Jun 27, 2017

ராமேஸ்வரம் டூர்

புதுக்கோட்டை கணபதிக்குக் கல்யாணம் ஜூன், 6, 2016 திங்கட்கிழமை, புதுக்கோட்டைல ஒரு பெரிய ஏசி கல்யாண மண்டபத்துல.  நல்ல பையன், மெக்கானிகல் இன்ஜினியர்,  கொஞ்சம் ரூல்ஸ், ப்ராஸஸ் ஃபாலோ பண்றவன்.  மெஜாரிடி பசங்க போல ஐ.டி ஃபீல்டுக்குத் தாவாம, அவன் ஃபீல்டுலயேதான் இருப்பேன்னு சாதிச்சும் காமிச்சவன்.  அவங்க வீட்ல அம்மா, தங்கைன்னு எல்லாருக்கும் எங்க மேல ஒரு ப்ரியம்.  இந்துக் குடும்பங்கள்ல, மெயினா ப்ராமின் குடும்பங்கள்ல எந்த ஒரு முக்ய கார்யத்துக்கும் முன்னாடி, அவங்க குடும்பத்துல சுமங்கலியா இறைவனடி சேர்ந்தவங்கள நினைச்சு ரொம்ப ஆசாரமா ஒரு ஃபங்க்ஷன் நடத்துவாங்க.  சொந்தத்துல இல்லாத ஒரு சுமங்கலி, ஒரு கன்யா குழந்தைய (பெரியவளாகாத பெண் குழந்தை) அழைச்சு, அவங்களுக்கு ட்ரெஸ்ஸு, மஞ்சள், மருதாணி, எண்ணெய்க் குளியல்னு ஏற்பாடு பண்ணி, அம்ருதமா ஒரு கல்யாண சாப்பாடும் செஞ்சு போட்டு மரியாதை பண்ணுவாங்க.  அந்த கௌரவத்துக்கு என் மனைவியும், பொண்ணும் செலக்ட் ஆகி இருந்தாங்க.  கூடவே எனக்கும் அட்டெண்டர் பாஸ்!!. 3 ஜூன் 2016, வெள்ளிக் கிழமை அந்த சுமங்கலி ப்ரார்த்தனை புதுக்கோட்டை அவங்க வீட்ல.

02 ஜூன் 2016, வ்யாழக்கிழமை, பொண்ணுக்கு இடது கை கொஞ்சம் ஃப்ராக்சர் மாவு கட்டு போட்டு இப்பதான் ரெண்டு வாரம் ஆகுது,  திருப்பி இன்னிக்கு செக்கப் க்குப் போகணும்.  இன்னும் ஒரு வாரம் இருக்கட்டும்னு சொல்லிட்டார் டாக்டர்,  பரவாயில்லன்னு கெளம்பியாச்சு படுத்துனு போற ஏசி பஸ்ல, நல்லா ஃபேமிலி ரூம் மாதிரி இருக்கு.  நாங்க மூணு பேரும் படுத்துக்கலாம்.  ராம் குட்டிக் குழந்தை, இன்னும் 2 வயசு கூட ஆகல, அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

03 ஜூன் 2016, வெள்ளிக்கிழமை.  காலை 6 - 7 மணி போல புதுக்கோட்டை வந்து இறங்கியாச்சு.  கணபதி வந்து அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார்.  முக்கனிகள் உட்பட செடிகள், மரங்கள் இருக்கு, சொந்த வீடு.  நல்ல உபசரிப்பு, குளிச்சு, பூஜையெல்லாம் முடிஞ்சு சாப்டாச்சு.  நாள்னிக்கு கல்யாணம், நாளை மாலை மாப்பிள்ளை அழைப்புக்குள்ள எங்கயாவது போய்ட்டு வந்துடலாம் டேக்ஸி தேடி போனோம்.  ரெண்டு, மூணு எடத்துல விசாரிச்சு, ஒரு அம்பாஸடர் ஏசி கார் புடிச்சோம்,  ரொம்ப வருஷங்களாச்சு அம்பாஸடர்ல போயி, 10 கி.மீட்டருக்கு ஒரு லிட்டர் போடனும், ட்ரைவர் பேட்டா, டோல், எல்லாம் தனின்னு ட்ரைவர் மாமா சொல்லி பேசி ஒரு 2.30 மணிபோல மதியம் கிளம்பினோம்.  புதுக்கோட்டை வெள்ளரிப் பிஞ்சு, நுங்கு ஃபேமஸ்.  இப்பதான் சாப்டிருந்தா, நுங்கு தோலோட சாப்டா வயித்துப் புண் ஆறும், உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி ரெண்ட திணிக்க, ஏசி கார்லயே வாந்தி என் பொண்ணு.  நல்லா வெச்சிருந்தார் கார, டர்க்கி டவல் போட்டு,   ஆனா கோவிச்சுக்கல ட்ரைவர் அண்ணா,  40-50 வயதிருக்கும், அவரும் கல்யாணம், குழந்தைகள்னு நல்லா பக்குவப்பட்டவர்,  தண்ணி எடுத்து, குழந்தைய க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணினார்.  எனக்கும் மனைவி கிட்ட நல்லா திட்டு விழுந்துது.  கச்சேரி முடிஞ்சு கிளம்பினோம்.

1. குன்னக்குடி: குன்றக்குடி ஆறுமுகன் வள்ளி, தெய்வானையோடு இருக்கிறார்.  சின்ன மலை தான்.  ஓடிப்போய் பாத்துட்டு வந்தோம்.

2. பிள்ளையார்ப் பட்டி பிள்ளையார்: குன்றக்குடிலேந்து ஒரு 5 கி.மீட்டர்ல மலையக் குடைஞ்சு இந்த உட்கார்ந்திருக்கற பிள்ளையார 6 அடி உயரத்துக்கு செஞ்சிருக்காங்க.

3. திருத்தளி நாதர், திருப்பத்தூர் - பாடல் பெற்ற ஸ்தலம், தரிசனம் முடித்தோம்.

4. திருவாடானை:  பாடல் பெற்ற ஆதிரத்னேஶ்வரர், போன தடவை கும்பாஷேகம் நடந்த போது, வேத பாராயணத்துக்கு நானும் போயிருந்தேன்.  இப்போது மீண்டும் குடும்பத்தோடு,  நாங்க உள்ள ஓடிப் போய் பள்ளியறை தரிசனம் ஆனதும், இரவு கோவில் நடை  சாத்தப்பட்டது.

5. திருவெற்றியூர்:  இது சென்னைல இருக்கற திருவொற்றியூரில்லை.  இது திருவெற்றியூர்.  பக்கத்துல இருக்கற குளத்தூர் க்ராமம் தான் எங்க அம்மாவோட பூர்வீகம்,  அவங்க ஒரு பெரிய ஜமீன்தார் குடும்பத்துப் பெண்.  க்ராமம் கணக்குல நிலங்கள், இவங்க பொறந்த வருஷம் மழை பொழிஞ்சு, விளைச்சல் அமோகமா இருந்ததாலயே இவங்களுக்கு தான்ய லக்ஷ்மி ன்னு ஒரு பெயர்.  சின்னக் குழந்தையா இருக்கும் போதே இந்த ஊரைக் காலி பண்ணி சென்னை, அங்க, இங்கன்னு மொத்த குடும்பமும் பிரிஞ்சுப் போச்சு.  40-50 வருஷமா பாக்காம விட்டு, இப்ப ஒரிஜினல் பத்திரங்கள் மட்டும் இன்னமும் தாத்தா R.S. மஹாலிங்கம் பேர்ல இருக்கு,   ஒன்னும் முறையா பதில்கள் இல்ல குத்தகைக் காரங்க கிட்டேந்து.  அவங்களுக்கு ஏப்பம், சொந்தக் காரங்களுக்கு ஏக்கம், மாமா ஒரு கோவில்ல வேலை பாத்திட்டு இருக்கார், இவங்க கிட்டேந்து எதாவது கிடைக்குமாங்கறது ஆண்டவன் கட்டளை.

சரி, கோவிலப் பத்திப் பாப்போம்.  பாடல் பெற்ற ஸ்தலம், மொத்த சிவகங்கைச் சீமைக்கும் பாகம் பிரியாள் கோவில்னா ரொம்ப ப்ரசித்தம்,   மஹாபலியக் காலால மிதிச்சதால மஹாவிஷ்ணுவுக்கு கால்ல புற்று நோய் வந்தது,  பல கோவில்கள்ல சிவபூஜை செஞ்சு, கடைசியா இங்க வந்து வாசுகி தீர்த்தம் ங்கற கோவிலுக்கு எதிர்க்க இருக்கற குளத்துல குளிச்சு, பழம்புற்று நாதரைப் பூஜை பண்ணி, தன் நோயைப் போக்கிக் கொண்டார்.

அம்பாள் கோவில் நடை சாத்தியாச்சு, ஏற்கனவே செஞ்சிருந்த ஏற்பாட்டின் படி, கோவில் குருக்கள், மணிகண்டன் அண்ணா ஆத்துல ராத்திரி சாப்டுட்டுத் தூங்கினோம்,  பசங்க அண்ணா பசங்களோட நல்ல விளையாட்டு.  பூரணமா சைவ ஆகம முறைகள, முறையா படிச்சவர்.  சித்திரை மாசம் நடக்கற 10 நாள் கோவில் உற்சவங்களும் எங்க அம்மா வழி தாத்தா, அவங்க குடும்பமும் தான் பண்ணிட்டு இருந்தாங்க.    ரொம்ப பழக்கம் அதனால.  நைட்டு தூக்கம் மொட்டை மாடில.

04 ஜூன் 2016, சனிக் கிழமை,  காலை 5 மணிக்கு எழுந்து வாசுகி தீர்த்தத்துல ஒரு நீச்சல் குளியல், பாகம்பிரியாள், வல்மீகனாதர் (பழம்புற்று நாதர்) தரிசனம்.  புறப்பாடு.

6. உப்பூர் வெயிலுகந்த வினாயகர்:  தக்ஷ யாகத்தில் கலந்து கொண்டதற்குப் பரிகாரமாக, ஸூர்யன் பூஜை செய்த வினாயகர்.  ரோடு மேலயே இருக்கு, மூலஸ்தானத்துக்கு கூரை கிடையாது, வெயில் மேலே படும்படி அமைந்திருக்கிறது.

7. தேவிப்பட்டிணம்:  இந்த லிஸ்ட்ல வர்ற கோவில்கள் நிறையா ராமாயணத்தோடு தொடர்புடையவை,  ஸீதையைத் தேடிச் செல்லும் வழியில் ராமரால் பூஜை செய்யப்பட்டவை.  இந்த ஊரில் நவக்ரஹங்களும் கடல்ல மூழ்கி இருக்கு,   ட்ரெஸ்ஸு தண்ணில நனையாம சுத்தி வர ப்ளாட்ஃபார்ம் போட்டு இருக்காங்க, இறங்கி, கடல் தண்ணியிலும் ப்ரதக்ஷிணம் செய்து வழிபடலாம்.  நாங்க கடல்ல இறங்கி ப்ரதக்ஷிணம் செய்தோம்,  காலை சிற்றுண்டிய அங்கயே முடிச்சிட்டு கிளம்பினோம்.

8. உத்திரகோச மங்கை:  இங்க அம்பாளுக்கு ஆடிக்காமிச்ச தன் நடனத்தை தான் பின்னர் பதஞ்சலி முதலானோருக்கு சிதம்பரத்துல சிவபெருமான் ஆடிக் காண்பித்தார்.
- பெரிய கோவில்
- ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி ராஜ கோபுரங்கள்.
- ஆறடி உயரத்துக்கு ஒரு மரகத நடராஜர் இங்க இருக்கார்.  வருஷம் முழுக்கப் பாதுகாப்புக் கருதி, சந்தனக் காப்பிட்டு வெச்சிருக்காங்க.   மார்கழி மாசம் திருவாதிரை நக்ஷத்ரம் அன்னிக்கு ஒரு நாள் மட்டும் அலங்காரத்தக் கலைச்சு, தடபுடலா அபிஷேகம், பூஜையெல்லாம் முடிச்சு, திருப்பியும் சந்தனக் காப்புல வெச்சிடுவாங்க.  நாங்க பார்க்கும் போது, கொஞ்சம் ப்ரமிச்சுப் போயிட்டோம்.
- அம்பாள் (மங்கை) கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக (உத்தரம்) வேத ரஹஸ்யங்களை (கோசம்) இறைவன் எடுத்து விளக்கிய தலமாதலால், உத்திரகோசமங்கை என்று ஊர்.
- இராமனாதபுரத்திலிருந்து 10 கி.மீ.

9. திருப்புல்லானி:   ராமர் சீதையைத் தேடிச் செல்லும் போது, சமுத்ரம் வழி விட வேண்டி, இங்கு தர்ப்பைப் புற்களைப் பரப்பி அதிலேயே நாட்கணக்கில் வாசம் செய்தார்.  இங்குள்ள ஜகன்னாதப் பெருமாளை வழிபட்டே, பின் புறப்பட்டார்.

மணி மதியம் 2.00, சரியான டயர்டு, காலைலேந்து சுத்தி, ராமனாதபுரத்துல ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு, ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம்.  வழில பாம்பன் பாலத்துல கொஞ்ச நேரம் வண்டிய நிறுத்தி, ரயில்வே பாலம், கடல் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, ஃபோட்டோ எடுத்துண்டு கிளம்பினோம்,  பாலம் தாண்டி கொஞ்ச தூரத்துல ஒரு பார்க் வெச்சிருக்காங்க உருப்படாத, ஒடஞ்சு போன பொம்மை, சறுக்கு மரம் எல்லாம் வெச்சு, அங்க கொஞ்ச நேரம் வேஸ்ட் பண்ணிட்டு, எதிர்க் கரைல கண்ணாடி போட்டுல கூட்டிட்டுப் போயி, பவளப்பாறை காமிக்கறோம்னாங்க.  800 ₹ குடுத்து அதையும் போய் பாத்துட்டு வந்தோம்.  பவளப்பாறை இருக்கற கடல் கொஞ்சம் கூட அலையே இல்ல, அவ்ளோ அமைதி, எதிர்க் கடல் சரியான ஆக்ரோஷம்.

10. ராமேஸ்வரம் ராமனாதரைத் தரிசனம் செஞ்சிட்டு, தனுஷ்கோடிக்கு வேன்ல போனோம்.  ஒருத்தருக்கு 150₹.  ரெண்டு கடல் சேர்ற எடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போகல, முழுக்க அமைதியா இருக்கற கடல் பக்கமாவே தான் பயணம்,  நம்ம தான் பயந்து, பயந்து போறோம், சபிக்கப்பட்ட ஊர் மாதிரி இன்னும் ஒரு அமைதி,  ட்ரைவர் அசால்டா ஓட்டிட்டுப் போறாரு.  ரெண்டு கடலுக்கும் நடுப்பற ஒசத்தி ரோடு போடற வேலை நடந்திட்டு இருக்கு,  அடுத்த தடவையெல்லாம் வண்டிய உள்ள விட்டுடுவாங்கன்னு நினைக்கறேன்.  இப்பயே டூ வீலர் ஓட்டிட்டுப் பசங்க போய்டறாங்க.  ப்ளான் பண்ணி ரிலாக்ஸா போயிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஆக்ரோஷ கடல, இங்கயோ இல்ல அந்த பாம்பன் பாலத்துக்கிட்டயோ என்ஜாய் பண்ணி அனுபவிக்கலாம்.  மாலை நேரத்துக்கு ரெண்டு இடமுமே சூப்பரா இருக்கு.  டின்னர் ஒரு கடைல சாப்டுட்டு, ராமேஸ்வரம் கார்த்தின்னு ஒரு நண்பர், என்னோட எம்.சி.ஏ ஸ்டூடெண்ட்.  இப்ப சென்னைல ஹெச். பி ல டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டரா இருக்கார்.  அவர் வீட்டுல போய்த் தங்கினோம்.  புள்ளையோட சார் வரார்னு அவங்க அம்மா, அண்ணி ரெண்டு பேரும் ரொம்ப உபசரிப்பு,  சாப்டு வந்திட்டோம்னு ஒரு சொம்பு முழுக்க பால் குடுத்திட்டாங்க.  எங்களுக்கு ஏசி ரூம் குடுத்திட்டு, அவங்க ஹால்லயே படுத்திட்டாங்க.  கார்லயே அடைஞ்சிருந்தாங்களா, பசங்க ரெண்டும் அவங்களோட சரியான ஆட்டம், வாய்க்கு வாய் வம்பு, டி.வி, முடிச்சி ராத்திரி 12 மணிக்குத் தான் தூங்கினோம்.

05 ஜூன் 2016, ஞாயிறு - காலை 5 மணிக்குப் போயிருந்தா ஸ்படிக லிங்க பூஜை பாத்து இருக்கலாம், தூங்கிட்டோம்.  ஏழு மணி போல எழுந்து கோவிலுக்குள்ள இருக்கற 23 தீர்த்தங்கள்ல குளிக்கலாம், பசங்களுக்கும் ஜாலியா இருக்கும்னு பாத்தா, டிக்கெட் கௌண்ட்டர்ல அவ்ளோ கும்பல், 25₹ ஒருத்தருக்கு, கைல கட்டிக்கணும் டிக்கெட்ட.  குழந்தைகள வெச்சிட்டு அந்த ஞாயிற்றுக் கிழமை கும்பல்ல அங்க போயி, டிக்கெட் வாங்க முடியும்னு தோணல,  ஏற்கனவே டயர்டா இருக்காங்க,  இந்திய முறைப்படி ஒருத்தருக்கு 100 ₹ லஞ்சம் குடுத்து, ப்ரோக்கர் கிட்ட வாங்கினோம்,  நிறையா பேர் ஒளிவு, மறைவின்றி எங்கும் நீக்கமற இருக்காங்க அப்படி,   கைல கட்டிட்டு, குழந்தைகள இறுக்கமா புடிச்சிட்டு, க்யூவுல போனோம்.  முதல் 2 கிணத்துல தண்ணி இல்லன்னு மூடி வெச்சிருக்காங்க, கடைசி 3-4 பக்கத்துலயே போக முடியாத அளவு கும்பல்.  மிச்ச கிணத்துல எல்லாம் அந்த ப்ரோக்கர்ஸ் (தண்ணி எடுத்து வீசறதும் அவங்க தான்)  வந்து, தண்ணி எடுத்து வீசறாங்க பளிச், பளிச்னு, ஓடி, ஓடி குளிச்ச, குளிக்காத கிணறுன்னு 23க்கும் மேல திரும்ப, திரும்ப போய்க் குளிச்சோம்.  நான் பொண்ணத் தூக்கிண்டேன், மனைவி முடியாததோட குழந்தையத் தூக்கிண்டா.  வழியெல்லாம் போர்டு வெச்சிருக்காங்க அடுத்தடுத்த கிணறோட நம்பர் போட்டு.  ம்ஹூம்,  காசிக்குப் போயிட்டு வந்தவங்க, போகப் போறவங்கன்னு மொத்தக் கும்பலும் அங்க தான் இருக்கு.  சென்னை, பெங்களூர் மாதிரி சிட்டில இருந்து குழந்தைகளோட போறவங்களுக்கு இந்த 23 தீர்த்த ஸ்னானம் ஒரு விபரீத, வித்தியாசமான அனுபவம்.  ட்ரெஸ்ஸு மாத்திக்க தனித்தனி இட வசதிகள் இருக்கு,  கோவில்ல ஏதோ சாமி கட்டாயப்படுத்திக் கேட்டா மாதிரி எல்லாரும் பொதுவா ஈரத் துணியை அங்கயே போட்டுட்டுப் போய்டறாங்க.  கோவில் ஊழியர்கள் அப்பப்ப வந்து மூட்டை, மூட்டையா கட்டி இதையெல்லாத்தையும் வண்டில வெச்சி, தள்ளிட்டுப் போயி, க்ளீன் பண்ணிடறாங்க.  துணி போனா பிணி போகும்ங்கறது பழைய காலத்துலேந்து நம்பிக்கை,  வேற, வேற வேண்டுதல்களோட வராங்க,   இராமனாதர் எல்லாத்தையும் பொறுமையா, வெளையாட்டா,  ஏத்துக்கறார்,   ஈரத்தோட சாமி பாக்கலாம்னு போனா, மொத்த கும்பலும் அங்க க்யூவுல இருக்கு.  நேத்திக்கு தரிசனம் பண்ணினது போறும்னு வெளில வந்தோம்.    பொண்ணு கையில மாவு கட்டு முழுக்க ஈரமாயிருக்கு,  அக்னி தீர்த்தத்துல (கடல்) ஆரம்பிச்சு, இவ்ளோ குளியல்.  சாமி இனிமே பாத்துப்பார்னு, மொத்த மாவு கட்டையும் கத்தியால நறுக்கிப் போட்டாச்சு.  அவளும் கொஞ்சம் நிம்மதியானா.

அப்துல் கலாம் இல்லத்துக்குப் போனோம்.  சின்னூண்டு வீடு,  கீழ அவங்க குடும்பம் இருக்காங்கப் போல, மேல ரெண்டு மாடி முழுக்க அவர் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள், பரிசுகள், விருதுகள், விபரங்கள்னு வெச்சிருக்காங்க.  எல்லாம் புரியல.  ஆனாலும் அவரோட நினைவுகளோட, அவர் அடைஞ்ச உயரங்கள், சாதனைகள், உபதேசங்கள்னு எல்லாத்தையும் பாத்தோம்.

பக்கத்துல ஒரு ஆஞ்சனேயர் கோவில்ல ராமர் இலங்கைக்குப் பாலம் கட்டப் பயன்படுத்தின மிதக்கும் பாறைகள், மாதிரிக்குத் தொட்டில விட்டிருந்தாங்க.  அமுத்தி விட்டாலும் பெரிய, பெரிய பாறைகளும் முங்கி, முங்கி மீண்டும் மேலயே வந்துது.  பாத்துட்டு, திரும்ப ஊருக்குக் கெளம்பியாச்சு, மாலை மாப்பிள்ளை அழைப்பு புதுக்கோட்டைல.  வழில சீதையின் தாகம் தணிக்க, ராமர் தன் வில்லை ஊன்றி, ஏற்படுத்திய வில்லூண்டி தீர்த்தம் பாத்தோம்.  குட்டி பக்கெட் பத்து ரூபாய்க்கு வாடகைக்குக் கெடைக்குது.  வாங்கி, தண்ணிய இறைத்து, குடித்துப் பார்த்தோம், கடலுக்குள்ள ஒரு கிணறு, சுத்தி உப்பு நீர், கிணத்துல மட்டும் உப்பு கரிக்காத குடிநீர்.  என் பொண்ணு கீழ இறங்கிப் போய்க் கடல் தண்ணியையும் உடனே குடிச்சுப் பாத்துட்டு வந்தா.

விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுக்குப் போய்ட்டு, வர இராமனாதபுரம் சேதுபதி மஹாராஜா ரொம்ப உதவி பண்ணினார்னு, விவேகானந்தர் திரும்பி கப்பல்ல வரும்போது, ராமேஸ்வரத்துல இறங்கி, அவரப் பாக்கனும்னு ஆசைப்பட்டார்.  அதுக்கும் பலத்த ஏற்பாடுகள பண்ணி அசத்திட்டார் ராஜா.  விவேகானந்தர் எறங்கினதும் ராஜா குந்துக்கால் (மண்டியிட்டு) போட்டு வரவேற்றார்.  அந்த இடத்துல குந்துக்கால் துறைமுகம்னு இப்போ, ஒரு நினைவகம்  அமைச்சு பராமரிக்கராங்க.  மெயின் ரோடுலேந்து ஒரு 5-7 கி.மீ உள்ள போகனும்.  ரோடு முழுக்க ஜல்லி பரப்பி வெச்சிருக்காங்க அப்பத்தான்.  ட்ரைவர் கார நெனைச்சு ரொம்ப  நொந்து போயிட்டார்.  ஒரு வழியா போய் சேந்தோம்.  உச்சி வெயில்.  விவேகானந்தர், சேதுபதி ராஜா சிலை, உபதேசங்கள், சுற்றுப் பயணங்கள்னு நிறையா வரைஞ்சும், எழுதியும் வெச்சிருக்காங்க.  ஏசி போட்டு ஒரு த்யான ரூம் இருக்கு.  எல்லாத்தையும் பாத்தோம்.  என் மனைவிக்கு விவேகானந்தர ரொம்ப பிடிக்கும், நல்லா சுத்திப் பாத்தாங்க, எல்லாத்தையும் படிச்சி, உள் வாங்கிண்டாங்க.  ராமேஸ்வரத்துல இந்த எக்ஸ்ட்ரா இடங்கள் எல்லாத்தையும் பத்தின விஷய உபயம் இன்னொரு கார்த்தி, அவர் இப்ப கல்யாணமாகி பெங்களூர்ல டெக்னிகல் லீடரா இருக்கார்.

கணபதி கால் பண்ண ஆரம்பிச்சிட்டான், மாப்ள எவ்வளவு பிசியா இருக்கனும், எங்களுக்குப் ஃபோன் பண்ணிட்டே இருந்தான்,  கெளம்பியாச்சா, எங்க இருக்கீங்க, சாப்டாச்சா, எப்ப வரீங்கன்னு ஒரே கேள்வி.  2 மணி போல ஒரு கடைல லஞ்ச் முடிச்சோம்.  ராமனாதபுரம், தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டையையும் தாண்டிட்டோம்.

11. குடுமியான்மலை:  தினமும் இரவு பூஜை முடிந்ததும் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய புஷ்ப ப்ரசாதத்தை, அன்று அரசன் வரவில்லை என்று கோவிலில் நாட்டியமாடும் தேவதாசிக்கு சிவாச்சாரியார் குடுத்து விடுகிறார்.  சிறிது நேரத்தில் தாமதமாக அரசன் வந்து விடுகிறான்.  வழியொன்றும் அறியாது திகைத்த குருக்கள் தாசி சூட்டிக் கொண்ட ப்ரசாதத்தை வேண்டி வாங்கி, அரசனுக்குக் கொடுக்கிறார்.  அதில் தலை முடி இருப்பதைக் கண்ட அரசன் கோபிக்க, சிவாச்சாரியார் அது ஸ்வாமியின் தலையிலிருந்து எடுத்தது தான் என்று கூறி விடுகிறார்.  மேலும் கோபம் கொண்ட அரசன் ஸ்வாமிக்கு சிகை (குடுமி) இருக்கிறதோ என்று வேகமாகச் சென்று ஸ்வாமியின் தலையலங்காரத்தைக் கலைக்கிறார்.  தனக்கு நிதமும் பக்தியோடு பூஜை செய்யும் சிவாச்சாரியார்,  தேவதாசி இருவர் மேலும் கருணை கொண்ட சிவபெருமான் தன் தலை மேல் ஒரு குடுமியுடன் காட்சி அளிக்கிறார்.  அதையும் பொய் என்று நினைத்த அரசன் அதைப் பிடித்து இழுக்க, அங்கிருந்து இரத்தம் பீறிடுகிறது.  ஸ்வாமி காட்சி அளிக்க, அனைவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து மண்டியிருகின்றனர்.  இன்றும் இந்த மூலவருக்கு உச்சியில் குடுமி இருக்கிறது.

கோவில் மலையடிவாரத்தில் இருக்கிறது, மலையைச் சுற்றி க்ராமம்.  மலைமேல் படிகளின்றி ஒரு முருகன் கோவில்.  மற்ற கோவில்களில் இருப்பது போல் இங்கு 63 நாயன்மார்கள் சிலையும் தனித்தனியாக கோவிலில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை.  அம்பாள் சன்னிதிக்கு மேல் வெளிச்சம் இருக்கும் போது நிமிர்ந்து பார்த்தால் மேலே மலைப்பாறையிலேயே 63 சிலைகளும் குடையலாக செதுக்கப்பட்டு இருக்கிறது.  அவர்களுக்கு மத்தியில் ரிஷபத்தில் அம்பாளுடன் ஸ்வாமி.  இது வேறெந்த கோவில்களிலும் காணக் கிடைக்காதது.  இதைத் தவிர ப்ரஹ்மாண்டமான பிள்ளையார், ஷண்முகர், ராவணன், நரஸிம்மர் என வெவ்வேறு சிலைகள் தூண்களிலேயே புடைப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது.    தொல்பொருள் இலாகாவின் பராமரிப்பில் இருக்கிறது இந்த கோவில்,   புதுக்கோட்டையிலிருந்து 10-15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோவில் நிச்சயம் தரிசிக்கப்பட வேண்டியதொன்று.

இரவு ஒரு 8 மணி போல மாப்பிள்ளை அழைப்பில் கலந்து கொண்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு, 10 மணிக்கு ஸ்லீப்பர் ஏசி பஸ்ஸில் மீண்டும் சென்னை நோக்கிப் பயணித்தோம்.

சம்போ மஹாதேவ !! மீண்டும் சந்திப்போம்...


Jun 24, 2017

வேதாரண்யம் டூர்

அடுத்தது என்ன வேலை பண்ணலாம், நாளைக்கு என்ன சமைக்கலாம், வீட்டுக்காரர் எப்ப வருவார், இப்டி கவலைப்பட்டு, பட்டு தூக்கமும், ஒடம்பு தெம்பும் போச்சு என் மனைவிக்கு, இன்ஸாம்னியா இந்த வ்யாதிக்குப் பேராம்.   அடிக்கடி டூர், தனியா!! கூட்டிட்டுப் போகனும், மனசு விட்டுப் பேசனும், வேலை செய்ய விடாம, ரிலாக்ஸா வெச்சுக்கனும்னு இங்க்லீஷ், ஆயுர்வேதிக் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.  வீட்ல அவங்க ஏஜ் க்ரூப்ல இருக்கற ஆள் நாந்தான்.  நான் காலைல 10 மணிக்கு ஃபோட்டான்க்குப் போய்ட்டு, நைட் 12-3 மணிக்குள்ள வந்துடுவேன்!!  தூங்க்கி, குளிச்சு, திருப்பி ஆஃபீஸ் போய்டுவேன்.  மிச்சம் வீட்ல இருக்கறது 60+ ல மாமா, மாமி, 90+ ல தாத்தா, 2 ஆம் வகுப்புல பொண்ணு, 2 வயஸுல பையன்.   வெளில அப்பப்ப கூட்டிட்டுப் போனா தப்பே இல்ல.  கொஞ்சம் காச கரைக்கனும், உலகையும், மனைவியையும் பத்ரமா வெச்சுப் பாக்க.

ரெண்டு குழந்தைங்களும் சிசேரியன், அப்றம் போன மாசம் ஒரு ஆபரேஷன்.  நாங்க போற எல்லா டூருக்கும் வாகன விஷயத்துல நம்பிக்கையா இருக்கற டீம், பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்.  எல்லா ரக வண்டியும் வெச்சிருக்காங்க, மணியும் (செல்: 9500004224 ), அவர் ஃப்ரண்ட்ஸும் சேர்ந்து எங்களுக்கு ஆஸ்தான ட்ராவல்ஸா இருக்காங்க.  எப்பவும் போல அன்ப்ளான்டு டூர் தான்.

25 ஜனவரி 2016, திங்கள் ஒரு நாள் லீவு போட்டா நாலு நாள் லீவு.  அப்டியே ECRல (கிழக்குக் கடற்கரைச் சாலை), வேதாரண்யம் வரைக்கும் போய்ட்டு வரப் போறோம்.  23, சனிக்கிழமை காலை 1 மணிக்குக் கெளம்பியாச்சு, ட்ரைவர் டைசன் அவரோட எட்டியோஸ் கார்ல.  சின்னப் பையன், ஆனா ரோடு ரொம்ப பொறுப்பா ஓட்றாரு.  அப்பாவோட பெரியப்பா பையன், ராமச்சந்த்ரன் சித்தப்பா, மதுரை த்யாகராஜா காலேஜ்ல காமர்ஸ் HODஆ இருந்தார், அவர் பொண்ணு ரேவதிக்கா கல்யாணம் ஆகி கடலூர்ல தான் இருக்கா.  ரொம்ப நாள் ப்ளான் அவங்க வீட்டுக்குப் போகனும்னு.  முதல் ஃபோன், கொஞ்சம் வம்பு இழுக்கலாம்னு,  அக்காதான் பேசறான்னு  நெனைச்சு, "டிவி சானல்லேந்து பேசறோம், ரேவதி இருக்காங்களான்னு" கேட்டா, அது அவங்க மாமியார், நான் இன்னும் அவங்களெல்லாம் பாத்ததே இல்ல. பட்டுனு ஃபோன வெச்சிட்டாங்க  வாய்ஸ் ஒரே மாதிரி இருந்ததுல கொஞ்சம் கொழப்பம்.  அடுத்த தடவ, அக்காவே ஃபோன எடுத்தா.   கெளம்பிட்டோம், வந்துட்டு, ரெண்டு, மூணு கோவில் பாத்துட்டு, லஞ்ச் முடிச்சிட்டு, கெளம்பறோம்னு ப்ளான் சொல்லியாச்சு.

எல்லாரும் குளிச்சு ஒரு மணிக்கு விடிகாலை வண்டியெடுத்து, 4.30 மணி போல அக்காகிட்ட வழி கேட்டு, வீட்டுக்குப் போயிட்டோம்.   ஒரு குட்டித் தூக்கம், கால நீட்டி.  அக்கா வீட்டுக்காரர், குழந்தையை ஆஃபீஸ், ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு, போலாமான்னு கேட்டா. லஞ்ச்சும் எங்களுக்கு ரெடி பண்ணி வெச்சிட்டா.  டைசன் கொஞ்சம் அசந்திட்டார், விடிகாலை ட்ரைவிங், கொஞ்சம் கஷ்டம்,  தூக்கம் தள்ளும்,  திருடங்க எல்லாம் கையில ஒரு கல்ல புடிச்சிட்டே, குந்தியிருப்பாங்களாம், தூங்கிப் போய், கல்லு அவங்கள அறியாம விழுந்திட்டா, அதான் சரியான  நேரம்னு திருட ஊருக்குள்ள போவாங்களாம்.  எங்க தாத்தா சொல்வார், அந்த  நேரம் அது,   அவரையும் எழுப்பித் தயாரானோம்.

1. பாடலீஶ்வரர் கோவில்:

- புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாதர்) பூஜை செய்த கோவில்
- பாதிரி மரத்தடியில் இருந்து அம்பாள் சிவ பூஜை செய்த ஸ்தலம் (பாதிரி மரத்துக்கு ஸம்ஸ்க்ருதததில் பாடல வ்ருக்ஷம் என்று பெயர், அதனால் பாடலீஶ்வரர்), தமிழில் திருப்பாதிரிப் புலியூர்.
- சைவக் குரவர்களில் ஒருவரான அப்பரை சமணத்திற்கு மாறாததால், அவரை ஒரு கல் தூணில் பூட்டி, கடலில் போட்டு விட்டனர், அவர் கீழ்வரும் பாடலால் சிவனைத் துதித்து, ஒரு பாதிப்பும் இன்றி கரையேறினார், அந்த இடம் இப்போது "கரையேற விட்ட குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

வேதப் பொருளொனும், ஜோதி வடிவானவனுமான சிவனின் பொன் திருவடிகளை இறுக்கமாகப் பற்றித் தொழுவோர்க்கு, கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமஶ்ஶிவாய என்ற ஐந்தெழுத்தே.

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

சுதை, சிற்பங்களோடு கூடின அருமையான கோவில்.  தரிசித்து விட்டு திருவந்திபுரம் சென்றோம்.

2.  ஆதிசேஷனால் (அஹீந்த்ர = ஆதிசேஷன்)  நிர்மாணிக்கப்பட்டதால் திருவஹீந்த்ரபுரம், மருவி திருவந்திபுரம் என்றாயிற்று.  தேவநாதப் பெருமாளையும், எதிரே மலைமேலே வீற்றிருக்கும் ஹயக்ரீவரையும் தரிசித்தோம்.  ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப் பெற்ற) செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.

3. திருமாணிக்குழி:
மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.

என்று ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.  பூத்த மலர்களால் அர்ச்சிக்கப்படும், மார்க்கண்டேயரது உயிரைப் பறிக்க வந்த காலனை காலால் உதைத்த சிவன் இருக்குமிடம்,  சந்தனம், அகில் முதலியவைகளோடு, மலை, குளங்களில் இருக்கும் மலர்களையும் கொண்டு வயல்களில் பாயும் கெடில நதி ஓடுமிடம் இந்த மாணிக்குழியே.

- சிவன் சன்னதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணையைக் குடிக்க ஒரு எலி முயற்சித்தது.  அப்போது அதன் செய்கையால் திரி உந்தப்பட்டு மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கு ப்ரகாசமாக எரியத் தொடங்கியது.  அறியாமல் செய்த இந்தச் செயலில் மகிழ்ந்த சிவபெருமான் அந்த எலியைச் சக்ரவர்த்தியாகப் பிறக்க வரமளித்தார்.  (இப்படி எளிதில் சந்தோஷம் அடைவதால் சிவனுக்கு ஆஶுதோஷ் என்று ஒரு பெயர்).  எலி மஹாபலியானது.  மஹாபலிச்சக்ரவர்த்தியைக் காலால் மிதித்த பாபம் போக, வாமனராக அவதரித்த மஹாவிஷ்ணு பூஜித்த வாமன புரீஶ்வரர்.  (மாணி=ப்ரம்மசாரி) .  இந்தக் கதையை விளக்கும் சிற்பங்கள் இந்தக் கோவிலில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன.

- மஹாவிஷ்ணு முதலானோர் தொடர் பூஜை செய்து கொண்டிருப்பதாலும், சிவ சக்தி ஸ்வரூபத்தில் மூலவர் இருப்பதாலும் இங்கு சிவபெருமானை பூஜையின் போது அதிக நேரம் தரிசிக்க முடியாது.  அவர்களுக்குக் காவலாக பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரன் இங்கு மூலவரை மறைத்துத் திரைச்சீலையில் (ஸ்க்ரீன்) எழுந்தருளியிருக்கிறார்.  அவருக்கு முதலில் பூஜை செய்து, அவர் அனுமதியோடு அந்தத் திரையை விலக்கி, மூலவருக்கு தீபாராதனை 2-3 நிமிஷம் செய்து, மீண்டும் மூடி விடுகின்றனர்.  அவ்ளோதான் தரிசனம்.  குருக்கள் காஞ்சிபுரம் ஸ்ரீ உமாபதி ஶிவாச்சார்யாரின் மாணாக்கர்.  எளிய விளக்கங்களோடு அழகாக தர்சனம் செய்து வைத்தார்.

அக்கா வீட்டுக்கு வந்தோம், ஏற்கனவே சமையல் முடிச்சிட்டுதான் எங்களோட வந்திருந்தா அக்கா, நல்ல சாப்பாடு, நல்லா சாப்டோம்,  எல்லாரும் நல்லா கவனிச்சாங்க.  ஓய்வு, அக்கா பொண்ணு ஸ்கூல்லேந்து வந்ததும், கடலூர் ஸில்வர் பீச்சுக்குப் போனோம்,  மெரினா பீச் மாதிரி கூவம் கலப்பு இல்ல,  நெறையா கடைகளும், குப்பைகளும் இல்ல, தண்ணி சுத்தமா இருந்துது, கொஞ்ச நேரம் விளையாடிட்டு, அக்கா வீட்டுக்குப் போய்ட்டாங்க,  நாங்க வடலூர் வள்ளலார் கோவில்க்குப் போலாம்னு  நெனைச்சோம்.  ஆனா இன்னும் ரெண்டு நாள்ல தைப்பூசம், சரியான கூட்டமா இருக்கும், அப்பறமா போங்கன்னுட்டா அக்கா.

4. சிதம்பரம்.
- சைவர்களுக்குக் கோவில்னா இதுதான்.
- தில்லை மரங்கள் மிகுந்திருந்ததால் தில்லை என்றும் பெயர்.
- மனித வாழ்வின் பல ரகசியங்களை உள்ளடக்கி, தொடர்போடு விளங்கும் கோவில், அமைப்பு
- மூலவர் திருமூல நாதர் எனும் லிங்க வடிவினர், எல்லா சிவ கலைகளும் இங்குதான் தோன்றி, ஐக்யமாகிறது என்பதற்கிணங்க கடைசியாக அர்த்த ஜாமப் பூஜை நடக்கிறது.
- ஒரே இடத்தில் சபாபதியையும், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சித்ரசபையில் பள்ளி கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும் தர்சிக்கலாம்.
- புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலிக்கும் நடன தரிசனம்.
- ஐந்து நாட்ய சபைகளில் இந்த கனக சபை முதலானது, (மற்ற நான்கு சபைகள்:  மதுரை மீனாக்ஷி சுந்தரேஶ்வரர் திருக்கோவில் - வெள்ளி சபை - இறைவனுக்குக் கால் வலிக்காதா என்று கவலைப் பட்ட பாண்டிய மன்னனுக்காக இங்கு மட்டும் நடராஜர் வலது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்,   திருவாலங்காடு வடாரண்யேஶ்வரர் திருக்கோவில் - ரத்னசபை, திருனெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் - தாம்ர சபை,  திருக்குற்றாலீஶ்வரர் - சித்ர சபை)
- சிதம்பர ரகசியம்: பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயத் தலம்.  வெளி.  நடராஜருக்கு அருகிலேயே திரையைத் திறந்து தீபாராதனை காட்டுவார்கள்.  ஒரு உருவமும் அங்கில்லை.  ஆகாசலிங்கம் இருப்பதாக தங்க வில்வமாலை அணிவித்து இருப்பார்கள்.  இதுவே சிதம்பர ரகசியம்.  (மற்ற பஞ்ச பூத ஸ்தலங்கள்: நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்ரவனேஶ்வரர், நீர் - திருவானைக்கா ஜம்புகேஶ்வரர், காற்று - ஸ்ரீ காளஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை அருணாசலேஶ்வரர்)
- ரத்ன சபாபதி ஒன்று பத்ரமாக கருவரையிலேயே ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.  தினமும் வெளியே எடுத்து, அவருக்குப் பூஜை நடக்கிறது.

- அன்னைக்கும், நடராஜருக்கும் நடந்த நடனப் போட்டியில் பெருமானின் குண்டலம் கீழே விழுந்து விட, ஆடலின் ஒரு அங்கமாக, தன் கால் விரல்களாலேயே அதைத் தன் காதில் பொருத்திக் கொண்டு விடுகிறார்.  அம்பாள் இதனால் வெட்கி, தில்லை எல்லைக்காளியாக 3 கி.மீ தொலைவில் கோவில் கொண்டுள்ளாள்.  தக்ஷிணா மூர்த்தி வடிவிலும் இங்கு அம்பிகை குடி கொண்டுள்ளாள்.

5. சீர்காழி:  காழி = உறுதி, ப்ரளய காலத்திலும் அழியாது உறுதியாக இருந்ததால், ஸ்ரீகாழி என்று அழைக்கப்பட்டது, மருவி சீர்காழி ஆனது.
- மூன்று நிலைகளில் கோவில் உள்ளது,  டிக்கெட் வாங்கிக் கொண்டு மேல் இரு நிலைகளுக்கும் படியேறிப் போகலாம்.
- படைப்புத் தொழிலில் பங்கம் வராதிருக்க ப்ரஹ்மா பூஜை செய்த ப்ரஹ்மபுரீஶ்வரர் கீழ் நிலையில் உள்ளார்.
- ஊழியிலும் அழியாத இத்தலத்தை உமா தேவிக்கு, ப்ரணவத்தைத் தோணியாக்கி, அதில் அழைத்து வந்து காண்பித்த தோணியப்பரும், உமையும் பெருவடிவில் இரண்டாம் நிலையில் எழுந்தருளி உள்ளனர்.
- மஹாபலியை அழித்த பாபத்தாலும், செருக்காலும் உலகை நடுங்கச் செய்து கொண்டிருந்த மஹாவிஷ்ணுவை, சிவாம்சமான அஷ்ட (8) பைரவர்களில் ஒருவரான வடுக பைரவர் அடித்து வீழ்த்தினார்.  மஹாலக்ஷ்மியின் வேண்டுதலில் அவரை மீண்டும் எழுப்பிய சிவபெருமான், விஷ்ணுவின் வேண்டுதலில், தான் வேறு, அவர் வேறு அல்ல என்று காண்பிக்க, அவருடைய தோலையே சட்டையாக அணிந்து, அவரது எலும்பை கதையாகக் கொண்டு சட்டை நாதராக மூன்றாவது நிலையில் எழுந்தருளியிருக்கிறார்.
- மேலே இருந்து பார்த்தால் 8 பைரவர்களுக்கும் உள்ள தனித்தனி சன்னிதிகளும் தெரிகின்றது.
- ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரி நாதர், முத்துஸ்வாமி திக்ஷதர், நம்பியாண்டார் நம்பி, அருணாசலக் கவிராயர் என்று பலராலும் போற்றப்படும் ஸ்தலம்.
- சிவனுக்கும், உமையவளுக்கும் நடுவில் குழந்தையாக முருகன் தரிசனம் கிடைப்பதை ஸோமாஸ்கந்த (ஸ=உடன், உமா = உமை, ஸ்கந்தன் = முருகன்) தரிசனம் என்பர்.  முருகனே இந்த ஊரில் ஆறாம் நூற்றாண்டில் சிவபாத ஹ்ருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் ஞானஸம்பந்தராகத் தோன்றினார்.  இந்தக் கோவில் ஸ்வாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் ஞானசம்பந்தருக்குத் தனி சன்னதியே உள்ளது (ஸோமாஸ்கந்த அமைப்பு).
- ஒரு நாள் அப்பாவோடு இக்கோவிலில் உள்ள ப்ரஹ்மதீர்த்தம் என்ற குளத்துக்குப் போயிருந்தார் குழந்தையாக இருந்த ஞானசம்பந்தர்.   இவரைக் கரையில் இருத்தி விட்டு நீரில் முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார் அப்பா.  அப்போது குழந்தை அழ ஆரம்பித்து விட, சிவபெருமானின் கருணையால் உமையே தன் பாலை, ஒரு கிண்ணத்தில் இவருக்கு வந்து ஊட்டி விட்டு, மறைந்தாள்.  குளித்து விட்டு, ஆசாரமாக வந்த அப்பா, குழந்தையின் வாயில் பால் ஒழுகியிருப்பதைக் கண்டு, யாரிடம் பால் குடித்தாய் என்று கோபமாக அதட்டுகிறார்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

அப்பா! காதுல தோடு போட்டுண்டு, காளை மாட்டு மேல ஏறி, தலைல வெள்ளையா நிலாவ வெச்சிண்டு, ஒடம்பு முழுக்க சுடுகாட்டு சாம்பல பூசிண்டு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருடனப்பா அவன், முன்னாளில் தாமரையில் தோன்றிய ப்ரஹ்மா பணிந்து, பூஜிக்க அவனுக்கு அருள் செய்ய பெருமை மிக்க இந்த ப்ரஹ்மபுரத்தில் (ஸ்ரீகாழி) எழுந்தருளியவனப்பா அவன்!!
என்று வானை நோக்கித் தன் பிஞ்சுக் கையை நீட்டுகிறார்.  அங்கு அந்தக் குழந்தைக்குப் பணிந்து, நந்திகேஶ்வரரின் மேல் உமைமஹேஶ்வரராகத் தோன்றி அவரோட அப்பாவுக்கும் குளக்கரையில் தரிசனம் தருகிறார் சிவபெருமான்.

- இன்றும் ஞானசம்பந்தருக்குப் பாலூட்டிய நிகழ்ச்சி வருடம் ஒருமுறை நடந்து, அந்தப் பால் ப்ரசாதமாகத் தரப்படுகிறது.

- சூரபத்மன் கூட்டத்துக்குப் பயந்து, இங்கிருந்த மூங்கில் காடுகளில் மறைந்திருந்த தேவேந்த்ரனால் பூஜிக்கப்பட்ட ஸ்வாமி.
- 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் சமாதி இங்கு உள்ளது.

6. வைத்தீஶ்வரன் கோவில் - நவக்ரஹங்களில் ஒருவரான அங்காரஹனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்த்ததால் வைத்தீஶ்வரன்.
- புள்ளிருக்குவேளூர் - புள் (கருடன், சம்பாதி முதலிய பறவை), ருக்கு வேதம், வேள்- முருகவேள், சூர்யன் முதலானோர் பூஜித்த தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்

மயிலாடுதுறை: இறைவி மயிலாக வந்து பூஜித்த, பாடல் பெற்ற ஸ்தலம். பாக்கல, மணியாய்டுச்சு, வழியா, காரைக்கால் தாண்டி 23, சனிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு நாகப்பட்ணம் வந்து சேந்தோம்.  அப்பா ஃப்ரண்டு போலீஸ் ராஜா மாமா, ஏற்கனவே ஃபைர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்க்க இருந்த சத்யா லாட்ஜுல ரூம் சொல்லி இருந்தார், 400₹ ஏசி ரூம் வாடகை,  தஞ்சாவூர்ல ட்யூட்டில இருக்கறதால, காலைல வந்து பாக்கறேன்னு சொன்னார், நல்ல டைட் பேக்கேஜ், தொடர்ந்து கோவில்கள், கதை, கதையா சொல்லி கூட்டினு போனாலும், என் பொண்ணு டயர்டா ஆயிட்டா.  இனிமே ஒரு நாளைக்கு 2-3 மூணு கோவில்தான் இனிமே கூட்டிண்டு போகணும்னு கன்டிஷன் போட்டுட்டுத் தூங்கினா குழந்தை.  இவளுக்குப் போர் அடிக்கக் கூடாதுன்னு தான் ஒவ்வொரு நாளும் ஒரு பீச், பார்க் ஏதாவது சேக்கனும்னு ப்ளான்.  இன்னிக்குக் கடலூர் சில்வர் பீச் போயாச்சு, நாளைக்கு ஒரு ஸஸ்பென்ஸ் இருக்கு இவங்க எல்லாருக்குமே.

24 ஜனவரி 2016: இனிய நினைவுகள், ஒன்ற வருஷத்து அப்பறமாவும் இன்னும் ப்ளாக்ல கதைக்கற அளவுக்கு ஞாபகம் இருக்கு.  வெரி ஹேப்பி அயம், ப்ளெஸ்டா ஃபீல் பண்றேன்.  ஐடி கம்பனிலேந்து நானாவோ, அவங்களாவோ அனுப்பி, ஏதாவது காலேஜ்ல மிச்ச சர்வீஸ முடிச்சு, பசங்களும் கல்யாணம் ஆகி, அவங்க குழந்தை, குடும்பம் செட்டில் ஆனப்பறம், ஒருத்தரும் கூட இல்லேன்னா, இப்படித்தான் எங்கயாவது  நடையா சுத்திண்டு, பொறுக்கிண்டு பொழுத போக்குவேன்னு நினைக்கறேன்.  தாத்தா சொல்வாங்க, நாம் ஒன்று நினைக்க, சித்ரக்காரர் (சித்ரகுப்தன் - நம்ம தலையெழுத்து புக்ஸ மெயின்டெயின் பண்றவர்) ஒன்று நினைப்பார்னு.  பாப்போம்.  அப்ப இந்த ப்ளாக்ஸ், ஃபோட்டோஸ் திரும்பிப் பாக்க காசு, ஃபோன் என்ட இருக்குமான்னு தெர்ல, இன்ட்ரெஸ்ட் இருக்குமான்னும் தெர்ல, எனக்கு கண்ணு அப்ப எப்டி இருக்கும்னே தெரியல !!  சின்னப்பயலே! சின்னப்பயலே !! பாட்ல எம்.ஜி.ஆர் "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" ம்பாரு.  பாப்போம் காலம் நமக்கு என்ன பயிற்சி தருதுன்னு.

7. நாகப்பட்ணம்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதார ஸ்தலம்.
- பூபாரத்தை சமன் செய்ய தென் திசைக்கு வந்த அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் தரிசனம் தந்த ஸ்தலம்.
- நாகராஜனான ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகப்பட்ணம்
- காயாரோகணேஶ்வரர் - புண்டரீக முனிவரைத் தன் உடலில் (காயம் - உடல், தோல்) சேர்த்து (ஆரோகணம் - ஏற்றுதல், அவரோஹணம் - இறக்குதல்)க் கொண்ட ஸ்வாமி.
- ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று:  முசுகுந்த சக்ரவர்த்தி தேவாசுரப் போரில், தேவர்கள் சார்பில் போரிட்டு, வென்று கொடுத்தார்.  வெற்றியைக் கொண்டாடி, மகிழ்ந்த தேவேந்த்ரன், வேண்டிய பரிசைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு சக்ரவர்த்தியை வேண்டினான்.   அவரோ தேவேந்த்ரன் தினமும் பூஜிக்கும் சிவலிங்கத்தைத் தன் பூஜைக்குத் தருமாறு வேண்டினார்.  வாக்களித்து விட்ட தேவேந்த்ரன் என்ன செய்வதென்று யோசித்து, ஒரு ஐடியா பண்ணினான்.  தேவதச்சனாகிய விஶ்வகர்மாவை அழைத்துத் தான் பூஜிக்கும் சிவலிங்கத்தைப் போன்றே, ஆறு சிவலிங்கங்களை செய்யச் சொன்னான்.  விஶ்வகர்மா உளி படாமல், (டங்கம் - உளியால் செய்தது, வி  டங்கம் - உளி படாதது) மானசீகமாகவே சிவலிங்கங்களைப் படைத்தான்.  இந்த்ரன் அவைகளோடு தன் சிவலிங்கத்தையும் சேர்த்து வைத்து, உண்மையான ஸ்வாமியைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுமாறு முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கூறினான்.  அவர் தன் சிவ பக்தியாலும், சிவனருளாலும் உண்மையான சிவலிங்கத்தைக் கண்டு கொண்டார்.  அவர் பக்தியை மெச்சிய, இந்த்ரன்  ஏழையுமே அவருக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தான்.  முக்ய லிங்கத்தை திருவாரூரிலும், வேறு ஊர்களில் மீதமுள்ள ஆறையும் ப்ரதிஷ்டை செய்து வழிபட்டார் சக்ரவர்த்தி.  இந்த ஏழு ஊர்களிலும், மூலஸ்தானத்தைத் தவிர, நடராஜர் சன்னதியில் இந்த சிவ லிங்கங்களைப் பத்திரமாக வைத்து, இன்றும் பூஜைகள் நடந்து வருகிறது.  நடராஜருக்கும் விடங்கர் (பேரழகன்) என்று பெயருண்டு.  இந்த ஏழூர்களிலும் வித்யாசமான நடன நிலைகளில்  நடராஜர் தரிசனம் தருகிறார்.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்

திருவாரூர் - தியாகராசப்பெருமான்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்

சிவன் கோவில், நீலாயதாக்ஷி அம்பாள் கோவில் என்று கூறினால் உள்ளூரில் அடையாளம் சொல்கிறார்கள்.  எந்த ஊரிலும் ஸ்வாமியோட பேர் சொல்லி, காயாரோகணேஶ்வரர் கோவில் எங்க இருக்குன்னு கேட்டா  நெறையா பேருக்குத் தெரியல.   சிவதரிசனத்தோடு பொழுது புலர்ந்தது.

8. நாகப்பட்ணம் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் - இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தாயார் இங்கு தனியாக கருடி (கருடன் - கருடி!!) வாஹனத்தில் எழுந்தருளுவாள்.  இது இங்கு மட்டுமே காணும் சிறப்பு, அழகாக இருக்கும் கருடி வாகனம், ஹாஃப் சாரி கட்டிண்டு,

9. பொரவாச்சேரி முருகன் கோவில்:  பொருள் வைத்த சேரி என்பது மருவி, பொரவாச்சேரியானது.  ஒரு தெய்வீகச் சிற்பி இந்தக் கோவில் முருகனை ஒரே கல்லில் வடித்தான்.  ஆறுமுகங்கள், ஆயுதங்களோடு பன்னிரு கரங்களையும் கொண்ட பெரிய முருகனை, வாயில் பாம்பைக் கவ்விக் கொண்டு மயில் தன் கால்களில் தாங்கி நிற்குமாறு வடித்திருக்கிறார்.  ஆயுதங்களைப் பிடித்திருக்கும் கந்தனின் கை நரம்புகளும், மொத்த எடையையும் தாங்கியிருக்கும் மயிலின் கால் எலும்புகளும் அழகுறத் தெரிகின்றன இந்தக் கற்சிலையில், இந்தப் பெருமை வேறெந்த கோவிலுக்கும் கிடைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசன் அவன் கட்டை விரலை வெட்டி விடுகிறான்.  ஆனாலும் அதே அழகோடு ஒரு கி.மீட்டரில் அருகிலுள்ள சிக்கல் சிங்காரவேலனை வடிக்கிறான் அந்த சிற்பி,   இப்போது அவன் கண்களைத் தோண்டி விடுகிறான் அரசன்,  தன் எண்ணத்தையே கண்ணாகக் கொண்டு அவன் மீண்டும் எண்கண் முருகனை வடிக்கிறான்.   அதன் பின் மீண்டும் அதேபோல் ஒரு சிற்பத்தை வடிக்கையில் தவறி, சிலை சாய்கிறது, குருடனான அந்த சிற்பி அதை எட்டிப் பிடித்தான்.  அதுவே எட்டுக்குடி.  வள்ளி தெய்வானையோடு முருகன் அவனுக்கும், அரசனுக்கும் காட்சி தந்து, சிற்பியை முன்போல் பொலிவுறச் செய்கிறான்.

10.  சிக்கல் சிங்கார வேலர்:  சூரபத்மனுடன் போருக்குப் புறப்பட்டு, வழி நெடுக பல ஸ்தலங்களில் சிவ ப்ரதிஷ்டை, பூஜை செய்து,  சென்று கொண்டிருந்த முருகனுக்கு உமையம்மை தன் சக்தியைத் திரட்டி, ஆழத்திலும், அகலத்திலும், கூர்மையிலும் சிறந்த அறிவைக் குறிக்கும், வேலாயுதமாக தந்த திருக்கோவில்.    ஸ்வாமி நவநீதேஶ்வரர் ( நவனீதம் - புது வெண்ணெய்), காமதேனுவின் வெண்ணெயில் சிவலிங்கம் செய்து, இங்கு பூஜை செய்த வஸிஷ்டர், முடிவில் அதை எடுக்க முயல்கையில், வராமல் சிக்கிக் கொண்டதால் இந்த ஊருக்குப் பெயர் சிக்கல்.  வேல் தந்ததால் அன்னைக்கு பெயர் வேல் நெடுங்கண்ணி.  இன்றும் ஷஷ்டியின் போது உமையம்மையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கையில், முருகன் சிலையிலும், சன்னிதியிலும் உக்ரத்தால் வியர்வை நீர் கசிவதைப் பார்க்க முடிகிறது.

காலை தரிசனங்கள் முடிந்தது,  சிக்கலிலேயே கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் பூரி, பட்டானி சுண்டல் (5  ரூபாதான்), தோசைன்னு சிற்றுண்டியை முடித்தோம், சூப்பரா இருந்துது.   ராஜா அண்ணா ப்ளான் படி, ஹோட்டல காலி பண்ணிட்டு, 9.30 மணி போல அவரோடயே, நாகப்பட்ணம் நம்பியார் நகர் குப்பத்துக்குச் சென்றோம்.  இந்த மீனவர்களின் மூதாதையர் தான் நாம் முன்பு கூறிய அதிபத்த நாயனார்.  தினமும் தொழிலில் கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு அமுதாகத் தந்து விட்டு தான், மீதத்தைத் தனக்குக் கொள்வார்.   நுளைபாடியென்பது இதன் புராணப் பெயர்.  இங்கு இவர் பூஜித்த அமுதீசர் கோவில் உள்ளது.  மீனவக் குடும்பங்கள் இந்தக் கோவிலை நன்றாகப் பராமரித்து வருகின்றனர்.    ஐயர் வேஷத்தில் பஞ்ச கச்சத்தோடு கோவில் தரிசனங்களை முடித்து விட்டு, அங்கு சென்ற எங்களுக்கு ஊரார் பெரும் வரவேற்பே கொடுத்து விட்டனர்.  இப்போதெல்லாம் கட்டு மரங்களை, ட்ராக்டரிலும் இழுத்து வந்து விடுகின்றனர்.  முன்பு பத்து, இருபது பேர்களாக சேர்ந்து குண்டு, குண்டு கம்பங்களில் கயிறைக் கட்டி, இழுத்தும், தூக்கியும் வருவர்.  நல்ல பசங்க, டிகிரி, எம்.பி.ஏ ன்னு படிச்சிட்டும் இந்தத் தொழிலில் இன்னும் இருக்கின்றனர்.  நல்ல கும்பல் நாங்க வந்திருக்கோம்னு, ஒரு மீன்பிடி ஸ்ட்ரீமெர்ல அவங்க நாலு பேர், நாங்க நாலு பேர்னு ஏறிக் கடல்ல கொஞ்ச தூரம் கூட்டினு போனாங்க.  லைஃப் ஜாக்கெட் ஏதும் இல்ல, டயர் ட்யூப்பும் இல்ல.  போட்ல அமர்ந்து கொண்டு என் மனைவி, அவள இறுக்கமா பிடிச்சிட்டு ஒரு வயசு கூட ஆகாத என் பையன்.   திரும்பி கரைக்கு வர்ற வரைக்கும் அவன் பிடிய விடவே இல்ல,  மனைவி தோள்லேந்து தலையையும் தூக்கல.  அலைகள் பெரிசு, பெரிசா வந்து கொண்டிருந்தது.  என் பொண்ணும் அவங்க சொன்னத கேட்டு ஒக்காந்திட்டா,  நான் என்னவோ நாயகன் படத்து கமலஹாசன் மாதிரி திமிரா நின்னுட்டு இருந்தேன்.  அனுபவம் இல்ல, அறிவும் இல்ல, ஆசை மட்டும் இருக்கு.  ஸ்பீடு ப்ரேக்கர் மாதிரி ஒரு பெரிய அலை வந்துது,  டொம்னு போட்டுக்குள்ளேயே விழுந்தேன்.  கணுக்கால்ல சிராய்ச்சு ரத்தம் வந்திடுச்சு.  மெல்ல, மெல்ல எல்லா அலைகளையும் தாண்டிப் போனாங்க.  மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி வேட்டிய மடிச்சு, கட்டிட்டு எழுந்தேன்,  நீல நிறத்துல, அலையில்லாம கண்ணுக்கெட்டின தூரம் வரை தண்ணி.  ஒன்னு, ரெண்டு ஸ்ட்ரீமெர் எங்கள தாண்டி கரைக்குப் போச்சு,  வெரைட்டியா மீனு, நண்டுல்லாம் காம்சிட்டுப் போனாங்க.  என் பொண்ணுக்கு இப்போ தைரியம் வந்தாச்சு, எழுந்து கைய விரிச்சு "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" எம்.ஜி.ஆர் பாட்டு பாட ஆரம்பிச்சிட்டா, எல்லாரும் கோரஸ்ஸா பாடி என்ஜாய் பண்ணினோம்.    நான் கடல்ல குதிக்கப் போறேன்னேன்.

ஏக எதிர்ப்பு, நீச்சல் தெரியுமா, சேஃப்டி கருவிகள் ஏதும், இல்ல, மருந்துகளும் இல்லன்னு அந்தப் பசங்க.  வந்த எடத்துல இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு எங்க வீட்ல,  ஏற்கனவே கட்டாயப்படுத்தி ட்ரைவர் டைசன ஏத்தினு வந்திட்டோம்,  கன்யாகுமரி அந்தப் பையன்.  மூணு கடலும் சங்கமிக்கற எடம்,  ஆயிரம் இருந்தும், நீச்சலும் தெரியல, தைரியமும் இல்லயே,  நோ பீஸ் ஆஃப் மைண்டு.!!  வாந்தி, வாந்தியா எடுத்துனு போட்ல ஒரு மூலைல இருக்காரு.  அவரே போட் பண்ணி, போயிருக்கேன்னாரு,  அப்பறம் பாத்தா, அது மெட்ராஸ் டிஸம்பர்ல மழை, வெள்ளம் வந்தப்ப, வேளச்சேரில தெர்மகோல்ல பண்ணிப் போன அனுபவமாம்.  எனக்குக் காவிரி நீச்சல்லாம் இங்க சரி பட்டு வராதுன்னு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்க த்ருப்திக்கு (எனக்கும் கொஞ்சம் பயந்தே) போட்ல ஒரு குட்டி நூல் கயிறைப் புடிச்சுக்க சொல்லிட்டு, மறு முனைய என் கைல கட்டிட்டு  ஒரு ஜம்ப்.  காவிரி பழக்கம், ஆழத்துக்குப் போயி எல்லாரும் நம்பறதுக்கு அடி மண் எடுத்துட்டு வர்றது.  கொஞ்ச நேரத்துக்கு அப்புறந்தான் புத்தி வந்துது,  இது கடலு, நீ மண்ண தொடப் போறதில்லன்னு.  சுதாரிச்சு, தம் புடிச்சு, தண்ணி மேல வந்திட்டேன்.  எல்லாம் பயத்தோட எதிர்பாத்துட்டு இருந்தாங்க.    போட் முன் பக்கத்துல அதிபத்த நாயனார் துணை ன்னு எழுதி இருந்துது.  எல்லாம் சிவமயமா தெரிஞ்சிது.  கொஞ்ச நேரம் பத்மாஸனம் போட்டு தண்ணிலயே சீரா மூச்சு விட்டுட்டு, மிதந்துக்கிட்டு இருந்தேன்,  ஸூர்யன் சுளீர்னு கண்னைப் பறிக்க தரிசனம்.  திவ்யமான குளியல்.  வயிறு ஃபுல்லா சிக்கல் டிஃபன் சிக்கல்,   போட்ல திருப்பி மூச்சுப் புடிச்சு ஏற முடியல.  போட் ரொம்ப பெரிசா தெரிஞ்சிது.  கொஞ்ச நேரம் திருப்பி, தண்ணிலயே ரெஸ்ட் எடுத்துட்டு, போட் பின் பக்கம் வந்து, அவங்க உதவியோட மேல ஏறினேன்.  நல்லா ஆட்டம் போட்டாச்சு.  தண்ணில குதிக்கும் போது வீடியோ ரெக்கார்டிங் ஆன் பண்ணி, அப்டியே நான் குதிக்கறது, குளிக்கறது, யோகாஸனம் போட்டு தண்ணில மிதக்கறது எல்லாத்தையும் பதிவு பண்ண சொல்லி, கேமராவ குடுத்துட்டு குதிச்சிருந்தேன்.  வந்து நல்லா தண்ணியெல்லாம் தொடச்சிட்டு, கேமராவ கேட்டா, அவரு பேண்ட் பாக்கெட்லேந்து எடுத்துக் குடுக்கறாரு, ரெக்கார்டிங் அப்டியே ஆன்லயே இருக்கு,  பயத்துல பாக்கெட்ல போட்டுட்டாராம், உருப்படியா ஒன்னும் பதிவாகல.  கடல்ல ஒரு பழைய கப்பல நங்கூரம் போட்டு நிறுத்தி இருந்தாங்க.  மீனெல்லாம் வலைலேந்து பிரிச்சு, வகைப்படுத்திட்டு இருந்தாங்க.  அது கிட்ட போயி, கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு, கரைக்கு வந்து சேந்தோம்.  அமுதீசர் கோவில்ல போயி, மோட்டார் போட்டு நல்ல தண்ணில குளிச்சு, சிவ தரிசனம் முடித்தோம்.  என் பையன் அப்பதான் கொஞ்சம் தைரியம் வந்து எறங்கினான்.  ட்ரைவர் ஓகே.  பசங்க நம்பர்லாம் இப்ப எங்கிட்ட இல்ல,  சிம் கார்டு டேமேஜ் ஆகி, எல்லா நம்பரும் போய்டுச்சு, ஞாயிற்றுக் கிழமை எல்லா மீனவர் குடும்பத்துலயும் சிறப்பு சமையல், எங்களுக்காக வந்து ஒரு வெஜிடேரியன் ஹோட்டல்ல கொஞ்சம் சாப்டு, எங்கள வழியனுப்பி வெச்சாங்க பாய்ஸ்.  வேதாரண்யம் போறதுக்கு முன்னாடி வடக்குப்பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதிக்குப் போய்ட்டுப் போகச் சொன்னாங்க.  மணி மாலை 3.00.

11. அமுதீசர் கோவில், 12, வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதி தரிசனம் முடிந்து வேதாரண்யம் கோவில் குருக்கள் ஸ்ரீ சிவ சங்கர சிவாச்சார்யார் இல்லம் போய்ச் சேர்ந்தோம்.

13. வேதாரண்யம்:
- மறைகள் (வேதங்கள்) நான்கும் இறைவனை வழிபட்ட தலமாதலால் வேதாரண்யம் , திருமறைக்காடு.
- மூலஸ்தானத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக நிற்கின்றன.
- மஹாபலி முன்பிறவியில் எலியாக இருந்து, விளக்குத் திரியைத் தூண்டி விட்ட தலம் .  வேதாரண்யம் விளக்கழகு என்ற பழமொழி நினைவு கூறத்தக்கது.
- ராமபிரானின் முன்னோரான த்ரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்த தலம்.
- முன்பு பார்த்த ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று.
- ஸரஸ்வதியின் யாழ் இசைக்கும், அன்னையின் குரலிசைக்கும் நடந்த போட்டியில் அன்னை வென்று யாழைப் பழித்த மொழியாள் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் தலம்.  இதனால் இங்கு தனி சன்னதியில் இருக்கும் ஸரஸ்வதி கையில் வீணையின்றி இருக்கிறாள்.
- ராமர் இலங்கைக்கு ஏகும் முன், இங்கு துர்க்கையை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றிருக்கிறார்.  அருகிலுள்ள ராமர் பாதம் என்ற குன்றில் ஏறிப் பார்த்த போது இலங்கையில் இராவணின் கோட்டையின் பின் பக்கம் தெரிந்தது.  சக்ரவர்த்தித் திருமகன் பின் பக்கமாக செல்வதும், தாக்குவதும் தனக்கு அழகன்று என்று இராமேஸ்வரம் சென்று, இலங்கைக்குச் சென்றார்.
- ராவணனைக் கொன்ற ப்ரஹ்மஹத்தி தோஷத்தை மீண்டும் இங்கு வந்தே போக்கிக் கொண்டார்.
- வெகு காலமாக அரசனின் ஆணையால் கோவில் கதவு மூடப்பட்டு, மக்கள் பின்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் வழியாகவே தர்சனம் செய்து வந்துள்ளனர்.  இங்கு வந்திருந்த ஞானஸம்பந்தரின் பாடலால் பூட்டப்பட்டிருந்த கதவுகள் தானாகவே திறந்து, மக்கள் வழிபாட்டுக்கு உதவியது.  (இந்த நிகழ்ச்சியை பழைய திருவருட்செல்வர் திரைப்படத்தில் அற்புதமாக படமாக்கியிருந்தனர் ஏ.பி. நாகராஜன் குழுவினர்).  அந்த பெரியக் கதவுக்கு வெள்ளிக் காப்பு செய்துள்ளனர்.

பராமரிப்பில் இதுவும் பெரும்பாலான தமிழகக் கோவில்களைப் போலத்தான்.  மோசமாக இருந்தது.  கேரளா, திருப்பதில எல்லாம் கோவில் கலெக்ஷனைக் கொஞ்சமாவது கோவில்லயே செலவு செஞ்சு மக்களைத் திருப்பி, திருப்பி மயக்கி வரவழைக்கறான்.  நம்மூர்ல பழனி மலையச் சுத்தியே ஒரே மூச்சா நாத்தம் தான்.   (இது முன் கூட்டியே தெரிஞ்சு தான் போகர் ஸ்வாமி சிலைய நவபாஷாணத்துல செஞ்சிட்டார்).  அவ்வளவா கலெக்ஷன் இல்லாத இந்தக் கோவிலப் பத்தியெல்லாம் சொல்லனுமா ?  அம்மாவின் ஆணைக்கிணங்க இப்பதான் சமீபத்துல அவசர, அவசரமா கும்பாபிஷேகம் வேற நடந்திருக்கு.

மாலை விடங்கர் விக்ரஹத்துக்கு அபிஷேகம், பூஜைகள் 10-15 நிமிஷங்கள்.  நடராஜர் சன்னிதில ஒரு இரும்பு ஜெயில்ல, இரும்பு லாக்கர்குள்ள இருக்கார் இந்த மரகத ஸ்வாமி.  அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் முன்னிலையில் தினமும் காலை, மாலை ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு, குருக்கள் இவைகளைத் திறந்து பூஜைகளை முடித்து, மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுகிறார்.  ஜெயிலுக்கு வெளிலேந்து எல்லாரும் பாக்கலாம்.  20-30 பேர் இருப்போம்.  நாங்க முன்னாடியே போய் பக்கத்துல ஒக்காந்துட்டோம்.  நல்லா பூஜை பாத்துட்டு, ப்ரசாதம் வாங்கிண்டு, டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

25 ஜனவரி 2016, திங்கள்:
சரியான முன்னறிவிப்புகள் இல்லாததாலும், ப்ரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறதாலையும் நண்பரால எங்க டூர்ல கலந்துக்க முடியல,  அவர் பசங்களும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க.   அவர் மனைவியும், அண்ணியும் தடபுடலா கவனிச்சிட்டாங்க.  வேதாரண்யேஶ்வரரை கடல்ல குளிச்சிட்டு, ஒரு ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல குளிச்சிட்டு தான் தரிசிக்கனும்னு இங்க முறை.  ட்ரைவருக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, ஒரு லோக்கல் ஆட்டோ ஏற்பாடு செஞ்சு நண்பரோட அண்ணாவே எங்களோட வந்துட்டார்.  இந்த ஊர் கடல வேத நதின்னு தான் சொல்றாங்க.  என்னன்னு தெரியலை, எங்க பாத்தாலும் சரியான களி மண்,  கொண்டு வந்து கரைல தள்றாரு சமுத்ர ராஜன்.  தண்ணியெல்லாம் சேத்துக் கலர்ல இருக்கு.  எங்க கால வெச்சாலும் சல், சல்லுனு புதையுது.  தலைல தண்ணிய தெளிச்சிட்டு கெளம்பிட்டோம், குளிக்க முடியல, அண்ணாவுக்கும் ஏன் இப்படின்னு புரியல.   இன்னும் கொஞ்ச நாள்ல 27 வருஷத்துக்கப்பறம் மீண்டும் மஹோதயம் ங்கிற புண்ய நாள் வருது.  (தை மாசம், அமாவாசை, ஸ்ரவண நக்ஷத்ரம், திங்கள் கிழமை எல்லாம் சேர்ந்து வரும் நாள்).  கோடி சூர்ய க்ரஹணங்களுக்கு இணையான பலன் இந்த நாள்ல ஸமுத்ர ஸ்னானம் செஞ்சா, ஜபம் பண்ணினா.  லக்ஷக் கணக்குல கும்பல் வரும்னு கலெக்டர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி நடந்திட்டிருக்கு.

அங்கிருந்து கிளம்பி, ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல போய்க் குளிச்சோம், ராஜ கோபுரத்துக்குள்ள நுழைஞ்சதும், இடது புறம் இந்த குளம், கோபுரத்துல நெறையா சுதைகள் இருக்கு.  குழந்தை கொஞ்சம், கொஞ்சமா தைரியம் வந்து கையிலேயே ஒக்காந்துண்டு குளிச்சான்.  நேத்து ராத்திரி புறப்பாடு முடிஞ்சு ஸ்வாமி 1.30 மணிக்கு விடிகாலைல தான் தூங்கப் போயிருக்கார்.  திருப்பியும் ஒரு தடவ மரகத விடங்கர் தரிசனம் செஞ்சோம்.

கார்ல கெளம்பி கோடிக்கரை போற வழில குன்றுல ஏறி ராமர் பாதம் பார்த்தோம்.  என் பையன் வால்மீகி ராமாயணம் படிச்சு, பொறந்ததால அவனுக்கும் ராமன்னுதான் பேர், தாத்தா ராமாயணத்த அனுக்ரஹ க்ரந்தம், அது கேட்டதக் குடுக்கும்னு சொல்வார்.  அது என் அனுபவம்.  அவன் குழந்தையா இருக்கும் போதே, அவனோட அங்க போனதுல கொஞ்சம் சந்தோஷம்.  மொத்த வழில அந்த குன்றுல மட்டும் அவ்ளோ குரங்குகள்.  கோடிக்கரை கடலை தரிசனம் செஞ்சு, நீரை எடுத்துத் தெளிச்சிண்டோம்.  வரும் போது உப்பளத்துல அதிகாரியா இருக்கற நண்பர் சிவ சங்கர்ட அனுமதி வாங்கிட்டு, கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சிட்டு, வீட்டுக்குப் போய் சாப்டோம்.

ஒரு மணி நேரம் ரெஸ்ட், நா மட்டும் தான் கொஞ்சம் படுத்தேன் (வேற என்ன வேல ஆம்பளைக்கு), மனைவி எல்லாத்தையும் பேக் பண்ணினாங்க.  பொண்ணு ஃப்ரெண்டு பொண்களோட விளையாடிட்டு இருந்தா.  நாலு, நாலரைக்குக் கெளம்பினோம்.

14. திருநள்ளாறு:
- திரு ன்னு ஆரம்பிச்சாலே அது பாடல் பெற்ற ஸ்தலம்தான்.
- நள மஹாராஜாவுக்கு இங்கு தான் சிவ பூஜை பலனாக சனி தோஷம் நீங்கிற்று.
- சப்த விடங்கரில் இங்கும் ஒருவர்.
- தர்ப்பைக் காட்டில் எழுந்தருளியதாள் ஸ்வாமி தர்ப்பாரண்யேஶ்வரர்.

15. திருக்கடையூர்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- அமிர்த கடத்தில் தோன்றியதால் அம்ருத கடேஶ்வரர்
- அஷ்ட வீரட்ட சிவ ஸ்தலங்கள்ல இதுவும் ஒன்னு.  மார்கண்டேயருக்கு ஆயுசு 16 வயதே என்பதால் அந்த வயதில் அவர் உயிரை எடுப்பதற்காக வந்த யமதர்ம ராஜா, அவர் இங்குள்ள சிவபெருமானை இறுக்க அணைத்துக் கொண்டிருக்கும் போதும்,  யோசிக்காமல் பாசக் கயிறை வீசினான்.  சிவன் ஓங்கி விட்டார் ஒரு உதை அவனுக்கு,  எங்க வந்து, என்ன பண்ணினு இருக்கும் போது, யாருக்கு சேத்து கயிறை வீசற, இனிமே நீ இந்த வேலை செய்ய வேணாம்,  நானே பாத்துக்கறேன், போ!! ன்னு சத்தம் போட்டு, அவன் ஆயுதங்களையெல்லாம் புடுங்கினு, தொரத்தி விட்டார்.  மார்க்கண்டேயருக்கும் என்றும் இனிமே உனக்கு பதினாறு வயசு தான்னு வரம் கொடுத்திட்டார்.   (இன்னிக்கு மெட்ராஸ்ல இருக்கற வேளச்சேரிக்கு புராணப் பெயர் வேதஶ்ரேணி, இங்க தான் அந்த யமன் திரும்பியும் வந்து யம தீர்த்தம்னு ஒரு குளத்த உண்டாக்கி, தினமும் குளிச்சு, முறையா பூஜை, தவம் எல்லாம் செஞ்சு, சிவன சந்தோஷப்படுத்தி, திருப்பியும் தன்னோட தண்டம், முதலான ஆயுதங்களையும், சக்தியையும், பொறுப்பையும் பெற்றான்.  அதனால வேளச்சேரி ஸ்வாமி பேர் தண்டீஶ்வரர்.)
- திருக்கடையூர் அபிராமி மேல தான் அபிராமி பட்டர் அந்தாதி பாடினார், அம்பாள் அவருக்காகத் தான் ஜொலிக்கற தன் ஆபரணத்தைத் தூக்கிப் போட்டு அமாவாசைய, பௌர்ணமியா மாத்தினா.

26 ஜனவரி 2016, செவ்வாய் விடிகாலை வீட்டுக்கு வந்தோம். ரெஸ்ட்.

கர்ப்பமா இருக்கறவங்க, நேர்ல இந்த கோவில்லுக்கெல்லாம் போக முடியாம இருக்கறவங்கவங்களுக்கு,  டெலிவரி மேனேஜர், என்னோட ரிப்போர்ட்டிங் மேனேஜர் திருனெல்வேலி ஜான்ஸனுக்கும் இந்த போஸ்ட் சமர்ப்பணம்!!  மீண்டும் சந்திப்போம்.


Jun 14, 2017

வால்பாறை - அதிரப்பள்ளி டூர்


மே 26, 2017, வெள்ளிக்கிழமை.

தண்ணீர் ! தண்ணீர் !!  எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

சில்லுனு ஒரு க்ளைமேட் - எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

இப்டி பல பேர் தேடிட்ருக்கோம்,  ஐ.டி கம்பனீஸ்லேந்து.  

வீட்ல ஏசி இருக்கு.  குடிக்க தண்ணி இருக்கு,  நாலு பேர் குளிக்கவும் க்ரௌண்டு வாட்டர் இருக்கு.

ஆமா, தனி வீடு தான்,   ஃப்ளாட்ல லாம் தண்ணி காசு குடுத்து தான் வாங்கறாங்க.  

காஞ்சி சங்கராச்சார்யர் போற எடத்துலெல்லாம் தொட்டி கட்டி, தண்ணீல முங்கி தான் குளிப்பாங்க.   நாங்களும் காவிரிக் கரைலேந்து வந்த கும்பல்ங்க்றதால அப்டி முங்கி குளிச்சு பழக்கம்.  எங்க போறது இப்போ ?  ஸம்மர் லீவு பசங்களுக்கு, இப்ப போனா நான் மட்டும் லீவு போட்டா போறும்.  ஸ்கூல் தொறந்தா, லீவு போட மனஸே வராது.  

இருக்கறது ரெண்டு ஆப்ஷன்.  ஒன்னு ரிசார்ட்,  இல்லனா எங்கயாவது ஆத்தங்கரை.   ரிசார்ட் பாத்தா எல்லாம் புக்டு.  பெரியவங்க முங்கி குளிக்கற பாத் டப்புக்கு பேர், ஜகூஸி யாம் !!. அது, ஸ்விம்மிங் பூல் இருக்கற ரிசார்ட் பாத்தாலும் சென்னை கிட்ட க்ளைமேட்டுக்கு என்ன பண்றது ?   ஐடியல் பீச் ரிசார்ட்ல 10 அடி ஆழத்துல ஸ்விம்மிங் பூல் இருக்காம்.   ஓசன் ஸ்ப்ரே ரிசார்ட்ல ப்ரைவேட் ஸ்விம்மிங் பூல் இருக்காம்.  மினிமம்  நாலாயிரத்லேந்து பதினாறாயிரம் வரை.  கெடைக்கவும் இல்ல.  போக வர டாக்ஸி, சாப்பாடு எல்லாம் சேத்தா பத்துலேந்து முப்பதாயிரம் வரை டும்.

ஆத்தங்கரை ஏதாவது இருக்கான்னு பாத்தா மினிமம் 500, 600 கி. மீ போக வேண்டியிருக்கும் போல இருக்கு.  எங்கயும் ப்யூர் வெஜ். சாப்பாடு கெடைக்கறதும் இப்பெல்லாம் ரொம்ப கஷ்டமாய்டுச்சு.  வீட்லேந்து செஞ்சு எடுத்திட்டு போலாம்னா,  எப்ப, எப்டி ஆஃபிஸ்லேந்து செவுரு ஏறி குதிச்சு போவோம்னு தெரியல.  ப்ளான்டு லீவெல்லாம் சரி பட்டு வரல,  போன தடவையே 2-3 ஆயிரம் ரூபா கேன்ஸல் பண்ணதுல போய்டுச்சு.   தனிக்குடும்பம்,  சாப்ட மட்டும்   நெறையா பேர் இருக்கோம்.  செய்யறதுக்கு ஒரு வொய்ஃப் தான் இருக்கா !!  அவங்களுக்கு ஒரு ரெஸ்ட் குடுக்கனும்னு தான் டூரே.

மே 1, வீக் என்ட்லதான் வந்துது.  அதுவும் இப்டி தான் ப்ளான் பண்ணாம, பாஹுபலிலயே போய்டுச்சு.   இப்ப மே 29ம் வீக் என்ட்லதான் வருது.  அமெரிக்கால என்னவோவாம்.  அதுக்கு நமக்கு லீவு.    வீட்டுக்குப் போயாச்சு. ஒரு ப்ளானும் இல்ல.  மூணு  நாள் லீவு,   கொடைக்கானல், ஊட்டி ஏற்கனவே போயாச்சு.  மொத்த  ஊரும் இப்ப அங்கதான் இருக்கு.   திருநெல்வேலி, கன்யாகுமரில க்ளைமேட் இல்ல.  மைசூர், பெங்களூர்ல ஆறும் இல்ல, க்ளைமேட்டும் இல்ல.  வால்பாறை, அதிரப்பள்ளி ஃபால்ஸ் போன வாரம் நண்பர் ப்ரேம் போய்ட்டு வந்திருக்காரு.  அவர் தங்கியிருந்த கனவா (Kanova Resort) ரிசார்ட்  ரூம் வாசல்ல  அதிரப்பள்ளி  ஆறு.    இதெல்லாம் பேசிட்டு தூங்கவும் தூங்கியாச்சு.

காலைல திருப்பி மேல எழுதி இருக்கற எல்லாத்தையும் பேசிட்டு,   பஸ் ரேட்டு பாத்தா, 2000 ரூபாய்கு கம்மியா எந்த தண்ணி இருக்கற எடத்துக்கும் டிக்கெட் இல்ல.,  தெரிஞ்சது தானே.  டிஸ்டண்ட்ஸ் ஜாஸ்தி, படுத்திட்டு போகனும், ஏசி வேணும்,  ட்ரைன் ட்ரை பண்றதே இல்ல.  அதெல்லாம் ப்ளான் பண்ணி போறவங்களுக்கு.   மணி காலை 11,  டாக்ஸிக்கு ஃபோன் பண்ணியாச்சு,  கி.மீ. க்கு 8.30 ரூபா, ஒரு  நாளைக்கு ட்ரைவர் பேட்டா 300,   ஏசி எட்டியோஸ்ஸ்ஸ்.  ட்ரைவர் டைசன்,   ஏற்கனவே  நாகப்பட்ணம், வேதாரண்யம் டூர்ல எங்கள்ட்ட அனுபவப்பட்டவர்.  இன்னும் சாப்டல. 

12.30 AM க்குக் கெளம்பினோம்.  விழுப்புரம் டோல் வரைக்கும் குழம்பம் தான்.  டைசன் ஊர் கன்யாகுமரிதான்னாரு.  அவரையும் அங்க க்ளைமேட், திருப்பரப்பு ஃபால்ஸ் தண்ணி எல்லாம் விசாரிக்க சொன்னோம்.  ஒரு ஹோட்டல்ல ஃப்ரைடு ரைஸ், கர்டு ரைஸ், அது, இதுன்னு பார்ஸல் வாங்கிட்டு,  ஓட்ற கார்லயே  நிமிஷத்துல காலி பண்ணிட்டு, விழுப்புரம் டோல்ல தங்க  நாற்கரச் சாலைலேந்து (இது மட்டும் சுத்தத் தமிழ்ல!!) ரைட் எடுத்து, சேலம்  நோக்கி பயணம்.    சேலம், அவினாசி, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி.  இதான் ரூட் ப்ளான்.  

அவினாசி: அருணகிரிநாதர்  பாடல் பெற்ற முருகர் ஸ்தலம்.  

"இறவாமற் பிறவாமல் எனையாள்சற்       குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்         தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்    குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப்     பெருமாளே"

வள்ளி மணவாளா ! அவினாசிப் பெருமாளே !!, அறம் முதலான  நாலையும் அளிப்பவனே,   எனக்குக் குருவாயிருந்து என்னை இந்த பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து  காத்து ஆண்டருள்வாய்.  

இந்த கோவில் சாமி கருணாம்பிகா ஸமேத அவினாசியப்பர்.  63 நாயன்மார்களில் முக்யமானவர்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர்ப்பக்கம் வந்த  போது, எதிரெதிர் வீட்ல, ஒன்ல அழற சத்தமும், இன்னொரு வீட்ல மங்கல ஓசையும் கேட்க, இதென்ன விஷயம் என்று கேட்டார்.   ஊரார், "இந்த இரண்டு வீட்டுக் குழந்தைகளும் நண்பர்கள்.   மூன்று வருஷங்களுக்கு முன் குளத்துக்கு  நீராடப் போயிருந்த போது, ஒருவனை அங்கு இருந்த முதலைக் கடித்து உண்டு விட்டது.    அவன் நண்பனுக்குத் தான் இன்று இந்த வீட்டில் பூணூல் போடுகிறார்கள்.  இறந்தவன் இருந்திருந்தால் அவனுக்கும் இந்த நிகழ்வெல்லாம் இப்போது நடந்திருக்கும்.    நண்பனின் வைபவத்தில் தானும் கலந்து, மகிழ்ந்திருப்பான் என்றெல்லாம் எண்ணி இறந்தவன் வீட்டார் அழுது கொண்டிருக்கிறார்கள்" என்று விளக்கினர்.    இதைக் கேட்ட ஸுந்தரர் அவர்கள் மீது கருணை கொண்டு, ஸ்வயம்புவான அவினாசியப்பரிடம் குழந்தையை மீட்டுத் தருமாறு கட்டளையிடும் தொணியில் வேண்ட, வற்றியிருந்த குளத்தில்  நீர் பெருகி, அதில் முதலையும் உண்டாகி, இன்றைய வயதில் சிறுவனைத் திருப்பித் தந்தது.  இந்தக் குளம் கோவிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.  முதலை வாயில் சிறுவன் மீண்டு வரும் சிலைகள் உள்ளன.  

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் 
  அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய் 
  புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே   
  கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே”
  
உரைப்போர் உள்ளத்தும்,   நினைப்போர் உச்சியிலும்  உறைவோனே ! அரையில் அரவை அணிந்தவனே !   ஆதியும், அந்தமுமானவனே ! எழிற்சோலைப் புக்கொளியூரில் உறையும் அவினாசியே ! முதலையும், காலனையும் பிள்ளையைக் கொண்டு வந்து தரச்சொல்.

போகும் போது இந்த ஊருக்குப் போக முடியல.  பொள்ளாச்சில போய், சீதாராம் லாட்ஜ்ல ஒரு ரூம் வேண்டி, ராத்திரி 12.30 மணிக்குப் புகுந்தோம்.   பழைய வீட்ட லாட்ஜா வெச்சிருக்காங்க.  நல்லா இருந்துது.  நான் ஏசி 600 ரூபா குடுத்தோம்.  காலை 5.30 மணிக்குக் கெளம்பிடலாம்னு ப்ளான்.  நம்ம ப்ளானாச்சே,  நடக்குமா ?   12 மணி நேரம் கார் பயணம்.  ட்ரைவர் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கதவ சாத்தி, காருக்குள்ளயே தூங்கிட்டாரு.  நான் மட்டும் அலாரம் வெச்சு எழுந்திட்டேன்.  மனைவி, குழந்தைங்கள்லாம் டயர்டா தூங்கிக்கிட்டிருக்காங்க.  5, ...6...7 மணிக்குக் குளிச்சு, ரெடியானோம்.  வால்பாறை போயி, அதிரப்பள்ளி போகனும்.  லாட்ஜ் ஓனர் மாலை 6 மணிக்கு மேல, வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல விட மாட்டாங்க,   வால்பாறைல லேட் பண்ணாம நேர அதிரப்பள்ளி போய்டுங்கன்னாரு.    வெஜ் சாப்பாடு வழில உருப்படியா ஒன்னும் கெடைக்காது.  இங்கயே கௌரி க்ருஷ்ணா ஹோட்டல்ல சாப்டுட்டு, வெரைட்டி ரைஸ் பார்ஸல் வாங்கிண்டு போய்டுங்கோன்னார்.  கௌரி க்ருஷ்ணா கொஞ்சம் காஸ்ட்லி,  பட் நோ டைம், நோ ஐடியா, டிஃபன் சாப்டோம்.  பார்ஸல் ரெடியாகல.  கெளம்பியாச்சு.  8 மணிக்குக் காலைல பொள்ளாச்சில கெளம்பி, மதியம் ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேர்ந்தோம்.

வழில மங்க்கி ஃபால்ஸ், மங்க்கி தான் அங்கயும், இங்கயும் விழுது.  தண்ணி விழல.  வரலாற்றுப் பதிவுக்காக ஃபோட்டோ எடுத்துட்டு, கெளம்பினோம்.  ஆழியார் டாம், பார்க்,   சோலையாறு டாம் எல்லாம் வழில க்ளிக்கிண்டே போனோம்.  கூழாங்கல் ஆறு, சிரபுஞ்சிக்கு அடுத்ததா அதிகமா மழை பொழியற சின்னக் கல்லாறு இதெல்லாம் பாக்கல.  ஆழியாறு டாம் வ்யூ மேல போற ரோடு வளைவுகள்லேந்து பாத்தா சூப்பரா இருக்கு.  




வால்பாறைல கருமலை எஸ்டேட்டோட பாலாஜி கோவில் ஒன்னு சின்னதா அழகா, அவங்களோடு ப்ரைவேட் கார்டன்குள்ள இருக்கு.  ஃபோட்டோ, வீடியோ அனுமதி இல்லயாம் !!  அங்க தரிசனம் பண்ணிட்டு அதிரப்பள்ளி நோக்கிப் பயணித்தோம்.  வழி நெடுக எங்க பாத்தாலும் ஒரே பசுமை, அப்பப்ப கொஞ்சம் தூறல், மே மாசத்துல தமிழ்நாட்ல மிஸ்ட்டு (பனி ப்பா!!) படர்ந்திருக்கும் இன்னொரு இடம்.  சில்லுனு ஒரு பயணம், ஏசிய ஆஃப் பண்ணி, கார் ஜன்னலை எறக்கி விட்டோம்.  ஒரு நாப்பது கொண்டை ஊசி வளைவுகள்.   தமிழ் நாடு பார்டர் வரைக்கும் ரோடு அகலமா இருக்கு, அங்கங்க டீ கடைகள், வீடுகள்னு பாக்க முடியுது.  நம்ம ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் எல்லைக் கதவு தாண்டினதும் ரோடு அகலம் கொறஞ்சிடுச்சி.   10 அடில கேரள வன எல்லை ஆரம்பிக்குது, அவங்க கேட்ல குழந்தைங்க, ட்ரைவர் உட்பட எத்தனை பேர், போறீங்க, எங்க போறீங்கன்னு கேட்டு,  வண்டி நம்பர், நபர்கள் எண்ணிக்கை எல்லாத்தையும் எழுதி, ட்ரைவர்ட ஒரு ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிட்டு, நமக்கும் அப்டி ஒரு டிக்கெட் குடுக்கறாங்க.  அத பத்ரமா கொண்டு போய் அதிரப்பள்ளில அதே மாதிரி இருக்கற ஒரு பூத்ல குடுக்கனும்.  திரும்பி வரும்போதும் அதே மாதிரி இந்த பூத்ல ஒரு டிக்கெட் வாங்கிட்டு, நம்ம பார்டர்ல இருக்கற கேரளா கேட்ல குடுக்கனும்.  சீட்டு பத்ரம்.
















கேரளாக்குள்ள  வந்தாச்சு.  அதிரப்பள்ளி வரை இதே ரூட்ல போய்ட்டு திரும்பி வந்தா டாக்ஸிக்கு கேரளா பர்மிட் தேவையில்லை.  ஆனா வால்பாறை வழியா அதிரப்பள்ளி போய்ட்டு அப்டியே திருச்சூர், கோயம்புத்தூர் வழியா வந்திடலாம்னு நெனைச்சா பர்மிட் வேணும்.  ஒரு கார் போற அளவுதான் ரோடு அகலம், அடர்ந்த காடுகள்.  ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.  யானை வரும், சிறுத்தை வரும், கரடி வரும், முதலை கடிச்சிடும்னு வழி  நெடுக போர்டுகள்.  வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல டீ, காபி, டிஃபன் கடைகள்னு ஒன்னும் கெடையாது.  இந்த வால்பாறை-அதிரப்பள்ளி ரூட் மாலை 6 மணிலேந்து மறு நாள் காலை 6 மணி வரை மூடிடுவாங்க, விலங்குகளுக்காக. ( நம்மளுக்காகவும்).  சூப்பர் ஃபாரஸ்ட், எஸ்டேட்ஸும் கெடையாது.  கேரளா வண்டி எல்லாம் சல்லு, சல்லுன்னு வராங்க,  குருட்டு டர்னிங்க்ல கூட ஹாரன் அடிக்கறதில்ல, ஸ்லோ பண்றதில்ல.  மத்த ஸ்டேட்ஸ் வண்டிங்க தான் பாத்து, பாத்து ஹாரன் அடிச்சு, ஸ்லோ பண்ணி, ரோட விட்டு எறங்கி போகனும்.  பஸ் அதிகமா இந்த ரூட்ல இல்ல, பஸ்ல வந்தா இப்டி நிறுத்தி, நிறுத்தி வேடிக்கை பாத்திட்டு, ஃபோட்டோ எடுத்திட்டெல்லாம் போக முடியாது.  இன்னும் சில கூட்டுக் குடும்பங்கள் பாரம்பர்ய டூர் முறைப்படி வீட்டு சாப்பாடு கட்டிட்டு வந்து சாப்படறாங்க.  

ஞாயிறு காலை 8.30 மணிக்கு பொள்ளாச்சில கிளம்பி, ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேந்தோம்.   நண்பர் ப்ரேம் நாத் போன வாரம் தான் இதே பேக்கேஜ் போய்ட்டு வந்திருந்தார்.  எல்லா வழிலயும் உதவியா இருந்துது அவரோட டிப்ஸ்.  அவர் தங்கியிருந்த கணவாய் ரிசார்ட்ல தான்  நாங்களும் ரூம் புக் பண்ணியிருந்தோம்.  நான் ஏசி 24 மணி நேரத்துக்கு 1350 ₹.  நாங்க ரிக்வெஸ்ட் பண்ணினோம்னு வெஜ் சாப்பாடு வேற அவங்க தங்கையே செஞ்சு குடுத்தாங்க.  ரூம் கொல்லை பக்கத்துலயே அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியோடு ஆறு ஓடுது.  இங்க தான் கமலோட புன்னகை மன்னன், விக்ரமோட ராவணன், பாஹுபலி ஷூட்டிங் எல்லாம் எடுத்திருந்தாங்க.   வந்த டயர்டுக்கு மோக்ஷத்தை பாத்தா மாதிரி இருந்துது.  ஒரு ரெண்டு மணி நேரம் கொட்ற மழைல ஆத்துல ஆட்டம் போட்டோம்.   தண்ணி இங்க இருக்கு மே மாசத்துல, குடிக்கலாம், முங்கி குளிக்கலாம், பூஜை பண்ணலாம், எல்லாம் பண்ணினோம்.  நைட் ஒரு ஏழு மணிக்கு அன்லிமிடெட் சப்பாத்தி, தால், பொன்னி ரைஸ், ரசம், பப்படம், தயிர், நல்ல தூக்கம், சாயந்தரம் 6 மணிக்கு போட்ட ஜனரேட்டர், காலைல தான் அணைச்சாங்க.  அடிக்கடி மரம், ஏதாவது விழுந்து இப்டி ஆய்டுமாம்.  காலைல தான் வந்து சரி பண்ணுவாங்களாம்.  நல்ல உபசரிப்பு. நல்ல மெய்ன்டனென்ஸ்.  







காலை எப்ப வரும், ஆத்துல குளிக்கலாம்னு ரெண்டு, மூணு தடவ எழுந்து, எழுந்து பாத்தேன்.  ஒரே இருட்டு.  காலை எட்டு மணிலேந்து மாலை 5 மணி வரைக்கும் தான் ஃபால்ஸ்க்கு அனுமதி, பெரியவங்களுக்கு 30₹,  நேத்திக்கு சரியான கும்பல், இன்னிக்கு வொர்க்கிங் டே ங்கிறதால கும்பல் அதிகமா இல்ல.  நாங்க தான் ஃபர்ஸ்ட் டீம், என்ட்ரன்ஸ்லேந்து ஒரு பத்து நிமிஷம் நடந்தா அருவி மேல வந்து சேந்துடறோம்.  அங்கிருந்து கீழ போக வழி இருக்கு, நாங்க போகல, திருப்பி ரூம்க்கு வந்து ஆத்துல குளியல், டிஃபன் பூரி, கிழங்கு, புட்டு, கடலைக்கறி, தோட்டத்து மாம்பழம்.  சாப்டுட்டு  மதியம் 12 மணிக்கு ஊருக்குக் கெளம்பினோம்.  பொள்ளாச்சில ஒரு டிஃபன், சேலத்துல டின்னர், நான் ஸ்டாப் தாம்பரம் காலை 3 மணிக்கு, 

ட்ரைவர் டைசன் ஆஃஸம், ப்ரேம் ப்ளான், ட்ராவல்தான் வெரி ஹெக்டிக், டோல் சார்ஜ்ஜே 1000 ₹ மேல ஆய்டுச்சுப்பா,  பொள்ளாச்சி வரை பஸ்ல போய்ட்டு, அங்கிருந்துதான் டாக்ஸி எடுக்கனும்.  பாப்போம், தூங்கி, ஒரு பக்கெட் குளியல் போட்டு ஆஃபீஸ் கெளம்பனும்,  

மீண்டும் அடுத்த டூர்ல சந்திப்போம்.