Nov 23, 2008

People who brought me here - P. N. Parasuraman

- இவரும் SSLC தான்.
- மெட்ராஸ்ல லிப்டன் டீ தொழிற்ச்சாலைல ஒரு சாதாரண தொழிலாளிதான்
- பாட்டு, கூத்து இப்படி ஜாலியாதான் இருந்தார்
- அங்கேயே ஒரு நல்ல குடும்பத்து நல்ல பொண்ண சைட் அடிச்சு, லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கொண்டார்
- ஒரு திடீர் திருப்பம், காஞ்சிபுரம் மகாபெரியவா அழைத்து, ஆசீர்வாதம் பண்ணி சமய சொற்பொழிவு மூலம் மக்களுக்குத் தொண்டு செய்ய சொன்னார். இவரும் பெரியவாள முழுசா நம்பி, தைரியமா ஆரம்பிச்சார்.
- வேலைக்கு கட் அடிச்சுட்டு, காலக்ஷேபம் பண்ற அளவுக்கு பிசி ஆயாச்சு. பல மாசம் முழு சம்பளம் வாங்கினதா தெரியல.
- வேதம், சாஸ்த்ரம், புராணம் படிச்சவா இருக்கற இடங்கள், படிக்காத, பாமர சேரி ஜனங்கள் இருக்கற இடங்கள் என மெட்ராஸ்லையும், தமிழ்நாட்டோட மற்ற இடங்கள்ளையும் திரும்ப, திரும்ப விரும்பிக் கூப்பிடும் அளவுக்கு வளர்ந்தாச்சு
- மகாபெரியவாளால 'சொல்லின் செல்வன்' -னு ஆரம்பிச்சு பல பெரியவர்கள் பாராட்டிக் கொடுத்த பட்டங்கள்
- வீட்ல பல மொழிகள்ல ஒன்னர லக்ஷத்துக்கும் மேல புஸ்தகங்கள்
- அயராத படிப்பு, எழுத்து
- நூற்றாண்டு கண்ட பிரபல தமிழ்ப் புத்தக வெளியீட்டு நிறுவனம் அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் புஸ்தகம் எழுத ஆரம்பித்து வெளி வந்த உபயோகமான நூல்கள் பல. மகாபெரியவாள் வாழ்க்கை வரலாறு, விதுர நீதி, சனத்சுஜாதீயம், வீபூதி ருத்ராக்ஷ மஹிமை, வைராக்ய சதகம், சித்தர்கள் சரித்திரம், அஷ்டாவக்ரர் உபதேசங்கள் என்பன அவற்றுள் சில.
- இது தவிர பல வாராந்திர, மாத இதழ்களில் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்ற தொடர்கள்
- தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் பல தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி, தொடர் சொற்பொழிவுகள்

என்னோட சித்தப்பா:
சிம்ப்பிளா இருப்பார் இன்னிக்கும், யாரும் சமயம் சம்பந்தமான எந்த சந்தேகத்துக்கும், குழப்பத்துக்கும் தெளிவான தீர்வு கிடைக்கத் தொடர்பு கொள்ளலாம்:
முகவரி:
திரு. பி. என். பரசுராமன்
1, எல்.. ஜி காலனி,
அருணாசலேஸ்வரர் கோயில் முதல் தெரு,
புது வண்ணாரப்பேட்டை,
சென்னை - 81

No comments: