Nov 25, 2008

People who brought me here - My Teachers

ஆசிரியர்கள்:

ஸ்ரீமதி அலிமா பீவி & ஸ்ரீமதி ஜெஸ்ஸி
:
- இவங்க ரெண்டு பேரும்தான் நான், என் தம்பி, எங்கண்ணா எல்லாருக்கும் ஒன்னாவதுலேந்து,
மூணாவது நாலாவது வரைக்கும் டீச்சர்ஸ்.
- கம்பரசன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி எங்க ஸ்கூல்.
-
பெல் அடிக்கறது, சத்துணவு சாப்பிடறது, வாய்க்கால்லத் தட்டு அலம்பப் போய், தண்ணில ஆட்டம் போடறது, ட்ரெஸ்லெயெ ... போய்டறது, விழாக்களுக்கு கொடி கட்றது, கவெர்மென்ட் எலெக்ஷன் & ஸ்கூல் கொள்ளைகள வேடிக்கப்பாக்கறது இப்படிப் பல விஷயங்கள்ல எங்களப் பாத்துண்டு, பொறுத்துண்டு இருந்தவங்க.
- நல்லவங்க, அன்பானவங்க
- கண்ணா, பின்னான்னு எதுக்கெடுத்தாலும் அடிக்கமாட்டாங்க, பயமுறுத்தரதோட சரி
-
எங்க வீட்டு வழியாதான் ஸ்கூலுக்குப் போய், வரணும். வேலை, கல்யாணம்னு ஆன பிறகும், அவங்க ரிட்டைடு ஆறவரைக்கும் வழில பாத்தா வணக்கம் சொல்லி, பேசிட்டு தான் போவோம். அப்படி மதிக்கற, மறக்காத அளவுக்கு இருந்தவங்க.

ஸ்ரீ சுப்ரமண்யன்:
- கம்பரசன்பேட்டை ஸ்கூல் ஹெட்-மாஸ்டர்,
- எங்களுக்கு அஞ்சாங் க்ளாஸ் வாத்யார்
- நல்லவர், அன்பானவர், ஸ்கூல் சீனியர் ஸ்டூடண்ட்ஸ்ங்கிரதால நிறையா வேலை வாங்கறதுக்காக
கொஞ்சம் கண்டிப்பும்.
- எங்களுக்கு எதிர் வீடு. அவரோட பசங்களையே தெருவுலையே தண்டிக்கரதையும் நாங்க பாத்ததுண்டு.
- நேர் வழில போறது, ஒரு கவெர்மென்ட்டு ஸ்கூல் வளர்ச்சிக்காக பாடுபட்டு, சொந்த காச செலவு பண்றது, ஸ்கூலுக்காக
கவெர்மென்ட் ஆபீஸ், கோர்ட்டு, அவ்வப்போது நடக்கும் ஸ்கூல் கொள்ளை கேஸ்களுக்கு போலிஸ் ஸ்டேஷனுக்கு அலையறதுன்னு பல கஷ்டங்கள் பட்டவர்.
- பசங்கள உருப்பட வைக்கறதுல உள்ளூர் ஆளுங்க, பெற்றோர்கள் கூட மனஸ்தாபங்கள். எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டார்.
- நல்லாசிரியர் விருதும் பெற்றார்.
- ஊர்ப் போக்கையும், மக்கள் போக்கையும் பார்த்து ரொம்ப வருந்துவார்.
- இன்னிக்கு நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். சாரும் ரிட்டைர்டு ஆகி வீட்டுப்பக்கம் திரும்பி இருக்கார்.
- ஒரே சேஞ். நாங்க வெள்ள வேஷ்டி, சட்டைலையே பாத்த சார் இப்போ பேன்ட், ஷர்ட் போட ஆரம்பிச்சிருக்கார்.

பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்:

- இங்க நான் ஆறாவது கால் பரிக்ஷைலேந்து ஆரம்பிச்சு, ஏழாவது வரை தான் படிச்சேன். இன்னும் இங்கயே படிக்க முடியலையேன்னு வருந்தினேன்.
-
ரயில்வே ஸ்டேஷன் கிட்ட நாங்க குடியிருந்த மார்டின்ராஜ் காலனியிலேந்து நடந்து போற தூரம் இந்த ஸ்கூல்.
- வழில காந்தி பார்க், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் படித்த கவெர்மென்ட் ஹை ஸ்கூல், ஹெட் மிஸ்ட்ரெஸ் வீடு.
- ஸ்கூல்ல வேலை பாத்த ஒவ்வொருத்தருமே அவங்களோட பொறுப்புணர்ந்து, விருப்பமா உழச்சாங்க.
- நான் சத்தமா உணர்ச்சியோட பேசறேன்னு ஸ்கூல் ஆண்டு விழா டிராமால எனக்கு மந்திரி வேஷம். அப்பா ராத்திரியோட ராத்திரியா அதுக்கு துணி வாங்கி, ட்ரெஸ் தெச்சு குடுத்தா.

ஸ்ரீ R. கிருஷ்ணமாச்சாரி:
- எங்க சித்தப்பாட்ட ஆரம்பிச்சு, என் தம்பி வரைக்கும் ஒம்பதாவது, பத்தாவதுல இங்லீஷ், சைன்ஸ் டீச்சர்
- கொஞ்சம் கண்டிப்பு
- இங்லீஷ் சூப்பரா சொல்லிக்குடுப்பார்

ஸ்ரீ ராஜாராம்:
- தெப்பக்குளம் பிஷப் ஹீபர் ஹை ஸ்கூல் என்.ஸி. ஸி. ஆபீசர்
- எங்களுக்கு
ஒம்பதாவது, பத்தாவதுல கணக்கு டீச்சர், அவர்கிட்ட ட்யூஷனும் போனோம்.
- இந்த ஸ்கூல் டீச்சர்ஸ் நிறையா பேர் எங்க தாத்தாவுக்கு ஜூனியர்ஸ். தாத்தா மேல ரொம்ப மதிப்பும், மரியாதையும் இருக்கறவங்க.
- இவர் அவர் அளவுல கொஞ்சம் நாஸ்தீகம். ஆனா சாமி, நம்பிக்கைகள் பத்தி ஏதானும் சொன்னா ஆர்வமா கேப்பார்.
- அருமையான மனிதர்.
- இன்னும் ஸ்ரீ. ஜார்ஜ் தங்கதுரைன்னு எட்டாம் க்ளாஸ் டீச்சர், பி.டி. மாஸ்டர்ஸ், ஜ்யாக்ரபி டீச்சர் (மேப் சூப்பரா சொல்லிக்குடுப்பார்) னு சிலர் ஞ்யாபகத்துல இருக்காங்க.

Centum செல்வராஜ்:
-
திருச்சி -ல ட்வெல்த்து கணக்கு ட்யூஷனுக்கு இவர் ரொம்ப பாப்புலர்.
- தன்மையானவர், சிரிச்ச முகத்தோட க்ளாஸ் எடுக்கற கணக்கு டீச்சர்.
- ட்யூஷன் இவருக்கு முழு நேர வேல.
-
ட்வெல்த்து அரையாண்டுத் தேர்வுல 200 க்கு ஆறு மார்க் எடுத்த என்ன மூனே மாசத்துல நூறுக்கு மேல வாங்க வச்சவர்.
- வருஷ ஆரம்பத்துலையே இவர் கிட்ட சீட் வாங்கணும். முழுப்பணமும் கட்டணும். ஐ. டி. கார்டெல்லாம் உண்டு. ஆனா எங்கப்பா ரிக்வெஸ்ட மதிச்சு, கடைசி மூணு மாசத்துக்கு என்ன சேத்துண்டு, மாச பீஸ் வாங்கிண்டார்.
-
ஒவ்வொரு சனிக்கிழமையும் டெஸ்ட் உண்டு. திங்கக்கிழம பேப்பர் திருத்தி வந்துடும். வீட்டுக்கு லெட்டரும் வரும்.
- நல்ல உழைப்பாளி. புக்ல இருக்கற எல்லா கணக்குகளையும் திருப்பித் திருப்பி போட வைப்பார்.

ஸ்ரீ. அசோக் குமார்
:
- திருச்சி யு.டி.வி. (உருமு தனலக்ஷ்மி வித்யாலயா, டௌன் ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருக்கு) லெவன்த், ட்வெல்த் கம்ப்யூட்டர் டீச்சர்.
- ஜாலியான சார், ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட் உண்டு.
- க்ளாஸ் ஒழுங்கா படிக்கறோம்னு ஒரு பத்து பேர செலக்ட் பண்ணி, தனியா ஒரு கம்ப்யூட்டர் சென்ட்டர்ல ஓசி க்ளாஸ் சேத்துவுட்டார்.
- நான்தான் இவர் சப்ஜெக்டுல ஸ்கூல்ல முதல் மாணவர் !! அதுவும் அரசுத் தேர்வுல.
- இன்னும் கணக்கு, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரீ, தமிழ் டீச்சர்லாமும் ரொம்பக் கஷ்டம்தான் பட்டாங்க. ஆனா நமக்குத்தான் தமிழ், இங்லீஷ், கம்ப்யூட்டர் தவிர மத்தத கண்டா பயம் இன்னிவரைக்கும்.

Major. ராமகிருஷ்ணன்:
-
திருச்சி யு.டி. காலேஜ் (உருமு தனலக்ஷ்மி) என்.ஸி.ஸி. ஆபீசர்.
- கெமிஸ்ட்ரீ துறைத் தலைவர்.
- ஆர்மீ ஆபீசர்ஸ், ரோட்டரி க்ளப் இப்படி ஊர்ல முக்யமானவங்க கிட்ட நல்ல தொடர்பும், செல்வாக்கும் உண்டு.
- நல்ல நிர்வாகி. (ஐ. ஏ. எஸ் எக்ஸாம் க்ளியர் பண்ணி இருக்கார்)
- காலேஜ் பசங்கள கையாளத் தெரிந்தவர்.

Lt. Col. V. சேகர்:
- திருச்சி என்.ஸி.ஸி. க்ரூப் ட்ரைனிங் ஆபீசர்
- பசங்கள ஜாலியா, ஆனா போக வேண்டிய, அடைய வேண்டிய இலக்கை நோக்கி சரியா கூட்டிண்டு போவார்.
- ஒவ்வொரு என்.ஸி.ஸி. ஸ்டுடென்ட் கிட்டயும் தனித் தனியா அக்கறை காமிச்சவர்.
- என்ன பல வேலைகள்ல ஈடுபடுத்தி, டெல்லி குடியரசு தின அணிவகுப்புல கலந்துக்கற அளவுக்கு தயார் பண்ணினதுல இவருக்கும் முக்யப் பங்குண்டு.

ஸ்ரீ சார்லஸ்:
-
திருச்சில ஜாவா சார்லஸ்னு சார் ரொம்ப பாப்புலர்.
- கம்ப்யூட்டர் சப்ஜெக்ட்ஸ் எல்லாமே இவருக்கு அத்துப்படி. ஸ்டூடென்ட்சையும் அப்படி ஆக்கிடுவார்.
- அநாவஸ்யமா சப்ஜெக்ட் தவிர எதையுமே பேச மாட்டார்.

ஸ்ரீ. சந்தானம்:
-
மெட்ராஸ் வைஷ்ணவா காலேஜ் கம்ப்யூட்டர் பி.ஜி. & ஆராய்ச்சித் துறைத் தலைவர்.
- ரொம்ப தெய்வ நம்பிக்கை
- ஜாலியா, எளிமையா இருப்பார்
- நல்ல என்கரேஜ் பண்ணுவார், சுதந்திரமா விடுவார், நமக்கு டைம் ஒதுக்கி, நம்மளோட பேசுவார்.
பேப்பர் பப்ளிஷ் பண்றது, கான்பிரன்ஸ் அட்டென் பண்றதுன்னு நம்மள தயார் பண்ணுவார்.
- லஞ்சம், அன்பளிப்பு கேக்காம விஷயத்துக்கு முக்யத்துவம் குடுப்பார்.

Nov 24, 2008

People who brought me here - சமூகப் பெரியவர்கள்:

மகா பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
புதுப் பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
- ஸ்பீடு,
- முடிவெடுக்கும் திறமை
- பிரச்னைகளை கைளாளும் விதம்
- பக்தர்களிடம் காட்டும் கனிவு
- எடுக்கிற வேலைல வரும் தடைகளைப் பத்திக் கவலைப் படாம, இருக்கற கொஞ்ச நல்லவாகிட்ட இருக்கற கொஞ்ச நல்ல விஷயங்களை சேர்த்துப் பயன்படுத்தி பெரிய விஷயங்கள சாதிக்கற நம்பிக்கை
- இருக்கற போஸ்டுக்கும், எடுத்துண்டிருக்கற வேலைகளுக்கும் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், பணக்காரர்களையும் அண்டாம ஒண்ணும் நடக்காது. ஆனா இவுங்களை அண்டினா மேல கொஞ்சம் சேறு, கறை எல்லாம் படத்தான் படும். ஆனா இது எல்லாத்திலயும் வரும் விஷத்தைத் தான் ஏத்துண்டு, அமிர்தத்தை நமக்குத் தரான்னு தான் தோண்றது. வேற யாரும் இந்த நீலகண்டர் வேலைக்கு வரமாட்டாளே. கிடைச்சிருக்கற விஷத்தை எல்லாம் வேற யாராலயும் தாங்கவும் முடியாது.
- பெரியாவாளா மட்டும் இல்ல, அரசியல்வாதி, பணக்காரன், அட்மிநிஸ்ட்ரேட்டர், நிர்வாக இயக்குனர் னு இப்பிடி பல வேஷத்துல வேலை பாத்தாகணும். எல்லாரையும் மறக்கற, மிதிக்கற , திருடற இந்த நன்றி கெட்ட சமுதாயத்துக்காக
- நம்பிக்கையான, திறமையான, நல்லவங்க டீம் ஒண்ணு கெடச்சா மகா பெரியவா மாதிரி அவங்க கிட்ட இந்த வேலையெல்லாம் வுட்டுட்டு திரும்பி பூஜை ரூமுக்குப் போவாளோ.


வாரியார் சுவாமிகள்:
-
மணிக் கணக்குல படிச்சவன், பாமரன் -னு எல்லாரையும் ஆர்வமா, மத்த வேலையெல்லாம் மறந்துட்டு, இல்ல ஒதுக்கிப்போட்டுட்டு நல்ல விஷயங்களை கேட்க வைத்தவர்.
- ஆன்மீகவாதி, நாஸ்தீகவாதி, பகுத்தறிவாளர் -னு எல்லாராலையும் மதிக்கப் பட்ட ஒரு, முதல் -னு கூட சொல்லலாம், சொற்பொழிவாளர்
- இன்னிக்குப் பல சொற்பொழிவாளர்கள் நான்தான் வாரிசு, வாரிசு -னு போட்டி போட்டுக்கற அளவுக்கு ஆன்மீக ஆராய்ச்சி, சொற்பொழிவுகளுக்கு ஒரு அடையாளமா இருந்தவர்
- நல்ல ஹைட்டு, அதுக்கேத்த ஒடம்பு, மணிக் கணக்குல நின்னுண்டே உபன்யாசம் பண்ற அளவுக்கு 'வயலூர் வள்ளல்' முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்த தெம்பு
- ஆன்மீகத்த மருந்தாகவும், சாப்பாடாகவும் யார் யாருக்கு எப்படிக் கொடுக்கணும்னு தெரிஞ்ச ஒரு வயசான தாத்தா.

வேங்கட சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் (எ) V. S. மாமா:
- என்னோட வேத வாத்யார்
- எனக்கு மட்டும் தனியா வேதம், சாஸ்த்ரம், ச்லோகம் சொல்லிக்குடுத்து, நான் பண்ணின தப்பு, தவறையெல்லாம் பொறுத்துக் கொண்டவர்
- சாப்பிடும்போது, நடக்கும்போது, குளிக்கும்போது, பிரயாணத்தின்போது, சபைல வைதீக கார்யங்கள் பண்ணும்போது, இப்படி எல்லா இடங்களிலேயும், வேலைலேயும் அதற்கான நித்ய, நிமித்த மந்திரங்கள், பக்தி, ஒழுங்கு, அடுத்தவங்களை அனுசரிச்சுப் போற தன்மை -னு பல விஷயங்களை என்ன மாதிரி நிறைய பேரை கவனிச்சு, பின்தொடர வச்சவர்.
-சம்பவனைக் குடுக்கரவாளத் திருப்தி படுத்தரதோட, அவாளத் திரும்பத் திரும்ப இந்த மாதிரி வைதீகர்களைக் கொண்டு நிறையா தர்ம காரியங்கள் பண்ணனுங்கற ஆசைய உண்டாக்கறவர்.
-
வைதீக கர்மாக்கள் பண்ணும்போது தானும், கூட இருக்கற வைதீகாளையும், பண்ணிக்கற குடும்பத்த சேந்தவங்களையும் அந்தக் கர்மாவோட முக்யத்துவத்தையும், பண்ற முறையையும் தெரிஞ்சு ச்ரத்தையா அதுல ஈடுபட வைத்தவர்.
- பண்ணிக்கற குடும்பத்துக்கு, வைதீக கர்மாக்கள் ரொம்ப காஸ்ட்லியானவைங்கற எண்ணம் வராம பாத்துக்கறவர்
- எந்த விஷயத்துலயும் காலம் தவறாதவர்
- ஒவ்வொரு பிராம்மணனும் பண்ண வேண்டிய வேலைகள்,
வேதம் படிக்கறது & சொல்லிகுடுக்கறது, தானம் குடுக்கறது & வாங்கறது, யாகம் பண்றது & பண்ணி வைக்கறது -னு இப்படி ஆறு இருக்கு. இது எல்லாத்துக்கும் அதுக்கான முறைகள், இன்றைய வாழ்க்கை முறையில் இதெல்லாம் பண்றதுல கஷ்டங்களும், இஷ்டமின்மையும் இருக்கு. ஆனா இதுல எதையும் கடைசி காலம் வரை விடாம, முறையா, ரொம்ப இஷ்டத்தோட
பண்ணினவர் மாமா.
- ரொம்ப எளிமையானவர், அடக்கமானவர்
- தேவைகளை சுருக்கிக்கொண்டவர்
- வேதம் சொல்ற முறையைப் பத்தி மாமா சொன்ன ச்லோகம்:

दीर्घी शीघ्री शिर:कम्पी था लिखितपाठ: |
अनर्थ: अल्पकण्ठश्च डेते पाठकाधमा : ||

பொருள்: வேகமா சொல்றவன், ரொம்ப நீட்டி சொல்றவன்,
தலையை ஆட்டி, ஆட்டி சொல்றவன், புஸ்தகம் பாத்து சொல்றவன்,
அர்த்தம் தெரியாம சொல்றவன்,
சொல்றது அடுத்தவங்களுக்கு கேக்காத அளவுக்கு சத்தம் கம்மியா சொல்றவன் - இந்த ஆறு பேரும் மட்டமானவர்கள் ! !

கருப்பத்தூர் சந்திரசேகர கனபாடிகள்:
- ரொம்ப ஆசாரம், காஞ்சிபுரம் மடத்துல எனக்கு வேத வாத்யார். நாங்களும் சில நியமங்களையாவது கடைபிடிக்க வச்சார்.
- என்னோட சௌர்யத்துக்காக ஒரு நாள் ராத்திரி, மறுநாள் காலம்பரன்னு தன்னோட ஓய்வுக்கு முக்யத்துவம் குடுக்காம பாடம் நடத்துவார்
- தன்னோட சாப்பாட தானே தான் குமுட்டி அடுப்புல தயார் பண்ணிப்பார்

-
திருவிடைமருதூர் சதுர்வேத பாடசாலைல வர்ஷம் தவறாம க்ரம பாராயணம் நடத்திண்டு வந்தார். நாங்களும் ஒரு தடவ போய் கைங்கர்யம் பண்ணியிருக்கோம்.

People who brought me here - Sri. J. Chandrasekaran

- சந்திரசேகர் எல்லாம் ஸ்கூல் பேரு. வீட்ல எல்லாரும் கல்யாணம் -னு தான் கூப்பிடுவோம்
- காலேஜ் என். ஸி. ஸி -ல டெல்லிக்குப் போயி, கல்சரல் க்ரூப்புக்குத் தலைமை தாங்கி, தமிழ்நாடு டீமுக்கு முதல் ப்ரைஸ் வாங்கிக் கொடுத்தவரு!!
- கொஞ்சம் ஹைட்டு
- புல்லாங்குழல் சூப்பரா வாசிப்பார், ரேடியோ , டி.வி. ல, ஸ்டேஜ் -லன்னு நெறையா ப்ரோக்ராம் பண்ணிண்டிருக்கார்.
- பெங்களூர் விவேகானந்தா யுனிவர்சிடி -ல யோகா -ல எம்.எஸ்ஸி பண்ணி இருக்கார்
- யோகோதெரபிஸ்ட் : யோகா மூலம் நிறையா பேருக்கு வைத்தியம் பண்ணி குணப்படுத்தி இருக்கார்
- கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்காகவும், கர்ப்பிணிகளுக்காகவும் சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறார்.
- திருச்சி, சென்னை உட்படத் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா எனப் பல இடங்களில் அவரவர் தேவைக்கேற்ப வகுப்புகள் நடத்தி, மாணவர்களையும் உருவாக்கி வருகிறார்
- பல தேசிய, உலக அளவிலான போட்டிகளுக்குத் தலைமை தாங்கி இருக்கிறார்
- யோகா சம்பந்தமாக பல தொலைக்காட்சி, ரேடியோ நிகழ்ச்சிகளில் உரையாற்றியும், சந்தேகங்களுக்கு செய்முறையுடன் விளக்கமளித்தும் வருகிறார்.

என்னோட அண்ணா:
புல்லாங்குழல் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கும், யோகா முகாம்கள், வகுப்புகள், வைத்திய ஆலோசனைகளுக்கும் இவர நீங்க நிச்சயமா நம்பி அணுகலாம்.
முகவரி:
ஸ்ரீ. ஜெ. சந்தரசேகரன்,
டைரெக்டர் - பத்மம் யோகா அகாடமி
3/21, கம்பரசன்பேட்டை,
திருச்சி - 620 101
இந்தியா
தொலைபேசி: 91-0431-2701848

People who brought me here - Smt. Meenakshi Nagarajan & Smt. Bhuvaneswari Govindhan

என் அத்தை
- நல்ல உழைப்பாளி 
- எப்ப வந்தாலும் ஏதாவது பக்ஷணம் வாங்கிக்கொண்டு வருபவர் 
- நாங்க லீவுக்கு போயிருந்த போது, அவங்க பசங்களோட சேத்து எங்களையும் கால், அரை, முக்கால் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ண செய்தவர் 
- திருவையாறு ஸப்தஸ்தாநத்தின்போது கோவிலுக்கெல்லாம் கூட்டிண்டு போய் சுத்திக்காமிப்பா 
- இவா புகுந்த வீடும் பெரிய குடும்பம். ஜாலியா, ஒரே அமர்களமா இருக்கும். 
- இவா நாத்தனார், நாங்க சுந்தராம்பா அத்தை -னு கூப்பிடுவோம். ஸ்கூல் டீச்சரா இருந்தா. 
- அத்தி பஸ் கண்டக்டர், டிக்கெட் செக்கர், பாம்பேல சாஸ்த்ரிகள் !! னு பல வேல. எலெக்ட்ரிக் வொர்க்கெல்லாம் சூப்பரா பண்ணுவார் 

என் அத்தை: 
- ஜாங்கிரி, க்ளோப் ஜாமுன் சூப்பரா பண்ணுவா. 
- கந்த சஷ்டி கவசம் சொல்லிக்குடுத்தா. 
- இவா புகுந்த வீடும் பெரிய குடும்பம்தான் 
- அத்தி கோவில் பூஜை பண்ணிண்டு இருக்கார் 
- சில வருடங்கள் பாலர் பள்ளி நடத்தி, க்ராமக் குழந்தைகளுக்குத் தொண்டு செய்தவர்.

People who brought me here - P. N. Ramakrishnan & P. N. Balaraman

- ரெட்டைப் பிறவிகள்
- நியூஸ் பேப்பர் ஏஜென்சி நடத்தியவர்கள்
- மேடைப் பாடகர்கள்
- ஒரே தலைமுறையில் 24 பசுமாடுகளை உருவாக்கி, அன்றைய தமிழக முதல்வர் திரு. எம். ஜி. ஆர் - இடம் சிறந்த பராமறிப்பிற்காகப் பரிசு வாங்கியவர்கள்
- இப்போது முதலாமவர் திருப்பூரில் கோவில் அர்ச்சகராக இருக்கிறார், இரண்டாமவர் கோவையில் ஒரு சமையல் பாத்திர உற்பத்தித்தொழிற்சாலையில் பணிபுரிகிறார்

என் சித்தப்பாக்கள்

Nov 23, 2008

People who brought me here - P. N. Parasuraman

- இவரும் SSLC தான்.
- மெட்ராஸ்ல லிப்டன் டீ தொழிற்ச்சாலைல ஒரு சாதாரண தொழிலாளிதான்
- பாட்டு, கூத்து இப்படி ஜாலியாதான் இருந்தார்
- அங்கேயே ஒரு நல்ல குடும்பத்து நல்ல பொண்ண சைட் அடிச்சு, லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கொண்டார்
- ஒரு திடீர் திருப்பம், காஞ்சிபுரம் மகாபெரியவா அழைத்து, ஆசீர்வாதம் பண்ணி சமய சொற்பொழிவு மூலம் மக்களுக்குத் தொண்டு செய்ய சொன்னார். இவரும் பெரியவாள முழுசா நம்பி, தைரியமா ஆரம்பிச்சார்.
- வேலைக்கு கட் அடிச்சுட்டு, காலக்ஷேபம் பண்ற அளவுக்கு பிசி ஆயாச்சு. பல மாசம் முழு சம்பளம் வாங்கினதா தெரியல.
- வேதம், சாஸ்த்ரம், புராணம் படிச்சவா இருக்கற இடங்கள், படிக்காத, பாமர சேரி ஜனங்கள் இருக்கற இடங்கள் என மெட்ராஸ்லையும், தமிழ்நாட்டோட மற்ற இடங்கள்ளையும் திரும்ப, திரும்ப விரும்பிக் கூப்பிடும் அளவுக்கு வளர்ந்தாச்சு
- மகாபெரியவாளால 'சொல்லின் செல்வன்' -னு ஆரம்பிச்சு பல பெரியவர்கள் பாராட்டிக் கொடுத்த பட்டங்கள்
- வீட்ல பல மொழிகள்ல ஒன்னர லக்ஷத்துக்கும் மேல புஸ்தகங்கள்
- அயராத படிப்பு, எழுத்து
- நூற்றாண்டு கண்ட பிரபல தமிழ்ப் புத்தக வெளியீட்டு நிறுவனம் அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் புஸ்தகம் எழுத ஆரம்பித்து வெளி வந்த உபயோகமான நூல்கள் பல. மகாபெரியவாள் வாழ்க்கை வரலாறு, விதுர நீதி, சனத்சுஜாதீயம், வீபூதி ருத்ராக்ஷ மஹிமை, வைராக்ய சதகம், சித்தர்கள் சரித்திரம், அஷ்டாவக்ரர் உபதேசங்கள் என்பன அவற்றுள் சில.
- இது தவிர பல வாராந்திர, மாத இதழ்களில் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்ற தொடர்கள்
- தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் பல தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி, தொடர் சொற்பொழிவுகள்

என்னோட சித்தப்பா:
சிம்ப்பிளா இருப்பார் இன்னிக்கும், யாரும் சமயம் சம்பந்தமான எந்த சந்தேகத்துக்கும், குழப்பத்துக்கும் தெளிவான தீர்வு கிடைக்கத் தொடர்பு கொள்ளலாம்:
முகவரி:
திரு. பி. என். பரசுராமன்
1, எல்.. ஜி காலனி,
அருணாசலேஸ்வரர் கோயில் முதல் தெரு,
புது வண்ணாரப்பேட்டை,
சென்னை - 81