நிர்மிதாவின் சாகசப்பயணங்கள்
வெள்ளியங்கிரி இறைப்பயணம் - அவனருளாலே அவன் தாள் வணங்கி
தாயை வணங்கினாலும், ஒதுக்கினாலும், எதிர்த்தாலும் அவள் அருள் நமக்கு என்றும் உண்டு என்பது கண்கூடு. தாயுமானவனும் அப்படியே, கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவளித்துக் காப்பவன் அவன். வடக்கே வெள்ளிப்பனிமலையில் குடி கொண்ட கைலாஸபதியை சென்று தரிசிக்க முடியாதவர்கள், வெள்ளியங்கிரீஶனை சென்று தரிசித்து பிறவிப் பயனை அடைகிறார்கள்.
வெள்ளியங்கிரி:
கோயம்புத்தூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த மலை அடிவாரத்தின் அருகில் தான் தற்போது ப்ரபலமாகிவரும் ஜக்கிவாசுதேவின் ஈஶா த்யான நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து ஒரு 6000 அடி உயரமுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலையை சேர்ந்தது. தென் கயிலை என்று பெயர் பெற்றது.
விலங்குகள் நீரைத்தேடி கீழே இறங்கியிருக்கும் என்பதால் ஃபிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை யாத்திரைக்கு உகந்தது.
பேறு காலத்தில் இருக்கும் பெண்கள் மலையேறுவதில்லை. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 40-45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே மலையேறுகின்றனர்.
வயதானவர்கள் தனியே பயணிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.
கையில் ஒரு ஊன்று கோலுடன் பயணிப்பது அவசியம்.
தண்ணீர் அவரவர் உடல் நிலையைப் பொறுத்து 30-50 அடிகளுக்கு ஒரு முறை நிச்சயம் தேவைப்படும். ஏழு மலைகளைக் கொண்ட இந்த தொடரில் அடிவாரத்திலும், இரண்டாவது மலை முடிவிலும், ஆறாவது மலை முடிவிலுமே குடி நீர் கிடைக்கும்.
வெறுங்கால்களிலேயே யாத்திரை செல்வது உகந்தது. ட்ரெக்கர்ஸ், முடியாதவர்கள் ஷூ, செப்பல் அணிந்தும் பயணிக்கிறார்கள்.
முதல் மலை முற்றிலும் ஒழுங்கில்லாத சுமார் 1000 படிகளால் ஆனது. ஒரு சில படிகளில் முழு காலும் வைக்க முடியும், ஒரு சில படிகளில் பாதி கால் தான் வைக்க முடியும், செதுக்கப்படாத படிகள் என்பதால் கரடு முரடாக இருக்கும், செருப்பில்லாமல் பயணித்தால் எந்த ஒரு கால் ப்ரச்சினையும் சரியாகி விடும். காலில் கட்டை விரல், நுனிக்கால், குதிகால் என பல பகுதிகள் இருப்பதை இறங்கும் போது உணருவோம். முதல் மலை முடிந்ததும் ஒரு பிள்ளையார் கோவில், 30 ரூபாய்க்கு லெமன் சோடா, 20 ரூபாய்க்கு மோர், பிஸ்கெட், கடலை மிட்டாய், எள்ளுருண்டை, ஆரஞ்சு மிட்டாய் என கடை இரண்டு. திருப்பதி- திருமலை ஏறும்போது காலி கோபுரத்தை அடையும் த்ருப்தி இந்த முதல் மலையை முடிக்கும் போது இருக்கும். ஒரு மணி நேரம் சுமாரில் இந்த மலையைக் கடப்போம் எந்த உடல் நிலையில் இருப்பவர்களும்.
இரண்டாவது மலை கல் பாறை மலை - 1974 ஆம் வருடம் யாத்திரை செல்பவர்களின் வசதிக்காக இந்த வழுக்குப்பாறைகளில் சிறு, சிறு படிகளை செதுக்கியிருக்கிறார்கள் தெய்வ நாயகி- பழனிச்சாமி கவுண்டர் தம்பதியர், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் படிகள் போல, அவ்வளவு அகலம் இல்லை ஆனால். 2 ஆவது மலை முடியும் இடத்தில் பாம்பாட்டி சுனை என்ற ஒன்றில் நீர் வருகிறது. மூங்கிலைச் சொருகியிர்ந்த இடத்தில் இப்போது ஓஸ் பைப்பை செருகி இருக்கிறார்கள். பொறுமையாக நீரை வயிற்றிலும், பாட்டில்களிலும் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடங்கலாம்.
இரண்டு, மூன்றாம், நான்காம் மலைகளை சுமார் மூன்று மணி நேரத்தில் கடப்போம். மூன்று, நான்கு மலைகளில் சில இடங்களில் ஒழுங்கற்ற படிகளும், பாறைகளும், மண் மேடுகளிலும் ஏறி பயணிப்போம். இந்த நான்கு மலை வரையிலேயே உயர்ந்த மரங்களும், ஓயாத காட்டு வண்டுகளின் ரீங்காரம் இடைவிடாது ங்கொய்ய்ய்ன்னு ஒலித்துக் கொண்டே இருக்கும். வெயில் அதிகமாக தெரியவில்லை. பெண்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற சுற்றுலா தலங்களில், புனிதத் தலங்களில் நாம் காணும் ஜோடிகளும், அர்த்தமற்ற, பொழுது போக்குப் பேச்சுக்களும் கேட்கவில்லை, எங்கு பார்த்தாலும் சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.
ஐந்தாம் மலை முழுதும் சுத்தமான செம்மண்ணைக் காண முடிந்தது. குச்சியை ஊன்றினாலே செக்கச்செவேலென்று காஞ்சி காமாக்ஷி கோவில் குங்குமம் போன்ற கலரில் ஐந்தாவது மலையின் மண். அதிக ஏற்றம் இல்லை 5-6 மலைகளில். சமவெளியில் நடக்க முடிந்தது. 5 மற்றும் 6 வது மலைகளை சுமார் ஒரு மணி நேரத்தில் கடப்போம். ஆறாவது மலை மண் முழுக்க எங்க தோண்டினாலும் விபூதி மாதிரியே இருக்கு.
ஆறாவது மலை சமவெளி முடியும் இடத்தில் சரிவாக இறங்கினால் ஆண்டி சுனை இருக்கிறது. சுனை நீர் வந்து சேரும் நிலையில் ஒரு குட்டி சிவலிங்கம் நடுவில் இருக்கிறது நீருக்கு மேல் தெரியுமாறு. அங்கு தண்ணீர் தேங்கி செல்லுமாறு தடுப்புச்சுவர் இடுப்பளவுக்குக் கட்டி இருக்கிறார்கள். ச்சிலீர் என்று இருக்கிறது நீர். சிவலிங்கம் இருக்கும் சுனையில் சுவரில் உட்கார்ந்து இறங்கி டக்குணு ஒன்னு ரெண்டு முக்கு போட்டு எழுந்தால் அட்டைப்பூச்சியின்றி பயணிக்கலாம். அங்க கொஞ்சம் இளைப்பா இருக்குன்னு ஆட்டம் போட்டா, ஒரு 15-20 நிமிஷத்துல முட்டிக்காலுக்குக் கீழ எங்கயாவது கூச்சமோ, ஊசி போட்டாப்ல வலியோ வரும். அப்ப பாத்தா தான் அந்த அட்டைப்புழுவே கண்ணுக்குத் தெரியும். நம்ம க்ராமங்கள்ல தட்டையா இருக்கற அட்டைப்பூச்சி இல்ல இவர். கொடைக்கானல், ஊட்டிலயெல்லாம் இருக்குமே, நம்ம ரத்தத்தை ஓட்டைப் போட்டு ஆட்டையப் போட்டு தான் பெரிசாகி இவர் கண்ணுக்குத் தெரிவார், தரிசனம் செய்து கொள்ளலாம், ஒரு குச்சியால் பட படன்னு இருக்கறதையெல்லாம் தட்டி விட்டா எவ்வளவு பெரிசாகியிருக்கேன் பாருன்னு பெருமையா பூமில காமிக்கும். ஓட்டை போட்ட இடத்துல நமக்கு ரத்தம் வந்திண்டு இருக்கும். நாம பாட்டுக்கு அட்டைப்பூச்சி, அட்டைப்பூச்சின்னு விளம்பரம் பண்ணிட்டுப் போய்ட்டே இருக்கலாம், எவனும் கவனிக்கப்போறதில்ல, அவனும் குளிச்சிட்டு அப்படியே தான் வரப்போறான். மருந்தெல்லாம் நாங்க ஒன்னும் போட்டுக்கல. கொஞ்ச நாள்ல மறந்துடுவோம். சொரண வந்து தட்டி விட்டுட்டதால, ஓட்ட போட்டு உடம்புக்குள்ள போய்டுமா, அப்ப என்ன ஆகும், என்ன பண்ணனும், எனக்கு அனுபவமில்ல.
ஆண்டி சுனைலேந்து ஏழாவது மலை ஒரு 45-55 டிகிரி செங்குத்து, மண்ணு மலை. 5, 6 மற்றும் ஏழாவது மலை முழுதும் பச்சைப் பசேலென்று இருக்கிறது. நாம் உண்மையாகவே மேகங்களுக்குள் பயணிப்போம். ஏழாவது மலை உச்சியில் நட்டு வைத்திருக்கும் வேல், சூலங்களுக்கு நடுவே இயற்கையான ஒரு கல் பாறைக்கூரைக்குக் கீழே வெள்ளியங்கிரீஶன் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கிறான். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாஶம் என்ற பஞ்ச பூதங்களின் ப்ரதிநிதியாய் நான்கு சுயம்பு லிங்கங்கள். பூமியின் சார்பாக அந்த மலையே லிங்கமாய். அவன் மகனை முதலில் தரிசித்துப் பின் சிவனை தரிசிக்கிறோம். பூசாரிகள் தரிசனத்திற்கு உதவி செய்கிறார்கள். கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து துரத்துவதில்லை எவ்வளவு கூட்டமிருந்தாலும், சிவனிடம் தேங்காய் குடுத்தால் உடைத்துக் கொடுக்கிறார்கள். காணிக்கைக் காசுகளை உண்டியலிலேயே போடச்சொல்கிறார்கள் அனைவரும். ஒரு மடக்கில் விபூதியைக் குழைத்து வைத்துக் கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் நெற்றியில் பட்டையாக பூசி விடுகிறார் பூசாரி. சித்தர் ஒருவர் அங்கேயே சிவனுக்கு எதிரில் குடிசையில் இருக்கிறார். நம்மிடமிருந்து அவர்களெவரும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது தமிழக அறநிலையத் துறைக் கோவில்களில் தரிசனம் செய்து பழக்கப்பட்ட நமக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. சூர்யோதயத்தின் போது சிவ தர்ஶனம் செய்ய பெரிதும் ஆர்வமாய் இருக்கிறார்கள் பலர். அவர்கள் ஆறாம் மலை முடிவிலேயே ஒரு டீக்கடை இருக்கிறது. அதற்கு எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஷெட்டில் வேண்டுமானால் தங்கி வரலாம். மேலே ஒரு குழுவினரும் தங்க முடியாது. 5, 6 மற்றும் 7 ஆவது மலை மே மாதம் சென்றிருக்கும் போதே இரவில் தாங்க முடியாத குளிர், பனி. சூழ் நிலையைப் பொறுத்து மழை வந்து இந்த 5, 6, 7 மலைகளில் மாட்டிக்கொண்டால் இருக்கும் இடத்திலேயே இருப்பது தான் உயிருக்கு உத்தரவாதம். எறங்கறேன்னு மழையில், மலையில் எங்கயாவது வழுக்கி விழுந்தா இன்னும் வழில இருக்கறவங்களயெல்லாம் சரிச்சு விட்டுனு விழுவோம். அப்பறம் காவல் துறை என்ன செய்தது, வனத்துறை என்ன செய்தது, இங்கு இருக்கும் டில்லியின் எடுபிடி அரசு என்ன செய்தது, ராணுவம் எங்கே, மத்திய பார்ப்பணீய அரசு தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் த்ரோகம் இழைக்கிறதுன்னு கத்தி ப்ரயோஜனமில்ல. இது சுற்றுலாத் தலமல்ல. உடல், மன உறுதி கொண்டவர்கள் வந்து தரிசியுங்கள். ஈசன் ஒருவனே காப்பவன்.
நிம்மதியா ஏறி, தரிசித்து இறங்க 12-13 மணி நேரம்.
பூண்டி அடிவாரத்திலேயே பழங்கால சிவன் கோவில் ஒன்றுள்ளது. பாரம்பரியம் மிக்கது. மலை ஏற முடியாதவர்கள், மலை ஏற்றி விட வந்த மனைவி, குடும்பத்துப் பெண்கள் எல்லாம் மேலே சென்றுள்ளவர்கள் பத்திரமாக தரிசனம் முடிந்து திரும்பி வர வேண்டும் என்று இங்கு விரதம் இருக்கிறார்கள். மலையேற்ற நாட்களில் ஏராளமாக அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். வருத்தி, வருந்தி உண்ண அழைத்து, உண்மையாய் உணவளிக்கிறார்கள். சொற்றுணை வேதியனை தரிசித்தோருக்கு அடிவாரத்தில் சோற்று மலை நிச்சயம். காவடிக் குழுவினர், அடிக்கடி மலையேறுவோர்கள், அப்பாவோடு ஏறும் குழந்தைகள், சிறு, பெரு வயது பெண்கள் என ஆர்வமாகப் பலர் மலை ஏறுகிறார்கள். அடிவாரத்திலேயே முடி இறக்க, காலைக்கடன்கள் கழிக்க, குளிக்க என்று வசதிகள் இருக்கிறது.
வனத்துறையினர் அடிவாரத்திலேயே பையில் இருப்பவைகளையெல்லாம் வெளியே எடுத்து வைக்கச் சொல்லி சோதனை செய்கிறார்கள் ப்ளாஸ்டிக் பேப்பர்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாதென்று. வாட்டர் பாட்டிலில் சுற்றியிருக்கும் ப்ராண்ட் பேப்பர், கடலை மிட்டாய், பிஸ்கெட் கவர், சோத்து மூட்டை என்று எதுவாக இருந்தாலும் நீக்கி விடுகிறார்கள். உங்களுக்கு அப்படியும் மேலெ சென்று ப்ளாஸ்டிக் குப்பை போட வேண்டுமென்ற வேண்டுதல் இருந்தால் வழியில் உள்ள கடைகளில் குளிர்பான ப்ளாஸ்டிக் பாட்டில்கள், பிஸ்கெட், மிட்டாய் பாக்கெட்டுகள், மோர், கூழ் பேப்பர் டம்ளர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ப்ளீஸ் தண்ணி பாட்டில் தவிர வேறெதையும் மேலே எடுத்து செல்லாதீர்கள், வழியில் ஒரு 100-200 செலவில் வாங்கி வேணுங்கறத தின்னுட்டு, குப்பையையெல்லாம் உங்க பையிலேயே எடுத்து வந்து அடிவாரத்துல ஸ்வச் பாரத் இருக்கு அங்க போடுங்க, க்ளீன் பண்ணிப்பாங்க. அதிகமா யாரும சாப்டுட்டு நடந்து பாக்கல. வெயில்ல பழக்கப்பட்ட நம்மவர்கள் பெரும்பாலும் காலை ஒரு நாலு மணி வாக்குல கீழேந்து கெளம்பி மாலை இருட்டறதுக்குள்ள தரிசனம் முடிச்சிட்டு, கீழ வந்துடறாங்க. நம்மள மாதிரி சிட்டில, ஏசில வாழறவங்க ராத்திரி மலை ஏறுகிறார்கள். டார்ச் லைட் உதவியோடு, அடிவாரத்துல 100 ரூபாலேந்து டார்ச் லைட், அதற்கான பேட்டரி கிடைக்கிறது. வழித்துணையாம் ஈசன் தடி 30 ரூபாய்க்கு தேவஸ்தானம் விற்கிறது. நீங்க கொண்டு வந்திருந்தாலும் எடுத்திட்டுப் போகலாம். இதை கீழ வந்ததும் வீட்ல பூஜைல வெச்சு பூஜிக்கறாங்க.
இதுவரை நீங்கள் படித்தது வெள்ளியங்கிரி யாத்திரையைப் பற்றிய பொதுக் குறிப்புகள், இனிமே தான் நாங்க அனுபவப்பட்ட எங்களோட பயணக்கட்டுரை. மேல படிச்சா அவ்வளவு புண்ணியம், மல்டி லெவல் மார்கெட்டிங் மாதிரி ஒவ்வொருவரும் ஒரு பத்து பேருக்கு இந்த லிங்க்க அனுப்ச்சி படிக்க சொன்னா, பத்தே நாளில் உங்களுக்குள் நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன். ட்ரெக்கர்ஸ்சுக்கும் உபயோகமா இருக்கும்.
04 மே 2018 வெள்ளிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு ரப்திசாகர் ட்ரெயின்ல ரிசர்வ் பண்ணியிருந்தோம். இப்ப பல வருடங்களுக்குப் பிறகு நெறையா இடத்துல ரயில் ட்ராக் எல்லாம் பாத்து, பாத்து மாத்தறாங்க. ஜல்லியும். எங்க ட்ரெயின் அதனால சென்ட்ரல் வராது, நீங்க காட்பாடில வந்து ஏறிக்கோங்கன்னு டிஜிட்டல் இந்தியாலேந்து ஒரு எஸ். எம். எஸ். ரயில்வே டிபார்ட்மெண்ட்லேந்து, நேர்ல புக் பண்ணினவங்களுக்கெல்லாம் தூதர்கள் அனுப்சிருக்காங்களா, முரசு அறிவிச்சிருக்காங்களான்னு தெரியல. பாத்தா அந்த ட்ரெய்யின் காட்பாடிக்கு அஞ்சாம் தேதி காலை 1.30 மணிக்கு வரும்னு சொன்னாங்க முதல்ல, அப்பறம் அது 24 மணி நேரம் தாமதமா வருதுன்னு இன்னொரு மெசேஜ் மொபைலுக்கு. இது சரிபடாதுன்னு தத்கல்ல நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல பாதிபேர், ஸ்லீப்பர் பஸ்ல பாதி பேர். ரெண்டு டீமும் தனியா போய்ட கூடாதுன்னு இறையருளால் எங்க ட்ரெயின் ஒரு நாலு, அஞ்சு மணி நேரம் கழிச்சு சனிக்கிழமை காலை 5 மணிக்குப் போகவேண்டியது, 10 மணிக்கு தான் போச்சு. 10-15 நாளா ப்ளாகு படிச்சு, லீடர் பால் கூடப் பேசி, என்னென்ன கஷ்டம் வரும், எப்படி சாதிக்கனும்னு எதிர்பார்ப்போட, தயாரிப்போட ஆபீஸ்லேந்து சென்ட்ரல் வந்து ரயிலேறியாச்சு. என் ஒரே மனைவி மற்றும் துணைவி பவானியம்மாள் என் பொண்ண தயார் பண்ணி கிண்டி ஸ்டேஷன்ல கொண்டு வந்து என்னயும் நம்பி வுட்டுட்டுப் போனாங்க. நான் ரொம்ப அவங்கள விட்டு தனியா போனதில்ல. வம்பிழுக்க யாராவது நமக்கு கூட வேணும். அதனால கொஞ்சம் ஃபீலிங், பட் பழைய தமிழ் பட லெவெல் தான், ரொம்ப யோசிக்க வேண்டாம் மேல. ஆளுக்கொரு டப்பால தயிர்சாதம், மாங்காயோட, காலி பண்ணிட்டு தூங்கிட்டோம். திருச்சி-சென்னை ரயில்ல பழக்கமானதால நைட்டு தூங்க பயமா இருக்கும், ஸ்டேஷன விட்டுடுவோமோன்னு. ஒரு தடவ சென்னை-பழனி, இப்ப சென்னை-கோவை, நிம்மதியா தூக்கம், ட்ரைவர் அண்ணன் புதுசா டூவீலர் கத்துக்கறாப்ல வெட்டி, வெட்டி ஓட்டினாரு, ஈரோடுல பிய்க்க முடியாத பூரி, குருமா ஜன்னல் வழியா வாங்கி குடுத்தேன், இனிமே பூரியே அவளுக்கு வெறுத்துப் போய்டனும்னு. எனக்கு ஒரு பருப்பு வடை, ரென்டு ஆனியன் சம்சா,இறை பயணமோல்யோ. என் பொண்ண பாய்னு போட்டு டிக்கெட் புக் பண்ணிட்டாரு லீடு. அதனால் டிடியார் செக்கிங் முடியறவரைக்கும் பரம்பரை, பரம்பரையா அடுத்த பொட்டிக்குக் கூட்டிட்டுப் போவோமே, அதையே செய்தோம். நமக்கு எப்படிப்பட்ட டிடியார் வாய்ப்பாரோ, யார் கண்டா. ஆனா நல்ல டிடியார்.
05 மே 2018, சனிக்கிழமை. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு. அண்ணபூர்ணால தான் டிஃபன் சாப்டனும் அடம் புடிச்சு, நடத்தினு போய் சாப்டோம். அங்க ரோடுல விவேகானந்தர் டீம் ஒன்னு வேன்ல வெச்சிட்டு அன்லிமிடெட் அல்டிமேட் மோரு குடுக்கிட்டே இருந்தாங்கப்பா. இந்த ஏடிஎம்கே டீம் ஒவ்வொரு சம்மர்லயும் பெரிசா வாழ மரம், தோரணம்னு, மைக் செட்டுனு போட்டு, அமைச்சர்கள கூப்டு ப்ரஹ்மாண்டமான கோடை கால குளிர் மோர் பந்தல்னு விளம்பரம் பண்ணி ஒரு ரெண்டு- மூனு மணி நேரம் இளநீர், மோர், தர்ப்பூசணின்னு அவங்களே அமக்களப்படுத்திட்டு போய்டறாங்க, அப்பறம் போய் பாத்தா பானை கூட இல்ல எங்கயும். இப்டியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான். சரி, எங்க டீம், வழக்கம் போல,
அண்ணன் பால்பாண்டி - குழுத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், கோவமே வரமாட்டேங்குதுப்பா இவருக்கு,
இளவரசன் - செயலாளர் (இன்னும் எவ்ளோ காசு கேக்கப்போறாரோ, பாப்பம்)
ஃபோட்டான் சிவக்குமார்
கோபால்
பழனி
சிவா
கார்த்திக்
மஹேந்திரன்
என் பொண்ணும் நானும்
என் பொண்ணு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செலக்ஷனுக்காக நாகலாபுரம் கூட்டினு போயிருந்தோம் (http://jagadhguru.blogspot.in/2018/04/blog-post_23.html). வெற்றிகரமா முடிச்சதன் பரிசு இப்ப இந்த வெள்ளிமலைப் பயணம். குளிக்கறதுக்கு ஈசாவுக்குப் போனோம். ஜக்கி வாசுதேவின் கனவுகள் இன்னும் மெய்ப்படலன்னுதான் தோனுது அங்க இருக்கற செட்டிங் எல்லாம் பாக்கும் போது. த்யான லிங்கம் நல்லா இருந்துது. ஆனா இங்க இருக்கற மொத்த அமைப்புமே, ஆண்கள் குளிக்க சூர்ய குண்டம், பெண்கள் குளிக்க சந்த்ர குண்டம்னு சிவலிங்கம் நடுவில் வைத்து தனித்தனி குளம் வைத்திருக்கிறார்கள். சுத்தத்திற்காக ஷவர்ல குளிச்சதுக்கு அப்புறம் தான் அந்த குளத்துல குளிக்க அனுமதி. ஜென்ட்ஸ்க்கு ஒரு காவித் துண்டு தராங்க. அத கட்டிட்டு தான் அந்த குளத்துல குளிக்கலாம். வ்யாதி உள்ளவர்கள், ஜில் தண்ணி ஒத்துக்காதவங்க தவிர்க்கவும், முடியாதவர்கள் துணையோடு செல்லவும்னு போர்டு, வீடியோ அந்த குளத்தில் குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்னன்னு. ஹிந்து மதத்தோட அமைப்புன்னு சொன்னா எல்லாரும் வரமாட்டாங்க. ஆனா எல்லாரையும் வரவழைக்கனும், ஏன்னா எல்லாரும் ஆதில ஹிந்துங்கற சனாதன மதம்தானே. கட்டுமானங்களுக்கும் காசு நிறையா வேணும். இப்ப அங்கங்க ப்ரஹ்மாண்டமான சிலைகள் வடிக்கறதுதான் ட்ரெண்டு. கொஞ்சம் திடீர் ரிச், ஹைஜீனிக், கார்ப்பரேட் கம்பெனில வேலைன்னு இருக்கறவங்களுக்கு இந்த இடம் புடிக்கும். அவங்கதான் டார்கெட்டும். த்யான லிங்கம் தவிர மற்ற எல்லா இடங்களும் பெர்மனென்ட் மாதிரி தெரியல. எதிர்காலத்துக்குத் தேவைப்படும்போது ஸ்லாப் ஆக்கிக்கலாம்ங்கற அளவுக்கு ப்ரஹ்மாண்டமான பெரும் பெரும் கற்பாறைகள். தரைகள், படிக்கட்டுகள், நீர் நிலைகள், சுற்றுச்சுவர்கள்னு எல்லாமே ஒரு தற்காலிக அமைப்பா தெளிவா தெரியுது. த்யான லிங்கத்தக்கு பக்கத்துலேயே இப்ப லிங்க பைரவின்னு ஒன்னு, ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தா சிவ ராத்ரி அன்னிக்கு டிவில காமிப்பாங்களே அந்த பெரிய ஆதியோகி சிலை. மோர் வெயிலுக்குக் குடுத்திட்டே இருக்காங்க. நீங்க வேணும்னாலும் டொனேட் பண்ணலாம். அங்கங்க பிரிஞ்சு இருக்கற சிலைகள பாத்தா இன்னும் நெறையா திட்டங்கள் இருக்குன்னு தோணுது. நாங்க போன தடவ குளிச்ச இடத்துலயே இந்த தடவ குளம் இல்ல. ஜென்ட்ஸ் குளத்துலயோ, ஷவர்லயோ என் பொண்ண கூட்டிட்டு போக அனுமதிக்கல, லேடீஸ் குளிக்கற குளத்துல டிக்கெட் வாங்கலாம்னா அங்கயும் 12 வயதுக்கு மேல தான் அனுமதின்னுட்டாங்க. வெள்ளியங்கிரி யாத்திரைக்குப் போறோம். நீங்களாவது கூட்டிட்டுப் போய், ஷவர்லயாவது குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்கன்னு கேட்டேன், அனுமதி மறுக்கப்பட்டது. நெறையா பாம்பு சிலைகள் எங்க பாத்தாலும். பாய்ஸ் குளிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாங்க. நானும் பொண்ணும் அடிவாரத்துல இருக்கற கோவில் தொட்டில குளிச்சக்கலாம்னு ஐடியா குடுத்தாங்க பசங்க. கெளம்பினோம். இஸ்கான் கோவில் மாதிரி செப்பல், லக்கேஜ், மொபைல் பத்திரமா வாங்கி வெச்சிட்டு திருப்பித் தராங்க. ஆனா அந்த வாலண்டியர்ஸோட அன்பு, நடை, உடை, பாவனை எல்லாமே க்றிஸ்தவ மிஷினரி, ஷெல் பெட்ரோல் பங்க் உறுப்பினர்கள் மாதிரி செயற்கையா, பயிற்சியின் வெளிப்பாடா தெரியுது. என்னமோப்பா, நல்லது நடந்தா சரி.
ஜக்கி வாசுதேவின் ஆஶ்ரமத்திலிருந்து 20 ரூபா ஷேர் ஆட்டோ பூண்டி அடிவாரக்கோவிலுக்கு. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்லேந்து 40 ரூபா டிக்கெட் அரசு டீலக்குசு பஸ்ல ஈசாவுக்கு வர. ஒன்றரை மணி நேரம் பயணம். அடிவாரக் கோவில், புராதனக்கோவில் கோவில் தான், நல்ல தெய்வீகம், எக்சிபிஷன் பாக்க வந்தா மாதிரி இல்லாம சாமி பாக்க வந்திருக்கோம்னு நம்பிக்கையான, பக்தியான மக்கள் கூட்டம். குளிக்கற தொட்டிக்குப் போற வழி ரொம்பவெல்லாம் நல்லா இல்ல, கவர்மெண்ட் கோவில் மெயின்டெனென்ஸ் நல்லா தெரியுது. திருப்பதிக்காரன் வர்ற காச திருப்பி செலவு பண்ணி, நம்மள திரும்பவம் வரவழைக்கறான். காசு சம்பாதிக்கறான். இந்த தமிழ்நாட்டு அறநிலையத்துறை நாங்க குடுக்கற இம்சையெல்லாம் தாண்டி முடிஞ்சா திரும்பி வந்து பாருன்னு செய்யறான். பழனி கோவிலுக்கு வராத காசா, மலைய சுத்தி மூச்சா நாத்தம். முருகன் எறங்கவே மாட்டார்.
மாலை 5.30 மணிக்குப் பயணத்தைத் தொடங்கினோம். ஆளுக்கு ஒரு க்ளூகோஸ் டப்பா, ரெண்டு பாக்கெட் க்ளூகோஸ் மிட்டாய் பாக்கெட், ரெண்டு ஆரஞ்சு பழங்கள் பிரிச்சு குடுத்தாங்க டீம்ல. பேக்ல போட்டுட்டு, கீழ வைக்க வேண்டிய லக்கேஜ், செப்பல்லாம் லாக்கர்ல வெச்சிட்டு, டோக்கன் வாங்கிட்டு, குச்சி, டார்ச் லைட் வாங்கிட்டு, சாமி கும்பிட்டுட்டு, வேண்டிட்டு கிளம்பியாச்சு. வனத்துறை செக்கிங் முடிஞ்சுது, அவங்க எதிர்பாத்த எடத்துலயெல்லாம் ப்ளாஸ்டிக் கவர், பேப்பர் எதுவும் கிடைக்கல, நான் ப்ரஹ்மாண்டமா மூனு சரவணா ஸ்டோர் கவர ஒளிச்சு வெச்சிருந்தேன், மழைக்கு, மேலேந்து குப்பைப் பொறுக்கிட்டு வர யூஸ் ஆகும்னு. மாலையிளம் கதிரின் வெளிச்சத்துல 6.30 மணிக்கு முதல் மலைய முடிச்சோம். முதல் தடவ போற டீம்ல ஒரு நாலு பேரு முன்னாடி போய்ட்டாங்க. நாங்க சீனியர்ஸ்கூட, இல்ல அவங்க எங்கள கூட்டிட்டு, எங்களோட வந்தாங்க. ரெண்டாவது வழுக்குப் பாறை மலைலேந்து இருட்டுல டார்ச் லைட் பயணம். சொல்லிக்கறாப்ல ஏதாவது கண்ணுக்குத் தெரிஞ்சாதானே வர்ணிக்க. அங்கங்க ரெஸ்ட் எடுத்திட்டு, பாம்பாட்டி சுனைல தண்ணி ரொப்பிட்டு, மூனு, நாலாவது மலைகளைக் கடந்தோம்.
ஐந்து, ஆறாவது மலைல ஆளே தெரியாத அளவுக்குக் கடும் பனி, டார்ச் லைட் வெளிச்சம் ரெண்டு அடிக்கு மேல போகல. நாரதர் நடக்கறாப்ல நம்மள சுத்தி மேகங்கள் பஞ்சு, பஞ்சா. மண்ணு இன்னும் ஜில்லுப்பு ஏறல, நாமளும் காலு ஜில்லுன்னு ஆகறதுக்கு நிக்கல, நடந்திட்டே இருக்கோம். பொண்ணு காட்டன் கார்கோ பேண்ட் அங்கங்க பாக்கெட்டோட, முழுக்கை டீ சர்ட், பாக்கெட்டுகள்ல க்ளூகோஸ், மிட்டாய், பழங்கள், மூஞ்சிய கண்ண மட்டும் விட்டுட்டு அவங்கம்மாவோட காட்டன் சால்வையால சுத்தியாச்சு. வழில கூட்டமா காட்டு எருமைகள் பாகுபலி படத்துல பல்வால் தேவனோட மோதுமே, அத விட பெரிசு, பெரிசா இயற்கையா வளர்ந்தவைகள், மேய்ந்து கொண்டிருந்தன. எருமைகள் தானே என்ன இருந்தாலும், நம்மள கண்டுக்கல. எதிர்க்க இறங்கி வந்தவங்களும் தொல்லை பண்ணாம போங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க. டீம்ல எல்லாரும் பாத்தாங்க. எனக்கு ப்ரச்னையே இல்ல, இந்த ஐ.டி இன்டஸ்ட்ரீக்கு வந்து நமக்கு பகல்லயே பசு மாடு தெரியல, நைட்டுல எங்க எருமைமாடு தெரியப்போகுது. அதனால நோ பயம் சிவன் மலைல எல்லாம் அவன் மயம். பொண்ணு முழுசா பால் அண்ணே கவனிப்பு, பராமரிப்புல. அதிகமான வேர்வை அந்த குளிர்லயும். சில பேருக்கு பத்து படிக்கு ஒரு தடவ மூச்சா. ஒரு வழியா ஆறாவது மலைலேந்து மெதுவா இறங்கி சுனையத் தாண்டினோம். ராத்ரி நேரம், இதுவரை இப்படி பனிய பாத்ததில்ல, அங்க வேற அட்டப்பூச்சி இருக்கும், குளிக்க வேண்டாம்ட்டாங்க. கனத்த இதயத்தோடு க்ராஸ் பண்ணினோம். இன்டர்வல், 400 ரூபா பாப்கார்ன், 80 ரூபா பப்ஸ், ஒளிச்சுக் கொண்டு வந்த 5 ரூபா பாப்கார்ன் சாப்டனும்னா சாப்டுக்கோங்க, சீட்டு நுனிக்கு வரப்போறீங்க இனிமே தான்.
ஏழாவது மலை அடிவாரம், டீக்கடை, எதிரில் ஒரு ஷெட், யார் காலு, கை எங்க இருக்குன்னு தெரியாத அளவுக்கு, மொத்தமா ஒரு ஆயிரம் பாம்புகள ஒன்னா போட்டாப்ல ஒரு 50 பேர் தூங்கறாங்க, நாங்க ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்னு முடிவு பண்ணினோம். நா வேற மேல சிவன் கிட்ட போய் ஒரு நாலு மணி நேரம் சூரியோதயம் வரைக்கும் ருத்ரம், சமகம், சூக்தங்கள், உபநிஷத், சூர்ய நமஸ்காரம்னு வேத மந்த்ரங்கள் சொல்லலாம்னு திட்டம் போட்டு வந்தேன். நானும் பொண்ணும் ஷெட்டுல பக்கத்துல, பக்கத்துல ஒக்காந்து அவள மடில சாஞ்சு தூங்க சொன்னேன். ஒரு நிமிஷத்துல தூங்கிட்டா. 5 நிமிஷத்துல மழை, இடி, மின்னல். சூப்பரா ஒரு 15 நிமிஷத்துக்கு. எங்கள்டேந்து முன்னே பிரிஞ்சு போன அந்த நாலு களவானிப்பசங்களயும் கொட்டகைல தேடினா, கூப்டா காணோம். பிஎஸ்என்எல் 2 ஆவது மலை வரைக்கும் தான் சிக்னல், பின்னாடி வந்த மதங்கள் மாதிரி மத்த ஜியோ, வோடஃபோன் 4 மலை வரைக்கும் சிக்னல், அதுக்கப்பறம் சிவன் மட்டும் தான். ஏழாவது மலைக் கோவில்ல சோலார் லைட் அப்பப்ப தெரியுது. மழைத்தண்ணி எங்க பாத்தாலும் ஓடி வருது. 50 பேரு அந்த சின்ன கொட்டகைல, கீழேந்து சுனைல வேற குளிச்சிட்டு வராங்க பக்தர்கள் அந்த குளிர், மழைலயும், அட்டைப்பூச்சி உபசாரம் எங்க கொட்டகை வாசல்ல வந்து.
ஒரு பத்து நிமிஷம் ப்ரேக், திருப்பி இடி, மின்னல், குளிர் காத்து, மழை ஒரு அரை மணி நேரத்துக்கு. ப்ரளயத்த மார்க்கண்டேயர் நேர்ல பாக்கனும்னு வரம் கேட்டாராம். நான் கேட்காமலே சிவன் அத அப்ப காமிச்சான். பொண்ண தரைல ஒரு துண்டு விரிச்சு அதுல ஒக்காத்தி, என் மேல சாஞ்சிண்டு, அவ துண்ட போத்தி, அது மேல என் மேல் துண்ட போத்தி, அது மேல என் துடைச்சிக்கற துண்ட போத்தி, மேல சொட்டற தண்ணி படாம இது எல்லாத்துக்கும் மேல சரவணா ஸ்டோர் கவர். குழந்தை பத்திரம். நான் பஞ்ச கச்சம் முட்டி வரை, மேல வெறும் உடம்பு தாத்தாவோட ருத்ராக்ஷ மாலையோட. மணி ஞாயிறு காலை 3.30. மக்கள் கொஞ்ச, கொஞ்சமா தைரியத்த வரவழைச்சிண்டு மேல ஏற ஆரம்பிக்கறாங்க. ஒரு மூணு பேரு திடு புடு, திடுபுடுன்னு மேலேந்து சருக்கினு, சேறு, சகதியோட வெற்றில வெறிச்சிப் போயி வந்தாங்க. பாத்தா நம்ம களவானிஸ். நைட் 10-30 மணிக்கே சாமி கிட்ட போய்ட்டாங்களாம். கொஞ்சம் எல்லாருக்கும் வெயிட் பண்ணினதுல மழைல, குளிர்ல மாட்டிட்டு, மேல இருக்கவும் இடமில்லாம, ஒரு வழியா வழிக்கிட்டு வந்துருக்காங்க. மேல போகாதீங்க, மேல போகாதீங்க, லைஃப் டேஞ்சர்னு இங்க வந்து எல்லார்ட்டயும் தெரிக்க விட்றாங்க. பாலும் வந்து சீதா இந்த மாதிரி க்ளைமேட், மழை, குளிர் நாங்க இது வரைக்கும் பாத்ததில்ல. நாம அடுத்த தடவ சாமி பாத்துக்கலாம், தங்கிட்டு இறங்கிடலாம்ங்க்றார். நான் தெளிவா இருக்கேன். அவங்களுக்கு நேர்ந்தது, பால் பயப்படறது இதெல்லாம் நான் படிச்சிட்டு, எதிர்பார்த்து தான் வந்திருக்கேன். பால் நாம ஒரு 300-400 பேருக்கப்பறம் போவோம், அவங்க காலடி பட்டு சேறு காஞ்சிடும், சிவனப் பாக்காம நா திரும்ப மாட்டேன், ராத்திரி 9 மணிக்கு தான் சென்னைக்கு ட்ரெயின். பொழுது விடிஞ்சு ஏறினா கூடி சாமி பாத்துட்டு, மெல்ல இறங்கினா கூட நிம்மதியா ட்ரெயின புடிக்கலாம். ஆனா எடுத்த காரியத்த முடிக்காம வர மாட்டேன், நீங்க கூட வாங்க, போறவங்க போகட்டும்னுட்டேன். அவரும் என்ன சொல்றதுன்னு தெரியாம ஃபீலிங்கோட எதிர்க்கடைக்குப் போயிட்டார். சாமி பாத்துட்டு வந்தவங்களும், எங்க கூட இருக்கறதுல ஒருத்தரும் கீழ இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு 5-5.30 க்கு மேல போகலாம்னு முடிவாச்சு.
நான் இதுவரைக்கும் இயற்கையான ஒரு மலைதானே வந்ததும், ஃபோட்டோஸ் எடுத்துட்டு, உடற்பயிற்சியா வந்ததும் அழிந்தது. உண்மையாக, உணர்ச்சியின் வெளிப்பாடாய் அழ ஆரம்பித்தேன். அந்த இரவை நினைத்து இதை எழுதும் போதும் கண்ணீர் விடுகிறேன் என்னை அறியாமல். படித்த சிவத்தை அனுபவத்தில் உணர்கிறேன், நமக்கும் மேலான சக்தியை உணர்கிறேன். விளையாட்டுத்தனம், என் இயற்கையான சாதித்து விடுவோம் என்கிற முரட்டுப்பிடிவாதம் என்னிடமிருந்து என் இஷ்டத்தோடு என்னை விட்டு விலகுகிறது. ஏழாவது மலையில் ஏறிச்செல்பவர்களின் டார்ச் லைட் ஒளித்தொடர் சிவனின் நடனத்தில் ஆடும் அவன் உடைபோல் தெரிகிறது. அந்த மலை முழுவதும் நடராஜனாகவும், மேலே எங்கும் சூழ்ந்திருக்கும் இருள் மழை மேகங்கள் கங்கையில் தோய்ந்த அவன் ஜடைகளாகவும் கண்கூடாகத் தெரிகிறது. என்னை அழாதே என்று தூக்கிக்கொள்ள வருவதை உணர்கிறேன். நான் அவனிடம் செல்ல இன்னும் தூய்மையில்லை என்று அவசர அவசரமாக ஆதித்ய ஹ்ருதய ஶ்லோகத்தை முழுவதுமாக மூன்று முறை விம்மி, விம்மி சொல்கிறேன். யாருக்கும் எந்த உயிர்க்கும் இன்று எந்த ஒரு தீங்கும் நேராது என்று நம்புகிறேன். இது அவன் வீடு. இந்த ஶ்லோகங்களின் முழுப் பொருளும் எனக்கு முழுதாகத் தெரியாது. ஆனால் அவன் தான் எதற்கும் முழு, முதற்பொருள் என்பதை அறிவேன். இந்த ஶ்லோகங்கள் 30 குறள் போன்றவை. என் தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா அவர்கள் சொல்லிக்கொடுத்தது. அவர் பெருமையும் தெரியாது காலம் முழுதும் அவர் என் தாத்தா என்றே விளையாடிக்கழித்தேன். வால்மீகி ராமாயணத்தில் 30 நாட்கள் நடந்த அந்த ராம-ராவண யுத்தத்தின் ஆரம்பத்தில் ராவணனின் ரத, கஜ, துரக, பதாதி ராட்சத பரிவாரப்படைகளையும், தன்னுடனிருக்கும் கரடி, குரங்குப் படைகளையும் எண்ணி பூமியில் நின்று கொண்டிருக்கும் ராமர் ப்ரமித்த போது அங்கு தோன்ரிய அகஸ்த்தியர் இருளைப் போக்கும் சூரியனே இந்த உலகிற்கு இறைவன், அவனே மும்மூர்த்திகள் என்று பல பொருள் படும் இந்த ஶ்லோகத்தை ராமருக்கு உபதேசித்து, ராமர் அதனை ஜபித்து, யுத்தத்தை ஜயித்தார்.
ஞாயிறு காலை 5.30 மணி, எங்கள் பயணம் தொடர்ந்தது. மலை அவ்வளவாக வழுக்கவில்லை. 10 நிமிடங்களில் டார்ச்சும் தேவைப்படவில்லை. பொழுது பசுமையாகப் புலரத் தொடங்கியது. எங்கும் பசுமை, ரம்மியமான ஒளி. உற்சாகத்தோடு பல குழுவினரின் ஊடே நாங்களும். பொண்ணு இப்ப பேண்ட், டீ சர்ட், கைல தண்டம் மட்டும் தான். மேல சாமி குகை கிட்ட ஒரு 400 பேர் போல சேந்துட்டோம் 6.30 மணிக்கு. இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். அருமையாக பிள்ளையாரைத் தரிசித்து, வெள்ளியங்கிரீஶனை அடைந்தோம். நிலம், நீர், காற்று அனைத்தையும் நன்றாக அனுபவித்த நாங்கள் ஆகாயத்தையும் தரிசித்து, இப்போது ஐந்தாவது பூதமான நெருப்பின் வடிவமாக சூரியனையும் தரிசித்தோம். என் பொண்ணு சிவன் மேல ஶம்போ, சிவ ஶம்போ ஸ்வயம்போன்னு பாட்டு பாடினா. ரெண்டு பேருக்கும் மடக்குலேந்து விபூதிய எடுத்து பட்டை இட்டு விட்டார்கள் பூசாரிகள். அவளுக்குப் பரிசாக மல்லை, முல்லைச் சரம் குடுத்தார்கள். ஸ்வாமி கிட்டேந்து மாலை எடுத்து அணிவித்தார்கள். விபூதி, பொட்டலம்,, வில்வம், பச்சை, மலர்கள் எனக்கு ப்ரசாதம். தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், ஈசானம் என்ற ஒவ்வொரு முகத்துக்கும் ஒன்றாக வேத மந்த்ரங்களை சுருக்கமாகச் சொல்லச்செய்தான் இறைவன். கொண்டு போயிருந்த சங்கை எடுத்து குழுவினருடன் ஏழாவது மலை உச்சியில் கல்லால் இயற்கையாய் அமைந்திருந்த நந்தி (அல்லது மூஞ்சூறு) சிகரத்தினடியில் முழங்கினோம். அங்கிருந்த சித்தர் என் பெண்ணிடம் எங்க இருந்த வர, கொழந்த, பேரு என்ன, இப்பதான் வரியான்னு கேட்டு ஆசிர்வதித்தார். மாலையோடே நான்காவது மலை வரை வந்து விட்டாள். நாரு மட்டுந்தான் அப்ப இருந்துது அந்த மாலைல அப்ப, சித்தர் குகை கிட்ட ஒரு மரத்துல தூக்கிப் போட்டுட்டு, மெல்ல இறங்கினேன். வரும் போது நான் மட்டும் ஆண்டி சுனைல குளிச்சிட்டு, பூஜை முடிச்சிட்டு வந்தேன். நானும் இப்ப கார்கோ பேண்ட், டி சர்ட்டுக்கு மாறியாச்சு. சிவன் பெரிய ஆளா இருப்பான் போல இருக்குன்னு மனசு சொல்லிட்டே வருது. சரிவுல ஏறுவதும், படில இறங்குவதும் நமக்குக் கொஞ்சம் கஷடம். காலு ஆங்கிள்ல ஃப்ராக்சர் ஆகி இப்பதான் 5-6 மாதம் இருக்கும். அதனால, ரெண்டு குச்சி வெச்சிட்டு ஏறி, இறங்கினேன் மாடு போல. வழில ஒரு கடை தாத்தா என் பொண்ண ஞாபகம் வெச்சிட்டு, பேர சொல்லி கூப்பிட்டு அவளுக்கு வெங்காய பக்கோடா, நீர் மோரு அப்ப தயார் பண்ணி குடுத்து ஆசிர்வதிச்சார். அவன் ஓயாம பேசிட்டே ஏறி, இறங்கிட்டா. போகும் போது பால் பாத்து கூட்டிட்டு போனாரு. வரும்போது சிவா. ரெண்டாவது மலைல வீட்டுக்கு சுனை நீர் ப்ரசாதமா பிடிச்சிட்டு வந்தோம். அன்று காலை வந்து கொண்டிருந்தவராம். சுமார் 45-50 வயசு இருக்கும், தனியா வந்திருக்கார் இல்ல பிரிஞ்சிருக்கார். தண்ணி தவிச்சோ, வேறெந்த காரணமோ, நாலாவது மலைல உயிர் பிரிந்து விட்டது. காட்டு மக்கள் ஃபோட்டோ எடுத்து போலீஸுக்கு அனுப்ச்சிட்டு, உடம்ப எகிப்து மம்மி மாதிரி துணியால மூட்டை கட்டி, ஒரு குச்சில வேட்டையாடின விலங்கு போல தொங்க விட்டு கட்டி, ரெண்டு பேரா தூக்கிட்டு ஓடினாங்க, நாங்க ரெண்டாவது மலைல தண்ணி பிடிச்சிட்டு இருந்த போது. சிவலோக ப்ராப்தி.
அடிவாரத்துல வடை, பாயசம், சாம்பார், மூலிகை ரசம், மோர், கோஸ்-கேரட்-தேங்காய் கறின்னு தடபுடலா அன்னதானம். ஒரு பிடி, ஒரே பிடிதான். பின்ன, நேத்தி காலை ஒரு வடை, ஒரு சம்சா சாப்டது. எறும்போது எதுவும் சாப்டல, நடுவுல மயக்கம் வந்தப்ப பை முழுக்க சாமான், எதையும் தேடி எடுக்க நேரம் இல்ல, பால் அவர் வெச்சிருந்த ஆரஞ்சு பழம் ரெண்ட உரிச்சுக் கொடுத்தார் பாத்துட்டு, சுளைய கூட பிரிக்காம அப்டியே ஒவ்வொரு பழமா ஆரஞ்ச வாய்ல போட்டு கரும்பு ஜூஸ் மிஷின் மாதிரி ஒரு அழுத்து. உயிர் வந்துது. இறங்கும்போது ஒரு மாங்கா, ஒரு ஆரஞ்சு மிட்டாய், ரெண்டு டம்ளர் மோர், எங்களோட நாலு ஆரஞ்சு பழங்கள சிவன்ட்ட குடுத்திட்டோம் மேல, அரிசி, வெல்லம் கொண்டு போய் குடுக்கனும்னு ப்ளான், ஆனா ட்ரெயின் லேட்டால அது ஃப்ளாப். 7.30 மணிக்கு இறங்க ஆரம்பிச்சு மதியம் 2.30 மணிக்கு அடிவாரத்தை வந்து சேர்ந்தோம். பொண்ணு ஒரு மணி நேரம் தூக்கம். 4.30 மணிக்குக் கோவில்லேந்து கிளம்பி, ஈசாவுக்கு வந்து 5.30 க்கு பஸ் ஏறினோம். 6.30 மணி ரயில்வே ஸ்டேஷன். அத்தை, சித்தப்பான்னு ஒருத்தர் வீட்டுக்கும் போக முடியல, நேர வீட்டுக்குத்தான் அனுப்பனும்னு அவன் திட்டம். அதே ட்ரைவர், அதே செக்கர், அதே நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல. அதே நாலு மணி நேரம் லேட்டு. திங்கள் கிழமை, 07மே2018, காலை 9.30 மணிக்கு தாம்பரம் வீட்டுக்கு வந்து சேந்து, குழந்தைக்கு அவள் தம்பியும், அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். கதையெல்லாம் வேகமா சொல்லிட்டு ஆஃபீஸ் கெளம்பியாச்சு. உடம்பு வலின்னு ஒன்னும் யாருக்கும் பெரிசா ப்ரச்சினை இல்லை. மீண்டும் சந்திப்போம். நாங்க ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம்.
வெள்ளியங்கிரி இறைப்பயணம் - அவனருளாலே அவன் தாள் வணங்கி
தாயை வணங்கினாலும், ஒதுக்கினாலும், எதிர்த்தாலும் அவள் அருள் நமக்கு என்றும் உண்டு என்பது கண்கூடு. தாயுமானவனும் அப்படியே, கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவளித்துக் காப்பவன் அவன். வடக்கே வெள்ளிப்பனிமலையில் குடி கொண்ட கைலாஸபதியை சென்று தரிசிக்க முடியாதவர்கள், வெள்ளியங்கிரீஶனை சென்று தரிசித்து பிறவிப் பயனை அடைகிறார்கள்.
வெள்ளியங்கிரி:
கோயம்புத்தூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த மலை அடிவாரத்தின் அருகில் தான் தற்போது ப்ரபலமாகிவரும் ஜக்கிவாசுதேவின் ஈஶா த்யான நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து ஒரு 6000 அடி உயரமுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலையை சேர்ந்தது. தென் கயிலை என்று பெயர் பெற்றது.
விலங்குகள் நீரைத்தேடி கீழே இறங்கியிருக்கும் என்பதால் ஃபிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை யாத்திரைக்கு உகந்தது.
பேறு காலத்தில் இருக்கும் பெண்கள் மலையேறுவதில்லை. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 40-45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே மலையேறுகின்றனர்.
வயதானவர்கள் தனியே பயணிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.
கையில் ஒரு ஊன்று கோலுடன் பயணிப்பது அவசியம்.
தண்ணீர் அவரவர் உடல் நிலையைப் பொறுத்து 30-50 அடிகளுக்கு ஒரு முறை நிச்சயம் தேவைப்படும். ஏழு மலைகளைக் கொண்ட இந்த தொடரில் அடிவாரத்திலும், இரண்டாவது மலை முடிவிலும், ஆறாவது மலை முடிவிலுமே குடி நீர் கிடைக்கும்.
வெறுங்கால்களிலேயே யாத்திரை செல்வது உகந்தது. ட்ரெக்கர்ஸ், முடியாதவர்கள் ஷூ, செப்பல் அணிந்தும் பயணிக்கிறார்கள்.
முதல் மலை முற்றிலும் ஒழுங்கில்லாத சுமார் 1000 படிகளால் ஆனது. ஒரு சில படிகளில் முழு காலும் வைக்க முடியும், ஒரு சில படிகளில் பாதி கால் தான் வைக்க முடியும், செதுக்கப்படாத படிகள் என்பதால் கரடு முரடாக இருக்கும், செருப்பில்லாமல் பயணித்தால் எந்த ஒரு கால் ப்ரச்சினையும் சரியாகி விடும். காலில் கட்டை விரல், நுனிக்கால், குதிகால் என பல பகுதிகள் இருப்பதை இறங்கும் போது உணருவோம். முதல் மலை முடிந்ததும் ஒரு பிள்ளையார் கோவில், 30 ரூபாய்க்கு லெமன் சோடா, 20 ரூபாய்க்கு மோர், பிஸ்கெட், கடலை மிட்டாய், எள்ளுருண்டை, ஆரஞ்சு மிட்டாய் என கடை இரண்டு. திருப்பதி- திருமலை ஏறும்போது காலி கோபுரத்தை அடையும் த்ருப்தி இந்த முதல் மலையை முடிக்கும் போது இருக்கும். ஒரு மணி நேரம் சுமாரில் இந்த மலையைக் கடப்போம் எந்த உடல் நிலையில் இருப்பவர்களும்.
இரண்டாவது மலை கல் பாறை மலை - 1974 ஆம் வருடம் யாத்திரை செல்பவர்களின் வசதிக்காக இந்த வழுக்குப்பாறைகளில் சிறு, சிறு படிகளை செதுக்கியிருக்கிறார்கள் தெய்வ நாயகி- பழனிச்சாமி கவுண்டர் தம்பதியர், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் படிகள் போல, அவ்வளவு அகலம் இல்லை ஆனால். 2 ஆவது மலை முடியும் இடத்தில் பாம்பாட்டி சுனை என்ற ஒன்றில் நீர் வருகிறது. மூங்கிலைச் சொருகியிர்ந்த இடத்தில் இப்போது ஓஸ் பைப்பை செருகி இருக்கிறார்கள். பொறுமையாக நீரை வயிற்றிலும், பாட்டில்களிலும் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடங்கலாம்.
இரண்டு, மூன்றாம், நான்காம் மலைகளை சுமார் மூன்று மணி நேரத்தில் கடப்போம். மூன்று, நான்கு மலைகளில் சில இடங்களில் ஒழுங்கற்ற படிகளும், பாறைகளும், மண் மேடுகளிலும் ஏறி பயணிப்போம். இந்த நான்கு மலை வரையிலேயே உயர்ந்த மரங்களும், ஓயாத காட்டு வண்டுகளின் ரீங்காரம் இடைவிடாது ங்கொய்ய்ய்ன்னு ஒலித்துக் கொண்டே இருக்கும். வெயில் அதிகமாக தெரியவில்லை. பெண்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற சுற்றுலா தலங்களில், புனிதத் தலங்களில் நாம் காணும் ஜோடிகளும், அர்த்தமற்ற, பொழுது போக்குப் பேச்சுக்களும் கேட்கவில்லை, எங்கு பார்த்தாலும் சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.
ஐந்தாம் மலை முழுதும் சுத்தமான செம்மண்ணைக் காண முடிந்தது. குச்சியை ஊன்றினாலே செக்கச்செவேலென்று காஞ்சி காமாக்ஷி கோவில் குங்குமம் போன்ற கலரில் ஐந்தாவது மலையின் மண். அதிக ஏற்றம் இல்லை 5-6 மலைகளில். சமவெளியில் நடக்க முடிந்தது. 5 மற்றும் 6 வது மலைகளை சுமார் ஒரு மணி நேரத்தில் கடப்போம். ஆறாவது மலை மண் முழுக்க எங்க தோண்டினாலும் விபூதி மாதிரியே இருக்கு.
ஆறாவது மலை சமவெளி முடியும் இடத்தில் சரிவாக இறங்கினால் ஆண்டி சுனை இருக்கிறது. சுனை நீர் வந்து சேரும் நிலையில் ஒரு குட்டி சிவலிங்கம் நடுவில் இருக்கிறது நீருக்கு மேல் தெரியுமாறு. அங்கு தண்ணீர் தேங்கி செல்லுமாறு தடுப்புச்சுவர் இடுப்பளவுக்குக் கட்டி இருக்கிறார்கள். ச்சிலீர் என்று இருக்கிறது நீர். சிவலிங்கம் இருக்கும் சுனையில் சுவரில் உட்கார்ந்து இறங்கி டக்குணு ஒன்னு ரெண்டு முக்கு போட்டு எழுந்தால் அட்டைப்பூச்சியின்றி பயணிக்கலாம். அங்க கொஞ்சம் இளைப்பா இருக்குன்னு ஆட்டம் போட்டா, ஒரு 15-20 நிமிஷத்துல முட்டிக்காலுக்குக் கீழ எங்கயாவது கூச்சமோ, ஊசி போட்டாப்ல வலியோ வரும். அப்ப பாத்தா தான் அந்த அட்டைப்புழுவே கண்ணுக்குத் தெரியும். நம்ம க்ராமங்கள்ல தட்டையா இருக்கற அட்டைப்பூச்சி இல்ல இவர். கொடைக்கானல், ஊட்டிலயெல்லாம் இருக்குமே, நம்ம ரத்தத்தை ஓட்டைப் போட்டு ஆட்டையப் போட்டு தான் பெரிசாகி இவர் கண்ணுக்குத் தெரிவார், தரிசனம் செய்து கொள்ளலாம், ஒரு குச்சியால் பட படன்னு இருக்கறதையெல்லாம் தட்டி விட்டா எவ்வளவு பெரிசாகியிருக்கேன் பாருன்னு பெருமையா பூமில காமிக்கும். ஓட்டை போட்ட இடத்துல நமக்கு ரத்தம் வந்திண்டு இருக்கும். நாம பாட்டுக்கு அட்டைப்பூச்சி, அட்டைப்பூச்சின்னு விளம்பரம் பண்ணிட்டுப் போய்ட்டே இருக்கலாம், எவனும் கவனிக்கப்போறதில்ல, அவனும் குளிச்சிட்டு அப்படியே தான் வரப்போறான். மருந்தெல்லாம் நாங்க ஒன்னும் போட்டுக்கல. கொஞ்ச நாள்ல மறந்துடுவோம். சொரண வந்து தட்டி விட்டுட்டதால, ஓட்ட போட்டு உடம்புக்குள்ள போய்டுமா, அப்ப என்ன ஆகும், என்ன பண்ணனும், எனக்கு அனுபவமில்ல.
ஆண்டி சுனைலேந்து ஏழாவது மலை ஒரு 45-55 டிகிரி செங்குத்து, மண்ணு மலை. 5, 6 மற்றும் ஏழாவது மலை முழுதும் பச்சைப் பசேலென்று இருக்கிறது. நாம் உண்மையாகவே மேகங்களுக்குள் பயணிப்போம். ஏழாவது மலை உச்சியில் நட்டு வைத்திருக்கும் வேல், சூலங்களுக்கு நடுவே இயற்கையான ஒரு கல் பாறைக்கூரைக்குக் கீழே வெள்ளியங்கிரீஶன் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கிறான். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாஶம் என்ற பஞ்ச பூதங்களின் ப்ரதிநிதியாய் நான்கு சுயம்பு லிங்கங்கள். பூமியின் சார்பாக அந்த மலையே லிங்கமாய். அவன் மகனை முதலில் தரிசித்துப் பின் சிவனை தரிசிக்கிறோம். பூசாரிகள் தரிசனத்திற்கு உதவி செய்கிறார்கள். கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து துரத்துவதில்லை எவ்வளவு கூட்டமிருந்தாலும், சிவனிடம் தேங்காய் குடுத்தால் உடைத்துக் கொடுக்கிறார்கள். காணிக்கைக் காசுகளை உண்டியலிலேயே போடச்சொல்கிறார்கள் அனைவரும். ஒரு மடக்கில் விபூதியைக் குழைத்து வைத்துக் கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் நெற்றியில் பட்டையாக பூசி விடுகிறார் பூசாரி. சித்தர் ஒருவர் அங்கேயே சிவனுக்கு எதிரில் குடிசையில் இருக்கிறார். நம்மிடமிருந்து அவர்களெவரும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது தமிழக அறநிலையத் துறைக் கோவில்களில் தரிசனம் செய்து பழக்கப்பட்ட நமக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. சூர்யோதயத்தின் போது சிவ தர்ஶனம் செய்ய பெரிதும் ஆர்வமாய் இருக்கிறார்கள் பலர். அவர்கள் ஆறாம் மலை முடிவிலேயே ஒரு டீக்கடை இருக்கிறது. அதற்கு எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஷெட்டில் வேண்டுமானால் தங்கி வரலாம். மேலே ஒரு குழுவினரும் தங்க முடியாது. 5, 6 மற்றும் 7 ஆவது மலை மே மாதம் சென்றிருக்கும் போதே இரவில் தாங்க முடியாத குளிர், பனி. சூழ் நிலையைப் பொறுத்து மழை வந்து இந்த 5, 6, 7 மலைகளில் மாட்டிக்கொண்டால் இருக்கும் இடத்திலேயே இருப்பது தான் உயிருக்கு உத்தரவாதம். எறங்கறேன்னு மழையில், மலையில் எங்கயாவது வழுக்கி விழுந்தா இன்னும் வழில இருக்கறவங்களயெல்லாம் சரிச்சு விட்டுனு விழுவோம். அப்பறம் காவல் துறை என்ன செய்தது, வனத்துறை என்ன செய்தது, இங்கு இருக்கும் டில்லியின் எடுபிடி அரசு என்ன செய்தது, ராணுவம் எங்கே, மத்திய பார்ப்பணீய அரசு தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் த்ரோகம் இழைக்கிறதுன்னு கத்தி ப்ரயோஜனமில்ல. இது சுற்றுலாத் தலமல்ல. உடல், மன உறுதி கொண்டவர்கள் வந்து தரிசியுங்கள். ஈசன் ஒருவனே காப்பவன்.
நிம்மதியா ஏறி, தரிசித்து இறங்க 12-13 மணி நேரம்.
பூண்டி அடிவாரத்திலேயே பழங்கால சிவன் கோவில் ஒன்றுள்ளது. பாரம்பரியம் மிக்கது. மலை ஏற முடியாதவர்கள், மலை ஏற்றி விட வந்த மனைவி, குடும்பத்துப் பெண்கள் எல்லாம் மேலே சென்றுள்ளவர்கள் பத்திரமாக தரிசனம் முடிந்து திரும்பி வர வேண்டும் என்று இங்கு விரதம் இருக்கிறார்கள். மலையேற்ற நாட்களில் ஏராளமாக அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். வருத்தி, வருந்தி உண்ண அழைத்து, உண்மையாய் உணவளிக்கிறார்கள். சொற்றுணை வேதியனை தரிசித்தோருக்கு அடிவாரத்தில் சோற்று மலை நிச்சயம். காவடிக் குழுவினர், அடிக்கடி மலையேறுவோர்கள், அப்பாவோடு ஏறும் குழந்தைகள், சிறு, பெரு வயது பெண்கள் என ஆர்வமாகப் பலர் மலை ஏறுகிறார்கள். அடிவாரத்திலேயே முடி இறக்க, காலைக்கடன்கள் கழிக்க, குளிக்க என்று வசதிகள் இருக்கிறது.
வனத்துறையினர் அடிவாரத்திலேயே பையில் இருப்பவைகளையெல்லாம் வெளியே எடுத்து வைக்கச் சொல்லி சோதனை செய்கிறார்கள் ப்ளாஸ்டிக் பேப்பர்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாதென்று. வாட்டர் பாட்டிலில் சுற்றியிருக்கும் ப்ராண்ட் பேப்பர், கடலை மிட்டாய், பிஸ்கெட் கவர், சோத்து மூட்டை என்று எதுவாக இருந்தாலும் நீக்கி விடுகிறார்கள். உங்களுக்கு அப்படியும் மேலெ சென்று ப்ளாஸ்டிக் குப்பை போட வேண்டுமென்ற வேண்டுதல் இருந்தால் வழியில் உள்ள கடைகளில் குளிர்பான ப்ளாஸ்டிக் பாட்டில்கள், பிஸ்கெட், மிட்டாய் பாக்கெட்டுகள், மோர், கூழ் பேப்பர் டம்ளர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ப்ளீஸ் தண்ணி பாட்டில் தவிர வேறெதையும் மேலே எடுத்து செல்லாதீர்கள், வழியில் ஒரு 100-200 செலவில் வாங்கி வேணுங்கறத தின்னுட்டு, குப்பையையெல்லாம் உங்க பையிலேயே எடுத்து வந்து அடிவாரத்துல ஸ்வச் பாரத் இருக்கு அங்க போடுங்க, க்ளீன் பண்ணிப்பாங்க. அதிகமா யாரும சாப்டுட்டு நடந்து பாக்கல. வெயில்ல பழக்கப்பட்ட நம்மவர்கள் பெரும்பாலும் காலை ஒரு நாலு மணி வாக்குல கீழேந்து கெளம்பி மாலை இருட்டறதுக்குள்ள தரிசனம் முடிச்சிட்டு, கீழ வந்துடறாங்க. நம்மள மாதிரி சிட்டில, ஏசில வாழறவங்க ராத்திரி மலை ஏறுகிறார்கள். டார்ச் லைட் உதவியோடு, அடிவாரத்துல 100 ரூபாலேந்து டார்ச் லைட், அதற்கான பேட்டரி கிடைக்கிறது. வழித்துணையாம் ஈசன் தடி 30 ரூபாய்க்கு தேவஸ்தானம் விற்கிறது. நீங்க கொண்டு வந்திருந்தாலும் எடுத்திட்டுப் போகலாம். இதை கீழ வந்ததும் வீட்ல பூஜைல வெச்சு பூஜிக்கறாங்க.
இதுவரை நீங்கள் படித்தது வெள்ளியங்கிரி யாத்திரையைப் பற்றிய பொதுக் குறிப்புகள், இனிமே தான் நாங்க அனுபவப்பட்ட எங்களோட பயணக்கட்டுரை. மேல படிச்சா அவ்வளவு புண்ணியம், மல்டி லெவல் மார்கெட்டிங் மாதிரி ஒவ்வொருவரும் ஒரு பத்து பேருக்கு இந்த லிங்க்க அனுப்ச்சி படிக்க சொன்னா, பத்தே நாளில் உங்களுக்குள் நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன். ட்ரெக்கர்ஸ்சுக்கும் உபயோகமா இருக்கும்.
04 மே 2018 வெள்ளிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு ரப்திசாகர் ட்ரெயின்ல ரிசர்வ் பண்ணியிருந்தோம். இப்ப பல வருடங்களுக்குப் பிறகு நெறையா இடத்துல ரயில் ட்ராக் எல்லாம் பாத்து, பாத்து மாத்தறாங்க. ஜல்லியும். எங்க ட்ரெயின் அதனால சென்ட்ரல் வராது, நீங்க காட்பாடில வந்து ஏறிக்கோங்கன்னு டிஜிட்டல் இந்தியாலேந்து ஒரு எஸ். எம். எஸ். ரயில்வே டிபார்ட்மெண்ட்லேந்து, நேர்ல புக் பண்ணினவங்களுக்கெல்லாம் தூதர்கள் அனுப்சிருக்காங்களா, முரசு அறிவிச்சிருக்காங்களான்னு தெரியல. பாத்தா அந்த ட்ரெய்யின் காட்பாடிக்கு அஞ்சாம் தேதி காலை 1.30 மணிக்கு வரும்னு சொன்னாங்க முதல்ல, அப்பறம் அது 24 மணி நேரம் தாமதமா வருதுன்னு இன்னொரு மெசேஜ் மொபைலுக்கு. இது சரிபடாதுன்னு தத்கல்ல நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல பாதிபேர், ஸ்லீப்பர் பஸ்ல பாதி பேர். ரெண்டு டீமும் தனியா போய்ட கூடாதுன்னு இறையருளால் எங்க ட்ரெயின் ஒரு நாலு, அஞ்சு மணி நேரம் கழிச்சு சனிக்கிழமை காலை 5 மணிக்குப் போகவேண்டியது, 10 மணிக்கு தான் போச்சு. 10-15 நாளா ப்ளாகு படிச்சு, லீடர் பால் கூடப் பேசி, என்னென்ன கஷ்டம் வரும், எப்படி சாதிக்கனும்னு எதிர்பார்ப்போட, தயாரிப்போட ஆபீஸ்லேந்து சென்ட்ரல் வந்து ரயிலேறியாச்சு. என் ஒரே மனைவி மற்றும் துணைவி பவானியம்மாள் என் பொண்ண தயார் பண்ணி கிண்டி ஸ்டேஷன்ல கொண்டு வந்து என்னயும் நம்பி வுட்டுட்டுப் போனாங்க. நான் ரொம்ப அவங்கள விட்டு தனியா போனதில்ல. வம்பிழுக்க யாராவது நமக்கு கூட வேணும். அதனால கொஞ்சம் ஃபீலிங், பட் பழைய தமிழ் பட லெவெல் தான், ரொம்ப யோசிக்க வேண்டாம் மேல. ஆளுக்கொரு டப்பால தயிர்சாதம், மாங்காயோட, காலி பண்ணிட்டு தூங்கிட்டோம். திருச்சி-சென்னை ரயில்ல பழக்கமானதால நைட்டு தூங்க பயமா இருக்கும், ஸ்டேஷன விட்டுடுவோமோன்னு. ஒரு தடவ சென்னை-பழனி, இப்ப சென்னை-கோவை, நிம்மதியா தூக்கம், ட்ரைவர் அண்ணன் புதுசா டூவீலர் கத்துக்கறாப்ல வெட்டி, வெட்டி ஓட்டினாரு, ஈரோடுல பிய்க்க முடியாத பூரி, குருமா ஜன்னல் வழியா வாங்கி குடுத்தேன், இனிமே பூரியே அவளுக்கு வெறுத்துப் போய்டனும்னு. எனக்கு ஒரு பருப்பு வடை, ரென்டு ஆனியன் சம்சா,இறை பயணமோல்யோ. என் பொண்ண பாய்னு போட்டு டிக்கெட் புக் பண்ணிட்டாரு லீடு. அதனால் டிடியார் செக்கிங் முடியறவரைக்கும் பரம்பரை, பரம்பரையா அடுத்த பொட்டிக்குக் கூட்டிட்டுப் போவோமே, அதையே செய்தோம். நமக்கு எப்படிப்பட்ட டிடியார் வாய்ப்பாரோ, யார் கண்டா. ஆனா நல்ல டிடியார்.
05 மே 2018, சனிக்கிழமை. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு. அண்ணபூர்ணால தான் டிஃபன் சாப்டனும் அடம் புடிச்சு, நடத்தினு போய் சாப்டோம். அங்க ரோடுல விவேகானந்தர் டீம் ஒன்னு வேன்ல வெச்சிட்டு அன்லிமிடெட் அல்டிமேட் மோரு குடுக்கிட்டே இருந்தாங்கப்பா. இந்த ஏடிஎம்கே டீம் ஒவ்வொரு சம்மர்லயும் பெரிசா வாழ மரம், தோரணம்னு, மைக் செட்டுனு போட்டு, அமைச்சர்கள கூப்டு ப்ரஹ்மாண்டமான கோடை கால குளிர் மோர் பந்தல்னு விளம்பரம் பண்ணி ஒரு ரெண்டு- மூனு மணி நேரம் இளநீர், மோர், தர்ப்பூசணின்னு அவங்களே அமக்களப்படுத்திட்டு போய்டறாங்க, அப்பறம் போய் பாத்தா பானை கூட இல்ல எங்கயும். இப்டியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான். சரி, எங்க டீம், வழக்கம் போல,
அண்ணன் பால்பாண்டி - குழுத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், கோவமே வரமாட்டேங்குதுப்பா இவருக்கு,
இளவரசன் - செயலாளர் (இன்னும் எவ்ளோ காசு கேக்கப்போறாரோ, பாப்பம்)
ஃபோட்டான் சிவக்குமார்
கோபால்
பழனி
சிவா
கார்த்திக்
மஹேந்திரன்
என் பொண்ணும் நானும்
என் பொண்ணு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செலக்ஷனுக்காக நாகலாபுரம் கூட்டினு போயிருந்தோம் (http://jagadhguru.blogspot.in/2018/04/blog-post_23.html). வெற்றிகரமா முடிச்சதன் பரிசு இப்ப இந்த வெள்ளிமலைப் பயணம். குளிக்கறதுக்கு ஈசாவுக்குப் போனோம். ஜக்கி வாசுதேவின் கனவுகள் இன்னும் மெய்ப்படலன்னுதான் தோனுது அங்க இருக்கற செட்டிங் எல்லாம் பாக்கும் போது. த்யான லிங்கம் நல்லா இருந்துது. ஆனா இங்க இருக்கற மொத்த அமைப்புமே, ஆண்கள் குளிக்க சூர்ய குண்டம், பெண்கள் குளிக்க சந்த்ர குண்டம்னு சிவலிங்கம் நடுவில் வைத்து தனித்தனி குளம் வைத்திருக்கிறார்கள். சுத்தத்திற்காக ஷவர்ல குளிச்சதுக்கு அப்புறம் தான் அந்த குளத்துல குளிக்க அனுமதி. ஜென்ட்ஸ்க்கு ஒரு காவித் துண்டு தராங்க. அத கட்டிட்டு தான் அந்த குளத்துல குளிக்கலாம். வ்யாதி உள்ளவர்கள், ஜில் தண்ணி ஒத்துக்காதவங்க தவிர்க்கவும், முடியாதவர்கள் துணையோடு செல்லவும்னு போர்டு, வீடியோ அந்த குளத்தில் குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்னன்னு. ஹிந்து மதத்தோட அமைப்புன்னு சொன்னா எல்லாரும் வரமாட்டாங்க. ஆனா எல்லாரையும் வரவழைக்கனும், ஏன்னா எல்லாரும் ஆதில ஹிந்துங்கற சனாதன மதம்தானே. கட்டுமானங்களுக்கும் காசு நிறையா வேணும். இப்ப அங்கங்க ப்ரஹ்மாண்டமான சிலைகள் வடிக்கறதுதான் ட்ரெண்டு. கொஞ்சம் திடீர் ரிச், ஹைஜீனிக், கார்ப்பரேட் கம்பெனில வேலைன்னு இருக்கறவங்களுக்கு இந்த இடம் புடிக்கும். அவங்கதான் டார்கெட்டும். த்யான லிங்கம் தவிர மற்ற எல்லா இடங்களும் பெர்மனென்ட் மாதிரி தெரியல. எதிர்காலத்துக்குத் தேவைப்படும்போது ஸ்லாப் ஆக்கிக்கலாம்ங்கற அளவுக்கு ப்ரஹ்மாண்டமான பெரும் பெரும் கற்பாறைகள். தரைகள், படிக்கட்டுகள், நீர் நிலைகள், சுற்றுச்சுவர்கள்னு எல்லாமே ஒரு தற்காலிக அமைப்பா தெளிவா தெரியுது. த்யான லிங்கத்தக்கு பக்கத்துலேயே இப்ப லிங்க பைரவின்னு ஒன்னு, ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தா சிவ ராத்ரி அன்னிக்கு டிவில காமிப்பாங்களே அந்த பெரிய ஆதியோகி சிலை. மோர் வெயிலுக்குக் குடுத்திட்டே இருக்காங்க. நீங்க வேணும்னாலும் டொனேட் பண்ணலாம். அங்கங்க பிரிஞ்சு இருக்கற சிலைகள பாத்தா இன்னும் நெறையா திட்டங்கள் இருக்குன்னு தோணுது. நாங்க போன தடவ குளிச்ச இடத்துலயே இந்த தடவ குளம் இல்ல. ஜென்ட்ஸ் குளத்துலயோ, ஷவர்லயோ என் பொண்ண கூட்டிட்டு போக அனுமதிக்கல, லேடீஸ் குளிக்கற குளத்துல டிக்கெட் வாங்கலாம்னா அங்கயும் 12 வயதுக்கு மேல தான் அனுமதின்னுட்டாங்க. வெள்ளியங்கிரி யாத்திரைக்குப் போறோம். நீங்களாவது கூட்டிட்டுப் போய், ஷவர்லயாவது குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்கன்னு கேட்டேன், அனுமதி மறுக்கப்பட்டது. நெறையா பாம்பு சிலைகள் எங்க பாத்தாலும். பாய்ஸ் குளிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாங்க. நானும் பொண்ணும் அடிவாரத்துல இருக்கற கோவில் தொட்டில குளிச்சக்கலாம்னு ஐடியா குடுத்தாங்க பசங்க. கெளம்பினோம். இஸ்கான் கோவில் மாதிரி செப்பல், லக்கேஜ், மொபைல் பத்திரமா வாங்கி வெச்சிட்டு திருப்பித் தராங்க. ஆனா அந்த வாலண்டியர்ஸோட அன்பு, நடை, உடை, பாவனை எல்லாமே க்றிஸ்தவ மிஷினரி, ஷெல் பெட்ரோல் பங்க் உறுப்பினர்கள் மாதிரி செயற்கையா, பயிற்சியின் வெளிப்பாடா தெரியுது. என்னமோப்பா, நல்லது நடந்தா சரி.
ஜக்கி வாசுதேவின் ஆஶ்ரமத்திலிருந்து 20 ரூபா ஷேர் ஆட்டோ பூண்டி அடிவாரக்கோவிலுக்கு. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்லேந்து 40 ரூபா டிக்கெட் அரசு டீலக்குசு பஸ்ல ஈசாவுக்கு வர. ஒன்றரை மணி நேரம் பயணம். அடிவாரக் கோவில், புராதனக்கோவில் கோவில் தான், நல்ல தெய்வீகம், எக்சிபிஷன் பாக்க வந்தா மாதிரி இல்லாம சாமி பாக்க வந்திருக்கோம்னு நம்பிக்கையான, பக்தியான மக்கள் கூட்டம். குளிக்கற தொட்டிக்குப் போற வழி ரொம்பவெல்லாம் நல்லா இல்ல, கவர்மெண்ட் கோவில் மெயின்டெனென்ஸ் நல்லா தெரியுது. திருப்பதிக்காரன் வர்ற காச திருப்பி செலவு பண்ணி, நம்மள திரும்பவம் வரவழைக்கறான். காசு சம்பாதிக்கறான். இந்த தமிழ்நாட்டு அறநிலையத்துறை நாங்க குடுக்கற இம்சையெல்லாம் தாண்டி முடிஞ்சா திரும்பி வந்து பாருன்னு செய்யறான். பழனி கோவிலுக்கு வராத காசா, மலைய சுத்தி மூச்சா நாத்தம். முருகன் எறங்கவே மாட்டார்.
மாலை 5.30 மணிக்குப் பயணத்தைத் தொடங்கினோம். ஆளுக்கு ஒரு க்ளூகோஸ் டப்பா, ரெண்டு பாக்கெட் க்ளூகோஸ் மிட்டாய் பாக்கெட், ரெண்டு ஆரஞ்சு பழங்கள் பிரிச்சு குடுத்தாங்க டீம்ல. பேக்ல போட்டுட்டு, கீழ வைக்க வேண்டிய லக்கேஜ், செப்பல்லாம் லாக்கர்ல வெச்சிட்டு, டோக்கன் வாங்கிட்டு, குச்சி, டார்ச் லைட் வாங்கிட்டு, சாமி கும்பிட்டுட்டு, வேண்டிட்டு கிளம்பியாச்சு. வனத்துறை செக்கிங் முடிஞ்சுது, அவங்க எதிர்பாத்த எடத்துலயெல்லாம் ப்ளாஸ்டிக் கவர், பேப்பர் எதுவும் கிடைக்கல, நான் ப்ரஹ்மாண்டமா மூனு சரவணா ஸ்டோர் கவர ஒளிச்சு வெச்சிருந்தேன், மழைக்கு, மேலேந்து குப்பைப் பொறுக்கிட்டு வர யூஸ் ஆகும்னு. மாலையிளம் கதிரின் வெளிச்சத்துல 6.30 மணிக்கு முதல் மலைய முடிச்சோம். முதல் தடவ போற டீம்ல ஒரு நாலு பேரு முன்னாடி போய்ட்டாங்க. நாங்க சீனியர்ஸ்கூட, இல்ல அவங்க எங்கள கூட்டிட்டு, எங்களோட வந்தாங்க. ரெண்டாவது வழுக்குப் பாறை மலைலேந்து இருட்டுல டார்ச் லைட் பயணம். சொல்லிக்கறாப்ல ஏதாவது கண்ணுக்குத் தெரிஞ்சாதானே வர்ணிக்க. அங்கங்க ரெஸ்ட் எடுத்திட்டு, பாம்பாட்டி சுனைல தண்ணி ரொப்பிட்டு, மூனு, நாலாவது மலைகளைக் கடந்தோம்.
ஐந்து, ஆறாவது மலைல ஆளே தெரியாத அளவுக்குக் கடும் பனி, டார்ச் லைட் வெளிச்சம் ரெண்டு அடிக்கு மேல போகல. நாரதர் நடக்கறாப்ல நம்மள சுத்தி மேகங்கள் பஞ்சு, பஞ்சா. மண்ணு இன்னும் ஜில்லுப்பு ஏறல, நாமளும் காலு ஜில்லுன்னு ஆகறதுக்கு நிக்கல, நடந்திட்டே இருக்கோம். பொண்ணு காட்டன் கார்கோ பேண்ட் அங்கங்க பாக்கெட்டோட, முழுக்கை டீ சர்ட், பாக்கெட்டுகள்ல க்ளூகோஸ், மிட்டாய், பழங்கள், மூஞ்சிய கண்ண மட்டும் விட்டுட்டு அவங்கம்மாவோட காட்டன் சால்வையால சுத்தியாச்சு. வழில கூட்டமா காட்டு எருமைகள் பாகுபலி படத்துல பல்வால் தேவனோட மோதுமே, அத விட பெரிசு, பெரிசா இயற்கையா வளர்ந்தவைகள், மேய்ந்து கொண்டிருந்தன. எருமைகள் தானே என்ன இருந்தாலும், நம்மள கண்டுக்கல. எதிர்க்க இறங்கி வந்தவங்களும் தொல்லை பண்ணாம போங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க. டீம்ல எல்லாரும் பாத்தாங்க. எனக்கு ப்ரச்னையே இல்ல, இந்த ஐ.டி இன்டஸ்ட்ரீக்கு வந்து நமக்கு பகல்லயே பசு மாடு தெரியல, நைட்டுல எங்க எருமைமாடு தெரியப்போகுது. அதனால நோ பயம் சிவன் மலைல எல்லாம் அவன் மயம். பொண்ணு முழுசா பால் அண்ணே கவனிப்பு, பராமரிப்புல. அதிகமான வேர்வை அந்த குளிர்லயும். சில பேருக்கு பத்து படிக்கு ஒரு தடவ மூச்சா. ஒரு வழியா ஆறாவது மலைலேந்து மெதுவா இறங்கி சுனையத் தாண்டினோம். ராத்ரி நேரம், இதுவரை இப்படி பனிய பாத்ததில்ல, அங்க வேற அட்டப்பூச்சி இருக்கும், குளிக்க வேண்டாம்ட்டாங்க. கனத்த இதயத்தோடு க்ராஸ் பண்ணினோம். இன்டர்வல், 400 ரூபா பாப்கார்ன், 80 ரூபா பப்ஸ், ஒளிச்சுக் கொண்டு வந்த 5 ரூபா பாப்கார்ன் சாப்டனும்னா சாப்டுக்கோங்க, சீட்டு நுனிக்கு வரப்போறீங்க இனிமே தான்.
ஏழாவது மலை அடிவாரம், டீக்கடை, எதிரில் ஒரு ஷெட், யார் காலு, கை எங்க இருக்குன்னு தெரியாத அளவுக்கு, மொத்தமா ஒரு ஆயிரம் பாம்புகள ஒன்னா போட்டாப்ல ஒரு 50 பேர் தூங்கறாங்க, நாங்க ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்னு முடிவு பண்ணினோம். நா வேற மேல சிவன் கிட்ட போய் ஒரு நாலு மணி நேரம் சூரியோதயம் வரைக்கும் ருத்ரம், சமகம், சூக்தங்கள், உபநிஷத், சூர்ய நமஸ்காரம்னு வேத மந்த்ரங்கள் சொல்லலாம்னு திட்டம் போட்டு வந்தேன். நானும் பொண்ணும் ஷெட்டுல பக்கத்துல, பக்கத்துல ஒக்காந்து அவள மடில சாஞ்சு தூங்க சொன்னேன். ஒரு நிமிஷத்துல தூங்கிட்டா. 5 நிமிஷத்துல மழை, இடி, மின்னல். சூப்பரா ஒரு 15 நிமிஷத்துக்கு. எங்கள்டேந்து முன்னே பிரிஞ்சு போன அந்த நாலு களவானிப்பசங்களயும் கொட்டகைல தேடினா, கூப்டா காணோம். பிஎஸ்என்எல் 2 ஆவது மலை வரைக்கும் தான் சிக்னல், பின்னாடி வந்த மதங்கள் மாதிரி மத்த ஜியோ, வோடஃபோன் 4 மலை வரைக்கும் சிக்னல், அதுக்கப்பறம் சிவன் மட்டும் தான். ஏழாவது மலைக் கோவில்ல சோலார் லைட் அப்பப்ப தெரியுது. மழைத்தண்ணி எங்க பாத்தாலும் ஓடி வருது. 50 பேரு அந்த சின்ன கொட்டகைல, கீழேந்து சுனைல வேற குளிச்சிட்டு வராங்க பக்தர்கள் அந்த குளிர், மழைலயும், அட்டைப்பூச்சி உபசாரம் எங்க கொட்டகை வாசல்ல வந்து.
ஒரு பத்து நிமிஷம் ப்ரேக், திருப்பி இடி, மின்னல், குளிர் காத்து, மழை ஒரு அரை மணி நேரத்துக்கு. ப்ரளயத்த மார்க்கண்டேயர் நேர்ல பாக்கனும்னு வரம் கேட்டாராம். நான் கேட்காமலே சிவன் அத அப்ப காமிச்சான். பொண்ண தரைல ஒரு துண்டு விரிச்சு அதுல ஒக்காத்தி, என் மேல சாஞ்சிண்டு, அவ துண்ட போத்தி, அது மேல என் மேல் துண்ட போத்தி, அது மேல என் துடைச்சிக்கற துண்ட போத்தி, மேல சொட்டற தண்ணி படாம இது எல்லாத்துக்கும் மேல சரவணா ஸ்டோர் கவர். குழந்தை பத்திரம். நான் பஞ்ச கச்சம் முட்டி வரை, மேல வெறும் உடம்பு தாத்தாவோட ருத்ராக்ஷ மாலையோட. மணி ஞாயிறு காலை 3.30. மக்கள் கொஞ்ச, கொஞ்சமா தைரியத்த வரவழைச்சிண்டு மேல ஏற ஆரம்பிக்கறாங்க. ஒரு மூணு பேரு திடு புடு, திடுபுடுன்னு மேலேந்து சருக்கினு, சேறு, சகதியோட வெற்றில வெறிச்சிப் போயி வந்தாங்க. பாத்தா நம்ம களவானிஸ். நைட் 10-30 மணிக்கே சாமி கிட்ட போய்ட்டாங்களாம். கொஞ்சம் எல்லாருக்கும் வெயிட் பண்ணினதுல மழைல, குளிர்ல மாட்டிட்டு, மேல இருக்கவும் இடமில்லாம, ஒரு வழியா வழிக்கிட்டு வந்துருக்காங்க. மேல போகாதீங்க, மேல போகாதீங்க, லைஃப் டேஞ்சர்னு இங்க வந்து எல்லார்ட்டயும் தெரிக்க விட்றாங்க. பாலும் வந்து சீதா இந்த மாதிரி க்ளைமேட், மழை, குளிர் நாங்க இது வரைக்கும் பாத்ததில்ல. நாம அடுத்த தடவ சாமி பாத்துக்கலாம், தங்கிட்டு இறங்கிடலாம்ங்க்றார். நான் தெளிவா இருக்கேன். அவங்களுக்கு நேர்ந்தது, பால் பயப்படறது இதெல்லாம் நான் படிச்சிட்டு, எதிர்பார்த்து தான் வந்திருக்கேன். பால் நாம ஒரு 300-400 பேருக்கப்பறம் போவோம், அவங்க காலடி பட்டு சேறு காஞ்சிடும், சிவனப் பாக்காம நா திரும்ப மாட்டேன், ராத்திரி 9 மணிக்கு தான் சென்னைக்கு ட்ரெயின். பொழுது விடிஞ்சு ஏறினா கூடி சாமி பாத்துட்டு, மெல்ல இறங்கினா கூட நிம்மதியா ட்ரெயின புடிக்கலாம். ஆனா எடுத்த காரியத்த முடிக்காம வர மாட்டேன், நீங்க கூட வாங்க, போறவங்க போகட்டும்னுட்டேன். அவரும் என்ன சொல்றதுன்னு தெரியாம ஃபீலிங்கோட எதிர்க்கடைக்குப் போயிட்டார். சாமி பாத்துட்டு வந்தவங்களும், எங்க கூட இருக்கறதுல ஒருத்தரும் கீழ இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு 5-5.30 க்கு மேல போகலாம்னு முடிவாச்சு.
நான் இதுவரைக்கும் இயற்கையான ஒரு மலைதானே வந்ததும், ஃபோட்டோஸ் எடுத்துட்டு, உடற்பயிற்சியா வந்ததும் அழிந்தது. உண்மையாக, உணர்ச்சியின் வெளிப்பாடாய் அழ ஆரம்பித்தேன். அந்த இரவை நினைத்து இதை எழுதும் போதும் கண்ணீர் விடுகிறேன் என்னை அறியாமல். படித்த சிவத்தை அனுபவத்தில் உணர்கிறேன், நமக்கும் மேலான சக்தியை உணர்கிறேன். விளையாட்டுத்தனம், என் இயற்கையான சாதித்து விடுவோம் என்கிற முரட்டுப்பிடிவாதம் என்னிடமிருந்து என் இஷ்டத்தோடு என்னை விட்டு விலகுகிறது. ஏழாவது மலையில் ஏறிச்செல்பவர்களின் டார்ச் லைட் ஒளித்தொடர் சிவனின் நடனத்தில் ஆடும் அவன் உடைபோல் தெரிகிறது. அந்த மலை முழுவதும் நடராஜனாகவும், மேலே எங்கும் சூழ்ந்திருக்கும் இருள் மழை மேகங்கள் கங்கையில் தோய்ந்த அவன் ஜடைகளாகவும் கண்கூடாகத் தெரிகிறது. என்னை அழாதே என்று தூக்கிக்கொள்ள வருவதை உணர்கிறேன். நான் அவனிடம் செல்ல இன்னும் தூய்மையில்லை என்று அவசர அவசரமாக ஆதித்ய ஹ்ருதய ஶ்லோகத்தை முழுவதுமாக மூன்று முறை விம்மி, விம்மி சொல்கிறேன். யாருக்கும் எந்த உயிர்க்கும் இன்று எந்த ஒரு தீங்கும் நேராது என்று நம்புகிறேன். இது அவன் வீடு. இந்த ஶ்லோகங்களின் முழுப் பொருளும் எனக்கு முழுதாகத் தெரியாது. ஆனால் அவன் தான் எதற்கும் முழு, முதற்பொருள் என்பதை அறிவேன். இந்த ஶ்லோகங்கள் 30 குறள் போன்றவை. என் தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா அவர்கள் சொல்லிக்கொடுத்தது. அவர் பெருமையும் தெரியாது காலம் முழுதும் அவர் என் தாத்தா என்றே விளையாடிக்கழித்தேன். வால்மீகி ராமாயணத்தில் 30 நாட்கள் நடந்த அந்த ராம-ராவண யுத்தத்தின் ஆரம்பத்தில் ராவணனின் ரத, கஜ, துரக, பதாதி ராட்சத பரிவாரப்படைகளையும், தன்னுடனிருக்கும் கரடி, குரங்குப் படைகளையும் எண்ணி பூமியில் நின்று கொண்டிருக்கும் ராமர் ப்ரமித்த போது அங்கு தோன்ரிய அகஸ்த்தியர் இருளைப் போக்கும் சூரியனே இந்த உலகிற்கு இறைவன், அவனே மும்மூர்த்திகள் என்று பல பொருள் படும் இந்த ஶ்லோகத்தை ராமருக்கு உபதேசித்து, ராமர் அதனை ஜபித்து, யுத்தத்தை ஜயித்தார்.
ஞாயிறு காலை 5.30 மணி, எங்கள் பயணம் தொடர்ந்தது. மலை அவ்வளவாக வழுக்கவில்லை. 10 நிமிடங்களில் டார்ச்சும் தேவைப்படவில்லை. பொழுது பசுமையாகப் புலரத் தொடங்கியது. எங்கும் பசுமை, ரம்மியமான ஒளி. உற்சாகத்தோடு பல குழுவினரின் ஊடே நாங்களும். பொண்ணு இப்ப பேண்ட், டீ சர்ட், கைல தண்டம் மட்டும் தான். மேல சாமி குகை கிட்ட ஒரு 400 பேர் போல சேந்துட்டோம் 6.30 மணிக்கு. இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். அருமையாக பிள்ளையாரைத் தரிசித்து, வெள்ளியங்கிரீஶனை அடைந்தோம். நிலம், நீர், காற்று அனைத்தையும் நன்றாக அனுபவித்த நாங்கள் ஆகாயத்தையும் தரிசித்து, இப்போது ஐந்தாவது பூதமான நெருப்பின் வடிவமாக சூரியனையும் தரிசித்தோம். என் பொண்ணு சிவன் மேல ஶம்போ, சிவ ஶம்போ ஸ்வயம்போன்னு பாட்டு பாடினா. ரெண்டு பேருக்கும் மடக்குலேந்து விபூதிய எடுத்து பட்டை இட்டு விட்டார்கள் பூசாரிகள். அவளுக்குப் பரிசாக மல்லை, முல்லைச் சரம் குடுத்தார்கள். ஸ்வாமி கிட்டேந்து மாலை எடுத்து அணிவித்தார்கள். விபூதி, பொட்டலம்,, வில்வம், பச்சை, மலர்கள் எனக்கு ப்ரசாதம். தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், ஈசானம் என்ற ஒவ்வொரு முகத்துக்கும் ஒன்றாக வேத மந்த்ரங்களை சுருக்கமாகச் சொல்லச்செய்தான் இறைவன். கொண்டு போயிருந்த சங்கை எடுத்து குழுவினருடன் ஏழாவது மலை உச்சியில் கல்லால் இயற்கையாய் அமைந்திருந்த நந்தி (அல்லது மூஞ்சூறு) சிகரத்தினடியில் முழங்கினோம். அங்கிருந்த சித்தர் என் பெண்ணிடம் எங்க இருந்த வர, கொழந்த, பேரு என்ன, இப்பதான் வரியான்னு கேட்டு ஆசிர்வதித்தார். மாலையோடே நான்காவது மலை வரை வந்து விட்டாள். நாரு மட்டுந்தான் அப்ப இருந்துது அந்த மாலைல அப்ப, சித்தர் குகை கிட்ட ஒரு மரத்துல தூக்கிப் போட்டுட்டு, மெல்ல இறங்கினேன். வரும் போது நான் மட்டும் ஆண்டி சுனைல குளிச்சிட்டு, பூஜை முடிச்சிட்டு வந்தேன். நானும் இப்ப கார்கோ பேண்ட், டி சர்ட்டுக்கு மாறியாச்சு. சிவன் பெரிய ஆளா இருப்பான் போல இருக்குன்னு மனசு சொல்லிட்டே வருது. சரிவுல ஏறுவதும், படில இறங்குவதும் நமக்குக் கொஞ்சம் கஷடம். காலு ஆங்கிள்ல ஃப்ராக்சர் ஆகி இப்பதான் 5-6 மாதம் இருக்கும். அதனால, ரெண்டு குச்சி வெச்சிட்டு ஏறி, இறங்கினேன் மாடு போல. வழில ஒரு கடை தாத்தா என் பொண்ண ஞாபகம் வெச்சிட்டு, பேர சொல்லி கூப்பிட்டு அவளுக்கு வெங்காய பக்கோடா, நீர் மோரு அப்ப தயார் பண்ணி குடுத்து ஆசிர்வதிச்சார். அவன் ஓயாம பேசிட்டே ஏறி, இறங்கிட்டா. போகும் போது பால் பாத்து கூட்டிட்டு போனாரு. வரும்போது சிவா. ரெண்டாவது மலைல வீட்டுக்கு சுனை நீர் ப்ரசாதமா பிடிச்சிட்டு வந்தோம். அன்று காலை வந்து கொண்டிருந்தவராம். சுமார் 45-50 வயசு இருக்கும், தனியா வந்திருக்கார் இல்ல பிரிஞ்சிருக்கார். தண்ணி தவிச்சோ, வேறெந்த காரணமோ, நாலாவது மலைல உயிர் பிரிந்து விட்டது. காட்டு மக்கள் ஃபோட்டோ எடுத்து போலீஸுக்கு அனுப்ச்சிட்டு, உடம்ப எகிப்து மம்மி மாதிரி துணியால மூட்டை கட்டி, ஒரு குச்சில வேட்டையாடின விலங்கு போல தொங்க விட்டு கட்டி, ரெண்டு பேரா தூக்கிட்டு ஓடினாங்க, நாங்க ரெண்டாவது மலைல தண்ணி பிடிச்சிட்டு இருந்த போது. சிவலோக ப்ராப்தி.
அடிவாரத்துல வடை, பாயசம், சாம்பார், மூலிகை ரசம், மோர், கோஸ்-கேரட்-தேங்காய் கறின்னு தடபுடலா அன்னதானம். ஒரு பிடி, ஒரே பிடிதான். பின்ன, நேத்தி காலை ஒரு வடை, ஒரு சம்சா சாப்டது. எறும்போது எதுவும் சாப்டல, நடுவுல மயக்கம் வந்தப்ப பை முழுக்க சாமான், எதையும் தேடி எடுக்க நேரம் இல்ல, பால் அவர் வெச்சிருந்த ஆரஞ்சு பழம் ரெண்ட உரிச்சுக் கொடுத்தார் பாத்துட்டு, சுளைய கூட பிரிக்காம அப்டியே ஒவ்வொரு பழமா ஆரஞ்ச வாய்ல போட்டு கரும்பு ஜூஸ் மிஷின் மாதிரி ஒரு அழுத்து. உயிர் வந்துது. இறங்கும்போது ஒரு மாங்கா, ஒரு ஆரஞ்சு மிட்டாய், ரெண்டு டம்ளர் மோர், எங்களோட நாலு ஆரஞ்சு பழங்கள சிவன்ட்ட குடுத்திட்டோம் மேல, அரிசி, வெல்லம் கொண்டு போய் குடுக்கனும்னு ப்ளான், ஆனா ட்ரெயின் லேட்டால அது ஃப்ளாப். 7.30 மணிக்கு இறங்க ஆரம்பிச்சு மதியம் 2.30 மணிக்கு அடிவாரத்தை வந்து சேர்ந்தோம். பொண்ணு ஒரு மணி நேரம் தூக்கம். 4.30 மணிக்குக் கோவில்லேந்து கிளம்பி, ஈசாவுக்கு வந்து 5.30 க்கு பஸ் ஏறினோம். 6.30 மணி ரயில்வே ஸ்டேஷன். அத்தை, சித்தப்பான்னு ஒருத்தர் வீட்டுக்கும் போக முடியல, நேர வீட்டுக்குத்தான் அனுப்பனும்னு அவன் திட்டம். அதே ட்ரைவர், அதே செக்கர், அதே நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல. அதே நாலு மணி நேரம் லேட்டு. திங்கள் கிழமை, 07மே2018, காலை 9.30 மணிக்கு தாம்பரம் வீட்டுக்கு வந்து சேந்து, குழந்தைக்கு அவள் தம்பியும், அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். கதையெல்லாம் வேகமா சொல்லிட்டு ஆஃபீஸ் கெளம்பியாச்சு. உடம்பு வலின்னு ஒன்னும் யாருக்கும் பெரிசா ப்ரச்சினை இல்லை. மீண்டும் சந்திப்போம். நாங்க ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம்.