நிர்மிதாவின் சாகசப்பயணங்கள் - கொங்கு தேச யாத்திரை
22 திசம்பர் 2018, சனிக்கிழமை...இங்க்லீஷ் மாசங்கள யூஸ் பண்ணுவோம்... ஆனா அத இப்டி தமிழ்ல திசம்பர்னு எழுதுவோம்...வி ஆர் டமிலியன்ஸ். இந்த சத்யமங்கலக் காடுகள்ல சந்தன மரங்கள் விசேஷம். அதனால பணம் பண்றவங்களும், அவங்களால வீரப்பனும் விசேஷம். நார்மல் சந்தனம், செஞ்சந்தனம் பூஜைகளுக்கு விசேஷம் தோன்றின காலத்திலிருந்து. அப்டி கொஞ்சம் செஞ்சந்தனக்கட்டைகள் நேர்ல போனா கிடைக்குமான்னு இப்ப நா அந்த ஊருக்குப் போறது தான் விசேஷம். போன டூர்ல உடுப்பில விரல்கட்டை அளவுக்கு செஞ்சந்தனம்னு ஒன்ன வாங்கிண்டு வந்து அப்பா கிட்ட ஏமாந்திட்டன்னு திட்டு வாங்கினது தான் மிச்சம். அதனால செஞ்சந்தனம் பத்தி வனத்துறை அதிகாரிகளிடம் ஒரு உண்மை பேட்டி குட்டியா எடுக்களாம்னும் ஐடியா. சந்தன மரங்கள் நாம வளக்க அனுமதி உண்டு. ஆனா வெட்டினா அரசு டிப்போல தான் கொடுக்கனும். அவங்க தான் ஏலம் விட்டு கமிஷன் போக மிச்சக்காச நமக்குத் தருவாங்க. அப்டி மூணு டிப்போ தான் நம்ம ஸ்டேட்ல இருக்கு, சேலம், சத்யமங்கலம், திருப்பட்டூர்ல.
அப்றம், கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் (அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்கள் பாடினவை) 5-6 தான் மொத்தமே. அவினாசி ஏற்கனவே பாத்தாச்சு, அது அருணகிரிநாதர் பாடல் பெற்ற முருகன் ஸ்தலமும் கூட. கொடுமுடி, திருமுருகன்பூண்டி மற்ற சில. இதத்தவிர சஷ்டிகவசங்கள் அறுபடை வீடுகள் மேலயும் பாலதேவராய ஸ்வாமிகள் அரங்கேற்றம் செய்த சென்னிமலை முருகன், இந்த ஆறு சஷ்டி கவசங்கள்ல திருச்செந்தூர் முருகன் மேல பாடின ஒன்னு தான் நாம தினமும் பாராயணம் செய்யும் ஒன்று, சூலமங்கலம் சகோதரிகள் பாடி வெளியிட்டது. அப்றம் சிவவாக்யர் பூஜை செய்த சிவன் மலை முருகன். காவிரி மேலாண்மை வாரியப்புகழ் மேட்டூர் டாம், பவானி சாகர் டாம் இதெல்லாமும் இந்த தடவை டூர் ப்ளான்ல.
ஆபீசர்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு, பசங்களுக்கு ஸ்கூல்ல லீவு பெர்மிஷன் வாங்கறது இப்ப ரொம்ப கஷ்டம். ரெண்டு பசங்கள்ல ஒருத்தர் பெரிய காலேஜ்ல படிச்சு நெறையா காசு சம்பாதிக்க, அதுக்கு நல்ல ஸ்கூல்ல பளஸ்டூ படிக்க இப்ப நாலாங்க்லாஸ் படிச்சிட்டு இருக்காரு. இன்னொருத்தரும் அதே தேசிய நோக்கத்தோட எல்.கே.ஜி படிச்சிட்டிருக்காரு. இப்ப அரையாண்டு லீவு பத்து நாள். நானும் க்றிஸ்மஸ், ந்யூ இயர்னு எங்க மொதலாளிங்க லீவுல இருப்பாங்கன்னு லீவு வாங்கியிருக்கேன். ஒரு நாள் ட்ரைவர் பேட்டாவுக்கும், லாங் லீவ் ட்ராஃபிக்கும் காரணம் வெச்சி விடிகாலை....1 மணிக்கு கெளம்பறோம்.. வழக்கம் போல ஆஸ்தான ட்ராவல்ஸ் பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்... இந்த தடவ புது பையன் வினோத் குமாரு இண்டிகா எடுத்திட்டு வந்தார்.
நைட் குளிச்சி சாப்டு வண்டி ஏறினோம். ஞாயிறு காலை 9-10 மணிக்கு தான் மேட்டூர் டாம் பாக்க அனுமதி. நாங்க போகவும் சரியா இருந்துது. வழில குளிர் தாங்கல ஆம்பூர் பக்கம்லாம். சரியான பனி. 20 நிமிஷம் வண்டிய ஓரமா நிறுத்திட்டு தூங்கிட்டு, பாதாம் பால் குடிச்சிட்டு கெளம்பினோம்.
1. மேட்டூர் டாம்: தமிழகத்துக்குள்ள வர்ற காவிரிய தேக்கி வைக்கும் முதல் அணை. ஸ்டேன்லி என்பவர் மேற்பார்வையில் கட்டப்பட்டபோது இதுதான் ஆசியாவின் மிக உயரமான, பெரிய நீர் தேக்கம். 2-3 முறை அப்போதைய மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் ப்ரிட்டிஷாரால் கைவிடப்பட்டு, பின்னர் தஞ்சை விவசாயிகள் கோரிக்கையை மைசூர் சமஸ்தானத்து திவான் திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யர் முயற்சியால் அனுமதிக்கடிதம் பெற்று கட்டப்பட்டது. தண்ணீர் முழுவதும் குறையும் போது வரலாற்று சின்னங்கள் வெளியே தெரிகின்றன. இப்ப நம்ம பசங்க மேல இருக்கற நம்பிக்கையா என்னன்னு தெரியல. டாம் மேல போக யாருக்கும் அனுமதி இல்ல. ஒவ்வொரு கேட்லயும் ஓய்வு ராணுவ அதிகாரிகளா இல்ல பணில இருக்காங்களா தெரியல பாதுகாப்புக்கு, டிக்கெட் செக் பண்றதுக்கு. தூரத்துலேந்து தேங்கியிருக்கும் தண்ணிய வேடிக்கை பார்க்க ஜெயலலிதா அம்மா காலத்துல ஒரு டவர் கட்டி வெச்சிருக்காங்க 6 மாடிக்கு. லிஃப்ட் வேல செய்யல. ஒருத்தருக்கு 5 ரூபா டிக்கெட் படியேறி மேல போய் பாக்க. என்னத்த பாக்க. காவிரி குதிச்சி குளிச்சவன இதான் டேம். பாத்துக்கோன்னு கைதிகள பாக்க வரும் விருந்தாளிபோல தூரத்துல ஒரு கூண்டுல நிக்க வெச்சி காமிச்சா... ? கொஞ்சம் பச்சை பசேல்னு வெச்சிருக்காங்க. தண்ணி வரும் வழில வாய்க்கால்ல இறங்கி குளிக்க படிகள் இருக்கு. தண்ணி பாசம் பிடிச்ச வாசனை மூக்க தொளைக்குது. இங்க குளிக்கற திட்டமும் எங்களுக்கு இல்ல. வரலாற்று பதிவுக்கு கெடைச்ச தடுப்புக்கம்பிகள் வழியா ஃபோட்டோக்கள் எடுத்திட்டு வழியில் ஒரு சின்ன ஹோட்டலில் டிஃபன் சாப்டு, கெளம்பினோம்.
2. கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சி: சத்யமங்கலம் டவுன்லேந்து 10 கி.மீ தூரத்துல பவானி ஆத்துல கட்டியிருக்காங்க. இரண்டு முறை கட்டப்பட்டு மன்னர் திறப்புவிழாவிற்கு வரும்போது அணை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, தானும் தன் குடும்பத்தாரும் வருவதை அன்னை பண்ணாரியம்மனும், நஞ்சுண்டேஶ்வரரும் விரும்பவில்லை போலும், நாங்கள் அங்கு வருவதில்லை இனி என்று மன்னர் கூறியதன் பின் மூன்றாம் முறையாக கட்டப்பட்ட தடுப்பணை இன்று நாம் காண்பது. வரிப்புலிகள் இருந்ததாலும், கொடிவேலிகள் இருந்ததாலும் வந்த பெயர் மருவி கொடிவேரி என்று ஆகிவிட்டது. சேற்று மணல் தன்னைத்தானே தூர்வாரிக்கொள்ளும் விதமாக அன்றே கட்டப்பட்டுள்ளது சிறப்பு. தண்ணி எப்பவும் இருக்கும் போல. சூப்பரா இருந்தது அரை மணி நேரத்துக்கும் மேல ஆட்டம் போட்டோம் ட்ரைவர் உட்பட. பாசியில் வழுக்கி அங்கங்க எவனாவது விழுந்திட்டே இருந்தாங்க விழாம இருங்கறது, விழுந்துன்னு விதவிதமா வயசுப்பசங்க பெர்ஃபார்மென்ஸ். மாங்கா, அன்னாசி, கைல வாட்ச், மோதிரம் கட்டி விடுவாங்களே ஜவ்வு மிட்டாய், அதெல்லாம் சாப்டுட்டு சத்யமங்கலப்புகழ் ராம விலாஸ் ஹோட்டல்ல லஞ்ச். சூப்பரா இருந்துது சுத்தம், சுகாதாரம், சர்வீஸ்காரங்க ட்ரெஸ், சூடு, டேஸ்ட். அங்கயே இரவு தங்கவும் விசாரிச்சிட்டு கெளம்பினோம். மறுநாள் உள்ளூர் பவானி ஆத்துல குளிக்கலாம்னு.
3. பண்ணாரி மாரியம்மன்: காலைலேந்து இரவு வரை ஓய்வின்றி தரிசனம் தருகிறாள் அன்னை இங்கு. காட்டுப்பகுதியோட அடிவாரத்துல இருக்கு கோவில். தங்க தேவஸ்தான ரூம்செல்லாமும் இருந்துது. அருமையான தரிசனம். பொண்ணு சூப்பரா பாடினான்னு அம்மாள் மாலை ப்ரசாதமா போட்டாங்க. பெருமையா ப்ரகாரங்கள்ல சுத்தி சுத்தி அதோட ஃபோட்டோ எடுத்திட்டு கெளம்பினோம்.
4. பவானி சாகர் டேம்: சூப்பரா இருக்கு தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டு. ஆசியாவின் மிகப்பெரிய மண் அணைக்கட்டு. பூங்காவும், சிறுவர் விளையாட்டுகளும் பராமரிக்கப்படுகிறது. இதன் நீர் வற்றும்போது தண்டநாயகன் (சேனாதிபதி) கோட்டை எனும் டணாய்க்கன் கோட்டை தெரியும்.
5. கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்கள்
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
இவைகளில் இம்முறை யாத்திரையில் அவினாசியப்பரையும், திருமுருகநாதரையும், மகுடேஶ்வரரையும் தரிசித்தோம். அவினாசி (திருப்புக்கொளியூர்) முருகன் அருணகிரிநாதராலும் பாடப்பெற்றவர். இந்த தலத்தில் தான் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கட்டளைப்பாடலால் மீண்டும் 6ஆண்டு கால வளர்ச்சியோடு திரும்ப வந்த அதிசயம் நிகழ்ந்தது.
6. திருமுருகன்பூண்டி கற்சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை. ஒரே கல்லில் செதுக்கிய தெய்வச்சிலைகளில் மூக்கில் ஆடும் பில்லாக்கு, மேலும், கீழுமாக நகர்த்திப்பார்க்கும் கைவளையல்கள் என திறமையான வேலைப்பாடுகள் நிறைந்தவை. முருகப்பெருமானால் வழிபடப்பட்டவர். சுந்தரர் இரவு தூங்கும்போது சிவபெருமான் பூதங்களைக் கொண்டு அவர் பொருள்களை களவாடினார். காலையில் கூப்பிடு விநாயகரிடம் முறையிட்டப்போது அவர் அருளால் பரமன் இருக்கும் இடத்தை அறிந்து, என் பொருள்களை களவாடப்பட்டிருக்கின்றன. "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே " என்று உரிமையோடு பாடி வழிபட்டு மீண்டும் தன் பொருள்களை பெற்றுக்கொண்டார் சுந்தரர். அவினாசி கோவில் அளவு இங்கு விமர்சையாக கும்பல் இல்லை. மறுநாள் திருவாதிரை. இரவு சென்று திருப்பூரில் தங்கி மறுநாள் ஓய்வு. குழந்தைகளுக்கு பனியன் மெட்டிரியல் ரெடிமேட் ட்ரெஸ்செல்லாம் வாங்கினோம்.
24டிசம்பர் 2018, திங்கள்.
7. சிவன் மலை: காங்கேயத்துக்கு அருகில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. 500 படிகள் கொண்ட மலைக்கு கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம். சிவவாக்கியரால் வழிபடப்பட்ட முருகன். ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூன்று கருக்கருவாள்கள் இருக்கின்றன இந்த பெட்டிக்குள் இப்போது.
8. சென்னிமலை: தேவராய சுவாமிகள் இங்குதான் ஆறுபடை வீடுகளுக்குமான கந்த சஷ்டி கவசங்களை அரங்கேற்றம் செய்தார். இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த 1300 மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது. கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம். கோவிலுக்கு பின்னே பிண்ணாக்கு சித்தர் தவம் செய்த குகை, சமாதி இருக்கின்றன. பொய் சொல்லும் நாக்கு புண் பட்ட நாக்கு என்று அருளிய இவரை புண்ணாக்கு சித்தர் என்றாக்கியது நம் பெருமை.
9. திருப்பாண்டிக்கொடுமுடி மூவர் பாடல் பெற்ற ஸ்தலம். காவிரி இங்கு கிழக்காய் திரும்பி ஓடுகிறது. மும்மூர்த்தி ஸ்தலம். மூன்று முகத்தோடிருக்கும் ப்ரஹ்மனுக்கு பின்னால் இருக்கும் வன்னி மரமே நான்காவது முகமாக அறியப்படுகிறது. ஆண் மரமான இது பூ, காய் தருவதில்லை. 3000 ஆண்டுகளுக்கு மேலான இது மீளுருவாக்கப்பட்டு காக்கப்படுகிறது. இதன் இலைகளை காவிரி நீர்க் குடங்களில் இட்டு பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள். எவ்வளவு நாட்களானாலும் நீர் கெடாமல் இருக்கிறது. காவிரி படித்துறை நன்கு பராமரிக்கப்படுகிறது.
10. நாமக்கல் (நாமகிரி) நரசிம்மர், நாமகிரி தாயாருக்கு எதிரில் வெட்ட வெளியில் 18 அடிக்கு ஒரே கல்லில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் தரிசனம் முடித்து இரவுப் பயணம் செய்து விடிகாலை வீடு திரும்பினோம். ட்ரைவர் சின்னப்பையன் ரொம்ப பயமுறுத்திட்டாரு ஓவர் டேக் செய்யும் போதும், முன்னாடி இருக்கும் வண்டிகளுக்கு வெகு அருகில் செல்வதுமாக.
22 திசம்பர் 2018, சனிக்கிழமை...இங்க்லீஷ் மாசங்கள யூஸ் பண்ணுவோம்... ஆனா அத இப்டி தமிழ்ல திசம்பர்னு எழுதுவோம்...வி ஆர் டமிலியன்ஸ். இந்த சத்யமங்கலக் காடுகள்ல சந்தன மரங்கள் விசேஷம். அதனால பணம் பண்றவங்களும், அவங்களால வீரப்பனும் விசேஷம். நார்மல் சந்தனம், செஞ்சந்தனம் பூஜைகளுக்கு விசேஷம் தோன்றின காலத்திலிருந்து. அப்டி கொஞ்சம் செஞ்சந்தனக்கட்டைகள் நேர்ல போனா கிடைக்குமான்னு இப்ப நா அந்த ஊருக்குப் போறது தான் விசேஷம். போன டூர்ல உடுப்பில விரல்கட்டை அளவுக்கு செஞ்சந்தனம்னு ஒன்ன வாங்கிண்டு வந்து அப்பா கிட்ட ஏமாந்திட்டன்னு திட்டு வாங்கினது தான் மிச்சம். அதனால செஞ்சந்தனம் பத்தி வனத்துறை அதிகாரிகளிடம் ஒரு உண்மை பேட்டி குட்டியா எடுக்களாம்னும் ஐடியா. சந்தன மரங்கள் நாம வளக்க அனுமதி உண்டு. ஆனா வெட்டினா அரசு டிப்போல தான் கொடுக்கனும். அவங்க தான் ஏலம் விட்டு கமிஷன் போக மிச்சக்காச நமக்குத் தருவாங்க. அப்டி மூணு டிப்போ தான் நம்ம ஸ்டேட்ல இருக்கு, சேலம், சத்யமங்கலம், திருப்பட்டூர்ல.
அப்றம், கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் (அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்கள் பாடினவை) 5-6 தான் மொத்தமே. அவினாசி ஏற்கனவே பாத்தாச்சு, அது அருணகிரிநாதர் பாடல் பெற்ற முருகன் ஸ்தலமும் கூட. கொடுமுடி, திருமுருகன்பூண்டி மற்ற சில. இதத்தவிர சஷ்டிகவசங்கள் அறுபடை வீடுகள் மேலயும் பாலதேவராய ஸ்வாமிகள் அரங்கேற்றம் செய்த சென்னிமலை முருகன், இந்த ஆறு சஷ்டி கவசங்கள்ல திருச்செந்தூர் முருகன் மேல பாடின ஒன்னு தான் நாம தினமும் பாராயணம் செய்யும் ஒன்று, சூலமங்கலம் சகோதரிகள் பாடி வெளியிட்டது. அப்றம் சிவவாக்யர் பூஜை செய்த சிவன் மலை முருகன். காவிரி மேலாண்மை வாரியப்புகழ் மேட்டூர் டாம், பவானி சாகர் டாம் இதெல்லாமும் இந்த தடவை டூர் ப்ளான்ல.
ஆபீசர்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு, பசங்களுக்கு ஸ்கூல்ல லீவு பெர்மிஷன் வாங்கறது இப்ப ரொம்ப கஷ்டம். ரெண்டு பசங்கள்ல ஒருத்தர் பெரிய காலேஜ்ல படிச்சு நெறையா காசு சம்பாதிக்க, அதுக்கு நல்ல ஸ்கூல்ல பளஸ்டூ படிக்க இப்ப நாலாங்க்லாஸ் படிச்சிட்டு இருக்காரு. இன்னொருத்தரும் அதே தேசிய நோக்கத்தோட எல்.கே.ஜி படிச்சிட்டிருக்காரு. இப்ப அரையாண்டு லீவு பத்து நாள். நானும் க்றிஸ்மஸ், ந்யூ இயர்னு எங்க மொதலாளிங்க லீவுல இருப்பாங்கன்னு லீவு வாங்கியிருக்கேன். ஒரு நாள் ட்ரைவர் பேட்டாவுக்கும், லாங் லீவ் ட்ராஃபிக்கும் காரணம் வெச்சி விடிகாலை....1 மணிக்கு கெளம்பறோம்.. வழக்கம் போல ஆஸ்தான ட்ராவல்ஸ் பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்... இந்த தடவ புது பையன் வினோத் குமாரு இண்டிகா எடுத்திட்டு வந்தார்.
நைட் குளிச்சி சாப்டு வண்டி ஏறினோம். ஞாயிறு காலை 9-10 மணிக்கு தான் மேட்டூர் டாம் பாக்க அனுமதி. நாங்க போகவும் சரியா இருந்துது. வழில குளிர் தாங்கல ஆம்பூர் பக்கம்லாம். சரியான பனி. 20 நிமிஷம் வண்டிய ஓரமா நிறுத்திட்டு தூங்கிட்டு, பாதாம் பால் குடிச்சிட்டு கெளம்பினோம்.
1. மேட்டூர் டாம்: தமிழகத்துக்குள்ள வர்ற காவிரிய தேக்கி வைக்கும் முதல் அணை. ஸ்டேன்லி என்பவர் மேற்பார்வையில் கட்டப்பட்டபோது இதுதான் ஆசியாவின் மிக உயரமான, பெரிய நீர் தேக்கம். 2-3 முறை அப்போதைய மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் ப்ரிட்டிஷாரால் கைவிடப்பட்டு, பின்னர் தஞ்சை விவசாயிகள் கோரிக்கையை மைசூர் சமஸ்தானத்து திவான் திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யர் முயற்சியால் அனுமதிக்கடிதம் பெற்று கட்டப்பட்டது. தண்ணீர் முழுவதும் குறையும் போது வரலாற்று சின்னங்கள் வெளியே தெரிகின்றன. இப்ப நம்ம பசங்க மேல இருக்கற நம்பிக்கையா என்னன்னு தெரியல. டாம் மேல போக யாருக்கும் அனுமதி இல்ல. ஒவ்வொரு கேட்லயும் ஓய்வு ராணுவ அதிகாரிகளா இல்ல பணில இருக்காங்களா தெரியல பாதுகாப்புக்கு, டிக்கெட் செக் பண்றதுக்கு. தூரத்துலேந்து தேங்கியிருக்கும் தண்ணிய வேடிக்கை பார்க்க ஜெயலலிதா அம்மா காலத்துல ஒரு டவர் கட்டி வெச்சிருக்காங்க 6 மாடிக்கு. லிஃப்ட் வேல செய்யல. ஒருத்தருக்கு 5 ரூபா டிக்கெட் படியேறி மேல போய் பாக்க. என்னத்த பாக்க. காவிரி குதிச்சி குளிச்சவன இதான் டேம். பாத்துக்கோன்னு கைதிகள பாக்க வரும் விருந்தாளிபோல தூரத்துல ஒரு கூண்டுல நிக்க வெச்சி காமிச்சா... ? கொஞ்சம் பச்சை பசேல்னு வெச்சிருக்காங்க. தண்ணி வரும் வழில வாய்க்கால்ல இறங்கி குளிக்க படிகள் இருக்கு. தண்ணி பாசம் பிடிச்ச வாசனை மூக்க தொளைக்குது. இங்க குளிக்கற திட்டமும் எங்களுக்கு இல்ல. வரலாற்று பதிவுக்கு கெடைச்ச தடுப்புக்கம்பிகள் வழியா ஃபோட்டோக்கள் எடுத்திட்டு வழியில் ஒரு சின்ன ஹோட்டலில் டிஃபன் சாப்டு, கெளம்பினோம்.
2. கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சி: சத்யமங்கலம் டவுன்லேந்து 10 கி.மீ தூரத்துல பவானி ஆத்துல கட்டியிருக்காங்க. இரண்டு முறை கட்டப்பட்டு மன்னர் திறப்புவிழாவிற்கு வரும்போது அணை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, தானும் தன் குடும்பத்தாரும் வருவதை அன்னை பண்ணாரியம்மனும், நஞ்சுண்டேஶ்வரரும் விரும்பவில்லை போலும், நாங்கள் அங்கு வருவதில்லை இனி என்று மன்னர் கூறியதன் பின் மூன்றாம் முறையாக கட்டப்பட்ட தடுப்பணை இன்று நாம் காண்பது. வரிப்புலிகள் இருந்ததாலும், கொடிவேலிகள் இருந்ததாலும் வந்த பெயர் மருவி கொடிவேரி என்று ஆகிவிட்டது. சேற்று மணல் தன்னைத்தானே தூர்வாரிக்கொள்ளும் விதமாக அன்றே கட்டப்பட்டுள்ளது சிறப்பு. தண்ணி எப்பவும் இருக்கும் போல. சூப்பரா இருந்தது அரை மணி நேரத்துக்கும் மேல ஆட்டம் போட்டோம் ட்ரைவர் உட்பட. பாசியில் வழுக்கி அங்கங்க எவனாவது விழுந்திட்டே இருந்தாங்க விழாம இருங்கறது, விழுந்துன்னு விதவிதமா வயசுப்பசங்க பெர்ஃபார்மென்ஸ். மாங்கா, அன்னாசி, கைல வாட்ச், மோதிரம் கட்டி விடுவாங்களே ஜவ்வு மிட்டாய், அதெல்லாம் சாப்டுட்டு சத்யமங்கலப்புகழ் ராம விலாஸ் ஹோட்டல்ல லஞ்ச். சூப்பரா இருந்துது சுத்தம், சுகாதாரம், சர்வீஸ்காரங்க ட்ரெஸ், சூடு, டேஸ்ட். அங்கயே இரவு தங்கவும் விசாரிச்சிட்டு கெளம்பினோம். மறுநாள் உள்ளூர் பவானி ஆத்துல குளிக்கலாம்னு.
3. பண்ணாரி மாரியம்மன்: காலைலேந்து இரவு வரை ஓய்வின்றி தரிசனம் தருகிறாள் அன்னை இங்கு. காட்டுப்பகுதியோட அடிவாரத்துல இருக்கு கோவில். தங்க தேவஸ்தான ரூம்செல்லாமும் இருந்துது. அருமையான தரிசனம். பொண்ணு சூப்பரா பாடினான்னு அம்மாள் மாலை ப்ரசாதமா போட்டாங்க. பெருமையா ப்ரகாரங்கள்ல சுத்தி சுத்தி அதோட ஃபோட்டோ எடுத்திட்டு கெளம்பினோம்.
4. பவானி சாகர் டேம்: சூப்பரா இருக்கு தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டு. ஆசியாவின் மிகப்பெரிய மண் அணைக்கட்டு. பூங்காவும், சிறுவர் விளையாட்டுகளும் பராமரிக்கப்படுகிறது. இதன் நீர் வற்றும்போது தண்டநாயகன் (சேனாதிபதி) கோட்டை எனும் டணாய்க்கன் கோட்டை தெரியும்.
5. கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்கள்
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
இவைகளில் இம்முறை யாத்திரையில் அவினாசியப்பரையும், திருமுருகநாதரையும், மகுடேஶ்வரரையும் தரிசித்தோம். அவினாசி (திருப்புக்கொளியூர்) முருகன் அருணகிரிநாதராலும் பாடப்பெற்றவர். இந்த தலத்தில் தான் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கட்டளைப்பாடலால் மீண்டும் 6ஆண்டு கால வளர்ச்சியோடு திரும்ப வந்த அதிசயம் நிகழ்ந்தது.
6. திருமுருகன்பூண்டி கற்சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை. ஒரே கல்லில் செதுக்கிய தெய்வச்சிலைகளில் மூக்கில் ஆடும் பில்லாக்கு, மேலும், கீழுமாக நகர்த்திப்பார்க்கும் கைவளையல்கள் என திறமையான வேலைப்பாடுகள் நிறைந்தவை. முருகப்பெருமானால் வழிபடப்பட்டவர். சுந்தரர் இரவு தூங்கும்போது சிவபெருமான் பூதங்களைக் கொண்டு அவர் பொருள்களை களவாடினார். காலையில் கூப்பிடு விநாயகரிடம் முறையிட்டப்போது அவர் அருளால் பரமன் இருக்கும் இடத்தை அறிந்து, என் பொருள்களை களவாடப்பட்டிருக்கின்றன. "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே " என்று உரிமையோடு பாடி வழிபட்டு மீண்டும் தன் பொருள்களை பெற்றுக்கொண்டார் சுந்தரர். அவினாசி கோவில் அளவு இங்கு விமர்சையாக கும்பல் இல்லை. மறுநாள் திருவாதிரை. இரவு சென்று திருப்பூரில் தங்கி மறுநாள் ஓய்வு. குழந்தைகளுக்கு பனியன் மெட்டிரியல் ரெடிமேட் ட்ரெஸ்செல்லாம் வாங்கினோம்.
24டிசம்பர் 2018, திங்கள்.
7. சிவன் மலை: காங்கேயத்துக்கு அருகில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. 500 படிகள் கொண்ட மலைக்கு கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம். சிவவாக்கியரால் வழிபடப்பட்ட முருகன். ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூன்று கருக்கருவாள்கள் இருக்கின்றன இந்த பெட்டிக்குள் இப்போது.
8. சென்னிமலை: தேவராய சுவாமிகள் இங்குதான் ஆறுபடை வீடுகளுக்குமான கந்த சஷ்டி கவசங்களை அரங்கேற்றம் செய்தார். இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த 1300 மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது. கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம். கோவிலுக்கு பின்னே பிண்ணாக்கு சித்தர் தவம் செய்த குகை, சமாதி இருக்கின்றன. பொய் சொல்லும் நாக்கு புண் பட்ட நாக்கு என்று அருளிய இவரை புண்ணாக்கு சித்தர் என்றாக்கியது நம் பெருமை.
9. திருப்பாண்டிக்கொடுமுடி மூவர் பாடல் பெற்ற ஸ்தலம். காவிரி இங்கு கிழக்காய் திரும்பி ஓடுகிறது. மும்மூர்த்தி ஸ்தலம். மூன்று முகத்தோடிருக்கும் ப்ரஹ்மனுக்கு பின்னால் இருக்கும் வன்னி மரமே நான்காவது முகமாக அறியப்படுகிறது. ஆண் மரமான இது பூ, காய் தருவதில்லை. 3000 ஆண்டுகளுக்கு மேலான இது மீளுருவாக்கப்பட்டு காக்கப்படுகிறது. இதன் இலைகளை காவிரி நீர்க் குடங்களில் இட்டு பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள். எவ்வளவு நாட்களானாலும் நீர் கெடாமல் இருக்கிறது. காவிரி படித்துறை நன்கு பராமரிக்கப்படுகிறது.
10. நாமக்கல் (நாமகிரி) நரசிம்மர், நாமகிரி தாயாருக்கு எதிரில் வெட்ட வெளியில் 18 அடிக்கு ஒரே கல்லில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் தரிசனம் முடித்து இரவுப் பயணம் செய்து விடிகாலை வீடு திரும்பினோம். ட்ரைவர் சின்னப்பையன் ரொம்ப பயமுறுத்திட்டாரு ஓவர் டேக் செய்யும் போதும், முன்னாடி இருக்கும் வண்டிகளுக்கு வெகு அருகில் செல்வதுமாக.
No comments:
Post a Comment