Apr 1, 2020

கொரோணா ஸ்பீட் ப்ரேக்... விட்டுப்போன தர்மங்களாலா ?

தடி எடுத்தவன் தண்டல் காரன்...

குடும்ப அமைப்பு கெட்டுப்போய் பல காரணங்கள் கூறி சிறு தனிக்குடும்பங்களாய்ச் சிதறிப்போனோம்.... வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், மிக்ஸி, க்ரைண்டர், ஏசி போன்ற உற்பத்தியாளர்களுக்குத்தான் லாபம் நெறையா விற்பனையாகும்:) பெரியோர்கள் வழிகாட்டுதல், ஆலோசனைகள், பாதுகாப்பு, விட்டுக்கொடுத்தல், குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா போன்ற உறவுகளிடமிருந்து கிடைக்க வேண்டிய தர்ம, ஒழுக்கக் கதை உருவிலான உபதேசங்கள் அற்றுப்போயின... ஒவ்வொரு பொழுதையும் யோசனை, திட்டங்கள், பயம், ஓட்டத்திலேயே செலவு செய்கிறோம்... நோக்கமில்லாத, சமூகப் பங்களிப்பு, பொறுப்பற்ற வாழ்க்கை

வேதங்களும், புராண, இதிஹாஸங்களுமே சாத்திரங்களை நமக்குக் காட்டிய ரிஷிகளின் படைப்புகள்... பெண் கிடைக்கவில்லை, மதிப்பில்லை, வருமானமில்லை போன்ற காரணங்களால் இவைகளைப் படித்து, காத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மடங்கள், குருமார்கள், சாஸ்திரிகள், பண்டிதர்கள் அளவு குறையத் தொடங்கியது.  இருப்பவர்களிலும் பலர் வியாபாரமாக்கி விட்டனர் வேதமே பயப்படும் அளவிற்கு...

உணவு, தங்குமிடம், நீர் மோர், பானகம், சுமை தாங்கிகள் என இலவசமாக இருந்த அத்தியாவசிய தர்மங்கள் காசுக்கு விற்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.  சுவை, சுகாதாரமாக வயிறார கிடைக்க வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக சம்பாதிக்க வேண்டுமளவிற்கு விலையாகிப் போனது ஹோட்டல்கள்...

அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில்கள், நல்லொழுக்கங்கள், தன்னம்பிக்கை ஒரு பாடமாகக் கூட இல்லாமல், இஷ்டப்படாத படிப்புகள் திணிக்கப்படுகின்றன.... கல்விக்கூடங்கள் :(

இயற்கை வளங்களான மலை, காடு, மிருகங்கள், ஆறு முதலான நீர்நிலைகளோடு இசைந்து வாழாமல் எதிரிகள் போல கற்பழிக்கப்பட்டுப் போயின...

கல்வி, பாதுகாப்பு, ஒழுக்கம் இருக்க வேண்டிய அரசாங்கங்கள் அதிகாரம், ஊழல் பெருகி அழுகிப்போயின

தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று குடிகளும் இலவசங்கள், போதை வஸ்துக்கள், கூத்து, கவர்ச்சி என புத்தி கெட்டு ஆட்டு மந்தைகள் போல மேய்க்கப்படுகின்றனர்.

மருத்துவம், மளிகை, ரேஷன் கடை, தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு தலங்கள் என எதையும் விட்டு வைக்காமல் தகுதி இல்லாததையே தகுதியாக வகுத்துக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்...

வெச்சான் வெடி கொரோணா எனும் பெயரில்... நம்மை பரிசோதனை செய்து கொள்வோம்.  தனி மனிதனாக, குடும்ப, சமூக, வேலை செய்யும் பொறுப்புகளில் கடைபிடிக்கவேண்டிய, தறி கெட்டு விட்டு விட்ட அடிப்படை தர்மங்கள், ஒழுக்கங்களையாவது தூசி தட்டி, கண்ணைக்குத்தின சாமியிடம் மன்னிக்க வேண்டி அவனையே பணிந்து மீண்டும் விழித்துக்கொள்வோம்...

கொரோணா ஸ்பீடு ப்ரேக்.... சுய பரிசோதனைக்கான தருணம்

ஹிந்து மத ஆசாரங்கள்...

நெடிய அனுபவம், அறிவியல் பூர்வமான வேத காலத்து ரிஷிகள் வருங்கால சந்ததியினருக்கும், உலக நன்மைக்கும் என வகுத்துத்தந்தவைகளையும் இடைக்கால அட்டூழியங்களில் மொத்தமாக சேர்த்து மூட நம்பிக்கைகள், நாகரீக நடைமுறைகளுக்கு ஒத்துவராது, உலகம் ஸ்பீடா போய்ட்டிருக்கு, இதெல்லாம் பைசா ப்ரயோஜனமில்லாதவைன்னு, வழிகாட்டுதல் இல்லாமையால் பல காரணங்கள் கொண்டு ஒதுக்கி எறிந்து விட்டு பணமே நோக்கமாக ஓடினோம்....

இன்னும் ஒரு தலைமுறை கூட ஆகவில்லை.... போட்டான் ஆண்டவன் கொரோணான்னு ஒரு ஸ்பீடு ப்ரேக்.... சுயபரிசோதனை, குடும்ப, சமூக கட்டமைப்பு, விட்டு விட்ட தர்மங்கள்னு ஒரு ரீகேப் செய்து கொண்டு உருப்படவேண்டிய தருணம்...

உலகமே இப்போது இந்தியாவின் ஒழுக்கம், தூய்மை, பழக்க வழக்கங்களை உணர்ந்து ஆசாரமாகக் கொள்ளத்தொடங்கி உள்ளது...

இப்ப சொன்னா எல்லாருக்கும் எளிதில் புரியும், பதியும்...

1. எத சாப்டாலும், குடித்தாலும் நல்லா வாய் கொப்பளிக்கனும்
2. அடிக்கடி கை அலம்பனும்
3. எழுந்ததும், படுக்கும் முன், சாப்பிடும் முன், பின், வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தா கை, கால், முகத்தைக் கழுவனும்
4. ஒருவரை ஒருவர் தொட்டுக்கவோ, பட்டுக்கவோ கூடாது
5. கூழானாலும் குளித்துக் குடிக்கனும்
6. கந்தையானாலும் கசக்கிக் கட்டனும்
7. காலை, முடிந்தால் மாலையும் தலைக்கும் சேத்து தண்ணீரில் (வென்னீரில் இல்லை) குளிக்கனும்
8. ஒருவர் தட்டு, டம்ளர், படுக்கை, செருப்பை மற்றவர் பயன்படுத்தக்கூடாது
9. நீரில்லா நெற்றி பாழ்: உடலில் 12 இடங்களில் திருநீறு குழைத்துப் பூசனும், தேவையில்லா வியர்வை உரிஞ்சப்படும், நீர் சம்பந்தமான வியாதிகள் குறையும்.
10. ஆலும் வேலும் பல்லுக்குறுதி: இருமுறை பல் துலக்கனும், இரவு பல் துலக்கி விட்டு எதையும் குடிக்கவோ, திங்கவோ கூடாது
11. நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு: உணவை நன்கு பிசைந்து, கடித்து, ரொம்ப திடமாகவும் (புண்ணாக்கு மாதிரி), திரவமாகவும் இன்றி உண்ணனும்
12. நீரின்றி அமையாது உலகு: நீரை தேவையான அளவு எழுந்து போய், எடுத்துக் குடிக்கவும். அப்பத்தான் கொஞ்சமாவது நடப்போம். சொம்பு, பாட்டில்களில் பக்கத்துலயே வெச்சிக்கக்கூடாது. குடிக்கறத கொஞ்சம் அதிகமா குடிச்சா ஆடோமேடிக்கா பாத்ரூம் போக கொஞ்சம் நடப்போம்
13. தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே: நீர் நிலைகளில் சோப்பு, ஷாம்பு என்று பாழ்படுத்தக்கூடாது.
14. விடிகாலை, சூர்யோதயம், அஸ்தமனம், இரவு, சாப்பிடும் போது இறை நினைவு, நல்ல திட்டங்கள், நினைவுகளோடு இருக்கனும்
15. தினமும் யாராவது ஒரு முன், பின் தெரியாதவருக்கு உணவிட்டு உண்ணனும். உணவை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது.
16. அன்றாடம் ஊரில் இருக்கும் ஆலயங்களுக்கு நடந்து செல்வது, ப்ரதட்சிணம் செய்வது நடைப்பயிற்சிக்காக.
17. எந்த ஒரு செயலும் இன்னொருவருக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.
18. எழுந்ததும் டூ டாய்லெட், படுத்ததும் தூக்கம், கலரில்லாத மூச்சா நம்ம உடம்பு நல்லாயிருக்குங்கறதுக்கு எளிய அடையாளங்கள்.