ரொம்ப டயர்டு, கீழ விழுந்து கால் கட்டு பிரிச்சு, இன்னும் ஆனா கால் சரியாகல. வீட்டிலயும் தொடர் வேலைப் பளுவால் வொய்ஃபும் செம டயர்டு. எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் வெச்சு பொண்ணும் டயர்டு. வீட்டுல எல்லாரையும் அலர்ட்டாவே வெச்சிருந்து 3 வயசுப் பையனும் டயர்டு. ரெண்டு நாள்ல கும்பகோணம் கோவிலெல்லாம் சுத்தி முடிக்க முடியாது. ஆனா ஏற்கனவே 2-3 தடவ நெறையா கவர் பண்ணியாச்சு கார் டூர்கள்ல. கெளம்பியாச்சு YBM ஸ்லீப்பர் ஏசி பஸ்ல.
16மார்ச், 2018, வெள்ளிக்கிழமை. பொதுவா எல்லா ப்ரைவேட் பஸ்ஸுமே எல்லா ஸ்டாப்லயும் லேட்டாதான் வரும். ஆனா பாருங்க, இந்த பஸ்ஸு, போகும் போதும் சரி, வரும் போதும் சரி. கரிக்டா டயத்துக்கு வந்துடுச்சி. குட் பாய்ஸ். சும்மாவே வெள்ளிக்கிழமை சென்னைலேந்து வெளில போறதுக்கும், ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரவும் கண்டபடி ரேட் போடுவாங்க ப்ரைவேட் பஸ்ல. இப்ப கவர்மெண்ட் பஸ்ஸும் ரேட் ஏத்திட்டாங்கள்ல, வீக் எண்டு மட்டும் ஓட்டிட்டிருந்த ட்ராவல்ஸ் எல்லாம் இப்ப எல்லா நாளும் ஓட்றாங்க. ஒரு குட்டி வாட்டர் பாட்டில், அடையார் ஆனந்த பவன் 5ரூபா ஸ்னாக்ஸ் பாக்கெட், பிஸ்கெட் குடுத்தாங்க.
திருக்கருகாவூர், திருவலஞ்சுழி, கும்பேஸ்வரர், திருவிசைநல்லூர், கோவிந்தபுரம் மொத்தமே இவ்ளோதான் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ல போனோம். டவுன் பஸ்ல. மிச்ச நேரம்லாம் ரெஸ்ட். திருப்பி ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ் ஏறி, திங்கள் கிழமை ஆபீஸ்க்கு வந்தாச்சு.
திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை சமேத மாதவி வனேஶ்வரர் (கருக்காத்தவள் உடனுறை முல்லை வன நாதர்). ஒரு ரிஷி பத்னியின் கர்ப்பத்தை சாபத்திலிருந்து காத்த நாயகியாதலால் இன்றும் கர்ப்பக்கோளாறுகளிலிருந்து காக்க வேண்டி கண் கண்ட தெய்வமாய் இங்கு வந்து பலர் வேண்டி, குழந்தைப் பேறு பெறுகின்றனர். பாடல் பெற்ற ஸ்தலம். சிவபெருமானாரின் பஞ்ச வன தலங்களில் ஒன்று.
1.முல்லை வனம் - திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -*அவளிவள் நல்லூர் 3.வன்னிவனம் - அரதைபெரும்பாழி
4.பூளை வனம் - திருஇரும்பூளை
5.வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
*அவளிவணல்லூர்
திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையார் குட்டியூண்டா இருக்கார். அவர் இருக்கற சன்னிதியோட ஜன்னல்கள் சிற்ப வேலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பாடல் பெற்ற ஸ்தலம். ப்ருஹன்னாயகி ஸமேத கபர்தீஶ்வரர். 12-12.30 க்குக் கோவிலெல்லாம் பூட்டிடறாங்க.
சாயந்தரம் கும்பேஸ்வரர் தர்ஶனம் முடிஞ்சு கடை வீதி சுத்தினோம், விண்டோ ஷாப்பிங். மரப்பாச்சி, மர பொம்மைகள், இரும்பு பாத்திரங்கள், நாழி, தோசைக்கல்லு, பல்லாங்குழின்னு எல்லாம் இருந்துது. ஒரு சுக்கும் வாங்கல நாங்க.
ஞாயிற்றுக்கிழமை காலம்பற திருவிசைநல்லூர் ஐயாவாள் வீட்டுக்குப் போய் தரிசனம் செய்தோம். அவர் பெயர் ஸ்ரீதர வெங்கடேச தீக்ஷிதர். பகவந்நாம போதேந்த்ராள், நெரூர் சதாசிவ ப்ரும்மேந்த்ராள் எல்லாம் சம காலத்தவர்கள் போல. இந்த ஐயாவாள் சதா ஈஶ்வர த்யானத்துலேயே இருக்கறவர். யாரையும், எதிலயும் பரமேஶ்வரனைப் பாக்கறவர். இவர் மூதாதையர்களுக்காக ச்ராத்தம் (திதி) பண்ற நாள். ப்ராஹ்மணர்களில் பித்ருக்களை த்யானம் செய்து அவர்கள் உணவருந்தி சென்ற பின்பே நாம் அன்று சாப்பிட வேண்டும். இவர் அன்னைக்கு அந்த ப்ராஹ்மணர்களுக்கு ஆசாரமாக சமைத்த உணவை வாசலில் வந்த தாழ்ந்த ஜாதிக்காரனுக்கு பரிமாறி, அவனை த்ருப்தி செய்து, சந்தோஷப்படுகிறார். வந்த ப்ராஹ்மணர்களும், ஊர்க்காரர்களும் உடனே கோபித்துக் கொண்டு தீட்டாகி விட்ட அவர் வீட்டில் உணவருந்த மறுத்து விடுகின்றனர். அவர் எவ்வளவு வேண்டியும் பயனில்லை. கடைசியில் கங்கையில் நீராடி வந்தாலே இந்த பாபம் கழியும், அதுவே ப்ராயஶ்சித்தம். அதன் பின்பே நாங்கள் உங்கள் இல்லத்திற்கு வருவோம் என்கின்றனர். இவர் இருப்பது கும்பகோணம் திருவிசைநல்லூர் காவிரிக்கரையில், பித்ரு கார்யங்களுக்கு அந்த நாள் (திதி) மிகவும் முக்யம். ஒரு தடவை பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய திதியைத் தவற விட்டால் அவ்வளவு பாபம் என்கின்றன ஶாஸ்த்திரங்கள். ஏற்கனவே லேட்டு, காசிக்குப் போய் கங்கைல குளிச்சிட்டுத் திரும்பி வந்து காலம் தவறாம ஶ்ராத்தம் பண்ண இனி வழியேயில்ல. பார்த்தார். ஸ்வாமி மேல பாரத்த போட்டுட்டு, கங்கா தேவிய ப்ரார்த்தனை செய்து ஒரு அஷ்டகம் (எட்டு ஶ்லோகங்கள்), கிணத்து மேல பலன். ஆமா, அவர் வீட்டு கொல்லைப்பக்கத்துல இருந்த கிணத்துலேந்து கங்கை ப்ரவாகமா பொங்கி, வீதியெல்லாம் ஓட ஆரம்பிச்சுட்டா. எல்லாருக்கும் இவரோட பக்தியோட ஶ்ரத்தையும், பகவானுக்கும் இவருக்கும் இடைப்பட்ட தொலைவும் புரிஞ்சுது. இன்னிக்கும் அந்த கிணத்துல நிறையா பேர் போய் அந்த தீர்த்தத்த தெளிச்சிண்டு வரா. அமைதியான க்ராமம், வீடு.
பாடல் பெற்ற ஸ்தலம். சௌந்தர நாயகி ஸமேத யோக நந்தீஶ்வரர். சூர்யனோட நிழலை வைத்து இந்தக் கோவில் ப்ராகார சுவற்றில் ஒரு கடிகாரம் அமைத்திருக்கிறார்கள். காலை ஆறு முதல் மாலை ஆறு வரை காண்பிக்க.
கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம்: இந்த பகவந்நாம போதேந்த்ராள் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தின் ஆசார்ய பரம்பரையில் வந்தவா. தினமும் லக்ஷக்கணக்கா ராம நாம ஜபம் பண்ணினவா. இவாளோட ப்ருந்தாவனம் யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி காலத்தால் மறைந்திருந்தது இந்த காவிரிக்கரையில். பஜனை சம்ப்ரதாயத்துல மும்மூர்த்திகள்ல ஒருத்தரா போற்றப்படும் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் இந்த இடத்தைக் கால் பட்டுடாம கண்டு பிடிக்க, கால்களைக் கட்டிக்கொண்டு ராம, ராமான்னு சொல்லிண்டு அங்க ப்ரதக்ஷிணம் பண்ணினா. ஒரு எடத்துல திரும்பி ராம, ராமன்னு அவருக்குப் பதில் கிடைச்சுது. அந்த இடம்தான் நாம இன்னிக்குத் தரிசனம் செய்த அதிஷ்டானம்.
16மார்ச், 2018, வெள்ளிக்கிழமை. பொதுவா எல்லா ப்ரைவேட் பஸ்ஸுமே எல்லா ஸ்டாப்லயும் லேட்டாதான் வரும். ஆனா பாருங்க, இந்த பஸ்ஸு, போகும் போதும் சரி, வரும் போதும் சரி. கரிக்டா டயத்துக்கு வந்துடுச்சி. குட் பாய்ஸ். சும்மாவே வெள்ளிக்கிழமை சென்னைலேந்து வெளில போறதுக்கும், ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரவும் கண்டபடி ரேட் போடுவாங்க ப்ரைவேட் பஸ்ல. இப்ப கவர்மெண்ட் பஸ்ஸும் ரேட் ஏத்திட்டாங்கள்ல, வீக் எண்டு மட்டும் ஓட்டிட்டிருந்த ட்ராவல்ஸ் எல்லாம் இப்ப எல்லா நாளும் ஓட்றாங்க. ஒரு குட்டி வாட்டர் பாட்டில், அடையார் ஆனந்த பவன் 5ரூபா ஸ்னாக்ஸ் பாக்கெட், பிஸ்கெட் குடுத்தாங்க.
திருக்கருகாவூர், திருவலஞ்சுழி, கும்பேஸ்வரர், திருவிசைநல்லூர், கோவிந்தபுரம் மொத்தமே இவ்ளோதான் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ல போனோம். டவுன் பஸ்ல. மிச்ச நேரம்லாம் ரெஸ்ட். திருப்பி ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ் ஏறி, திங்கள் கிழமை ஆபீஸ்க்கு வந்தாச்சு.
திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை சமேத மாதவி வனேஶ்வரர் (கருக்காத்தவள் உடனுறை முல்லை வன நாதர்). ஒரு ரிஷி பத்னியின் கர்ப்பத்தை சாபத்திலிருந்து காத்த நாயகியாதலால் இன்றும் கர்ப்பக்கோளாறுகளிலிருந்து காக்க வேண்டி கண் கண்ட தெய்வமாய் இங்கு வந்து பலர் வேண்டி, குழந்தைப் பேறு பெறுகின்றனர். பாடல் பெற்ற ஸ்தலம். சிவபெருமானாரின் பஞ்ச வன தலங்களில் ஒன்று.
1.முல்லை வனம் - திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -*அவளிவள் நல்லூர் 3.வன்னிவனம் - அரதைபெரும்பாழி
4.பூளை வனம் - திருஇரும்பூளை
5.வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
*அவளிவணல்லூர்
திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையார் குட்டியூண்டா இருக்கார். அவர் இருக்கற சன்னிதியோட ஜன்னல்கள் சிற்ப வேலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பாடல் பெற்ற ஸ்தலம். ப்ருஹன்னாயகி ஸமேத கபர்தீஶ்வரர். 12-12.30 க்குக் கோவிலெல்லாம் பூட்டிடறாங்க.
சாயந்தரம் கும்பேஸ்வரர் தர்ஶனம் முடிஞ்சு கடை வீதி சுத்தினோம், விண்டோ ஷாப்பிங். மரப்பாச்சி, மர பொம்மைகள், இரும்பு பாத்திரங்கள், நாழி, தோசைக்கல்லு, பல்லாங்குழின்னு எல்லாம் இருந்துது. ஒரு சுக்கும் வாங்கல நாங்க.
ஞாயிற்றுக்கிழமை காலம்பற திருவிசைநல்லூர் ஐயாவாள் வீட்டுக்குப் போய் தரிசனம் செய்தோம். அவர் பெயர் ஸ்ரீதர வெங்கடேச தீக்ஷிதர். பகவந்நாம போதேந்த்ராள், நெரூர் சதாசிவ ப்ரும்மேந்த்ராள் எல்லாம் சம காலத்தவர்கள் போல. இந்த ஐயாவாள் சதா ஈஶ்வர த்யானத்துலேயே இருக்கறவர். யாரையும், எதிலயும் பரமேஶ்வரனைப் பாக்கறவர். இவர் மூதாதையர்களுக்காக ச்ராத்தம் (திதி) பண்ற நாள். ப்ராஹ்மணர்களில் பித்ருக்களை த்யானம் செய்து அவர்கள் உணவருந்தி சென்ற பின்பே நாம் அன்று சாப்பிட வேண்டும். இவர் அன்னைக்கு அந்த ப்ராஹ்மணர்களுக்கு ஆசாரமாக சமைத்த உணவை வாசலில் வந்த தாழ்ந்த ஜாதிக்காரனுக்கு பரிமாறி, அவனை த்ருப்தி செய்து, சந்தோஷப்படுகிறார். வந்த ப்ராஹ்மணர்களும், ஊர்க்காரர்களும் உடனே கோபித்துக் கொண்டு தீட்டாகி விட்ட அவர் வீட்டில் உணவருந்த மறுத்து விடுகின்றனர். அவர் எவ்வளவு வேண்டியும் பயனில்லை. கடைசியில் கங்கையில் நீராடி வந்தாலே இந்த பாபம் கழியும், அதுவே ப்ராயஶ்சித்தம். அதன் பின்பே நாங்கள் உங்கள் இல்லத்திற்கு வருவோம் என்கின்றனர். இவர் இருப்பது கும்பகோணம் திருவிசைநல்லூர் காவிரிக்கரையில், பித்ரு கார்யங்களுக்கு அந்த நாள் (திதி) மிகவும் முக்யம். ஒரு தடவை பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய திதியைத் தவற விட்டால் அவ்வளவு பாபம் என்கின்றன ஶாஸ்த்திரங்கள். ஏற்கனவே லேட்டு, காசிக்குப் போய் கங்கைல குளிச்சிட்டுத் திரும்பி வந்து காலம் தவறாம ஶ்ராத்தம் பண்ண இனி வழியேயில்ல. பார்த்தார். ஸ்வாமி மேல பாரத்த போட்டுட்டு, கங்கா தேவிய ப்ரார்த்தனை செய்து ஒரு அஷ்டகம் (எட்டு ஶ்லோகங்கள்), கிணத்து மேல பலன். ஆமா, அவர் வீட்டு கொல்லைப்பக்கத்துல இருந்த கிணத்துலேந்து கங்கை ப்ரவாகமா பொங்கி, வீதியெல்லாம் ஓட ஆரம்பிச்சுட்டா. எல்லாருக்கும் இவரோட பக்தியோட ஶ்ரத்தையும், பகவானுக்கும் இவருக்கும் இடைப்பட்ட தொலைவும் புரிஞ்சுது. இன்னிக்கும் அந்த கிணத்துல நிறையா பேர் போய் அந்த தீர்த்தத்த தெளிச்சிண்டு வரா. அமைதியான க்ராமம், வீடு.
பாடல் பெற்ற ஸ்தலம். சௌந்தர நாயகி ஸமேத யோக நந்தீஶ்வரர். சூர்யனோட நிழலை வைத்து இந்தக் கோவில் ப்ராகார சுவற்றில் ஒரு கடிகாரம் அமைத்திருக்கிறார்கள். காலை ஆறு முதல் மாலை ஆறு வரை காண்பிக்க.
கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம்: இந்த பகவந்நாம போதேந்த்ராள் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தின் ஆசார்ய பரம்பரையில் வந்தவா. தினமும் லக்ஷக்கணக்கா ராம நாம ஜபம் பண்ணினவா. இவாளோட ப்ருந்தாவனம் யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி காலத்தால் மறைந்திருந்தது இந்த காவிரிக்கரையில். பஜனை சம்ப்ரதாயத்துல மும்மூர்த்திகள்ல ஒருத்தரா போற்றப்படும் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் இந்த இடத்தைக் கால் பட்டுடாம கண்டு பிடிக்க, கால்களைக் கட்டிக்கொண்டு ராம, ராமான்னு சொல்லிண்டு அங்க ப்ரதக்ஷிணம் பண்ணினா. ஒரு எடத்துல திரும்பி ராம, ராமன்னு அவருக்குப் பதில் கிடைச்சுது. அந்த இடம்தான் நாம இன்னிக்குத் தரிசனம் செய்த அதிஷ்டானம்.
No comments:
Post a Comment