Mar 9, 2018

பெண்கள் பாதுகாப்பு ?

சென்னை - மீண்டும் ஒரு கல்லூரிப் பெண் கழுத்தறுத்துக் கொலை

பெண்கள் குழந்தையாயிருக்கும் போது தகப்பன் பாதுகாப்பிலும், யுவதி கணவனின் பாதுகாப்பிலும், முதுமையில் மகனின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டியவர்கள், அவர்கள் சுதந்திரமாக விட்டு விடாதீர்கள் - மனு ஸ்ம்ருதி

இந்த வாக்கியம் இந்த  திருநாட்டில்  பக்கிகளால் நன்கு, சுயநலத்துடன் பரப்பி விடப்பட்டிருக்கிறது.  பெண்களும் வெளியே வந்து யூனியனாக சுதந்திரம், சுதந்திரம் என்று ஆரம்பித்து விட்டார்கள்.

செல்வந்தனுக்கு பத்து ரூபாய் பிக்பாக்கெட் திருடனிடம் பறி கொடுத்தால் கவலையில்லை.  உங்கள் விஷயமும் அப்படித்தான் என்றால், குஷ்புவின் கருத்துப்படி வாழ்பவர்கள் என்றால் சுதந்திரமாக இருக்கலாம், நாய், பூனைகளைக் கூட பாதுகாப்பாக பார்த்து, பார்த்து வளர்க்கிறார்கள்.  பெண் பிள்ளைப் பெற்று, இந்த கதி நேர்ந்தால், அல்லது இது போன்ற செய்திகளைக் கேட்கும் தாய்மையிலிருந்தால் இதன் விபரீதம் புரியும்.    நமக்கு நன்மை வேண்டுபவர்கள் சொல்வது சில சமயம் வருத்தமாகவும், இன்னும் வீம்பு கொள்ளச்செய்வதும் இயல்பே.   

திஹார் ஜயில்ல இருக்கறவன் ஸ்வீட் பாக்ஸ் பத்ரமா இருக்கனும்னா வீட்ல வெச்சிக்கோங்க, தெருவுல கொண்டு வந்து வெச்சா நாயும் நக்கி விட்டுப் போகும்னு திமிரா பேசற காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

இந்த சமூகம் இலக்கிய, காவியக் காதல், ஆன்மீக பாவ, புண்ணிய பயம், ஒழுக்கப் பாடங்களிலிருந்து வெளியேறி தலைமுறைகள் ஆகி விட்டன.     வீட்ல ஒருத்தர் பம்பரமா இருக்கனும், இன்னொருத்தர் அத சுத்தி விடும் கயிறா இருக்கனும், குடும்பம் உருப்படும்.

தற்போதைய செய்தியின் படி, காவல் துறையிடம் ஏற்கனவே கொடுத்த புகாரில் எச்சரித்து அனுப்பப்பட்டவன் இவன், தேடி வந்து பழி தீர்த்திருக்கிறான்.   நீ கராத்தே தெரிஞ்சிருந்து, துப்பாக்கி, கத்தி, , மிளகாய்ப்பொடியெல்லாம் வெச்சினு போக இதென்ன சண்டைக்குப் போறோமா, நம்ம தெருவுல நடக்கறோமான்னே தெரியல.  குழந்தை, கிழவியெல்லாம் கற்பழிக்கப்படுகிறார்கள்.  கடுமையான தண்டனைகள் கண்ணுக்கெட்டின தூரம் வரை இல்லை.  மிஞ்சிப் போனா ஜாதித் தலைவர்கள், பதவி, அரசியல், பணக்காரப் பின்னனி, மனித உரிமைக் கமிஷன்,  ஊர் பார்க்க வெளிச்சத்துல நடந்த ஒரு அநியாயத்துக்கு வருஷக் கணக்கில் கோர்ட் அலைச்சல்.  ஆறுதலும், 5-10 லட்சம் காசும் கிடைக்கலாம் லக்கிருந்தா.

படிச்சு, ஓரளவு சம்பளம், ஆனால் கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாதவன், குடும்பத்திற்குத் தெரிந்தவன், சொந்தம் இதையெல்லாம் தள்ளி விட்டு வீடு இருக்கா, டிபெண்டென்ஸ் யாருமில்லையா, பேரெண்ட்ஸ் வேலைக்குப் போறாங்களா, விசா இருக்கா, எனக்குத் தெரிஞ்சு குழந்தையைத் தவிர மற்ற எல்லாம் இருக்கான்னு பார்த்து பெண் கொடுக்க ஆரம்பித்து விட்டோம்.   லோன்ல டிகிரி படிச்சு, செட்லாறேன், செட்டில் ஆறேன் சொல்லி இப்படி ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கறதே 30-40 வயசுல தான் இப்பல்லாம்.  கொஞ்சம் பேருக்கு டப்பா குழந்தை,  அதிகம் பேருக்கு நண்டு மாதிரி அம்மா தொப்பையைக் கிழிச்சு குழந்தை, மீதி பேருக்கு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை.  கண்ணுக்கெட்டாத சந்த்ரன், இந்த்ரன் கிட்ட போறதுக்கெல்லாம் ராக்கெட் வந்தாச்சு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் குழந்தை வெளியே வர வழியில்லை.

பல தாரத் தலைவர், லிவ்விங் டுகெதெர், ஒரு மேல் ஜாதியாம், ஒரு கீழ் ஜாதியாம் கலப்புத் திருமணம் - இதெல்லாம் தான் இப்ப ட்ரெண்டு, ரோல் மாடல்.

அளவு தெரியாம நம்மூர்ல பாத்துப் பழக்கப்பட்ட ஆடைகள் அணிந்த காலம் போய், சைஸ் தெரியறா மாதிரி ட்ரெஸ், செத்த வீடு மாதிரி தலை விரி கோலம், கைலேந்து முட்டிக்கை வரை க்ளவுஸ் கறுத்துடக்கூடாது, மேனி பாதுகாப்புன்னு,  ஆனா கையில்லாத சட்டை, வேலைக்கு, படிப்புக்குன்னு வெளியூர்ல ஹாஸ்டல் வாசம், ஒரு கட்டுப்பாடும் இல்லாத சினிமாக்கள், செல்ஃபோன் வீடியோக்கள், லேட் நைட் ஷிஃப்ட்டுகள், பேலன்ஸ் பண்ணி ஓட்ட முடியாத வண்டில ஊட்டச்சத்து மிக்க உடல் வாகு, , ஆர்வத்தைத் தூண்டும் புதுப் பழக்கங்கள்.

பெண்கள் எங்கு கொண்டாடப்படுகிறாளோ அங்கு தேவதைகள் சந்தோஷிக்கிறார்கள் - மனு ஸ்ம்ருதி, 
எப்போது பெண் நகைகள் அணிந்து இரவில் தனியாக செல்கிறாளோ அதுவே உண்மையான சுதந்திரம் - காந்தி.  ஆனா இதெல்லாம் நடக்கறதில்ல இங்க.

சேத்துல இருந்து பன்றிக் கூட்டம் வந்தா, யானையும் ஒதுங்கித் தான் போகுது,  இதையெல்லாம் தாண்டி நீ உயரத்துல இருந்தா தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் சாதனை.  தீதும் நன்றும் பிறர் தர வாரா, 

1 comment:

Anonymous said...

very well said Seetha ji ! Let's pray God for the safety of our women. As you mentioned, no one should trigger others to do such activities ! People need to learn Self-Control in this world where everything is available in a just a click away in smart phone.

May God Save our people _/\_

Thank you for the post.