Jul 30, 2018

சனாதன ஹிந்து தர்மம்

சனாதன ஹிந்து தர்மம்
  • நண்பர்களே உங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள்.  வாழ்க்கை முழுவதும் தூங்கி கழிப்பதா ? காலம் பறந்து கொண்டிருக்கிறது.  உங்கள் சாதனைகள் உலகத்தின் பார்வைக்கு வரட்டும்.   உங்களுக்கு ஆசிகள் பல வந்து குவியும்,  அதிகமான சாபங்களும் குவியும்.  அதுதான் உலகத்தின் இயல்பு.  இதுவே ஏற்ற காலம்
  • இறைவனான நம் குருதேவர் தனித்தன்மை வாய்ந்தவர்.  அவரைப் போன்றே நாமும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  இல்லையெனில் எதற்கும் பயனற்றவர்களாகவே ஆகிவிடுவோம்
  • குடும்ப வாழ்க்கையாகிய நெருப்பில் எரிந்து கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் குருவின் அமுத மொழிகளை கேட்டும், படித்தும் இன்று அமைதி கண்டு வருகின்றனர்.  நோயுற்று படுத்த படுக்கையாக கிடக்கும் காலங்களிலும் குருவின் அமுத மொழிகள் தான் நாம் வாழ்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது.
  • க்ருஷ்ணா! உன் அமுதமொழிகள் துன்பத்தைத் துடைப்பவை.  ஞானிகளால் போற்றப்படுபவை.  பாவங்களை போக்குபவை.  கேட்பதற்கு இனியவை.  செல்வத்தை அளிப்பவை.  உன் அமுத மொழிகளைப் பேசிடும் நல்லோர் புண்ணியம் செய்தவர்கள் - கோபிகா கீதம்
  • நம் குருவானவர் நமக்கு எப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலேயே மிகுந்த அக்கறையும் சிந்தனையும் கொண்டிருக்கிறார்
  • சமாதி, பரவசநிலை எல்லாம் பிரேமையின் விளைவு தான்.  நமது நுண்ணுடல் ஸ்ரீகிருஷ்ணனின் திருப்பாதங்களையே சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றும்
  • எனது கண்ணனின் இனிய நாமத்தை இன்பமாய் இசைக்க இயலாத அந்த வீட்டில் போக மாட்டேன்  - கோபிகா கீதம்
  • திருக்கோவில் போன்ற இடங்களில் தேவையில்லாத பேச்சுக்களையும், வேண்டாத வேலைகளையும் தவிர்த்து இறைவனைப் பற்றியே நினைக்க வேண்டும்
  • பெரிய மனிதர்கள் என்ற கோமாளிகளையும் முகஸ்துதி காரர்களையும் நம்முடன் வைத்துக் கொண்டிருந்தாலும் நம் குருவானவர் நம்மை கடைத்தேற்றி விடுவார்
  • நம்மிடமிருந்து ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று நம்முடனேயே நட்பு பாராட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் முகஸ்துதி காரர்கள் அவர்களுக்கு நம்மிடமிருந்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும் ஓடிவிடுகிறார்கள்.  எருதோடு சுற்றிக் கொண்டிருக்கும் நரியின் நிலைதான் அவர்களுக்கும்
  • உலகம் இறைவனிலிருந்து வேறானது என்றால் அதையும் நீ துறக்கலாம் - வசிஷ்டர்
  • ஞானமும் பக்தியும் ஒருசேர ஒருவரிடம் உண்டாக முடியாதா ?              அது மிக உயர்ந்த நிலையில் சைதன்யர் போன்ற ஈஸ்வர கோடிகளுக்கு உண்டாகும்.  சாதாரண மனிதர்களின் விஷயம் வேறு.  ஜோதி தரிசனம் ஐந்து விதமானது.  தீபம்,  அக்னி,  சந்திரன், சூரியன் மற்றும் சந்திர சூரியனுடைய ஒளி.  பக்தி சந்த்ரன், ஞானம் சூரியன்.  சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் போது சந்திரன் இருப்பதை காண முடிகிறது.  அவதார புருஷர்களிடம், இறையருள் பெற்றவர்களிடமும் பக்தியாகிய சந்திரனையும் ஞானமாகிய சூரியனையும் ஒரே சமயத்தில் காணலாம். ஒரு படி பாத்திரத்தில் 5 படி பாலை வைக்க முடியாது அல்லவா ? பக்தியின் வாயிலாக இரண்டும் கிடைக்கும்.  தேவையானால் இறைவனே பிரம்ம ஞானத்தையும் அருள்வார்
  • உருவ சாதனையை செய்யாமல் அருவ சாதனை முடியாதா ?  ஏன் முடியாது ? ஆனால் அந்தப் பாதை மிகவும் கடினமானது.  முனிவர்கள் தங்கள் குடிலில் இருந்து, அதிகாலையில் புறப்பட்டு நாள் முழுவதும் தவம் செய்து, மாலையில் சிறிது பழம், கிழங்குகளை உண்பார்கள். ப்ரஹ்மம் என்ன என்பதை கடும் தவத்தின் விளைவாக உணர்வில் உணர்ந்தனர், அனுபவத்தில் உணர்ந்தனர்.  இந்த சாதனையில் உலகப்பற்று ஒரு துளி இருந்தாலும் பலன் கிடைக்காது உலகப் பொருள்களின் சுவை, ஒளி, ஒலி, தொடு உணர்ச்சி, மணம் இவற்றின் நிழல் கூட மனதில் இருக்கக்கூடாது அப்போதுதான் மனம் தூய்மை ஆகும்.   தூய மனம் எதுவோ அதுவே ஆன்மா.   அப்போது மற்றொரு நிலை ஏற்படுகிறது நான் என்ற எண்ணம் அடியோடு மறைந்து எல்லாம் இறைவனே, நான் அல்ல என்ற அனுபவம் ஏற்படுகிறது.
மடத்து சாது ஒருவரை ஒரு தீயவன் அடித்து விடுகிறான்.  அவர் மயங்கி விழுந்து விடுகிறார்.  அவருக்கு மயக்கத்தை தெளியவைத்து பால் கொடுப்பவர்கள் சுவாமி!  இப்போது உங்களுக்கு யார் பால் தருகிறார்கள் என்று கேட்ட போது,  அவர் யார் அடித்தவனோ அவனே பால் தருகிறான் என்றார்.
 
உள்மன சமாதி என்று ஒன்று உண்டு.  சிதறிக்கிடக்கின்ற மனதை திடீரென்று ஒன்றுபடுத்துவது.  இந்த சமாதி நிலை அதிக நேரம் நிலைக்காது.  உலகியல் எண்ணங்கள் வந்து கலைத்துவிடும்.  அப்போது யோகிகள் யோகத்தில் இருந்து நழுவி விடுகிறார்கள்.
 
சுவற்றின் சந்துகளில் கீரிப்பிள்ளைகள் சுகமாக வசித்துக் கொண்டிருக்கும்.  சிலர் அதன் வாலில் கல்லைக் கட்டி விடுவார்கள், அதன் பாரத்தால் அது வெளியே விழுந்து விடும்.   மீண்டும் சுகமாக இருப்பதற்காக அது எத்தனை முயற்சி செய்தாலும், அத்தனை முயற்சியும் செங்கல்லின் பாரத்தால் பாழாகி விடும்.  உலகியல் எண்ணங்களும் இப்படித்தான்.
 
சாதாரண மனிதர்களுக்கு கூட எப்போதாவது சமாதி நிலை வாய்க்கலாம்.  சூரியன் உதித்ததும் தாமரை மலர்கிறது, ஆனால் மேகத்தால் சூரியன் மறைந்தால் அது கூம்பி விடுகிறது.  உலகியல்தான் அந்த மேகம்.   சேரவேண்டிய இடத்திற்கு முட்காடு வழியாகவும் போகலாம் நல்ல வழியாகவும் போகலாம்
  • அம்புப் படுக்கையில் படுத்திருந்த போது பீஷ்மர் அழுததற்கான காரணம், அம்பின் வேதனையால் அல்ல,  சாட்சாத் நாராயணனே அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தும் பாண்டவர்களின் துன்பங்களுக்கு முடிவு ஏற்படவில்லையே, இறைவனுடைய லீலையைப் பற்றி எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதை நினைத்து தான்
  • நாள், திதி, நட்சத்திரம் என்று எதுவும் எனக்குத் தெரியாது. என் நினைவெல்லாம் ராமர் மட்டுமே - ஹனுமான்
  • சன்னியாசிகளுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு ஆயிற்று.  பல சம்பிரதாயங்களை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள்.   எங்கள் சம்பிரதாய சாதுக்களுக்கு முதலில் சாப்பாடு.   பிறகு தான் மற்றவர்களுக்கு என்று எல்லோருமே சொன்னார்கள்.  ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.  நோக்கம் ஒன்றாக இருந்தாலும் இவர்களின் சடங்கு சம்பிரதாயங்களால் கடைசியில் எல்லோரும் போய்விட்டார்கள் அந்த விருந்து நடைபெறாமலே போயிற்று.  தங்கள் கடிகாரமே சரியான மணியைக் காட்டுகிறது என்றுதான் எல்லோருமே சொல்கிறார்கள்.
  • காட்டிலோ, எங்கோ குகையிலோ இருந்தாலும், பதவி, பணம், புகழ் இவற்றின் துணையேதுமின்றியே, ஒரு ஞானியினுடைய தவ வலிமையும், ஆன்மீக அனுபவமும் கண்ணுக்குத் தெரியாத அதிர்வலைகளாக வெளியில் கலந்து உலகத்தை உயர்த்தியே தீரும்

Jul 27, 2018

குமாரில பட்டர்

குமாரில பட்டர்:

வேத வழி முதலில் கெட்ட கார்யங்களில், எண்ணங்களில் நம் மனது செல்லாமலிருக்க இடைவிடாது வேலைகளை விதித்துக்கொண்டேயிருக்கிறது காலை முதல் இரவு வரை. நல்லோர் சேர்க்கை, நல்ல கார்யங்களில் மனதை ஈடுபடுத்தி செயல்படுத்துவது, நல்லதை கேட்பது, சொல்வது, பூஜை செய்வது என்று நம் மனஸும், கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்ற ஐந்து இந்திரியங்களும் இப்படி 50-70 வயதுகள் வரை தீய வழியில் செல்லாமல் நம்மை எப்போதும் நல்ல செயல்களில் பிசியாவே வைத்திருக்கும். இந்த பகுதியை, மந்திரங்களை பூர்வ (முதல்) பாகம் என்று சொல்வோம்.

இப்படி 4 மணிக்கு எழுந்திரு, இந்த குச்சிய வெச்சி பல் தேய், இந்தெந்த இடங்களில் பாத்ரூம் போ, இத்தன தடவ வாய் கொப்புளி, சுத்தம் செய்து கொள், நதி, குளங்களில் குளி, இந்தெந்த ஆடை உடுத்திக்கோ, சூர்ய பூஜை செய், உலக நன்மைகளை நினை, திட்டமிட்டுக்கொள், யோகா பண்ணு, த்யானம் பண்ணு, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை பூஜை செய், முன், 64 கலைகளையும், டைம் டேபிள் படி, படி, ப்ராக்டிஸ் பண்ணு. முன், பின் தெரியாத ஒருவனுக்கு சாப்பாடு போடு, கண்ணுக்குத் தெரியாத, தெரியும் மற்ற உயிரினங்களுக்கு உணவு கொடு, மாலை திருப்பிக் குளி, உலகம் நிம்மதியாகவும், பத்திரமாகவும் இருக்க ப்ரார்த்தனை செய்து கொண்டு தூங்கு. இதுல என்ன ஸ்பெஷல்னா இது எல்லாத்தையும் அது அதுக்குன்னு மந்திரங்களை சொல்லி செய்யனும். கர்மாக்களை (வேலை) உபதேசிப்பதால் இது கர்ம பாகம்.

இப்படி 60-70 வயது வரை இருந்து மந்திரங்களின் பொருளறிந்து, உலக நன்மைக்காக காலை முதல் இரவு வரை வேலைகள் செய்தவனுக்கு, வேதமே உபநிஷதங்கள் எனும் வேத சாரம் (ஜூஸ்) மூலம் இந்த எல்லா வேலைகளையும் விட்டொழித்து, இனி மீதமுள்ள ஆயுளை வெறும் உலக நன்மைக்கான த்யானத்தில் மட்டும் இறைவனை நினைத்து செய் என்று போதிக்கிறது. இதை எஸ்டாப்லிஷ் பண்ணத்தான் ஆதிசங்கரர் அவதாரம். வேதத்தின் இந்த பாகம் உத்தர பாகம் (பின், கடைசி, மோக்ஷ) வழி என்று உபதேசிக்கப்படுகிறது. இது ஞானத்தை போதிப்பதால் ஞான பாகம்.

குமாரில பட்டர், ஆதி சங்கரருக்கு ஒரு 50 வருடங்களுக்கு முன் அவதரித்தவர். பௌத்த மதம் பரவி எதுவும் மாயை என்று போதித்திருந்த காலம். ராஜாக்கள் உட்பட மக்கள் எவரும் எதிலும் பிடிப்பில்லாமல், பிக்ஷுக்களாக உருவகப்படுத்திக் கொண்டிருந்த நேரம். காரியங்கள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. இதிலிருந்து மீண்டு சனாதனமான வேத மார்க்கத்திற்கு எல்லோரும் திரும்ப வேண்டும் என்று முயற்சித்தால் வாதம் செய்து, பெரிய பெரிய சாதனைகள் செய்து காண்பித்தாலே சாத்தியம். பின் அவதரிக்கப்போகும் பரமசிவனின் அவதாரமான ஆதி சங்கரர் ஞான மார்க்கத்தை உபதேசிக்கப்போகிறார். அதற்கு ஸ்டேஜ் செட் பண்றாப்ல முதலில் சோம்பியிருக்கும் மக்களை எழுப்பி மீண்டும் வேதத்தில் கூறியிருக்கும் வேலைகளை செய்ய வைக்க வேண்டும். சங்கரர் குறுகிய காலமே பூமியில் இருக்கப்போகிறார் என்று முருகக்கடவுள் ஸுப்ரமண்யரே குமாரில பட்டராக அவதரிக்கிறார். உலகிற்கு பரமபிதாவான நான்முகனும், சரஸ்வதி தேவியும் குமாரில பட்டரின் சிஷ்யர்களாக மண்டனமிஶ்ரர்-சரஸவாணி என்று அவதரிக்கிறார்கள்.

இப்ப தான் முக்யமான கட்டம், இந்த குமாரில பட்டர் சும்மா போய் ஏய், எல்லாரும் இங்க வாங்க, வேதத்தில் சொல்லி இருக்கற வேலைகளை செய்யுங்க. உங்க வழி, குருமார்கள் வேஸ்ட்டுன்னு சொல்லல. அவங்க மார்க்கத்துக்கு மாறி முறையா புத்த விஹார்ல 7-8 வருஷங்கள் கடினமா முயற்சி செய்து அவர்களின் கொள்கைகள், விஷயங்கள் முழுவதையும் சூப்பரா படிச்சி, தலைமை சீடர்ங்கற அளவுக்கு தேறினார். அதுக்கப்பறம் தன்னை வெளிப்படுத்துக்கொண்டு அவங்கள வாதங்களில் ஜயித்தார்.

கடைசியா இவர் இப்படி ஏமாத்தினதால 7ஆவது மாடிலேந்து குதிக்கச் சொல்லி உத்தரவு குடுத்தாங்க. அவரும் "வேத மார்க்கம் சத்யமாயிருந்தால் என்னை அது காக்கும்"னு சொல்லி குதிச்சார், உயிருக்கு ஒரு பாதிப்பும் இல்லை, முழுசா நம்பாம "இருந்தால்" னு சொன்னதால் கண்ணு மட்டும் பாதிச்சிது. பௌத்தர்கள் இவர் வழிய ஏற்றுக்கொண்டு வேதம் விதித்த வேலைகளை செய்ய தயாராயினர். ஆனா இவர், உங்களுக்கு என்னோட சீடன் மண்டனமிஶ்ரன் வழிகாட்டுவான், பௌத்தனா மாறி குருவ ஏமாத்தினதுக்கு, நான் பண்ணின குரு த்ரோகத்துக்கு என்ன ப்ராயச்சித்தம்னு புத்தகங்கள்ல பாத்தேன். கொஞ்ச, கொஞ்சமா அனுபவித்து சாகறது தான் தண்டனைன்னு சொல்லி இருக்கு, அதனால நான் நெல் உமி கழுத்து வரை ரொப்பின குழியில் நெருப்பு வெச்சி, அனுபவித்து என் உடலை விடப்போகிறேன்னு தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார்.

அப்படி உயிர் விடும் தருவாயில் தான் அவரை சந்திச்ச ஆதிசங்கரர் அவரையும் வாதிட்டு ஞான மார்க்கத்தை போதித்து, மோக்ஷம் தந்து, அவர் சீடர் மண்டனமிஶ்ரரையும் அவர் மனைவி சரஸவானியையும் வாதம் செய்து அவர்களுடைய ஆயிரக்கணக்கான சீடர்களோடு ஞான மார்க்கத்துக்கு திருப்பினார் - இது வரலாறு. இன்று வரை காலங்காலமாய் நெறையா பேர் இந்த வழியில் குருமார்களாய் தோன்றி, மக்களையும் ஒழுக்கத்தோட, நிம்மதியோட, நம்பிக்கையோட, பயமில்லாம வாழ வெச்ச சரித்திரம்,

நம்ம பசங்க என்ன பண்றானுங்க, த்ராவிடம்னா என்னென்னு தெரியாது, ப்ராஹ்மணன், க்ஷத்ரியன்னா என்ன, எதுக்குன்னு தெரியாது, மனு ஸ்ம்ருதி, அட்லீஸ்ட் தமிழ் வேதங்கள் எதுவும் ஒன்ன கூட முழுசா படிச்சது கிடையாது, இதெல்லாம் தெரிஞ்ச, ப்ராக்டிஸ் பண்ற குருவையும் தேடிப் போய் கேட்டுத் தெரிஞ்சிக்கறதும் கிடையாது. முட்டாள் தனமா, மூர்க்கத்தனமா, அடிமைகள் மாதிரி, அடிப்படை அறிவு கூட இல்லாத எதிர்க்கறது.

சரி எதிர்க்கறானே, எதையாவது சாதிச்சானான்னா, இன்னி வரை தொண்டர்கள் உட்பட எல்லா மக்களையும் எல்லாத்துக்கும் அனாதைகளா, அடிமைகளா, பயத்தோட திண்டாட வெச்சி அவங்க மட்டும் குடும்பத்தோட சிறப்பா வாழ்வது தான் 60 ஆண்டு கால சாதனை. இப்படி ஒரு புக்குல ஒரு தண்டனை குரு த்ரோகத்துக்கு போட்டிருக்குன்னு தெரிஞ்சா அந்த புக்க நெருப்புல போட்டுடுவானுங்க இந்த பேட் பாய்ஸ். திட்டமிட்டு மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு.

நெறையா தேடித்தேடி நல்லவைகளைப் படிப்போம். ஆன்மீகம் வளர்ப்போம், தேசம் காப்போம். தலைமுறைகளுக்கு நல்ல பாதையை விட்டுச்செல்வோம்.