May 2, 2018

வர்ணாஶ்ரமம் - பகுத்தறிந்தது

ப்ராஹ்மணர்கள் - கல்வியாளர்கள், தொடர்ந்து எல்லாத் துறைகளிலும் ஆராய்ந்து கொண்டே இருப்பவர்கள், 64 கலைகளிலும் தேறிய வல்லுனர்கள், தசாவதானி (10), அஷ்டாவதானி (8), சதாவதானி(100)  என்று ஒரே சமயத்தில் பலதுறைப்பட்ட தேர்வுக்கணைகளை வென்றவர்கள், பங்களித்தவர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது.  புத்திக்கூர்மையே இவர்களுக்கு ப்ரதானம்.  நடமாடும் பல்கலைக்கழகங்கள் இவர்கள்.  பலரின் தோற்றமும், முடிவும் ஆராய்ச்சிக்கு எட்டாதது, அவசியமில்லாதது.  பராசரரின் (க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாசரின் தந்தை) வைமானிக சாத்திரம், சுஶ்ருதரின் அறுவை சிகிச்சை மருத்துவம், வாத்ஸ்யாயனரின் காம சூத்ரம்,  அகஸ்த்யர், த்ரோணர், பரசுராமர் என எண்ணற்ற ரிஷி, முனிவர்களின் யுத்த, அஸ்த்ர சாஸ்த்திரம், என சொல்லிக்கொண்டே போகலாம்.  புஷ்பக விமானத்தின் இலக்கணம், இஞ்ஜீனியரிங் அமைப்பு போன்றவைகளை ஒரு உதாரணத்திற்கு வைமானிக சாத்திரத்தில் பாருங்கள் எதாவது புரிகிறதா என்று.  பீமன் மகன் கடோத்கஜனின் ரதத்தில் 16 குதிரைகள் நான்கு, நான்காக பூட்டப்பட்டிருந்தன, எண்ணற்ற அளவில் பாணங்களும், வில்களும், கதைகளும், பணியாளர்களும் அதன் அறைகளில் இருந்தனர் என்று மஹாபாரதம் கூறுகிறது.  சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் இதன் கடைசி வரிசை.  இதனாலேயே இவர்கள் அந்த மேலான மஹாசக்தியின் முகத்திலிருந்து தோன்றியவர்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.  ப்ராஹ்மணன், அந்தணன் - இறுதியான இறையம்சத்தை அணுகுபவன், அணுகும் வழியை அறிந்தவன், போதிக்கிறவன்.

க்ஷத்ரியர்கள்:  தோள் வலிமையால், பாஹுபலி (பாஹு -தோள்) நாட்டு எல்லைகளையும், உள்ளூர் மக்களையும் அவர்களிடமிருந்து மண், கால நிலை போன்றவற்றைக் கொண்டு வசூலித்த வரிப்பணத்தால் காத்தவர்கள்.  அதனால் மஹாவிஷ்ணுவாக போற்றப்படுபவர்கள்.  ப்ராஹ்மணர்களைக் கூட எந்த வேதமும் இப்படி தெய்வமாகப் போற்றியதில்லை.  ப்ராஹ்மணர்கள் அரசாள வேண்டாம் என்று போதிக்கிறது.  அதே சமயம் எந்த க்ஷத்ரியனாவது மக்களை ஹிம்சித்தால் தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள்,  இதனால் இவர்கள் பராசக்தியின் தோள்வலிமைக்கு ஈடானவர்கள், அதிலிருந்து தோன்றியவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.

வைஶ்யர்கள்: திரைகடல் ஓடி திரவியம் தேடுவதும், பசு (என்றால் எல்லா வீட்டு விலங்குகளும் அடங்கும்), விவசாய பராமரிப்பும் இவர்கள் பணி.  குதிரை, ரதம், கப்பல் என்று சுற்றிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு பயணங்களுக்குத் தோதாக தொடை வலுவுடன் இருக்க வேண்டும் என்று இவர்கள் என் தொடையிலிருந்து உண்டாக்கினேன் என்றான் க்ருஷ்ணன்.  அவனே அழியும் அவதாரம்.  அவன் கூறினான் என்றால் மேலான சக்தியான மஹாவிஷ்ணுவின் தொடை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இவர்களுக்குத் தேவையான க்ரீடம், உடை, ரதங்கள், பாதணிகள், மாலை, மணிகள், சந்தன, ஜவ்வாது அலங்காரப் பொருள்கள், வாகனம் ஓட்டுதல், சமையல், வாகன, கட்டிட, ரோடு, ஆலய, விவசாய கட்டுமானங்கள் என்று ஃபீல்டு வொர்க் பார்ப்பவர்கள் சூத்திரர்கள்.  மேலே கூறியவர்களுக்கு படிப்பறிவே உண்டு இன்ஜினியரிங் படித்தவர்கள் போல,  ஆனால் சூத்திரர்கள் சூத்திரங்களை அனுபவத்தில் கண்டவர்கள், தேர்ந்தவர்கள்,  டிப்ளமோ ஹோல்டர்ஸ் மாதிரி.

இவர்களைத் தவிர காட்டிலிருந்து கொண்டு துஷ்ட விலங்குகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொண்டு, காட்டு வளங்களைக் காத்துக் கொண்டு, அழிக்காமல் உபரி வளங்களை தந்தம், புலி, மான் தோல், விஷமுறிவு மூலிகைகளை அறிந்தவர்கள் பஞ்சமர்கள்.

பிறப்பால் ஒரு வர்ணம், பிழைப்பால் ஒரு வர்ணம்
ராவணன் - ப்ராஹ்மணனாய்ப் பிறந்து பெண்ணின் மேல் இரக்கக் குணமில்லாததால் அரக்ககுணம் கொண்ட க்ஷத்ரியன்
ஏகலைவன் - வேடனாய்ப் (பஞ்சமர்) பிறந்து க்ஷத்ரியனாய் பாரதப் போரில் வீரம் காட்டியவன்
த்ரோணர், பரசுராமர் - ப்ராஹ்மணனாய்ப் பிறந்து, க்ஷத்ரிய குணத்தை போரில் காட்டியவர்கள்
யுதிஷ்ட்ரர் - பஞ்ச பாண்டவரில் மூத்தவராய்ப் பிறந்து பல இடங்களில் ப்ராஹ்மண குணத்தை உடையவராய் வர்ணிக்கப்பட்டவர்
ப்ரஹலாதன், பலி - க்ஷத்ரியர்களாய்ப் தைத்ய குலத்தில் பிறந்து தேவர்களால் போற்றப்பட்டவர்கள்
விஶ்வாமித்ரர் - க்ஷத்ரியராய்ப் பிறந்து ப்ராஹ்மணனானவர்

இப்படி எந்த ஒரு தேச, சமூக வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும், எல்லாத் தொழில் துறைகளின் பாதுகாப்பிற்கும், பங்களிப்பிற்கும் இந்த பிரிவுகள் நிச்சயம் அவசியம், இவை ஒன்றுக்கொன்று வெகு உறுதியாக, அடிப்படையில் சார்ந்துள்ளன, பிணைக்கப்பட்டுள்ளன.   நாம் இவைகளின் பெயர்களை மாற்றி நாட்டிற்குத் தகுந்தாற்ப்போல், சூழலுக்குத் தகுந்தாற்ப்போல் மாற்றி
ப்ராஹ்மணர்கள் - கல்வியாளர்கள் - அரசுக்கு அறிவுரை கூறுபவர்கள், (IAS, IFS, IPS, CA, டாக்டர்கள், இன்ஜினியர்கள், ....),
க்ஷத்ரியர்கள் - ஆட்சியாளர்கள் - ஆளுனர், ப்ரதம, முதல், மற்ற அமைச்சர்கள், இராணுவ, காவல் துறை வீரர்கள்
வைஶ்யர்கள் - தொழில் முனைவர்கள், டாட்டா, பிர்லா, ர்லையன்ஸ், சிறு, பெரு தொழில் உட்பட, கால்நடை, விவசாயம் காப்பவர்கள், அதனால் பிழைப்பவர்கள்
சூத்ரர்கள் - வண்டி ஓட்டுபவர்கள், தொழில் கட்டுமானங்களில் வேலை செய்பவர்கள், கடை நிலைத் தொழிலாளர்கள், சொல்வதைச் செய்யும் உடல் உழைப்பாளிகள்.
பஞ்சமர்கள் - இன்றும் இவர்கள் சில இடங்களில் நம்மை விட்டு விலக்கியே, அடக்கியே, ஒடுக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள் நாகரீகமற்ற, படிப்பறிவில்லாதவர்கள் என்று,  அவர்களும் நம்மை விட்டு விலகிய, இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையையே விரும்பி இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்,  இதில் எங்கும் ஜாதிகளின் பெயர் பாராட்டப்பட்டோ, ஒதுக்கப்பட்டோ, இழிவு செய்யப்பட்டோ கூறவில்லை.  திருடர்களாகவும், திருடர்களின் தலைவனாகவும் இருக்கிறான், சண்டாளனாக ஆதி சங்கரருக்கு உபதேசிக்கிறான் பரமேஶ்வரன்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், நம்முடைய ஒரு காணி விவசாய நிலத்தையோ, பரம்பரை சொத்தையோ பாதுகாத்து, பராமரித்து நம் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாகக் கொண்டு சேர்க்கவே, நம் குடும்பத்துக்குள்ளேயே இந்த நான்கு பிரிவுகளிலும் வேலை செய்து கொண்டிருப்பது தெளிவாகப் புரியும். வீட்டில் 3-5 மணி நேரம் நடக்கும் விசேஷங்களுக்கும் இந்த பகுப்புகளில் நாம் பிரிந்து வேலையை வெற்றிகரமாக முடிப்பது கண்கூடு.

இந்தப் பிரிவுகளின் தினசரி வாழ்க்கை முறை, சுத்தம், சுகாதாரம், உடல் மற்றும் புத்தியைக் கொண்டு உழைக்கும் நேரம், விகிதம், தொழிலுக்குத் தகுந்த உடை, வார்த்தைகள், இறையம்சத்தை அறியும், அடையும் வழி என அனைத்தும் வித்யாசப்படும்,  அதைக் கொண்டு அடக்கப்பட்டிருந்தவர்களின் புரட்சி, வெளிப்பாடுகளே அங்கொன்றும், இங்கொன்றுமாக காலத்திற்கேற்ப ராமானுஜர், நந்தனார், பெரியார், அம்பேத்கார்,   இவையாவையுமே காலத்திற்கேற்ப இறைவனால் நிச்சயிக்கப்பட்டதே,  ஆனால் அவரவர்கள் வளர்ப்பு, படிப்பறிவு, பகுத்தறிவு, வாழ்ந்த ஒழுக்கமுறை,  நமக்கு மேலான அந்த சக்தியிடம் கொண்ட நம்பிக்கையின் தெம்பு இவைகளால் இவர்கள் சாதித்த முறை, அங்கீகரிக்கப்பட்ட விதம் மாறுபடுகிறது,  பழிக்கப்படுகிறது,

இதிஹாஸ புராணங்கள், சாத்திரங்கள் பிறப்பால் எந்த வர்ணத்தில் இருந்தாலும் முயற்சியால் எந்த வர்ணத்திற்கும் மாறலாம் என்று அதை அனுமதிக்கின்றன, வாழும் முறையாலேயே வர்ணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்று முழங்குகின்றன,  ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைஶ்யர்களுக்கு சமூக, தேசப் பொறுப்புகள் அதிகம்.  சுய வாழ்க்கையிலும், கட்டுப்பாடுகள், கொள்கைகள், ஒழுக்க விதிகள், அவர்களின் சொந்த வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் விதிக்கிறது சாத்திரங்கள் கடுமையான வரைமுறைகளை காலை எழுந்ததிலிருந்து, இரவு படுக்கும் வரை.  இந்த வர்ணத்தவர்கள் தெரிந்திருந்தும் தவறு செய்துவிட்டால் தண்டனையும் அதிகம்.  பஞ்சமரிலிருந்து மேலே ஏறி ப்ராஹ்மணனனாகும் போது ஒவ்வொரு படியிலும் அவனது ஒழுக்கம், அறிவு, கட்டுப்பாடுகள், பொறுப்புகள் அதிகரிக்கும். 

இன்றைய நிலையைப் பார்க்கும் போது மேற்கூறிய வர்ணனை, இலக்கணங்களின் படி இப்போது எல்லாவற்றையும் காசாக்கும், சொந்த சொகுசு வாழ்க்கைக்கு பலியாக்கும் தலைமுறையே வளர்த்து விடப்பட்டிருக்கிறது.  மேலோட்டமாக பார்த்தால் வைஶ்யர்களும், சூத்ரர்களுமே இருக்கிறோம்.   மக்களைக் காக்கும் க்ஷத்ரியர்களும், இறைத்தன்மையை அடையும் வழிக்கு அழைத்துச் செல்லும் ப்ராஹ்மணர்களும் வெகு அரிதாகவே காணப்படுகிறோம்.  இதைத்தவிர நானும் நானே அமைத்த டிகிரி படிப்பை முடித்து விட்டேன் என்று குறுக்கு வழியில் புத்திக் கூர்மையில்லாமல் வாங்கி விட்டு, வேலை ஏதும் இல்லையென்று, போராட்டம், பகுத்தறிவுப் போர்வையில் புரட்சி, கத்தல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.    பாப்பான், பாப்பாரப்பய, பள்ளன், பறையன் என்பதெல்லாம் ஏசும் வார்த்தைகளாகி விட்டன இன்று,  சூரியனாய் இருப்பவன் இவைகளைப் பொருட்படுத்துவதில்லை, புத்தியால் ஜீவிக்கிறான்.  உணர்ச்சியால் தூண்டப்படுபவன் கத்துகிறான், அடிவாங்கி அடைபட்டு, பின் காலத்தால் திருந்தி பிழைக்கும் வழியைத் தேடுகிறான்.

புதிதாய் நம்மால் எந்த புரட்சியும் செய்ய முடியாது, செய்தாலும் அதன் விளைவுகள் நிலைக்காது,  காலம் மீண்டும் தன்னை சரி செய்து கொண்டிருக்கிறது. 

நாம் இதுவரை சுருக்கமாகப் பார்த்தது வர்ணங்களைப் பற்றியே,  ஆஶ்ரமம் என்பதும் இதனோடு சேர்த்து வர்ணாஶ்ரம கோட்பாடுகள் என்று இன்று ஜீவிகளால் போற்றப்படுகிறது.  ஆஶ்ரமங்கள் ஒவ்வொருவனுக்கும் பொதுவான மாணவன், மணமானவன், குழந்தைகளை விட்டு ஒதுங்கி வாழ்பவன், மனைவியையும் விட்டு விலகி வாழ்பவன் என்று நான்கு படிகள்.  தேவையேற்படும் போது அதைப்பற்றி பதிவோம், விவாதிப்போம்.

No comments: