தீபாவளி - தீப + ஆவளி - தீபங்களின் வரிசை
நம் உள்ளும் புறமும் இருக்கும் இருளை அகற்றி, எங்கும் அறிவான, மகிழ்வான, ப்ரகாசமான ஒளி பரவ வேண்டும் என்பதைக் கொண்டாடும் நாள், இதற்கடுத்த கார்த்திகை மாதத்தில் தினமும் எல்லா க்ராமங்களிலும் மாலை வீட்டு வாசல்களில் சிறப்பாக விளக்கேற்றுவர், மார்கழியில் விடிகாலை அப்படி செய்வார்கள்.
பரமேஶ்வரன் தவத்தின் பலனாக அம்பிகைக்குத் தன் இட பாகத்தைக் கொடுத்து, அர்த்த நாரீஶ்வரனான நாள்
காமரூபம் - ப்ராக்ஜோதிஷம் (இன்றைய அஸ்ஸாம்) நாட்டை ஆண்டு கொண்டிருந்த பௌமன் என்ற அஸுரனைக் கொன்று அவன் அன்னை விருப்பப்படி மக்கள் துயரம் தீர்ந்து, அவன் இறந்த அந்த நாளை அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் நாள். அவன் செயல்பாடுகளால் அவனுக்கு நரகாஸுரன் என்று பெயர், நாம் படும் நரகங்களிலிருந்து விடுபட பண்டிகைக்குப் பெயரும் நரக சதுர்த்தசி தான், நரகாஸுர சதுர்த்தசி இல்லை. இந்த நாளில் விடிகாலை நாம் தேய்த்துக் குளிக்கும் எண்ணையிலும், நீரிலும், மற்ற பொருள்களிலும் லக்ஷ்மியும், கங்கையும், மற்ற தேவதைகளும் வாசம் இருப்பார்கள்.
தீர்க்கதமஸ் என்ற முனிவர் ஏற்கனவே கஷ்டங்களில் இருக்கும் மக்கள் மேலும் தங்களை வ்ரதங்களாலும், சாப்பிடாமல் உபவாசங்களாலும் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இறைவனை அணுகி, அவன் அனுக்ரஹம் பெற வேண்டுமா என்று கேட்டதற்கு, சனாதனர் என்ற ரிஷி அருளிய பூஜை முறையே இந்த தீபாவளி.
பகீரதன் தேவலோகத்துக் கங்கையை பூமிக்கு வருவித்த நாள்
க்ருஷ்ணன் கூறியதைக் கேட்டு கோபர்கள் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்த நாள்
இராவணேஶ்வரனை அவன் செய்த தவறான பிறன் மனை நோக்கல் என்ற குற்றத்திற்காகக் கொன்று, சீதையோடும், இராமானுஜனாம் லக்ஷ்மணனோடும் (அனுஜன் - தம்பி), விபீஷணன், சுக்ரீவன் தலைமையிலான ராக்ஷஸ, கரடி, குரங்குக் கூட்டத்தோடு அயோத்தி திரும்பிய நாள்.
மஹாவீரர் முக்தியடைந்த நாள்
சீக்கியர்களுக்கு முக்யமான நாள்
புத்தாடை உடுத்தி, துயரங்கள் தீர்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி, கூட்டுக் குடும்பங்கள்ல எல்லாரும் சேந்து செஞ்ச பக்ஷணங்களை வெளுத்துக் கட்டி, ப்ரச்னை வராம இருக்க தீபாவளி லேகியம் உண்ணும் நாள்.
குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இந்த நாட்களிலாவது கூடி வாழும் முறையையும், பகிர்தலையும், சந்தோஷத்தையும் கொண்டாட வேண்டிய நாள். நிச்சயமாக நாள் முழுக்க டிவி முன்னாடியே ஒக்காந்து இருக்க வேண்டிய நாள் இல்ல.
ஷேர் அண்டு கேர் கூட்டுக்குடும்பங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். மீண்டும் சந்திப்போம். ஜய் ஹிந்த்.
நம் உள்ளும் புறமும் இருக்கும் இருளை அகற்றி, எங்கும் அறிவான, மகிழ்வான, ப்ரகாசமான ஒளி பரவ வேண்டும் என்பதைக் கொண்டாடும் நாள், இதற்கடுத்த கார்த்திகை மாதத்தில் தினமும் எல்லா க்ராமங்களிலும் மாலை வீட்டு வாசல்களில் சிறப்பாக விளக்கேற்றுவர், மார்கழியில் விடிகாலை அப்படி செய்வார்கள்.
பரமேஶ்வரன் தவத்தின் பலனாக அம்பிகைக்குத் தன் இட பாகத்தைக் கொடுத்து, அர்த்த நாரீஶ்வரனான நாள்
காமரூபம் - ப்ராக்ஜோதிஷம் (இன்றைய அஸ்ஸாம்) நாட்டை ஆண்டு கொண்டிருந்த பௌமன் என்ற அஸுரனைக் கொன்று அவன் அன்னை விருப்பப்படி மக்கள் துயரம் தீர்ந்து, அவன் இறந்த அந்த நாளை அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் நாள். அவன் செயல்பாடுகளால் அவனுக்கு நரகாஸுரன் என்று பெயர், நாம் படும் நரகங்களிலிருந்து விடுபட பண்டிகைக்குப் பெயரும் நரக சதுர்த்தசி தான், நரகாஸுர சதுர்த்தசி இல்லை. இந்த நாளில் விடிகாலை நாம் தேய்த்துக் குளிக்கும் எண்ணையிலும், நீரிலும், மற்ற பொருள்களிலும் லக்ஷ்மியும், கங்கையும், மற்ற தேவதைகளும் வாசம் இருப்பார்கள்.
தீர்க்கதமஸ் என்ற முனிவர் ஏற்கனவே கஷ்டங்களில் இருக்கும் மக்கள் மேலும் தங்களை வ்ரதங்களாலும், சாப்பிடாமல் உபவாசங்களாலும் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இறைவனை அணுகி, அவன் அனுக்ரஹம் பெற வேண்டுமா என்று கேட்டதற்கு, சனாதனர் என்ற ரிஷி அருளிய பூஜை முறையே இந்த தீபாவளி.
பகீரதன் தேவலோகத்துக் கங்கையை பூமிக்கு வருவித்த நாள்
க்ருஷ்ணன் கூறியதைக் கேட்டு கோபர்கள் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்த நாள்
இராவணேஶ்வரனை அவன் செய்த தவறான பிறன் மனை நோக்கல் என்ற குற்றத்திற்காகக் கொன்று, சீதையோடும், இராமானுஜனாம் லக்ஷ்மணனோடும் (அனுஜன் - தம்பி), விபீஷணன், சுக்ரீவன் தலைமையிலான ராக்ஷஸ, கரடி, குரங்குக் கூட்டத்தோடு அயோத்தி திரும்பிய நாள்.
மஹாவீரர் முக்தியடைந்த நாள்
சீக்கியர்களுக்கு முக்யமான நாள்
புத்தாடை உடுத்தி, துயரங்கள் தீர்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி, கூட்டுக் குடும்பங்கள்ல எல்லாரும் சேந்து செஞ்ச பக்ஷணங்களை வெளுத்துக் கட்டி, ப்ரச்னை வராம இருக்க தீபாவளி லேகியம் உண்ணும் நாள்.
குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இந்த நாட்களிலாவது கூடி வாழும் முறையையும், பகிர்தலையும், சந்தோஷத்தையும் கொண்டாட வேண்டிய நாள். நிச்சயமாக நாள் முழுக்க டிவி முன்னாடியே ஒக்காந்து இருக்க வேண்டிய நாள் இல்ல.
ஷேர் அண்டு கேர் கூட்டுக்குடும்பங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். மீண்டும் சந்திப்போம். ஜய் ஹிந்த்.
No comments:
Post a Comment