நிர்மிதாவின் சாகஸப் பயணங்கள் - தெலுங்கு தேச யாத்திரை
26டிசம்பர்2018, புதன் கிழமை... நேத்திக்கு காலை 2.30 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தோம், ஒரு நாள் ரெஸ்ட், இன்னிக்கு துணிகளையெல்லாம் தோச்சி போட்டு அடுத்த ப்ளான் ரெடி... சரியான சண்டை. இப்டி டூர் டூர் போயிட்டே இருந்தா உடம்பு ரொம்ப வலிக்குது, குழந்தைகள் என்ன ஆகறது. ஸ்கூல் ஹோம் வொர்க், வீட்டு வேலையெல்லாம் அப்டியே இருக்கு, ரெஸ்ட் எடுக்க டூர் கூட்டிட்டுப் போக சொன்னா, போய்ட்டு வந்து நாலு நாள் ரெஸ்ட் எடுக்கறாப்ல கூட்டிட்டு போறீங்க...அப்டி இப்டின்னு ஒரே புகார், அட்வைஸ், திட்டு...
சிவன்: பல்வேறு தொழில்களிலிருந்து 63 நாயன்மார்கள், சரியை, கிரியை, ஞானம், யோக வழிகளைக் காட்டிய நால்வர் பாடல் பெற்றவை, ஜோதிர் லிங்கங்கள், மோக்ஷ லிங்கங்கள்னு தலங்கள், சங்கரர் விஜயம் செய்தவை
பெருமாள்: 108 திவ்ய தேசங்கள், ஆழ்வார்கள் தலங்கள்
அம்பாள்: சக்தி பீடங்கள்
முருகன்: ஸ்கந்த புராணத்தில் வரும் தலங்கள்
தவிர இதிஹாஸ, புராணங்களில் வரும் தீர்த்த நதி தலங்கள், வரலாற்று பொக்கிஷங்கள்
இதுல நாம எந்த ஒரு லிஸ்ட்ல இன்ட்ரெஸ்ட் காமிச்சாலும் இந்தியா முழுக்க பாத்திட்டு வந்திடுவோம். அவ்வளவு புண்ய பூமி நம் தேசம்... பல நூறு பாஷைகள், உணவு, உடை, சீதோஷ்ண வித்யாசங்கள் எல்லாத்தையும் தாண்டி நம் ஒவ்வொருவரையும் பணக்காரன், உழைப்பாளி, படிச்சவன், பாமரன்னு இல்லாம ஒன்றிணைக்கும் நாடு நம் நாடு. புண்யம் செய்தவனே இவைகளை தரிசனம் செய்ய முடியும், மக்களுக்கு பாகுபாடின்றி சேவகம் செய்ய முடியும் என்பது என் கருத்து....
கடைசில என் தரப்பு கருணையால் வென்றது. பவானி அனுமதியளித்தாள், உடன் புறப்பட்டாள். வேலும், மயிலும் கூடவே.. இரவு 9.15 க்கு சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து விஜயவாடாவுக்கு YBM ஏசி ஸ்லீப்பர் பஸ். சூப்பரா இருந்துது தனித்தனி ஹெட்செட், டிவி, தலையணை, கம்பளி, ஸ்வீட், ஸ்னாக்ஸ், ஜூஸ், ஸ்டடி லைட், ஃபோன் சார்ஜர் வசதிகளோடு, அனைத்தும் வொர்க்கிங் கண்டிஷன்ல... பஸ் ஏறி ரெண்டு தமிழ்ப்படம் பாத்திட்டு காலை 5.30 மணி குளிர்ல விஜயவாடால இறங்கியாச்சு
1. ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம், விஜயவாடா: சக்தி பீடங்களில் ஒன்று. அசுரர்களை அழித்த மகிழ்ச்சியில் துர்க்கை இந்த தலத்தில் தங்க மழை பொழிந்து, கீலன் என்ற அசுரனின் தவத்திற்கு இரங்கி, இந்திரகீல முனிவர் வேண்டுகோளின் படி அவரே மலையாக, அவர் ஹ்ருதயத்தில் மகளாக வாசம் செய்கிறாள். தேவியின் வெற்றியை இந்த்ராதி தேவர்கள் கொண்டாடிய இடம் என்பதாலும் இந்த மலைக்கு இந்த்ரகீல மலை என்று பெயர். அதனாலேயே விஜயபுரி, விஜயவாடா என்ற பெயரும். இவளே இந்த ஊரின் காவல் தெய்வம். எங்கும் மலைகள் சூழ்ந்து க்ருஷ்ணா நதியின் வெள்ளப்பெருக்கு க்ராமங்களை அவ்வப்போது அழித்து வந்தது. பக்தர்களின் பெரும் கோரிக்கையை ஏற்று பரமேஶ்வரன் இந்த மலைகளில் குகை, தெலுங்கில் பெஜ்ஜம் ஏற்படுத்தி வெள்ள அபாயத்திலிருந்து காத்ததால் பெஜ்ஜவாடா, மலை முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்ததால் பீஜபுரி என்ற புராணப்பெயர்களும் உண்டு. கோவில் அடிவாரத்திலேயே க்ருஷ்ணா நதியில் ஆந்த்ராவின் முதல் முதலமைச்சர் திரு. ப்ரகாசம் பெயரால் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தேவி விஜயதசமி அன்று க்ருஷ்ணா நதியில் படகில் அருள்கிறாள். பெரும் கொண்டாட்டம். காலை 5.30 மணிக்கு நதியில் நீராடி, கோவிலுக்கு சென்றோம். உள்ளூர் ஆட்கள் இது புண்ய நதி, பல் தேய்க்காதீர்கள், துணி தோய்க்காதீர்கள் என்று உரிமையோடு தடுத்துரைக்கிறார்கள். ஆணவம் அழிவதைக் குறிக்கும் பொருட்டு முடியிறக்குகிறோம் அல்லவா? அதற்கான மண்டபம், பாத்ரூம் நதிக்கரையில் உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், க்ருஷ்ணா படித்துறை, கோவில்களை இணைக்க இலவச பஸ் வசதி, ஷேர் ஆட்டோ (சர்வீஸ் ஆட்டோன்னு சொல்றாங்க இங்க). இலவச செப்பல் ஸ்டாண்டு, பொருள்கள் காப்பகத்துல எல்லாத்தையும் வெச்சி டோக்கன் வாங்கிட்டு, தர்ம தரிசன டோக்கன் வாங்கி நுழைந்தோம். 260 படிக்கட்டுகள். ஈசியா ஏறலாம். க்யூல அதிக கும்பல் இல்ல, 30-40 நிமிடங்களில் அருமையான தரிசனம். அன்னையின் உக்ரம் அடங்க ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டையும் ஆதி சங்கரர் இங்கு செய்துள்ளார். அகஸ்த்யர், பாண்டவர்கள் பூஜித்துள்ளனர். 5 ரூபாய்க்கு சூப்பர் புளிசாதம், 15 ரூபாய்க்கு சூப்பர் லட்டு நெய், ட்ரை ஃப்ரூட் போட்டு. இலவச பாத்ரூம், குடிநீர் வசதிகள்.
26டிசம்பர்2018, புதன் கிழமை... நேத்திக்கு காலை 2.30 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தோம், ஒரு நாள் ரெஸ்ட், இன்னிக்கு துணிகளையெல்லாம் தோச்சி போட்டு அடுத்த ப்ளான் ரெடி... சரியான சண்டை. இப்டி டூர் டூர் போயிட்டே இருந்தா உடம்பு ரொம்ப வலிக்குது, குழந்தைகள் என்ன ஆகறது. ஸ்கூல் ஹோம் வொர்க், வீட்டு வேலையெல்லாம் அப்டியே இருக்கு, ரெஸ்ட் எடுக்க டூர் கூட்டிட்டுப் போக சொன்னா, போய்ட்டு வந்து நாலு நாள் ரெஸ்ட் எடுக்கறாப்ல கூட்டிட்டு போறீங்க...அப்டி இப்டின்னு ஒரே புகார், அட்வைஸ், திட்டு...
சிவன்: பல்வேறு தொழில்களிலிருந்து 63 நாயன்மார்கள், சரியை, கிரியை, ஞானம், யோக வழிகளைக் காட்டிய நால்வர் பாடல் பெற்றவை, ஜோதிர் லிங்கங்கள், மோக்ஷ லிங்கங்கள்னு தலங்கள், சங்கரர் விஜயம் செய்தவை
பெருமாள்: 108 திவ்ய தேசங்கள், ஆழ்வார்கள் தலங்கள்
அம்பாள்: சக்தி பீடங்கள்
முருகன்: ஸ்கந்த புராணத்தில் வரும் தலங்கள்
தவிர இதிஹாஸ, புராணங்களில் வரும் தீர்த்த நதி தலங்கள், வரலாற்று பொக்கிஷங்கள்
இதுல நாம எந்த ஒரு லிஸ்ட்ல இன்ட்ரெஸ்ட் காமிச்சாலும் இந்தியா முழுக்க பாத்திட்டு வந்திடுவோம். அவ்வளவு புண்ய பூமி நம் தேசம்... பல நூறு பாஷைகள், உணவு, உடை, சீதோஷ்ண வித்யாசங்கள் எல்லாத்தையும் தாண்டி நம் ஒவ்வொருவரையும் பணக்காரன், உழைப்பாளி, படிச்சவன், பாமரன்னு இல்லாம ஒன்றிணைக்கும் நாடு நம் நாடு. புண்யம் செய்தவனே இவைகளை தரிசனம் செய்ய முடியும், மக்களுக்கு பாகுபாடின்றி சேவகம் செய்ய முடியும் என்பது என் கருத்து....
கடைசில என் தரப்பு கருணையால் வென்றது. பவானி அனுமதியளித்தாள், உடன் புறப்பட்டாள். வேலும், மயிலும் கூடவே.. இரவு 9.15 க்கு சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து விஜயவாடாவுக்கு YBM ஏசி ஸ்லீப்பர் பஸ். சூப்பரா இருந்துது தனித்தனி ஹெட்செட், டிவி, தலையணை, கம்பளி, ஸ்வீட், ஸ்னாக்ஸ், ஜூஸ், ஸ்டடி லைட், ஃபோன் சார்ஜர் வசதிகளோடு, அனைத்தும் வொர்க்கிங் கண்டிஷன்ல... பஸ் ஏறி ரெண்டு தமிழ்ப்படம் பாத்திட்டு காலை 5.30 மணி குளிர்ல விஜயவாடால இறங்கியாச்சு
1. ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம், விஜயவாடா: சக்தி பீடங்களில் ஒன்று. அசுரர்களை அழித்த மகிழ்ச்சியில் துர்க்கை இந்த தலத்தில் தங்க மழை பொழிந்து, கீலன் என்ற அசுரனின் தவத்திற்கு இரங்கி, இந்திரகீல முனிவர் வேண்டுகோளின் படி அவரே மலையாக, அவர் ஹ்ருதயத்தில் மகளாக வாசம் செய்கிறாள். தேவியின் வெற்றியை இந்த்ராதி தேவர்கள் கொண்டாடிய இடம் என்பதாலும் இந்த மலைக்கு இந்த்ரகீல மலை என்று பெயர். அதனாலேயே விஜயபுரி, விஜயவாடா என்ற பெயரும். இவளே இந்த ஊரின் காவல் தெய்வம். எங்கும் மலைகள் சூழ்ந்து க்ருஷ்ணா நதியின் வெள்ளப்பெருக்கு க்ராமங்களை அவ்வப்போது அழித்து வந்தது. பக்தர்களின் பெரும் கோரிக்கையை ஏற்று பரமேஶ்வரன் இந்த மலைகளில் குகை, தெலுங்கில் பெஜ்ஜம் ஏற்படுத்தி வெள்ள அபாயத்திலிருந்து காத்ததால் பெஜ்ஜவாடா, மலை முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்ததால் பீஜபுரி என்ற புராணப்பெயர்களும் உண்டு. கோவில் அடிவாரத்திலேயே க்ருஷ்ணா நதியில் ஆந்த்ராவின் முதல் முதலமைச்சர் திரு. ப்ரகாசம் பெயரால் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தேவி விஜயதசமி அன்று க்ருஷ்ணா நதியில் படகில் அருள்கிறாள். பெரும் கொண்டாட்டம். காலை 5.30 மணிக்கு நதியில் நீராடி, கோவிலுக்கு சென்றோம். உள்ளூர் ஆட்கள் இது புண்ய நதி, பல் தேய்க்காதீர்கள், துணி தோய்க்காதீர்கள் என்று உரிமையோடு தடுத்துரைக்கிறார்கள். ஆணவம் அழிவதைக் குறிக்கும் பொருட்டு முடியிறக்குகிறோம் அல்லவா? அதற்கான மண்டபம், பாத்ரூம் நதிக்கரையில் உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், க்ருஷ்ணா படித்துறை, கோவில்களை இணைக்க இலவச பஸ் வசதி, ஷேர் ஆட்டோ (சர்வீஸ் ஆட்டோன்னு சொல்றாங்க இங்க). இலவச செப்பல் ஸ்டாண்டு, பொருள்கள் காப்பகத்துல எல்லாத்தையும் வெச்சி டோக்கன் வாங்கிட்டு, தர்ம தரிசன டோக்கன் வாங்கி நுழைந்தோம். 260 படிக்கட்டுகள். ஈசியா ஏறலாம். க்யூல அதிக கும்பல் இல்ல, 30-40 நிமிடங்களில் அருமையான தரிசனம். அன்னையின் உக்ரம் அடங்க ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டையும் ஆதி சங்கரர் இங்கு செய்துள்ளார். அகஸ்த்யர், பாண்டவர்கள் பூஜித்துள்ளனர். 5 ரூபாய்க்கு சூப்பர் புளிசாதம், 15 ரூபாய்க்கு சூப்பர் லட்டு நெய், ட்ரை ஃப்ரூட் போட்டு. இலவச பாத்ரூம், குடிநீர் வசதிகள்.
2. உண்டவல்லி குகைகள், விஜயவாடா: கனகதுர்கா கோவில் எதிரில் ப்ரகாசம் தடுப்பணைலேந்து ஆட்டோல பயணம் செய்து இந்த இடத்தை அடைந்தோம். 4-5ஆம் நூற்றாண்டுகளில் மலையை குடைந்து நாலு ஃப்ளோருக்கு கோவில்கள் செதுக்கியிருக்காங்க. தொல் பொருள் இலாகா கன்ட்ரோல்ல இருக்கு. பௌத்த, வைஷ்ணவ சிலைகள் 12 ஆழ்வார்கள், தசாவதாரம், ஜய விஜயர்கள் என்ற வைகுண்டத்து காவலர்கள், கருடன், ஹனுமான், பிள்ளையாரோடு, 20 அடி நீளத்துக்கு நல்லா புஷ்டியா பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாள். நான் தொட்டு, கட்டிப்புடிச்சி, காலில் பணிந்து பூஜித்த முதல் பெருமாள். இங்கிருந்து மங்களகிரி பானக நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல 25 கி.மீட்டர்களுக்குக் குகை உள்ளது. பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டது. மஹாபலியின் மகன் நமுசி என்ற அசுரனை அழித்த அந்த பெருமாள் உக்ரம் தணிய இன்றும் பானகத்தை சட்டி, சட்டியாக அவர் வாயில் ஊற்றுகிறார்கள். மடக் மடக் சத்தத்தோடு பானகம் போன இடம் தெரியவில்லை. எங்கும் பானகம், தேங்காய் மூடிகள் இருந்தும் ஈ, எறும்புகள் இல்லை இந்த கோவிலில். பூமி வெடிப்பு, எரிமலை ஏற்பட்டு விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது அறிவியலாளர்கள் கருத்து. இங்கிருந்து பேருந்தில் ஸ்ரீ சைலம் சென்றோம். எல்லா இடத்துலயும் ஃபோட்டோ எடுத்திண்டோம் வரலாறு மிக முக்கியம். பவானி தீவுன்னு ஒன்னு இருக்கு வாட்டர் ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் ஆக்டிவிடீஸோட... நாங்க அது எல்லா ஊர்லயும் இருக்கேன்னு போகல.
3. ஸ்ரீ சைலம்: ஸ்கந்த புராணத்துல பல சாப்டர்கள் இந்த தலத்து பெருமையை பத்தி வருது. தெய்வானையோடு முருகன் இருந்த தலம். சூரசம்ஹாரத்துக்கு முன் சிவபூஜை செய்த தலம். பன்னிரு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று. க்ருஷ்ணா நதி பாதாள கங்கையாக 700 படிகளுக்கு கீழே ஓடுகிறது. ஸ்ரீசைலம் டேம். சமயக்குரவர் மூவராலும் பாடல் பெற்ற ஆந்த்ர தேசத்து தலம் (திருப்பருப்பதம்). வீரசிவாஜி அன்னையிடம் வாள் பெற்ற இடம். மருதமரம் (அர்ஜுன மரம்) ஸ்தல வ்ருக்ஷமாக உள்ள தலங்களில் மூன்று விசேஷம். அதில் இந்த மல்லிகார்ஜுனம் முதல், இடையில் உள்ளது திருவிடைமருதூர் - கும்பகோணம், கடைசி திருப்புடைமருதூர் - திருநெல்வேலி. சிவனை மட்டுமே வழிபடுவேன் என்று ஒரு முனிவர் அன்னையுடன் சேர்ந்து இருந்த போதும், வண்டு (ப்ருங்கி) உருவெடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். அவர் சக்தியை முழுதும் சினந்து க்ரஹித்து கொண்ட அன்னை மீண்டும் தவத்தால் மகிழ்ந்து அருளிய தலம். அன்னை ப்ரமராம்பிகை. அன்னையின் ப்ரகாரம் முழுதும் பெண் தேவதைகள் மட்டுமே பரிவாரங்களாக யானை, குதிரை, தேர், காலாட்படைகளாக செதுக்கப்பட்டிருக்கின்றனர். இவர் பெயராலேயே சென்னை ப்ருங்கிமலை அழைக்கப்படுகிறது (இப்போதைய பரங்கிமலை). பக்தர்கள் அனைவரும் கர்ப்பக்ரஹம் வரை சென்று மூலவரை தொட்டு பூஜை செய்யலாம். நாங்களும் செய்து சிலிர்த்து, பேறு பெற்றோம். தங்குவதற்கு வசதியான தேவஸ்தான ரூம்கள் ஆன்லைன் முன்பதிவு வசதியோடு உள்ளன.
4. அக்கமாதேவி குகைகள்: ஸ்ரீசைலம் பாதாள கங்கையில் குளிக்க 700 படிகளிலும் இறங்கலாம். எங்கள மாதிரி முடியாத சோம்பேறிகள் ரோப் கார்ல இறங்கி, அப்றம் ஒரு 100 படிகள் இறங்கி குளிக்கலாம். இங்கயிருந்து 16 கி.மீ தொலைவு 800 அடிகள் ஆழம் கொண்ட க்ருஷ்ணா நதியில் போட்ல பயணம் செஞ்சா அக்கமாதேவி குகைகளை அடையலாம். செல்ஃபோன் சிக்னல் எடுக்காது. வீரசைவ மரபைச் சேர்ந்த இந்த மஹாதேவி கர்னாடகா மாநிலத்து சிமோகாவில் பிறந்து, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரையே கணவனாக பாவித்தவர். நூற்றுக்கணக்கான பாடல்களை எளிதில் புரிந்து கொள்ளும் வசன நடையில் அருளியவர். பசவண்ணர் முதலானோர் கூடியிருந்த சபையில் பதில்களால் அதிசயிக்கச்செய்து ஏற்கப்பட்ட இவர் நிர்வாண நிலையை அடையும் போது இயல்பால் கலங்கியபோது, தாயுமானவனால் உடலெங்கும் மயிர்க்கற்றைகள் வளர அருளப்பெற்றவர். வீரசைவ சம்பிரதாயத்தில் அக்கா என்றால் அது அக்க மகாதேவியையே குறிக்கும். இந்த குகைகளில் தவம் செய்து 25 வயதளவில் 7 கி.மீ தொலைவிலுள்ள தத்தாத்திரேயர் தவமிருந்து முக்தி பெற்ற கதலிவனம் சென்று தவம் புரிந்து மல்லிகார்ஜுனரோடு ஐக்கியமானாள்.
70 அடிகள் குகைக்குள்ளே செல்ல வேண்டியுள்ளது. ஸ்ரீசைலம் க்ருஷ்ணா (பாதாள கங்கை) படித்துறையிலிருந்து 1 மணி சுமார் போட் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்து 5 நிமிடங்கள் மலையில் நடந்து இந்த இடத்தை அடைந்தோம். இங்கு ஒரு கடை கூட கிடையாது, குகைக்குள்ளே ஒரே கும்மிருட்டு. ஒருவர் தான் ஒரு சமயத்தில் சென்று வர முடியும், கடைசி 30 அடிகள் குனிந்து செல்ல வேண்டும். குகையின் மேல் புறத்தில் லைட் அடித்தால் வௌவால்கள் மொத்தமாக கிளம்பி விடும். ஊதுபத்தி சாம்பல் போன்ற மணலில் கால் புதைக்க, மணல் தூசுகள் பறக்க நுழைந்து செல் ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்தில் உள்ளே சென்று ஒரு ஜான் உயரம் கொண்ட ஸ்வயம்பூ லிங்கத்தை தரிசிக்கிறோம். அதன் மேலே சொட்டு சொட்டாக நீர் விழுந்து கொண்டிருக்கிறது இயற்கையின் அதிசயம், இறைவன் இஷ்டம். அவனருளாள் அவன் தாள் வணங்கி திரும்பினோம். போட், ரோப் கார் கட்டணம் 400 ரூபாய் ஒருவருக்கு. குழந்தைகளுக்கு 200 ரூபாய்.
காலைல தூங்கிட்டதால ஸ்வாமி தரிசனம் செய்யல. அக்கமா தேவி குகைக்கு காலை 10 மணி டீம்ல போய்ட்டு மூணு மணிக்கு திரும்பினோம். பாதாள கங்கையில் மீன்களோடு போட்டி போட்டு குளித்து மதிய உணவு முடித்து 5.30 மணிக்கு 5ரூபாய்க்கு செப்பல், பேக், ஃபோன் டெபாசிட் பண்ணிட்டு தர்ம தரிசன ரூம்ல போய் சேந்தோம். ஸ்வாமி, அம்பாள் தரிசனம் முடிந்து வெளியேறின போது இரவு மணி 7. 30. 8 மணிக்கு ஹைதராபாதுக்கு கடைசி பஸ். அதுக்கு மேல ஃபாரஸ்ட் டிபார்மெண்ட் அனுமதி இல்லையாம். முப்பதே நிமிடங்களில் கோவில்லேந்து ரூமுக்கு போய் காலி பண்ணிட்டு வந்து பஸ் ஏறினோம்.
5. ஹைதராபாத்: விடிகாலை 2.30 மணிக்கு இறங்கி, 4.30 மணி வரை ரூம் தேடினோம். கடைசியா 2000 ரூபாய்க்கு ஒரு டொக்கு ரூம் தான் கிடைச்சிது ஹேப்பி ந்யூ இயர் உபயம். எல்லா ஹோட்டலும் ஃபுல். 11 மணிக்கு கிளம்பி ஹைதராபாத், செகந்த்ராபாத்துக்கு நடுவில் கடலோட பேக் வாட்டர்ல ஹுசைன் சாகர் ஏரில நிறுவப்பட்டிருக்கும் ஒரே கல்லினாலான 18 மீட்டர் (60 அடிகள்) உயரம் கொண்ட புத்தர் சிலைய லும்பினி பார்க்லேந்து போட்டுல போய் மேல ஏறி சுத்திப் பாத்தோம். ஆந்திர முதல்வர் என்.டி.ஆரால் நம்மூரு கணபதி ஸ்தபதியோட மேற்பார்வையில் 350 டன் எடை கொண்டது இந்த சிலை. தலாய்லாமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நாகார்ஜுன சாகர் அணை கட்டும்போதும் ஏறத்தாழ 50 கோவில்களை அப்படியே பழமை மாறாமல் பிரித்தெடுத்து பத்திரமாக வேறு இடத்தில் மீண்டும் உருவாக்கிக் கொடுத்தவர் இந்த ஸ்தபதி. நம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கன்யாகுமரியில் வள்ளுவர் சிலை வடிவமைத்த பேறு பெற்ற கணபதி ஸ்தபதி வேறொருவர்.
6. சார்மினார் ஷாப்பிங், அங்கிருக்கும் சிவன், பாக்யலக்ஷ்மி கோவில்கள், புறாக்கள் பறக்கும் மசூதிகளை பார்த்து விட்டு, ஹரே க்ருஷ்ணா இஸ்கான் கோவிலும் தரிசனம் செய்து, இலவச ப்ரசாதம் உண்டு இரவு 10 மணிக்கு பத்ராசலம் புறப்பட்டோம்.
7. பத்ராசலம்: சீதையை மடியில் வைத்து அமர்ந்த கோலத்தில் சங்கு, சக்ரம், கோதண்டமும், அருகில் தயாராக இராமானுஜனோடும் எழுந்தருளியுள்ளார் ராமதாஸருக்கு அருளிய ராமன். கோதாவரி நதிக்கரையில் உள்ளது. கோபண்ணா (ராமதாசர்) அரசுப்பணியில் இருந்த போது கருவூலப்பணத்தை கொண்டு இந்த கோவிலைக் கட்டியதால் கோல்கொண்டாவில் சுல்தானால் சிறை வைக்கப்பட்டார். இவருக்காக ராமோஜி, லக்ஷ்மோஜி என்ற பெயரோடு சுல்தானிடம் வந்து ஆறு லட்சம் மொஹர்களையும் திரும்பச்செலுத்து ரசீதை கொண்டு போய் ராமதாசரின் தலையணைக்கடியில் வைத்து மறைந்தார்கள் ராம, லக்ஷ்மணர்கள். மறுநாள் உண்மை உணர்ந்த சுல்தான் ராமதாசரை விடுவித்து கோவில் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டான். இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
பத்ராசலம், அதனருகில் உள்ள பர்ணசாலா போன்ற கோவில்களில் நாம் கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோவிலுக்குள்ளேயே எக்சிபிசன் மாதிரி செட்டிங்க்ஸ் போட்டு அவங்க ஆளுங்க உடனடி ஃபோட்டோ ப்ரிண்ட் எடுத்து கொடுத்து காசு பார்க்கிறார்கள். கோதாவரியிலும் உள்ளூர்வாசிகள் நாம் துணி அலசுவது போன்றவை செய்தால் வருந்தி, வேண்டுகிறார்கள். இந்த டூர் முழுதும் ஆந்த்ரா, தெலுங்கானா உள்ளூர் ப்ரதேசங்கள். சுத்தமான தெலுங்கு, அவங்களுக்கு நாம சொல்றத எதுவும் தெரியல. நமக்கு அவங்க சொல்றது தெரியல. தமிலன் பரம்பரைன்னு சொல்லி ஹிந்தியும் நம்கி தெர்லே. ரொம்ப கஷ்டம் இப்டி இருந்தா.
பத்ராசலத்திலிருந்து விஜயவாடா 5-6 மணி நேரம் பேருந்தில் பயணித்து, இரவு 10 மணி YBM ஸ்லீப்பர் பஸ்ஸில் தூங்கி, 31 டிசம்பர் 2018, திங்கள் காலை 6 மணிக்கு வீடு சேர்ந்தோம்.