Jul 27, 2018

குமாரில பட்டர்

குமாரில பட்டர்:

வேத வழி முதலில் கெட்ட கார்யங்களில், எண்ணங்களில் நம் மனது செல்லாமலிருக்க இடைவிடாது வேலைகளை விதித்துக்கொண்டேயிருக்கிறது காலை முதல் இரவு வரை. நல்லோர் சேர்க்கை, நல்ல கார்யங்களில் மனதை ஈடுபடுத்தி செயல்படுத்துவது, நல்லதை கேட்பது, சொல்வது, பூஜை செய்வது என்று நம் மனஸும், கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்ற ஐந்து இந்திரியங்களும் இப்படி 50-70 வயதுகள் வரை தீய வழியில் செல்லாமல் நம்மை எப்போதும் நல்ல செயல்களில் பிசியாவே வைத்திருக்கும். இந்த பகுதியை, மந்திரங்களை பூர்வ (முதல்) பாகம் என்று சொல்வோம்.

இப்படி 4 மணிக்கு எழுந்திரு, இந்த குச்சிய வெச்சி பல் தேய், இந்தெந்த இடங்களில் பாத்ரூம் போ, இத்தன தடவ வாய் கொப்புளி, சுத்தம் செய்து கொள், நதி, குளங்களில் குளி, இந்தெந்த ஆடை உடுத்திக்கோ, சூர்ய பூஜை செய், உலக நன்மைகளை நினை, திட்டமிட்டுக்கொள், யோகா பண்ணு, த்யானம் பண்ணு, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை பூஜை செய், முன், 64 கலைகளையும், டைம் டேபிள் படி, படி, ப்ராக்டிஸ் பண்ணு. முன், பின் தெரியாத ஒருவனுக்கு சாப்பாடு போடு, கண்ணுக்குத் தெரியாத, தெரியும் மற்ற உயிரினங்களுக்கு உணவு கொடு, மாலை திருப்பிக் குளி, உலகம் நிம்மதியாகவும், பத்திரமாகவும் இருக்க ப்ரார்த்தனை செய்து கொண்டு தூங்கு. இதுல என்ன ஸ்பெஷல்னா இது எல்லாத்தையும் அது அதுக்குன்னு மந்திரங்களை சொல்லி செய்யனும். கர்மாக்களை (வேலை) உபதேசிப்பதால் இது கர்ம பாகம்.

இப்படி 60-70 வயது வரை இருந்து மந்திரங்களின் பொருளறிந்து, உலக நன்மைக்காக காலை முதல் இரவு வரை வேலைகள் செய்தவனுக்கு, வேதமே உபநிஷதங்கள் எனும் வேத சாரம் (ஜூஸ்) மூலம் இந்த எல்லா வேலைகளையும் விட்டொழித்து, இனி மீதமுள்ள ஆயுளை வெறும் உலக நன்மைக்கான த்யானத்தில் மட்டும் இறைவனை நினைத்து செய் என்று போதிக்கிறது. இதை எஸ்டாப்லிஷ் பண்ணத்தான் ஆதிசங்கரர் அவதாரம். வேதத்தின் இந்த பாகம் உத்தர பாகம் (பின், கடைசி, மோக்ஷ) வழி என்று உபதேசிக்கப்படுகிறது. இது ஞானத்தை போதிப்பதால் ஞான பாகம்.

குமாரில பட்டர், ஆதி சங்கரருக்கு ஒரு 50 வருடங்களுக்கு முன் அவதரித்தவர். பௌத்த மதம் பரவி எதுவும் மாயை என்று போதித்திருந்த காலம். ராஜாக்கள் உட்பட மக்கள் எவரும் எதிலும் பிடிப்பில்லாமல், பிக்ஷுக்களாக உருவகப்படுத்திக் கொண்டிருந்த நேரம். காரியங்கள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. இதிலிருந்து மீண்டு சனாதனமான வேத மார்க்கத்திற்கு எல்லோரும் திரும்ப வேண்டும் என்று முயற்சித்தால் வாதம் செய்து, பெரிய பெரிய சாதனைகள் செய்து காண்பித்தாலே சாத்தியம். பின் அவதரிக்கப்போகும் பரமசிவனின் அவதாரமான ஆதி சங்கரர் ஞான மார்க்கத்தை உபதேசிக்கப்போகிறார். அதற்கு ஸ்டேஜ் செட் பண்றாப்ல முதலில் சோம்பியிருக்கும் மக்களை எழுப்பி மீண்டும் வேதத்தில் கூறியிருக்கும் வேலைகளை செய்ய வைக்க வேண்டும். சங்கரர் குறுகிய காலமே பூமியில் இருக்கப்போகிறார் என்று முருகக்கடவுள் ஸுப்ரமண்யரே குமாரில பட்டராக அவதரிக்கிறார். உலகிற்கு பரமபிதாவான நான்முகனும், சரஸ்வதி தேவியும் குமாரில பட்டரின் சிஷ்யர்களாக மண்டனமிஶ்ரர்-சரஸவாணி என்று அவதரிக்கிறார்கள்.

இப்ப தான் முக்யமான கட்டம், இந்த குமாரில பட்டர் சும்மா போய் ஏய், எல்லாரும் இங்க வாங்க, வேதத்தில் சொல்லி இருக்கற வேலைகளை செய்யுங்க. உங்க வழி, குருமார்கள் வேஸ்ட்டுன்னு சொல்லல. அவங்க மார்க்கத்துக்கு மாறி முறையா புத்த விஹார்ல 7-8 வருஷங்கள் கடினமா முயற்சி செய்து அவர்களின் கொள்கைகள், விஷயங்கள் முழுவதையும் சூப்பரா படிச்சி, தலைமை சீடர்ங்கற அளவுக்கு தேறினார். அதுக்கப்பறம் தன்னை வெளிப்படுத்துக்கொண்டு அவங்கள வாதங்களில் ஜயித்தார்.

கடைசியா இவர் இப்படி ஏமாத்தினதால 7ஆவது மாடிலேந்து குதிக்கச் சொல்லி உத்தரவு குடுத்தாங்க. அவரும் "வேத மார்க்கம் சத்யமாயிருந்தால் என்னை அது காக்கும்"னு சொல்லி குதிச்சார், உயிருக்கு ஒரு பாதிப்பும் இல்லை, முழுசா நம்பாம "இருந்தால்" னு சொன்னதால் கண்ணு மட்டும் பாதிச்சிது. பௌத்தர்கள் இவர் வழிய ஏற்றுக்கொண்டு வேதம் விதித்த வேலைகளை செய்ய தயாராயினர். ஆனா இவர், உங்களுக்கு என்னோட சீடன் மண்டனமிஶ்ரன் வழிகாட்டுவான், பௌத்தனா மாறி குருவ ஏமாத்தினதுக்கு, நான் பண்ணின குரு த்ரோகத்துக்கு என்ன ப்ராயச்சித்தம்னு புத்தகங்கள்ல பாத்தேன். கொஞ்ச, கொஞ்சமா அனுபவித்து சாகறது தான் தண்டனைன்னு சொல்லி இருக்கு, அதனால நான் நெல் உமி கழுத்து வரை ரொப்பின குழியில் நெருப்பு வெச்சி, அனுபவித்து என் உடலை விடப்போகிறேன்னு தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார்.

அப்படி உயிர் விடும் தருவாயில் தான் அவரை சந்திச்ச ஆதிசங்கரர் அவரையும் வாதிட்டு ஞான மார்க்கத்தை போதித்து, மோக்ஷம் தந்து, அவர் சீடர் மண்டனமிஶ்ரரையும் அவர் மனைவி சரஸவானியையும் வாதம் செய்து அவர்களுடைய ஆயிரக்கணக்கான சீடர்களோடு ஞான மார்க்கத்துக்கு திருப்பினார் - இது வரலாறு. இன்று வரை காலங்காலமாய் நெறையா பேர் இந்த வழியில் குருமார்களாய் தோன்றி, மக்களையும் ஒழுக்கத்தோட, நிம்மதியோட, நம்பிக்கையோட, பயமில்லாம வாழ வெச்ச சரித்திரம்,

நம்ம பசங்க என்ன பண்றானுங்க, த்ராவிடம்னா என்னென்னு தெரியாது, ப்ராஹ்மணன், க்ஷத்ரியன்னா என்ன, எதுக்குன்னு தெரியாது, மனு ஸ்ம்ருதி, அட்லீஸ்ட் தமிழ் வேதங்கள் எதுவும் ஒன்ன கூட முழுசா படிச்சது கிடையாது, இதெல்லாம் தெரிஞ்ச, ப்ராக்டிஸ் பண்ற குருவையும் தேடிப் போய் கேட்டுத் தெரிஞ்சிக்கறதும் கிடையாது. முட்டாள் தனமா, மூர்க்கத்தனமா, அடிமைகள் மாதிரி, அடிப்படை அறிவு கூட இல்லாத எதிர்க்கறது.

சரி எதிர்க்கறானே, எதையாவது சாதிச்சானான்னா, இன்னி வரை தொண்டர்கள் உட்பட எல்லா மக்களையும் எல்லாத்துக்கும் அனாதைகளா, அடிமைகளா, பயத்தோட திண்டாட வெச்சி அவங்க மட்டும் குடும்பத்தோட சிறப்பா வாழ்வது தான் 60 ஆண்டு கால சாதனை. இப்படி ஒரு புக்குல ஒரு தண்டனை குரு த்ரோகத்துக்கு போட்டிருக்குன்னு தெரிஞ்சா அந்த புக்க நெருப்புல போட்டுடுவானுங்க இந்த பேட் பாய்ஸ். திட்டமிட்டு மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு.

நெறையா தேடித்தேடி நல்லவைகளைப் படிப்போம். ஆன்மீகம் வளர்ப்போம், தேசம் காப்போம். தலைமுறைகளுக்கு நல்ல பாதையை விட்டுச்செல்வோம்.

No comments: