Apr 1, 2020

கொரோணா ஸ்பீட் ப்ரேக்... விட்டுப்போன தர்மங்களாலா ?

தடி எடுத்தவன் தண்டல் காரன்...

குடும்ப அமைப்பு கெட்டுப்போய் பல காரணங்கள் கூறி சிறு தனிக்குடும்பங்களாய்ச் சிதறிப்போனோம்.... வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், மிக்ஸி, க்ரைண்டர், ஏசி போன்ற உற்பத்தியாளர்களுக்குத்தான் லாபம் நெறையா விற்பனையாகும்:) பெரியோர்கள் வழிகாட்டுதல், ஆலோசனைகள், பாதுகாப்பு, விட்டுக்கொடுத்தல், குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா போன்ற உறவுகளிடமிருந்து கிடைக்க வேண்டிய தர்ம, ஒழுக்கக் கதை உருவிலான உபதேசங்கள் அற்றுப்போயின... ஒவ்வொரு பொழுதையும் யோசனை, திட்டங்கள், பயம், ஓட்டத்திலேயே செலவு செய்கிறோம்... நோக்கமில்லாத, சமூகப் பங்களிப்பு, பொறுப்பற்ற வாழ்க்கை

வேதங்களும், புராண, இதிஹாஸங்களுமே சாத்திரங்களை நமக்குக் காட்டிய ரிஷிகளின் படைப்புகள்... பெண் கிடைக்கவில்லை, மதிப்பில்லை, வருமானமில்லை போன்ற காரணங்களால் இவைகளைப் படித்து, காத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மடங்கள், குருமார்கள், சாஸ்திரிகள், பண்டிதர்கள் அளவு குறையத் தொடங்கியது.  இருப்பவர்களிலும் பலர் வியாபாரமாக்கி விட்டனர் வேதமே பயப்படும் அளவிற்கு...

உணவு, தங்குமிடம், நீர் மோர், பானகம், சுமை தாங்கிகள் என இலவசமாக இருந்த அத்தியாவசிய தர்மங்கள் காசுக்கு விற்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.  சுவை, சுகாதாரமாக வயிறார கிடைக்க வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக சம்பாதிக்க வேண்டுமளவிற்கு விலையாகிப் போனது ஹோட்டல்கள்...

அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில்கள், நல்லொழுக்கங்கள், தன்னம்பிக்கை ஒரு பாடமாகக் கூட இல்லாமல், இஷ்டப்படாத படிப்புகள் திணிக்கப்படுகின்றன.... கல்விக்கூடங்கள் :(

இயற்கை வளங்களான மலை, காடு, மிருகங்கள், ஆறு முதலான நீர்நிலைகளோடு இசைந்து வாழாமல் எதிரிகள் போல கற்பழிக்கப்பட்டுப் போயின...

கல்வி, பாதுகாப்பு, ஒழுக்கம் இருக்க வேண்டிய அரசாங்கங்கள் அதிகாரம், ஊழல் பெருகி அழுகிப்போயின

தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று குடிகளும் இலவசங்கள், போதை வஸ்துக்கள், கூத்து, கவர்ச்சி என புத்தி கெட்டு ஆட்டு மந்தைகள் போல மேய்க்கப்படுகின்றனர்.

மருத்துவம், மளிகை, ரேஷன் கடை, தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு தலங்கள் என எதையும் விட்டு வைக்காமல் தகுதி இல்லாததையே தகுதியாக வகுத்துக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்...

வெச்சான் வெடி கொரோணா எனும் பெயரில்... நம்மை பரிசோதனை செய்து கொள்வோம்.  தனி மனிதனாக, குடும்ப, சமூக, வேலை செய்யும் பொறுப்புகளில் கடைபிடிக்கவேண்டிய, தறி கெட்டு விட்டு விட்ட அடிப்படை தர்மங்கள், ஒழுக்கங்களையாவது தூசி தட்டி, கண்ணைக்குத்தின சாமியிடம் மன்னிக்க வேண்டி அவனையே பணிந்து மீண்டும் விழித்துக்கொள்வோம்...

No comments: