நவராத்ரி நாயகியர் - தேவியின் 9 வடிவங்கள்
प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी।
तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम् ।।
पंचमं स्कन्दमातेति षष्ठं कात्यायनीति च।
सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमम् ।।
नवमं सिद्धिदात्री च नवदुर्गा: प्रकीर्तिता:।
उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना ।।
ப்ரதமம் ஶைல புத்ரீச, த்விதீயம் ப்ரஹ்மசாரிணீ,
த்ருதீயம் சந்த்ரகண்டேதி, கூஷ்மாண்டேதி சதுர்த்தகம்
பஞ்சமம் ஸ்கந்தமாதேதி, ஷஷ்ட காத்யாயனீதி ச
ஸப்தமம் காலராத்ரீதி, மஹாகௌரீதி சாஷ்டமம்
நவமம் ஸித்திதாத்ரீச நவதுர்கா: ப்ரகீர்திதா:
உக்தான்யேதானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா.
ஶைலபுத்ரீ(மலைமகள்), ப்ரஹ்மசாரிணீ (மாணவி), சந்த்ரகண்டா(பிறைசூடி), கூஷ்மாண்டா (பேரண்ட பூசணி வடிவானவள்), ஸ்கந்தமாதா, (கந்தக்கடவுளின் அன்னை), காத்யாயனீ(காத்யாயன ரிஷியின் மகள்),
காளராத்ரீ (கும்மிருட்டு போன்ற கரிய உருவினள்), மஹாகௌரீ (ஐந்து வயது
குழந்தை வடிவினள்), ஸித்திதாத்ரீ (பலனளிப்பவள்) என்று
நவதுர்க்கைகள் போற்றப்படுகிறார்கள்.
ஸ்ருஷ்டிகர்த்தாவான ப்ரஹ்மாவால் இந்தப் பெயர்கள் கூறப்பட்டன
நாள் 1: ஶைலபுத்ரீ
(மலைமகள்)
वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखराम्।
वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीम् ॥
வந்தே வாஞ்சிதலாபாய சந்த்ரார்த்தக்ருத சேகராம்
வ்ருஷாரூடாம் ஶூலதராம் ஶைலபுத்ரீம் யஶஸ்வினீம்
பொருள்:
பாதி நிலவை சிரத்தில் சூடியவளும், காளையின் மேல் ஆரோஹணித்து
வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், புகழைத்தரும்
ஶைலபுத்ரியுமாகிய உன்னை விரும்பிய பலன்களின் பொருட்டு
வணங்குகிறேன்
நாள் 2: ப்ரஹ்மசாரிணீ
(ப்ரஹ்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவள்)
दधाना करपद्माभ्यामक्षमाला-कमण्डलू ।
देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा॥
ததாநா கரபத்மாப்யாம் அக்ஷமாலா கமண்டலு
தேவீ ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்யனுத்தமா
பொருள்:
அக்ஷமாலை, கமண்டலத்தை தன் தாமரைக் கரங்களில் ஏந்தியவளும் ,
கற்பனைக்கெட்டாத மேன்மையானவளுமான அன்னை பிரம்மச்சாரிணி
எனக்கு அருள வேண்டும்
நாள் 3: சந்த்ரகண்டா
(பிறைசூடி)
पिण्डजप्रवरारूढा चण्डकोपास्त्रकेर्युता।
प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता॥
பிண்டஜப்ரவராரூடா சந்த்ரகோபாஸ்த்ரகேர்யுதா,
ப்ரஸாதம் தனுதே மஹ்யம் சந்த்ரகண்டேதி விஶ்ருதா
பொருள்:
சிம்மத்தின் மீது ஏறி வருபவளும், சந்த்ரகண்டா என்று புகழப்படுபவளும்,
கடும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டவளுமாகிய தேவி
எனக்கு ப்ரஸாதம் அளிக்கட்டும்
நாள் 4: கூஷ்மாண்டா
(பேரண்ட பூசணி வடிவானவள்)
सुरासम्पूर्णकलशं रुधिराप्लुतमेव च।
दधाना हस्तपद्माभ्यां कूष्माण्डा शुभदाऽस्तु मे॥
ஸுராஸம்பூர்ண கலஶம் ருதிராப்லுதமேவச
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூஷ்மாண்டா ஶுபதாஸ்துமே
பொருள்:
தாமரை போன்ற கரங்களில் ரத்தத்தின் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் நிறைந்த இரு கலசம் ஏந்தியவளும் ஆன தேவி குஷ்மாண்டா எனக்கு நன்மை அளிப்பவளாக இருக்கட்டும்
நாள் 5: ஸ்கந்தமாதா
(குமரக்கடவுளின் அன்னை)
सिंहासनगता नित्यं पद्माश्रितकरद्वया।
शुभदाऽस्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी॥
ஸிம்ஹாசனகதா நித்யம் பத்மாஶ்ரிதகரத்வய
ஶுபதாஸ்து சதா தேவி ஸ்கந்தமாதா யஶஶ்வினீ
பொருள்:
எப்பொழுதும் அரியணையில் வீற்றிருப்பவளும், இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தியவளும், ஸ்கந்தனின் தாயும், புகழோங்கியவளுமான தேவி எப்பொழுதும் நன்மையை அளிப்பவளாக இருக்கட்டும்
நாள் 6: காத்யாயனீ
(காத்யாயரின் மகள்)
चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना।
कात्यायनी शुभं दद्याद्देवी दानव-घातिनी॥
சந்த்ரஹாஸோஜ்வலகரா ஶார்தூலவர வாஹனா
காத்யாயனீ ஶுபம் தத்யாத் தேவி தானவ-காதினி
பொருள்:
ஒளி வீசும் சந்த்ரஹாஸம் என்ற வாளைக் கையில் கொண்டவளும், வலிமைவாய்ந்த புலியின் மீது வீற்றிருப்பவளும், அசுர சக்திகளை அழிப்பவளுமான அன்னை காத்யாயனி நன்மையை அளிக்கட்டும்
நாள் 7: காளராத்ரீ
(கும்மிருட்டு போன்ற கரிய உருவினள்)
एकवेणी जपाकर्णपूरा नग्ना खरास्थिता।
लम्बोष्ठी कर्णिकाकर्णी तैलाभ्यक्तशरीरिणी॥
वामपादोल्लसल्लोहलताकण्टकभूषणा।
वर्धन्मूर्धध्वजा कृष्णा कालरात्रिर्भयङ्करी॥
ஏகவேணீ ஜபாகர்ணபூரா நக்னா கராஸ்திதா
லம்போஷ்டீ கர்ணிகாகர்ணா தைலாப்யக்தஶரீரிணீ
வாமபாதோல்ல ஸல்லோஹலதாகண்டக பூஷணா,
வர்தன்மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரி பயங்கரி
பொருள்:
ஒற்றை ஜடையுள்ளவளும், செம்பருத்தி மலர்களை காதுகளில் அணிந்தவளும், ஆடையற்றவளும், கழுதை மேல் வீற்றிருப்பவளும், இருகாதுகள் வரை நீண்ட நீளமான உதடுகளை உடையவளும், எண்ணெய் பூசிய உடலை உடையவளும், இடது பாதத்தில் மலர்கள் நிறைந்த முற்கொடிகளை கொலுசாக அணிந்தவளும், கருப்பு நிற கொடியைக் கொண்டவளும் அச்சத்தைத் தருபவளுமான காளராத்ரியை வணங்குகிறேன்.
நாள் 8: மஹாகௌரீ
(ஐந்து வயது குழந்தை வடிவினள்)
श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः।
महागौरी शुभं दद्यान्महादेव-प्रमोददा॥
ஶ்வேதே வ்ருஷே ஸமாரூடா ஶ்வேதாம்பரதரா ஶுசி:
மஹாகௌரீ ஶுபம் தத்யான் மஹாதேவ ப்ரமோததா
பொருள்:
வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும், தூய்மையானவளும், மகாதேவருக்கு மகிழ்ச்சியை அளிப்பவளுமான மகாகௌரி நன்மையை அளிக்கட்டும்
நாள் 9:ஸித்திதாத்ரீ
(பலனளிப்பவள்)
सिद्धगन्धर्व-यक्षाद्यैरसुरैरमरैरपि।
सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी।।
ஸித்தகந்தர்வ, யக்ஷாத்யை: அஸுரை: அமரைரபி
ஸேவ்யமானா ஸதா பூயாத் ஸித்திதா ஸித்திதாயினீ
பொருள்:
சித்தர், கந்தர்வர், யக்ஷர், அஸுரர்கள், ஸுரர்கள் (தேவர்கள்) என அனைவராலும் எப்போதும் வணங்கப்படுபவளான ஸித்திதாத்ரி வேண்டிய பலனளிப்பவளாக இருக்கட்டும்
No comments:
Post a Comment