Apr 23, 2018

நாகலாபுரம் ட்ரெக்கிங்

நாகலாபுரம் ட்ரெக்கிங்

தேதி: 21 ஏப்ரல் 2018, சனிக்கிழமை

ரூட்: ராமாபுரம் - திருமழிசை - திருவள்ளூர் - பூண்டி - ஊத்துக்கோட்டை - சுருட்டப்பள்ளி - நாகலாபுரம் - ராமகிரி - பிச்சாத்தூர் - 100 கிலோ மீட்டர்




டீம்:
பால்பாண்டி - லீடர்
ஞானசேகர்
ராஜ்மோகன்
பழனி
மாஸ்டர் விசேஷ்
ஸ்ரீநாத்
ஸ்ரீகாந்த்
இளவரசன்
சிவகுமார்
என் பொண்ணும் நானும்

அன்னமிட்ட கை: பால்பாண்டி அம்மா

நாகலாபுரம் - தமிழகத்திலிருந்து திருப்பதி போற வழில ஆந்திரா பார்டர்ல நொழஞ்சு கொஞ்ச நேரத்துல வந்திடும்.  சுருட்டப்பள்ளில பள்ளி கொண்ட சிவன், நாகலாபுரம் ட்ரெக்கிங்னு சொல்றாங்க, ஆனா, அதையும் தாண்டி பிச்சாத்தூர்னு ஒரு ஊர்.  அங்க தான் இருக்கு இந்த மலை, சுனைப்புனல் எல்லாம்.  நாகலாபுரம் க்ருஷ்ணதேவராயர் அம்மா பேர்ல உருவாக்கப்பட்டதுன்னு வரலாறு.

வருஷம் முழுக்க போலாம் இங்க,  ஆனா மழைக்காலத்துல சூப்பரா வழுக்கும் வழி முழுக்க, அட்டைபூச்சி ஆசமா இருக்கும்,  குளிரும், கோடைக்காலத்துல வெயில் மண்டய பொளக்கும்,  நமக்குப் பழக்கப்பட்டது தானே.  தண்ணி இருக்கான்னு கேட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்.

சென்னை ட்ரெக்கர்ஸ் டீம்ல அவங்க டெஸ்ட்டுல செலக்ட் ஆகி, ரூல்ஸ் ஃபாலோ பண்ணி, டீமோட கைடென்ஸ்ல போகனும், நமக்குத்தான் ஒருத்தன் சொல்லி, அதைக் கேட்டு நடந்து பழக்கம் கிடையாதே,   எங்க டீம் லீடர், பால்பாண்டி இங்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கார்,  போலாமான்னு கேட்க, 10-20 பேர்ல ஆரம்பிச்சி, கடைசில 11 பேர் போய்ட்டு வந்தோம்.  நான் என் பொண்ண கூட்டிட்டுப் போலாம்னு ரெண்டு வாரமாவே ரூட், க்ளைமேட், ஏற்கனவே போய்ட்டு வந்தவங்க அனுபவங்கள்னு பாத்து வெச்சிருந்தேன்.

பூச்சி/கொசுக்கடி மருந்து,
தேங்காயெண்ணெய்,
பேண்டேஜ்,பேண்டேஜ் துணி,
உலர் பழங்கள், பிஸ்கெட், புளிப்பு மிட்டார்,
மொபைல், கேமரா,
மலையேற்ற ஷூ,
லைஃப் ஜாக்கெட்/ட்யூப்,
தீப்பெட்டி/லைட்டர், சூடம், நூடுல்ஸ் பாக்கெட், பாத்திரம், தட்டு,
ட்ராக் சூட்/கார்கோ பேண்ட்/ஸ்விம் சூட்
தொப்பி, சன் க்ளாஸ்,
ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்,
துண்டு,
கத்தி,
டார்ச் லைட்,
கம்பாஸ் (திசைமானி)
பெப்பர், சால்ட், லெமன்

எல்லாம் எடுத்துட்டுப் போலாம்னு லிஸ்ட்டும் ரெடி, ஒரு சிலத விட்டுட்டு மிச்சதெல்லாம் வாங்கியாச்சு.  பால், பழனில்லாம் ஏற்கனவே போய்ட்டு வந்திருக்காங்க.  மிச்ச பேர் எல்லாம் புதுசு. ஒரு நாலு பேருக்கு நீச்சல் தெரியாது, ரெண்டு பேர் தெலுகு பாய்ஸ், கெளம்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி தண்ணியடிச்சுட்டு வாரா வாரம் யாராவது தவறிப்போய்டறாங்கன்னு, ட்ரெக்கிங் தடை பண்ணிட்டாங்கன்னு ந்யூஸ் காம்சாங்க ஃப்ரெண்ட்ஸ், லோக்கல் மக்கள்ட்ட ஃபோன் பண்ணி கேட்டா அது அடிக்கடி நடக்கும், தடையெல்லாம் ஒண்ணும் பண்ணலன்னுட்டாங்க.

வெயில் ஜாஸ்தியா இருக்கு,  காலை 5 மணிக்கு கிளம்பிடலாம்னு ப்ளான்,  6 மணிக்கு தான் கிளம்பினோம் ராமாபுரத்துலேந்து, பழனி கார்ல, பால் கார்ல ரெண்டு டீம்,  சுருட்டப்பள்ளில ஒரு ரோட்டோரக் கடைல மூணு ரூபாய்க்கு மசால் வடை, சாப்டு, டீ குடிச்சு, வழில, தர்ப்பூசணி சாப்டுட்டுப் போனோம்.  ஆந்த்ரால ரோட்டோரம் பனங்கள்ளு விக்கறாங்க, நம்மூர்ல மது ஒழிப்பு, கள்ளச்சாராய சாவைத் தடுக்கறேன்னு, டாஸ்மாக்க தொறந்து வெச்சிருக்காங்க, சாகற வரைக்கும் சொன்னா கேப்பான், கொஞ்ச கொஞ்சமா சாகட்டும்னு,

ஒன்பது மணிக்குப் போய் சேந்தோம் ட்ரெக்கிங் பார்க்கிங் இடத்துக்கு,  மெயின் ரோடுலேந்து மண் ரோடு ஒரு 2-3 கிலோ மீட்டர்.  பால்பாண்டி அம்மா காலை ரெண்டு மணிக்கு எழுந்து பத்து பேருக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்கா கறி, உருளைக்கிழங்கு கறி, மாங்கா துண்டம், கரண்டி, அலுமினியம் பேக்கிங்னு தடபுடல், ரெண்டு வேளைக்கு சாப்டோம், எங்க வீட்ல கெஸ்ட் வந்திட்டதால 20 இட்லியும், ஒரு டப்பா தயிர் சாதமும் தான் நான் எடுத்துட்டுப் போயிருந்தேன், பழனி பையனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருந்தார்.  பார்க்கிங் சார்ஜ்ஜுன்னு 20 ரூபாய் வாங்கறாங்க, உள்ளூர்க்காரங்கன்னு நெனைக்கறேன்.  சாப்டுட்டு, அலுமினியம் கன்டெய்னர்ல மிச்ச சாப்பாட பேக் பண்ணிட்டு, காலி பாத்ரத்தையெல்லாம் கார்லயே வெச்சிட்டு கிளம்பினோம்,

சரியான வெய்யல், ஏரிக்கரைல ஏறி கொஞ்ச தூரம் நடந்து, உள்ள இறங்கினோம்.  மழை, வெள்ளத்தின் போது இந்த டேம்க்கு தண்ணி வந்து ரொம்பும் போல இருக்கு.  வழி நெடுக சைஸ் வாரியா கூழாங்கற்கள், மணல், இன்னும் சூடு ஏறல, ஒன்றை, ரெண்டு மணி நேரம் பாட்டு பாடிட்டு, கேட்டுட்டு, பேசிட்டு முதல் ஓடையை வந்து சேந்தோம்.  முதல் தடவைங்கறதால வழி நெடுக பட்டணத்த பாத்தாப்ல ஃபோட்டோஸ்,  தண்ணி சூப்பரா இருந்துது, குடிச்சிட்டு, பாட்டில்கள்ல ரொப்பிட்டு தாண்டினோம்.  நோ பாட்டில், அன்ஹெல்த்தி ட்ரிங்க்ஸ், ப்ளாஸ்டிக் குப்பைய காட்டுல போடறதில்லன்னு முடிவு பண்ணியிருந்தோம் பகுத்தறிவை யூஸ் பண்ணி,   வெல்லம் தூளா ஒரு கிலோ வாங்கிட்டு போயிருந்தேன். அதோட சுக்குப்பொடியும் ஒண்ணு, ரெண்டு விரல் போட்டு பாட்டில்ல குலுக்கி பானகம் ரெடி,  அடிக்கடி குடிச்சு, தொப்பைல லோடு சேக்காம, ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்.  கார்கோ பேண்ட்ல ஜெம்ஸ், ஆரஞ்சு, சீரக மிட்டாய்கள், பேரிச்சை, கடலை மிட்டாய், பிஸ்கெட் :)  எப்புடி,

பால் கொண்டு வந்த சாப்பாட்டால இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் அப்டியே ரிட்டர்ன் ஆய்டுச்சு.  முதல் ஓடைய தாண்டினதும் வெயில் தெரியல, மலை ஆரம்பிச்சுது, பாத்து, பாத்து பத்ரமா நடந்து ரெண்டாவது பனலுக்குப் போய் சேந்தோம்,  அதிக பட்சம் 10 அடி ஆழம் நடுவுல, இறங்கிப் போலாம்.  நல்லா குளிச்சு, மலை மேல ஏறி குதிச்சி ஆட்டம், கொண்டாட்டம்.  பழனி சார் வழக்கம் போல இங்கயே தங்கிட்டாரு.  பையன மட்டும் எங்கள நம்பி அனுப்பிச்சு வெச்சார்.  மூணாவது குளத்துக்கு அங்கிருந்து ஒரு அரை மணி நேரம் ஏறனும், பெண்களுக்கும், குண்டு பாய்ஸ்சுக்கும், நீச்சல் தெரியாதவங்களுக்கும் தேவையில்ல அங்க போறது,  எவன் சொல்றது, யார் கேக்கறது,  கொஞ்சம் கஷ்டம் சில இடங்கள்ல, குனிஞ்சு போகனும், பாறைய புடிச்சிட்டு, கால விளிம்புல வெச்சி ரெண்டு மூணு அடி போகனும் ஒரு எடத்துல..  இந்த இயற்கை நீர் நிலைகளுக்கு வரும்போது இன்னத்துக்கு ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்கறாங்கன்னு தெரியல,  எல்லாருக்கும் அதுதான் குடி நீரும் கூட,

போய் சேந்தாச்சு மூணாவது குளத்துக்கு,  குறைஞ்சது நாலாள் அடி ஆழம் இருக்கும், கொச கொசன்னு மீன்கள், பணிப்பெண்களாய்,  தெளிந்த , குளிர்ந்த நீர், குட்டி வாட்டர் ஃபால்ஸ், ட்யூப்ப இதுக்குன்னு சேப்பாக் ஸ்டேடியம் கிட்ட ஸ்போர்ட்ஸ் கடைல 400 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன் பொண்ணுக்குன்னு, 20 அடிக்கு தடியா ஒரு நைலான் கயிரும் தயார், மரக்கிளைல கட்டி, ட்யூப்ப ஊதி இன்னொரு முனைல கட்டி பொண்ண அந்த ஏரில இறக்கியாச்சு,    இறங்கிக் குளிக்க முடியாது, தண்ணியடிச்சிட்டு பாட்டில்கள எதுக்கு ஒடச்சு, ஒடச்சுப் போடறானுங்கன்னு தெரியல.  முட்டாப்பசங்க, ஊறிப்போன கால்ல எப்டி ஏறும்.  தீவட்டி பாய்ஸ்,  மலை மேல ஏறி, ஏறி குதிச்சு, நீச்சலடிச்சு, ப்ராணாயாமம் பண்ணிட்டே பத்மாசனம் போட்டு தண்ணில மிதந்து, நீச்சல் தெரியாத ஒருத்தனை உயிர் காத்து, வெயில்ல குளிர் காஞ்சு, ஃபால்ஸுல தலைய தோச்சு, குரங்குள தொரத்தி, நாங்க சாப்டு, பின்னர் அதுக்கும் குடுத்து, எங்கயும், கிழ விழாம, அடி பட்டுக்காம இறங்கி வந்தோம்  மாலை சூரிய அஸ்தமனம் அழகாய் ஏரில, மலைல, மரங்கள்ல,  நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே, அந்த மூணாவது குளத்துக்கிட்ட ஒரு குகை, குரங்குகள், காட்டுக் காய், பழங்கள், இப்படி யாராவது வரும் போது பிச்சையெடுத்து நாட்டு உணவு, தவ வாழ்க்கை, சூப்பரா இருக்கும்.  நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இறங்கி வந்திட்டேன்.

பால்பாண்டி டீம முந்தி நாங்க வந்த வழிய விட்டு பெரிய பாளையம் ரூட்ல மாறி, வழில தேவையேயில்லாம கூகிள் மேப்புல வர்ற பொண்ணு சொல்றத தேட்டு ரெண்டு முட்டுச்சந்துக்குப் போனது தான் மிச்சம்.  பத்து மணிக்கு ஆபீஸ் கிட்ட அக்ஷயான்னு ஒரு வெஜிடேரியன் ஹோட்டல், டேஸ்ட், க்வாலிட்டி ஓகே, சர்வீஸ், ரேட் ஜாஸ்தி,  ஒவ்வொண்ணத்தையும் மூணு, மூணு தடவ கேட்க வேண்டியிருக்கு.  ஞானசேகர் ஆக்டிவால ஆபீஸ்லேந்து நைட் 12 மணிக்கு வீடு வந்து சேந்தோம்,  எல்லா புகழும் பால் பாண்டிக்கே :)

காட்டுல, நீர் நிலைகளில் குப்பை போடாதீங்க, சோப், ஷாம்பூ போட்டு குளிக்காதீங்க, எல்லா மூலிகைகளும் அந்த தண்ணிலயே இருக்கும், நமக்கு அங்க இருக்கும் போது அது தான் குடி நீர்.   சாராய பாட்டில தயவு செய்து உடைச்சுப் போடாதீங்க.

ஒவ்வொரு அடியும் பாத்து கண்ணு ஓகே சொன்னதும் காலை அழுத்தி வெச்சு நடங்க,  யாரையும் அவசரப்படுத்தாதீங்க, இஷ்டம் இல்லாதவங்கள, நீச்சல் தெரியாதவங்கள கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப் போகாதீங்க.  எதுக்கும் நீங்க பொறுப்பாக முடியாது.  வேர்களும், மரங்களும், பாறைகளும் தான் புடிச்சு ஏறுவதற்கும், கால் வைக்கறதுக்கும் துணை,  வேர்னு நினைச்சு தூங்கிட்டு இருக்கற பாம்பு, கறையான் அரிச்ச மரங்களை புடிச்சு ஏறாதீங்க :),  அட்டை பூச்சி கடிச்சு, கொஞ்ச நேரம் ரத்தம் உரிஞ்சனுத்க்கப்பறம் தான் நமக்கு எரியும், தெரியும், ஷூ, சாக்ஸ்குள்ளயும் சில அட்டைப்பூச்சிகளால போக முடியும்,  ஒரு குச்சியால அத எடுத்துப் போட்டுட்டு, கால கழுவிட்டு நடங்க, அதுவே சரியாய்டும் நாம வீட்டுக்கு வர்றதுக்குள்ள.

Apr 2, 2018

பங்குனி உத்திரம் காவடியாட்டம்




காவேரி ஒன்னு-ஒன்றை கிலோ மீட்டர் அகலம் இருக்கும் எங்க ஊர்ல.  நான் ஸ்கூல் படிச்சு முடிக்கற வரை வருஷத்துக்கு ஒரு 5-6 மாசம் முழுசா ஓடும்.  மிச்ச மாசம் ரெண்டு கரையை ஒட்டியும் தண்ணி ஓடும்.  எங்கப்பா எங்களை சலிக்காம தோள்கள்ல தூக்கி வெச்சிட்டு சித்திரைத் தேர், வைகுண்ட ஏகாதசியின் போதெல்லாம் காவேரி குறுக்க கூட்டிட்டு போவார்.  எதிர்க்கரை ஸ்ரீரங்கம்.  விழா களை கட்டியிருக்கும்.  ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிர்க்க இருக்கற சிற்பங்கள், சுத்து சாமி சன்னிதிகள், தண்ணி பந்து, அம்மம்மா அப்பப்பா பலூன் (ஊதிட்டு விட்டா பலூன்ல சொருகியிருக்கற பீப்பில பான்னு சத்தம் வரும்).  ரெண்டு கரைலயும் ஓடும் தண்ணில குளியல், வெயில் காலப் பொசுக்கும், குளிச்ச தண்ணில துண்ட நனைச்சு கால்ல கட்டிட்டு எதிர்க்கரைக்கு ஓடி வருவோம்.  ஆடி மாசமா இருந்தா காத்துல மணல் உயிர் போறாப்பல அம்பு மாதிரி கால்ல பறந்து குத்தும்.  18-ஆம் பெருக்கு உத்சவத்துக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்லேந்தும் தெப்பத்தேர் காவேரில போகும்.

தண்ணீரைப் பிழைக்கக்கூடாது என்று ஒரு பழமொழி.  தண்ணி கம்மியா ஓடும் போதெல்லாம் அத எல்லாரும் சேந்து மூச்சா, ......... அலம்பிக்கறது, பவானி, அமராவதி, குடமுருட்டி ஆறுகளோட சாக்கடை, ஆலைக்கழிவுகள்.  திருச்சி சிந்தாமணி, டவுன் பகுதிகளோட சாக்கடைக் கலப்பு  எல்லாம் நடந்து கொண்டிருந்தது.  வருஷங்கள் ஆச்சு.   இப்ப வருஷத்துக்கு ஒன்னு, ரெண்டு மாசம் தான் அதிக பட்சமா காவேரி முழுக்க ஓடுது.  2-3 மாசம் ரெண்டு கரையையும் ஒட்டி ஓடுது.  மிச்ச மாசமெல்லாம் வற்றாமல் மணல் ஓடுது, தண்ணி இருந்தா தண்ணிய எடுப்போம், இல்லாட்டி மண்ண எடுப்போம்.  ஊருக்கெல்லாம் கொடுப்போம்.  எங்க ஊர்ல பெரிய, பெரிய கிணறெல்லாம் 4-5 போட்டு கி.மீ கணக்குல தண்ணிய உறிஞ்சி கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள்.  எங்க ஊருக்கே இப்ப ஆத்து நீரும் இல்ல, நிலத்தடி நீரும் இல்ல,  வருஷங்கள் போராடி காவேரி பைப் கனெக்ஷன் வந்தது தெருவுக்கு.  கூட்டுக்குடிநீர்க் கிணறுகளுக்கு தண்ணி ஓட்டம் இல்லைன்னு காவேரில ரெண்டு கரைலயும் ஓடின தண்ணிய ட்ராக்டர் வெச்சு வாய்க்கால் மாதிரி கிணறுகளுக்குக் கிட்ட கொண்டு வந்தாங்க..  இப்ப எந்த கரைலயும் தண்ணி இல்ல,  ஊற்றும் இல்ல, தடுப்பணை கட்டி தண்ணி தேக்கறாங்க, வந்தா !!

தமிழ்நாட்டுல எல்லா ஆற்றங்கரை ஊர்க்கதையும் இதேவாகத்தான் இருக்கும், அதனால் ஊர்ப்பேர் சிறப்பா சொல்லல :(  வினை விதைத்தவன் வினையும், தினை விதைத்தவன் தினையும் அறுப்பான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு பல பழமொழிகள் இயற்கையைப் போற்றுத் துதித்துப் பாதுகாக்காமல், சீரழித்து அழிந்து கொண்டிருக்கும் எங்கள் வரலாறுதான் இது.

28 மார்ச் 2018, புதன் கிழமை இரவு 11.20 க்கு வரவேண்டிய RPN ஏசி செமி ஸ்லீப்பர் பஸ், ஒரு மணி நேரம் தாமதமாக க்ரோம்பேட்டைக்கு வந்தது.  காலை திருச்சில இறங்கி, எங்க ஊர்க் காவிரில ஒரு குளியல் போட்டு,  வீட்டுல பரம்பரையா பூஜை பண்ணிட்டு வர்ற சாமிகளுக்கு அபிஷேகம் பண்ண தீர்த்தம் குடத்துல எடுத்திட்டு வந்து சூப்பர் பூஜை.  ஒரு சில வருஷங்கள் ஆச்சு நான் பூஜை பண்ணி.

நண்பர் கும்பகோணம் ஸ்ரீ சிவராம சிவாச்சாரியார் சமீபத்துல முக்திநாத், கைலாஷ், மானசரோவர் தீர்த்த யாத்ரை, க்ஷேத்ராடனம் பெற்றோர்களுடன் சென்று, ஒவ்வொரு ஸ்தலத்திலும் அந்த குளிரில் குளித்து ஆசாரக்குறைவில்லாமல் சிவபூஜை செய்து, எனக்கும் தீர்த்தம், ருத்ராக்ஷ மாலை கொண்டு வந்து கொடுத்தார்.  பாக்யம் செய்தவர், போகாமலேயே அந்தக் கதையெல்லாம் கேட்க, எழுத, ப்ரசாதம் கிடைக்க நானும் பாக்யம் செய்திருக்கிறேன்.  எங்க ஊர் தர்மசம்வர்த்தினியம்பா சமேத கம்பரசன்பேட்டை கைலாசநாதருக்கு அன்றைய ப்ரதோஷ அபிஷேகத்துக்கு இந்த கைலாஶ், மானசரோவர் தீர்த்தம் அமைந்தது.  கும்பாபிஷேகம் முடிந்து இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை.  நானும் ருத்ரம், சமகம் க்ரமபாடம் சொன்னேன் அன்று பூஜையின் போது.  ப்ரதோஷ புறப்பாடும் உண்டு, ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்பாளும் எழுந்தருள நானும் இந்த முறை  ஒரு வாரைப் பிடித்தேன்.  அதிக அளவில்  2-3 மணி நேரங்களுக்கு பக்தர் கூட்டம், தேவார, திருவாசகப் பாடல்களோடு எண் திசைகளிலும் தீபாராதனைகளோடு சிறப்புப் புறப்பாடு,  பெரியார் மண்ணல்லவா.


30 மார்ச் 2018, வெள்ளிக்கிழமை, பங்குனி உத்திர நன்னாள், மாதமும் 12, நக்ஷத்ரமும் 12ஆவது ! ! பெருமாள் கோவில்களில் சேத்தி என்ற உற்சவம்.  ஸ்ரீரங்கம் தாயார் அவங்க எல்லை தாண்டி வரமாட்டார்.  பெருமாள் ரெங்கராஜா அவங்க கிட்ட போய், சேர்ந்திருந்து தரிசனம்.  சுப்ரமண்ய, சிவாலயங்களில் கல்யாண உற்சவம்.  எங்க பாட்டி பரம்பரையில் வந்த காவடிய பழனிக்குப் பாதயாத்ரையாகக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்களாம்.  எங்க தகுதியும்,  ஊர் இருக்கற நெலைமையும் தெரிஞ்சு முந்தின தலைமுறைகளிலேயே அது உள்ளூர் முருகன் சன்னதியில் முடியத் தொடங்கியிருந்தது.  நாம சினிமால பாக்கற காவடி இல்லை இது.  ரெண்டு பக்கத்துலையும் மரத்தால் பிள்ளையார், தண்டபாணி, இடும்பன், வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும்.   இந்த தடவை நீயே எடு, நான் ஆத்து பூஜை பண்றேன்னு தம்பி பரத் அனுமதி.  காவேரியில் காவடிக்குக் காலை 6 மணியிலிருந்து ஒன்பது மணி வரை எல்லா அபிஷேகங்களும் குடும்பத்தோடு செய்து,  காவேரி நீர் கலச அபிஷேகத்தில் முடித்து, மணிகள் ஒலிக்கும் அந்தக் காவடியில் விக்ரஹங்களுக்கு வீட்டில் தயாரித்த விபூதி, சந்தன, குங்குமம் சார்த்தி, மயில்தோகைகள், பால் சொம்புகள், வேல் கட்டி, எடுத்து செல்பவருக்கு வெயில் கொளுத்தாமல் இருக்க மேனா என்ற ஒரு பட்டுத்துணியையும் கட்டி, சஷ்டி கவசம், திருப்புகழ், அரோஹரா கோஷங்கள் முழங்க, தீர்த்தக் குடங்களோடு கிளம்பும் எங்கள் காவடி.


வடக்குத்தெரு பிள்ளையார்க் கோவிலில் அண்ணாவுக்குப் பூஜை செய்து, சூரத்தேங்காய் உடைத்து, அக்ரஹாரத்தின் மேற்குத் தொடக்கத்தில் மாமனைக் கும்பிட்டு அங்கொரு தேங்காய் தெறிக்க, வழியில் விபூதி ப்ரசாதம் கொடுத்துக் கொண்டு, ஆங்காங்கே கொதிக்கும் கால்களுக்கு இதமாய் பக்தர்கள் குடம் குடமாய் நீரால் நனைக்க, வேல் வேல் வெற்றி வேல், வீர வேல், ஞான வேல், சக்தி வேல் என்று கோஷித்துக் கொண்டு சிவன் கோவில் முருகன் சன்னிதியில் உள்ளூர் சிவாச்சாரியார் பேபி மாமா குடும்பத்தார் பூஜித்து, இறக்கி வைப்பர்.  இந்த முறை பேபி மாமா, சதீஷ் அண்ணா, செந்தில், உதவிக்கு விக்னேஷ் என்று அவங்க டீம்.  முதல் நாளே கோவிலை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, வாழைமரம், தோரணங்கள் கட்டி, பூஜை சாமான்கள் அவர்களிடம் சேர்த்து விடுவோம்.  நாங்க காவேரிலேந்து வருவதற்குள் அவர்கள் தீர்த்தக் குடங்களில் முருகன், வள்ளி, தேவானையை வருவித்து இருப்பார்கள்.  மற்ற சன்னிதிகள் நித்யப்படி அபிஷேக அலங்காரங்களும் நடந்திருக்கும்.   10 மணிக்குக் கோவிலில் மஹான்யாஸ, ருத்ர, சமக, சூக்தங்கள் என்று வேத மந்த்ரங்கள், திருப்புகழ், பக்திப் பாடல்கள், கோஷங்களோடு அபிஷேகங்கள் தொடங்கி, வள்ளி, தேவானையோடு அலங்காரம், அஷ்டோத்திர, ஸஹஸ்ர நாம அர்ச்சனைகள், ப்ரசாத வினியோகம் முடிந்து வீட்டுக்குக் காவடியோடு திரும்பும் போது மணி மதியம் இரண்டாவது ஆகியிருக்கும்.

இந்த நாலு- ஆறு மணி நேரத்தில் வீட்டு பூஜையும் முடிந்திருக்கும்,  வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து, சூரத்தேங்காய் உடைத்து, காவடியை ஸ்வாமி ரூமில் அதன் பீடத்தில் இறக்கி, அர்ச்சித்து, நமஸ்கரித்து, பின் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெற்று, சுற்றமும், நட்பும் சூழ இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் முன்னாள் திட்டமிட்டு, இன்னாள் காலையிலிருந்து தயாரான சூடான, சுவையான, வகையான அன்லிமிட்டெட் சுப்ரமண்ய ஸ்வாமி கல்யான சமையல் சாதம் பரிமாறி, உள்ளூர் சிவ-விஷ்ணு கோவில் பட்டர்கள், நண்பர்கள், வெளி மனிதர்கள் விடைபெற்றதும், வீட்டு மக்கள், குழந்தைகள், பெரியோரோடு பந்தியில் அமர்ந்து பரிமாறும் பெண்டுகளை மிரட்ட, அவர்கள் மிரள, கடைசி பந்தியில் நாம சாப்ட ஒக்காந்து அதிகமா மிஞ்சினத அள்ளிப்போட்டு, குறைவா இருக்கறத காலியாக்கி, தீர்ந்து போனவைகளுக்கு சத்தம் போட்டு, சாப்பிடற வகையறாக்களில் நொள்ள, நொட்ட சொல்லினு, கால நீட்டி சாப்டும் சொகம் இருக்கே, அடடடடடடா.  சாப்ட தொப்ப மூட்டைய தூக்க முடியாம தூக்கி, கை, கால், வாய் சுத்தம் செய்து கட்டைய நீட்ட, அவங்க பாத்ரங்கள தேய்க்க ஒழிச்சி போட்டு, உள்ள வரும்போது 4 மணியாச்சே டீ, காபி ஏதாவது குடுங்கோம்மான்னு நாங்க, கேட்க, பாக்க, அவங்க கிட்டேந்து ஒரு அன்பும், பண்பும் அளவில்லாம பொங்க கொதிக்க, கொதிக்க அந்த பாழாப் போனா காபிய கொண்டாந்து குடுப்பாங்க பாருங்க.  சான்ஸே இல்ல.

முதல் நாள் வந்தா ப்ளான், ப்ரிபரேஷன் வொர்க்குன்னு எதாவது இருக்கும்.  மறுநாள் இருந்தா க்ளீனிங் வொர்க், பத்தாக்குறை, குறை தீர்ப்பு பட்ஜெட் மீட்டிங் இருக்கும்னு மேக்சிமம் யாரும் இருக்க ட்ரை பண்றதில்ல.  இருக்கவே இருக்கு அவர் ஐடி கம்பெனி, டெய்லி ராத்திரி லேட்டா தான் வரார்.  ஒழுங்கா சாப்பிடறது, தூங்கறது கூட இல்ல, லீவே குடுக்க மாட்டேங்கறான்,  இவனுக்கு ஸ்கூல் ப்ரமோஷன் மீட்டிங், அவளுக்கு புக்ஸ் வாங்க வரச்சொல்லி இருக்கான்னு எவ்வளவோ இருக்கு காரணங்கள் நமக்கு.  இந்த பங்குனி உத்தரம் வேற ஒவ்வொரு வருஷமும் அன்ப்ளான்டா வந்துடறது.   ஊருக்கு இளைத்தவன் புள்ளையார் கோவில் ஆண்டி,   எங்களுக்கு இளைச்சவன் உள்ளூர்ல இருக்கறவங்க.  இப்ப கொஞ்சம் பரவாயில்ல, வீட்டு வேலைக்கு ஆள், சாமான் வாங்கி காவேரி, வீடு, கோவில் பூஜைக்குப் பிரிச்சு வெச்சா போறும்,   பூ, சாப்பாடெல்லாம் வீட்டுக்கே வந்துடும்.

இதுக்கு முந்தின இல்ல பிந்தின நாள்ல எந்த நாள் வசதியோ, அந்த நாள்ல மொத்தக் குடும்பமும் குல தெய்வக் கோவிலுக்குப் போய், பூஜை, வழிபாடுன்னு ஏற்பாடு.  அதுக்கு ஒரு வண்டி, பாட்டு, கும்மாளம்,  க்ராமக்கோவில்ல போயி டண்டக்கு டண்டான்னு இறங்கினதும் பூசாரி பூஜைகள் செய்ய, இந்த, மூத்த தலைமுறை பெண்கள் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்ய, நாங்க ஐயர் கடைல ஆர்டர் பண்ணி எடுத்துனு போன டிஃபன், காபிய காலி பண்ணி உதவி பண்ணன்னு எல்லாமும் ரொம்ப பிசி.  காலை ஏழு மணிக்குக் கிளம்பி ரெண்டு கோவில்களில் பூஜை, தரிசனம் முடிந்து,  இப்ப இருக்கற ஊர் எல்லைக்கோவில்லயும் தரிசனம் முடிச்சு வீட்டுக்கு ஒரு 12-1 மணிக்கு வந்தா, பார்றா, வீட்லயும் லஞ்ச் வந்திருக்கு.  திருப்பி சலிக்க, சலிக்க சாப்டு, தூங்கு, காபி குடி, வூட்டு வம்பு, ஊர் வம்பு, இந்திய வம்பு, இன்டர்னேஷனல் வம்பு, ப்ரச்னைகளுக்குத் தீர்வுகள், தீர்ப்புகள்.  இங்க வந்த ஒன்னு ரெண்டு நாள்லயும் தனிக்குடித்தன டீம்கள், ஹைஜீனிக் சோப்புகள், அலங்கார சாமான்கள், நாலு துணிய, சார்ஜர மறந்துட்டு, ரெண்டு நாள் கடின உழைப்புக்கு ஈடா, மறுநாள் ஆஃபீஸ்க்கு தோதா தத்கல்ல புக் பண்ணின, இல்ல ஸ்லீப்பர் ஏசி பஸ்ல ஏறி, விடிய விடிய ஊர் வந்திருக்குமோ நிம்மதியா விழித்திருந்து,  வேலை பாக்கற ஊருக்கு வந்து, மிஸ் பண்ணிட்டு வந்த பொருள்களுக்கு ஊருக்கு ஃபோன் பண்ணி, அப்படியே பத்ரமா வந்து சேந்துட்டோம்னும் சொல்லி, தூங்கி, எழுந்து, குளிச்சு ஆஃபீஸ்க்கு வந்தாச்சு,  ஆசம், ஆசம், சாப்பாட்டு டப்பாவ வீட்லயோ, எங்கயோ மறந்துட்டு வந்தாச்சு.