Aug 16, 2018

பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள்

பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள்

- மீனாட்சி உனக்கெதுக்கடி மூக்குத்தி என்று கேட்டால் பகுத்தறிவு, செத்த பிணத்தை தங்க மோதிரத்தோடு அடக்கம் செய்வது ?
- ராமன் வேறு எங்கும் கோவில் கட்டினால் ஒப்புக் கொள்ள மாட்டாரா என்றது பகுத்தறிவு, அண்ணா சதுக்கம் அருகில் தான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது ?
- ஆதிமுதலே ப்ராஹ்மணர் அல்லாதோர் பூசாரிகளாக இருக்கும் ப்ரசித்தி பெற்ற பரம்பரை கோவில்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  யாரும் பூசாரியாகலாம் என்று புதிதாய்க் கூறுவது போல் கூறியது பகுத்தறிவு.  கட்சித்தலைவர், பொதுச்செயலாளர் போன்ற முக்ய பொருப்புகளில் அப்படி தாழ்த்தப்பட்ட எவரையும் இன்று வளர்த்து வராமல், குடும்ப பதிவிகளாகவே அவற்றைப் பார்த்துக் கொள்வது ?
- பெருமதிப்புள்ள சந்தனக்கட்டைகளில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் தலைவர்கள் அடக்கம் செய்யப்படுவது எந்த வகையில் பகுத்தறிவு ? கள்ளிப்பெட்டி போதாதா, இல்லை வெறும் உடம்பை புதைத்தால் போதாதா ?
- கடைசிவரை வாரிசுகளில் ஒருவரின் பிறந்த தேதி, அம்மா, அப்பா பெயரோடு வெளியிடாதது ஒழுக்கத்தின் தலைமைக்கு அழகா ?
- பெரியார் சேர்த்த சொத்தை  ஒரு பெண்ணிடம் மனைவியாக்கி விட்டுச்சென்றார்.  தனக்குப் பின் ஒரு வாரிசை கூட தொண்டர்களிடமிருந்து  உருவாக்காதது, நம்பாதது ஒரு கழகத்தின் சாதனை.
- ரியல் எஸ்டேட், ஒரு துறை விடாமல் எதிலும் பெரும் சொத்தை சேர்த்து குடும்பத்தின், வாரிசுகளின் சொத்தாக ஆக்கியது த்யாகத்தின் அடையாளமா ? ஒரு வீட்டை மருத்துவமனைக்கு எழுதி வைக்கும் போதே தெரிந்து கொள்ள வேண்டும் அது போனால் போகட்டும் என்று விட்டது என்று, அல்லது தொண்டர்கள் அதை நிச்சயம் நினைவு இல்லமாக்கி விடுவார்கள் என்று
- இந்து மத பண்டிகைகளில் சுடுசொல்லை விதைத்தது பகுத்தறிவென்றால், மற்ற மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவது ?
- மாநிலத்துக்குக் கொண்டு வந்த திட்டங்களால் குடும்பமும், தலைமுறைகளும் சுகமாய் பெருவாழ்வு வாழ்வது கண்கூடு
- சமத்துவபுரங்கள் கண்காட்சிகளாக மட்டுமே இருக்கும்.  ஏற்கனவே நகரங்கள், ஃப்ளாட்டுகள், ஹவுசிங் போர்டு வீடுகளில் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வாழ்கிறார்களா ?
- பகுத்தறிவு போதித்தவரின் குடும்பத்தார்களே, கட்சி வாரிசுகளே  இறப்பில் அழுகிறார்களே, கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்கிறார்களே ? இதுதான் இவ்வளவு வருட பகுத்தறிவு போதனையா ?
- தாலி அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி, அறுப்புப் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் மனைவி, மகள், மருமகள்களை யாராவது, எங்காவது அந்த போராட்டங்களில் முன்னுதாரணமாக அறுத்துக் கொண்டதைப் பார்த்தீர்களா ?
- அவர் சாமியை வழிபடுவார், கறுப்புத் துண்டு, கறுப்புச் சட்டை போட்டுக்கொள்ள மாட்டார்,  இறுதிக்காலத்தில் ஆழ்வார் வரலாற்றை எழுதுவார்.  குடும்பத்தார்களும் எல்லா கோவில்களுக்கும் போய் சாமி கும்பிடுவார்கள்.  தொண்டர்கள் இந்த வளையத்திற்குள் வராமல் பார்த்துக் கொள்வார்.
- இன்று வரை 60 வருடங்களாக மது ஒழிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏழைகள் மேல் அக்கறை கொண்டவர்கள்
- ஐஏஎஸ், ஐபிஎஸ், சிஏ, ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வுகள் என்று எதற்கும் தமிழர்களை இவர்கள் ஊக்குவித்து பேசியதில்லை, இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்ததில்லை
- 60 வருடங்களாக காவிரி ஆணையம் அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
- மத்திய அரசுக்கூட்டணியில் அங்கம் வகித்த போதும் இலங்கைத் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோதும், காவிரி நீருக்கும் ஒரு தீர்வும் கண்டதில்லை
- தவறு செய்தவர்கள் ப்ராஹ்மணர் என்றால் அவர்களை தண்டித்து ஒடுக்கியிருக்க வேண்டும்,  உலகின் ஆதி மதமான, உலகின் தத்துவ ஆராய்ச்சியாளர்கள் பாராட்டும் ஹிந்து மதத்தையே வேரோடொழித்து, மதமாற்றத்தையே ஆதிமுதல் நோக்கமாகக் கொண்டிருக்கும் மற்ற மதங்களுக்கு இடம் கொடுத்து வளர விட்டிருக்கக் கூடாது.   ஹிந்து மதமும், ப்ராஹ்மணர்களும் இவர்களால் அழியப்போவதுமில்லை.  தவறு செய்தவன் இராவணன் என்ற ப்ராஹ்மணன் என்றும், அவன் செய்த தவறுக்காக அவனை அழித்த க்ஷத்ரியனை ராமனைக் கொண்டாடுபவர்கள் அவர்கள்.
- இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுசரிக்கச் சொன்ன அன்னிய கைக்கூலிகள்.
- ஒழுக்கத்தை, ஒரு பத்னி விரதத்தை, அனியாயமாக சொத்து சேர்க்கக்கூடாது என்பவைகளையும் போதித்த இராமாயணமும், மஹாபாரதமும் இவர்களுக்கு இதனாலேயே ஒவ்வாமல் போனது. 
- பெற்றோர், கணவன், மகனின் பாதுகாப்பில் வைத்துப் போற்ற வேண்டிய குடும்பப்பெண்களைசுதந்திரம் என்ற பெயரில் ஏமாற்றி, வெளியில் கொண்டுவந்து படைப்பாக்கியது இவர்கள் சாதனை.  இவர்கள் குடும்பத்துப் பெண்கள் ? பாரதி அப்படி தன் மனைவியையும் கொண்டு வந்தான், பெரியார் கொண்டுவந்தார்.

1 comment:

Unknown said...

Their strategy continues.