Nov 30, 2009

ஜோக்ஸ்

மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணு நல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர்கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?

மனைவி: ஏங்க, என் கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா எதுங்க?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்

மனைவி: ஏங்க, சமையல்காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத் தானே.

மனைவி: நம்ம பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.
கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.

டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.

பிஸ்ஸா, பர்கர் கடைக்காரர்: சார், ஒங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச்சொல்வாங்க.

கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒரு ரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.

காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப் போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணு மாசம். மொதல்ல நீ தாலிய கட்டு.

போலீஸ் சர்தார்ஜி: வேகமா வண்டிய ஓட்டக்கூடாதுன்னு ஒனக்குத் தெரியாதா? எடு லைஸன்ஸ.
ட்ரைவர் சர்தார்ஜி: லைசன்ஸுன்னா என்னா, எப்டி இருக்கும்.
போலீஸ்: சதுரமா உன் போட்டோ ஒட்டி இருக்குமே, அது.
(ட்ரைவர் சர்தார்ஜி ஒன்னும் புரியாம ஒரு மூஞ்சி பாக்கற கண்ணாடிய எடுத்துத் தராரு போலீஸ் சர்தார்ஜி கிட்ட)
போலீஸ் சர்தார்ஜி: அட நீயும் போலீஸ் தானா, சாரிப்பா, தெரியாம நிறுத்திட்டேன். போங்க போங்க.

ஆபீஸ் பையன் தொப்பிய ஸ்டைலா திருப்பிப் போட்டுனு இருக்கறத பாத்த சர்தார்ஜி தானும் ஆசையா தன்னோட தலைப்பாகைய திருப்பி வச்சிக்கினாரு. சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவர பாத்த பக்கத்து வீட்டு சர்தார்ஜி: நீ ஆபிஸுக்கு போயிட்டு இருக்கியா, ஆபீஸ்லேந்து வந்துனு இருக்கியா?!!

ஒரு ஊர்ல சர்தார்ஜி நாட்டு வைத்தியர், அவரோட வ்யாபாரம் புதுசா வந்த ஒரு டாக்டரால படுத்துப் போச்சு. ரொம்ப யோசிச்சு புது டாக்டரோட வைத்தியம் சரியில்ல, வ்யாதி தீரலைன்னு நிரூபிச்சிடலாம்னு அவர்கிட்ட போயி, "டாக்டர், எனக்கு ருசியே தெரிய மாட்டேங்குது, எந்த மருந்து சாப்டாலும் சரியாகல" ன்னார். புது டாக்டர் அவர் அஸிஸ்டென்ட் கிட்ட, "அந்த 43 -ஆம் நம்பர் லேகியத்த எடு" ன்னார். அந்த லேகியத்த எடுத்து நம்ம சர்தார்ஜி வாயில் போட்டார். சர்தார்ஜி: அய்யய்ய, கருமம், கருமம், இது எருமை மாட்டு சாணிய்யா" ன்னார். புது டாக்டர், "ஒங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சிடிச்சு, பாத்தீங்களா நம்ம வைத்தியத்த" ன்னார். சர்தார்ஜி நொந்து போய் திரும்பி வந்துட்டார். கொஞ்ச நாள் கழிச்சு, திரும்பியும் புது டாக்டர்கிட்ட போயி, "ரொம்ப ஞாபக மறதியா இருக்கு டாக்டர், ஒண்ணும் தோண மாட்டேங்குது" ன்னார். புது டாக்டர் பாத்தார். அஸிஸ்டெண்ட் கிட்ட, "எடு அந்த 43 -ஆம் நம்பர் லேஹியத்த" ன்னார். அவ்ளோதான், சர்தார்ஜி உட்டார் ஓட்டம்.

நண்பர் வீட்டுக்கு வந்த சர்தார்ஜி கடும் மழைல மாட்டிக்கிண்டார். நண்பர் இரவு அங்கேயே தங்கிட்டுப் போக சொன்னார். கேக்காம ஓடிப்போன சர்தார்ஜி கொஞ்ச நேரத்துல நல்லா நனைஞ்சு போயி வந்தார். நண்பர்: எங்க போயிட்டீங்க நான் சொன்னத கேக்காம? சர்தார்ஜி: எப்டியும் நைட்டு வீட்டுக்குப் போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு இந்த மழைல. அதான் சொல்லிட்டு வந்தேன்

காபிக்கடையில் நண்பனிடம்: காபி ஆறிப்போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சு ரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.

தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

நண்பன் 1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர் எழுதற?
நண்பன் 2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.

ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர் 2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா

நண்பர் 1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர் 2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும் முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியதுதானே.
நண்பர் 1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல

பக்தை: fபாதர், என்னோட கிளிகள் எப்பப் பாத்தாலும் சினிமா பாட்டையே பாடினு இருக்குங்க, பக்திப் பாட்டே பாட மாட்டேங்குதுங்க.
Fபாதர்: என்னோட கிளிகள் எப்பவும் ப்ரேயர் தான். உன் கிளிகள என்னோடதோட பழக விட்டா கொஞ்ச நாள்ல உன்னோடதும் பக்திக்கு மாறிடும்.
(கொண்டாந்து விட்டாச்சு, Fபாதர் கிளிகள் ப்ரே பண்ணினு இருக்குங்க)
பக்தை கிளி: அழகிய அசுரா, அழகிய அசுரா, அத்து மீற ஆசை இல்லியா...
Fபாதர் கிளி: (நண்பன் கிளியிடம்) டேய், நம்ம ப்ரேயர்க்கு பலன் கெடச்சிடுச்சு.

பஸ்ஸுல மந்திரி, கலெக்டர்னு யார் ஏறினாலும் மொதல் சீட்டு ட்ரைவருக்குத் தான்.

மேல் உலகத்துல சாமி மொதல் ஆளுகிட்ட: நீ சின்ன வயசுல பண்ணின தப்புக்கு ஒனக்கு ஒரு எரிஞ்சு போன பொண்ண பரிசா தரேன்.
ரெண்டாவது ஆளுக்கு ஒரு அழகான பொண்ண பரிசா தரார்.
மொதல் ஆள்: என்னாங்க இப்டி பண்றீங்க.
சாமி: இது அந்த பொண்ணு சின்ன வயசுல பண்ணின தப்புக்கு

நண்பர் 1: எதுக்குடா உன் வீட்டுல மூணு நீச்சல் குளம் கட்டி இருக்க.
நண்பர் 2: ஒண்ணு ஜில் தண்ணில குளிக்கறவங்களுக்கு, இன்னொன்னு வெண்ணீர்ல குளிக்கறவங்களுக்கு, மூணாவது காலித்தொட்டி, நீச்சல் தெரியாதவங்களுக்கு.

ஒரு நேர்முகத்தேர்வு
கேள்வி கேட்பவர்: எலெக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்வி கேட்டவர்: யேய், யேய், யேய் நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....

காதலி: நாளைக்கு எனக்கு பொறந்த நாள், ஒரு ரிங் தரியா ப்ளீஸ்
காதலன்: லேண்ட் லைனுக்கா, செல்லுக்கா !!!

குண்டுப் பயணி: கண்டக்டர், எனக்கு ரெண்டு டிக்கெட் குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யா ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட்டு
பயணி: ம்... குண்டா இருகேன்ல, அதான். ஒனக்கேன் டிக்கெட்ட குடு.
கண்டக்டர்: இந்தா 2 டிக்கெட்டு, 21ஆவது சீட்டும், 37ஆவது சீட்டும் காலியா இருக்கு, போயி ஒக்காந்துக்க.

போலீஸ் 1: என் பையன் விவரம் தெரியாம திடீர்னு நேத்திக்குத் துப்பாக்கிய எடுத்து என் மனைவி நெத்திப் பொட்டுல சுட்டுப்புட்டான்.
போலீஸ் 2: அய்யய்யோ, என்னா ஆச்சு. எங்க இருக்காங்க, என்னாப்பா இப்டி சொல்ற.
போலீஸ் 1: ஏய் ஏய் ஏன் பயப்பட்ற, கண்ணாடில தானே ஒட்டி வெச்சிருந்தா, அது தூள் தூளா ஒடஞ்சு போச்சு போ.

மருமகள்: என் மாமியார் நேத்திக்கு கிணத்துல விழுந்து செத்துப் போயிட்டாங்க.
பக்கத்து வீட்டு மருமகள்: ம்.... எல்லார் வீட்லயும் தான் கிணறும் இருக்கு, மாமியாரும் இருக்காங்க. ம்... அதெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.
மருமகள்: எல்லாம் தன்னால விதிப்படி நடக்கும்னு கையக் கட்டிக்கிட்டு ஒக்காந்திருந்தா இருக்க வேண்டியது தான்.

எறும்பு சாக்பீஸ பாத்துட்டு ஒருத்தன்: இப்பத்தான் புரியுது, எதாவது கொலை நடந்துட்டா ஏன் போலீஸ் சாக்பீஸ்ல கோடு போட்றாங்கன்னு.

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.
ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.
நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.
ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.

ரயில்வே தேர்வாளர்: ரெண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனே என் தம்பியை வரச் சொல்லிடுவேன். அவன் இதுவரைக்கும் ஒரு ரயில் விபத்த கூட பாத்ததில்ல.

ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால் தோசை, ஒரு பொங்கல், ஒரு ஆமை வடை, ஒரு உளுந்து வடை, ...
ஜட்ஜ்:
ஷட் அப், ஷட் அப்
கைதி:
இல்ல, இல்ல ஒரு செவன் அப்

சர்வர்:
டெய்லி பார்சல் வாங்கினு போறீங்களே, இங்கயே சாப்ட வேண்டியது தானே சார்.
வந்தவர்:
டாக்டர் என்ன ஹோட்டல்ல சாப்ட கூடாதுன்னு சொல்லி இருக்காரு.

நண்பன் 1:
சண்டை போட்டுனே இருக்கியே, மனைவி செத்துட்டா என்னடா பண்ணுவ
நண்பன் 2:
பேச்சுலர்னு போட்டுப்பேன்

சர்தார் 1:
எதுக்குடா மெழுகுவத்தி ஏந்தி வைச்சிருக்க
சர்தார் 2:
கரண்ட் இல்ல
சர்தார் 1:
சரி, fபேனையாவது போடு
சர்தார் 2:
லூசு, போடாத, மெழுகுவத்தி அணைஞ்சுடும்

சர்தார்:
செக் புக் தொலைஞ்சு போச்சு சார்
மற்றவர்:
அட ராமா, எவனாவது கையெழுத்து போட்டு பணத்தையெல்லாம் எடுத்துடப் போறான்.
சர்தார்:
அப்டி ஒன்னும் நடந்துடாது, நான் ஏற்கனவே எல்லாத்துலையும் கையெழுத்த போட்டு வெச்சிட்டேன்

சர்தார் 1:
நாளைக்குப் படத்துக்குப் போறேன் வரியா
சர்தார் 2: முடிஞ்சா வரேன்
சர்தார் 1: முடிஞ்சுட்டா ஒண்ணும் புரியாது, ஆரம்பிக்கும்போதே வந்துடேன்

மூணு சர்தாருங்க ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு ட்ரெயின்ல ஏறினாங்க. இத பாத்த கூட வந்த 2, 3 வெள்ளைக்கார பயணிகளுக்கு ஒரே குழப்பம். எப்படி சமாளிக்கறாங்கன்னு பாக்கலாம்னு நினைச்சாங்க. டி.டி.ஆர் வரும்போது மூணு சர்தார்களும் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. டி.டி.ஆர் கதவ தட்டி டிக்கெட் கேட்டாரு. ஒருத்தர் மட்டும் கைய நீட்டி டிக்கெட்ட நீட்டினாரு. டி.டி.ஆர் செக் பண்ணிட்டுப் போய்ட்டாரு. வெள்ளக்காரர்களுக்கு ஏமாற்றமா போய்டுச்சு. திரும்பி வரும்போது அவங்களும் ஒரே ஒரு டிக்கெட் வாங்கிக்கிட்டாங்க. ஆனா இப்ப சர்தாருங்க டிக்கெட்டே வாங்கல. எப்படியோ மாட்டிக்கட்டும்னு ஏறியாச்சு எல்லாரும் வண்டில. டி.டி.ஆர் வராரு. வெள்ளக்காரங்க எல்லாரும் ஒடனே பாத்ரூம்குள்ள போய்ட்டாங்க. இப்ப ஒரு சர்தார் எழுந்து போயி பாத்ரூம் கதவ தட்டி "டிக்கெட், டிக்கெட்" னாரு. ஒரு வெள்ளக்காரர் மட்டும் கதவ திறந்து ஒரு டிக்கெட்ட நீட்டினாரு. நம்ம ஆளு அத வாங்கிட்டு வந்துட்டாரு.

ஒரு நண்பர் சர்தார்ஜிய சினிமா பாக்கக் கூட்டிட்டுப் போனார். படம் ஆரம்பிக்கும்போது "தேவர் பிலிம்ஸ்" னு போட்டாங்க. ஒடனே சர்தார்ஜி நான் இந்த சினிமா ஏற்கனவே பாத்துட்டேன்னு எழுந்து போயிட்டாரு.

செராக்ஸ் கடைக்காரர்: காப்பி அடிக்கக்கூடாதுன்னு ஒண்ணாங்க்ளாஸ்லேந்து சொல்லினு இருந்தாங்க எல்லாரும். எனக்கு என்னமோ அன்னிலேந்து இன்னி வரைக்கும் காப்பிதான் கை கொடுத்து வாழவைக்குது.

அப்பா: அழாதப்பா, அழாதப்பா ப்ளீஸ், அம்மாதானே அடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்ன மாதிரி என்னால தாங்கிக்க முடியல

டீச்சர்: பாக்டீரியா படம் வரைய சொன்னேனே, ஏன் வரையல நீ
பையன்: வரைஞ்சிட்டேன் மிஸ், ஆனா பாக்டீரியாதான் கண்ணுக்குத் தெரியாதே

அப்பா: என்னடா இவ்ளோ கம்மியா மார்க் வாங்கிருக்க
மகன்: பயங்கர விலைவாசிப்பா இப்பல்லாம், எதையுமே வாங்க முடியல

அப்பா: எங்கடீ சட்டைல வெச்சிருந்த 100 ரூபாயக் காணம்
அம்மா: நீங்க தானே புள்ள பரிச்சைக்குப் போறேன்னதுக்கு 10, 20 ன்னு எடுக்கக் கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்

டீச்சர்: ஏண்டா லேட்டு,
பையன்: ஸ்பீடாதான் டீச்சர் வந்தேன், வாசல்ல "பள்ளிப் பகுதி, மெதுவாகச் செல்லவும்" போட்ருந்துது. அதான் டீச்சர் லேட் ஆய்டுச்சு.

பையன் அப்பா குரலில் ஸ்கூலுக்குப் போன் போட்டு: ராமு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான் சார். அவனுக்கு ஒடம்பு சரியில்ல
ஸ்கூல்: நீங்க யாருங்க பேசறது.
பையன்: எங்கப்பாதான் பேசறேன்!!

அப்பா: என்னடா எக்ஸாம்ல கேள்வில்லாம் எப்டி இருந்துது.
மகன்: ஈஸியாதாம்ப்பா இருந்துது
அப்பா: நல்லா பண்ணியிக்கியா
மகன்: அதான் ரொம்ப கஷ்டம்ப்பா

சார்: ஒங்கிட்ட 100 ரூபா குடுக்கறேன். அதுல 25 ரூபாய திருப்பி வாங்க்கிகறேன். இப்ப உங்கிட்ட எவ்ளோ பாக்கி இருக்கும்.
பையன்: ஒண்ணும் இருக்காது சார்.
சார்: என்னடா, இந்த கணக்குக்கூடவா தெரியல.
பையன்: உங்களுக்குதான் சார் என்னப் பத்தி தெரியல
சார்: சரி, இப்ப உன் கிட்ட ஒரு ரூபா இருக்கு, ஒங்கப்பா கிட்ட ஒரு ரூபா கேக்கற. அப்ப ஒங்கிட்ட எவ்ளோ இருக்கும்
பையன்: ஒரு ரூபாதான் சார்
சார்: எப்டிடா
பையன்: ஒங்களுக்கு எங்கப்பா பத்தியும் தெரியல சார்

சார்: பயங்கரமான காட்டு மிருகங்கள் 10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலி சார்

சார்: கட்டபொம்மன எங்க தூக்குல போட்டாங்க
பையன்: கழுத்துல சார்

நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்த பேஷண்ட்டுக்கு பல்ஸ் கொறஞ்சுக்கிட்டே போகுது, என்ன பண்றது டாக்டர் இப்போ
டாக்டர்: அவங்க சொந்த காரங்கள ஒடனே பில்ல கட்ட சொல்லுங்க

டீச்சர் மற்றொரு டீச்சரிடம்: அந்தப் பையன தலைய சீவிட்டு வாடான்னு சொன்னா, யார் தலையன்னு கேக்கறாம்ப்பா.

அப்பா: ஒங்க சார் ஒங்களுக்கு எத்தன பாடம் சுமாரா நடத்துவாரு.
மகன்: அவர் எல்லாப் பாடத்தையுமே சுமாரா தாம்ப்பா நடத்துவாரு.

டீச்சர்: என்னடா கணக்குல பெரிய புலின்னு சொன்ன, சீரோ மார்க் வாங்கிருக்க.
பையன்: பதுங்கி இருக்கேன் டீச்சர்

டீச்சர்: நில நடுக்கம் எப்ப வரும்
பையன்: பூமிக்குக் குளுரும் போது வரும் டீச்சர்

டீச்சர்: அந்தமான் எங்க இருக்குன்னு சொல்லு
பையன்: எந்தமான் டீச்சர்
டீச்சர்: துடுக்காவா பேசற, பெஞ்ச்ல ஏறு.
பையன்: ஏறினாலும் தெரியல டீச்சர்

டீச்சர்: என்னது, தண்டவாளத்துல பஸ் போகுதா, எங்கடா போகுது.
பையன்: எங்க ஊர் லெவல் க்ராசிங்ல டீச்சர்.

டீச்சர்: பப்பூ எழுந்திரு, உங்கிட்ட ஒரு கேள்வி. தலைல எத்தன முடி இருக்கும்
பப்பூ: ஒரு லட்சம் டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒரு கேள்வி தானே டீச்சர் கேக்கறேன்னு சொன்னீங்க

மகன்: அப்பா, அப்பா, ஒங்களால கண்ண மூடிட்டே கையெழுத்துப் போட முடியுமாப்பா
அப்பா: ஓ முடியுமே
மகன்: இருங்க இங்கயே, ப்ராக்ரஸ் கார்ட கொண்டு வரேன்

கடைக்காரர்: பத்து பழம் பத்து ரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம் கொறைக்கக் கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டு பழம் எடுத்துக்கங்க

மகன்: அப்பா எனக்கு க்ளாஸ்ல போர்டே தெரிய மாட்டேங்குது
அப்பா: அடடே, என்னப்பா சின்ன வயசுலயே இப்டி சொல்ற, சரி நல்ல டாக்டரா பாத்து, போய் காமிக்கலாம்.
மகன்: அட, அது இல்லப்பா, முன்னாடி ஒருத்தன் ஒசரமா ஒக்காந்துருக்காம்ப்பா.

டீச்சர்: நீ வலது கைல எழுதுவியா, எடது கைல எழுதுவியா
பையன்: நான் பேனால தான் டீச்சர் எழுதறேன்.

டீச்சர்: பப்லு, ஒங்கப்பா என்ன வேல பாக்கறாரு.
பையன்: எங்கம்மா சொல்ற எல்லா வேலையையும் பாப்பாரு டீச்சர்

அப்பா: என்னடா போன தடவ 98 மார்க் வாங்கிட்டு, இந்த தடவ 2 மார்க் வாங்கிருக்க
மகன்: என்னப்பா நீ, போன தடவ என்னன்னா மிச்சம் ரெண்டு மார்க் எங்கன்னு கேட்ட, இப்ப என்னன்னா போன தடவ வாங்கினத கேக்கற.

கண்டக்டர்: யோவ் யோவ் இங்கெல்லாம் ஸ்டாப் கெடையாது, எறங்கு, எறங்கு
ஏறியவர்: ஏற மட்டும் கூடாது, எறங்கலாமாக்கும், ஸ்டாப்ல எறங்கிக்கறேன்.
(ஸ்டாப்ல எறங்கிட்டு திருப்பி ஏறிக்கறாரு)
கண்டக்டர்: என்னய்யா ஸ்டாப்ல எறங்கிக்கறேன்னு சொன்ன, திருப்பி ஏறிட்ட
ஏறியவர்: என்னய்யா ஸ்டாப்லயும் ஏறக்கூடாதா, பின்ன எங்க தான்யா ஏற.

அப்பா: உன் வயசுல நான் எப்டி நல்லவனா இருந்தேன் தெரியுமா
மகன்: யாருக்குத் தெரியும். சுவர்க்கத்துக்குப் போகும்போது பாட்டிகிட்ட கேக்கறேன்
அப்பா: பாட்டி நரகத்துக்குப் போயிருந்தா?
மகன்: நீ கேளு

டீச்சர்: என் க்ளாஸ்ல யாரும் தூங்க முடியாது.
பையன்: ஆமா கத்தினே இருந்தா எப்டி தூங்கறது.

டீச்சர்: காந்தி தாத்தா வாழ்நாள் முழுக்க சட்டையே போடல. இதுலேந்து என்ன தெரியுது.
பையன்: அவர் ஒடம்பு டீச்சர்

மகன்: அம்மா, அம்மா ஒரு ரூபா காயினை நான் முழுங்கிட்டேம்மா, வாம்மா டாக்டர்ட்ட போலாம்.
அம்மா: வேணாம், வேணாம், டாக்டர் 100 ரூபாய முழுங்கிடுவாரு.

Nov 10, 2009

சிறப்பாக வாழ்வது எப்படி?

http://www.puratchithalaivar.org/ சைட்ல போய் பாரு. இவர புடிச்சிருக்கோ இல்லியோ வாழும் வகையைத் தெரிஞ்சுக்கவாவது போய்ப் பாரு. தமிழ்லையும் இருக்கு.

Nov 2, 2009

M. K. T பாடல்கள் - 5

41. ஞான ஸபையில் தில்லைக் கானந் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே.
ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே (ஞான)
மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ்-செவ்
வானம் நிகர் சடையாட இள நகை
அரும்பும் மதிமுகமும் திரு விழி யழகுமாய் (ஞான)
நேமியுடன் முழங்காழி யணி
சாரங்க பாணி ம்ருதங்கமும்
நி ஸ த நி ப ம ரி க ம ரி ஸ ஸ்வர
நாத நாரதர் வீணையும்
ஸாம கான விநோதனே-சிவ
காம ஸ¤ந்தரி நாதனே
ஸவாமி அடிமையை யாள் ஸகல ஜகன்
நாதனே பாதமே தீம் ததீம் இசையுடன் (ஞான)

42. இது நிஜமா - நீ
இவ்வடிமைக்கும் காட்சி தந்தது நிஜமா (இது)
ஐயனோடு கைலாசபதி அறியாத ஆதிமூலமே (இது)
(நின்) நாம மொரு முறை சொல்ல என் நாக்கு தந்த பாக்கியமோ
நாயடிமையின் தாய் தந்தையர் தரு நாள் அனுக்ரஹமோ

43. மாநில வாழ்வு பெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே (மாநில)
வான் அமுதம் எழில் மான் விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மன சம்மதம் உண்டோ இல்லியோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ (மாநில)

44. தமியேன் பைந்தமிழ் அன்னையின் பால் அருந்திய தமிழ் பாலன்
தமிழ் வளர உயிர் வாழும் ஊழியன் என்றுலகறியும் (தமியேன்)
தமிழரசி அங்கயற்கண் உமையன்னையே தயவில்லையா
தமிழெனக்கும் எதில் அமர இடம் இல்லையா தகவில்லையோ
தருணம் வதேனயாலை சரணடைந்தேன் இனித்தாளே
வரமருளாய் சபை நடுவே வருன் எழி உந்தனைச்சாரும்

45. சந்த்ர சூரியர் போங்கதி மாறினும் வீழினும் நமக்கென்ன
இந்த இன்பமே சொந்தமதானால் வானுலகும் வேண்டாம் (சந்த்ர)
காதலரன்பைத் தடைசெய்ய உலகிலோர் கருவிக்கு வலிமையுண்டோ?
சாதலே வரினும் அதிலும் இருவரும் பிரிந்திடா உண்மை கொண்டோம்
இந்த உலகிலென் உடல் பொருள் ஆவி நீயே எனதுயிரும்
என்னுடல் உமக்கே சொந்தமிவ்வடியாள் பேசவும் அறியேனே

46. உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது (உண்மை)
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரினும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது (உண்மை)
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
என்னவந்தும் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல் (உண்மை)

47. உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ நாணமுறாளோ?
பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன் பிறவி
பாவனமானேன்
நம்மிருவர் உள்ளம் நிறை காதலிளங்கே
வளர் பிறை போல் வளர்ந்தோங்கவும்
இறைவன் தாள் பணிவோமே

M. K. T பாடல்கள் - 4

31. ஷ்யாமளா தேவி என் ஜீவப்ரியே (ஷ்யாமளா)
பாதை மேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ (ஷ்யாமளா)
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடுவாயே நீயே (ஷ்யாமளா)
ஆசை முகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ
ஆடி வந்து எந்தன் அன்பினை மேவி ஆனந்தம் தாராயோ (ஷ்யாமளா)

32. சிவபெருமான் க்ருபை வேண்டும் அவன்
திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
காம முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
ராமதாஸன் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

33. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ
அற்பப் பணப்பேய்ப் பிடித்தே
அறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய் மொழிவார்
பொருள் விரும்பி தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் உந்தன்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தையிதே அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே மாந்தர் (இவர்)
சிந்தை திருந்தி உய்ய குஹனே
உந்தன் திருவருள் புரியாயோ

34. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

35. தில்லையின் நாயகனே சிவகாம வள்ளி மனோஹரனே - என்
அல்லல் பிணிகள் அற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்
கனகசபேசன் திருநடம் காண விழைந்தேனே - என்
கனவிலும் வேறு நினைவின்றி கருத்தழிந்தேனே
தெள்ளிய நின் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்தோறும்
உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே (தில்லையின்)

36. உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில் (உனைக்)
அண்டத்திலே நில மண்டலமேல்
பல எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவ (உனைக்)
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே (உனைக்)
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே சரச கானத்தில் தேவ (உனைக்)

37. (வெள்ளிமலை) வள்ளலைப் பாடும் வாயால் அறுதலை பிள்ளையைப் பாடுவேனோ
எந்தன் ஸ்வாமியைப் பாடும் வாயால் தகப்பன் ஸ்வாமியைப் பாடுவேனோ
அம்மை அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப் பாடுவேனோ
வள்ளியின் கண்வலை வீசிலை வேடன் கள்ளனைப் பாடுவேனோ
அம்பிகை பாகன் எனும் அகண்ட சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும் தம்பியைப் பாடுவேனோ

38. வசந்த ருது மன மோஹனமே
மலர்ந்த மலரிதழ் மணம் கமழ் தென்றல் (வசந்த)
மல்லிகைப் பூங்கொடி குந்தள வராளி
மொய்த்த மலர் நகை குலுங்க விளங்கும்
நகைப் பைத்தியம் யதுகுலாம் போதிலும்
நனவிலும் கனவிலும் இதே சிந்தையா
சுருட்டி கொணர்ந்து கொடுத்தலுத்தார் போலவே
சொல்லுக்குப் பஞ்சம் இல்லை கொஞ்சும் குயிலின் இசை

39. வதனமே சந்த்ர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? (வதனமே)
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ? (வதனமே)
மின்னும் மோஹனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்
புன்னகை தவழ் பூங்கொடியாள்
புவன சுந்தரியோ? (வதனமே)

40. யானைத் தந்தம் போலே பிறைநிலா

M. K. T பாடல்கள் - 3

21. மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் (மனமே)
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரை புகழ்ந்து பாடாதே
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வேதனையில்
தடுமாறும் மனமோடு துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும் (மனமே)
விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலம் நீங்கும் (மனமே)

22. மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாள்வாய் (மனம்)
தனத்தையே தெய்வம் என நினைந்தாள்
சத்யவார்த்தை தன் உயர்வறியாளே (மனம்)
சாம்ப சதாசிவ சம்போ சிவ சங்கரி பரமேஸ்வரி
வீம்புடனே அஹங்காரம் கொண்டதால்
வேதனை கொண்டாள் பேதை இவள் - மனம்
வேதனை கொண்டாள் பேதையிடம் (மனம்)

23. மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பராமுகம் (மன்மத)
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான் மூன்று உலகிலும் (மன்மத)
என்னுடனே நீபேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கிடுமோ
உன்னை நயந்து நான் வேண்டியும் ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ மனம் கவர் (மன்மத)

24. மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன், யாரும் அறியாமல் (மறைவாய்)
கரையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ
பேதை சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ (மறைவாய்)
மருள்தீர் மெய்தவ ஞானப் பெரியோய் பேதை யான்
மெய்யாய் வடிவேல் அறிய நெஞ்சில் வஞ்சம் அறியேன் ஐயா
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர் களிமண் சுட்ட
கலம் போனால் என்ன செம்பொற் கலமே செய்து தருவேன் (மறைவாய்)

25. கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே (கவலையைக்)
நவரசங்களிலும் ஸ்ருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடெங்கும் இல்லையே (கவலையைக்)
புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி (கவலையைக்)

26. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற (ஒரு நாள்)
வெறு நாளாக்கிப் (நம் வாழ்நாளை) பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல் (ஒரு நாள்)
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம், இதைக்
கண்டு நெஞ்சில் மோகம்
கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை
கொள்ள வெகு வருத்தமே, முனிவர்
தொண்டுசெய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே அதனால் (ஒரு நாள்)

27. பவளமால் மலையை...

28. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை யேதுசெய்தேன் சுகுண (ராதே)
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ - நீ
எங்கு சென்றாலும் நானுன்னை விடுவேனோ ஓடாதே (ராதே)
கண்ணை யிழந்தவன் நீயோ நானோ
கண்ணா நீவேறு நான் வேறோ, எவன் சொன்னவன் (கண்ணை)
விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
விருப்பு வெறுப்பில் பரஞ்சோதி பொருளே இன்று (கண்ணை)

29. ராஜன் மஹராஜன்
திருவெற்றியூர் மேவும் திருவாளன் த்யாக (ராஜன்)
தேஜஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
ஸ்ரீவடிவுடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
மட்டிலா புகழ்மிகு பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை யாட்கொண்டு
பட்டினி பிணி மூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

30. சத்வ குணபோதன் சரணம் இது
சித்தமும் வீணே கலங்குவதேனோ (சத்வ)
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் (சத்வ)
கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மை காக்கும் தயாளன் (சத்வ)

M. K. T பாடல்கள் - 2

11. சொல்லு பாப்பா சொல்லு பாப்பா
சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா (சொல்லு)
வெல்லும் பகை ஒழிய சொல்லு பாப்பா
வெற்றிக் கொடி பறக்க சொல்லு பாப்பா
நல்ல தமிழ் வளர சொல்லு பாப்பா - மக்கள்
ஞான விலாசம் பெற சொல்லு பாப்பா (சொல்லு)
கைத்தொழில் ஓங்கும் என்று சொல்லு பாப்பா - மக்கள்
கஷ்டங்கள் தீருமென்று சொல்லு பாப்பா
வர்த்தகம் ஓங்குமென்று சொல்லு பாப்பா - மக்கள்
வாழும் விதங்களெல்லாம் சொல்லு பாப்பா (சொல்லு)
ஜாதி வித்யாசம் நீங்க சொல்லு பாப்பா - கோவில்
சன்னதி பொது என்று சொல்லு பாப்பா
போது மனத்துறுதி சொல்லு பாப்பா
ஓம் சக்தி என்றே நிதம் சொல்லு பாப்பா

12. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ (சுட்டும்)
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி (சுட்டும்)
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையோ உந்தன் நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரல் இனிமையடி
வாளைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் (சுட்டும்)

13. தீன கருணா கரனே நடராஜா நீலகண்டனே (தீன)
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனை யாண்ட நீலகண்டனே (தீன)
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌனகுருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே (தீன)
ஆதி அந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே (தீன)

14. த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம்தனில் தினம் (த்யானமே)
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் இரு
கண் மயங்கி சாவேனோ (த்யானமே)
லோகமும் அதிலே தோன்றும் இந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆகவும் (த்யானமே)

15. என்னுடல் தனில் ஒரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற்போல் இருந்தும்
என்னுடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண்ணுறங்காது உடல் இளைத்தும்
இன்னமுதூட்டி இன்பத்தாலாட்டி என்னை ஆளாக்கிய
பெருமைக்கு என்னிடம் இயற்கையில்
உங்கள் உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைமாறேது
என்னுயர் தவப்பயன் அம்மையே அப்பா
இம்மையில் எனது கண்கண்ட என்
அருட்கடவுள் அம்மையே அப்பா
எனக்கொரு நற்கதி உண்டோ என்னரும்
விதியா அம்மையே அப்பா
என் பிழை பொறுத்தருள்வீரோ
என்னுயிர் துணையாம் அம்மையே அப்பா
எங்கு சென்றுங்களைக் காண்பேன்
அம்மை அப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
எனதருமைத் தாயே தந்தையே

16. காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை
காண்பதும் எளிதாமோ மஹாத்மா (காந்தியை)
மாந்தரிலே ஞான யோகம் மேவும் தவ
மாந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா (காந்தியை)
அஹிம்சை தனிலே புத்தரவர்
ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்
அறுபகையும் வென்ற கர்ம சீலரவர்
நமது ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த (காந்தியை)
குழந்தை உள்ளமும் அன்பு கனிந்த மொழியும் கொண்டு
கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்
முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்
தகையப் பகையரும் கண்டஞ்சும் சுத்தன் - இனிமேல் (காந்தியை)

17. ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே
ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ (ஞானக்)
ஆன ப்ருந்தாவனமும் அதோ என் எதிரிலே
அனந்த கண்ணன் உருவம் அதோ தெரிவதாலே (ஞானக்)
வானவர் பணிந்திடும் மாதவன் பதம் தொழும்
அனந்தம் கிடைத்த பின்பு எது வந்தாலென்ன (ஞானக்)

18. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டு ரங்கன் அருள் இருந்தால் (இங்கும்)
பங்கஜ மலர் மது உண்ணும் வண்டு போல்
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு (இங்கும்)
உலகெல்லாம் மகிழவே தனது பொருள்
உடல் உயிர் உதவும் உதாரராம்
உலகிலே பொருளிலும் பற்றில்லா
உத்தம சத்குண வித்தகராம்
ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல் வரும்
துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இரவு பகல் ரங்கன் நினைவில் மனோலயமாம்
அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு (இங்கும்)

19. க்ருஷ்ணா முகுந்தா முராரே - ஜய (க்ருஷ்ணா)
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பரதாரி கோபாலா (க்ருஷ்ணா)
காளிய மர்த்தன கம்ச நிஷூதன
கமலாயத நயனா கோபாலா (க்ருஷ்ணா)
குடில குந்தளம் குவலய தள நீலம்
மதுர முரளீரவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
கோபி ஜன மன மோஹன வ்யாபக
குவலயதள நீலா கோபாலா (க்ருஷ்ணா)

20. மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் (மானிட)
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இக பர சுகம் தரும் கருணையாம் (மானிட)
கருவறையினுள் கிடந்து வெளியில் வருந்துயர் நினைந்தாலும் உடல்
கலங்குதே இங்கே திகில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இரு வினை வசமாம் இவ்வுடல் ஒரு நீர்க்குமிழி
இதனிடை உயர் நெறி அடையவே இறைவன் அருளை வேண்டி
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரிபுரமதில் ஒரு முறை கண்டு பணிந்து
ப்ரபோ பாண்டுரங்கா ஜய விட்டலா என்று பணிந்திட (மானிட)