Oct 28, 2008
People who brought me here - P. N. Jayaraman
- S.S.L.C வரை படிப்பு
- காபிப் பொடி கடை, கான்க்ரீட் மின்கம்பங்கள் போடும் வேலை, திருச்சி UDC (உருமு தனலக்ஷ்மி காலேஜ்)-ல் ஆபீஸ் அஸிஸ்டண்ட், TVS கம்பெனியில் கேன்டீனில், புஸ்தகக் கடை, ஸ்லேட் தயாரிக்கும் இடம் என பல வேலை பார்த்து விட்டு, தமிழகக் காவல் துறையில் முதல் நிலைக் காவலராக (Gr. I Constable) சேர்ந்தவர்
- இவர்கள் பிரிவுதான் முதன் முதலில் கறுப்புக் குல்லாய் அணிந்து, மக்கள் மத்தியில் பவனி வந்தவர்கள்
(அதற்கு முன் சிவப்புத் தொப்பி )
- காவல் துறையில் பொது மக்களிடம் அன்பு, தவறு செய்பவர்களுக்கு பயம் என இருந்தவர்களில் இவரும் ஒருவர்
- படிப் படியாக நேர் வழியில் முன்னேறி, உதவி ஆய்வாளர் வரை (Sub-Inspector of Police) உயர்ந்தவர்
- சட்டம் மற்றும் ஒழுங்கு (Law & Order), பல்வேறு உளவுத் துறைகளில் (Security, Special Branch, Special Branch CID, Q Branch) பணியாற்றியவர்
- ஏறக்குறைய 26 வருடங்கள் இனிப்பான உணர்வுகளுடன் காவல் துறையில் இருந்து பொது மக்களுக்கு நல்ல பல காரியங்களை செய்து விட்டு, அதே நோக்கத்திற்காக விருப்ப ஓய்வில் வெளி வந்தவர்
- சுதேசிப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்
- 1999-ல் எதிர் கால தேசம் மற்றும் இளைய சமுதாயத்தின் நலம் இவைகளைக் கருத்தில் கொண்டு, கிராம குழந்தைகளுக்காக மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை ஆரம்பித்தார்
- இந்தப் பள்ளி முதலில் அகில பாரத சிக்ஷா சம்ஸ்தான், புது டெல்லி மற்றும் வித்யா பாரதி, தமிழ்நாடு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு நமது கலாசார 'சிசுவாடிகா' முறையில் கல்வி போதித்து வந்தது
- குழந்தைகள் 'சுமையில்லை, கவலையில்லை, பதட்டமில்லை' (No Carry! No Worry!! No Hurry!!!) என்ற முறையில் சிறந்த கல்வியை, சுலபமாக, விளையாட்டு வழியில் 5-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்
- தேவையைக் கருதி, 2004-ல் தமிழக அரசின் கல்வித் துறையின் ஒப்புதலையும் இப்பள்ளி பெற்றது
- ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து முன்னணி ஸ்தாபகர் திரு. ராமகோபாலன், சமூக சேவகர் டாக்டர். கோபாலன், தமிழகக் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு. S. குமாரஸ்வாமி I.P.S, ஜன கல்யான் மாநில அமைப்பாளர் திரு. ஈஸ்வரன், மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் என பலர் இப்பள்ளிக்கு வருகை புரிந்து பாராட்டிச் சென்றுள்ளனர் .
- இப்பள்ளிக் குழந்தைகள் யோகா, ட்ராயிங், தடகளம் எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றுள்ளனர்.
என்னுடைய அப்பா:
ஸமூக சேவையில் அவருடைய தொலைநோக்குத் திட்டங்கள், அவைகளை செயல்படுத்தும் விதம்,
நடை, வேகம், மிடுக்கு, தைரியம்,
தடைகளை மீறி நினைத்ததை முடிக்கும் பிடிவாதம்,
பாராட்டியும் விட்டுக்கொடுத்தும் அடுத்தவர்களை வளர்க்கும் ஸ்டைல்,
நல்லது, கெட்டதை சொல்லிவிட்டு முடிவெடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டு விடுதல் ,
எனப் பல விஷயங்கள் இவரைப் பற்றியது.
- இப்பள்ளிக்கு தயை மிகுந்தவர்கள் வருகை புரிந்து, குழந்தைகள் மற்றும் பள்ளி நடவடிக்கைகளை பார்த்து குறைகள் ஏதேனும் இருப்பின் நிர்வாகிகளிடம் கூறி, குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளி வளர்ச்சிக்கும் தாராளமாக பண உதவி புரிய வேண்டுகிறோம்:
முகவரி:
ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா,
3/21, கம்பரசன்பேட்டை அக்ரஹாரம்,
திருச்சிராப்பள்ளி 620101
தொலைபேசி: 91-0431-2701848
People who brought me here - Sri. P. N. Sankararaman
- திருச்சி SIT (சேஷசாயி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி) யில் சிவில் இஞ்சிநீயரிங் பிரிவில் பட்டம் பெற்றவர்
- 6 மாதங்கள் IMA (இந்தியன் மிலிடரி அகாடமி) யில் பயிற்சி பெற்றவர்
- தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 23 வருடங்கள் ஜூனியர் இன்ஜினியராகப் பணி புரிந்து, பிறகு விருப்ப ஓய்வு பெற்று, RSS (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) மூலம், தேசப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்
- தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம் உட்பட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்
- அர்த்தம் தெரிந்து வைதீக கர்மாக்களை கடைபிடிப்பவர்
என் பெரியப்பா:
மேற்படி விஷயங்களை எங்களுக்குக் கூறுபவர்.
Oct 27, 2008
People who brought me here - sri 'Amarabhaarathi' Nataraaja sarmaa
- ஸம்ஸ்க்ருத பண்டிதர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்
- திருச்சி SPG (Society for the Propagation of Gospel) கல்லூரியிலும், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியிலும் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பிடித்த ஆசிரியராகப் பணியாற்றியவர்
( இந்த SPG கல்லூரிதான் தற்போது சென்னையின் MCC (மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்) )
- வேத மந்த்ரங்களின் அர்த்தம் தெரிந்தவர்
- ஸந்த்யாவந்தனம், ப்ரும்மயக்யம், ச்ராத்தம், நித்ய வேத பாராயணம் போன்ற கர்மாக்களை காலம் தவறாமல் 90 வயதிலும் முதுமை, உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்து வந்தவர்
- 'தக்ஷிணாபத மாளவ்யா', 'அமரபாரதி' நடராஜ சர்மா என்று மகாபெரியவாளால் அன்புடன் கௌரவிக்கப்பட்டு, நடத்தப்பட்டவர்
- 1940-50களில் தன் மனைவி சந்தோஷத்துடனும், தர்ம கார்யங்களில் இருந்த ஆர்வத்துடனும் அளித்த சுமார் 100 சவரன் ஆபரணங்களைக் கொண்டு, ஸம்ஸ்க்ருத பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சிறப்பாக நடத்தியவர்
- சுதந்திரப்போராட்ட வீரர், கல்லூரி வாழ்க்கையில் திரு. K. பாலதண்டாயுதம் (CPI) அவர்களுடன் சேர்ந்து சிதம்பரம் கொள்ளிடம் பாலத்தைத் தகர்க்க கை எறிகுண்டு வைத்த முயற்சியில் ஒரு கண்ணை இழந்தவர், சிறை சென்றவர்
- ஜிம்னாஸ்டிக், வாலிபால் டீம் கேப்டன்
- சமுதாய நலன்களுக்காக பல போராட்டங்களை மக்களைத்திரட்டி நடத்தி, கைதாகி வெற்றி
கொண்டவர்
என்னுடைய தாத்தா:
- குடும்பத்தின் ரோல் மாடல்.
- எங்கள் அனைவருக்கும் ஒழுக்கம், சாஸ்த்ரம், வேதம், ஓயாத உழைப்பு, பிரதி பலன் கருதாத ஸமூக சேவை எனப் பல விஷயங்களை தானும் கடைபிடித்து, கற்பித்து, வழி நடத்தியவர்.
People who Brought me here
இந்த நபர்களில் குடும்பப் பெரியவர்கள், சமுதாயப் பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியப் பெருமக்கள் என இன்னும் பலரும் அடக்கம். கூறும் விஷயங்கள் சில சமயம் பிடிக்காததாகவும், இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாததாகவும், பின்பற்ற முடியாததாகவும் தோன்றும். சில சமயம் பின்பற்றி இருக்கவும் தவறி இருப்போம். இந்தப் பெருமக்களின் தாக்கம் நம்மிடம் என்றும் இருக்கும். இவர்களில் பலர் நம்மில் பெரியவர்கள். ஒவ்வொருவரையும் காலம் கொள்ளும். அதற்குள் இவர்களிடமிருந்து விஷயங்களை கறந்து கொண்டால் பலன் நமக்குத்தான். இனிமேலாவது விரைவோம், கறப்போம், சிறப்போம்.
இந்தப் பகுதி என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணமான அந்தப் பெரியவர்களைப் பற்றியது. நினைவில் தோன்றியதை எழுதுகிறேன். எந்த வரிசையும், இலக்கணமும் கிடையாது.
குடும்பத்தினர்:
ஸ்ரீமான் 'அமரபாரதி' P. M. நடராஜ சர்மா
ஸ்ரீமான் P. N. சங்கரராமன்
ஸ்ரீமான் P. N. ஜயராமன்
ஸ்ரீமான் P. N. பரசுராமன்
ஸ்ரீமான் P. N. ராமகிருஷ்ணன்
ஸ்ரீமான் P. N. பலராமன்
ஸ்ரீமதி மீனாக்ஷி நாகராஜன்
ஸ்ரீமதி புவனேச்வரி கோவிந்தன்
ஸ்ரீமான் J. கல்யாணராமன் (எ) சந்திரசேகரன்
சமூகப் பெரியவர்கள்:
மகா பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
புதுப் பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
வாரியார் சுவாமிகள்
வேங்கட சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் (எ) V. S. மாமா
கருப்பத்தூர் சந்திரசேகர கனபாடிகள்
ஆசிரியர்கள்:
ஸ்ரீ சந்தானம்
ஸ்ரீ சார்லஸ்
Major. ராமகிருஷ்ணன்
Lt. Col. V. சேகர்
அசோக் குமார்
Centum செல்வராஜ்
ஸ்ரீ ராஜாராம்
ஸ்ரீ R. கிருஷ்ணமாச்சாரி
பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்
ஸ்ரீ சுப்ரமண்யன்
ஸ்ரீமதி அலிமா பீவி
ஸ்ரீமதி ஜெஸ்ஸி
இனி இவர்களைப் பற்றி கொஞ்சம் விவரமாக:
Oct 26, 2008
Poetic Excellence of Mahakavi Kaalidoss - a Nector Drop
कस्या: पुत्री ? कनकलताया: |
हस्ते किम ते? ताली पत्रं
का वा रे खा? क - ख - ग - घ ||
பொருள்:
போஜ ராஜா ஒரு சமயம், க - வரிசையை (ka-क, kha-ख, ga-ग, gha-घ) மட்டும் கூறி , அதை வைத்து ஒரு பாடலை எழுதச் சொன்னார். சபையில் இருந்த ஒருகவிஞராலும் எழுத முடியவில்லை. இதை வைத்து என்ன, எப்படி எழுதுவதுஎன்று குழம்பிக் கொண்டிருந்தனர். மகாகவி காளிதாசர் கீழே உள்ள சாராம்சத்தில்உடனே ஒரு பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார்:
பாடல்:
குழந்தாய், உன் பெயர் என்ன? காஞ்சனமாலா.
யாருடைய பெண் ? கானகலதாவின்.
கையில் என்ன ? பனையோலை.
என்ன எழுதி இருக்கு? (ka-क, kha-ख, ga-ग, gha-घ)
Meaning:
One time, The King Bhoja directed his assembly of expert poets to compose a poem which completes with the sequence of letters ka-क, kha-ख, ga-ग, gha-घ. (Note: Such sequence of letters are common in all Indian Languages' structure and are basic as part of Language Learning system.) All the experts were perplexed and in an complex environment of thinking to complete the given work. No one was able to finish that. One of his great poet, Kaalidoss took some time and simply submitted the completed poem as below:
Poem:
Hey Child! What is your name? Kaanchanamaalaa.
Daughtor of whom? Kanakalatha
What is in your hand? Palm leaf
What has written in that? ka-क, kha-ख, ga-ग, gha-घ
Jai Sri Ram...
Samskrit Slokam with Usage of 8 Cases
रामं रमेशं भजे
रामेनाभिहता निशाचर चमू:
रामाय तस्मै नम:|
रामान्नास्ति परायणं परतरं
रामस्य दासोस्म्यहम
रामे सिध्धलय: सदाभवतुमे
हे राम मामुद्धर ||
பொருள்:
ராமன் அரசர்களில் சிறந்தவராக எப்பொழுதும் வெற்றியுடன் விளங்குகிறார்.
அப்படிப்பட்ட ரமை(லக்ஷ்மி) யின் கணவரான ராமனைத் துதிப்போம்.
ராமனால் அரக்கர்களின் கூட்டம் அழிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட ராமனுக்கு வணக்கம்.
ராமனை விட மேலாக வாழ்ந்து காட்டியவர்கள், மேலானவர்கள் இல்லை.
அப்படிப்பட்ட ராமனுடைய அடிமையாக நான் உள்ளேன்.
ராமனுடன் இரண்டறக் கலந்த நிலை எப்பொழுதும் எனக்கு இருக்கட்டும்.
ஹே ராமா! என்னை உயர்த்தி விடு.
குறிப்பு: இந்த சுலோகத்தின் சிறப்பு, இதன் ஒவ்வொரு வாக்யமும் ஒரு வேற்றுமை உருபைக் கொண்டிருப்பதே. ராமன், ராமனை, ராமனுக்கு, ...
Translation:
Raam, the crown-jewel of kings remains ever victorious.
I worship Raam, the Lord of Lakshmi (the Goddess of riches).
The daemons' flock had been totally destroyed by Raam
Salutations to Raam of such valor.
No other person had lived a life par excellence, none is above him.
I am a slave of Raam, of above qualities.
Let there be a total amalgamation of me with Raam.
Hey Raam! Thou lift me up.
Note: The special characteristic of this poem is that it contains various Cases, such as Nominative, Accusative, Instrumental, ...Vocative.
Jai Sri Ram!!!
Oct 1, 2008
sāre jahān se acchā
For more details : http://en.wikipedia.org/wiki/Saare_Jahan_Se_Achcha
sāre jahān se acchā hindostān hamārā
ham bulbulain hai is ki, yeh gulsitān hamārā
ghurbat men hon agar ham, rahta hai dil vatan men
samjho vahīn hamen bhī, dil hain jahān hamārā
parbat voh sab se ūnchā, hamsāya āsmān ka
voh santari hamārā, voh pāsbān hamārā
godi men kheltī hain is ki hazāron nadiyā
gulshan hai jin ke dam se, rashk-e-janān hamārā
aye āb, raud, ganga, voh din hen yād tujhko
utarā tere kināre, jab kārvān hamārā
maz'hab nahīn sikhātā āpas men bayr rakhnā
hindvi hai ham, vatan hai hindostān hamārā
yūnān-o-misr-o-romā, sab miṭ gaye jahān se
ab tak magar hai bāqi, nām-o-nishān hamārā
kuch bāt hai keh hastī, miṭati nahīn hamārī
sadiyon rahā hai dushman, daur-e-zamān hamārā
iqbal ko'ī meharam, apnā nahīn jahān men
m'alūm kya kisī ko, dard-e-nihān hamārā
Translation
Better than the entire world, is our Hindustan;
we are its nightingales of mirth, and it is our garden abode
Though in foreign lands we may reside, with our homeland our hearts abide,
Regard us also to be there, where exist our hearts
That mountain most high, neighbor to the skies;
it is our sentinel; it is our protector
In the lap of whose, play thousands of rivers;
gardens they sustain; the envy-of-the-heavens of ours
O waters of the Ganga mighty, do you recall the day
when on your banks, did land the caravan of ours
Religion does not teach us to harbour grudges between us
Indians we all are; India, our motherland
While Greece, Egypt , Rome have all been wiped out
till now yet remains, this civilization of ours {it has stood the test of time}
Something there is that keeps us,our entity from being eroded
For ages has been our enemy, the way of the world
Iqbal! Is there no soul that could
understand the pain in thy heart?