ஹிந்து மத ஆசாரங்கள்...
நெடிய அனுபவம், அறிவியல் பூர்வமான வேத காலத்து ரிஷிகள் வருங்கால சந்ததியினருக்கும், உலக நன்மைக்கும் என வகுத்துத்தந்தவைகளையும் இடைக்கால அட்டூழியங்களில் மொத்தமாக சேர்த்து மூட நம்பிக்கைகள், நாகரீக நடைமுறைகளுக்கு ஒத்துவராது, உலகம் ஸ்பீடா போய்ட்டிருக்கு, இதெல்லாம் பைசா ப்ரயோஜனமில்லாதவைன்னு, வழிகாட்டுதல் இல்லாமையால் பல காரணங்கள் கொண்டு ஒதுக்கி எறிந்து விட்டு பணமே நோக்கமாக ஓடினோம்....
இன்னும் ஒரு தலைமுறை கூட ஆகவில்லை.... போட்டான் ஆண்டவன் கொரோணான்னு ஒரு ஸ்பீடு ப்ரேக்.... சுயபரிசோதனை, குடும்ப, சமூக கட்டமைப்பு, விட்டு விட்ட தர்மங்கள்னு ஒரு ரீகேப் செய்து கொண்டு உருப்படவேண்டிய தருணம்...
உலகமே இப்போது இந்தியாவின் ஒழுக்கம், தூய்மை, பழக்க வழக்கங்களை உணர்ந்து ஆசாரமாகக் கொள்ளத்தொடங்கி உள்ளது...
இப்ப சொன்னா எல்லாருக்கும் எளிதில் புரியும், பதியும்...
1. எத சாப்டாலும், குடித்தாலும் நல்லா வாய் கொப்பளிக்கனும்
2. அடிக்கடி கை அலம்பனும்
3. எழுந்ததும், படுக்கும் முன், சாப்பிடும் முன், பின், வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தா கை, கால், முகத்தைக் கழுவனும்
4. ஒருவரை ஒருவர் தொட்டுக்கவோ, பட்டுக்கவோ கூடாது
5. கூழானாலும் குளித்துக் குடிக்கனும்
6. கந்தையானாலும் கசக்கிக் கட்டனும்
7. காலை, முடிந்தால் மாலையும் தலைக்கும் சேத்து தண்ணீரில் (வென்னீரில் இல்லை) குளிக்கனும்
8. ஒருவர் தட்டு, டம்ளர், படுக்கை, செருப்பை மற்றவர் பயன்படுத்தக்கூடாது
9. நீரில்லா நெற்றி பாழ்: உடலில் 12 இடங்களில் திருநீறு குழைத்துப் பூசனும், தேவையில்லா வியர்வை உரிஞ்சப்படும், நீர் சம்பந்தமான வியாதிகள் குறையும்.
10. ஆலும் வேலும் பல்லுக்குறுதி: இருமுறை பல் துலக்கனும், இரவு பல் துலக்கி விட்டு எதையும் குடிக்கவோ, திங்கவோ கூடாது
11. நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு: உணவை நன்கு பிசைந்து, கடித்து, ரொம்ப திடமாகவும் (புண்ணாக்கு மாதிரி), திரவமாகவும் இன்றி உண்ணனும்
12. நீரின்றி அமையாது உலகு: நீரை தேவையான அளவு எழுந்து போய், எடுத்துக் குடிக்கவும். அப்பத்தான் கொஞ்சமாவது நடப்போம். சொம்பு, பாட்டில்களில் பக்கத்துலயே வெச்சிக்கக்கூடாது. குடிக்கறத கொஞ்சம் அதிகமா குடிச்சா ஆடோமேடிக்கா பாத்ரூம் போக கொஞ்சம் நடப்போம்
13. தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே: நீர் நிலைகளில் சோப்பு, ஷாம்பு என்று பாழ்படுத்தக்கூடாது.
14. விடிகாலை, சூர்யோதயம், அஸ்தமனம், இரவு, சாப்பிடும் போது இறை நினைவு, நல்ல திட்டங்கள், நினைவுகளோடு இருக்கனும்
15. தினமும் யாராவது ஒரு முன், பின் தெரியாதவருக்கு உணவிட்டு உண்ணனும். உணவை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது.
16. அன்றாடம் ஊரில் இருக்கும் ஆலயங்களுக்கு நடந்து செல்வது, ப்ரதட்சிணம் செய்வது நடைப்பயிற்சிக்காக.
17. எந்த ஒரு செயலும் இன்னொருவருக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.
18. எழுந்ததும் டூ டாய்லெட், படுத்ததும் தூக்கம், கலரில்லாத மூச்சா நம்ம உடம்பு நல்லாயிருக்குங்கறதுக்கு எளிய அடையாளங்கள்.
No comments:
Post a Comment