Oct 27, 2008

People who brought me here - sri 'Amarabhaarathi' Nataraaja sarmaa

ஸ்ரீமான் 'அமரபாரதி' நடராஜ சர்மா :

- ஸம்ஸ்க்ருத பண்டிதர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்
- திருச்சி SPG (Society for the Propagation of Gospel) கல்லூரியிலும், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியிலும் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பிடித்த ஆசிரியராகப் பணியாற்றியவர்
( இந்த SPG கல்லூரிதான் தற்போது சென்னையின் MCC (மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்) )
- வேத மந்த்ரங்களின் அர்த்தம் தெரிந்தவர்
- ஸந்த்யாவந்தனம், ப்ரும்மயக்யம், ச்ராத்தம், நித்ய வேத பாராயணம் போன்ற கர்மாக்களை காலம் தவறாமல் 90 வயதிலும் முதுமை, உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்து வந்தவர்
- 'தக்ஷிணாபத மாளவ்யா', 'அமரபாரதி' நடராஜ சர்மா என்று மகாபெரியவாளால் அன்புடன் கௌரவிக்கப்பட்டு, நடத்தப்பட்டவர்
- 1940-50களில் தன் மனைவி சந்தோஷத்துடனும், தர்ம கார்யங்களில் இருந்த ஆர்வத்துடனும் அளித்த சுமார் 100 சவரன் ஆபரணங்களைக் கொண்டு, ஸம்ஸ்க்ருத பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சிறப்பாக நடத்தியவர்
- சுதந்திரப்போராட்ட வீரர், கல்லூரி வாழ்க்கையில் திரு. K. பாலதண்டாயுதம் (CPI) அவர்களுடன் சேர்ந்து சிதம்பரம் கொள்ளிடம் பாலத்தைத் தகர்க்க கை எறிகுண்டு வைத்த முயற்சியில் ஒரு கண்ணை இழந்தவர், சிறை சென்றவர்
- ஜிம்னாஸ்டிக், வாலிபால் டீம் கேப்டன்
- சமுதாய நலன்களுக்காக பல போராட்டங்களை மக்களைத்திரட்டி நடத்தி, கைதாகி வெற்றி
கொண்டவர்

என்னுடைய தாத்தா:
- குடும்பத்தின் ரோல் மாடல்.
- எங்கள் அனைவருக்கும் ஒழுக்கம், சாஸ்த்ரம், வேதம், ஓயாத உழைப்பு, பிரதி பலன் கருதாத ஸமூக சேவை எனப் பல விஷயங்களை தானும் கடைபிடித்து, கற்பித்து, வழி நடத்தியவர்.

No comments: