நிர்மிதாவின் சாகசப் பயணங்கள் - கர்நாடகா தீர்த்த, தல யாத்திரை
4 நாட்களில் 40 கோவில்கள், முடிஞ்சதும் யாராவது அந்த கோவில்ல சாமி நின்னிட்டு இருந்தாரா, ஒக்காந்திட்டு இருந்தாரான்னு கேட்டா எங்களால சரியா சொல்ல முடியுமான்னு நிச்சயமா தெரியல, ஆனா எல்லா சாமியும் எங்கள பாத்திட்டாங்க, 5-7 புராண ப்ரசித்தி பெற்ற நதிகளில் குளிச்சாச்சு. இறையருள் இருந்தால் மறுமுறை நிதானமா போவோம்.
போறோம், இல்ல முடியல, நாலு நாள் போனா குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம ஆய்டும், எனக்கும் முடியவே முடியாதுங்கற மனைவியின் விசும்பலோடு 20 வருஷ டூர் ப்ளான் இப்ப நடந்தேறியது.
27 செப்டம்பர் 2018, வ்யாழக்கிழமை இரவு 1.35 க்கு தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நண்பர் கார்த்திக் மணிகண்டன் வீட்டில் சிற்றுண்டி விருந்து முடித்து, கார் அவரோடது, ட்ரைவர் அவர் ஏற்பாடு, மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஶ்ரவணபெலகொலா போய் சேர்ந்தோம். சிலை கீழே இருக்கும்னு பாத்தா 720 படிகளுள்ள மலைமேலே இருக்கிறார் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர கோமதீஶ்வரர் என்கிற பாஹுபலி. டோலி விசாரிச்சா ஒருவருக்கு போய் வர ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாங்கிறான். மலையே சின்னதா தெரிந்தது அப்போ. படிகளும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் படிகள் போல சப்பை, சப்பையா தான் இருக்கு, நடந்தே போய்டலாம்ன்டாங்க மனைவி. ஏற 20 நிமிஷம், இறங்க 10 நிமிஷம். ஆசம் பாஹுபலி கோவில், நம் புராதன முறைப்படி அடுக்கி, அடுக்கி சேத்து வெச்சிருக்காங்க கோவில், சரிஞ்சிடாம இருக்க பிற்காலத்துல முட்டுக்குடுத்திருக்காங்க பாறாங்கற்களால். தொல்பொருள் இலாகா பார்வையில் இருக்கிறது கோவில் ஃபோட்டோ, வீடியோ கண்டிப்பா எடுக்கக்கூடாதுங்கற போர்ட கூட விடாம ஃபோட்டோ எடுக்கறாங்க நம்மாளுங்க. பாஹுபலி கூட செஃல்பி, லைவ் வீடியோ, ஒக்காந்து கொஞ்ச நேரம் சிவத்யானம் செஞ்சிட்டு இறங்கினோம். மலைமேல பாஹுபலி, ஒரு சமண குரு, என் பையன் மூனு பேரும் ஒரே கோலத்தில் தரிசனம், பிறந்த நாள் ட்ரெஸ்ல.
விந்தியகிரி, சந்த்ரகிரின்னு ரெண்டு மலைகள் இருக்கு இங்க, பாஹுபலி சிலை விந்தியகிரியில் இருக்கு. தன் மகன்கள் 100 பேருக்கும் ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டு, சந்த்ரகிரியில் தங்கி விடுகிறார் சூர்ய வம்ச அரசர், முதல்வன் பாஹுபலி, இளையவன் பரதன், சகோதரர்கள் அனைவரையும் போரில் வென்ற பரதன், பாஹுபலியோடு ஒத்தைக்கு ஒத்த சண்டையில் தோற்று விடுகிறான். எனினும் ஆசைகளின் விபரீதமே சகோதரர்களுக்குள் நடந்த இந்த யுத்தம் என்று தெளிந்த பாஹுபலி ராஜ்யங்களை பரதனிடமே கொடுத்து விட்டு ஒட்டுத்துணியையும் துறந்து காட்டில் தவம் செய்து தம்பிக்கு தவத்தின், த்யாகத்தின் மேன்மையை உணர்த்துகிறார். 12 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களால் நடத்தப்படும் மஹாமஸ்தகாபிஷேக விழாவில் இம்முறை புதுசா ஒரு படிக்கட்டு பாதை திறந்திருக்காங்க ப்ரதமர் மோடி.
பன்ஸ்ன்னு ஒன்னு விக்கறாங்க பெங்களூர் ஹோட்டல்களில், பொட்டிக்கடை பன் எண்ணைல வாட்டி எடுத்தாப்ல இருந்துது. எல்லா கர்நாடகா ஹோட்டல்களிலும் இரவிலும் வெரைட்டி ரைஸ், மீல்ஸ் கிடைக்குது. தமிழ்நாட்டு ஹோட்டல்களில் வெகு, வெகு, வெகு.... அரிதாகக் காணக்கிடைக்கும் காட்சி இது. 50-70 ரூபா மீல்ஸ் எப்ப முடியும், சாயந்தரம் எப்ப வரும், ஒரு கரண்டி மாவுல இட்லி, தோசை வகைகள், போதாக்குறைக்கு 10-15 வருஷங்களா நான், பட்டர் நான், சைட் டிஷ் க்ரேவி, செமி க்ரேவி வேற, கல்லா கட்டி கொள்ளையடிக்கும் நேரம் நம்மூர்ல காலை, மாலைகள். கர்நாடகா இன்னும் மக்களுக்கு இந்த கரிசனத்த காமிச்சிட்டு இருக்கு. வெளிநாட்டு குளிர்பானங்களை இனிமேல் விற்க மாட்டோம்னு புருடா உட்ட பசங்க நம்ம வ்யாபாரிகள், இவனுங்களா நைட் மீல்ஸ் போடப்போறாங்க. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் கிட்ட மதி த்யேட்டருக்கு எதிரில் சபரி ஹோட்டலில் மட்டும் இன்றும் இரவு மீல்ஸ் கிடைக்குது.
இரவு குளிர், மழையில், இருளில் மலைப்பயணம் முடிந்து தர்மஸ்தலா சேர்ந்தோம். நைட் 10 மணிக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், மீல்ஸ், தோசை கிடைக்குது ஹோட்டல்களில் 30 ரூபாய்க்கு. சாப்டுட்டு தேவஸ்தானத்து ஆஃபீஸ்ல ரூம் விசாரிச்சோம், 300 ரூபா டபுள் பெட் அட்டாச்டு பாத்ரூமோட. வர்றவங்களுக்கு ஒரு குறையும் இல்ல இங்க தங்கற இடம் தேவஸ்தானத்து சத்திரங்களில், மதியம் இரவு அன்னதான ப்ரசாதம் இலையில் பரிமாறி. டூரின் இரண்டாம் நாள் காலையில் நேத்ராவதி நதியில் நீராடி, காலை சூரிய பூஜைகள் செய்து தர்மஸ்தலா மஞ்சுநாதர் தரிசனம் முடித்தோம். சமணர்கள் பராமரிப்பில் குருக்கள்களின் பூஜை முறைகளோடு சிவபெருமானாகவும், சமண தீர்த்தங்கரராகவும் வழிபடப்படுகிறார் இங்கு. நிர்வாகத்தார் சுற்று க்ராமங்களில் கல்வி, மருத்துவ சேவைகளையும் செவ்வனே செய்து வருகின்றனர்.
குமாரதாரா நதியில் மதியம் சூரிய பூஜையை முடித்து கரையில் குடிகொண்டிருக்கும் குக்கி சுப்ரமண்யஸ்வாமி தரிசனம் முடித்தோம். இங்கு நாகர்களுக்குக் காவலனாக முருகன் இருக்கிறார். ஆதி சுப்ரமண்யர் சன்னிதியில் நாகராஜனையே முருகனாக வழிபடுகின்றனர்.
உடுப்பி க்ருஷ்ணன் குட்டியா ரம்யமா இருக்கான், வெளில இல்ல நம்ம மனசுல. ஆம், ஒன்பது த்வாரங்கள் கொண்ட நம் ஒவ்வொருவர் இதயத்திலுமே இந்தத் திருடன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் உடுப்பியில் ஒன்பது ஓட்டைகள் கொண்ட ஜன்னல் வழியாகத்தான் க்ருஷ்ண தரிசனம், ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது. நம்மூர் போல குறுக்க நெடுக்க யாரும் சன்னிதியில் நடந்து மறைக்கறதில்ல. 30-40 மாடுகளோட கோ சாலை இருக்கு, தரிசனம் செய்தோம். கோவிலுக்கு எதிரில் மீசையோடு சிவபெருமான் கோவில் தரிசனம் முடிந்து லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே கொல்லூர் மூகாம்பிகையை நோக்கிப் பயணம், இருட்டு, மழை, மலை, காடு, வழியில் ஒரு லைட்டு கூட இல்ல, கோவில்ல கும்பல் இருக்காதுன்னு பாத்தா, ஒரு 600-700 பேர் போல இருக்கு கும்பல், அம்பாள் புறப்பாடு நடந்து, மூலவர் தரிசனமும் முடித்தோம். இங்கயும் சுத்தமான அன்னதானம், சாப்பிட்டு முடித்து, கோவில் ரூம் 300 ரூபாய்க்கு, அயர்ந்து தூங்கினோம், இரண்டாம் நாளும் இனிதே முடிந்தது.
மூன்றாம் நாள் கொல்லூர் சௌபர்ணிகா நதியில் நீராடி காலை சந்த்யா வந்தனம் முடித்து முருடேஶ்வர் சென்றோம். இன்னிக்கு ஸ்டைல்ல பெரிசா சிவன் சிலை பீச்சாங்கரையில், சுத்தி சுத்தி செல்ஃபி எடுத்தோம், 10ரூபாய்க்கு ஒரு குகை மாதிரி அனுபவம், கன்னட குரலில் ஸ்தல வரலாறு அழகான சுதைகளோடு குகைக்குள்ள. இங்க இருக்கற சிலைக்கு பணம் செலுத்தி பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்து மகிழ்கிறார்கள். ராவணன் சிவ தர்சனம் முடித்து, ப்ரசாதமாக அவருடைய விக்ரஹம் ஒன்றையும் தன் தேசத்திற்கென்று சிவனிடம் பெற்றுச் செல்கிறான். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த ஸ்தலத்தில் சிறு பையனாக வழியில் இருந்த பிள்ளையாரிடம், மாலை சந்த்யா வந்தனம் செய்து விட்டு வந்து விடுவதாகவும், கீழே வைத்து விடாமல் சிலையை கையிலேயே வைத்துக்கொண்டிருக்குமாறும் கூறி கொடுத்து செல்கிறான். இவன் சொன்னபடி கேக்கவா அவர் இருக்கார். அவர் கீழே வைத்து விடுகிறார். அதை எடுக்க முயற்சிக்கையில் லிங்க மேனிதான் மாட்டுக் காது போல வளைந்ததே தவிர எடுக்க வரவில்லை. அந்த இடமே கோகர்ணம் (பசுவின் காது), நிஜ ஸ்வரூபத்தைக் காட்டிய பிள்ளையாரை வணங்கிச் செல்கிறான் பத்துத்தலையன். இதே வரலாறு கீழே ஸ்ரீரங்கத்திலும் பின்னர் நடந்தது, அவன் தம்பி விபீஷணனிடம் ரெங்கநாதர் விக்ரஹத்திற்காக. கோகர்ணம் போலாம்னு பாத்தா அங்க போயி மூனு மணி நேரம் கழிச்சி சாயந்தரம் 5 மணிக்கு தான் கோவில் திறப்பு, அவ்ளோ நேரம் அங்க இருந்தா மத்த ப்ளான் எல்லாம் டும் ஆய்டும். அதனால கோகர்ணத்த அடுத்த 30 கோவில் டூர்ல சேத்துக்கலாம்னு கூடலி ஶ்ருங்கேரி சங்கராச்சார்ய மடத்த நோக்கிப் பயணித்தோம். வழியில் உலகப்புகழ் ஜோக் நீர்வீழ்ச்சி பரவசமான காட்சி.
துங்கா நதியும், பத்ரா நதியும் கூடுவதால் கூடலின்னு பேரு இந்த க்ராமத்துக்கு. ரெண்டு நதிகளுக்குமிடையில் ராமநாதர் கோவில், சங்கர மடங்கள் கரையில் இருக்கின்றன. சரியான மழை ஒரு மணி நேரத்துக்கு, மழை நின்னதும், குடும்பத்தோட துங்கபத்ரா நதிக்கூடலில் மாலைக் குளியல் அருமையாக, மாலை சந்த்யாவந்தனம், ஜபம், தற்போதைய பீடாதிபதிகள் ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வருபவர் எல்லோருக்கும் பாகுபாடின்றி தர்மோபதேசம் செய்து கொண்டிருக்கிறார். குழந்தைகள், நடுத்தற, பெரிய வயது பெண்கள், ஆண்கள்னு ஒரு டீமுக்கு லீலா ஸரஸ்வதி, சுப்ரமண்யரோட 32 பெயர்களையும் உபதேசம் செய்து திரும்ப சொல்ல வைத்துக்கொண்டிருந்தார், கன்னட மொழியில் புஸ்தகமும் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார் தினமும் வ்யாதிகள், கஷ்டங்கள் நீங்கி, மெமரி பவர், கவனம் ஜாஸ்தியாக. நாங்களும் சேர்ந்து சொன்னோம். இரவு ஶ்ருங்கேரிக்குப் போகப்போவதாக சொன்னோம், நேரமாகிவிடும் குழந்தைகள் வேற இருக்கு, சாப்டுட்டு போங்கோன்னு சொன்னார். பெரியவங்க சொன்னதையெல்லாம் கேட்டிருந்தா நாம ஏன் இப்டி இருக்கோம். சாரதாம்பாள நின்ன கோலத்துல தரிசனம் செய்து விட்டு, சாப்டாம கெளம்பினோம். வழில சோத்துக்கு சிங்கியடிச்சி இரவு உணவா சிப்ஸ், பேக்கரி பப்ஸுன்னு ஹெல்த்தி ஃபுட்டா சாப்டுட்டு ஶ்ருங்கேரிக்குப் பயணம்.. இரவு ஶ்ருங்கேரி தேவஸ்தானத்து சத்திரத்தில் 300 ரூபாய்க்கு தங்கல்.
கூடலி ஶ்ருங்கேரி சங்கரமடம் ஶ்ருங்கேரி ஆச்சார்யரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆதி சங்கரர் மண்டனமிஶ்ரராக அவதரித்திருந்த ப்ரஹ்மாவை வாதத்தில் வென்று ஸுரேஶ்வரர் என்று தன் சீடனாக்கிக்கொண்டார். அவருடைய மனைவியான ஸரஸவாணி ஸரஸ்வதியின் அவதாரம். கணவனை சீடனாக்கிக்கொண்டு தன்னோடு வாதம் புரிந்த ஸரஸவாணியையும் இந்த க்ஷேத்ரத்தில் நின்ற கோலத்தில் வனதுர்கா மந்த்ரங்களால் ஸ்தாபனம் செய்து வழிபட்டார்.
நான்காம் நாள், துங்கா நதிக்கரை, சாரதாம்பாள் கோவிலுக்கு எதிரில் சத்திரம், காலை 6.30 மணியளவில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் சாரதாம்பாள், வித்யா சங்கரர் தரிசனம், கோவிலுக்குள்ளேயே துங்கா நதியில் குளிக்க படிக்கட்டுகள், காலை சந்த்யாவந்தனம் முடித்து, 9 மணிக்கு ஆற்றைக்கடக்கும் பாலத்தை திறந்து விட்டதும் எதிர்க்கரைக்குப் பயணம். ஶ்ருங்கேரி சங்கர மடத்தில் சந்த்ரமௌளீஶ்வரர் பூஜா ஹாலில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஜபம், ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ விதுஶேகரேந்த்ர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் முடிந்து ஹொரநாடு அன்னபூர்னேஶ்வரி கோவில் தரிசனம், அங்கேயே மதிய அன்னதான சாப்பாடு. மாலை தரிசனத்திற்கு பேலூர் சென்னகேசவ பெருமாள் கோவில். மரவேலைப்பாடுகள் போல கல்லுலயே பூந்து வெளையாடியிருக்காங்க நம்ம சிற்பிகள், ஹொய்சால ராஜாக்கள் காலத்து மாடல், நுணுக்கமான வேலைப்பாடுகள், சீலிங், சுத்து சுவர், கோபுரம்னு எல்லா இடங்களிலும், கோவில்ல இருக்கற மொத்த சிற்பங்களையும் இந்த சுத்தற தூண்ல செதுக்கியிருக்கேன், ஏதாவது மிஸ் ஆகியிருந்தா இந்த இடத்துல அதை செதுக்குங்கன்னு ஒரு இடத்த காலியா விட்டிருக்கான் தொழில் திமிர் கொண்ட அந்த சிற்பி. நம்மாளுங்க பக்தி ஜாஸ்தியாகி கொஞ்சம் சிற்பங்கள உடைச்சிருக்காங்க. இந்த தூணும் இப்ப சுத்தறதில்ல.
நைட் 1 மணி ஆய்ட்டதால, நாங்களும் டயர்டு, லேட்டா எழுந்திருந்து அவமானப்படாம இரவு கார்த்தி வீட்டுக்கிட்டயே ஒரு ரூம்ல தங்கிட்டோம். இவ்வளவு தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனப் பலன், காந்தி ஜயந்தி மதியம் கர்னாடக ஐராவதத்துல பயணம். இரவு 11 மணி போல மாமி சமைத்த சீரக மிளகு ரசம், மோர் சாதம் சாப்டுட்டு நல்ல ஓய்வு,
இயற்கை, குளிர், மழை, பீச், அடர்த்தியான காடுகள், சரிவான அடர்த்தியான, கடும் மலைப்பாதைகள், மின் விளக்குகள், ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லாத, பக்கத்துல போனா தான் கண்டுபிடிக்கவே முடியும்ங்கற மாதிரி க்ராமங்களில் இருக்கின்றன நாம் பயணித்த பாதி கோவில்கள். வழி நெடுகிலும் நீரோடு ஆறுகள், கடலோடு சங்கமிக்கும் பேக் வாட்டர் பாலங்கள், பொன்னி அரிசி, ரப்பர், வாழை, பாக்கு, தென்னை, அன்னாசி என கொழிக்கும் வட கர்னாடகா. தண்ணிக்கு அடுத்த மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கு, வேலைக்கும் ஆட்கள் கிடைக்கலன்னு பல காரணங்களால் விவசாயம் அருகிப்போய் கொண்டிருக்கும் நம்ம ஊரப் பாத்திட்டு, நாடி, நரம்பெல்லாம் விவசாய வெறி ஊறினாப்ல இன்னும் இந்த ஊர்கள விட்டு விலகாம, விவசாயத்தை செய்து கொண்டிருக்கும் இந்த மக்களயும், பச்சைப் பட்டு போர்த்திய மண்ணையும், மலைகளையும் பார்த்தா பெருமூச்சும், பொறாமையுமாதான் இருக்கு. ஒவ்வொரு ஸ்தலமும் இங்கேயே தங்கி விடலாம் என இழுக்கின்றன. தோ ஆஃபீஸ்லேந்து கால் வந்தாச்சு. மீண்டும் சந்திப்போம்.
4 நாட்களில் 40 கோவில்கள், முடிஞ்சதும் யாராவது அந்த கோவில்ல சாமி நின்னிட்டு இருந்தாரா, ஒக்காந்திட்டு இருந்தாரான்னு கேட்டா எங்களால சரியா சொல்ல முடியுமான்னு நிச்சயமா தெரியல, ஆனா எல்லா சாமியும் எங்கள பாத்திட்டாங்க, 5-7 புராண ப்ரசித்தி பெற்ற நதிகளில் குளிச்சாச்சு. இறையருள் இருந்தால் மறுமுறை நிதானமா போவோம்.
போறோம், இல்ல முடியல, நாலு நாள் போனா குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம ஆய்டும், எனக்கும் முடியவே முடியாதுங்கற மனைவியின் விசும்பலோடு 20 வருஷ டூர் ப்ளான் இப்ப நடந்தேறியது.
27 செப்டம்பர் 2018, வ்யாழக்கிழமை இரவு 1.35 க்கு தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நண்பர் கார்த்திக் மணிகண்டன் வீட்டில் சிற்றுண்டி விருந்து முடித்து, கார் அவரோடது, ட்ரைவர் அவர் ஏற்பாடு, மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஶ்ரவணபெலகொலா போய் சேர்ந்தோம். சிலை கீழே இருக்கும்னு பாத்தா 720 படிகளுள்ள மலைமேலே இருக்கிறார் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர கோமதீஶ்வரர் என்கிற பாஹுபலி. டோலி விசாரிச்சா ஒருவருக்கு போய் வர ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாங்கிறான். மலையே சின்னதா தெரிந்தது அப்போ. படிகளும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் படிகள் போல சப்பை, சப்பையா தான் இருக்கு, நடந்தே போய்டலாம்ன்டாங்க மனைவி. ஏற 20 நிமிஷம், இறங்க 10 நிமிஷம். ஆசம் பாஹுபலி கோவில், நம் புராதன முறைப்படி அடுக்கி, அடுக்கி சேத்து வெச்சிருக்காங்க கோவில், சரிஞ்சிடாம இருக்க பிற்காலத்துல முட்டுக்குடுத்திருக்காங்க பாறாங்கற்களால். தொல்பொருள் இலாகா பார்வையில் இருக்கிறது கோவில் ஃபோட்டோ, வீடியோ கண்டிப்பா எடுக்கக்கூடாதுங்கற போர்ட கூட விடாம ஃபோட்டோ எடுக்கறாங்க நம்மாளுங்க. பாஹுபலி கூட செஃல்பி, லைவ் வீடியோ, ஒக்காந்து கொஞ்ச நேரம் சிவத்யானம் செஞ்சிட்டு இறங்கினோம். மலைமேல பாஹுபலி, ஒரு சமண குரு, என் பையன் மூனு பேரும் ஒரே கோலத்தில் தரிசனம், பிறந்த நாள் ட்ரெஸ்ல.
விந்தியகிரி, சந்த்ரகிரின்னு ரெண்டு மலைகள் இருக்கு இங்க, பாஹுபலி சிலை விந்தியகிரியில் இருக்கு. தன் மகன்கள் 100 பேருக்கும் ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டு, சந்த்ரகிரியில் தங்கி விடுகிறார் சூர்ய வம்ச அரசர், முதல்வன் பாஹுபலி, இளையவன் பரதன், சகோதரர்கள் அனைவரையும் போரில் வென்ற பரதன், பாஹுபலியோடு ஒத்தைக்கு ஒத்த சண்டையில் தோற்று விடுகிறான். எனினும் ஆசைகளின் விபரீதமே சகோதரர்களுக்குள் நடந்த இந்த யுத்தம் என்று தெளிந்த பாஹுபலி ராஜ்யங்களை பரதனிடமே கொடுத்து விட்டு ஒட்டுத்துணியையும் துறந்து காட்டில் தவம் செய்து தம்பிக்கு தவத்தின், த்யாகத்தின் மேன்மையை உணர்த்துகிறார். 12 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களால் நடத்தப்படும் மஹாமஸ்தகாபிஷேக விழாவில் இம்முறை புதுசா ஒரு படிக்கட்டு பாதை திறந்திருக்காங்க ப்ரதமர் மோடி.
பன்ஸ்ன்னு ஒன்னு விக்கறாங்க பெங்களூர் ஹோட்டல்களில், பொட்டிக்கடை பன் எண்ணைல வாட்டி எடுத்தாப்ல இருந்துது. எல்லா கர்நாடகா ஹோட்டல்களிலும் இரவிலும் வெரைட்டி ரைஸ், மீல்ஸ் கிடைக்குது. தமிழ்நாட்டு ஹோட்டல்களில் வெகு, வெகு, வெகு.... அரிதாகக் காணக்கிடைக்கும் காட்சி இது. 50-70 ரூபா மீல்ஸ் எப்ப முடியும், சாயந்தரம் எப்ப வரும், ஒரு கரண்டி மாவுல இட்லி, தோசை வகைகள், போதாக்குறைக்கு 10-15 வருஷங்களா நான், பட்டர் நான், சைட் டிஷ் க்ரேவி, செமி க்ரேவி வேற, கல்லா கட்டி கொள்ளையடிக்கும் நேரம் நம்மூர்ல காலை, மாலைகள். கர்நாடகா இன்னும் மக்களுக்கு இந்த கரிசனத்த காமிச்சிட்டு இருக்கு. வெளிநாட்டு குளிர்பானங்களை இனிமேல் விற்க மாட்டோம்னு புருடா உட்ட பசங்க நம்ம வ்யாபாரிகள், இவனுங்களா நைட் மீல்ஸ் போடப்போறாங்க. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் கிட்ட மதி த்யேட்டருக்கு எதிரில் சபரி ஹோட்டலில் மட்டும் இன்றும் இரவு மீல்ஸ் கிடைக்குது.
இரவு குளிர், மழையில், இருளில் மலைப்பயணம் முடிந்து தர்மஸ்தலா சேர்ந்தோம். நைட் 10 மணிக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், மீல்ஸ், தோசை கிடைக்குது ஹோட்டல்களில் 30 ரூபாய்க்கு. சாப்டுட்டு தேவஸ்தானத்து ஆஃபீஸ்ல ரூம் விசாரிச்சோம், 300 ரூபா டபுள் பெட் அட்டாச்டு பாத்ரூமோட. வர்றவங்களுக்கு ஒரு குறையும் இல்ல இங்க தங்கற இடம் தேவஸ்தானத்து சத்திரங்களில், மதியம் இரவு அன்னதான ப்ரசாதம் இலையில் பரிமாறி. டூரின் இரண்டாம் நாள் காலையில் நேத்ராவதி நதியில் நீராடி, காலை சூரிய பூஜைகள் செய்து தர்மஸ்தலா மஞ்சுநாதர் தரிசனம் முடித்தோம். சமணர்கள் பராமரிப்பில் குருக்கள்களின் பூஜை முறைகளோடு சிவபெருமானாகவும், சமண தீர்த்தங்கரராகவும் வழிபடப்படுகிறார் இங்கு. நிர்வாகத்தார் சுற்று க்ராமங்களில் கல்வி, மருத்துவ சேவைகளையும் செவ்வனே செய்து வருகின்றனர்.
குமாரதாரா நதியில் மதியம் சூரிய பூஜையை முடித்து கரையில் குடிகொண்டிருக்கும் குக்கி சுப்ரமண்யஸ்வாமி தரிசனம் முடித்தோம். இங்கு நாகர்களுக்குக் காவலனாக முருகன் இருக்கிறார். ஆதி சுப்ரமண்யர் சன்னிதியில் நாகராஜனையே முருகனாக வழிபடுகின்றனர்.
உடுப்பி க்ருஷ்ணன் குட்டியா ரம்யமா இருக்கான், வெளில இல்ல நம்ம மனசுல. ஆம், ஒன்பது த்வாரங்கள் கொண்ட நம் ஒவ்வொருவர் இதயத்திலுமே இந்தத் திருடன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் உடுப்பியில் ஒன்பது ஓட்டைகள் கொண்ட ஜன்னல் வழியாகத்தான் க்ருஷ்ண தரிசனம், ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது. நம்மூர் போல குறுக்க நெடுக்க யாரும் சன்னிதியில் நடந்து மறைக்கறதில்ல. 30-40 மாடுகளோட கோ சாலை இருக்கு, தரிசனம் செய்தோம். கோவிலுக்கு எதிரில் மீசையோடு சிவபெருமான் கோவில் தரிசனம் முடிந்து லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே கொல்லூர் மூகாம்பிகையை நோக்கிப் பயணம், இருட்டு, மழை, மலை, காடு, வழியில் ஒரு லைட்டு கூட இல்ல, கோவில்ல கும்பல் இருக்காதுன்னு பாத்தா, ஒரு 600-700 பேர் போல இருக்கு கும்பல், அம்பாள் புறப்பாடு நடந்து, மூலவர் தரிசனமும் முடித்தோம். இங்கயும் சுத்தமான அன்னதானம், சாப்பிட்டு முடித்து, கோவில் ரூம் 300 ரூபாய்க்கு, அயர்ந்து தூங்கினோம், இரண்டாம் நாளும் இனிதே முடிந்தது.
மூன்றாம் நாள் கொல்லூர் சௌபர்ணிகா நதியில் நீராடி காலை சந்த்யா வந்தனம் முடித்து முருடேஶ்வர் சென்றோம். இன்னிக்கு ஸ்டைல்ல பெரிசா சிவன் சிலை பீச்சாங்கரையில், சுத்தி சுத்தி செல்ஃபி எடுத்தோம், 10ரூபாய்க்கு ஒரு குகை மாதிரி அனுபவம், கன்னட குரலில் ஸ்தல வரலாறு அழகான சுதைகளோடு குகைக்குள்ள. இங்க இருக்கற சிலைக்கு பணம் செலுத்தி பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்து மகிழ்கிறார்கள். ராவணன் சிவ தர்சனம் முடித்து, ப்ரசாதமாக அவருடைய விக்ரஹம் ஒன்றையும் தன் தேசத்திற்கென்று சிவனிடம் பெற்றுச் செல்கிறான். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த ஸ்தலத்தில் சிறு பையனாக வழியில் இருந்த பிள்ளையாரிடம், மாலை சந்த்யா வந்தனம் செய்து விட்டு வந்து விடுவதாகவும், கீழே வைத்து விடாமல் சிலையை கையிலேயே வைத்துக்கொண்டிருக்குமாறும் கூறி கொடுத்து செல்கிறான். இவன் சொன்னபடி கேக்கவா அவர் இருக்கார். அவர் கீழே வைத்து விடுகிறார். அதை எடுக்க முயற்சிக்கையில் லிங்க மேனிதான் மாட்டுக் காது போல வளைந்ததே தவிர எடுக்க வரவில்லை. அந்த இடமே கோகர்ணம் (பசுவின் காது), நிஜ ஸ்வரூபத்தைக் காட்டிய பிள்ளையாரை வணங்கிச் செல்கிறான் பத்துத்தலையன். இதே வரலாறு கீழே ஸ்ரீரங்கத்திலும் பின்னர் நடந்தது, அவன் தம்பி விபீஷணனிடம் ரெங்கநாதர் விக்ரஹத்திற்காக. கோகர்ணம் போலாம்னு பாத்தா அங்க போயி மூனு மணி நேரம் கழிச்சி சாயந்தரம் 5 மணிக்கு தான் கோவில் திறப்பு, அவ்ளோ நேரம் அங்க இருந்தா மத்த ப்ளான் எல்லாம் டும் ஆய்டும். அதனால கோகர்ணத்த அடுத்த 30 கோவில் டூர்ல சேத்துக்கலாம்னு கூடலி ஶ்ருங்கேரி சங்கராச்சார்ய மடத்த நோக்கிப் பயணித்தோம். வழியில் உலகப்புகழ் ஜோக் நீர்வீழ்ச்சி பரவசமான காட்சி.
துங்கா நதியும், பத்ரா நதியும் கூடுவதால் கூடலின்னு பேரு இந்த க்ராமத்துக்கு. ரெண்டு நதிகளுக்குமிடையில் ராமநாதர் கோவில், சங்கர மடங்கள் கரையில் இருக்கின்றன. சரியான மழை ஒரு மணி நேரத்துக்கு, மழை நின்னதும், குடும்பத்தோட துங்கபத்ரா நதிக்கூடலில் மாலைக் குளியல் அருமையாக, மாலை சந்த்யாவந்தனம், ஜபம், தற்போதைய பீடாதிபதிகள் ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வருபவர் எல்லோருக்கும் பாகுபாடின்றி தர்மோபதேசம் செய்து கொண்டிருக்கிறார். குழந்தைகள், நடுத்தற, பெரிய வயது பெண்கள், ஆண்கள்னு ஒரு டீமுக்கு லீலா ஸரஸ்வதி, சுப்ரமண்யரோட 32 பெயர்களையும் உபதேசம் செய்து திரும்ப சொல்ல வைத்துக்கொண்டிருந்தார், கன்னட மொழியில் புஸ்தகமும் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார் தினமும் வ்யாதிகள், கஷ்டங்கள் நீங்கி, மெமரி பவர், கவனம் ஜாஸ்தியாக. நாங்களும் சேர்ந்து சொன்னோம். இரவு ஶ்ருங்கேரிக்குப் போகப்போவதாக சொன்னோம், நேரமாகிவிடும் குழந்தைகள் வேற இருக்கு, சாப்டுட்டு போங்கோன்னு சொன்னார். பெரியவங்க சொன்னதையெல்லாம் கேட்டிருந்தா நாம ஏன் இப்டி இருக்கோம். சாரதாம்பாள நின்ன கோலத்துல தரிசனம் செய்து விட்டு, சாப்டாம கெளம்பினோம். வழில சோத்துக்கு சிங்கியடிச்சி இரவு உணவா சிப்ஸ், பேக்கரி பப்ஸுன்னு ஹெல்த்தி ஃபுட்டா சாப்டுட்டு ஶ்ருங்கேரிக்குப் பயணம்.. இரவு ஶ்ருங்கேரி தேவஸ்தானத்து சத்திரத்தில் 300 ரூபாய்க்கு தங்கல்.
கூடலி ஶ்ருங்கேரி சங்கரமடம் ஶ்ருங்கேரி ஆச்சார்யரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆதி சங்கரர் மண்டனமிஶ்ரராக அவதரித்திருந்த ப்ரஹ்மாவை வாதத்தில் வென்று ஸுரேஶ்வரர் என்று தன் சீடனாக்கிக்கொண்டார். அவருடைய மனைவியான ஸரஸவாணி ஸரஸ்வதியின் அவதாரம். கணவனை சீடனாக்கிக்கொண்டு தன்னோடு வாதம் புரிந்த ஸரஸவாணியையும் இந்த க்ஷேத்ரத்தில் நின்ற கோலத்தில் வனதுர்கா மந்த்ரங்களால் ஸ்தாபனம் செய்து வழிபட்டார்.
நான்காம் நாள், துங்கா நதிக்கரை, சாரதாம்பாள் கோவிலுக்கு எதிரில் சத்திரம், காலை 6.30 மணியளவில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் சாரதாம்பாள், வித்யா சங்கரர் தரிசனம், கோவிலுக்குள்ளேயே துங்கா நதியில் குளிக்க படிக்கட்டுகள், காலை சந்த்யாவந்தனம் முடித்து, 9 மணிக்கு ஆற்றைக்கடக்கும் பாலத்தை திறந்து விட்டதும் எதிர்க்கரைக்குப் பயணம். ஶ்ருங்கேரி சங்கர மடத்தில் சந்த்ரமௌளீஶ்வரர் பூஜா ஹாலில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஜபம், ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ விதுஶேகரேந்த்ர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் முடிந்து ஹொரநாடு அன்னபூர்னேஶ்வரி கோவில் தரிசனம், அங்கேயே மதிய அன்னதான சாப்பாடு. மாலை தரிசனத்திற்கு பேலூர் சென்னகேசவ பெருமாள் கோவில். மரவேலைப்பாடுகள் போல கல்லுலயே பூந்து வெளையாடியிருக்காங்க நம்ம சிற்பிகள், ஹொய்சால ராஜாக்கள் காலத்து மாடல், நுணுக்கமான வேலைப்பாடுகள், சீலிங், சுத்து சுவர், கோபுரம்னு எல்லா இடங்களிலும், கோவில்ல இருக்கற மொத்த சிற்பங்களையும் இந்த சுத்தற தூண்ல செதுக்கியிருக்கேன், ஏதாவது மிஸ் ஆகியிருந்தா இந்த இடத்துல அதை செதுக்குங்கன்னு ஒரு இடத்த காலியா விட்டிருக்கான் தொழில் திமிர் கொண்ட அந்த சிற்பி. நம்மாளுங்க பக்தி ஜாஸ்தியாகி கொஞ்சம் சிற்பங்கள உடைச்சிருக்காங்க. இந்த தூணும் இப்ப சுத்தறதில்ல.
நைட் 1 மணி ஆய்ட்டதால, நாங்களும் டயர்டு, லேட்டா எழுந்திருந்து அவமானப்படாம இரவு கார்த்தி வீட்டுக்கிட்டயே ஒரு ரூம்ல தங்கிட்டோம். இவ்வளவு தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனப் பலன், காந்தி ஜயந்தி மதியம் கர்னாடக ஐராவதத்துல பயணம். இரவு 11 மணி போல மாமி சமைத்த சீரக மிளகு ரசம், மோர் சாதம் சாப்டுட்டு நல்ல ஓய்வு,
இயற்கை, குளிர், மழை, பீச், அடர்த்தியான காடுகள், சரிவான அடர்த்தியான, கடும் மலைப்பாதைகள், மின் விளக்குகள், ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லாத, பக்கத்துல போனா தான் கண்டுபிடிக்கவே முடியும்ங்கற மாதிரி க்ராமங்களில் இருக்கின்றன நாம் பயணித்த பாதி கோவில்கள். வழி நெடுகிலும் நீரோடு ஆறுகள், கடலோடு சங்கமிக்கும் பேக் வாட்டர் பாலங்கள், பொன்னி அரிசி, ரப்பர், வாழை, பாக்கு, தென்னை, அன்னாசி என கொழிக்கும் வட கர்னாடகா. தண்ணிக்கு அடுத்த மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கு, வேலைக்கும் ஆட்கள் கிடைக்கலன்னு பல காரணங்களால் விவசாயம் அருகிப்போய் கொண்டிருக்கும் நம்ம ஊரப் பாத்திட்டு, நாடி, நரம்பெல்லாம் விவசாய வெறி ஊறினாப்ல இன்னும் இந்த ஊர்கள விட்டு விலகாம, விவசாயத்தை செய்து கொண்டிருக்கும் இந்த மக்களயும், பச்சைப் பட்டு போர்த்திய மண்ணையும், மலைகளையும் பார்த்தா பெருமூச்சும், பொறாமையுமாதான் இருக்கு. ஒவ்வொரு ஸ்தலமும் இங்கேயே தங்கி விடலாம் என இழுக்கின்றன. தோ ஆஃபீஸ்லேந்து கால் வந்தாச்சு. மீண்டும் சந்திப்போம்.
- ஸ்ரவணபெலகொலா - வெண்குளம் - கோமதீஶ்வரர்
- தர்மஸ்தலா - நேத்ராவதி - மஞ்சுநாதர்
- கொக்கி - குமாரதாரா - சுப்ரமண்யர்
- உடுப்பி - குளம் - க்ருஷ்ணன் - சந்த்ரமௌளீஶ்வரர்
- கொல்லூர் - சௌபர்ணிகா - மூலவரே பஞ்சலோக மூகாம்பிகை (ஸ்வர்ண ரேகை உள்ள லிங்கரூபம்)
- முருடேஶ்வர் - அரபிக்கடல் - முருடேஶ்வர் (உலகின் 2ஆவது பெரிய சிவன் சிலை, பக்தர்கள் மேலே சென்று பார்க்க லிஃப்ட் வசதி உள்ள ராஜகோபுரத்துடன்)
- கூடலி - துங்கபத்ரா கூடல் - சாரதாம்பாள், கூடலி ஶ்ருங்கேரி சங்கர மடம்
- ஶ்ருங்கேரி - துங்கா - சாரதாம்பாள், ஶ்ருங்கேரி சங்கர மடம்
- பேலூர் - யாகாச்சி ஆறு - சென்னகேசவப் பெருமாள்
1 comment:
Awesome description!
Post a Comment