பர்வதமலை ப்ரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனர் தரிசனம்
வரலாற்றுக் குறிப்புகள்:
அர்ஜுனர் - மருதமரத்து நாதர் (மருதவாணர்),
ப்ரமர - வண்டு - சிவன் மேல் மட்டும் பற்று கொண்டு வண்டு உருவெடுத்து அவரை மட்டுமே வலம் வந்த ப்ருங்கி முனிவருக்கு நற்புத்தியளித்து ஆட்கொண்டதாலும், தன் படைகளோடு வண்டுகள் உருவில் ஒரு அசுரனை வென்றதாலும் ப்ரமராம்பிகை. இந்த ப்ருங்கி முனிவர் தவமிருந்த மலை ப்ருங்கி மலை, இன்றைய பரங்கிமலை.
ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரம் அடி உயரம் கொண்டது.
கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர். காஞ்சி மஹாஸ்வாமிகள் இந்த கிரிவலம் செய்துள்ளார்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.
பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது. கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் உள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம்(தென்பாதி மங்கலம்) வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு. வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர்.
தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் இன்னும் கொஞ்சம் கடினம்.
இந்த மலையில் உச்சியில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.
வெள்ளியங்கிரி போன அனுபவம் இருந்ததால ஒரு சின்ன ஒப்பீடு, வழி காட்டுதல்: வெள்ளியங்கிரி உயரம், தொலைவு அதிகம், 7 மலைகள், எல்லா க்ளைமேட்டும் ஒரு தடவ ஏறிட்டு வந்தா அனுபவிச்சிடலாம். ஆனா இப்படி பாறைகள் இல்ல, வெவ்வேறு படிவங்கள் பாறை, செம்மண், விபூதி மலைன்னு, தொடர்ந்து செங்குத்து இல்ல, தண்ணி, கடை வசதிகள் சின்ன சின்னதா இருக்கு சாதாரண நாட்களிலும். இங்க ஒரு 10-20 அடிகள் கூட சமதளத்துல நடக்கல. முழுசா பாறைகள். எங்களுக்கு இது அத விட கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.
நாங்க போய்ட்டு வந்த வழி: சென்னை - பூந்தமல்லி - ஸ்ரீ பெரும்புதூர் - இராணிப்பேட்டை - ஆரணி - போளூர் - தென்மதிமங்கலம் - பர்வதமலை - 200 கி.மீட்டர்
வருஷ ஆரம்பத்துல வெள்ளியங்கிரி போய்ட்டு வந்ததுலேந்தே இந்த பர்வதமலை, சதுர கிரியெல்லாமும் முடிச்சிடனும்னு ப்ளான். ஆனா தள்ளிட்டே போய்டுச்சு பல காரணங்களால். கடினமான மலையேற்றத்துக்கு பாய்சுக்கு கொஞ்சம் மூளை, மனசு திரும்ப தயாராகனும். அன்னமிட்ட அன்னை பால்பாண்டியோட அம்மாவும் இறைவனடி சேர்ந்து விட்டார் இடையில். ஒரு வழியா செயல் தலைவர் இளவரசனோட தொடர் முயற்சியால் 31 ஆகஸ்ட் 2018, வெள்ளிக்கிழமை ஆஃபீஸ் முடிச்சிட்டு கொஞ்சம் சீக்கரமா கெளம்பி நைட்டே மலையேறிடலாம்னு ப்ளான் பண்ணியாச்சு. 10-12 போல ரெடி. நம்மளே ஓட்டிட்டுப் போனா மலையேறுவது, இறங்கி மீண்டும் ட்ரைவ் பண்றதெல்லாம் கஷ்டம், யாரும் இதுவரை எங்க டீம்ல போனதில்ல இந்த மலைக்கு. வேன் விசாரிச்சா ரெண்டு நாள் பேட்டா, டோல் அது, இதுன்னு நெறையா ஆய்டும் போல. நண்பன் ஸ்ரீகாந்த் வண்டி அரேஞ்ச் பண்ணினாரு. ரெண்டு மூனு ப்ராஜெக்ட்ல இருந்தோம், எல்லாரும் அமெரிக்காவோட கஸ்டமர் மீட்டிங் முடிச்சி ஒரு வழியா 7 மணிக்கு சென்னை டி.எல்.எஃப் லேந்து கெளம்ப தயார்.
எங்க டெலிவரி மேனேஜர் ஒரு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் பெர்சன். என்ன மாதிரி கிடையாது. லெஹர் 7 அப் பாய் மாதிரி தான் இருப்பார். வெள்ளியங்கிரி மிஸ் ஆய்டிச்சின்னு இந்த தடவ கடைசி நிமிஷத்துல ஒரு வழியா செவுரேறி குதிச்சி அவரும் சேந்திட்டார். அவருக்கு மாத்துத் துணி எங்க வீட்லேந்து எடுத்திட்டு வரச்சொல்லியாச்சு. ஏறும் போது ராத்திரி வசதி இருக்கோ, இல்லியோ, இறங்கியாவது எங்கயாவது வயக்காட்டுல பம்புசெட்ல ஜாலியா சோர்வு போக ஒரு க்ராமக் குளியல் குளிக்கலாம்னு ஒரு ப்ளான்.
என் பொண்ணு நாலாங்க்ளாஸ், ஏற்கனவே வெள்ளியங்கிரி, நாகலாபுரம்லாம் வந்திருக்கா. அவள என் மனைவி கொண்டு வந்து விடுவாங்கன்னு ப்ளான். நாங்க ஒரு 7-8 வருஷங்களுக்கு முன்னாடி மனைவியோட குலதெய்வம் கோவில் இராமனாதபுரம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்குப் போயிருந்தப்ப வழில ஒரு வயசான அம்மா ஜடாமுடியோட, நீ பர்வத மலைக்குப் போய்ட்டு வா, எல்லாம் நல்லதா நடக்கும்னு சொல்லியிருந்தாங்க. என் நண்பன் ரஞ்சித்தும் அவங்க அம்மா ஊரு அது தான், ஏதாவது ஹெல்ப் வேணுன்னா சொல்லுங்க, பண்ணிடலாம், போய்ட்டு வாங்கன்னாரு. நெட்ல இந்த மலைய பத்தி, வழிய பத்தி செய்திகள, வீடியோஸ பாத்தா என் மனைவி வரமுடியும்னு தோணல, நாலஞ்சு ஆபரேஷன் ஆனவங்க. உழைச்சி கொட்டி, ஏற்கனவே வீட்ல எங்க எல்லாரையும் மேச்சி நலிவாயாச்சு. வெள்ளிக்கிழமை காலைல திடீர்னு நானும் வந்துடட்டுமான்னு கேட்டாங்க. விஷயத்தையெல்லாம் சொல்லி, வீடியோவெல்லாம் பாத்திட்டு சாயந்தரம் உன்னால முடியும்னு தோணினா வான்னு சொல்டேன். பையனுக்கும் 4 வயசு கூட ஆகல, விட்டுட்டும் வர முடியாது. முடிவு பண்ணி மொத்த குடும்பமும் கெளம்பியாச்சு சிவன் மேல பாரத்த போட்டுட்டு. வண்டில என் மனைவியும் வராங்க, பையனோடன்னு சொன்னதும் எல்லாரும் அப்டியே ஷாக் ஆய்ட்டாங்க. ஒன்னும் சொல்லவும் முடியாது இவன் கேக்க மாட்டான், எதாவது கஷ்டமாய்ட்டா என்னா பண்றதுன்னு அவங்களுக்கு பயம், கவலை. கெளம்பியாச்சு இரவு 7.30 மணிக்கு
போரூர்ல ஆப்பிள், பொரி, கடலை, பொட்டுக்கடல, க்ளூகோஸ் டப்பா, க்ளூகோஸ் மிட்டாய், சாமிக்கு அபிஷேகத்துக்கு 5 எலுமிச்சை, பிஸ்கெட், ப்ரட்ன்னு வாங்கிட்டாங்க பசங்க டீமுக்கு. 20 லிட்டர் வாட்டர் கேன் ஒன்னு வண்டில போட்டாச்சு. வழில ஒரு ஆரிய பவன்ல டின்னர் முடிச்சிட்டு கடலாடி மௌனகுரு விடோபானந்த ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தை இரவு 1 மணி வாக்குல அடைந்தோம். மழை சூப்பரா பெஞ்சிட்டு இருக்கு. பால்பாண்டி நாங்க குடும்பத்தோட இப்டி கெளம்பினதுமே ரஞ்சித் குடும்பத்துக்கு தெரிஞ்ச தென்மதிமங்கலத்துல இருக்கற 'சின்னப்பையன்' கூட பேசி அவரையும் வழித்துணைக்கு வரச்சொல்லிடுங்க, குழந்தைங்க, லேடீஸ்லாம் இருக்காங்கன்னு ஆர்டர் பண்ணிட்டாரு. அந்த அண்ணனையும் ஃபோன் பண்ணி ஒரு 9.30 மணி போல எழுப்பி, நாங்க வந்திட்டு இருக்கோம், நீங்களும் எங்களோட வாங்கன்னு சொல்லிட்டோம். அவரும் நீங்க போளூர் வந்திட்டு ஃபோன் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. காலைலயே ஃபோன் பண்ணி இப்டி குடும்பத்தோட வரலாமான்னு கேட்டேன். அவரு அப்பவே இப்ப நீங்க மட்டும் வந்து பாருங்க, ராத்திரி நேரம், மழை வேற பெய்யுது, அவங்க வேற முடியாதவங்க, பையனும் குழந்தைங்கறீங்க, அடுத்த தடவ வேணா, உங்களுக்கு சரின்னு தோணினா கூட்டிட்டு வரலாம்னு சொன்னாரு. நமக்கு தான் சொல் பேச்சு கேக்கற பழக்கமே கிடையாதே, ராத்திரி திருப்பியும் 1 மணிக்கு நாங்க கடலாடி ஆஸ்ரமம் வாசல்ல இருக்கோம்னு ஃபோன் பண்ணி வரச்சொன்னோம். அவரு அந்த வழி வேணாம், இப்ப கஷ்டமா இருக்கும், நீங்க திரும்பி போளூர் வழில வாங்க, நா உங்கள தென்மதிமங்கலத்துல பிக்கப் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டாரு.
இந்த விடோபானந்த ஸ்வாமிகள், திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் குழுவினர்னு கொஞ்சம் டீம் ஏற்கனவே சில வசதிகளையெல்லாம் பக்தர்களுக்காக, பக்தர்களைக்கொண்டே அவனருளால் அங்க செஞ்சிட்டு இருக்காங்க. டொனேஷன்ல கெடச்ச சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணின்னு ஒவ்வொரு பொருளயும் மலையேறும் பக்தர்களை வேண்டி, இஷ்டமிருந்தா முடியும்னா எடுத்துட்டுப் போய், மலைல சேத்திடுங்கன்னு சின்ன, சின்ன துணிப்பைகள்ல, ஒரு லிட்டர் பாட்டில்கள்ல அனுப்சி, இன்னிக்கு மலை மேல இருக்கற முழு கட்டுமானங்களையும் முடிச்சிருக்காங்க. புணரமைக்கப்பட்ட கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, வழில கடப்பாறை, வண்டிச்செயின், சங்கிலிகள் பிணைச்சி, காங்க்ரீட் படிகள், சைடு தடுப்புகள், இரும்புப் படிக்கட்டுகள்னு பல. கீழ இருக்கற ஆஸ்ரமத்துலயே சித்தியாகியிருக்கும் விடோபா ஸ்வாமிகள் மேல வந்தவங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
வழில ஒரு சொட்டு தண்ணி வசதியும் கிடையாது, ஒரு கடையும் கிடையாது. இவ்வளவு உயரமான செங்குத்து மலையேற்றத்துல இன்னி வரை யாருக்கும் எந்த குறையும் நடந்ததுமில்லை. ஆளுக்கு ஒரு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வாட்டர் பாட்டில், ஆப்பிள், க்ளூகோஸ்னு சுமந்திட்டு போய்டலாம்னு கெளம்பிட்டோம், ஒன்னு ரெண்டு பேர் தான் ஷூ போட்டிட்டு வந்தாங்க. விடிகாலை 2.30 மணிக்கு ஆரம்பிச்சி வழில பாம்பு, தேளெல்லாம் பாத்திட்டு, மழைல நனைஞ்சிட்டு 3 கி.மீட்டர் டார்ச் லைட் வெளிச்சத்துல ஒரு வழியா வீரபத்திரர் கோவிலுக்கு வந்து சேந்தோம். அந்த நேரத்துலயும் அங்க சுடா கஞ்சி ரெடி வர்றவங்களுக்கு. நாங்க ஏற்கனவே சாப்டதால கெளம்பிட்டோம், மழையும் நின்று விட்டது. 1263 படிகளப்பா, அத்தனையும் முழங்கால் முறிச்சான் படிக்கட்டுகள். அத தாண்டினதும் ஏற்றமான சிறிய, பெரிய பாறைகள். டீம் பிரிஞ்சி போச்சு. மணி சார் முதல் டீம்ல போய்ட்டாரு அவரும் வெயிட் கிடையாது, அவர்ட்ட எந்த லோடும் கிடையாது. பையனும், பொண்ணும் ரைன் கோட்டுக்குள்ள. ரெண்டு மணி நேரம் தூக்கிட்டு வந்திருப்பேன் அந்த குட்டிப்பையன நான், செர்மராஜ் நண்பேன்டான்னு தூக்கிட்டு போயே போய்ட்டாரு, நானும் என் மனைவியும் ஸ்லோவா போறோம்னு சின்னப்பையன் அண்ணா எங்களோட வந்து சேந்திட்டாரு. பெரிய பெரிய மரவட்டைகள் கறுப்பும், சிவப்புமா, தேரை, தவளைகள் ஓன்னு இரைச்சலோட, மழை மேகங்களால பௌர்ணமி முடிஞ்ச 5-6 நாள்லயே அவ்ளோ இருட்டு. நாங்கதான் கடைசி, ஒக்காந்து ஒக்காந்து போறோம்னு பாத்தா, எங்க டீம்லயே ரெண்டு பசங்க சுத்தமா டயர்டாகி நடப்போமா, மாட்டோமான்னு வரானுங்க. நாங்க அவங்களயும் விட்டு முன்னே போய்ட்டோம், "உன்னுடைய வேலொன்று உறுதுணையாய் வருகிறது, கும்மிருட்டுப் பாதையிலும் கோடாக தெரிகிறது" ன்னு மன தைரியத்துலயும், தெய்வபலத்துலயும்தான் எங்க குடும்பம் இந்த ப்ராஜெக்ட்ல மொத்தமா போயிட்டு இருக்கோம். நிச்சயமா ஏறிடுவோம் ஆனா என்னிக்குன்னெல்லாம் திட்டம் இல்ல :) அப்பப்ப என் கிட்ட இருந்த குட்டி சங்க எடுத்து முழு மூச்சோட ஊதிட்டு, பின்னாடி வர்ற பசங்களுக்கு சத்தம் குடுத்துட்டு. வழில கடலாடி பாதையும் ஒன்று சேர்ந்தது.
விடிகாலை 5.30 மணி இருக்கும், டார்ச் லைட் அணைச்சிட்டு நடக்கறோம். குளிர்ல நடுங்குது உடம்பு, வேர்வையா ஊத்துது ஆனா. ஒரு வழியா கடப்பாறை மலையடிவாரத்து வந்து எல்லாரும் கூடினோம். செர்மராஜ் குழந்தைய பக்கத்துலயே பாறையேற்றத்துல தூங்க வெச்சிட்டு பாத்துக்கிட்டு இருந்தாரு. வெள்ளியங்கிரி முதல் ஆளா ஓடிப்போன கோபால் இங்கயும் அப்டி சாமி பாத்துட்டு வந்திட்டாரு போலன்னு பாத்தா, அவரு அந்த கடப்பாறை மலை செங்குத்து, இரும்புப் பாதைகள், கைப்பிடிகள், சங்கிலிகள், கீழ பாத்தா 1000 அடி உயரம், சுத்தி எங்க பாத்தாலும் பச்சைப்பட்டாடையில் பராசக்தி மலைத்தொடர்களாக.... பயந்து அங்கயே ஒக்காந்துட்டு இருக்காரு படபடன்னு. போதாததுக்கு விடிய விடிய பசியோட இருந்ததோ என்னவோ, நாங்க தான் முதல் டீம்னு குரங்குகள் சூழ்ந்து விட்டன. ப்ளாஸ்டிக் பைன்னு நெனச்சு ஒன்னு என் பையனோட ரைன் கோட்ட நவுத்தி பாக்குது, செர்மராஜ் பைய ஒரு பக்கம் பிடிச்சிக்க, இன்னொரு பக்கம் அது பாட்டுக்கு ஒவ்வொரு சிப்பா தொறந்து பாக்குது, மலையேறுவோர் பேண்ட் பாக்கெட்ல உரிமையா கைய விட்டு கெடச்சத திருடுது. நா வரல, என்னால முடியாது சொன்ன மொத்த கும்பலும் இந்த குரங்கு கூட்டங்களால வேற வழியே இல்லாம செர்மராஜ் பொறுப்புல மொத்த குரங்குகளையும் குத்தகைக்கு விட்டுட்டு, பொறுமையா ஏறினோம் கடப்பாறை மலைல.
என் பையனும் முழிச்சிட்டாரு. நம்ம கிட்ட அப்புச்சி (ஸ்னாக்ஸ்) ஒன்னும் இல்ல, அதனால நம்ம கிட்ட வராது, அது ஆஞ்சனேயர் உம்மாச்சின்னு தைரியம் சொல்லி ஒரு வழியா ரெடி பண்ணியாச்சு. இனிமே யாராலயும் யாரையும் தூக்கிட்டுப் போக முடியாது. ஒவ்வொரு கடப்பாறை, வேல், சூலங்களையும் பிடிச்சி ஆட்டி பாத்து ரெண்டு கைகளிலும் ஒவ்வொன்ன பிடிச்சிட்டு, குழந்தைய அடுத்த கடப்பாறை கிட்ட தூக்கி வெச்சி, புடிச்சிக்க சொல்லி, அவர பாத்துக்கிட்டே நான் அடுத்த அடி ஏறி, அங்கேந்து அடுத்த அடின்னு இப்டியே கடப்பாறை மலை, தண்டவாளங்கள், இரும்பு தகரப்பாலங்கள், இரும்பு ஏணிகள்னு ஏத்தி, எறி, ஏத்தி, ஏறி ஒரு வழியா வந்தேன். குறுநிலமன்னர் நன்னன் கோட்டை வாசல்ல ஒக்காத்தி வெச்சி கொஞ்சம் ரெஸ்ட்டு, ஃபோட்டோக்கள், விடிஞ்சாச்சுல்ல, இனிமே எங்கள புடிக்க முடியாது விளம்பரத்துல, கீழயே இந்த தடவ வீரபத்திரர் கிட்ட உங்களெயெல்லாம் நம்பித்தான் குடும்பத்தோட வந்திருக்கேன், என் திமிரு கொஞ்சம் கூட இல்லன்னு வேண்டிட்டேன், அவனருளால் அவன் தாள் வணங்குவோம்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. திருப்பி ஒரு 100 படிகள் கான்க்ரீட் படிகளேறி 6.30 மணி போல கோவிலை அடைந்தோம். மணி சார் அங்க வெளையாடிட்டு இருக்காரு. வீரபத்திரர் கோவில்ல சொன்னபடியே ஒரு பைரவர் (நாய்) எங்க டீம்ல யாரு கடைசில அப்பப்ப வராங்களோ, அவங்களோடயே தங்கி, தங்கி கூடவே வந்தது ரொம்ப ஆச்சர்யம். இந்த அனுபவம் எல்லாரும் சொல்றாங்க.
ஏறத்தாழ 600 வருஷங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்திருக்கிறது, கோவில் சூப்பரா இருக்கு, மழைல நனையாம ஒரு 50 பேர் தங்கலாம், மழைல நனஞ்சிட்டு ஒரு 400-500 பேர் மேல நிக்கலாம், அந்த அளவு இடத்த பாதுகாப்பு வேலி போட்டு வெச்சிருக்காங்க. பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருள்களைக் கொண்டு அவங்களே உள்ள போயி, சாமிய தொட்டு பூஜை பண்ணலாம். நாங்களும் செய்தோம். வீட்ல ஒரு வில்வ மரம் இருக்கு, 200 இதழ்கள் போல பறிச்சிட்டு போயிருந்தேன். வில்வ இலையை ஒவ்வொரு முறையும் திரும்பவும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம், தோஷமில்லை. பாஸ்கர் குடுத்திருந்த காப்பர் வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்திட்டு போயிருந்தோம். அதையும், 5 எலுமிச்சைப் பழத்தையும் வெச்சி கொஞ்சமா அபிஷேகம் செய்து, வில்வார்ச்சனை செய்து, சங்கு முழங்க ரெண்டு ஆப்பிள்களையும் இறைவனுக்கு கண்ணப்ப நாயனார் ஸ்டைல்ல படைத்து பூஜையை முடித்தோம். டீம் கொண்டு வந்திருந்த சாப்பாட்டையெல்லாம் முடிச்சாங்க. அங்க இப்படி வந்தவங்களோட மேல ஏறி வந்த 3-4 நாய்கள் ஒரு குரங்கையும் நம்மள தொல்லை செய்ய விடாமல் கோவில்லேந்து விரட்டிட்டே இருந்துதுப்பா.
எங்களுக்குப் பின்னாடி ஒரு டீம், நாலு பாய்ஸ், நெறையா பூஜை பொருள்களோட வந்து சிறப்பா பூஜைகள் செஞ்சாங்க. பேண்ட் சட்டைலேந்து வேஷ்டிக்கு மாறி, திருநீறு பூசி சுத்தமாக, சிவனின் பழைய ஆடை, அலங்காரங்களையும் கலைந்து சிறப்பாக அபிஷேகங்கள் செய்தார்கள். ரெண்டு அடியார்கள் பெரிய சங்குகள் கொண்டு கோஷம் எழுப்பினார்கள். மல்லிகார்ஜுனர் பூஜை முடித்து, ப்ரமராம்பிகையின் திருப்பாதங்களையும் இப்படியே சிறு அபிஷேகம், பூஜைகளை செய்து முடித்து, டீம் ஃபோட்டோல்லாம் எடுத்திட்டு 7.30 மணிக்கு இறங்க ஆரம்பித்தோம். மேல கோவில் கிட்ட ஒரு பாறைப்பள்ளம் இருக்கு, அதுல மழைத்தண்ணி சேந்திருக்கு, அதுதான் அந்த கோவிலுக்குக் குளம். யார்ட்டயும் சொட்டு தண்ணி இல்ல. வழில ரெண்டு இடத்துல ஆட்டுக்கல்லுல மழைத்தண்ணி தேங்கி தெளிஞ்சிருந்துது, நான், மனைவி, பையன் மூணு பேரும் அதத்தான் குடிச்சோம் கையால அள்ளி, அள்ளி. பொண்ணு ஏற்கனவே டீம் கூட கீழ இறங்கி போயாச்சு. சின்னப்பையன் அண்ணா இறங்கும்போது பையன தூக்கிட்டு வந்தார், நான் கடைசில ஒரு மணி நேரம் தூக்கிட்டு, நடத்திட்டு வந்தேன், வழில 10-15 நிமிஷம் படுத்து, தூங்க விட்டோம். என் பொண்ணுகிட்ட மலையேறும் ஒரு பக்தர், எங்கப்பன ஏறி வந்து பாத்திட்டல்ல, இனிமே உனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்னு ஆசிர்வதிச்சாரு.
அடிவாரத்துல வீரபத்ரர் கோவில்ல வந்து ஒரு ரெண்டு லிட்டர் தண்ணி முழுசா குடிச்சேன் டேங்க்குலேந்து. மனைவி கஞ்சி குடிச்சாங்க அன்னதானம்னு. பையன் ரெண்டு வடை வாங்கி சாப்ட்டாரு. 10.30 மணி போல கெளம்பி, பூந்தமல்லி பஸ் ஸ்டாப்ல இறங்கி, பிபி 66 டீலக்ஸ், ஆங் அதே ப்ளாஸ்டிக் சேர் போட்ட சரவணா ஸ்டோர் பொம்ம பஸ்தான், ஏறி வீட்டுக்கு வந்து சேந்தோம். வீட்டுக்கு வந்தும் ஒரு சுடு சாதம், சூப்பர் ரசம், கோஸ்-கேரட்-தேங்காய் பொறியல் அத்தனை களைப்பிலும் அமுது படைத்தாள் மனைவி. ஃபோட்டோ பாத்துட்டு, பல் தேச்சி, சூப்பரா ஒரு வென்னீர் குளியல் போட்டு,, சாப்பாடு முடிச்சி, தென்னைமரக்குடியெண்ணெய பசங்களுக்கு தடவி, நீவி விட்டு ஆசமா ஒரு தூக்கம். ஸ்கூல்ல போன வாரம் க்ருஷ்ண ஜயந்தி மாறுவேஷ போட்டில என் பையன் முதல் பரிசு வாங்கியிருக்காருன்னு இன்னிக்கு பாராட்டுச் சான்றிதழ் குடுத்திருக்காங்க. எல்லாம் அவன் செயல்.
வரலாற்றுக் குறிப்புகள்:
அர்ஜுனர் - மருதமரத்து நாதர் (மருதவாணர்),
ப்ரமர - வண்டு - சிவன் மேல் மட்டும் பற்று கொண்டு வண்டு உருவெடுத்து அவரை மட்டுமே வலம் வந்த ப்ருங்கி முனிவருக்கு நற்புத்தியளித்து ஆட்கொண்டதாலும், தன் படைகளோடு வண்டுகள் உருவில் ஒரு அசுரனை வென்றதாலும் ப்ரமராம்பிகை. இந்த ப்ருங்கி முனிவர் தவமிருந்த மலை ப்ருங்கி மலை, இன்றைய பரங்கிமலை.
ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரம் அடி உயரம் கொண்டது.
கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர். காஞ்சி மஹாஸ்வாமிகள் இந்த கிரிவலம் செய்துள்ளார்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.
பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது. கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் உள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம்(தென்பாதி மங்கலம்) வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு. வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர்.
தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் இன்னும் கொஞ்சம் கடினம்.
இந்த மலையில் உச்சியில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.
வெள்ளியங்கிரி போன அனுபவம் இருந்ததால ஒரு சின்ன ஒப்பீடு, வழி காட்டுதல்: வெள்ளியங்கிரி உயரம், தொலைவு அதிகம், 7 மலைகள், எல்லா க்ளைமேட்டும் ஒரு தடவ ஏறிட்டு வந்தா அனுபவிச்சிடலாம். ஆனா இப்படி பாறைகள் இல்ல, வெவ்வேறு படிவங்கள் பாறை, செம்மண், விபூதி மலைன்னு, தொடர்ந்து செங்குத்து இல்ல, தண்ணி, கடை வசதிகள் சின்ன சின்னதா இருக்கு சாதாரண நாட்களிலும். இங்க ஒரு 10-20 அடிகள் கூட சமதளத்துல நடக்கல. முழுசா பாறைகள். எங்களுக்கு இது அத விட கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.
நாங்க போய்ட்டு வந்த வழி: சென்னை - பூந்தமல்லி - ஸ்ரீ பெரும்புதூர் - இராணிப்பேட்டை - ஆரணி - போளூர் - தென்மதிமங்கலம் - பர்வதமலை - 200 கி.மீட்டர்
வருஷ ஆரம்பத்துல வெள்ளியங்கிரி போய்ட்டு வந்ததுலேந்தே இந்த பர்வதமலை, சதுர கிரியெல்லாமும் முடிச்சிடனும்னு ப்ளான். ஆனா தள்ளிட்டே போய்டுச்சு பல காரணங்களால். கடினமான மலையேற்றத்துக்கு பாய்சுக்கு கொஞ்சம் மூளை, மனசு திரும்ப தயாராகனும். அன்னமிட்ட அன்னை பால்பாண்டியோட அம்மாவும் இறைவனடி சேர்ந்து விட்டார் இடையில். ஒரு வழியா செயல் தலைவர் இளவரசனோட தொடர் முயற்சியால் 31 ஆகஸ்ட் 2018, வெள்ளிக்கிழமை ஆஃபீஸ் முடிச்சிட்டு கொஞ்சம் சீக்கரமா கெளம்பி நைட்டே மலையேறிடலாம்னு ப்ளான் பண்ணியாச்சு. 10-12 போல ரெடி. நம்மளே ஓட்டிட்டுப் போனா மலையேறுவது, இறங்கி மீண்டும் ட்ரைவ் பண்றதெல்லாம் கஷ்டம், யாரும் இதுவரை எங்க டீம்ல போனதில்ல இந்த மலைக்கு. வேன் விசாரிச்சா ரெண்டு நாள் பேட்டா, டோல் அது, இதுன்னு நெறையா ஆய்டும் போல. நண்பன் ஸ்ரீகாந்த் வண்டி அரேஞ்ச் பண்ணினாரு. ரெண்டு மூனு ப்ராஜெக்ட்ல இருந்தோம், எல்லாரும் அமெரிக்காவோட கஸ்டமர் மீட்டிங் முடிச்சி ஒரு வழியா 7 மணிக்கு சென்னை டி.எல்.எஃப் லேந்து கெளம்ப தயார்.
எங்க டெலிவரி மேனேஜர் ஒரு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் பெர்சன். என்ன மாதிரி கிடையாது. லெஹர் 7 அப் பாய் மாதிரி தான் இருப்பார். வெள்ளியங்கிரி மிஸ் ஆய்டிச்சின்னு இந்த தடவ கடைசி நிமிஷத்துல ஒரு வழியா செவுரேறி குதிச்சி அவரும் சேந்திட்டார். அவருக்கு மாத்துத் துணி எங்க வீட்லேந்து எடுத்திட்டு வரச்சொல்லியாச்சு. ஏறும் போது ராத்திரி வசதி இருக்கோ, இல்லியோ, இறங்கியாவது எங்கயாவது வயக்காட்டுல பம்புசெட்ல ஜாலியா சோர்வு போக ஒரு க்ராமக் குளியல் குளிக்கலாம்னு ஒரு ப்ளான்.
என் பொண்ணு நாலாங்க்ளாஸ், ஏற்கனவே வெள்ளியங்கிரி, நாகலாபுரம்லாம் வந்திருக்கா. அவள என் மனைவி கொண்டு வந்து விடுவாங்கன்னு ப்ளான். நாங்க ஒரு 7-8 வருஷங்களுக்கு முன்னாடி மனைவியோட குலதெய்வம் கோவில் இராமனாதபுரம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்குப் போயிருந்தப்ப வழில ஒரு வயசான அம்மா ஜடாமுடியோட, நீ பர்வத மலைக்குப் போய்ட்டு வா, எல்லாம் நல்லதா நடக்கும்னு சொல்லியிருந்தாங்க. என் நண்பன் ரஞ்சித்தும் அவங்க அம்மா ஊரு அது தான், ஏதாவது ஹெல்ப் வேணுன்னா சொல்லுங்க, பண்ணிடலாம், போய்ட்டு வாங்கன்னாரு. நெட்ல இந்த மலைய பத்தி, வழிய பத்தி செய்திகள, வீடியோஸ பாத்தா என் மனைவி வரமுடியும்னு தோணல, நாலஞ்சு ஆபரேஷன் ஆனவங்க. உழைச்சி கொட்டி, ஏற்கனவே வீட்ல எங்க எல்லாரையும் மேச்சி நலிவாயாச்சு. வெள்ளிக்கிழமை காலைல திடீர்னு நானும் வந்துடட்டுமான்னு கேட்டாங்க. விஷயத்தையெல்லாம் சொல்லி, வீடியோவெல்லாம் பாத்திட்டு சாயந்தரம் உன்னால முடியும்னு தோணினா வான்னு சொல்டேன். பையனுக்கும் 4 வயசு கூட ஆகல, விட்டுட்டும் வர முடியாது. முடிவு பண்ணி மொத்த குடும்பமும் கெளம்பியாச்சு சிவன் மேல பாரத்த போட்டுட்டு. வண்டில என் மனைவியும் வராங்க, பையனோடன்னு சொன்னதும் எல்லாரும் அப்டியே ஷாக் ஆய்ட்டாங்க. ஒன்னும் சொல்லவும் முடியாது இவன் கேக்க மாட்டான், எதாவது கஷ்டமாய்ட்டா என்னா பண்றதுன்னு அவங்களுக்கு பயம், கவலை. கெளம்பியாச்சு இரவு 7.30 மணிக்கு
போரூர்ல ஆப்பிள், பொரி, கடலை, பொட்டுக்கடல, க்ளூகோஸ் டப்பா, க்ளூகோஸ் மிட்டாய், சாமிக்கு அபிஷேகத்துக்கு 5 எலுமிச்சை, பிஸ்கெட், ப்ரட்ன்னு வாங்கிட்டாங்க பசங்க டீமுக்கு. 20 லிட்டர் வாட்டர் கேன் ஒன்னு வண்டில போட்டாச்சு. வழில ஒரு ஆரிய பவன்ல டின்னர் முடிச்சிட்டு கடலாடி மௌனகுரு விடோபானந்த ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தை இரவு 1 மணி வாக்குல அடைந்தோம். மழை சூப்பரா பெஞ்சிட்டு இருக்கு. பால்பாண்டி நாங்க குடும்பத்தோட இப்டி கெளம்பினதுமே ரஞ்சித் குடும்பத்துக்கு தெரிஞ்ச தென்மதிமங்கலத்துல இருக்கற 'சின்னப்பையன்' கூட பேசி அவரையும் வழித்துணைக்கு வரச்சொல்லிடுங்க, குழந்தைங்க, லேடீஸ்லாம் இருக்காங்கன்னு ஆர்டர் பண்ணிட்டாரு. அந்த அண்ணனையும் ஃபோன் பண்ணி ஒரு 9.30 மணி போல எழுப்பி, நாங்க வந்திட்டு இருக்கோம், நீங்களும் எங்களோட வாங்கன்னு சொல்லிட்டோம். அவரும் நீங்க போளூர் வந்திட்டு ஃபோன் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. காலைலயே ஃபோன் பண்ணி இப்டி குடும்பத்தோட வரலாமான்னு கேட்டேன். அவரு அப்பவே இப்ப நீங்க மட்டும் வந்து பாருங்க, ராத்திரி நேரம், மழை வேற பெய்யுது, அவங்க வேற முடியாதவங்க, பையனும் குழந்தைங்கறீங்க, அடுத்த தடவ வேணா, உங்களுக்கு சரின்னு தோணினா கூட்டிட்டு வரலாம்னு சொன்னாரு. நமக்கு தான் சொல் பேச்சு கேக்கற பழக்கமே கிடையாதே, ராத்திரி திருப்பியும் 1 மணிக்கு நாங்க கடலாடி ஆஸ்ரமம் வாசல்ல இருக்கோம்னு ஃபோன் பண்ணி வரச்சொன்னோம். அவரு அந்த வழி வேணாம், இப்ப கஷ்டமா இருக்கும், நீங்க திரும்பி போளூர் வழில வாங்க, நா உங்கள தென்மதிமங்கலத்துல பிக்கப் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டாரு.
இந்த விடோபானந்த ஸ்வாமிகள், திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் குழுவினர்னு கொஞ்சம் டீம் ஏற்கனவே சில வசதிகளையெல்லாம் பக்தர்களுக்காக, பக்தர்களைக்கொண்டே அவனருளால் அங்க செஞ்சிட்டு இருக்காங்க. டொனேஷன்ல கெடச்ச சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணின்னு ஒவ்வொரு பொருளயும் மலையேறும் பக்தர்களை வேண்டி, இஷ்டமிருந்தா முடியும்னா எடுத்துட்டுப் போய், மலைல சேத்திடுங்கன்னு சின்ன, சின்ன துணிப்பைகள்ல, ஒரு லிட்டர் பாட்டில்கள்ல அனுப்சி, இன்னிக்கு மலை மேல இருக்கற முழு கட்டுமானங்களையும் முடிச்சிருக்காங்க. புணரமைக்கப்பட்ட கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, வழில கடப்பாறை, வண்டிச்செயின், சங்கிலிகள் பிணைச்சி, காங்க்ரீட் படிகள், சைடு தடுப்புகள், இரும்புப் படிக்கட்டுகள்னு பல. கீழ இருக்கற ஆஸ்ரமத்துலயே சித்தியாகியிருக்கும் விடோபா ஸ்வாமிகள் மேல வந்தவங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
வழில ஒரு சொட்டு தண்ணி வசதியும் கிடையாது, ஒரு கடையும் கிடையாது. இவ்வளவு உயரமான செங்குத்து மலையேற்றத்துல இன்னி வரை யாருக்கும் எந்த குறையும் நடந்ததுமில்லை. ஆளுக்கு ஒரு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வாட்டர் பாட்டில், ஆப்பிள், க்ளூகோஸ்னு சுமந்திட்டு போய்டலாம்னு கெளம்பிட்டோம், ஒன்னு ரெண்டு பேர் தான் ஷூ போட்டிட்டு வந்தாங்க. விடிகாலை 2.30 மணிக்கு ஆரம்பிச்சி வழில பாம்பு, தேளெல்லாம் பாத்திட்டு, மழைல நனைஞ்சிட்டு 3 கி.மீட்டர் டார்ச் லைட் வெளிச்சத்துல ஒரு வழியா வீரபத்திரர் கோவிலுக்கு வந்து சேந்தோம். அந்த நேரத்துலயும் அங்க சுடா கஞ்சி ரெடி வர்றவங்களுக்கு. நாங்க ஏற்கனவே சாப்டதால கெளம்பிட்டோம், மழையும் நின்று விட்டது. 1263 படிகளப்பா, அத்தனையும் முழங்கால் முறிச்சான் படிக்கட்டுகள். அத தாண்டினதும் ஏற்றமான சிறிய, பெரிய பாறைகள். டீம் பிரிஞ்சி போச்சு. மணி சார் முதல் டீம்ல போய்ட்டாரு அவரும் வெயிட் கிடையாது, அவர்ட்ட எந்த லோடும் கிடையாது. பையனும், பொண்ணும் ரைன் கோட்டுக்குள்ள. ரெண்டு மணி நேரம் தூக்கிட்டு வந்திருப்பேன் அந்த குட்டிப்பையன நான், செர்மராஜ் நண்பேன்டான்னு தூக்கிட்டு போயே போய்ட்டாரு, நானும் என் மனைவியும் ஸ்லோவா போறோம்னு சின்னப்பையன் அண்ணா எங்களோட வந்து சேந்திட்டாரு. பெரிய பெரிய மரவட்டைகள் கறுப்பும், சிவப்புமா, தேரை, தவளைகள் ஓன்னு இரைச்சலோட, மழை மேகங்களால பௌர்ணமி முடிஞ்ச 5-6 நாள்லயே அவ்ளோ இருட்டு. நாங்கதான் கடைசி, ஒக்காந்து ஒக்காந்து போறோம்னு பாத்தா, எங்க டீம்லயே ரெண்டு பசங்க சுத்தமா டயர்டாகி நடப்போமா, மாட்டோமான்னு வரானுங்க. நாங்க அவங்களயும் விட்டு முன்னே போய்ட்டோம், "உன்னுடைய வேலொன்று உறுதுணையாய் வருகிறது, கும்மிருட்டுப் பாதையிலும் கோடாக தெரிகிறது" ன்னு மன தைரியத்துலயும், தெய்வபலத்துலயும்தான் எங்க குடும்பம் இந்த ப்ராஜெக்ட்ல மொத்தமா போயிட்டு இருக்கோம். நிச்சயமா ஏறிடுவோம் ஆனா என்னிக்குன்னெல்லாம் திட்டம் இல்ல :) அப்பப்ப என் கிட்ட இருந்த குட்டி சங்க எடுத்து முழு மூச்சோட ஊதிட்டு, பின்னாடி வர்ற பசங்களுக்கு சத்தம் குடுத்துட்டு. வழில கடலாடி பாதையும் ஒன்று சேர்ந்தது.
விடிகாலை 5.30 மணி இருக்கும், டார்ச் லைட் அணைச்சிட்டு நடக்கறோம். குளிர்ல நடுங்குது உடம்பு, வேர்வையா ஊத்துது ஆனா. ஒரு வழியா கடப்பாறை மலையடிவாரத்து வந்து எல்லாரும் கூடினோம். செர்மராஜ் குழந்தைய பக்கத்துலயே பாறையேற்றத்துல தூங்க வெச்சிட்டு பாத்துக்கிட்டு இருந்தாரு. வெள்ளியங்கிரி முதல் ஆளா ஓடிப்போன கோபால் இங்கயும் அப்டி சாமி பாத்துட்டு வந்திட்டாரு போலன்னு பாத்தா, அவரு அந்த கடப்பாறை மலை செங்குத்து, இரும்புப் பாதைகள், கைப்பிடிகள், சங்கிலிகள், கீழ பாத்தா 1000 அடி உயரம், சுத்தி எங்க பாத்தாலும் பச்சைப்பட்டாடையில் பராசக்தி மலைத்தொடர்களாக.... பயந்து அங்கயே ஒக்காந்துட்டு இருக்காரு படபடன்னு. போதாததுக்கு விடிய விடிய பசியோட இருந்ததோ என்னவோ, நாங்க தான் முதல் டீம்னு குரங்குகள் சூழ்ந்து விட்டன. ப்ளாஸ்டிக் பைன்னு நெனச்சு ஒன்னு என் பையனோட ரைன் கோட்ட நவுத்தி பாக்குது, செர்மராஜ் பைய ஒரு பக்கம் பிடிச்சிக்க, இன்னொரு பக்கம் அது பாட்டுக்கு ஒவ்வொரு சிப்பா தொறந்து பாக்குது, மலையேறுவோர் பேண்ட் பாக்கெட்ல உரிமையா கைய விட்டு கெடச்சத திருடுது. நா வரல, என்னால முடியாது சொன்ன மொத்த கும்பலும் இந்த குரங்கு கூட்டங்களால வேற வழியே இல்லாம செர்மராஜ் பொறுப்புல மொத்த குரங்குகளையும் குத்தகைக்கு விட்டுட்டு, பொறுமையா ஏறினோம் கடப்பாறை மலைல.
என் பையனும் முழிச்சிட்டாரு. நம்ம கிட்ட அப்புச்சி (ஸ்னாக்ஸ்) ஒன்னும் இல்ல, அதனால நம்ம கிட்ட வராது, அது ஆஞ்சனேயர் உம்மாச்சின்னு தைரியம் சொல்லி ஒரு வழியா ரெடி பண்ணியாச்சு. இனிமே யாராலயும் யாரையும் தூக்கிட்டுப் போக முடியாது. ஒவ்வொரு கடப்பாறை, வேல், சூலங்களையும் பிடிச்சி ஆட்டி பாத்து ரெண்டு கைகளிலும் ஒவ்வொன்ன பிடிச்சிட்டு, குழந்தைய அடுத்த கடப்பாறை கிட்ட தூக்கி வெச்சி, புடிச்சிக்க சொல்லி, அவர பாத்துக்கிட்டே நான் அடுத்த அடி ஏறி, அங்கேந்து அடுத்த அடின்னு இப்டியே கடப்பாறை மலை, தண்டவாளங்கள், இரும்பு தகரப்பாலங்கள், இரும்பு ஏணிகள்னு ஏத்தி, எறி, ஏத்தி, ஏறி ஒரு வழியா வந்தேன். குறுநிலமன்னர் நன்னன் கோட்டை வாசல்ல ஒக்காத்தி வெச்சி கொஞ்சம் ரெஸ்ட்டு, ஃபோட்டோக்கள், விடிஞ்சாச்சுல்ல, இனிமே எங்கள புடிக்க முடியாது விளம்பரத்துல, கீழயே இந்த தடவ வீரபத்திரர் கிட்ட உங்களெயெல்லாம் நம்பித்தான் குடும்பத்தோட வந்திருக்கேன், என் திமிரு கொஞ்சம் கூட இல்லன்னு வேண்டிட்டேன், அவனருளால் அவன் தாள் வணங்குவோம்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. திருப்பி ஒரு 100 படிகள் கான்க்ரீட் படிகளேறி 6.30 மணி போல கோவிலை அடைந்தோம். மணி சார் அங்க வெளையாடிட்டு இருக்காரு. வீரபத்திரர் கோவில்ல சொன்னபடியே ஒரு பைரவர் (நாய்) எங்க டீம்ல யாரு கடைசில அப்பப்ப வராங்களோ, அவங்களோடயே தங்கி, தங்கி கூடவே வந்தது ரொம்ப ஆச்சர்யம். இந்த அனுபவம் எல்லாரும் சொல்றாங்க.
ஏறத்தாழ 600 வருஷங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்திருக்கிறது, கோவில் சூப்பரா இருக்கு, மழைல நனையாம ஒரு 50 பேர் தங்கலாம், மழைல நனஞ்சிட்டு ஒரு 400-500 பேர் மேல நிக்கலாம், அந்த அளவு இடத்த பாதுகாப்பு வேலி போட்டு வெச்சிருக்காங்க. பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருள்களைக் கொண்டு அவங்களே உள்ள போயி, சாமிய தொட்டு பூஜை பண்ணலாம். நாங்களும் செய்தோம். வீட்ல ஒரு வில்வ மரம் இருக்கு, 200 இதழ்கள் போல பறிச்சிட்டு போயிருந்தேன். வில்வ இலையை ஒவ்வொரு முறையும் திரும்பவும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம், தோஷமில்லை. பாஸ்கர் குடுத்திருந்த காப்பர் வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்திட்டு போயிருந்தோம். அதையும், 5 எலுமிச்சைப் பழத்தையும் வெச்சி கொஞ்சமா அபிஷேகம் செய்து, வில்வார்ச்சனை செய்து, சங்கு முழங்க ரெண்டு ஆப்பிள்களையும் இறைவனுக்கு கண்ணப்ப நாயனார் ஸ்டைல்ல படைத்து பூஜையை முடித்தோம். டீம் கொண்டு வந்திருந்த சாப்பாட்டையெல்லாம் முடிச்சாங்க. அங்க இப்படி வந்தவங்களோட மேல ஏறி வந்த 3-4 நாய்கள் ஒரு குரங்கையும் நம்மள தொல்லை செய்ய விடாமல் கோவில்லேந்து விரட்டிட்டே இருந்துதுப்பா.
எங்களுக்குப் பின்னாடி ஒரு டீம், நாலு பாய்ஸ், நெறையா பூஜை பொருள்களோட வந்து சிறப்பா பூஜைகள் செஞ்சாங்க. பேண்ட் சட்டைலேந்து வேஷ்டிக்கு மாறி, திருநீறு பூசி சுத்தமாக, சிவனின் பழைய ஆடை, அலங்காரங்களையும் கலைந்து சிறப்பாக அபிஷேகங்கள் செய்தார்கள். ரெண்டு அடியார்கள் பெரிய சங்குகள் கொண்டு கோஷம் எழுப்பினார்கள். மல்லிகார்ஜுனர் பூஜை முடித்து, ப்ரமராம்பிகையின் திருப்பாதங்களையும் இப்படியே சிறு அபிஷேகம், பூஜைகளை செய்து முடித்து, டீம் ஃபோட்டோல்லாம் எடுத்திட்டு 7.30 மணிக்கு இறங்க ஆரம்பித்தோம். மேல கோவில் கிட்ட ஒரு பாறைப்பள்ளம் இருக்கு, அதுல மழைத்தண்ணி சேந்திருக்கு, அதுதான் அந்த கோவிலுக்குக் குளம். யார்ட்டயும் சொட்டு தண்ணி இல்ல. வழில ரெண்டு இடத்துல ஆட்டுக்கல்லுல மழைத்தண்ணி தேங்கி தெளிஞ்சிருந்துது, நான், மனைவி, பையன் மூணு பேரும் அதத்தான் குடிச்சோம் கையால அள்ளி, அள்ளி. பொண்ணு ஏற்கனவே டீம் கூட கீழ இறங்கி போயாச்சு. சின்னப்பையன் அண்ணா இறங்கும்போது பையன தூக்கிட்டு வந்தார், நான் கடைசில ஒரு மணி நேரம் தூக்கிட்டு, நடத்திட்டு வந்தேன், வழில 10-15 நிமிஷம் படுத்து, தூங்க விட்டோம். என் பொண்ணுகிட்ட மலையேறும் ஒரு பக்தர், எங்கப்பன ஏறி வந்து பாத்திட்டல்ல, இனிமே உனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்னு ஆசிர்வதிச்சாரு.
அடிவாரத்துல வீரபத்ரர் கோவில்ல வந்து ஒரு ரெண்டு லிட்டர் தண்ணி முழுசா குடிச்சேன் டேங்க்குலேந்து. மனைவி கஞ்சி குடிச்சாங்க அன்னதானம்னு. பையன் ரெண்டு வடை வாங்கி சாப்ட்டாரு. 10.30 மணி போல கெளம்பி, பூந்தமல்லி பஸ் ஸ்டாப்ல இறங்கி, பிபி 66 டீலக்ஸ், ஆங் அதே ப்ளாஸ்டிக் சேர் போட்ட சரவணா ஸ்டோர் பொம்ம பஸ்தான், ஏறி வீட்டுக்கு வந்து சேந்தோம். வீட்டுக்கு வந்தும் ஒரு சுடு சாதம், சூப்பர் ரசம், கோஸ்-கேரட்-தேங்காய் பொறியல் அத்தனை களைப்பிலும் அமுது படைத்தாள் மனைவி. ஃபோட்டோ பாத்துட்டு, பல் தேச்சி, சூப்பரா ஒரு வென்னீர் குளியல் போட்டு,, சாப்பாடு முடிச்சி, தென்னைமரக்குடியெண்ணெய பசங்களுக்கு தடவி, நீவி விட்டு ஆசமா ஒரு தூக்கம். ஸ்கூல்ல போன வாரம் க்ருஷ்ண ஜயந்தி மாறுவேஷ போட்டில என் பையன் முதல் பரிசு வாங்கியிருக்காருன்னு இன்னிக்கு பாராட்டுச் சான்றிதழ் குடுத்திருக்காங்க. எல்லாம் அவன் செயல்.
2 comments:
Super Narration of Temple History and humorous script of on the way update.
Hats off Seetharaman! May your Spiritual Guidance help lot of folks!! Jai Hind!
I have commented the above.
Radhe Krishna!
Post a Comment