Feb 11, 2010

தமிழ் இது, தமில் இல்ல

1. கவி காளமேகம்

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

- இது கவி காளமேகம் பாட்டுங்க. "காக்கைக்காகா கூகை" வகையச் சேந்தது தான் இதுவும்.
புரியலேன்னா இப்டி மாத்தி படிச்சுப் பாருங்க.

தாதி தூதோ தீது தத்தை தூது ஓதாது
தூதி தூது ஒத்தித்த தூததே - தாது ஒத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்தது ஓதித் திதி

நமக்கா! இது தமிழ். நமக்குத் தெரிஞ்சது தமில். இன்னும் கொஞ்ச நாள்ல சிவாஜி, எம். ஜி. ஆர்நடிச்ச படத்துக்கே தமில்ல கீல எலுத சொல்லுவோம். இது எப்டி புரியும். இதான் பொருள். அதாவது மீனிங்.

தாதி தூதோ தீது = வேலைக்காரி தூது சரிப்படாது
தத்தை தூது ஓதாது = கிளி சரியா தூத சொல்லாது
தூதி தூது ஒத்தித்த தூததே = தோழி தூது போனா ஒத்திப் போட்டுனே போவா, அதுவும்சரிப்படாது.
துதித்துத்தே தொத்தீது = சாமிய கும்பிட்டும் பலனிருக்காது.
தாது ஒத்த துத்தி தத்தாதே = பூக்களின் தாது ஒத்த தேமல் என் மேல் படராதிருக்க
தித்தித்தது ஓதித் திதி = ஏதாவது ஒரு இனியது (ஐடியா) சொல்லு.


2
. கூப்பிடு தூரம்:
நாலு விரக்கடை
= ஒரு ஜான். விரக்கடை = சுண்டு விரல்
ரெண்டு ஜான் =
ஒரு முழம்
ரெண்டு முழம் =
ஒரு சிறு கோல் (தமிழ் வாத்யார் நம்மள அடிக்கவும், வண்டி ஓட்றவன்மாட்டஅடிக்கவும் வெச்சிருப்பாங்களே அதான்)
நாலு சிறுகோல் =
ஒரு பெருங்கோல் (நடக்கவும், பாம்பு அடிக்கவும், காய் பறிக்கவும், மரத்தஉலுக்கவும் யூஸ் பண்ணுவோமே அது)
இப்படி ஐநூறு பெருங்கோல் =
ஒரு கூப்பிடு தூரமாம். (நீயும், நானும், கொழந்தையும், தாத்தாவும், பொம்பள ஆளுங்களும், வியாதிக் காரங்களும் கூப்பிடுற தூரத்துக்கும்இதுக்கும்மொத்தத்துல ஒரு சம்பந்தமும் இல்ல).

3
. கால்ல முள்ளு குத்தினா வாலி பொண்டாட்டி தாரையோட கால எடுத்து தேய்! !

ஒரு புலவருக்குக் கால்ல முள் குத்திடுச்சு. அதப் பாத்த இன்னொரு புலவரு:

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை எடுத்துத் தேய்" சரியாப் போயிடும்னாரு.

இதான் அவர் சொன்னதோட அர்த்தம்:
பத்துரதன் புத்திரனின் (தசரதன் புத்ரன், ராமனின்) மித்திரனின் (சுக்ரீவனின்) சத்துருவின்வாலி) பத்தினியின் (தாரை) காலை எடுத்து (தாரை ங்கற சொல்லுல இருக்கற துணைக்காலஎடுத்துட்டா, தாரை ங்கறது தரை ன்னு ஆய்டும்) தேய்,

முள்ளு குத்தினா தரைல தேய், சரியாப் போய்டும் னு சொல்றதுக்குத் தான், இந்தப்புலவரு
ராமனோடு ப்ரெண்டு சுக்ரீவனோட எதிரி வாலியோட பொண்டாட்டி தாரை, இதுக்கு மேலஜாக்ரதையா இருக்கணும். தாரையோட கால எடுன்னா தாரைங்கற சொல்லுல இருக்கறதுணைக்கால தான் எடுக்கனும். அப்பதான் பதில் கிடைக்கும். முள்ளு குத்தின வலியும்போகும். அத வுட்டுட்டு தாரையோட கால எடுத்துத் தேச்சா ஒத தான் கெடைக்கும்.

No comments: