Apr 21, 2009

பக்த மீரா பாடல் வரிகள் - 3

15. கிரிதர கோபாலா - பாலா

ச்யாமள சரீர கௌஸ்துப ஹார
பீதாம்பரதர ப்ரபோ முராரே (கிரிதர)

நந்த ஸுகுமார மனமோஹனாசார
ப்ருந்தாவனசர துளஸீஹார (கிரிதர)

கிரிதரகோபால கம்ஸவிசார
மீரா மானஸ ஸரோவிஹார (கிரிதர)


16. கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே

லீலைகள் செய்வான் பால கோபாலன்
நீலமுஹில் மணிவண்ணன், கண்ணன் (லீலைகள்)

கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன்
வானவர் வாழ மாநிலம் மீது
ஆநிறை மேய்த்த என் நாதன் (கண்ணன்)

ஆயர் மனையில் வெண்ணை திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே
மாயப் புன்னகை செய்து மயக்கும்
மீராவின் ப்ரபு தானே (கண்ணன்)

ப்ரேம நதியின் தீரமதனில்
மீரா ப்ரபுவும் வருவார்
திருமுகமதனில் குறுநகை மலர
அகமும் புறமும் நிறைவான் (கண்ணன்)

மானமளந்தான் காலை நினைந்தால்
மாயவினை அகலாதோ
கனியிதழ் கூறும் குழலிசை கேட்டால்
கல் மனமும் கரையாதோ (கண்ணன்)

மானினைக் காண மாமுனிவோர்கள்
மா கடல் தேடியே வந்தார்
ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
காண்கினும் என்று வியந்தார் - அம்மை
சங்கரன் வந்தார் இந்திரன் வந்தார்
சந்திர ஸூரியர் வந்தார்
அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார்

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
பேதை மீரா ஹ்ருதயம் தன்னில், அடியாள் மீரா
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமை தந்தான் (கண்ணன்)


17. ஸராசரம் உன்னை யாவும் தேடுமே
மறைகளும் மகிழ்ந்துன்னைப் பாடுமே - ஹே ப்ரபோ!
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதார விந்தமே

உன்னையே எனதுயிர்த் துணையென்று
உவந்ததென் தவறோ ஐயா
கனவிலும் உன்னையன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களைக் கருதியதும் உண்டோ
இரங்குவதரிதில்லையா மறந்திடலாகாதையா

இரவெல்லாம் கண்ணில் நீரருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரி என நாவும் கதறும்
இதயமும் பதறும் ஐயா

பாதமலரினில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
அடியாள் மீரா அன்றும் இன்றும் - உன்
அடைக்கலம் ஐயா


18. யதுநந்தனா கோபாலா ஜய ப்ருந்தாவன லோலா
ஜய தீன வத்ஸலா ஜய வேணு கான லோலா (யதுநந்தனா)

ஹே வரதா! அருள் தருவாய் வனமாலி
ஜய மீரா ப்ரபு கிரிதாரி

Apr 20, 2009

பக்த மீரா பாடல் வரிகள் - 2

7. அரங்கா உன் மஹிமையை அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே

யானை அன்று ஆதிமூலமே என்று ஓலமிடவும் ஓடிவந்தனையே
ஈனர்கள் சபையில் த்ரெளபதி கதற மானங்காத்தனையே ஆஹா நீ (அரங்கா)

ப்ரஹ்லாதனையே பாலனம் செய்ய நரஹரியாய் வந்த நாரணனே
தாரணியில் உன்னை அன்றி வேறே யார் துணை சங்க கதாதரனே (அரங்கா)


8. மறைந்த கூண்டிலிருந்து விடுதலை
பிறந்த பறவை விரைந்தோடுதே
நிறைந்த வெளி நீல வானிலே - தன்னை
மறந்து இறைவன் அருள் பாடுதே (மறைந்த)

(மடை) திறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணைக் கழல் நாடுதே
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடல் ஆடுதே (மறைந்த)


9. உடல் உருக, உள்ளம் உருக, ஊனெல்லாம் நெக்குருக
குழல் ஊதி இசை பாடி தேடி வந்து
கடல் வண்ணத் திருமேனி எழிற்கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த கண்ணா என் கிரிதரனே
படமுடியா துயரம் இந்தப் பேதை படவில்லையோ
பாவி உயிர் உன் பிரிவால் தேய்வதறிந்திலையோ

இடர்க் கடலில் மீராவைத் தவிக்க விட்டே
இன்று எங்கு சென்றாய் என்னரசே
எங்கு மறைந்தனையோ



10. ப்ருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
நந்தகுமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி அனுதினம் அம்சனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

மானினம் நாணிடும் மங்கையரோடு
மா தவரோரும் மயங்கிடுமாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேலெனச் செய்தான்
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

கானனம் அருங்கானனம் சென்று ஆநிறைக் கன்று
கருணை மாமுஹில் மேய்த்திட அன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு - வானோர்
பூமியை விரைந்ததும் உண்டு
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

போதம் இல்லா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதம் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)


11. எங்கும் நிறைந்தாயே - இன்று
எங்கு மறைந்தாயோ
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே
தயாளன் உனையே (எங்கும்)

மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் உனை அல்லாமல்
கண்ணும் மனமும் எதையும் நாடாதே
ப்ரபோ முராரே (எங்கும்)


12. மாமதுரை தரும் பாலா - எங்கள்
மாமணியே நந்தலாலா
த்வாரகை வாழும் தயாளா - என்றும்
மீரா ஹ்ருதய விலோலா (மாமதுரை)


13. ஜனார்த்தனா, ஜகன் நாதா, நீ என் நாதன் அன்றோ
சுராசுரர் பணி பாதா அருள் தராத காரணம் ஏதோ
காண் மலர் விடுவேனோ தாமதம் இனி தாளேனே (சுராசுரர்)

கண்ணனே நான் பட்ட பாடு கண்டு கல்லும் கரையும்
(நான்) கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன் கைநழுவ விடுவாயோ
கருணையே புரிவாயோ கதியிலேன் கிரிதாரி

த்வாரகாபுரி வாசா சோதனை போதாதோ
தரிசனம் செய்ய கதவுகள் திறவாதோ


14. எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே
யதுவீரனை நந்தகுமாரனை நினைந்து (எனது)

மலரே இரு விழி, பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இரு கரம், தாமரை மலரே திருவடிகள்
மந்தஹாஸமும் தவழ்ந்த சுந்தர முஹார விந்தனை (எனது)

அன்னை தந்தை பதியும் அவன்
அரும் துணை நவநிதியும் அவன்
(என்) இன்பமும் அழகும் அவனே
எழில் தரும் அணிகலன் அவனே
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைந்துருகும் (எனது)

பக்த மீரா பாடல் வரிகள்

1. கோபாலனே பாலகோபாலனே
கோபாலனே வேணுகோபாலனே
குஞ்சரிமாரில் கண்ட விலோலன
கோவிந்தனே தேவகி மைந்தனே
குவலய கனச்யாமளனே சுந்தர
முரளீதரவர மோஹன முரஹர
முகுந்தமாதவ பரமதயாபர

2. ச்யாமளவண்ணனே மாயவனே (கன)
மலர்தாமரை போலும் நயனனே
தாரகநாமனே தூயவனே (ஜய) - உயர்
த்வாரகை வாழும் அதிபனே (ச்யாமள)

சுரமாமுனியோரும் வந்தனை புரியும் - (ஹே ப்ரபோ)
திருநாரணனே பரிபூரணனே (ச்யாமள)

கருணாநிதியே எனது கதியே மாமதுரா பதியே
முரளீதரனே நந்தஸுதனே கோகுலநாயகனே - ஜய
மாதவனே உயர் யாதவனே
கோபியர் மாமன மோஹனனே (கனச்யாமள)

3. நந்தபாலா என் மணாளா இங்கு வாராய் கிரிதாரி
இந்த மாலை நீ சூடி அன்பு கூடி விளையாட இங்கு வாராய் என்னைப் பாராய் கிரிதாரி

முரளீ மோஹனா, ஹே முரளீ மோஹனா, மோஹனா, ஹே முரளீ மோஹனா,
கருணாலய சுந்தரா, முரளீ மோஹனா, மோஹனா
அபலை என்னையே அறியாப்பருவந்தன்னில்
அடிமை மிகுந்தனை அன்றே மறந்தாயோ
உன்னையல்லால் இன்பம் உண்டோ கிரிதாரி (நந்தபாலா)


4. காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் (காற்றினிலே)

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோஹன கீதம் - நெஞ்சினிலே
இன்பக் கனலையெழுப்பி
நினைவழிக்கும் கீதம் (காற்றினிலே)

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகனங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன் மாயப்பிள்ளை வேங்குழல் பொழி கீதம் (காற்றினிலே)

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலா விடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் (காற்றினிலே)


5. மறவேனே எந்நாளினுமே
கிரிதாரி உனதருளே (மறவேனே)

நஞ்சை நீ உண்டனையோ - இந்த
பஞ்சையைக் காத்தனையோ
ஒரு விந்தை புரிந்தனையோ (மறவேனே)

ஜய மீரா ப்ரபு கிரிதாரி


6. ஹே ஹரே! தயாநாதா! என் உயிர்க்கினிய மணவாளா
வேங்குழலின் நாதம் காதிலே ஆரமுதம் போலே பாயுதே

சன்னிதி தன்னை நானிகலேனே கருணாஸாகரா

என்னை வலிய வந்தாளும் இறைவா
கண்ணா என் ஜீவேச்வரா
உடையவா அடிமை யான் விடுவையோ
என் உடையவா உன் அடிமை யான் விடுவையோ

தேவகி பாலனே, தேவகி மைந்தனே, மீரா ப்ரபு மீரா ஜய
முகுந்தனே, மாயனே த்வாரகா நாதனே ஹே ப்ரபோ

Apr 16, 2009

நான் ஹிந்து, நான் ஹிந்துஸ்தானி-0

இந்த மண் எண்ணிலடங்கா புனிதர்களை பெற்று, பெருமை கொண்டு, இப்போது நம்மையும் சுமக்கிறது.
ஒவ்வொரு உயிரும் ஒரு வேலைக்காக இங்கு பிறக்கின்றன.
மனதை புத்தியால் சாரத்யம் செய்தவன் ஏதோ ஒரு விதத்திலாவது இந்த பூமியில் நல்ல அடையாளங்களை வருங்காலத்திற்கு விட்டுச்செல்கிறான்.
தினம் பலர் இறப்பதையும், பிறப்பதையும், வ்யாதி முதலான பல காரணங்களால் துன்பப்படுபவர்களையும் பார்த்தும் மனதை அடக்காமல், விஷயங்களில் அலையவிடுபவன் பூமிக்கு பாரமாக இருந்து, எவருக்கும் ப்ரயோஜனம் இல்லாமல், வாழும் போது கும்பலுடன் இருந்தாலும், சுமக்க ஆளின்றி பரிதாபமாக இறந்து, விரைவில் மறக்கவும்படுகிறான்.

ஸ்வர்க்கம், நரகங்களை நம்புபவர்களுக்கு ஒரு விஷயம். நாம் இங்கு செய்துவிட்டு போகும் செயல்கள், அதன் பலன்களை சொல்லிக்கொண்டாவது, நினைவில் வைத்துக்கொண்டாவது இருக்கும் கடைசி ஒருவன் இந்தப் பூமியில் உள்ளவரை நாம் செயல்களுக்குத் தகுந்தாற்போல் ஸ்வர்கத்திலோ, நரகத்திலோ இருப்போம் என்று நூல்கள் கூறுகின்றன.

நான் திருச்சி உருமு தனலக்ஷ்மி பள்ளியில் (U. D. College & School, தேவதானம், திருச்சி), பதினொன்னாவதுலேந்து, யு. ஜி வரைக்கும் படிச்சேன். அப்ப ராமர்னு ஒரு தமிழ் வாத்யார். அவர் சொல்வாரு, "ஸ்வர்க்கம், நரகம் இருக்குன்னு நம்பறவன் இங்க நல்லது பண்ணிட்டு செத்துப்போயி அப்படி ஒன்னு இல்லேன்னாலும் அதுனால ஒன்னும் நஷ்டம் இல்ல. நல்லதுதான். ஆனா அத நம்பாம இங்க கண்டத பண்ணிட்டு செத்துப்போயி, அப்படி ஒன்னு இருந்து மாட்டிக்கிட்டா ரொம்ப கஷ்டம்டா" ம்பாரு. நாம பயம் இல்லாட்டி ஒழுங்கா இருக்க மாட்டோம். தனிமனித ஒழுக்கம்ங்கறதெல்லாம் யாராவது பாத்துனு இருக்கும்போதுதான். சுத்தி ஒருத்தரும் பயப்படறா மாதிரி ஆள் இல்லேன்னா நாம வீட்ல, டி.வி. பாக்கற இடம், குளிக்கற இடம், சாப்பிடற இடம், ரோடு இன்னும் எல்லா எடத்துலயும் என்னென்னெல்லாம் பண்ணுவோம்னு நமக்கு மட்டுந்தான் தெரியும். அது பெரிய, மோசமான,... லிஸ்ட். எம்.ஜி.ஆர் மேல்நாட்டுல இருக்கறாமாதிரி நம்ம ஊர்லயும் ரோடுல ஆடோமேடிக் சிக்னல் போடனும்னு ஜப்பான்லேந்து இன்ஜினீயருங்களை கூட்டினு வந்தாராம். அவங்க ஒரு கூட்டு ரோடுல, (அதான் ஜங்க்ஷன்) சேந்து போக்குவரத்தப் பாத்துப் ப்ளான் பத்தி பேசினு இருந்தாங்களாம். நம்ம ஆளுங்க கொஞ்சம் பேர் அவங்க கிட்ட போயி, என்ன பண்ணினு இருக்கீங்க, பண்ணப்போறீங்கன்னு கேட்டாங்களாம். ஆட்டோமேடிக் சிக்னல் போடலாம்னு ப்ளான் பண்றோம். ஆளில்லாம அப்பப்ப சிக்னல் மாறும். நாம கவனிச்சு, நாமளா நின்னு போகனும்னாங்கலாம். நம்ம ஆளுங்க, "நிக்காம போனா" ன்னு கேட்டாங்களாம். ப்ளான் பண்ண வந்தவன் ஓடியேப்போயிட்டான்.

பயம். பயம் இருக்கணும். தேவை இல்லாம எல்லாருக்கும், எல்லாத்துலையும் தகுதி இல்லாம இடம் குடுக்கக்கூடாது. எல்லாருக்கும் எல்லாத்தையும் புரிய வைக்க முடியாது, சில பேர் புரிஞ்சுனு, நமக்கும் நாட்டுக்கும் நல்லதுன்னு பாலோ பண்ணுவான். மிச்ச பேர பயமுறுத்திதான் பாலோ பண்ண வைக்கணும். இங்க ரூல்ஸ் போடரவங்களுக்கே அது இல்லாம இருந்தாதான் நல்லதுன்னு தோணுது. அதான் ஊருக்குள்ள இருக்கறவன் கெடைக்கறதையும், ஏமாந்தவனையும் வெச்சு சொந்த மண்ணையும், சொந்த மக்களையும் சொரண்டறான். நம்ம இருக்கற நெலமைய, நம்ம கட்டமைப்புகள பாத்துனு இருக்கற பக்கத்து ஊர்க்காரன் படைய வெச்சு பார்டற சொரண்டறான். அமைப்புகளால நம்ம ஜாதி, மதம், படிப்பு, பலவீனங்கள அளந்து வளங்களையும் சொரண்டினே இருக்கான்.

நம்ம வெளி ஊர்ல இருக்கற நம்ம ஆளுங்களுக்கு குரல் கொடுத்துனு இருக்கோம். ஆனா நாம ஒரு பெரிய, பல சிறப்புகள், பெருமைகள் கொண்ட, பிரிக்க முடியாத ஒரு நாட்டோட பகுதிங்கறதுக்கு சண்டை வரும்போது ஒரு அமௌன்ட் அனுப்பறத தவிர வேற எந்த பங்களிப்பும் தேவையான அளவு குடுக்கறோமான்னு தெரியல. அதெல்லாம் அடிவாங்கறவனுக்குதான் தெரியும், புரியும், செய்வான். எந்த ஒரு படையெடுப்புளையும் நமக்கு வடக்க இருக்கறவங்கள தாண்டி, நம்ம கிட்ட வர்றதுக்குள்ள பல தடவ செத்து, செத்து பொழைக்கணும். ஒன்னு, ரெண்டு பேர் வந்து ஆண்டிருக்கலாம். ரொம்ப ரேர். அதான் நம்ம தனி மொழி, தனிநாடு, தனிமனுஷன், தனி இனம்ன்னு எல்லாத்தையும், எங்க போனாலும் தனியா, தனியா கேட்டுனு இருக்கோம். தனிச்சு இருக்கோம். பிரிக்க முடியாத எல்லா விஷயங்கள்லேந்தும் பிரிஞ்சு இருக்கணும்னு ப்ரியப்படறோம். ஊர் எரியுது, ஊர் வெள்ளத்துல மூழ்குது, ஊரு உருப்படுறது. ஊர் வளருது. ஆனா இது எதுலையும் நம்ம வீட்டுக்கு கவனம், பலன், பங்கு இல்ல. தமிழகம்னு இருந்தா பங்கு இருந்துருக்கலாம். இது தமிழ் நாடு இல்ல!! விசித்திரமான உருப்படாத சிந்தனை. நாட்டுக்குள்ள ஒரு நாடு. மத்த எல்லா ஊர்க்காரனும் எல்லா எடத்துக்கும் போறான், வரான், சத்தம் போடாம, சேந்து வளர்றான். அனுபவிக்கறான். நமக்கு மட்டும் எங்க போ, கூச்சல், கொழப்பம்தான் அடையாளம். இறையாண்மைக்கு எதிரா நெனைக்கறோம்னு ஒருத்தன் சொன்னாலே, இப்படிப் பண்ணிட்டோமேன்னு வெக்கப்படனும், கோவப்படனும். நமக்கு இறையும் இல்ல, இறையாண்மையும் இல்ல. என்ன பண்றது.

மன்னராட்சில இருந்த ஏகாதிபத்தியம், அடக்குமுறை, மோசமான மன்னர்கள், இப்படிப்பட்ட விஷயங்களுக்காக ஜனநாயக ஆட்சியக் கொண்டுவந்தோமாம். ஒரு நீண்ட அரச வம்சத்துல, மோசமான, மக்களுக்குப் பிடிக்காத மன்னர்கள விரல் விட்டு எண்ணிடலாம். அப்படி இருந்தாலும் அறிஞர்கள், பலம் வாய்ந்தவர்கள்னு ஒரு கூட்டம் தனியாவோ, பக்கத்துல இருக்கற இன்னொரு ராஜாவ துணைக்கு வெச்சினோ, அந்த மோசமான ராஜாவ தூக்கிடுவாங்க. இல்ல அவன் காலத்துக்கப்பறம் அவன் வாரிச நல்லவனா மந்திரிங்களும், மற்றவர்களும் கொண்டு வந்துடுவாங்க. இதெல்லாம் வரலாறுலயும், புராணங்கள்லையும் பாத்திருக்கோம்.

ஆனா இப்ப என்ன நடந்ததுனு இருக்கு. அதேதான். பலன்கள நெறையா பேர் அனுபவிக்கறாங்க. நெறையா ராஜா, நெறையா மந்திரி, அதே பரம்பரை ஆட்சிதான். ஒருத்தன் அடக்கினு இருந்தான். இப்ப நெறையா பேருக்கு பயந்துனு இருக்கோம். ஒவ்வொரு எலக்ஷன்லையும் பரவாயில்லங்கர திருடனுக்கு வாய்ப்பு குடுக்கறோம். தேர்தலுக்குப் பின்னாடி என்ன கெடைக்கும்னு யாருக்கும் தெரியாது. தேர்தலுக்கு முன்னாடியே கெடைக்கிறத, குடுக்கறவன்கிட்டேல்லாம் வாங்கிக்கறோம். எல்லாம் ஒரு கொடுக்கல், வாங்கல் அட்ஜெஸ்ட்மென்ட் தான்.
ராஜா மாதிரி பணக்காரங்க இல்ல இவங்க. ஏழையா இருக்கறவனும் செலவு பண்ணிதான் ஆகோணும். நெறையா செலவு பண்ணி, போட்டியெல்லாம் தாண்டி ஜெயிக்கறாங்க. அவங்க சாப்டு, மிச்சம் இருந்து அடுத்த வேளைக்கும் வெச்சினு, தலைமுறைகளுக்கும் வெச்சினு, இன்னும் அவங்களுக்கு வேண்டியவங்களுக்கு, உதவி பண்ணினவங்களுக்கு கொடுத்தது போக நமக்கு கெடைக்கணும். இவ்ளோ பேர், போறும்னு நெனைக்கறதுக்கு முன்னாடி ஆட்சி, போயிடலாம், தேர்தல் வந்துடலாம். ஜெயிச்சா ராஜா, இல்லாட்டி தாதா. காபி, சாராயத்துலேந்து எந்த விஷயத்தையும் அனுபவிக்காமலே இருக்கறது பெருசு இல்ல. அனுபவிச்சுட்டு விடறதுதான் ரொம்ப கஷ்டம்.

ஓட்டுப் போடறதோட நம்ம வேலைய பாக்கப் போய்டுவோம். ஆனா ஜயிச்சவனும், தோத்தவனும்? ப்ளான் பண்ணனும், சீட்டக் காப்பாத்திக்கணும், உழைக்கணும், சம்பாதிக்கணும், கடன் அடைக்கணும். எதிர்காலத்துக்கு சேத்துக்கணும். ப்ரமோஷன் வாங்கணும். பிச்சை எடுக்கறவன், பிளாட்பாரத்துல இருக்கறவன், படிக்காதவன், ஏழையா இருக்கறவன், பிற்படுத்தப்பட்ட வகுப்புல இருக்கவன், இப்படி நெறையா பேர அப்டியே இருக்க வெக்கணும். கூட்டம் நடத்தனும், சேந்து சாப்பிடனும், பேசணும், பேசினத சமாளிக்கணும், ... ரொம்ப கஷ்டம்பா. நம்ம நெனைக்கறா மாதிரி இல்ல ஜனநாயகம். காந்தி, காமராஜர் மாதிரி தலைவர்களுக்கு ஒன்னும் வேண்டாம். நேரு, எம்.ஜி.ஆர், மாதிரி தலைவர்களுக்கு இங்க சம்பாதிக்கனும்னு அவசியம் ஒன்னும் அவ்வளவா இல்ல. நாம நின்னாலும் இதே கதிதான். ஒரு ராஜா பணக்காரனா இருக்கான், அடக்கி ஆள்ரான்னு இன்னிக்கி நெறையா பேர உருவாக்கி இருக்கோம். சமையல்கட்டுல நெறையா சமையல்காரன் பூந்தா சாப்பாடு என்ன ஆகும்? நம்ம ஊர் மாதிரிதான் ஆகும்.

படிப்பறிவு இல்லாதவனுக்கும், விஷயம் தெரியாதவனுக்கும் படிப்பையும், விஷயங்களையும் சொல்லி குடுத்து அந்தந்த வேலைல ஒக்காத்தனும். இங்க ஒருத்தனுக்கு டிகிரில முதல் வகுப்புல பாஸ் பண்ணினா கெடைக்கற வேலைய, இன்னொருத்தனுக்கு ட்வெல்த்ல பாஸ் பண்ணி இருந்தா போறும்னு குடுக்கறோம். அவரு ட்வெல்த்ல எப்படி கஷ்டப்பட்டுப் பாஸ் பண்ணினாரோ, அப்படித்தான் வேலையையும் கத்துப்பாரு, செய்வாரு, அவ்ளோ தரம் தான் இருக்கும். வீட்டுக்குள்ள, தெருவுல, கோவில்ல, வேலை பாக்கற எடத்துல, அரசியல்ல எல்லா எடத்துலயும் யூனியன் வேற. மேல் அதிகாரி ஒருத்தர், அவர்பாட்டுக்கு இருந்துட்டு போக வேண்டியதுதான்.

நல்லதுக்கும், நாகரீகத்துக்கும் நாமதான் முன்னோடியா இருந்தோமாம். போற போக்கப்பாத்தா இனி நடக்கப்போற அவலங்களுக்கும், அனாகரீகங்களுக்கும், அவைகளால் வரும் அழிவுகளுக்கும் நாமதான் முன்னோடியா இருப்போம் போல.

த்யாகம் குறைந்து சுயநலத்தால் சொந்த வீட்லயே லாபம் பாக்க நெனைக்கறோம். ஆடும்போது ஆடவிட்டு, அசரும்போதுதான் ஆண்டவனும் அடிப்பான் போல. சக்கரம் சுத்தனும்ல