M. K. தியாகராஜ பாகவதர் (ஜனவரி 3, 1909 - நவம்பர் 1, 1959), கர்நாடக சங்கீத மேதை, ஏழிசை மன்னர், திரை இசை பாடகர், நாடக/திரைப்பட நடிகர், படத் தயாரிப்பாளர், தமிழ்த் திரைவுலகின் முதல் சூப்பர் ஸ்டார். மாயவரத்தில் (மயிலாடுதுறை) பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்தார். திருச்சியில் வளர்ந்தார்.
1934 ல் பவளக்கொடி நாடகத்தில் அவர் அர்ஜுனனாக நடித்ததைப் பார்த்த ஒருவர், அடையாரில் ஒரு இடத்தை வாங்கி ஸ்டுடியோ அமைத்து (மீனாக்ஷி ஸ்டுடியோ, அப்பறம் சத்யா ஸ்டுடியோ, இப்ப எம்.ஜி.ஆர் காலேஜ்) அவரை வைத்து அந்த நாடகத்தைப் படமாக உருவாக்கினார். சம்பளம் 4000 ரூபா. 50 பாடல்கள். பாபநாசம் சிவன் அவர்கள் பாடலாசிரியராக அறிமுகம்.
அதன் பின் நவீன சாரங்கதாரா (1936), சிந்தாமணி (1937), சத்தியசீலன் (1938), அம்பிகாபதி (1938), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1940), சிவகவி (1942), ஹரிதாஸ் (1944), ராஜமுக்தி (1948), அமரகவி (1952), ஷ்யாமளா (1953), புதுவாழ்வு (1957), சிவகாமி (1959) ஆகிய படங்களில் நடித்தார்.
மதுரை பொண்ணு ஐயங்கார் என்ற வயலின் வித்வான் இவரின் குரு. பாகவதர் தங்கத் தட்டில் சாப்பிடுவார். பட்டு பீதாம்பரம், வைர வைடுரியம் அணிவார். சொந்தமாக குதிரை, கார்கள், மோட்டார் சைக்கிள், பங்களாக்கள் வைத்திருந்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவர் சென்ற ரயில் 4, 5 மணி நேரம் தாமதமாகத்தான் செல்லும். வழி நெடுக ரசிகர்கள். படித்தவர், படிக்காதவர், சங்கீத வித்வான்கள், பணக்காரர்கள், ஏழைகள் என பல ரசிகர்கள். தாராள குணம் கொண்டவர். கோவில், கல்வி நிறுவனங்கள் போன்றவைகளில் நடக்கும் கச்சேரிகளுக்கு பணம் வாங்க மாட்டாராம். திருச்சி ரேடியோ ஸ்டேஷன் சங்கீத வித்வான்.
முக்யப் பிரமுகர்களைப் பற்றி அசிங்கமாக மஞ்சள் பத்திரிகையில் எழுதி சம்பாதித்துக் கொண்டிருந்த லக்ஷ்மீகாந்தன் என்பவர் 1944 ல் கொலை செய்யப்பட்டதில் MKT யும், NSK யும் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு பின் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். அதன் பின் அதிகமாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாத MKT பல கோவில்களில் தங்கி, பாடல்களைப் பாடிப் பொழுதைப் போக்கி, பலர் அழைத்தும் திரும்பித் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாது இறைவனடி சேர்ந்தார்.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இவர் சமாதி உள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள்
http://en.wikipedia.org/wiki/M._K._Thyagaraja_பாகவதர் லும், அதிலுள்ள reference link களிலும் உள்ளது.
பாடல் வரிகள் சில:
1. ஆனந்த நடன விநோதா தேவ - ஜகன்நாதா (ஆனந்த)
கண் மூன்றுடையாய் கதிநீ ஹரனே
கருணையோடெனைக் கடைக்கண்பார் தயாளா (ஆனந்த)
நஞ்சார் அரவும் பணியாய்க் கொண்டாய்
அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய்
தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லைவாழ் (ஆனந்த)
2. ஆரனங்கே நெஞ்சம் நீயறியாய்
ஆருயிர் தங்களின் நேயமதே பெரும் மாயமதே நீயறியாய் (ஆரனங்கே)
அதரங்கள் ரெண்டும் அணைந்திடா போது
ஆனந்த சொல்லே வருவதும் ஏது
யாழின் தந்திதனை விரல் மீட்டாவிடில்
அமர நாதமே இல்லை யன்றோ (ஆரனங்கே)
வாசிக்கா போது மூங்கில் அன்றோ
வாசித்த போதே முரளி அன்றோ
நேசமாக வண்டு பேசிய போது
வாசத்தேன் மலர் வாழ்வல்லவோ (ஆரனங்கே)
மங்கையின் போல் எல்லாம் மனம் வேண்டாம் என்றால்
மானிடர் சந்ததி மாயும் அன்றோ
இங்கிதம் தெரிந்தே அந்த பரம் பொருள்
இந்நிலம் யுகம் யுகம் தோன்றுவதே (ஆரனங்கே)
3. அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடியினைத் துணையென்றம்பா
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே சங்கரி ஜக (அம்பா)
பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)
4. அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம் (அன்னையும்)
தாயினும் கோவில் இங்கேது - ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு - புண்ய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதிலுண்டு (அன்னையும்)
தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது - மரம்
ஆயின் விதை இன்றி காய் கனியேது (அன்னையும்)
5. அரவா பரணன் திருவடி மறந்து
அடிமையின் மோகம் கொண்டழிவாரே (அரவா)
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத் தறிவிழந் துழல்வாரே (அரவா)
மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை
மனந்தனில் சிவயோகம் பயிராமோ (அரவா)
வாத நோய்க் குலகில் மருந்துண்டு - பிடி
வாத நோயகல மருந்தேது
சாதனை யாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே (அரவா)
6. அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் (அற்புத)
சித்பரனே சிவனே உனதடியார்
செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திரு அபயவரக் கையனுன் (அற்புத)
பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
மாட்டுடையாய் தில்லை காட்டினிலே - அரு
ளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் உன்னைக்
காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் எம்பி
ராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை
துன்பம் ஓட்டுவாய் உந்தன் (அற்புத)
7. பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பதி
காலமும் செல்ல மடிந்திடவோ (பூமியில்)
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே (பூமியில்)
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லை எனில் நர ஜன்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரனே
8. சராசரங்கள் வரும் சுழன்றே
சகடு போலுன் அருளால் (சராசரங்கள்)
மலைகள் மாநதிகள்
அலை பொங்கும் ஆழி - பல்லூழி (சராசரங்கள்)
பரவும் நாதம் பறவைகள்
திருவிளையாடல் ஞானியார்
உணர்வார் ப்ரகாச நடேசா (சராசரங்கள்)
9. செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன் (செடி)
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாது மானே
பாடும் குயிலே பாரு இப்போதே (செடி)
துள்ளி ஓடும் புள்ளி மானை நீங்கள் பிடிக்க முடியுமோ
ஆமை அல்ல நானே, முயல் என்று சொல்ல மாட்டேன்
வண்ண மலர் தூண்டிலில் என் ஜடைப் பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை ஓடுவதால் ஒடியாதோ (செடி)
10. சிதம்பர நாதா திருவருள் தாதா-நின்
சித்தமிரங் காதா திருவடியல தொரு கதியிலன் (சிதம்பர)
பதஞ்சலியும் புலியும் பணியும்
குஞ்சித பதனே ஸஞ்சித மகலாதா (சிதம்)
நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றிலாடும் மணியே செந்தேனே
வாதா அறுபகைத் தீயில் வெந்தேனே (சிதம்பர)
Oct 29, 2009
Oct 14, 2009
ஹேப்பி தீபாவளி - 2009
உள்ளே...
மொழிப் ப்ரச்னை,
ஜாதிப் ப்ரச்னை,
மத ப்ரச்னை,
சோத்து ப்ரச்னை,
எல்லா கோர்ட்லையும் நிலுவையில் வழக்குகள்,
வக்கீல், போலீஸ், மாணவர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற பொருப்பானவர்களின் ஒத்துழையாமைப் போராட்டங்கள், அடிதடிகள்
விவசாய ப்ரச்னை,
உற்பத்தி ப்ரச்னை,
தண்ணீர் ப்ரச்னை,
சிலை ப்ரச்னை,
படிப்பு, பகுத்தறிவு ப்ரச்னை
தீவிரவாத ப்ரச்னை
போக்குவரத்துப் ப்ரச்னை
இயற்கையோட எதிர்த்து செயல்படறது,
லஞ்சம், பொருள்களின் தரக்குறைவு, ஆனால் விலை அதிகம்
வெளிலேந்து,
எல்லைப் ப்ரச்னை,
தமிழன், நான்-தமிழன் ப்ரச்னை,
இந்தியன், நான்-இந்தியன் ப்ரச்னை,
நம்மக் கடல்ல மற்ற நாட்டுக் கழிவுகள் கொட்றது,
நம்ம ஊர்க்குள்ள தரமற்ற, கேடான பொருள்களை விக்கறது,
தீவிரவாத, பயங்கரவாத ப்ரச்னை,
மத்த நாடுகளுடனான உறவு, ஒப்பந்தங்கள்ல ப்ரச்னை
நம்மள எதிர்க்கக் கூட்டு சேரும் நாடுகள், கூட இருந்தே குழி பறிக்கும் நாடுகள், நட்பு நாடுகள், நம்மள நம்பி இருக்கற நாடுகள்...
இந்த ப்ரச்னைகளால குளிர் காயறவங்க, பொழப்பு நடத்தறவங்க
இதுல நம்ம பங்க எதுலையாவது, எந்த விதத்துலையாவது, எப்படியாவது செயல்படுத்த யோசிக்கணும்,
நல்லதைத் தெரிஞ்சுக்கறதவிட இந்த மாதிரி கெட்டதுகள பத்தி நிறையா தெரிஞ்சுக்கணும். தயாராகனும். பதிலுக்கு எதுவும் கிடைக்குமான்னு தெரியல. பொறந்ததுக்கு ட்ரஸ் போட்டு, சாப்பிடறா மாதிரி இதெல்லாம் இப்ப இருக்கற நிலைமைல.
ஒவ்வொரு டாபிக்கையும் கவனிச்சு, விஷயத்தை தெரிஞ்சி, பங்கெடுத்துக்க எண்ணம் வந்தாலே நல்ல ஆரம்பம்.
அட்லீஸ்ட் யாராவது, என்னிக்காவது, எதுக்காவது கூப்டா போற, இல்ல உதவி பண்ற நிலைக்காவது தயாராகனும்.
மொதல்ல கல்யாணம் பண்ணிக்காத பசங்க எல்லாம், அதப் பண்ணினு கவர்மெண்ட் சொல்றத கேக்காம, எதப் பத்தியும் யோசிக்காம வீட்டுக்குன்னு மட்டும் புள்ள பெத்துக்காம, நாட்டுக்குன்னு ஒன்னாவது (நேந்து விட!!) பெத்து வளப்போம். இதுக்காகவே.
கெட்டவங்க தூங்கறதில்ல, ப்ளான் பண்ணி ஏதாவது பண்ணினே இருக்காங்க.
இங்லீஷ்ல இந்த ஃப்ளோ (flow) வராது. அதான் தமிழ்ல. நான்-தமிழ் பசங்களுக்கு யாராவது ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்புங்க ப்ளீஸ்.
ஜய் ஹிந்த்! ஹேப்பி தீபாவளி!! ஜய் சீதாராம் (என் பேருப்பா!!)
மொழிப் ப்ரச்னை,
ஜாதிப் ப்ரச்னை,
மத ப்ரச்னை,
சோத்து ப்ரச்னை,
எல்லா கோர்ட்லையும் நிலுவையில் வழக்குகள்,
வக்கீல், போலீஸ், மாணவர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற பொருப்பானவர்களின் ஒத்துழையாமைப் போராட்டங்கள், அடிதடிகள்
விவசாய ப்ரச்னை,
உற்பத்தி ப்ரச்னை,
தண்ணீர் ப்ரச்னை,
சிலை ப்ரச்னை,
படிப்பு, பகுத்தறிவு ப்ரச்னை
தீவிரவாத ப்ரச்னை
போக்குவரத்துப் ப்ரச்னை
இயற்கையோட எதிர்த்து செயல்படறது,
லஞ்சம், பொருள்களின் தரக்குறைவு, ஆனால் விலை அதிகம்
வெளிலேந்து,
எல்லைப் ப்ரச்னை,
தமிழன், நான்-தமிழன் ப்ரச்னை,
இந்தியன், நான்-இந்தியன் ப்ரச்னை,
நம்மக் கடல்ல மற்ற நாட்டுக் கழிவுகள் கொட்றது,
நம்ம ஊர்க்குள்ள தரமற்ற, கேடான பொருள்களை விக்கறது,
தீவிரவாத, பயங்கரவாத ப்ரச்னை,
மத்த நாடுகளுடனான உறவு, ஒப்பந்தங்கள்ல ப்ரச்னை
நம்மள எதிர்க்கக் கூட்டு சேரும் நாடுகள், கூட இருந்தே குழி பறிக்கும் நாடுகள், நட்பு நாடுகள், நம்மள நம்பி இருக்கற நாடுகள்...
இந்த ப்ரச்னைகளால குளிர் காயறவங்க, பொழப்பு நடத்தறவங்க
இதுல நம்ம பங்க எதுலையாவது, எந்த விதத்துலையாவது, எப்படியாவது செயல்படுத்த யோசிக்கணும்,
நல்லதைத் தெரிஞ்சுக்கறதவிட இந்த மாதிரி கெட்டதுகள பத்தி நிறையா தெரிஞ்சுக்கணும். தயாராகனும். பதிலுக்கு எதுவும் கிடைக்குமான்னு தெரியல. பொறந்ததுக்கு ட்ரஸ் போட்டு, சாப்பிடறா மாதிரி இதெல்லாம் இப்ப இருக்கற நிலைமைல.
ஒவ்வொரு டாபிக்கையும் கவனிச்சு, விஷயத்தை தெரிஞ்சி, பங்கெடுத்துக்க எண்ணம் வந்தாலே நல்ல ஆரம்பம்.
அட்லீஸ்ட் யாராவது, என்னிக்காவது, எதுக்காவது கூப்டா போற, இல்ல உதவி பண்ற நிலைக்காவது தயாராகனும்.
மொதல்ல கல்யாணம் பண்ணிக்காத பசங்க எல்லாம், அதப் பண்ணினு கவர்மெண்ட் சொல்றத கேக்காம, எதப் பத்தியும் யோசிக்காம வீட்டுக்குன்னு மட்டும் புள்ள பெத்துக்காம, நாட்டுக்குன்னு ஒன்னாவது (நேந்து விட!!) பெத்து வளப்போம். இதுக்காகவே.
கெட்டவங்க தூங்கறதில்ல, ப்ளான் பண்ணி ஏதாவது பண்ணினே இருக்காங்க.
இங்லீஷ்ல இந்த ஃப்ளோ (flow) வராது. அதான் தமிழ்ல. நான்-தமிழ் பசங்களுக்கு யாராவது ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்புங்க ப்ளீஸ்.
ஜய் ஹிந்த்! ஹேப்பி தீபாவளி!! ஜய் சீதாராம் (என் பேருப்பா!!)
Oct 6, 2009
கோடைக்கானல் டூர்
யுனிவர்சிடி வேலைய விட்டு கம்பனி வேலைக்கு வந்தப்பறம் போற மொதல் டூர். ஞாயிற்றுக் கிழம மட்டுந்தான் லீவு கம்பனில. யுனிவர்சிடிலயும் அப்டிதான் இருந்துது. அப்பறம் ரெண்டு நாள்னு மாத்திட்டாங்க. வெள்ளி, சனி ரெண்டு நாள் முடிவா லீவு போட்டாச்சு. எங்க டூர் போறது, எவ்ளோ நாள் போறது, அங்க என்னென்ன இருக்கு பாக்க, தங்கறது, சாப்பிடறது எங்க இப்டி எல்லாமே வ்யாழக் கிழம (28.08.2009) தான் முடிவு எடுத்தது. வீட்ல தங்கற நேரம் கொறஞ்சதால இந்த டூருக்கு ரொம்ப முக்யத்துவம். ஆபீஸ் நெனப்பே இல்லாம இருக்கனும்னு.
வ்யாழக் கெழம நெட்ல பாத்து கொடைக்கானல் போலாம்னு முடிவு பண்ணி, அங்க என்னென்ன எடம்லாம் பாக்கனும்னும் லிஸ்ட் போட்டாச்சு. நாம நெனைக்கும்போது ட்ரைன், பஸ்ல டிக்கெட் கெடைக்குமா. மொதல் வெடி அங்கதான் ஆரம்பம். ட்ராவல்ஸ் சைட்டெல்லாம் செக் பண்ணி, பர்வீன் ட்ராவல்ஸ்ல மெட்ராஸ்லேந்து கொடைகானல்கே பஸ் இருக்கறத பாத்து, வீட்டுக்காரம்மாகிட்ட விஷயத்த சொல்லி, தயாரா இருக்க சொல்லியாச்சு. எங்க ஆபீஸ் அடையாறு சிக்னல்ல. அடையாறு பஸ் டிப்போகிட்ட, பர்வீன் ட்ராவல்ஸ் ஆபீஸ் இருக்கு. அங்க போயி டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒருத்தருக்கு நானூறோ, நானூத்தம்பதோ ஞாபகம் இல்ல. கடைசி வரிசைதான். இந்த மாதிரி ஏர் பஸ்ல புக் பண்ணி போறது இதுதான் மொதல் தடவ. A/C லாம் இல்ல. ஆனா பஸ் நல்லாத்தான் இருந்துது. தூக்கிப்போடும்போதும் தூளில இருந்தா மாதிரித்தான் இருந்துது. வீடு தாம்பரம். அதுனால பெருங்களத்தூர்ல போர்டிங் போட்டாச்சு.
ரோஹித், கமல் கூட சேந்து ஒரு டிஜிடல் ஃபோட்டோ கேமெராவும் வாங்கியாச்சு. நாலாயிரம், அஞ்சாயிரம்னு ஆரம்பிச்சு ஒரு பத்தாயிரம் அதுக்கு வெடி. நாங்க ஜாய்ண்டு ஃபேமிலி. ஒரு 13, 15 மனுஷங்க, ஒரு 26 பசு மாடுங்கன்னு. சோத்துக்கு வழி இருக்கோ இல்லியோ, ஷோஸியல் சர்வீஸ், உபன்யாசம்னு எல்லாரும் எப்போதும் பிஸி. நாங்க சின்னதா இருந்ததெல்லாம் அப்பா நெறையா ப்ளாக் அண்ட் வொயிட் ஃபோட்டோ எடுத்து வெச்சிருக்கார். அங்கேந்து வந்தது இந்த கேமெரா ஆசை. இந்த டூருக்கப்பறமே வீட்ல நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், குழந்தைங்க ஆட்டங்களையும் படம் எடுத்தாச்சு இந்த கேமெரால. உடனே, உடனே டிவி ல போட்டுக் காமிச்சா எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். நோ பிலிம், நோ ஸ்டுடியோ, நோ வெயிட்டிங் ஆல்பத்துக்கு, எடுக்கும்போது கொழந்த சிரிக்கலயே, கேமராவ பாக்கலயேன்னு கவலை இல்ல. ஒரு நாலஞ்சு எடுத்தா அதுல ஒன்னு, ரெண்டுல சிரிச்சிருக்கும்.
ம்... பஸ்சு வந்தாச்சு. ஒயரமான பஸ். ஏறியாச்சு. பர்வீன்னு எழுதின வெள்ளத்துணி போட்டு மூடின புஷ் பேக் சீட்டு. ஸ்க்ரீன் போட்ட கண்ணாடி ஜன்னல். சூப்பர்தான் போ. பர்வீன்லயே மெட்ராஸ்-கோடைக்கானல் டூர் அரேஞ்ஜ் பண்றாங்களாம். அவங்களும் இதுல தான். மீதி எடத்துல திருச்சி, கோடைக்கானல் போறவங்களயும் ஏத்தியாச்சு. சும்மா சொல்லக்கூடாது. செங்கல்பட்டு, மஹாபலிபுரம், பாண்டிச்சேரி, திருச்சின்னு எங்கேந்தெல்லாம் புக் பண்ணியிருக்காங்களோ, அங்கெல்லாம் போயி அவங்கள ஏத்தினு போச்சு. மஹாபலிபுரத்துல ஹோட்டல் மாமல்லன்னு ஒரு எடத்துல சாப்பாட்டுக்கு நிறுத்தினாங்க. சாப்டுத்தான் கெளம்பினோம். ஆனா டூர்னா சாப்பாடும் சேந்ததுதானே. நேரங்காலமில்லாம கிடைச்சத, கெடச்ச அளவு சாப்டுதான் பீமன் செத்தானாம். பெரியவங்க வழிய மீறலாமா. நாமும் சாப்டுவோம்னு சாப்டாச்சு. நல்லா இருந்துது. அப்பறம் தூக்கம் தான். இந்த மாதிரி பெரிய ட்ராவல் போகும்போது பாட்டுக்கேட்டுனே போக ஒரு பொட்டி வாங்கனும். நடு ராத்திரி கண்ண திறந்து பாத்தா, பாண்டிச்சேரில போயினுருக்கு வண்டி. திருப்பித் தூக்கம். திருச்சில இருக்கற அம்மா, அப்பாட்ட சொல்லாமலே, திருச்சிய தாண்டிப் போறோம். எங்க சொல்றது. நமக்கே நேத்தி சாயந்தரம் தான் தெரியும்.
29.08.2009 வெள்ளிக் கிழமை காலம்பற ஒரு ஆறு மணி. மலைக்குக் கீழ ஒரு எடத்துல டீ, காபி சாப்பிட நிறுத்தினார். ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு க்ராமத்துக் காலை. சுத்தி மலைகள். ஒரு குடிசைல ஒரு ஆயா ஆப்பம் போட்டு விக்கறாங்க. அந்த சிலு சிலு க்ளைமேட்ல அந்த குடிசை கீத்து வழியா வர்ற அந்த அடுப்புப் புகை. நம்ம கூடவே போட்டி போட்டுனு மலை, மரத்தையெல்லாம் தாண்டி வர்ற காலையிளம் கதிரவன். ஆஹா, காட்சி எல்லாரையும் கவிஞனாக்குது. பஸ்ஸு போகும்போது பின்னாடி திரும்பி வளைந்து, வளைந்து போகும் பாதை, மலை, கூட வர்ற சூரியன், வித விதமான வடிவேலு ஹேர் ஸ்டைல்ல இருக்கற மரங்கள்னு எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணியாச்சு.
ஒன்பது மணி. கோடைக்கானல் ஹோட்டல் சிவப்ரியா வாசல்ல எறக்கிவுட்டாங்க. ரூம்லாம் பயங்கர வாடகை. ஆயிரம், ரெண்டாயிரம்னு. ப்ரோக்கர் கண்ணுல படாம நைசா ஒரு மெடிக்கல் ஷாப்ல போயி, எங்கயாவது ஒரு நானூறு, ஐநூறு ரூபாய்க்கு ரூம் கெடைக்குமான்னு கேட்டோம். அவர் ஒடனே பக்கத்துல இருந்த ஒரு ப்ரோக்கர கூப்ட்டு ஹெல்ப் பண்ண சொன்னாரு!! அங்க எல்லாருமே அரசு அங்கீகாரம் பெற்ற கைடுன்னு ஒரு ஐடி கார்டு வெச்சிருக்காங்க. நாங்க அவர் கூட போனோம். ஏரி கிட்ட, ஒரு மேட்டுல விக்னேஷ் கெஸ்ட் ஹவுஸ் னு ஒரு எடத்துக்குக் கூட்டினு போனாரு. அவர் எங்களுக்காக எண்ணூறு ரூபால ஆரம்பிச்சு, அப்பறம் நாங்களும், கூட வந்த ப்ரோக்கரும் கேட்டுக்கொண்டதற்காக ஒரு நாளைக்கு நானூறு ரூபான்னு ஒரு ரூம காமிச்சார். பாத்தோம். ஓகே சொன்னோம். பல்ல தேச்சு, குளிச்சு வெளில கெளம்பியாச்சு.
என்னென்ன பாக்கனும்னு லிஸ்ட் இருக்கு. ஆனா எப்டி போறது. ஆட்டோ, பஸ்ஸு கெடையாது. ஒன்லி டாக்ஸி. மினிமம் அம்பது ரூபாவாம். ஒரு ட்ரைவர்ட்ட எங்க லிஸ்ட காமிச்சோம். அவரு முன்னூறு ரூபா குடுங்க. இன்னிக்கு சில எடங்கள காமிக்கறேன்னு சொன்னாரு.
செட்டியார் பார்க்,
குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
ஒரு ஜெயின் கோவில்,
கரடி அருவி,
பேரிக்கா மரங்கள் இதெல்லாம் காம்ச்சிட்டு போட் க்ளப் கிட்ட உட்டாரு. எவ்ளவோ செலவு பண்றோம். இத பண்ண மாட்டோமான்னு நமக்கு நாமே தேத்திண்டோம். நல்லா தான் இருந்துது. குறை ஒன்றும் இல்லை. நல்ல டிரைவர், ஏசி காரு, அடிச்சுப் புடிச்சு அடஞ்சு, அடங்கி ஒக்காராம ரெண்டே பேரு.
செட்டியார்!! பேர் ராசி போல. எத தொட்டாலும் துலங்குது. பேங்க் ஆரம்பிச்சாங்க, பிஸ்நெஸ் பண்ணினாங்க, அழகழகா அரண்மனை மாதிரி வீடு கட்டினாங்க, சமுதாயத்துக்கும், சமயத்துக்கும் நெறையா தொண்டு பண்ணினாங்க, இந்த வரிசைல இந்த செட்டியார் பார்க். நாங்க போகும்போது ஒன்னும் நுழைவுக் கட்டணம் இல்ல. அருமையான, அழகான, அமைதியான எடம். ஊட்டி கார்டன், இல்ல அதைவிட அழகா. அவங்க வெட்டி போட்ருக்கற செடி குப்பையெல்லாம் வூட்டுக்காரம்மா பொக்கே பண்ணப் போறேன்னு எடுத்துனு வந்தாங்க. அடுத்தது குறிஞ்சி ஆண்டவர். முருகன் அழகுன்னு சொல்லனுமா. கோயிலோட ரெண்டு பக்கத்துலயும் பழனி வ்யூ, கோயம்புத்தூர் வ்யூ ன்னு காமிச்சாங்க. ரெண்டு ஊர்லேந்தும் வந்துருந்தா ஓரளவு புரிஞ்சிருக்கும். நமக்கு வளந்த, வாழற ஊர்லையே இன்னும் பாதி எடம் பக்கத்துலேந்து பாத்தாலே புரியல. தெரியல. அதுலெல்லாம் மனைவி கிரேட் (பொதுவா எல்லா பொம்பளைங்களுமே!!). புது அபீஸ் சேந்தா பாதி நாள் பஸ் மாறி ஏறது, ஸ்டாப் மாறி ஏறங்கறது, நம்ம வீட்டு சந்த விட்டு வேற சந்து மாறி சுத்தறது இதெல்லாம்தான் நான் மறக்காம பண்றது.
ஜெயின் கோவில் வர்ற வழில பேரிக்கா பறிச்சு போடற ஒரு எடத்துல நிறுத்தி, நாலஞ்சு பேரிக்கா வாங்கிக் குடுத்தார். என்னா பெரிசு. இதெல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்கலாம். கடிச்சா ஜூஸ் கொட்றது. ஒரு லாபத்தையும் எதிர்பாக்காத பூமி மாதா எந்த கலப்படமும் இல்லாம அவ கொழந்தைங்களுக்காக தரா இதையெல்லாம். நம்ம ஊர்ல வண்டில, இல்ல ஒரு கூடைல ஒவ்வொரு சாமானா எடுத்துப் போட்டுப்போமே, அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லெல்லாம் இதுல பாதி சைஸு பேரிக்கா (+ கடை வாடகை + கரண்ட் பில்லு + தப்பு தப்பா பில்லு போடற ஆளுங்க சம்பளம் + வண்டி வாடகை + யாரும் வாங்காம வீணா போற சாமான்களோட விலை + கடை பராமரிப்பு + லாபம்) இருபது ரூபா வரை இருக்கும். வாட் வரி, இதெல்லாம் வேற. ஜெயின் கோவில் நம்மூர்ல அங்கங்க புள்ளையார் கோவில் கட்டி இருப்பாங்களே, அந்த சைஸு. ஆனா எல்லாம் மார்பிள். குட்டியா, ஆனா க்யூட்டா இருந்துது.
அருவிங்க கோடைக்கானல், அத சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் குடி நீர். சில்லுனு வேற இருக்கும். அதுனால குளிக்காதீங்கன்னாரு ட்ரைவர் அண்ணா. சொல்றத கேக்கற பழக்கம்? கார நிறுத்தின எடத்துலேந்து ஒரு அம்பது அடி ஒத்தையடிப் பாதைல போணும். பாதைக்கு ரெண்டு பக்கமும் கரண்ட் ஃபென்சிங் (இரும்புத் தடுப்பு !!) போட்ருக்காங்க. கரடி வருமாம். சல, சலன்னு சத்தம். சிலு, சிலுன்னு காத்து. மனைவிய குளிக்க வேண்டாம்னு சொல்லிட்டு, துண்டக் கட்டிக்கினு டமால்னு தலைய வுட்டேன் கொட்ற தண்ணீல. சில்லுனு இல்ல ஜில்லுனு, ஹூஹூம். என்னவோ. மூச்சு நின்னுது ரெண்டு நிமிஷம். சொல்லவே இல்ல!! ஏற்கனவே ரெண்டு, மூணு பேர் குளிக்கறாங்க. சொல்லி இருக்கலாம். கேக்க மாட்டோம்னு தெரிஞ்சவங்களா இருப்பாங்க. கொஞ்ச நேரம் ஒரு பாறைல ஒக்காந்து யோசிச்சேன். கொஞ்சம் காலு, கொஞ்சம் கையி, கொஞ்சம் ஒடம்பு, அப்பறம் தலைன்னு நனைச்சிருக்கலாம். ஒடம்பு அந்த ஜில்லுப்புக்கு ரெடின்னு தெரிஞ்சதும் கொஞ்ச நேரம் குளிச்சேன். என்ஜாய் பண்ணினேன். என் நிலைக்கு வந்ததும் மனைவியவும் சும்மா கூப்ட்டு ஃபோட்டோ எடுத்துண்டோம். ட்ரைவர் தேடினு வந்துட்டார். பொன்னியின் செல்வன் பழவேட்டரையர் மாதிரி ஒரு பார்வை பாத்தார். பம்மினு வெளில வந்தோம். ஏரி கிட்ட போட் ஹவுஸ்ல விட்டுட்டு போனாரு.
போட்டிங் போற ஐடியா இல்ல. நெறையா போயாச்சு. வேற எங்கயும் இல்ல, இங்க மட்டும் தான் இருக்குங்கறத மட்டும்தான் அனுபவிக்கனும்னு ப்ளான். ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துனு அப்டி ஜெமினி, சரோஜா தேவி மாதிரி போலாம்னு பாத்தேன். ஒரு தொப்பி விக்கற அம்மா, "பள்ளத்துக்கு ஓட்டிட்டு போகும்போது அப்டி இருக்கும், ஆனா மேட்டுக்குத் திருப்பி அமுத்தும்போது வில்லன் தொரத்தறா மாதிரி நினைச்சினா தான் அமுத்த முடியும்னுட்டாங்க". கல்யாணத்துக்கப்பறம் நெறையா பொண்ணுங்க சைக்கிள் ஓட்றது இல்ல. வண்டிக்கு மாறிடறாங்க. என் மனைவி என்னை விட சூப்பரா, பொறுப்பா எக்செல் ஹெவி ட்யூட்டி ஓட்றா. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்துல பொறுப்பு. நான் சூப்பரா பின்னாடி ஒக்காந்துப்பேன்.
ரூமுக்கு வந்தாச்சு. மணி சாயந்தரம் ஒரு அஞ்சு, ஆறு இருக்கும். மழை கொட்டுது, ரூமுக்குள்ளயும்!! அட்டாச்சுடு பாத் ரூம்ல பாத்தா கொச, கொசன்னு மம்மி படத்துல வர்றா மாதிரி அட்டைப் புழு. வெயில் அடிக்கும்போது மட்டும் தங்கற ரூம் போல இருக்கு காஷ்மீர் தலைநகரம் மாதிரி. இன்னும் ஒரு நாள் ஓட்டனும். நாலு எடத்தப் பாக்கணும். இது ஒன்னும் சரி படும்னு தோணல. எல்லாருக்கும் யூகலிப்டஸ் தைலம், பேரிக்கான்னு பைல ரொப்பினு போலாம்னு பாத்தா, இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல புழுவா ரொம்பிடும் போல இருக்கு. மத்த இடங்கள் காஸ்ட்லி நம்ம பட்ஜெட்டுக்கு. புழுவா, பணமா எதுக்கு பயப்படறது.
பணத்த கொடுத்துப் புழுவ தொரத்த வேண்டியதுதான். அண்ணாவுக்கு ஒடம்பு சரி இல்ல, ஊருக்குப் போறோம், காலி பண்ணிக்கறோம்னு சொன்னோம். ஒரு நாள் வாடகை (400), ப்ரோக்கர் கமிஷன் (150) போக மிச்சம் 250 தரேன்னு அன்பா சொல்லி குடுத்தாரு. யூகலிப்டஸ் தைலம் வாங்கலாம்னு பேசிண்டோம். எனக்குத் தெரிஞ்ச எடம் இருக்கு, விலை கொறச்சு வாங்கித் தரேன்னு சொன்னாரு. நாங்க விசாரிச்ச எடத்த விட இருபது ரூபா ஜாஸ்தி. அவர் த்ருப்திக்கு ஒண்ணு, ரெண்டு வாங்கிண்டோம்.
ஓடினோம் நேர சிவப்ரியா ஹோட்டல்க்கு. ஒரு நான் ஏசி டபிள் பெட் ரூம் வித் அட்டாச்சிடு பாத்ரூம் வித் சுடுதண்ணி, தொலைபேசி ஒரு நாளைக்கு எண்னூறோ, ஆயிரமோ சொன்னார். ஒரு தடவ முடிவு செஞ்சுட்டா நம்ம பேச்சையே நாம கேக்க மாட்டோமே. புக் பண்ணியாச்சு. ரொம்ப அருமை, ரூம், ரிசெப்ஷன், சாப்பாடு (விலை, டேஸ்ட்), கவனிப்பு, ஜோர், ஜோர். மெட்ராஸ் ரத்னா ஸ்டோர்ஸுக்கும் இவங்களுக்கும் தொடர்பிருக்கு. மெனு கார்டுல "விசிட் அவர் ஷோ ரூம்"னு போட்ருந்துது. நல்ல வ்யூன்னு சொல்லி ஒரு ரூம் குடுத்தார். இதெல்லாம் பாரதியார்க்குக் கெடச்சிருந்தா இன்னும் பத்துப் பாட்டாவது எழுதி இருப்பார். தூங்கறவங்களுக்கு என்ன யூஸு.
வெளில போயி அரசு டூரிஸ்ட் ஆபீஸக்கண்டுபுடிச்சோம். மிச்ச எடத்தப் பாக்கறதப் பத்திப் பேச. அவங்க ஒன்னும் அரேன்ஜ் பண்றதில்லையாம். லோக்கல் டூரிஸ்ட் ஆளுங்கள்ல ஒருத்தர நம்பிக்கையானவர்னு கூப்ட்டு எங்க பாக்கி லிஸ்ட குடுத்தார். அவர் சரின்னு சொல்லி தலைக்கு (எல்லாத்துக்கும்தான்) இருநூறு ரூபா போல சொன்ன ஞாபகம். சரின்னு பணத்தக் குடுத்தோம். வண்டி அடையாளங்கள சொல்லி காலைல ஹோட்டல்லையே வந்து பிக் அப் பண்ணிப்பாங்கன்னாரு. அப்டியே கொஞ்ச நேரம் சுத்திட்டு கொஞ்சம் பழங்கள வாங்கினு ஹோட்டல்க்கு வந்தோம்.
டிபன ஒரு கட்டு, கட்டிட்டு ஒரு தூக்கத்தைப் போட்டோம்.
30.08.2008 சனிக்கிழமை, வெளிச்சம் கண்ணத் தட்டியது, தொறந்தோம். எந்த க்ளைமேட்லயும் குளிக்கறதுக்கு ரெண்டு பேருமே அஞ்சறதில்ல. என்ன என் மனைவி வெளில போய்ட்டு வந்தா, மாலைக் குளியல்னு ஜமாய்ப்பா. நமக்கு நம்மூர் புழுதிய அலம்பி உட்ரதுல அவ்ளோ இஷ்டம் இல்ல. மனசு வலிக்கும். இப்பப்ப அதுவும் ஆரம்பிச்சாச்சு. டிபனும் சாப்டாச்சு. அலங்காரமும் ஆச்சு. வண்டி வந்தபாடில்ல. ரூம பூட்டிட்டு போலாம்னா, ரூம் க்ளீனிங்னு வந்துட்டாங்க. ரிஷப்ஷன்ல ஒடனே நீங்க வேற ரூம்க்கு போங்க சார். வெயிட் பண்ண வேணாம்னு உதவி பண்ணினார். கலைச்சுப் போட்ட ரூம்க்கும், புது ரூமுக்கும் வித்யாசம் இருக்கத்தான் இருக்கு. நான் கொஞ்சம் பெரிசு. என்னோட ஜிப்பா இன்னும் பெரிசு. போன் பேசற போட்டோல, மலை ஏற்ர போட்டோல காஷ்மீர் தீவிரவாதி மாதிரி இருக்கு. டூர் வண்டி வந்தாச்சுப்பா.
ஒரு மணி, ஒன்றை மணி நேரம் லேட்டு. விரட்டி, விரட்டி எதையாவது ஒண்ணு, ரெண்ட விட்டு கூட்டினு வந்திடப்போறானோ. ஒரு பதினஞ்சு, இருபது பேர் ஒக்காரலாம். என்னடா இவ்ளோ எடத்துக்கு 200 ரூபா வாங்கறாங்கலேன்னு பாத்தேன். இதான் விஷயம். வண்டில ரெண்டு, மூணு லிஸ்ட் கார்டு. க்ரூப், க்ரூப்பா ஒவ்வொரு டூரிஸ்ட்காரனும் புக் பண்ணி, ஒரே வண்டில ஏத்தி விட்ருக்காங்க. இது இன்னொரு விஷயம். எந்த க்ரூப் லிஸ்ட்ல இருக்கற எடம் கட் ஆகப் போறதுங்கறது சஸ்பென்ஸ். எதையோ காமிக்க போறாங்கன்னு நெனைச்சா ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஒரு எடத்துல நிறுத்தி இன்னும் ரெண்டு பேர ஏத்திக்கறாங்க. அவ்ளோதான். வண்டி கெளம்பியாச்சு. ஆட்டு மந்தை இருக்கற எடத்த பாக்க வன அதிகாரிகள்ட்ட பர்மிஷன் வாங்கனும்னு ஒவ்வொருத்தர்ட்டயும் இன்னும் முப்பது ரூபா வாங்கினாங்க. வழக்கம் போல கொஞ்சம் முனுமுனுப்பு, எதிர்ப்பு. அப்பறம் குடுத்தாச்சு. ஒவ்வொருத்தரும் அறிமுக உரையாடி முடிந்தது.
கிரீன் வாளீ !! பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ,
கோல்ஃப் க்ரவுன்ட்,
டாப் லேக் வ்யூ,
சின்மயா மிஷனோட அனுமார் கோவில்,
பைன் ஃபாரஸ்ட்,
பாம்பாறு அருவி,
மகாலக்ஷ்மி கோவில்,
பூம்பாறை க்ராம வ்யூ,
பில்லர் ராக் வ்யூ,
குணா கேவ்,
ஷீப் ஃபார்ம் இதெல்லாம் தான் இன்னிக்குப் பாத்தது.
பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ போற வழி முழுக்க ஊர்த் திருவிழாம்போது வழில ரெண்டு பக்கமும் பலகாரம், பொம்மை, எவர்சில்வர் சாமான்னு கடை போடுவாங்கல்ல, அது மாதிரி ட்ரை ஃப்ரூட், தேன், மூலிகை, பழங்கள்னு கடைகள். தாண்டிப் போனா இரும்பு வேலி போட்ருந்தாங்க. தாண்டிப் போகமுடியாதபடி. ஆனா கொரங்குங்க குடும்பம், குடும்பமா இங்க, அங்கன்னு போயிட்டு வருதுங்க. ஒரே பனி மூட்டம். ஏதோ ஆயிரக் கணக்குல ஆழம்னு சொன்னாங்க. ஒன்னும் சுத்தமா தெரியல. ரெண்டு, மூணு வகைல பெறிக்க வாங்கிண்டு, சுட்ட சோளக்கருது வாங்கித் தின்னுட்டு, ரோட க்ராஸ் பண்ணினா கோல்ஃப் க்ரவுண்ட். சுத்தி வலை போட்டு மூடி இருக்காங்க. ஓட்ட வழியா பாத்தோம். நாலஞ்சு அடிக்கு புல்வெளி தெரிஞ்சுது. அப்பறம் பனிதான். கீழ விக்கற விலைய விட இங்க பேரிக்கா கொஞ்சம் சீப்தான்.
அடுத்தது டாப் லேக் வ்யூ. கீழ இருக்கற ஏரிய மேலேந்து பாக்கறோம். ஸ்டார் வடிவத்துல தெரியும்னார் கைடு. மிஸ்ட் ஃபார்ம் (பனி மூட்டமாம்) ஆய்டுச்சாம். ஏரிய சுத்தி மரங்கள் வேற. தெரிஞ்சத பாத்துட்டு கெளம்பினோம். அடுத்தது சின்மயா மிஷன் சார்புல இருக்கற ஒரு சின்ன ஆஞ்சனேயர் கோவில். சூப்பரா இருந்தார். பைன் ஃபாரஸ்ட், சினிமால வில்லன் ஹீரோயின துரத்துவாரே அந்த இடம். சூப்பரா இருந்துது. குதிரை ரைடு கூப்டாங்க. ஏறல. குதிரை அன்னிக்கு இருக்கற மாதிரிதான் இருக்கு. ஆனா ஏதாவது ஆச்சுன்னா, இன்னிக்கு இருக்கற ஆளுங்க அத எம்.ஜி.ஆர் மாதிரி தடுத்து நிறுத்தி அடக்குவாங்களாங்கறதில அவ்ளோ நம்பிக்கை. ஃப்ரஷ்ஷா கேரட் வித்தாங்க, வாங்கி சாப்டோம். ஜம்முனு இருந்துது. இங்க ஒரு க்ராமத்து க்ரூப் அவங்கள போட்டோ எடுக்க சொன்னாங்க. ரெண்டு, மூணு எடுத்து, அவங்க ஊருக்கும் ப்ரிண்ட் போட்டு அனுப்ச்சு வச்சாச்சு. ரொம்ப நன்றின்னாங்க போன்ல. உருப்படியா ஒரு வேல.
முப்பது ரூபா வாங்கிண்ட ஆட்டு மந்தை காமிக்கல. மேயற எடத்த காமிச்சாரு. அங்க ஆட்டுப் புழுக்க கூட இல்ல. டீமுக்கு கோவம் வந்தாச்சு. சரின்னு ட்ரைவர் நான் ஒரு ஹேர் பின் பெண்டு போட்டு வரேன். நீங்க இப்டியே கைடு கூட கீழ எறங்கிப் போங்கன்னாரு. சூப்பர் புல்வெளி. பசங்கள்லாம் குதிச்சு, பொரண்டு, ஒருத்தன் மேல ஒருத்தன் விழுந்து, வித விதமான கெட் அப்புல போட்டோ எடுத்துண்டாங்க. நாங்க கொஞ்சம் பேர் கைடு கூட நடந்து வந்தோம். வழில அவரு ரத்தம் குடிக்கற அட்டைப் புழுன்னு ஒன்ன காமிச்சாரு. புழு சைஸ் தாங்க. நம்ம ஊரு அட்டைப் பூச்சி போல இல்ல. கருப்புக் கலர்ல ஒன்னு, ரெண்டு இன்ச் நீளத்துல இருக்கும் மெல்லீசா. யாரும் சொன்னா கேக்க மாட்டேங்கறீங்கன்னாரு. ஆட்டம் போடற பசங்கள்ட ஒடனே இதப் பத்தி சொன்னோம். அவ்ளோதான். எல்லாப் பயலும் கீழ ஒடியாந்துட்டான்க. அவனவன் செருப்பு, கோட், ஜெர்க்கின், ஷூ எல்லாத்தையும் கழட்டி ஒதறினாங்க. அங்கங்க விழுந்துது. நாலஞ்சு பேருக்கு கால் விரல் சந்துல சத்தம் போடாம ரத்தம் சாப்டுனு இருந்துது. எல்லாம் க்ளீன் பண்ணினு கெளம்பினோம்.
பாம்பாறு அருவி. நமக்குத்தான் அது பெரிய விஷயம் இதெல்லாம். உள்ளூர் காரங்களுக்கு அவசரத்துக்கு அலம்பிக்கற எடம். கீழ கொஞ்சம் மோசமா இருந்துது. மலை மேல ஏறி கொஞ்ச தூரம் போயி என்ஜாய் பண்ணினோம். அடுத்தது மஹாலக்ஷ்மி கோவில். இப்பத்தான் கட்டினு இருக்காங்க கேரளா ஸ்டைல்ல. சின்ன, சின்ன சன்னிதி, பூட்டி இருந்துது. சுத்தி அருமையான காட்சிகள், எல்லாத்தையும் போட்டோ எடுத்துனோம். பூம்பாறை க்ராமம் டூர்னு சொல்லிட்டு, இந்த எடத்துலேந்து கீழ இருக்கற பூம்பாறை க்ராமத்த காமிச்சாங்க.
அடுத்தது பசங்க அமக்களம் பண்ணினதுக்காக திருப்பி கொஞ்ச தூரம் நடந்து போயி குணா குகைகளுக்கு போலாம்னு கூட்டினு போனாரு கொல்லைப் பக்கம் வழியா. ஒரு ஒன்னு, ரெண்டு கி.மீ நடந்தோம். அருமையான சூழ்நிலை. பனி மூட்டம். அடர்ந்த மலைக் காட்டுக்குள்ள ஒத்தையடிப் பாதைல போறோம். வழில ராக் பில்லர் காமிச்சாரு. மலைகளே நாலு தூண் மாதிரி இருக்கு இயற்கையா. எங்களுக்கு ரெண்டுதான் தெரிஞ்சுது. மிஸ்ட்!! குணா குகைகளுக்குப் பேரு டெவில்ஸ் கிச்சன்னு வைச்சிருக்காங்க. நிறையா பேர் செத்துப் போயிருக்காங்க, காணாம போயிருக்காங்களாம். ஒடம்பு கூட கெடைக்காதாம். கல்வெட்டு கூட வெச்சிருந்தாங்க. ஷூட்டிங் நடந்த எடத்துக்கெல்லாம் இப்ப போக முடியாது. தரைல, சுத்தின்னு எல்லா எடத்துலையும் கனமான இரும்பு வேலி. அப்பறம் என்ன? அவ்ளோதான். அவனவன் கைல இருக்கற லிஸ்டுல இத காமிக்கல, அத காமிக்கலன்னு பொலம்பினே வந்தோம். ஹோட்டல் கிட்ட எறக்கி விட்டாங்க கொட்டற மழைல. புண்ணியம் போங்க. ஆனா ஒரு விஷயம். இந்த வேன்ல நாங்க ஒவ்வொரு எடத்தையும் பாத்துட்டு, வண்டில ஏறி கதை, கதையா பேசினு வந்தோம். ரெண்டு ஜோடி மட்டும் காச குடுத்துட்டு, கண்டக்டர், ட்ரைன் கார்டு மாதிரி எங்கயுமே எறங்கவே இல்லையே. ரூமுக்கு வந்தாச்சு. நல்ல டயர்டு. ரூம்லேந்தே நைட்டுக்கு வேண்டிய டிபன ஆர்டர் பண்ணி சாப்டுட்டு தூங்கினோம்.
31.08.2008, ஞாயிறு. திருச்சிக்கு வீட்டுக்கு் லஞ்ச்சுக்குப் போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு நைட் பஸ் ஏறலாமா, இல்ல இன்னும் பாக்கி இருக்கற எடத்துல பாக்க முடிஞ்சத பாத்துட்டு, திருச்சிக்கு ஈவினிங் போயிட்டு நைட் பஸ் ஏறலாமா. ஒரு டாக்ஸி அண்ணாச்சி கிட்ட கேட்டோம். செண்பகனூர் ம்யூஸியம் காமிச்சிட்டு, லா ஸலேத் சர்ச்சுல விடறேன்னாரு. நூறோ, இன்னும் ஒரு அம்பதோ குடுத்த ஞாபகம். செண்பகனூர் ம்யூஸியம் ஒரு க்றிஸ்டியன் காலேஜ் மெயின்டனென்ஸ்ல இருக்கு. அரிய, பழைய விலங்குகள், பறவைகள்னு எல்லாத்தையும் பதப் படுத்தி வெச்சிருக்காங்க. மூணு ரூபா ட்க்கெட்டு, போட்டோ எடுக்கக் கூடாதுன்னாரு ரிஸெப்ஷன்ல இருந்த ஃபாதர் தாத்தா. சரின்னு சொல்லி உள்ள போயி பாத்தோம். கொஞ்சம் பேர் ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துண்டாங்க. நல்லா இருந்துது. அடுத்தது லா ஸலேத் சர்ச்சு. 1863 ல அடிக்கல் நாட்டப்பட்டது, இங்க ஒரு கோவில், ஃப்ரான்ஸ்ல லா ஸலேத்துங்கற இடத்துல அன்னை காட்சி கொடுத்த எடத்துல இன்னொரு கோவில். இதெல்லாம் அங்க வெச்சிருந்த கல்வெட்டுல போட்டுருந்துது.
பக்கத்துலயே கூக்கர்ஸ் வாக். சர்ச்சுலேந்து ஏரிக்குப் போக இந்த ஒத்தையடி குறுக்குப் பாதைய கூக்கர் கண்டு புடிச்சாராம். இப்ப நாலஞ்சு பேர் நடக்கற அளவு டைல்ஸ் போட்டு, என்ட்ரன்ஸ், கேமிராக்குன்னு காசு வாங்கினு உட்றாங்க. இயற்கை எடம் குடுக்கற வரைக்கும் நம்ம எக்ஸ்டெண்டு பண்ணினே இருப்போமே. அது எதிர்ப்பு தெரிவிக்கும் போது பாத்துப்போம், இருந்தா!! அப்டியே நடந்து வந்தா ப்ரெயின் பார்க் கிட்ட கொண்டு வந்து விடறது அந்த பாதை. இது செட்டியார் பார்க் இல்ல. கவர்மெண்ட்டோடது. அவங்க ஆபீஸ் மாதிரியே இருக்கு. கோடைக்கானல்லயே செடி, மரம் அதிகம் இல்லாத இடம் இது. எதோ வேலை பார்த்துக் கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்காங்க இங்க. ஒரு போதி மரம் இருக்கு இங்க. அதுக்குக் கீழ சின்னதா ஒரு புத்தர் சிலைய வெச்சிருக்காங்க.
கவர்மெண்ட்டும் முன்ன மாதிரி இல்ல இப்பெல்லாம். சும்மா சாப்ட்டா திட்டு வாங்கறோம், மாட்டிக்கறோம் தெரிஞ்சிருக்கு. அதுனால புதுசு, புதுசா ஏதாவது வேலைய உண்டாக்கி எல்லாரும் எடுத்துண்டது போக திட்டத்துக்கு எவ்ளோ தேவைப்படும் கணக்குப்பாத்து நிதி ஒதிக்கித் தான் இப்பெல்லாம் ஆரம்பிக்கறது. நமக்கும் ரோடு (பின்னாடியே அத ஒடைக்கறதுக்கு கார்ப்பொரேஷன், ஈ. பி காரங்க, குடிநீர் வாரியம் ஆளுங்க, போன் ஆளுங்க,...) சாக்கடை வசதி (அப்பப்ப திறந்து இருக்கும் சூடு ஆறுவதற்காக, மழை காலத்துல இதுலேந்தும் தண்ணி வெளில வரும்), லைட் (டோல்கேட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும் கொஞ்ச தூரத்துக்கு, புதுப் பாலங்களுக்கு), பே அண்டு யூஸ் டாய்லெட் (சுத்தம் நாமளும் பண்ண வேண்டாம், அவங்களும் பண்ண மாட்டாங்க), நடைபாதை, (நடைபாதைக் கடைகள்), சிங்காரச் சென்னை 1950, 55, 60,65...இப்போ சிங்காரச் சென்னை 2010, புதுப் பாலங்கள்னு, ப்ளாஸ்டிக் சேர் மேல பெட்ஷிட் போட்ட மிதவை, சொகுசு, தாழ்தள, தங்கப் பேருந்துகள் (இரும்புல இருந்தா கொளுத்தும்போது த்ருப்தியா எரிய மாட்டேங்குதாம்), இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்துல ரெண்டு, மூணு ரூபாய் டிக்கெட்டுக்கு பஸ் (மதியம் 12 மணிலேந்து மாலை ஒரு 4 மணி வரை இந்தப் பேருந்துகள நீங்க பாக்கலாம்) நெறையா வசதிகள்.
மொழி, ப்ராந்திய, தேசியப் ப்ரச்சினைகள், தீவிரவாதம், விலைவாசி, புதுப் புது வ்யாதிகள் ஜாஸ்தி ஆயினே இருக்குன்னு நாம ஸ்டேட் கவர்மெண்ட் கிட்ட சொல்ல, அவங்க மத்திய அரசு கிட்ட சொல்ல, அவங்க ஐ. நா சபைல சொல்ல, அவங்க அமெரிக்கா, ப்ரிட்டன் கிட்ட சொல்ல, அவன் நிலால தண்ணி இருக்கா, புதுசா எதாவது க்ரகம் கிடைக்குதான்னு பாத்துட்டு வரேங்கறான். வெயிட் பண்ணுவோம், ப்ளீஸ். இல்ல நாமளும் இந்த தேசிய நீரோட்டத்துல கலந்துனு நம்ம பங்க ஆற்றுவோம், எடுத்துப்போம்
இதாம்பா டூர். 31ம் தேதி திருச்சி போயிட்டு, நைட் கெளம்பி மறுநாள் ரெஸ்ட் எடுக்க ஆபீஸ் வந்தாச்சு. ரொம்ப பிசி. அப்பறம் பாப்போம்.
ஜய் ஹிந்த்! ஜய் ஸ்ரீராம்!!
வ்யாழக் கெழம நெட்ல பாத்து கொடைக்கானல் போலாம்னு முடிவு பண்ணி, அங்க என்னென்ன எடம்லாம் பாக்கனும்னும் லிஸ்ட் போட்டாச்சு. நாம நெனைக்கும்போது ட்ரைன், பஸ்ல டிக்கெட் கெடைக்குமா. மொதல் வெடி அங்கதான் ஆரம்பம். ட்ராவல்ஸ் சைட்டெல்லாம் செக் பண்ணி, பர்வீன் ட்ராவல்ஸ்ல மெட்ராஸ்லேந்து கொடைகானல்கே பஸ் இருக்கறத பாத்து, வீட்டுக்காரம்மாகிட்ட விஷயத்த சொல்லி, தயாரா இருக்க சொல்லியாச்சு. எங்க ஆபீஸ் அடையாறு சிக்னல்ல. அடையாறு பஸ் டிப்போகிட்ட, பர்வீன் ட்ராவல்ஸ் ஆபீஸ் இருக்கு. அங்க போயி டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒருத்தருக்கு நானூறோ, நானூத்தம்பதோ ஞாபகம் இல்ல. கடைசி வரிசைதான். இந்த மாதிரி ஏர் பஸ்ல புக் பண்ணி போறது இதுதான் மொதல் தடவ. A/C லாம் இல்ல. ஆனா பஸ் நல்லாத்தான் இருந்துது. தூக்கிப்போடும்போதும் தூளில இருந்தா மாதிரித்தான் இருந்துது. வீடு தாம்பரம். அதுனால பெருங்களத்தூர்ல போர்டிங் போட்டாச்சு.
ரோஹித், கமல் கூட சேந்து ஒரு டிஜிடல் ஃபோட்டோ கேமெராவும் வாங்கியாச்சு. நாலாயிரம், அஞ்சாயிரம்னு ஆரம்பிச்சு ஒரு பத்தாயிரம் அதுக்கு வெடி. நாங்க ஜாய்ண்டு ஃபேமிலி. ஒரு 13, 15 மனுஷங்க, ஒரு 26 பசு மாடுங்கன்னு. சோத்துக்கு வழி இருக்கோ இல்லியோ, ஷோஸியல் சர்வீஸ், உபன்யாசம்னு எல்லாரும் எப்போதும் பிஸி. நாங்க சின்னதா இருந்ததெல்லாம் அப்பா நெறையா ப்ளாக் அண்ட் வொயிட் ஃபோட்டோ எடுத்து வெச்சிருக்கார். அங்கேந்து வந்தது இந்த கேமெரா ஆசை. இந்த டூருக்கப்பறமே வீட்ல நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், குழந்தைங்க ஆட்டங்களையும் படம் எடுத்தாச்சு இந்த கேமெரால. உடனே, உடனே டிவி ல போட்டுக் காமிச்சா எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். நோ பிலிம், நோ ஸ்டுடியோ, நோ வெயிட்டிங் ஆல்பத்துக்கு, எடுக்கும்போது கொழந்த சிரிக்கலயே, கேமராவ பாக்கலயேன்னு கவலை இல்ல. ஒரு நாலஞ்சு எடுத்தா அதுல ஒன்னு, ரெண்டுல சிரிச்சிருக்கும்.
ம்... பஸ்சு வந்தாச்சு. ஒயரமான பஸ். ஏறியாச்சு. பர்வீன்னு எழுதின வெள்ளத்துணி போட்டு மூடின புஷ் பேக் சீட்டு. ஸ்க்ரீன் போட்ட கண்ணாடி ஜன்னல். சூப்பர்தான் போ. பர்வீன்லயே மெட்ராஸ்-கோடைக்கானல் டூர் அரேஞ்ஜ் பண்றாங்களாம். அவங்களும் இதுல தான். மீதி எடத்துல திருச்சி, கோடைக்கானல் போறவங்களயும் ஏத்தியாச்சு. சும்மா சொல்லக்கூடாது. செங்கல்பட்டு, மஹாபலிபுரம், பாண்டிச்சேரி, திருச்சின்னு எங்கேந்தெல்லாம் புக் பண்ணியிருக்காங்களோ, அங்கெல்லாம் போயி அவங்கள ஏத்தினு போச்சு. மஹாபலிபுரத்துல ஹோட்டல் மாமல்லன்னு ஒரு எடத்துல சாப்பாட்டுக்கு நிறுத்தினாங்க. சாப்டுத்தான் கெளம்பினோம். ஆனா டூர்னா சாப்பாடும் சேந்ததுதானே. நேரங்காலமில்லாம கிடைச்சத, கெடச்ச அளவு சாப்டுதான் பீமன் செத்தானாம். பெரியவங்க வழிய மீறலாமா. நாமும் சாப்டுவோம்னு சாப்டாச்சு. நல்லா இருந்துது. அப்பறம் தூக்கம் தான். இந்த மாதிரி பெரிய ட்ராவல் போகும்போது பாட்டுக்கேட்டுனே போக ஒரு பொட்டி வாங்கனும். நடு ராத்திரி கண்ண திறந்து பாத்தா, பாண்டிச்சேரில போயினுருக்கு வண்டி. திருப்பித் தூக்கம். திருச்சில இருக்கற அம்மா, அப்பாட்ட சொல்லாமலே, திருச்சிய தாண்டிப் போறோம். எங்க சொல்றது. நமக்கே நேத்தி சாயந்தரம் தான் தெரியும்.
29.08.2009 வெள்ளிக் கிழமை காலம்பற ஒரு ஆறு மணி. மலைக்குக் கீழ ஒரு எடத்துல டீ, காபி சாப்பிட நிறுத்தினார். ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு க்ராமத்துக் காலை. சுத்தி மலைகள். ஒரு குடிசைல ஒரு ஆயா ஆப்பம் போட்டு விக்கறாங்க. அந்த சிலு சிலு க்ளைமேட்ல அந்த குடிசை கீத்து வழியா வர்ற அந்த அடுப்புப் புகை. நம்ம கூடவே போட்டி போட்டுனு மலை, மரத்தையெல்லாம் தாண்டி வர்ற காலையிளம் கதிரவன். ஆஹா, காட்சி எல்லாரையும் கவிஞனாக்குது. பஸ்ஸு போகும்போது பின்னாடி திரும்பி வளைந்து, வளைந்து போகும் பாதை, மலை, கூட வர்ற சூரியன், வித விதமான வடிவேலு ஹேர் ஸ்டைல்ல இருக்கற மரங்கள்னு எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணியாச்சு.
ஒன்பது மணி. கோடைக்கானல் ஹோட்டல் சிவப்ரியா வாசல்ல எறக்கிவுட்டாங்க. ரூம்லாம் பயங்கர வாடகை. ஆயிரம், ரெண்டாயிரம்னு. ப்ரோக்கர் கண்ணுல படாம நைசா ஒரு மெடிக்கல் ஷாப்ல போயி, எங்கயாவது ஒரு நானூறு, ஐநூறு ரூபாய்க்கு ரூம் கெடைக்குமான்னு கேட்டோம். அவர் ஒடனே பக்கத்துல இருந்த ஒரு ப்ரோக்கர கூப்ட்டு ஹெல்ப் பண்ண சொன்னாரு!! அங்க எல்லாருமே அரசு அங்கீகாரம் பெற்ற கைடுன்னு ஒரு ஐடி கார்டு வெச்சிருக்காங்க. நாங்க அவர் கூட போனோம். ஏரி கிட்ட, ஒரு மேட்டுல விக்னேஷ் கெஸ்ட் ஹவுஸ் னு ஒரு எடத்துக்குக் கூட்டினு போனாரு. அவர் எங்களுக்காக எண்ணூறு ரூபால ஆரம்பிச்சு, அப்பறம் நாங்களும், கூட வந்த ப்ரோக்கரும் கேட்டுக்கொண்டதற்காக ஒரு நாளைக்கு நானூறு ரூபான்னு ஒரு ரூம காமிச்சார். பாத்தோம். ஓகே சொன்னோம். பல்ல தேச்சு, குளிச்சு வெளில கெளம்பியாச்சு.
என்னென்ன பாக்கனும்னு லிஸ்ட் இருக்கு. ஆனா எப்டி போறது. ஆட்டோ, பஸ்ஸு கெடையாது. ஒன்லி டாக்ஸி. மினிமம் அம்பது ரூபாவாம். ஒரு ட்ரைவர்ட்ட எங்க லிஸ்ட காமிச்சோம். அவரு முன்னூறு ரூபா குடுங்க. இன்னிக்கு சில எடங்கள காமிக்கறேன்னு சொன்னாரு.
செட்டியார் பார்க்,
குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
ஒரு ஜெயின் கோவில்,
கரடி அருவி,
பேரிக்கா மரங்கள் இதெல்லாம் காம்ச்சிட்டு போட் க்ளப் கிட்ட உட்டாரு. எவ்ளவோ செலவு பண்றோம். இத பண்ண மாட்டோமான்னு நமக்கு நாமே தேத்திண்டோம். நல்லா தான் இருந்துது. குறை ஒன்றும் இல்லை. நல்ல டிரைவர், ஏசி காரு, அடிச்சுப் புடிச்சு அடஞ்சு, அடங்கி ஒக்காராம ரெண்டே பேரு.
செட்டியார்!! பேர் ராசி போல. எத தொட்டாலும் துலங்குது. பேங்க் ஆரம்பிச்சாங்க, பிஸ்நெஸ் பண்ணினாங்க, அழகழகா அரண்மனை மாதிரி வீடு கட்டினாங்க, சமுதாயத்துக்கும், சமயத்துக்கும் நெறையா தொண்டு பண்ணினாங்க, இந்த வரிசைல இந்த செட்டியார் பார்க். நாங்க போகும்போது ஒன்னும் நுழைவுக் கட்டணம் இல்ல. அருமையான, அழகான, அமைதியான எடம். ஊட்டி கார்டன், இல்ல அதைவிட அழகா. அவங்க வெட்டி போட்ருக்கற செடி குப்பையெல்லாம் வூட்டுக்காரம்மா பொக்கே பண்ணப் போறேன்னு எடுத்துனு வந்தாங்க. அடுத்தது குறிஞ்சி ஆண்டவர். முருகன் அழகுன்னு சொல்லனுமா. கோயிலோட ரெண்டு பக்கத்துலயும் பழனி வ்யூ, கோயம்புத்தூர் வ்யூ ன்னு காமிச்சாங்க. ரெண்டு ஊர்லேந்தும் வந்துருந்தா ஓரளவு புரிஞ்சிருக்கும். நமக்கு வளந்த, வாழற ஊர்லையே இன்னும் பாதி எடம் பக்கத்துலேந்து பாத்தாலே புரியல. தெரியல. அதுலெல்லாம் மனைவி கிரேட் (பொதுவா எல்லா பொம்பளைங்களுமே!!). புது அபீஸ் சேந்தா பாதி நாள் பஸ் மாறி ஏறது, ஸ்டாப் மாறி ஏறங்கறது, நம்ம வீட்டு சந்த விட்டு வேற சந்து மாறி சுத்தறது இதெல்லாம்தான் நான் மறக்காம பண்றது.
ஜெயின் கோவில் வர்ற வழில பேரிக்கா பறிச்சு போடற ஒரு எடத்துல நிறுத்தி, நாலஞ்சு பேரிக்கா வாங்கிக் குடுத்தார். என்னா பெரிசு. இதெல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்கலாம். கடிச்சா ஜூஸ் கொட்றது. ஒரு லாபத்தையும் எதிர்பாக்காத பூமி மாதா எந்த கலப்படமும் இல்லாம அவ கொழந்தைங்களுக்காக தரா இதையெல்லாம். நம்ம ஊர்ல வண்டில, இல்ல ஒரு கூடைல ஒவ்வொரு சாமானா எடுத்துப் போட்டுப்போமே, அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லெல்லாம் இதுல பாதி சைஸு பேரிக்கா (+ கடை வாடகை + கரண்ட் பில்லு + தப்பு தப்பா பில்லு போடற ஆளுங்க சம்பளம் + வண்டி வாடகை + யாரும் வாங்காம வீணா போற சாமான்களோட விலை + கடை பராமரிப்பு + லாபம்) இருபது ரூபா வரை இருக்கும். வாட் வரி, இதெல்லாம் வேற. ஜெயின் கோவில் நம்மூர்ல அங்கங்க புள்ளையார் கோவில் கட்டி இருப்பாங்களே, அந்த சைஸு. ஆனா எல்லாம் மார்பிள். குட்டியா, ஆனா க்யூட்டா இருந்துது.
அருவிங்க கோடைக்கானல், அத சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் குடி நீர். சில்லுனு வேற இருக்கும். அதுனால குளிக்காதீங்கன்னாரு ட்ரைவர் அண்ணா. சொல்றத கேக்கற பழக்கம்? கார நிறுத்தின எடத்துலேந்து ஒரு அம்பது அடி ஒத்தையடிப் பாதைல போணும். பாதைக்கு ரெண்டு பக்கமும் கரண்ட் ஃபென்சிங் (இரும்புத் தடுப்பு !!) போட்ருக்காங்க. கரடி வருமாம். சல, சலன்னு சத்தம். சிலு, சிலுன்னு காத்து. மனைவிய குளிக்க வேண்டாம்னு சொல்லிட்டு, துண்டக் கட்டிக்கினு டமால்னு தலைய வுட்டேன் கொட்ற தண்ணீல. சில்லுனு இல்ல ஜில்லுனு, ஹூஹூம். என்னவோ. மூச்சு நின்னுது ரெண்டு நிமிஷம். சொல்லவே இல்ல!! ஏற்கனவே ரெண்டு, மூணு பேர் குளிக்கறாங்க. சொல்லி இருக்கலாம். கேக்க மாட்டோம்னு தெரிஞ்சவங்களா இருப்பாங்க. கொஞ்ச நேரம் ஒரு பாறைல ஒக்காந்து யோசிச்சேன். கொஞ்சம் காலு, கொஞ்சம் கையி, கொஞ்சம் ஒடம்பு, அப்பறம் தலைன்னு நனைச்சிருக்கலாம். ஒடம்பு அந்த ஜில்லுப்புக்கு ரெடின்னு தெரிஞ்சதும் கொஞ்ச நேரம் குளிச்சேன். என்ஜாய் பண்ணினேன். என் நிலைக்கு வந்ததும் மனைவியவும் சும்மா கூப்ட்டு ஃபோட்டோ எடுத்துண்டோம். ட்ரைவர் தேடினு வந்துட்டார். பொன்னியின் செல்வன் பழவேட்டரையர் மாதிரி ஒரு பார்வை பாத்தார். பம்மினு வெளில வந்தோம். ஏரி கிட்ட போட் ஹவுஸ்ல விட்டுட்டு போனாரு.
போட்டிங் போற ஐடியா இல்ல. நெறையா போயாச்சு. வேற எங்கயும் இல்ல, இங்க மட்டும் தான் இருக்குங்கறத மட்டும்தான் அனுபவிக்கனும்னு ப்ளான். ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துனு அப்டி ஜெமினி, சரோஜா தேவி மாதிரி போலாம்னு பாத்தேன். ஒரு தொப்பி விக்கற அம்மா, "பள்ளத்துக்கு ஓட்டிட்டு போகும்போது அப்டி இருக்கும், ஆனா மேட்டுக்குத் திருப்பி அமுத்தும்போது வில்லன் தொரத்தறா மாதிரி நினைச்சினா தான் அமுத்த முடியும்னுட்டாங்க". கல்யாணத்துக்கப்பறம் நெறையா பொண்ணுங்க சைக்கிள் ஓட்றது இல்ல. வண்டிக்கு மாறிடறாங்க. என் மனைவி என்னை விட சூப்பரா, பொறுப்பா எக்செல் ஹெவி ட்யூட்டி ஓட்றா. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்துல பொறுப்பு. நான் சூப்பரா பின்னாடி ஒக்காந்துப்பேன்.
ரூமுக்கு வந்தாச்சு. மணி சாயந்தரம் ஒரு அஞ்சு, ஆறு இருக்கும். மழை கொட்டுது, ரூமுக்குள்ளயும்!! அட்டாச்சுடு பாத் ரூம்ல பாத்தா கொச, கொசன்னு மம்மி படத்துல வர்றா மாதிரி அட்டைப் புழு. வெயில் அடிக்கும்போது மட்டும் தங்கற ரூம் போல இருக்கு காஷ்மீர் தலைநகரம் மாதிரி. இன்னும் ஒரு நாள் ஓட்டனும். நாலு எடத்தப் பாக்கணும். இது ஒன்னும் சரி படும்னு தோணல. எல்லாருக்கும் யூகலிப்டஸ் தைலம், பேரிக்கான்னு பைல ரொப்பினு போலாம்னு பாத்தா, இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல புழுவா ரொம்பிடும் போல இருக்கு. மத்த இடங்கள் காஸ்ட்லி நம்ம பட்ஜெட்டுக்கு. புழுவா, பணமா எதுக்கு பயப்படறது.
பணத்த கொடுத்துப் புழுவ தொரத்த வேண்டியதுதான். அண்ணாவுக்கு ஒடம்பு சரி இல்ல, ஊருக்குப் போறோம், காலி பண்ணிக்கறோம்னு சொன்னோம். ஒரு நாள் வாடகை (400), ப்ரோக்கர் கமிஷன் (150) போக மிச்சம் 250 தரேன்னு அன்பா சொல்லி குடுத்தாரு. யூகலிப்டஸ் தைலம் வாங்கலாம்னு பேசிண்டோம். எனக்குத் தெரிஞ்ச எடம் இருக்கு, விலை கொறச்சு வாங்கித் தரேன்னு சொன்னாரு. நாங்க விசாரிச்ச எடத்த விட இருபது ரூபா ஜாஸ்தி. அவர் த்ருப்திக்கு ஒண்ணு, ரெண்டு வாங்கிண்டோம்.
ஓடினோம் நேர சிவப்ரியா ஹோட்டல்க்கு. ஒரு நான் ஏசி டபிள் பெட் ரூம் வித் அட்டாச்சிடு பாத்ரூம் வித் சுடுதண்ணி, தொலைபேசி ஒரு நாளைக்கு எண்னூறோ, ஆயிரமோ சொன்னார். ஒரு தடவ முடிவு செஞ்சுட்டா நம்ம பேச்சையே நாம கேக்க மாட்டோமே. புக் பண்ணியாச்சு. ரொம்ப அருமை, ரூம், ரிசெப்ஷன், சாப்பாடு (விலை, டேஸ்ட்), கவனிப்பு, ஜோர், ஜோர். மெட்ராஸ் ரத்னா ஸ்டோர்ஸுக்கும் இவங்களுக்கும் தொடர்பிருக்கு. மெனு கார்டுல "விசிட் அவர் ஷோ ரூம்"னு போட்ருந்துது. நல்ல வ்யூன்னு சொல்லி ஒரு ரூம் குடுத்தார். இதெல்லாம் பாரதியார்க்குக் கெடச்சிருந்தா இன்னும் பத்துப் பாட்டாவது எழுதி இருப்பார். தூங்கறவங்களுக்கு என்ன யூஸு.
வெளில போயி அரசு டூரிஸ்ட் ஆபீஸக்கண்டுபுடிச்சோம். மிச்ச எடத்தப் பாக்கறதப் பத்திப் பேச. அவங்க ஒன்னும் அரேன்ஜ் பண்றதில்லையாம். லோக்கல் டூரிஸ்ட் ஆளுங்கள்ல ஒருத்தர நம்பிக்கையானவர்னு கூப்ட்டு எங்க பாக்கி லிஸ்ட குடுத்தார். அவர் சரின்னு சொல்லி தலைக்கு (எல்லாத்துக்கும்தான்) இருநூறு ரூபா போல சொன்ன ஞாபகம். சரின்னு பணத்தக் குடுத்தோம். வண்டி அடையாளங்கள சொல்லி காலைல ஹோட்டல்லையே வந்து பிக் அப் பண்ணிப்பாங்கன்னாரு. அப்டியே கொஞ்ச நேரம் சுத்திட்டு கொஞ்சம் பழங்கள வாங்கினு ஹோட்டல்க்கு வந்தோம்.
டிபன ஒரு கட்டு, கட்டிட்டு ஒரு தூக்கத்தைப் போட்டோம்.
30.08.2008 சனிக்கிழமை, வெளிச்சம் கண்ணத் தட்டியது, தொறந்தோம். எந்த க்ளைமேட்லயும் குளிக்கறதுக்கு ரெண்டு பேருமே அஞ்சறதில்ல. என்ன என் மனைவி வெளில போய்ட்டு வந்தா, மாலைக் குளியல்னு ஜமாய்ப்பா. நமக்கு நம்மூர் புழுதிய அலம்பி உட்ரதுல அவ்ளோ இஷ்டம் இல்ல. மனசு வலிக்கும். இப்பப்ப அதுவும் ஆரம்பிச்சாச்சு. டிபனும் சாப்டாச்சு. அலங்காரமும் ஆச்சு. வண்டி வந்தபாடில்ல. ரூம பூட்டிட்டு போலாம்னா, ரூம் க்ளீனிங்னு வந்துட்டாங்க. ரிஷப்ஷன்ல ஒடனே நீங்க வேற ரூம்க்கு போங்க சார். வெயிட் பண்ண வேணாம்னு உதவி பண்ணினார். கலைச்சுப் போட்ட ரூம்க்கும், புது ரூமுக்கும் வித்யாசம் இருக்கத்தான் இருக்கு. நான் கொஞ்சம் பெரிசு. என்னோட ஜிப்பா இன்னும் பெரிசு. போன் பேசற போட்டோல, மலை ஏற்ர போட்டோல காஷ்மீர் தீவிரவாதி மாதிரி இருக்கு. டூர் வண்டி வந்தாச்சுப்பா.
ஒரு மணி, ஒன்றை மணி நேரம் லேட்டு. விரட்டி, விரட்டி எதையாவது ஒண்ணு, ரெண்ட விட்டு கூட்டினு வந்திடப்போறானோ. ஒரு பதினஞ்சு, இருபது பேர் ஒக்காரலாம். என்னடா இவ்ளோ எடத்துக்கு 200 ரூபா வாங்கறாங்கலேன்னு பாத்தேன். இதான் விஷயம். வண்டில ரெண்டு, மூணு லிஸ்ட் கார்டு. க்ரூப், க்ரூப்பா ஒவ்வொரு டூரிஸ்ட்காரனும் புக் பண்ணி, ஒரே வண்டில ஏத்தி விட்ருக்காங்க. இது இன்னொரு விஷயம். எந்த க்ரூப் லிஸ்ட்ல இருக்கற எடம் கட் ஆகப் போறதுங்கறது சஸ்பென்ஸ். எதையோ காமிக்க போறாங்கன்னு நெனைச்சா ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஒரு எடத்துல நிறுத்தி இன்னும் ரெண்டு பேர ஏத்திக்கறாங்க. அவ்ளோதான். வண்டி கெளம்பியாச்சு. ஆட்டு மந்தை இருக்கற எடத்த பாக்க வன அதிகாரிகள்ட்ட பர்மிஷன் வாங்கனும்னு ஒவ்வொருத்தர்ட்டயும் இன்னும் முப்பது ரூபா வாங்கினாங்க. வழக்கம் போல கொஞ்சம் முனுமுனுப்பு, எதிர்ப்பு. அப்பறம் குடுத்தாச்சு. ஒவ்வொருத்தரும் அறிமுக உரையாடி முடிந்தது.
கிரீன் வாளீ !! பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ,
கோல்ஃப் க்ரவுன்ட்,
டாப் லேக் வ்யூ,
சின்மயா மிஷனோட அனுமார் கோவில்,
பைன் ஃபாரஸ்ட்,
பாம்பாறு அருவி,
மகாலக்ஷ்மி கோவில்,
பூம்பாறை க்ராம வ்யூ,
பில்லர் ராக் வ்யூ,
குணா கேவ்,
ஷீப் ஃபார்ம் இதெல்லாம் தான் இன்னிக்குப் பாத்தது.
பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ போற வழி முழுக்க ஊர்த் திருவிழாம்போது வழில ரெண்டு பக்கமும் பலகாரம், பொம்மை, எவர்சில்வர் சாமான்னு கடை போடுவாங்கல்ல, அது மாதிரி ட்ரை ஃப்ரூட், தேன், மூலிகை, பழங்கள்னு கடைகள். தாண்டிப் போனா இரும்பு வேலி போட்ருந்தாங்க. தாண்டிப் போகமுடியாதபடி. ஆனா கொரங்குங்க குடும்பம், குடும்பமா இங்க, அங்கன்னு போயிட்டு வருதுங்க. ஒரே பனி மூட்டம். ஏதோ ஆயிரக் கணக்குல ஆழம்னு சொன்னாங்க. ஒன்னும் சுத்தமா தெரியல. ரெண்டு, மூணு வகைல பெறிக்க வாங்கிண்டு, சுட்ட சோளக்கருது வாங்கித் தின்னுட்டு, ரோட க்ராஸ் பண்ணினா கோல்ஃப் க்ரவுண்ட். சுத்தி வலை போட்டு மூடி இருக்காங்க. ஓட்ட வழியா பாத்தோம். நாலஞ்சு அடிக்கு புல்வெளி தெரிஞ்சுது. அப்பறம் பனிதான். கீழ விக்கற விலைய விட இங்க பேரிக்கா கொஞ்சம் சீப்தான்.
அடுத்தது டாப் லேக் வ்யூ. கீழ இருக்கற ஏரிய மேலேந்து பாக்கறோம். ஸ்டார் வடிவத்துல தெரியும்னார் கைடு. மிஸ்ட் ஃபார்ம் (பனி மூட்டமாம்) ஆய்டுச்சாம். ஏரிய சுத்தி மரங்கள் வேற. தெரிஞ்சத பாத்துட்டு கெளம்பினோம். அடுத்தது சின்மயா மிஷன் சார்புல இருக்கற ஒரு சின்ன ஆஞ்சனேயர் கோவில். சூப்பரா இருந்தார். பைன் ஃபாரஸ்ட், சினிமால வில்லன் ஹீரோயின துரத்துவாரே அந்த இடம். சூப்பரா இருந்துது. குதிரை ரைடு கூப்டாங்க. ஏறல. குதிரை அன்னிக்கு இருக்கற மாதிரிதான் இருக்கு. ஆனா ஏதாவது ஆச்சுன்னா, இன்னிக்கு இருக்கற ஆளுங்க அத எம்.ஜி.ஆர் மாதிரி தடுத்து நிறுத்தி அடக்குவாங்களாங்கறதில அவ்ளோ நம்பிக்கை. ஃப்ரஷ்ஷா கேரட் வித்தாங்க, வாங்கி சாப்டோம். ஜம்முனு இருந்துது. இங்க ஒரு க்ராமத்து க்ரூப் அவங்கள போட்டோ எடுக்க சொன்னாங்க. ரெண்டு, மூணு எடுத்து, அவங்க ஊருக்கும் ப்ரிண்ட் போட்டு அனுப்ச்சு வச்சாச்சு. ரொம்ப நன்றின்னாங்க போன்ல. உருப்படியா ஒரு வேல.
முப்பது ரூபா வாங்கிண்ட ஆட்டு மந்தை காமிக்கல. மேயற எடத்த காமிச்சாரு. அங்க ஆட்டுப் புழுக்க கூட இல்ல. டீமுக்கு கோவம் வந்தாச்சு. சரின்னு ட்ரைவர் நான் ஒரு ஹேர் பின் பெண்டு போட்டு வரேன். நீங்க இப்டியே கைடு கூட கீழ எறங்கிப் போங்கன்னாரு. சூப்பர் புல்வெளி. பசங்கள்லாம் குதிச்சு, பொரண்டு, ஒருத்தன் மேல ஒருத்தன் விழுந்து, வித விதமான கெட் அப்புல போட்டோ எடுத்துண்டாங்க. நாங்க கொஞ்சம் பேர் கைடு கூட நடந்து வந்தோம். வழில அவரு ரத்தம் குடிக்கற அட்டைப் புழுன்னு ஒன்ன காமிச்சாரு. புழு சைஸ் தாங்க. நம்ம ஊரு அட்டைப் பூச்சி போல இல்ல. கருப்புக் கலர்ல ஒன்னு, ரெண்டு இன்ச் நீளத்துல இருக்கும் மெல்லீசா. யாரும் சொன்னா கேக்க மாட்டேங்கறீங்கன்னாரு. ஆட்டம் போடற பசங்கள்ட ஒடனே இதப் பத்தி சொன்னோம். அவ்ளோதான். எல்லாப் பயலும் கீழ ஒடியாந்துட்டான்க. அவனவன் செருப்பு, கோட், ஜெர்க்கின், ஷூ எல்லாத்தையும் கழட்டி ஒதறினாங்க. அங்கங்க விழுந்துது. நாலஞ்சு பேருக்கு கால் விரல் சந்துல சத்தம் போடாம ரத்தம் சாப்டுனு இருந்துது. எல்லாம் க்ளீன் பண்ணினு கெளம்பினோம்.
பாம்பாறு அருவி. நமக்குத்தான் அது பெரிய விஷயம் இதெல்லாம். உள்ளூர் காரங்களுக்கு அவசரத்துக்கு அலம்பிக்கற எடம். கீழ கொஞ்சம் மோசமா இருந்துது. மலை மேல ஏறி கொஞ்ச தூரம் போயி என்ஜாய் பண்ணினோம். அடுத்தது மஹாலக்ஷ்மி கோவில். இப்பத்தான் கட்டினு இருக்காங்க கேரளா ஸ்டைல்ல. சின்ன, சின்ன சன்னிதி, பூட்டி இருந்துது. சுத்தி அருமையான காட்சிகள், எல்லாத்தையும் போட்டோ எடுத்துனோம். பூம்பாறை க்ராமம் டூர்னு சொல்லிட்டு, இந்த எடத்துலேந்து கீழ இருக்கற பூம்பாறை க்ராமத்த காமிச்சாங்க.
அடுத்தது பசங்க அமக்களம் பண்ணினதுக்காக திருப்பி கொஞ்ச தூரம் நடந்து போயி குணா குகைகளுக்கு போலாம்னு கூட்டினு போனாரு கொல்லைப் பக்கம் வழியா. ஒரு ஒன்னு, ரெண்டு கி.மீ நடந்தோம். அருமையான சூழ்நிலை. பனி மூட்டம். அடர்ந்த மலைக் காட்டுக்குள்ள ஒத்தையடிப் பாதைல போறோம். வழில ராக் பில்லர் காமிச்சாரு. மலைகளே நாலு தூண் மாதிரி இருக்கு இயற்கையா. எங்களுக்கு ரெண்டுதான் தெரிஞ்சுது. மிஸ்ட்!! குணா குகைகளுக்குப் பேரு டெவில்ஸ் கிச்சன்னு வைச்சிருக்காங்க. நிறையா பேர் செத்துப் போயிருக்காங்க, காணாம போயிருக்காங்களாம். ஒடம்பு கூட கெடைக்காதாம். கல்வெட்டு கூட வெச்சிருந்தாங்க. ஷூட்டிங் நடந்த எடத்துக்கெல்லாம் இப்ப போக முடியாது. தரைல, சுத்தின்னு எல்லா எடத்துலையும் கனமான இரும்பு வேலி. அப்பறம் என்ன? அவ்ளோதான். அவனவன் கைல இருக்கற லிஸ்டுல இத காமிக்கல, அத காமிக்கலன்னு பொலம்பினே வந்தோம். ஹோட்டல் கிட்ட எறக்கி விட்டாங்க கொட்டற மழைல. புண்ணியம் போங்க. ஆனா ஒரு விஷயம். இந்த வேன்ல நாங்க ஒவ்வொரு எடத்தையும் பாத்துட்டு, வண்டில ஏறி கதை, கதையா பேசினு வந்தோம். ரெண்டு ஜோடி மட்டும் காச குடுத்துட்டு, கண்டக்டர், ட்ரைன் கார்டு மாதிரி எங்கயுமே எறங்கவே இல்லையே. ரூமுக்கு வந்தாச்சு. நல்ல டயர்டு. ரூம்லேந்தே நைட்டுக்கு வேண்டிய டிபன ஆர்டர் பண்ணி சாப்டுட்டு தூங்கினோம்.
31.08.2008, ஞாயிறு. திருச்சிக்கு வீட்டுக்கு் லஞ்ச்சுக்குப் போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு நைட் பஸ் ஏறலாமா, இல்ல இன்னும் பாக்கி இருக்கற எடத்துல பாக்க முடிஞ்சத பாத்துட்டு, திருச்சிக்கு ஈவினிங் போயிட்டு நைட் பஸ் ஏறலாமா. ஒரு டாக்ஸி அண்ணாச்சி கிட்ட கேட்டோம். செண்பகனூர் ம்யூஸியம் காமிச்சிட்டு, லா ஸலேத் சர்ச்சுல விடறேன்னாரு. நூறோ, இன்னும் ஒரு அம்பதோ குடுத்த ஞாபகம். செண்பகனூர் ம்யூஸியம் ஒரு க்றிஸ்டியன் காலேஜ் மெயின்டனென்ஸ்ல இருக்கு. அரிய, பழைய விலங்குகள், பறவைகள்னு எல்லாத்தையும் பதப் படுத்தி வெச்சிருக்காங்க. மூணு ரூபா ட்க்கெட்டு, போட்டோ எடுக்கக் கூடாதுன்னாரு ரிஸெப்ஷன்ல இருந்த ஃபாதர் தாத்தா. சரின்னு சொல்லி உள்ள போயி பாத்தோம். கொஞ்சம் பேர் ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துண்டாங்க. நல்லா இருந்துது. அடுத்தது லா ஸலேத் சர்ச்சு. 1863 ல அடிக்கல் நாட்டப்பட்டது, இங்க ஒரு கோவில், ஃப்ரான்ஸ்ல லா ஸலேத்துங்கற இடத்துல அன்னை காட்சி கொடுத்த எடத்துல இன்னொரு கோவில். இதெல்லாம் அங்க வெச்சிருந்த கல்வெட்டுல போட்டுருந்துது.
பக்கத்துலயே கூக்கர்ஸ் வாக். சர்ச்சுலேந்து ஏரிக்குப் போக இந்த ஒத்தையடி குறுக்குப் பாதைய கூக்கர் கண்டு புடிச்சாராம். இப்ப நாலஞ்சு பேர் நடக்கற அளவு டைல்ஸ் போட்டு, என்ட்ரன்ஸ், கேமிராக்குன்னு காசு வாங்கினு உட்றாங்க. இயற்கை எடம் குடுக்கற வரைக்கும் நம்ம எக்ஸ்டெண்டு பண்ணினே இருப்போமே. அது எதிர்ப்பு தெரிவிக்கும் போது பாத்துப்போம், இருந்தா!! அப்டியே நடந்து வந்தா ப்ரெயின் பார்க் கிட்ட கொண்டு வந்து விடறது அந்த பாதை. இது செட்டியார் பார்க் இல்ல. கவர்மெண்ட்டோடது. அவங்க ஆபீஸ் மாதிரியே இருக்கு. கோடைக்கானல்லயே செடி, மரம் அதிகம் இல்லாத இடம் இது. எதோ வேலை பார்த்துக் கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்காங்க இங்க. ஒரு போதி மரம் இருக்கு இங்க. அதுக்குக் கீழ சின்னதா ஒரு புத்தர் சிலைய வெச்சிருக்காங்க.
கவர்மெண்ட்டும் முன்ன மாதிரி இல்ல இப்பெல்லாம். சும்மா சாப்ட்டா திட்டு வாங்கறோம், மாட்டிக்கறோம் தெரிஞ்சிருக்கு. அதுனால புதுசு, புதுசா ஏதாவது வேலைய உண்டாக்கி எல்லாரும் எடுத்துண்டது போக திட்டத்துக்கு எவ்ளோ தேவைப்படும் கணக்குப்பாத்து நிதி ஒதிக்கித் தான் இப்பெல்லாம் ஆரம்பிக்கறது. நமக்கும் ரோடு (பின்னாடியே அத ஒடைக்கறதுக்கு கார்ப்பொரேஷன், ஈ. பி காரங்க, குடிநீர் வாரியம் ஆளுங்க, போன் ஆளுங்க,...) சாக்கடை வசதி (அப்பப்ப திறந்து இருக்கும் சூடு ஆறுவதற்காக, மழை காலத்துல இதுலேந்தும் தண்ணி வெளில வரும்), லைட் (டோல்கேட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும் கொஞ்ச தூரத்துக்கு, புதுப் பாலங்களுக்கு), பே அண்டு யூஸ் டாய்லெட் (சுத்தம் நாமளும் பண்ண வேண்டாம், அவங்களும் பண்ண மாட்டாங்க), நடைபாதை, (நடைபாதைக் கடைகள்), சிங்காரச் சென்னை 1950, 55, 60,65...இப்போ சிங்காரச் சென்னை 2010, புதுப் பாலங்கள்னு, ப்ளாஸ்டிக் சேர் மேல பெட்ஷிட் போட்ட மிதவை, சொகுசு, தாழ்தள, தங்கப் பேருந்துகள் (இரும்புல இருந்தா கொளுத்தும்போது த்ருப்தியா எரிய மாட்டேங்குதாம்), இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்துல ரெண்டு, மூணு ரூபாய் டிக்கெட்டுக்கு பஸ் (மதியம் 12 மணிலேந்து மாலை ஒரு 4 மணி வரை இந்தப் பேருந்துகள நீங்க பாக்கலாம்) நெறையா வசதிகள்.
மொழி, ப்ராந்திய, தேசியப் ப்ரச்சினைகள், தீவிரவாதம், விலைவாசி, புதுப் புது வ்யாதிகள் ஜாஸ்தி ஆயினே இருக்குன்னு நாம ஸ்டேட் கவர்மெண்ட் கிட்ட சொல்ல, அவங்க மத்திய அரசு கிட்ட சொல்ல, அவங்க ஐ. நா சபைல சொல்ல, அவங்க அமெரிக்கா, ப்ரிட்டன் கிட்ட சொல்ல, அவன் நிலால தண்ணி இருக்கா, புதுசா எதாவது க்ரகம் கிடைக்குதான்னு பாத்துட்டு வரேங்கறான். வெயிட் பண்ணுவோம், ப்ளீஸ். இல்ல நாமளும் இந்த தேசிய நீரோட்டத்துல கலந்துனு நம்ம பங்க ஆற்றுவோம், எடுத்துப்போம்
இதாம்பா டூர். 31ம் தேதி திருச்சி போயிட்டு, நைட் கெளம்பி மறுநாள் ரெஸ்ட் எடுக்க ஆபீஸ் வந்தாச்சு. ரொம்ப பிசி. அப்பறம் பாப்போம்.
ஜய் ஹிந்த்! ஜய் ஸ்ரீராம்!!
Subscribe to:
Posts (Atom)