Nov 24, 2008

People who brought me here - சமூகப் பெரியவர்கள்:

மகா பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
புதுப் பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
- ஸ்பீடு,
- முடிவெடுக்கும் திறமை
- பிரச்னைகளை கைளாளும் விதம்
- பக்தர்களிடம் காட்டும் கனிவு
- எடுக்கிற வேலைல வரும் தடைகளைப் பத்திக் கவலைப் படாம, இருக்கற கொஞ்ச நல்லவாகிட்ட இருக்கற கொஞ்ச நல்ல விஷயங்களை சேர்த்துப் பயன்படுத்தி பெரிய விஷயங்கள சாதிக்கற நம்பிக்கை
- இருக்கற போஸ்டுக்கும், எடுத்துண்டிருக்கற வேலைகளுக்கும் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், பணக்காரர்களையும் அண்டாம ஒண்ணும் நடக்காது. ஆனா இவுங்களை அண்டினா மேல கொஞ்சம் சேறு, கறை எல்லாம் படத்தான் படும். ஆனா இது எல்லாத்திலயும் வரும் விஷத்தைத் தான் ஏத்துண்டு, அமிர்தத்தை நமக்குத் தரான்னு தான் தோண்றது. வேற யாரும் இந்த நீலகண்டர் வேலைக்கு வரமாட்டாளே. கிடைச்சிருக்கற விஷத்தை எல்லாம் வேற யாராலயும் தாங்கவும் முடியாது.
- பெரியாவாளா மட்டும் இல்ல, அரசியல்வாதி, பணக்காரன், அட்மிநிஸ்ட்ரேட்டர், நிர்வாக இயக்குனர் னு இப்பிடி பல வேஷத்துல வேலை பாத்தாகணும். எல்லாரையும் மறக்கற, மிதிக்கற , திருடற இந்த நன்றி கெட்ட சமுதாயத்துக்காக
- நம்பிக்கையான, திறமையான, நல்லவங்க டீம் ஒண்ணு கெடச்சா மகா பெரியவா மாதிரி அவங்க கிட்ட இந்த வேலையெல்லாம் வுட்டுட்டு திரும்பி பூஜை ரூமுக்குப் போவாளோ.


வாரியார் சுவாமிகள்:
-
மணிக் கணக்குல படிச்சவன், பாமரன் -னு எல்லாரையும் ஆர்வமா, மத்த வேலையெல்லாம் மறந்துட்டு, இல்ல ஒதுக்கிப்போட்டுட்டு நல்ல விஷயங்களை கேட்க வைத்தவர்.
- ஆன்மீகவாதி, நாஸ்தீகவாதி, பகுத்தறிவாளர் -னு எல்லாராலையும் மதிக்கப் பட்ட ஒரு, முதல் -னு கூட சொல்லலாம், சொற்பொழிவாளர்
- இன்னிக்குப் பல சொற்பொழிவாளர்கள் நான்தான் வாரிசு, வாரிசு -னு போட்டி போட்டுக்கற அளவுக்கு ஆன்மீக ஆராய்ச்சி, சொற்பொழிவுகளுக்கு ஒரு அடையாளமா இருந்தவர்
- நல்ல ஹைட்டு, அதுக்கேத்த ஒடம்பு, மணிக் கணக்குல நின்னுண்டே உபன்யாசம் பண்ற அளவுக்கு 'வயலூர் வள்ளல்' முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்த தெம்பு
- ஆன்மீகத்த மருந்தாகவும், சாப்பாடாகவும் யார் யாருக்கு எப்படிக் கொடுக்கணும்னு தெரிஞ்ச ஒரு வயசான தாத்தா.

வேங்கட சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் (எ) V. S. மாமா:
- என்னோட வேத வாத்யார்
- எனக்கு மட்டும் தனியா வேதம், சாஸ்த்ரம், ச்லோகம் சொல்லிக்குடுத்து, நான் பண்ணின தப்பு, தவறையெல்லாம் பொறுத்துக் கொண்டவர்
- சாப்பிடும்போது, நடக்கும்போது, குளிக்கும்போது, பிரயாணத்தின்போது, சபைல வைதீக கார்யங்கள் பண்ணும்போது, இப்படி எல்லா இடங்களிலேயும், வேலைலேயும் அதற்கான நித்ய, நிமித்த மந்திரங்கள், பக்தி, ஒழுங்கு, அடுத்தவங்களை அனுசரிச்சுப் போற தன்மை -னு பல விஷயங்களை என்ன மாதிரி நிறைய பேரை கவனிச்சு, பின்தொடர வச்சவர்.
-சம்பவனைக் குடுக்கரவாளத் திருப்தி படுத்தரதோட, அவாளத் திரும்பத் திரும்ப இந்த மாதிரி வைதீகர்களைக் கொண்டு நிறையா தர்ம காரியங்கள் பண்ணனுங்கற ஆசைய உண்டாக்கறவர்.
-
வைதீக கர்மாக்கள் பண்ணும்போது தானும், கூட இருக்கற வைதீகாளையும், பண்ணிக்கற குடும்பத்த சேந்தவங்களையும் அந்தக் கர்மாவோட முக்யத்துவத்தையும், பண்ற முறையையும் தெரிஞ்சு ச்ரத்தையா அதுல ஈடுபட வைத்தவர்.
- பண்ணிக்கற குடும்பத்துக்கு, வைதீக கர்மாக்கள் ரொம்ப காஸ்ட்லியானவைங்கற எண்ணம் வராம பாத்துக்கறவர்
- எந்த விஷயத்துலயும் காலம் தவறாதவர்
- ஒவ்வொரு பிராம்மணனும் பண்ண வேண்டிய வேலைகள்,
வேதம் படிக்கறது & சொல்லிகுடுக்கறது, தானம் குடுக்கறது & வாங்கறது, யாகம் பண்றது & பண்ணி வைக்கறது -னு இப்படி ஆறு இருக்கு. இது எல்லாத்துக்கும் அதுக்கான முறைகள், இன்றைய வாழ்க்கை முறையில் இதெல்லாம் பண்றதுல கஷ்டங்களும், இஷ்டமின்மையும் இருக்கு. ஆனா இதுல எதையும் கடைசி காலம் வரை விடாம, முறையா, ரொம்ப இஷ்டத்தோட
பண்ணினவர் மாமா.
- ரொம்ப எளிமையானவர், அடக்கமானவர்
- தேவைகளை சுருக்கிக்கொண்டவர்
- வேதம் சொல்ற முறையைப் பத்தி மாமா சொன்ன ச்லோகம்:

दीर्घी शीघ्री शिर:कम्पी था लिखितपाठ: |
अनर्थ: अल्पकण्ठश्च डेते पाठकाधमा : ||

பொருள்: வேகமா சொல்றவன், ரொம்ப நீட்டி சொல்றவன்,
தலையை ஆட்டி, ஆட்டி சொல்றவன், புஸ்தகம் பாத்து சொல்றவன்,
அர்த்தம் தெரியாம சொல்றவன்,
சொல்றது அடுத்தவங்களுக்கு கேக்காத அளவுக்கு சத்தம் கம்மியா சொல்றவன் - இந்த ஆறு பேரும் மட்டமானவர்கள் ! !

கருப்பத்தூர் சந்திரசேகர கனபாடிகள்:
- ரொம்ப ஆசாரம், காஞ்சிபுரம் மடத்துல எனக்கு வேத வாத்யார். நாங்களும் சில நியமங்களையாவது கடைபிடிக்க வச்சார்.
- என்னோட சௌர்யத்துக்காக ஒரு நாள் ராத்திரி, மறுநாள் காலம்பரன்னு தன்னோட ஓய்வுக்கு முக்யத்துவம் குடுக்காம பாடம் நடத்துவார்
- தன்னோட சாப்பாட தானே தான் குமுட்டி அடுப்புல தயார் பண்ணிப்பார்

-
திருவிடைமருதூர் சதுர்வேத பாடசாலைல வர்ஷம் தவறாம க்ரம பாராயணம் நடத்திண்டு வந்தார். நாங்களும் ஒரு தடவ போய் கைங்கர்யம் பண்ணியிருக்கோம்.

1 comment:

Anonymous said...

The world lives today only because of these kind of people and it is nice that you look back at them..