஎஸ்என்எல் 2 ஆவது மலை வரைக்கும் தான் சிக்னல், பின்னாடி வந்த மதங்கள் மாதிரி மத்த ஜியோ, வோடஃபோன் 4 மலை வரைக்கும் சிக்னல், அதுக்கப்பறம் சிவன் மட்டும் தான்.  ஏழாவது மலைக் கோவில்ல சோலார் லைட் அப்பப்ப தெரியுது.  மழைத்தண்ணி எங்க பாத்தாலும் ஓடி வருது.  50 பேரு அந்த சின்ன கொட்டகைல, கீழேந்து சுனைல வேற குளிச்சிட்டு வராங்க பக்தர்கள் அந்த குளிர், மழைலயும், அட்டைப்பூச்சி உபசாரம் எங்க கொட்டகை வாசல்ல வந்து.

ஒரு பத்து நிமிஷம் ப்ரேக்,   திருப்பி இடி, மின்னல், குளிர் காத்து, மழை ஒரு அரை மணி நேரத்துக்கு.  ப்ரளயத்த மார்க்கண்டேயர் நேர்ல பாக்கனும்னு வரம் கேட்டாராம்.  நான் கேட்காமலே சிவன் அத அப்ப காமிச்சான்.  பொண்ண தரைல ஒரு துண்டு விரிச்சு அதுல ஒக்காத்தி, என் மேல சாஞ்சிண்டு, அவ துண்ட போத்தி, அது மேல என் மேல் துண்ட போத்தி, அது மேல என் துடைச்சிக்கற துண்ட போத்தி, மேல சொட்டற தண்ணி படாம இது எல்லாத்துக்கும் மேல சரவணா ஸ்டோர் கவர்.  குழந்தை பத்திரம். நான் பஞ்ச கச்சம் முட்டி வரை, மேல வெறும் உடம்பு தாத்தாவோட ருத்ராக்ஷ மாலையோட.   மணி ஞாயிறு காலை 3.30.  மக்கள் கொஞ்ச, கொஞ்சமா தைரியத்த வரவழைச்சிண்டு மேல ஏற ஆரம்பிக்கறாங்க.  ஒரு மூணு பேரு திடு புடு, திடுபுடுன்னு  மேலேந்து சருக்கினு, சேறு, சகதியோட வெற்றில வெறிச்சிப் போயி வந்தாங்க.  பாத்தா நம்ம களவானிஸ்.  நைட் 10-30 மணிக்கே சாமி கிட்ட போய்ட்டாங்களாம்.  கொஞ்சம் எல்லாருக்கும் வெயிட் பண்ணினதுல மழைல, குளிர்ல மாட்டிட்டு, மேல இருக்கவும் இடமில்லாம, ஒரு வழியா வழிக்கிட்டு வந்துருக்காங்க.   மேல போகாதீங்க, மேல போகாதீங்க, லைஃப் டேஞ்சர்னு இங்க வந்து எல்லார்ட்டயும் தெரிக்க விட்றாங்க.    பாலும் வந்து சீதா இந்த மாதிரி க்ளைமேட், மழை, குளிர் நாங்க இது வரைக்கும் பாத்ததில்ல.  நாம அடுத்த தடவ சாமி பாத்துக்கலாம், தங்கிட்டு இறங்கிடலாம்ங்க்றார்.  நான் தெளிவா இருக்கேன்.  அவங்களுக்கு நேர்ந்தது, பால் பயப்படறது இதெல்லாம் நான் படிச்சிட்டு, எதிர்பார்த்து தான் வந்திருக்கேன்.    பால் நாம ஒரு 300-400 பேருக்கப்பறம் போவோம், அவங்க காலடி பட்டு சேறு காஞ்சிடும்,  சிவனப் பாக்காம நா திரும்ப மாட்டேன், ராத்திரி 9 மணிக்கு தான் சென்னைக்கு ட்ரெயின்.  பொழுது விடிஞ்சு ஏறினா கூடி சாமி பாத்துட்டு, மெல்ல இறங்கினா கூட நிம்மதியா ட்ரெயின புடிக்கலாம்.  ஆனா எடுத்த காரியத்த முடிக்காம வர மாட்டேன், நீங்க கூட வாங்க, போறவங்க போகட்டும்னுட்டேன்.   அவரும் என்ன சொல்றதுன்னு தெரியாம ஃபீலிங்கோட எதிர்க்கடைக்குப் போயிட்டார்.  சாமி பாத்துட்டு வந்தவங்களும், எங்க கூட இருக்கறதுல ஒருத்தரும் கீழ இறங்க ஆரம்பிச்சிட்டாங்க.   ஒரு 5-5.30 க்கு மேல போகலாம்னு முடிவாச்சு.

நான் இதுவரைக்கும் இயற்கையான ஒரு மலைதானே வந்ததும், ஃபோட்டோஸ் எடுத்துட்டு, உடற்பயிற்சியா வந்ததும் அழிந்தது.  உண்மையாக, உணர்ச்சியின் வெளிப்பாடாய் அழ ஆரம்பித்தேன்.  அந்த இரவை நினைத்து இதை எழுதும் போதும் கண்ணீர் விடுகிறேன் என்னை அறியாமல்.  படித்த சிவத்தை அனுபவத்தில் உணர்கிறேன், நமக்கும் மேலான சக்தியை உணர்கிறேன்.   விளையாட்டுத்தனம், என் இயற்கையான சாதித்து விடுவோம் என்கிற முரட்டுப்பிடிவாதம் என்னிடமிருந்து என் இஷ்டத்தோடு என்னை விட்டு விலகுகிறது.  ஏழாவது மலையில் ஏறிச்செல்பவர்களின் டார்ச் லைட் ஒளித்தொடர் சிவனின் நடனத்தில் ஆடும் அவன் உடைபோல் தெரிகிறது.  அந்த மலை முழுவதும் நடராஜனாகவும், மேலே எங்கும் சூழ்ந்திருக்கும் இருள் மழை மேகங்கள் கங்கையில் தோய்ந்த அவன் ஜடைகளாகவும் கண்கூடாகத் தெரிகிறது.  என்னை அழாதே என்று தூக்கிக்கொள்ள வருவதை உணர்கிறேன்.  நான் அவனிடம் செல்ல இன்னும் தூய்மையில்லை என்று அவசர அவசரமாக ஆதித்ய ஹ்ருதய ஶ்லோகத்தை முழுவதுமாக மூன்று முறை விம்மி, விம்மி சொல்கிறேன்.  யாருக்கும் எந்த உயிர்க்கும் இன்று எந்த ஒரு தீங்கும் நேராது என்று நம்புகிறேன்.  இது அவன் வீடு.  இந்த ஶ்லோகங்களின் முழுப் பொருளும் எனக்கு முழுதாகத் தெரியாது.  ஆனால் அவன் தான் எதற்கும் முழு, முதற்பொருள் என்பதை அறிவேன்.    இந்த ஶ்லோகங்கள் 30 குறள் போன்றவை.  என் தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா அவர்கள் சொல்லிக்கொடுத்தது.  அவர் பெருமையும் தெரியாது காலம் முழுதும் அவர் என் தாத்தா என்றே விளையாடிக்கழித்தேன்.  வால்மீகி ராமாயணத்தில் 30 நாட்கள் நடந்த அந்த ராம-ராவண யுத்தத்தின் ஆரம்பத்தில் ராவணனின் ரத, கஜ, துரக, பதாதி ராட்சத பரிவாரப்படைகளையும், தன்னுடனிருக்கும் கரடி, குரங்குப் படைகளையும் எண்ணி பூமியில் நின்று கொண்டிருக்கும் ராமர் ப்ரமித்த போது அங்கு தோன்ரிய அகஸ்த்தியர் இருளைப் போக்கும் சூரியனே இந்த உலகிற்கு இறைவன், அவனே மும்மூர்த்திகள் என்று பல பொருள் படும் இந்த ஶ்லோகத்தை ராமருக்கு உபதேசித்து, ராமர் அதனை ஜபித்து, யுத்தத்தை ஜயித்தார்.

ஞாயிறு காலை 5.30 மணி,  எங்கள் பயணம் தொடர்ந்தது.  மலை அவ்வளவாக வழுக்கவில்லை.  10 நிமிடங்களில் டார்ச்சும் தேவைப்படவில்லை.  பொழுது பசுமையாகப் புலரத் தொடங்கியது.  எங்கும் பசுமை, ரம்மியமான ஒளி.  உற்சாகத்தோடு பல குழுவினரின் ஊடே நாங்களும்.  பொண்ணு இப்ப பேண்ட், டீ சர்ட், கைல தண்டம் மட்டும் தான்.  மேல சாமி குகை கிட்ட ஒரு 400 பேர் போல சேந்துட்டோம் 6.30 மணிக்கு. இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.  அருமையாக பிள்ளையாரைத் தரிசித்து, வெள்ளியங்கிரீஶனை அடைந்தோம்.  நிலம், நீர், காற்று அனைத்தையும் நன்றாக அனுபவித்த நாங்கள் ஆகாயத்தையும் தரிசித்து, இப்போது ஐந்தாவது பூதமான நெருப்பின் வடிவமாக சூரியனையும் தரிசித்தோம்.  என் பொண்ணு சிவன் மேல ஶம்போ, சிவ ஶம்போ ஸ்வயம்போன்னு பாட்டு பாடினா.  ரெண்டு பேருக்கும் மடக்குலேந்து விபூதிய எடுத்து பட்டை இட்டு விட்டார்கள் பூசாரிகள்.  அவளுக்குப் பரிசாக மல்லை, முல்லைச் சரம் குடுத்தார்கள்.  ஸ்வாமி கிட்டேந்து மாலை எடுத்து அணிவித்தார்கள்.  விபூதி, பொட்டலம்,, வில்வம், பச்சை, மலர்கள் எனக்கு ப்ரசாதம். தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம்,  ஈசானம் என்ற  ஒவ்வொரு முகத்துக்கும் ஒன்றாக வேத மந்த்ரங்களை சுருக்கமாகச் சொல்லச்செய்தான் இறைவன்.   கொண்டு போயிருந்த சங்கை எடுத்து குழுவினருடன் ஏழாவது மலை உச்சியில் கல்லால் இயற்கையாய் அமைந்திருந்த நந்தி (அல்லது மூஞ்சூறு) சிகரத்தினடியில் முழங்கினோம்.   அங்கிருந்த சித்தர் என் பெண்ணிடம் எங்க இருந்த வர, கொழந்த, பேரு என்ன, இப்பதான் வரியான்னு கேட்டு ஆசிர்வதித்தார்.  மாலையோடே நான்காவது மலை வரை வந்து விட்டாள்.  நாரு மட்டுந்தான் அப்ப இருந்துது அந்த மாலைல அப்ப, சித்தர் குகை கிட்ட ஒரு மரத்துல தூக்கிப் போட்டுட்டு, மெல்ல இறங்கினேன்.   வரும் போது நான் மட்டும் ஆண்டி சுனைல குளிச்சிட்டு, பூஜை முடிச்சிட்டு வந்தேன்.   நானும் இப்ப கார்கோ பேண்ட், டி சர்ட்டுக்கு மாறியாச்சு.  சிவன் பெரிய ஆளா இருப்பான் போல இருக்குன்னு மனசு சொல்லிட்டே வருது.  சரிவுல ஏறுவதும், படில இறங்குவதும் நமக்குக் கொஞ்சம் கஷடம்.  காலு ஆங்கிள்ல ஃப்ராக்சர் ஆகி இப்பதான் 5-6 மாதம் இருக்கும்.  அதனால, ரெண்டு குச்சி வெச்சிட்டு ஏறி, இறங்கினேன் மாடு போல.    வழில ஒரு கடை தாத்தா என் பொண்ண ஞாபகம் வெச்சிட்டு, பேர சொல்லி கூப்பிட்டு அவளுக்கு வெங்காய பக்கோடா, நீர் மோரு அப்ப தயார் பண்ணி குடுத்து ஆசிர்வதிச்சார்.  அவன் ஓயாம பேசிட்டே ஏறி, இறங்கிட்டா.   போகும் போது பால் பாத்து கூட்டிட்டு போனாரு.  வரும்போது சிவா.  ரெண்டாவது மலைல வீட்டுக்கு சுனை நீர் ப்ரசாதமா பிடிச்சிட்டு வந்தோம்.  அன்று காலை வந்து கொண்டிருந்தவராம்.  சுமார் 45-50 வயசு இருக்கும், தனியா வந்திருக்கார் இல்ல பிரிஞ்சிருக்கார்.  தண்ணி தவிச்சோ, வேறெந்த காரணமோ, நாலாவது மலைல உயிர் பிரிந்து விட்டது.  காட்டு மக்கள் ஃபோட்டோ எடுத்து போலீஸுக்கு அனுப்ச்சிட்டு, உடம்ப எகிப்து மம்மி மாதிரி துணியால மூட்டை கட்டி, ஒரு குச்சில வேட்டையாடின விலங்கு போல தொங்க விட்டு கட்டி, ரெண்டு பேரா தூக்கிட்டு ஓடினாங்க, நாங்க ரெண்டாவது மலைல தண்ணி பிடிச்சிட்டு இருந்த போது.  சிவலோக ப்ராப்தி.

அடிவாரத்துல வடை, பாயசம், சாம்பார், மூலிகை ரசம், மோர், கோஸ்-கேரட்-தேங்காய் கறின்னு தடபுடலா அன்னதானம்.  ஒரு பிடி, ஒரே பிடிதான்.  பின்ன, நேத்தி காலை ஒரு வடை, ஒரு சம்சா சாப்டது.  எறும்போது எதுவும் சாப்டல, நடுவுல மயக்கம் வந்தப்ப பை முழுக்க சாமான், எதையும் தேடி எடுக்க நேரம் இல்ல, பால் அவர் வெச்சிருந்த ஆரஞ்சு பழம் ரெண்ட உரிச்சுக் கொடுத்தார் பாத்துட்டு,  சுளைய கூட பிரிக்காம அப்டியே ஒவ்வொரு பழமா ஆரஞ்ச வாய்ல போட்டு கரும்பு ஜூஸ் மிஷின் மாதிரி ஒரு அழுத்து.  உயிர் வந்துது.   இறங்கும்போது ஒரு மாங்கா, ஒரு ஆரஞ்சு மிட்டாய், ரெண்டு டம்ளர் மோர், எங்களோட நாலு ஆரஞ்சு பழங்கள சிவன்ட்ட குடுத்திட்டோம் மேல,  அரிசி, வெல்லம் கொண்டு போய் குடுக்கனும்னு ப்ளான்,  ஆனா ட்ரெயின் லேட்டால அது ஃப்ளாப்.   7.30 மணிக்கு இறங்க ஆரம்பிச்சு மதியம் 2.30 மணிக்கு அடிவாரத்தை வந்து சேர்ந்தோம்.  பொண்ணு ஒரு மணி நேரம் தூக்கம்.  4.30 மணிக்குக் கோவில்லேந்து கிளம்பி, ஈசாவுக்கு வந்து 5.30 க்கு பஸ் ஏறினோம்.  6.30 மணி ரயில்வே ஸ்டேஷன்.  அத்தை, சித்தப்பான்னு ஒருத்தர் வீட்டுக்கும் போக முடியல,  நேர வீட்டுக்குத்தான் அனுப்பனும்னு அவன் திட்டம்.  அதே ட்ரைவர், அதே செக்கர், அதே நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல.  அதே நாலு மணி நேரம் லேட்டு.   திங்கள் கிழமை, 07மே2018, காலை 9.30 மணிக்கு தாம்பரம் வீட்டுக்கு வந்து சேந்து, குழந்தைக்கு அவள் தம்பியும், அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.  கதையெல்லாம் வேகமா சொல்லிட்டு ஆஃபீஸ் கெளம்பியாச்சு.  உடம்பு வலின்னு ஒன்னும் யாருக்கும் பெரிசா ப்ரச்சினை இல்லை.  மீண்டும் சந்திப்போம்.  நாங்க ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம்.