Jul 7, 2017

பாண்டிச்சேரி டூர்

17 ஜூன் 2017, சனிக் கிழமை.

பாண்டிச்சேரில ரெண்டு நாளைக்கு என்ன இருக்கு, பீச், மணக்குள வினாயகர், பக்கத்துல ஸ்ரீ அரவிந்தர் ஆச்ரமம்.  மொத்தம் 4 மணி நேரம் போறாதா,  வேற எதையாவது இந்த டூர்ல சேக்கமுடியாதா ன்னு இன்டர்னெட்ல சிவன் கோவில்களைத் தேடி கொஞ்சம் சேர்த்துண்டது தான் இந்த டூர்.  பெஸ்ட்.

1.  மதுராந்தகம்:  இப்பயும் காலை 6.30 மணிக்குப் போனோம், போன தடவை ராத்திரி 8.10 க்குப் போனோம்,  மூடியே இருக்கு ஏரி காத்த ராமர் கோவில்.  எப்ப தரிசனம் கிடைக்கும்னு தெரியல.  என் பையன் பேரும் ராம ஶர்மா.  கோவில் வாசல்ல அவன பாத்துட்டு, கோபுர தரிசனம் பண்ணிட்டுக் கெளம்பினோம்.

இந்த தடவ, மனைவி இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் செஞ்சு கைல எடுத்துண்டு வந்திருக்காங்க,  அதனால எப்ப வேணும்னாலும் சாப்டுக்கலாம்னு அடுத்த ஊருக்குப் பயணமானோம்.    ஆஸ்தான ட்ராவல்ஸ், ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர், ட்ரைவர் டைசன்,  பாண்டிச்சேரி தானேன்னு எட்டியோஸ் காரையே இன்டிகா ரேட்டுக்குக் கொண்டு வந்திட்டார்.  8 ₹ கி.மீக்கு, 250 கி. மீ மினிமம் பயணிக்கனும் ஒரு நாளைக்கு,  இல்லாட்டியும் அதுக்கான காச குடுத்துடனும், ட்ரைவர் பேட்டா 350 ₹ ஒரு நாளைக்கு.

2. அச்சிறு பாக்கம்:   தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி அப்டீன்னு மூணு அசுரப்பசங்க, பயங்கரமா தவம் பண்ணி, இரும்பு, வெள்ளி, தங்கத்துல நினைக்கற எடத்துக்குப் பறக்கற ஊர் கேட்டு வாங்கிட்டாங்க,  இந்த மூணு ஊரும் ஒரு எடத்துல சேரும் போது ஒரே ஆயுதத்தால மூன்று புரங்களையும் அழிச்சா தான் நாங்க அழியனும்னும் வரத்த வாங்கிட்டாங்க.  அவ்ளோதான், ஒருத்தர விடாம எல்லா உயிர்களையும் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி ரொம்ப அராஜகம் பண்ணிட்டு இருந்தாங்க.  தேவர்கள், முனிவர்கள்னு எல்லாரும் யாராலயும் இவங்கள ஒன்னும் பண்ண முடியல, நீங்க தான் எங்களக் காப்பாத்தனும் நமஸ்காரம் பண்ணினாங்க.  அவரும் ஒரு தெய்வீகத் தேர்ல கெளம்பினார்.  தேர்ல குறை, நேரத்துல குறைங்கறது கவனிச்ச பிள்ளையார பூஜிக்கவே இல்ல,  தேர் அச்சு முறிஞ்சுது,   தேர் சக்ரங்கள்ல அச்சாணியா இருந்த வாயு மற்றும் அக்னி தேவதைகளை, மஹாவிஷ்ணு தண்டாக இருக்கும் அம்போட பின்பக்கத்துலயும், முன்பக்கத்துலயும் இருக்கப் பண்ணினார்.  காஷ்டை, முஹூர்த்தம் ன்னு நேரத்தைக் குறிக்கும் தேவதைகளைத் தேர்ச் சக்ரங்களுக்கு அச்சாக இருக்கச் சொன்னார்,   ஸ்வாமியும் பிள்ளையார பூஜை பண்ணிட்டு புறப்பட்டுப் போயி சண்டைல ஜெயிச்சார்.  அந்த அச்சு முறிச்ச வினாயகர் சன்னதி சிவன் கோவில் ராஜ கோபுரத்துக்கு எதிர்க்க சின்ன கோவிலா இருக்கு,  ராஜ கோபுரத்துக்கு எதிரில் நீரில்லா குளம், தேரடி.  ஸ்வாமி ஆட்சீஸ்வரர்,  பாடல் பெற்ற ஸ்தலம்.   சூப்பர் கோவில்.



3. மைலம் முருகன் கோவில்: மயில் சத்தம் எங்க பாத்தாலும், 7-8 மயில்களையும் பாத்தோம்.  30-50 படிகள் இருக்கும், மலை மேல ஏறி, இறங்க தனித் தனி ரோடுகள் போட்டிருக்காங்க.  20₹ அதுக்கு டிக்கெட்.  கும்பல் விசேஷ நாட்கள்ல இருக்கும் போல,  முருகன் சன்னிதில தூரத்துலேந்தே தரிசனம் பண்ண சௌர்யமா படிக்கட்டுகள் அமைச்சிருக்காங்க.  ரொம்ம அமைதியா, ரம்யமா இருந்துது கோவிலும், கோவிலைச் சார்ந்த இடங்களும்,  ஃப்ரீ டாய்லெட் கோவிலுக்கு வெளில இருக்கு தனித்தனியா, க்ளீனா, தண்ணி வசதியோட.  பொம்மபுரம் (ப்ரஹ்மபுரம்) ஆதீன ஸ்வாமிகளோட பராமரிப்புல இருக்கு இந்தக் கோவில்.  ஸ்வாமிகளும் தீபாராதனையின் போது சன்னிதில இருந்தார், அவரையும் தரிசிச்சோம்.



4. திருவக்கரை:  பாடல் பெற்ற ஸ்தலம்.  சந்த்ரஶேகரர் ஸ்வாமி பேர்.  லிங்கத்துலயே மூன்று முகங்கள் புடைப்புச் சிற்பமா மூலஸ்தானத்துல இருக்கார், மும்மூர்த்தி ஸ்வரூபம்னு குருக்கள் சொன்னார்.  திருவானைக்காவல் அகிலாண்டேஶ்வரி அம்பாள் சன்னதி கிட்ட இருக்கற வாசல் வழியா வெளில வந்தா, அங்க எதிர்க்க வேதபாடசாலை இருக்கு,  அதுக்குள்ள பஞ்ச முகேஶ்வரர் (அஞ்சு முகங்களோட) இதே மாதிரி தான் இருப்பார்.  ஒவ்வொரு முகத்தையும் பார்க்க ஜன்னல் இருக்கும்.  தரிசனம் பண்ணினோம்.

- துர்முகி ன்னு ஒரு ராக்ஷஸி,  அம்பாள் எட்டுக்கையோட காளி ரூபத்துல அவ கூட சண்டை,  அவ கர்ப்பமா இருக்கறத பார்த்த அம்பாள் கருணையோட அந்தக் குழந்தைய அவள்டேந்து எடுத்து, தன் காதுல குண்டலம் மாதிரி போட்டுண்ட்டு, அவள மட்டும் அழிச்சா இந்த ஸ்தலத்துல.  அந்த அஷ்ட புஜ வக்ரகாளிகாம்பாள பக்கத்துலேந்து பாத்தோம்.   பின்னாடி இருக்கற சுதைல இந்த உருவம் அழகா தெரியறது.

இப்பெல்லாம் பாடல் பெற்ற சிவன் கோவில்லல்லாம் கூட பெரிசா ஒண்ணும் கும்பல் இல்ல, ப்ரதோஷ காலத்துல கொஞ்சம் பேர் வராங்க.  இந்த மாதிரி பணம் குடுக்கிற பெருமாள், படிப்பு குடுக்கற ஹயக்ரீவர், நமக்கு எதிரா இருக்கறவங்கள அழிக்கற உக்ரமான காளி, ப்ரத்யங்கரா, சரபர், க்ரஹ நிலைகள சரி பண்ற நவக்ரஹங்கள், எக்சிபிஷன், தீம் பார்க் கோவில்கள், கெடுபிடிகள் இருக்கற கோவில்கள் இப்படி ஏதாவது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் இருந்தா தான் சாமிக்கே கும்பல் வருது,  ஒன்னுமில்லாட்டி மினிமம் 10 அடிக்கு மேல ஒசரமாவாவது இருக்கனும்.  அலையட்டும், மனஸு அலைஞ்சு முடிஞ்சு அவங்களே சிவனேன்னு வருவாங்க. ! !  சுந்தரன், ஆசுடோஷ், சௌலப்யன்,  ஈசியா ஞாபகம் வெச்சுக்கறா மாதிரி லிங்க வடிவத்துலயும் வருவான்,  சித்தத்துல டான்ஸ் ஆடற அம்பலத்தரசனாகவும் வருவான்.

- இந்த ராக்ஷஸியோட அண்ணன் வக்ரனை அழிச்ச கோலத்துல மஹாவிஷ்ணு ப்ரயோகம் பண்ற ஸ்டைல்ல சக்ரத்தைக் கையில புடிச்சிண்டு இந்த கோவில் ப்ராகாரத்துல இருக்கார்.  பட்டர் அண்ணாவும் அன்பா துளசி, புஷ்பம், கேசரி ப்ரஸாதம் குடுத்தார்.  சாப்டு அங்கயே பைப்புல கை அலம்பிண்டோம்.

- பழமையான காலத்தில் புதைந்து அழிந்த மரங்கள் இந்த ஏரியால கற்கள், பாறைகளா மாறி அங்கங்க கிடக்கு,  அப்படி வலிமையான கரையைக் கொண்டதாலும், இதற்கு வக்கரைன்னு பெயர்.  கோவில்லேந்து ஒரு 1-2 கி.மீட்டர்ல இந்திய புவியியல் துறை இந்த கல்மரங்கள் நிறைந்த பூங்காவை பராமரிச்சிட்டு இருக்காங்க.  குழந்தைகள் நிச்சயம் போய், பார்த்து, தொட்டு தெரிஞ்சுக்க வேண்டிய இடம்.




5. சுத்தி, சுத்தி ஒரு வழியா பாண்டிச்சேரி வந்து சேந்தோம்.  வண்டிக்கு 300 ₹ க்குப் பெர்மிட் வாங்கிட்டு,  3-4 ஹோட்டல்கள் நெட், நேர்ல பாத்து, கேட்டு, பேசிப் பாத்தோம்.  மினிமம் 1500-2000.  நாங்க வர்றதுக்குள்ள பூஜை முடிஞ்சு பாண்டிச்சேரி ஸ்ரீ வேத புரீஶ்வரர் கோவில் நடை சாத்தியாச்சு.  அந்த கோவில் குருக்கள் அரசு அண்ணா தருமபுரம் சிவாகம பாடசாலைல படிச்சவர்,  சகஜமா பேசினார்.   மணக்குள வினாயகர் கோவில் யானை பின்னாடி தான் இருக்கு, கொஞ்ச நேரம் பாத்துட்டு, பக்கத்துல சற்குரு வெஜிடேரியன் ஹோட்டல்லயே தங்கிடுங்கோ.  நன்னா இருக்கும்னார்.  2500₹ 24 மணி நேரத்துக்கு, ஃப்ரீ வை-பை இன்டர்னெட், காலை காம்ப்லிமென்டரி பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  ரூம் அருமையா மெயிண்டெய்ன் பண்றாங்க,  சுகாதாரமா இருக்கு, வென்னீர், தண்ணீர், குடி நீர், கரெண்ட் ப்ரச்னை இல்ல, கார் பார்க்கிங் இருக்கு.  ட்ரைவர்ஸ் தங்க ஒரு ஹால் இருந்துது.  பாத்ரூமோட,  ஆனா அங்க பராமரிப்பு நல்லாவே இல்லைன்னார் டைசன்.  நாங்க லஞ்ச் முடிச்சிட்டு 2.00 மணி போல ரிசெப்ஷன்ல போயி நாங்க நாளைக்கு சாயந்தரம் 4 மணி போல தான் ரூம் காலி பண்ணுவோம்.  26 மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களான்னு ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  மேனேஜர் ஓகே சொல்லிட்டார்,  சென்ட்ரலைஸ்டு ஏசி,

நாலு மணிக்கு எழுந்து கோவில், பீச், ஷாப்பிங் போலாம்னு நெனைச்சோம்,  எழுந்திருக்கும் போது மணி 5.30.  ரெடியாகி, வேதபுரீஶ்வரர் கோவில் தரிசனம் பண்ணினோம்,  மதியம் ஒரு அரை மணி நேரம் போல மணக்குள வினாயகர் கோவில் லக்ஷ்மி யானை கூட விளையாடியாச்சு.  பாகன் அண்ணா நெறையா விஷயங்கள் லக்ஷ்மியோட டைம் டேபிள், என்னென்ன, எப்பப்ப, எவ்வளவு சாப்பிடும், முதுமலை யானைகள் முகாம் உபயோகமா இருக்கா, இது பரம்பரை தொழிலா, இல்ல யார் வேணும்னாலும் ட்ரை !! பண்ணலாமான்னு கேட்டுனே போனோம்,  அவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு.  இப்ப திருப்பி மணக்குள வினாயகர் கோவில் வாசல்ல யானை மேல என் பொண்ணையும், பையனையும் ஏத்தி வைச்சு சந்தோஷப்பட்டோம்.   பாஹுபலி பார்ட் 2 படம் வந்திருக்கு, பல போஸ்கள் அந்தப் படத்தோட சாயல்ல போட்டோஸ்ல பதிவாச்சு.  மணக்குள வினாயகர் வேதபுரீஶ்வரர் கோவில் மாதிரி இல்ல, கொஞ்சம் மாடல், லக்சுரி லுக்கு.  பாண்டிச்சேரி வி.ஐ.பி இல்ல, சும்மாவா.

பக்கத்துலயே அன்னை (அன்னை மிர்ரா அல்ஃபாஸா) ஆச்ரமத்துக்குப் போனோம்.  ஸ்ரீ அரவிந்தர் சமாதி, மேலயே அன்னை சமாதியும் உள்ளது,  குழந்தைகள் அனுமதி கிடையாது, ஃபோன் சைலண்ட்ல போட்டு கூட எடுத்துட்டுப் போகக் கூடாது,  ஆஃப் பண்ணி தான் எடுத்துட்டுப் போகனும், அப்படி, இப்படி நிற்கக் கூடாதுன்னு கொஞ்சம் பயமுறுத்தறாங்க.  ஃபாரினர்ஸ் இருக்கறதாலையோ என்னமோ தெரியல,  சமாதி தவிர வேறொரு இடமும் பார்வைக்கு இல்லை,  2-3 நிமிஷம் ஆச்சு, உள்ள போயி சமாதியை தரிசிச்சிட்டு வந்தோம்.  வறுகடலை வாங்கி சாப்டோம், இள நீர் குடிச்சோம்,  ரோடெல்லாம் அகலமே இல்ல, ரெண்டு பக்கத்துலயும் டூ வீலர், கார்ன்னு எல்லா எடத்துலயும் வண்டிகள் நிறுத்தி இருக்கு எல்லா இடத்துலயும்,  நம்ம ஊரா இருந்தா திடீர்னு ஒரு நாள் வந்து லாரில அள்ளிட்டுப் போயிருப்பாங்க, இங்க எப்படின்னு தெரியல.

6. வில்லியனூர் கோகிலாம்பா சமேத காமேஶ்வரர் கோவில்:  நல்ல குளம், நெறையா மீன்கள், பாத்துட்டு ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வந்தோம்.  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ இருக்கும்.  சத்குரு ஹோட்டல் காஸ்ட்லி,  மெட்ராஸ் சரவண பவன் ஆரம்பிச்சு வச்ச பழக்கம், தரம்ங்கிற பேர்ல காஸ்ட்லியா கொஞ்சூண்டு சாப்ட தராங்க இப்ப எல்லா ஹோட்டல்லயும்.  நாங்க வெளில ஒரு தரம் குறைந்த ஹோட்டல்லயே டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

18 ஜூன், 2017, ஞாயிறு

காலை வெஜிடேரியன் பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  நாங்க தான் முதல் ஆளா போயி, கடைசி ஆளா வெளில வந்திருப்போம்னு நெனைக்கறேன்.  ஜூஸ், பால், டீ, காபி, கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரட், பட்டர், ஜாம் (டோஸ்டருடன்!!), இட்லி, வடை, பொங்கல், வெஜிடபிள் ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி, கிழங்கு, சாம்பார், சட்னி வகைகள், தயிர்... நல்லா சாப்டோம்.  ஒன்னும் கெடுதல் பண்ணல.



7. திருக்காஞ்சி கங்கை வராக நதீஶ்வரர்:  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ குள்ள இருக்கு, வில்லியனூர் போயி போனோம் நாங்க.  மஹாவிஷ்ணு வராக அவதாரம் செஞ்சப்ப, அவர் கொம்பால கீறின போது தோன்றின நதி, அதனால வராக நதி,  அகஸ்த்யர் பூஜை பண்ணின இடம்,  இப்ப கும்பாபிஷேகம் ஆகி இருக்கு,  நேத்து ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சு,  இது ஊருக்குள்ள விசாரிச்சுப் போகனும், கோவிலும் திறந்திருக்குமான்னு சந்தேகம் தான்னு சொன்னாங்க, வில்லியனூர் கோவில்ல, அதான் காலைல வந்தோம்.  இப்ப கட்டியிருக்கற சன்னதிகள்ல அகஸ்த்யருக்கும் தனியா ஒரு சன்னிதி, அவர் கையில குட்டி சிவலிங்கத்தை வெச்சிட்டிருக்கார், பக்கத்துலயே மனைவி லோபாமுத்திரை.  குருக்கள் டீம் பொறுப்பெடுத்து நல்லா செய்றாங்க.

வெள்ளம் வந்த போது ஸ்வாமி இந்த கரைலயும், அம்பாள் எதிர்க் கரைலயும் சேந்திட்டாங்க,  அவங்களுக்கு அங்கயே விஶ்வ நாதர் புதுசா ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில், வராக நதீஶ்வரருக்கு  இந்தக் கரைல காமாக்ஷி, மீனாக்ஷி ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில்.  கோவிலுக்கு எதிர்ல இருக்கறவங்களுக்குக் கூட ஸ்வாமி பேர சொன்னா தெரியல.  சிவன் கோவில்னு சொன்னதும், தோ ! ! ன்னு காமிச்சாங்க.

தரிசனம் முடிச்சிட்டு சுண்ணாம்பாறு போட்டிங் போனோம்.  புதுவை அரசு நிர்வாகம், 200₹ ஒரு டிக்கெட், பொண்ணுக்கு 130 ₹. போட்டுல சூப்பரா போனோம், ஒரு 5-10 நிமிஷப் பயணம்,  ஒரு தீவுல பாரடைஸ் பீச்சுன்னு இறக்கி விட்டாங்க.  பீச்சு தண்ணி சூப்பரா இருந்துது,  நானும், பொண்ணும் நல்லா ஆட்டம் போட்டோம்,  கரைலயே ஓசில ரெண்டு, மூணு ஷவர் பைப் இருக்கு,  நல்ல தண்ணில குளிக்க,  திரும்பி அங்கயும் குளிச்சோம்.  வெஜிடேரியனுக்கு சாப்ட ஒன்னும் இல்ல.  வெயில்,  ஷவர் தண்ணி நல்லா இருந்துது, குடிச்சோம்.  பாட்டு போட்டு, மழையில நனையறா மாதிரி ஒரு ஏற்பாடு,  ரெண்டாளடி ஒசரத்துக்கு உள்ள பெல்ட்ல கட்டி, உருட்டிட்டு போக ஒரு பெரிய காத்தடைச்ச பந்து,  வேடிக்கை பாத்துட்டு இன்னொரு போட்டுல ஏறி இக்கரைக்கு வந்தோம்.  போகும் போது லோயர் டெக்கு, வரும் போது அப்பர் டெக்கு பயணம்.  சுத்தி தென்னை மரங்கள்.


எங்கள ரூம்ல சாப்டு, தூங்க வெச்சிட்டு, மனைவி நைஸா வெளில ஷாப்பிங் போய்ட்டு வந்திட்டாங்க,  ஏக குஷி.

9. இரும்பை மாகாளம்:  மாலை 4 மணிக்குக் கெளம்பினோம்,  பாண்டிச்சேரி பீச் ரோடு நான் சின்னப் பையனா இருந்தப்ப, அப்பா கூட போனது.  அப்பாவோட நண்பர் சின்னப்பன் மாமா வீட்டுக்குப் போயிருந்தோம்,  அவங்க எங்களுக்கு முழு பாத்திர செட்டும் புதுசா வாங்கி இருந்தாங்க, நாங்க அவங்க வீட்டு சமையல் சாப்பிடனும்னு.  ஊர் சுத்தி காமிச்சாங்க.  இப்ப பீச் ரோடு இன்னும் அகலம் பண்ணியிருக்காங்க.  கப்பல்ல மணலைக் கொண்டு வந்து கொட்டி, இன்னும் அகலம் பண்ணிட்டு இருக்காங்க.  சுண்டல் சாப்டு, சறுக்கு மரம் வெளையாடிட்டு, கப் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு கார்ல ஏறிட்டோம்.

கடுவெளிச் சித்தர் ஒரு சித்தர்,  அவர் தொண்டை நாட்டு (காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஏரியாக்கள்) சிவ ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்த போது, இந்த இடத்தில் வந்து தவம் செய்து கொண்டே இருந்தார்,  தவத்தின் உக்ரத்தால் மழையுமின்றி தவித்த மக்கள், மன்னனிடம் பயத்தால் முறையிட்டனர்.  மன்னனும் முனிவரை எப்படி தவத்திலிருந்து கலைப்பது என்று யோசித்து, கோவிலில் நாட்டியமாடும் தேவதாசியான வள்ளியிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தான்.  புற்றுக்குள் இருந்த முனிவர் தினமும் அவர் கையில் விழும் அரச இலையை மட்டும் உண்டு கொண்டிருப்பதைக் கண்ட வள்ளி, அதற்குப் பதிலாக மாவில் செய்த அப்பளங்களைத் தினமும் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.  நாளடைவில் உடல் கொஞ்சம் பெருத்த சித்தர், புற்று உடைந்து, தவம் கலைந்து எழுந்தார்.  மன்னனோடு, வள்ளியும், மக்களும் வறட்சியைப் போக்குமாறு வேண்ட, அவர் அருளால் மழை பொழிந்தது.

மன்னன் இதைத் திருவிழாவாகக் கொண்டாடி, கோவிலில் வள்ளியின் நடனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.  சித்தர் அவளை சிவ ஸ்வரூபமாகவும், நடராஜரின் நாட்யமாகவும் அனுபவித்து, லயித்திருந்தார்.  அப்போது அவள் காலில் இருந்து சிலம்பு கழன்று விழுந்தது,  உடனே பதறிப்போன சித்தர் ஓடிப்போய் மீண்டும் அதை எடுத்து அணிவித்து விட்டார்.  தாசியின் காலை சித்தர்  பிடித்ததும், பார்த்துக் கொண்டிருந்த மக்களும், மன்னனும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவரின் தூய்மையில், ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டு, கோபித்தனர்.  சித்தர் உடனே சிவனைப் பார்த்து உனக்கு நடந்ததெல்லாம் தெரியாதா ?  என்று ந்யாயம் கேட்டார்.  சித்தருக்காக மனம் குளிர்ந்த சிவபெருமான், மக்களிடமும், மன்னனிடமும் கோவம் கொண்டார்.  சிவ லிங்கம் மூன்றாகத் தெரித்து விழுந்தது.  உடனே தங்கள் தவறை உணர்ந்து அனைவரும் சித்தரிடம் மன்னிப்பு கேட்டனர்.  அவரும் அவர்களுக்காக உடைந்த பாகங்களை ஒன்று சேர்த்து, தாமிரப் பட்டையால் கட்டியுள்ளார்.  இன்றும் இந்த மஹா காளேஶ்வர் அப்படியே உள்ளார்.

இந்த கதைகளெல்லாம் கோவிலில் இப்போது அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  குருக்கள் அழகாக பூஜை செய்து வைக்கிறார்.   ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.





10. ஒழிந்தியாம்பட்டு:  இரும்பையிலிருந்து இந்த கோவில் அருகில் உள்ளது,  இதும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.  ராஜா வேட்டையாடும் போது மானொன்றைத் துரத்திச் சென்றார்.  அது ஓடி ஓடி ஒளிந்தது.  அப்படி ஒளிந்திருந்த போது அம்பை ஒரு முறை எய்தார்.  மான் மறைந்து இரத்தம் ஒழுக சிவ லிங்கமாக மாறியது.   அதுவே ஒளிந்தியாம்பட்டு என்று மருவியது.  வாமதேவர் என்ற முனிவர் இங்கு ஓரிரவு அரச மரத்தடியில் துயிலிருந்தார்.  மறு நாள் காலை, அயர்ந்து உறங்கியதை நினைத்து,  நமக்கு ஒரு நாள் இந்த மரத்தடியில் உறங்கியதே இவ்வளவு சுகமாக இருக்கிறதே,  இந்த இடத்தில் எப்போதும் சிவபெருமான் இருந்தால் அவருக்கு எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைக்க, அவருக்கு அருள்வதற்காக அரசலீஶ்வரராக ஸ்வாமி இங்கு தோன்றினார்.






11. மரக்காணம்: ஒழிந்தியாம்பட்டிலிருந்து க்ராமங்களின் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சேர்ந்தோம்,  ரோடு ஓஷன் ஸ்ப்ரே ரிசார்ட்க்கு எதிரில் போய் சேர்ந்தது.  மரக்காணம் பூமீஶ்வரர் கோவில் சோழர் காலத்தைச்  சேர்ந்தது.  வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை சிவ பூஜை செய்து விட்டு தான் சாப்பிடுவேன் என்றாராம்.  அவருக்காக சிவ லிங்கம் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த மரக்கால் (அளக்கும் கருவி) ஒன்றை கவிழ்த்து வைத்து, சிவலிங்கம் போல் செய்து, அவரை அழைத்து, பூஜையை முடித்து, உணவளித்தார்கள்.  அதன் பின் அந்த மரக்கால் அந்த இடத்தில் இல்லை,  ஒரு ஸ்வயம்பு சிவலிங்கம் தோன்றி இருந்தது அங்கு.  மரக்கால் காணோம் என்றது நாளடைவில் மரக்காணம் என்றானது.

தரிசனம் முடித்து தாம்பரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இரவு 10.00.  நாளை ஆஃபிஸ். பை பை.


Jul 3, 2017

வடலூர் டூர்

தங்கை வசுந்தரா தேவிக்குக் கல்யாணம் செய்து இன்றைய சூழலின் இயல்பின்படி வருடங்களுக்குப் பிறது குழந்தை பிறந்திருக்கான், சந்த்ரசேகரன்.  தாயும், சேயும் நலம்.  தர்மபுரி கிட்ட பெரியாம்பட்டி ங்கிற ஊர்ல பரம்பரை வீட்ல இப்ப மாமனார், மாமியார் கூட இருக்கா.  சொந்தத்துல தான் கல்யாணம்.  எங்களுக்கும் நாள் வித்யாஸத்துல ரெண்டாவது குழந்தை, ராம ஶர்மா பிறந்திருக்கான்.  அதனால் இன்னும் குழந்தைங்க ரெண்டு பேரும் பாத்துக்கல.  இப்ப அங்க போறது தான் முக்ய நிகழ்ச்சி, மத்ததெல்லாம் அத சுத்தி.

02 ஃபிப்ரவரி 2017, வியாழக் கிழமை, வழக்கம் போல ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர் பசங்கள்ட ஒரு இண்டிகா எடுத்தாச்சு.  ட்ரைவர் ஜெய், சின்னப் பையன், ஆனா ஸ்பீடு ப்ரேக்கர், ஹை வேஸ் னு எல்லாத்துலயும் பொறுப்பா ஓட்டினார்.  செல் நம்பர் தான் நாதஸ்வர வித்வான் மாதிரி மாத்திட்டே இருந்தாரு.  இன்னும் எங்கெங்க போறது, எத்தன நாள் ரெஸ்ட், எதுவும் ப்ளான் பண்ணல.    பூந்தமல்லி, வண்டிக்கு பெட்ரோல் போட்டு, மோட்டல் ஹைவே ல லஞ்ச் முடிச்சுட்டு,  மாலை 6 மணிக்கு வேலூர் ஸ்ரீ புரம் தங்கக் கோவில் தரிசனம் செஞ்சோம்.  கோமாதா பூஜை, அம்பாள் தரிசனம்னு ஒருத்தருக்கு 300₹ டிக்கெட் வாங்கினோம்.  நல்ல திமிளோட இருக்கற நாட்டுப் பசுவுக்கு வேத மந்திரங்களை சொல்லி அரை மணி நேரம் போல பூஜை.  முடிஞ்சு அம்பாள் தரிசனம்.  போன், பை எல்லாம் வெளிலயே கவுண்டர்ல வாங்கி வெச்சிக்கறாங்க.  மூலஸ்தானம், அதற்கடுத்த மண்டபங்கள்ல இன்னும் சிட்டுக் குருவிகள நெறையா பாக்க முடியுது,  போன ஜன்மத்துப் புண்யமா, இல்ல ரிஷி, முனிவர்களான்னு தெரியல!!, தங்க வேளைப்பாடுகளுக்கு நடுவுல இவங்க விளையாடல்கள், கீச்சுக் குரல்கள்,  ரம்யமா இருந்துது.  தங்க வீடு, அதுவும் ஓசில எல்லாருக்கும் கிடைக்குமா என்ன ?  மூலஸ்தானத்த சுத்தி இருக்கற தண்ணி குளத்துல நம்ம மக்கள் நெறையா காசு போட்டிருக்காங்க,  தங்கக் கோவில் அம்பாளுக்கே!!

சேலத்துல ஸ்ரீ சரவண பவன்ல டின்னர் முடிச்சோம்.  பெரிய ஹோட்டல் க்ரூப் சேலத்துல, ஏற்காட்டு மலைமேல இருக்கற ப்ராஞ்ச்ல பாத்தோம்.  இட்லிய ப்ளாஸ்டிக் பேப்பர்ல மாவு ஊத்தி செய்றாங்க.  கடை முழுக்க போர்டுகள்,  நாங்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தரமான பொருள்கள பயன்படுத்தி உணவு வகைகளத் தயார் பண்றோம்னு.   ப்ளாட்ஃபார்ம், தள்ளுவண்டில கடை போடறவங்க கூட துணி பயன்படுத்தறாங்க, இல்ல இட்லி குக்கர்ல எண்ணெய ஊத்தி பண்றாங்க.    புலம்பியாச்சு, ஓகே, நைட் ஏற்கனவே புக் பண்ணியிருந்தபடி ஓகேனகல் தமிழ் நாடு டூரிஸம் ஹோட்டல்ல போய், ரூம்ல தூங்கியாச்சு, க்ளீனா இருந்துது,  நைட் 11-12 ஆய்டுச்சு, குடி தண்ணி குடுக்கத்தான் அங்க, இங்க ஓடினாங்க.  பெரிய இடம், நூறு கார் கூட நிறுத்தலாம்.  நல்லா தூங்கினோம்.

03 பிப்ரவரி, 2017.  காலை அருவிக்குப் போனா தண்ணி கம்மியா இருந்துது,  பரிசல் 12 வயதுக்குள்ள இருக்கற குழந்தைகள ஏத்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க.  ஜென்ட்ஸ் குளிக்கற எடத்துல நல்லா தண்ணி கொட்டிச்சு, போயி நானும், பொண்ணும் ஆட்டம் போட்டோம்.  லேடீஸ் குளிக்கற எடத்துல பைப்புல வர்றா மாதிரி தண்ணி விடறாங்க,   தண்ணி கம்மியா இருக்குன்னு பரிசல்ல போறதையும் நிறுத்திட்டாங்க.  குளிக்க தண்ணி இல்ல, பரிசல் இல்ல, வெஜிடேரியன் ஹோட்டல் ஒன்னு கூட இல்ல மொத்த ஒகேனகல்ல.  ஸ்னாக்ஸ் வாங்கினா குரங்கு பிடிங்கிட்டுப் போய்டுச்சு, தணைவி கொஞ்சம் அப்செட்.  நான்வெஜ் கடைகள், மீன் வெரைட்டி தான் எங்க பாத்தாலும்.  100₹ க்கு மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் வாங்கினோம்,  தமிழ் நாடு ஹோட்டல் வாசல்லயே ஒருத்தர் நீட்ட வாக்குல சூப்பரா போட்டுட்டு இருந்தாரு.  நேத்து ராத்திரி சேலத்துல சாப்டது.  குழந்தை ஹோட்டல்லயே அட்ஜஸ்ட் பண்ணி இட்லி, தோசை சாப்டா.  இனிமே இங்க இருக்கக் கூடாது, நை ட் டின்னர் முழுச்சாப்பாடு ஆர்டர் குடுத்தாச்சு தங்கச்சி கிட்ட.  சரியான பசி, டிஃபன் வேண்டாம்னு சொல்லியாச்சு.

இந்த அருவிக்கு எங்கிருந்து தண்ணி வருதோ, அங்க எங்கயாவது போய்க் காவிரி ஆத்துல குடும்பத்தோட குளிக்கலாம்னா,  ஒரு இடமும் தெரியல.  அப்பறம் ஒருத்தர் கிட்ட நடந்ததெல்லாம் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  அவர் வீட்டுக்குப் பின்னாடியே கார மறைவா விட்டுட்டுப் போய்க் குளிச்சிட்டு வரச் சொல்லி, கதவத் திறந்து விட்டாரு.   வண்டிய அப்படியே விட்டுட்டு, அவர் வீட்டு பின்னாடி பாறைகளைத் தாண்டிப் போனோம்.  காய்ஞ்சி போன பாறைகளைத் தாண்டினா, ஒரு இருபது அடி அகலத்துக்கு காவிரியாறு அசைவில்லாம ஓடிட்டு இருந்துது,  இடுப்பளவு ஆழம், இழுப்பும் இல்ல, ஒண்ணும் இல்ல.  ஒரு மணி நேரத்துக்கும் மேல நல்லா ஆட்டம் போட்டோம்,  தண்ணிக்குள்ள மூழ்கி எண்ற வெளையாட்டு, தண்ணில பத்மாஸனம் போட்டு மெதக்கறது, ரொம்ப தூரம் மூழ்கிப் போறதுன்னு பல போட்டிகள் எனக்கும், என் பொண்ணுக்கும்.  முடிச்சு தண்ணிலேந்தே சந்த்யாவந்தனம்,  மாத்யாஹ்னிகம் (சூரிய பூஜை) செஞ்சு முடிச்சேன்.  அண்ணாதுரை ன்னு என் நண்பர் பக்கத்துல தான் ஊர்,  இப்போ காக்னிசன்ட்ல வேலை பாக்கறார்.  அவர் இங்க ஒன்னு, ரெண்டு இடங்களை சொல்லி இருந்தார்.  அதன் படி முதலைப் பண்ணைக்குப் போனோம்.  நம்ம வண்டலூர் பூங்கா, இன்னும் சில இடங்கள்ல இருக்கிற மாதிரி சிலையா இல்லாம கொஞ்சம் நகர்ந்து காண்பித்தன.  சைஸ் வாரியா, ஜாதி வாரியா வகைகள்.  தண்ணி கஷ்டம் கொஞ்சம்.  ஆனா ரொம்ம பக்கத்துல, கைக்கு எட்டற தூரத்தில்,  நமக்கும், அவைகளுக்கும் நடுவுல கம்பி, கண்ணாடி வேலி தான், ரொம்ப பக்கத்துல பாத்தோம்.  பக்கத்துல மீன் பூங்கா ஒண்ணும் இருந்துது.  5₹ டிக்கெட்.  மொத்தம் 2-3 மீன் தான் இருந்தது.  20-30 வெரைட்டி இருக்கும்னும், இப்ப இல்லன்னும் சொன்னாங்க.    அவ்ளோதான் ஒகேனகல் டூர்,  வந்த டயர்டுக்கு ரூம்லயே தூக்கம் போட்டோம்.  நா மட்டும் மதியம் ஒரு 3 மணி போல எழுந்து திரும்பவும் ஃபால்ஸ்ஸுக்குப் போயி, ஒரு மணி நேரம் சரியான குளியல், பூஜைகள்.    ராத்திரி சாப்பாட்டுக்கு பெரியாம்பட்டிக்குக் கெளம்பிட்டோம்.  வெளியே வர்ற வழில போலீஸ் நிறுத்தி, ட்ரைவர் போதைல இருக்காரான்னு செக் பண்றாங்க.  நம்ம பசங்கள்ட அந்த பழக்கம் எல்லாம் கிடையாது.  இன்னொரு க்ரூப்ப திரும்பவும் ஊருக்குள்ளயே அனுப்பிச்சிட்டாங்க.  நாங்க கெளம்பிட்டோம்.  இன்னும் மோடிஜீ யோட செல்லாக்காசுத் திட்டத்தோட பாதிப்பு குறையல.  பெரியாம்பட்டி ஏ.டி.ஏம் ல பணம் போட்ருக்காங்கன்னாங்க.  போயி நாலாயிரம் எடுத்துட்டு தங்கச்சி வீட்டுக்குப் போனோம்.  முழுச்சாப்பாடு, நல்ல வரவேற்பு.  சரியான தூக்கம்.

04 பிப்ரவரி 2017,  சனிக்கிழமை.  என் பையனுக்கும், தங்கை பையனுக்கும் ஒரே வயஸு, ரெண்டும் ஒரே அமர்க்களம்.   தங்கச்சி பொறுப்பா காலை டிஃபன், சாப்பாடு, பார்சல்னு தூள் கெளப்பிட்டா.  அத்தங்காவுக்கும், அத்தானுக்கும் நாங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.  எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்துக் குடுத்தாங்க.  திரும்பவும் வந்து, தங்கிட்டுப் போகச் சொன்னாங்க.  ரெண்டு பேருமே இன்னும் எங்க வயஸுப் பசங்க மாதிரி நல்லா நட்பு பாராட்டினாங்க.  மாப்ளை ஹிமாலயா ப்ராடக்ஸ்ல அதிகாரியா இருக்காரு.  அப்பா, பையனுக்கு ஊருக்குள்ள நல்ல மரியாதை,  எல்லா வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், ஐயப்ப பூஜைகளுக்கும் இவங்க தான் அங்க எல்லாமே.   தொடர்ந்து ஐயப்ப மலைக்குப் போறவங்க.  மாப்ளையும் எங்க கூட வந்தாரு.  அவர் கார சேலத்துல சர்வீஸ்க்கு விட்டிருந்தாரு.  சேலம் வரைக்கும் அவரே ஓட்டிட்டு வந்தாரு.  ட்ரைவர் ஜெய்க்கு ரெஸ்ட்டு,  பொதுவா வண்டிய யாருக்கும் குடுக்க மாட்டாங்க ட்ரைவர் எல்லாரும்.   பழக்கத்தால நம்பி குடுத்தாரு ஜெய்.  மாப்ளையும் அவர் நம்பிக்கைய காப்பாத்திட்டாரு.  அவர சேலத்துல எறக்கி விட்டுட்டு, நாங்க ஏற்காட்டுக்குப் போனோம்.  வீக் எண்டு,  ரூம் ஒன்னும் உருப்படியா கெடைக்கல,  மனைவி மெனக்கெட்டு இன்டர் நெட்டுல தேடி, ராயல் ரிசார்ட் ன்னு ஒரு எடத்தக் கண்டு பிடிச்சாங்க.  1000₹ ஒரு ஏசி டபுள் ரூம் 24 மணி நேரத்துக்கு.  நல்ல மேனேஜர்,  நல்ல சர்வீஸ் பாய்ஸ்,  போட் ஹவுஸ், சேர்வராயன் சினிமா தியேட்டர் கிட்ட தான் ரூம்,  வெஜ் சாப்பாடு வெளில சாப்டுக்கங்க சார் ன்னு மேனேஜர் ரிக்வெஸ்ட் பண்ணினாரு.  வெளிய ஒரு ரெண்டு ஒக்காந்துக்கறா மாதிரி ஊஞ்சல் போட்டிருக்காங்க.  நாங்க செட்டிலாயிட்டு,  தங்கச்சி குடுத்திருந்த பார்சல் எல்லாத்தையும் காலி பண்ணி, ஒரு குட்டி தூக்கம் போட்டோம்.  மாலை தெருப்பண்டங்கள் சாப்டுட்டு, பெடல் போட்டிங் போனோம்.  அந்த எடத்துக்குப் போக ஒரு டிக்கெட்டு, போட்டிங்க்கு தனியா ஒரு டிக்கெட்டு,  பெடல் போட்டிங் போகும் போதே கரைல புள்ளி மான்கள் வேடிக்கைப் பார்த்தோம்.   முடிஞ்சு 20 ₹ பஞ்சு மிட்டாய் குச்சில சுத்தி, சுத்தி ஃப்ரெஷ்ஷா ஒருத்தர் போட்டிட்டிருந்தார்.  2 வாங்கி சாப்டோம்.   போட்டிங் கரையிலயே ஒரு க்ரூப் டி-சர்ட்ல போட்டோ ப்ரிண்ட் பண்ணி சூடா தராங்க.  ஒரு டி-சர்ட் முன்னூறு ரூபாய்ன்னு ஞாபகம்.  ஒரு ஃபேமிலி போட்டோ புடிச்சி, ரெண்டு குழந்தைகளுக்கும் டி-சர்ட்ல ப்ரிண்ட் போட்டு வாங்கினோம்,  

நைட்டு சேர்வராயன் ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு,  ஒருத்தருக்கு 100 ₹ சேர்வராயன் த்யேட்டர்ல டிக்கெட்டு,  ஃபேமிலி ஷோஃபா போட்டு இருக்காங்க,  தனியாவும் சீட்டு இருக்கு,  எங்க வேணாலும் ஒக்காந்துக்கங்க சார்,  உங்க இஷ்டம்னு சொல்லிட்டாரு டிக்கெட் கவுண்டர்ல.   பெரிய த்யேட்டர்,  பகல்ல, சம்மர்ல ஏசி போடுவாங்க போல இருக்கு,  எங்களுக்கு இப்பவே குளிர் தான்,   சூப்பர் த்யேட்டர்,  வாரக்கடைசில டெய்லி 5 ஷோ போல இருக்கு.  படம் போடற வரைக்கும், இன்டர்வெல், படம் முடிஞ்சதும்னு அருமையா எம்.ஜி.ஆர் கொள்கைப் பாடல்கள் ஸ்பீக்கர்ல,  எங்க வீட்ல எல்லாரும் எம்.ஜி.ஆர் ஃபேன்ஸ், என் குழந்தைங்க உட்பட,  வீட்ல டெய்லி கேட்ட பாடல்கள இங்க த்யேட்டர் ஸ்பீக்கர்ஸ்ல கேட்டதும் சரியான குஷியாயிட்டோம்.  மொத்தமா த்யேட்டர்ல 50 பேருக்குள்ள தான் இருப்போம்.   போகன் படம் பார்த்தோம்.   ஏற்காடு போற எல்லாருக்கும் நைட் இந்த த்யேட்டர்ல ஒரு படம் ரெகமெண்ட் பண்றேன்.  நல்ல சூழ்நிலை,  நல்லா என்ஜாய் பண்ணினோம் ட்ரைவர், பசங்க எல்லாரும்.  நைட் ரூம்ல தூக்கம்.

05 பிப்ரவரி, ஞாயிறு,
- ஊட்டி, கொடைக்கானல் ஒரே கும்பல், போரடிச்ச இடம், போயி ரெஸ்ட் எடுக்கணும் நெனைக்கறவங்களுக்கு ஏற்காடு பெஸ்ட்,
- 28 ஹேர் பின் வளைவுகள்,  நல்ல க்ளைமேட், பழ வகைகள், வெஜ் சாப்பாட்டுக்கு உள்ளூர், அப்பறம் சேலம் ஸ்ரீ சரவணா மாதிரி ஹோட்டல்கள்.
- சேர்வராயன் பெருமாள் கோவில் (காலை 7-8 மணிக்கு திறப்பாங்க, ஒரு 10-20 அடி மலைக் குகைக்குள்ள போகனும்  இந்த பெருமாள் பேர்ல தான் இந்த ஊர், மலை எல்லாமே),
- ரஜினி தரிசனம் பண்ணின நாகலூர் ஸ்ரீ சக்ர மஹா மேரு கோவில் ! ! (மூலஸ்தானத்து கோபுரம் மேரு வடிவத்தில இருக்கு),
- தென் இந்தியால இங்க மட்டும் இருக்கற தேசிய தாவரவியல் பூங்கா (பொட்டானிகல் கார்டன், பூச்சி சாப்பிடற செடி, அப்படி, இப்படின்னு நெறையா இருக்கு),
- காபித் தோட்டங்கள், மிளகுக் கொடிகள், தொப்பு, தொப்புனு விழற காட்டு பலாக்கள், நார்மல் மழை, குளிர்.
- போட் ஹவுஸ், குழந்தைகள் விளையாட பார்க்
- போட் ஏரி ரொம்பினா ! ! தண்ணி வழிஞ்சு, கிள்ளியூர் அருவிங்கற பேர்ல விழுது.  நெறையா படிக்கட்டுகள் எறங்கிப் போகனும்,  சரியா இன்னும் டீம் ரெடியாகல, அங்க தண்ணியும் இல்ல, அதனால போகல.
- முக்யமான விஷயம், பொதுவா மொத்த ஊரும் 8 மணிக்குத் தூங்கிடும்,   நைட்டு சுத்தற கும்பலுக்கு, ஐ.டி கம்பெனில வேலை பாத்து, லேட் நைட் சாப்பிடற கும்பலுக்கும்.  டீ, பிஸ்கெட் கூட கெடைக்காது.

மதியம் லஞ்ச் சேலத்துல முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்திட்டு மறுநாள்  வேலைக்குப் போகனும்.   எங்க போறது,  கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தாண்டி வந்திட்டே இருந்தோம்.  அரசூர் ஜங்ஷன் ன்னு ஒரு இடத்துல போட்டாங்க ஒரு ட்விஸ்ட் என் துணைவி.  "வள்ளலார் கோவில் பாக்கனும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கோமே, இப்ப பாத்துட்டுப் போய்ட முடியாதா ?" ன்னாங்க.  வண்டி நின்றது. என் பொறியைத் தட்டி விட்டேன்.  எனக்கும் ரொம்ப வருஷமா, குழந்தையா இருக்கச்சேலேந்தே !! இப்டி இந்த ரூட்ல அடிக்கடி மெட்ராஸ்க்கு வந்திட்டு, வந்திட்டுப் போறோமே, வழில எவ்ளோ பாடல் பெற்ற ஸ்தலங்கள், இந்த சிவன் கோவிலையெல்லாம் எப்ப பாக்கப் போறோம்னு ஒரு ஏக்கம்.  இப்ப போனா வடலூர் வள்ளலார் கோவில் பாக்கவும் முடியாது.  மணி மாலை 5-5.30.  ஜெய் கிட்ட இன்னும் ஒரு நாள் போலாமா ன்னேன்.  அவரும் ஓகே சொல்லிட்டாரு.  அப்டியே ஒரு லிஸ்ட் ரெடி.  வண்டிய லெஃப்டுல விட்டோம்.  ஏற்கனவே ஒகேனகல், ஏற்காடு ரெண்டு ஊரு முடிஞ்ச்சுதா, ஒரு 5-10 கி.மீட்டர் குள்ள, திருவெண்ணெய் நல்லூர்.

3. திருவெண்ணெய் நல்லூர்:  ஒரு ஃப்ளாஷ் பேக், எப்பப்பாத்தாலும் சுடுகாட்டுல டான்ஸ், ஒடம்பு ஃபுல்லா அந்த சாம்பல், யானை, புலித் தோலுன்னு ட்ரெஸ், விஷப்பாம்புகள், மண்டை ஓட்டுல அலங்காரம், சடை புடிச்ச முடி,  தலைல எப்பப்பாத்தாலும் தண்ணி,  காளை மாட்டுல பவனி - இப்படி ஒருத்தர் இருந்தா மனைவிக்கு எப்படி இருக்கும்,  அதுவும் பணக்கார வீட்டுல பொறந்த பொண்ணு.  இதான் சிவன் நிலைமையும்.  அவரும் உலகத்துக்காக ஒரே ஒரு நாள் மஹாவிஷ்ணு மாதிரி ஸர்வ அலங்காரத்தோட அழகு பண்ணிட்டு கண்ணாடில போய்ப் பாத்தாரு.  அவர் அழகுல அவரே சொக்கிட்டாரு.  சுந்தரா, வா!! ன்னார், கண்ணாடில இருந்த பிம்பம் உருவத்தோட வெளில வந்துது.  இவர் திரும்ப தன்னோட பழைய அலங்காரத்துக்கே போய்ட்டார்.  சுந்தரர் சிவ கைங்கர்யம் பண்ணிட்டு இருந்தாரு.  ஒரு நாள் அவருக்குப் பெண்ணாசை அரும்பியிருக்குன்னு தெரிஞ்சிட்ட, சிவ பெருமான் பூலோகத்துல போய் இல்லற தர்மத்தை அனுபவிச்சுட்டு வா! ன்னு கட்டளை போட்டுட்டார்.  ஸுந்தரர் இனிமே இந்த மாதிரி நடக்காது, என்ன மன்னிக்கனும்னு கேட்க, சிவன் முடியாதுன்னுட்டார்.   உடனே சுந்தரர், சரி, நான் பூலோகத்துல பிறக்கிறேன்,   ஆனா நான் அங்க குடும்ப வாழ்க்கைல முற்படும் முன் நீங்க வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ளனும்னு வரம் கேட்டார்.  அப்படி அவரை பூலோகத்துல தடுத்தாட்கொண்டு அருளின ஊர் தான் இந்த ஊர்,  அதற்குச் சான்றாக அங்க சிலைகள், சுதைகள் எல்லாம் இருக்கு,  ஏ.பி. நாகராஜன் இயக்கியபழைய திருவருட்செல்வர் படத்துல இந்தக் கதைய சுருக்கமா, அழகா படமாக்கியிருப்பாங்க.  சுந்தரர் சிவனைப் பார்த்து "பித்தா! பிறைசூடி!!" ன்னு பாடின திருத்தலம்.  ப்ரதோஷ காலத்துல இந்த ஸ்தல தரிசனம் முடிஞ்சு, திரும்பி பண்ருட்டி, நெய்வேலி வந்தோம்.

வடலூர் இன்னும் போனதில்ல, அங்க தங்க, தூங்க, திங்க எல்லாம் வசதிகள் எப்படி இருக்கும், தரிசன நேரங்கள் எதுவும் தெரியல.  கோவில் தொடர்புக்கும் ஒரு நம்பரும் உருப்படியா இல்ல.  ஒழுங்கா பதில் கிடைக்கல.  நண்பர் ரகுனாதன் திருவேங்கடாச்சாரிக்கு நெய்வேலி தான் ஊர்.   இப்ப, இந்த போஸ்ட் போடறதுக்கு முந்தின வாரம் தான் கல்யாணம் ஆகி இருக்கு அவருக்கு, சென்னைல பிசினஸ் அனலிஸ்ட்டா இருக்கார்.  இன்டஸ்ட்ரி, வெவ்வேற டொமைன்,  கொஞ்சம் டெக்னாலஜின்னு மனுஷன் பூந்து விளையாடுவாரு.   அருமையா க்ளையண்ட்ஸ ஹேண்டில் பண்ணுவாரு.  ஒன்னு, ரெண்டு ப்ராஜெக்ட்ல அவர் கூட வேலை பாத்திருக்கேன்.   அவருக்கு ஃபோன் போட்டு ஐடியா கேட்டோம்.   அவரு நெய்வேலிலேந்து வடலூர் 10-15 நிமிஷம் தான்.  இங்கயே தங்கிட்டு காலைல அங்க போயிக்கலாம்னு சொல்லிட்டு, நெய்வேலிலயே ரெண்டு, மூணு ஹோட்டல் சொன்னார்.  போயி விசாரிக்கறதுக்குள்ள 10-20 நிமிஷத்துல அவங்க அம்மா கிட்ட பேசி, அவங்கள எங்களோட பேச விட்டுட்டார்.    நெய்வேலி டவுன்ஷிப்ல தனி வீடு,  வீட்ட சுத்தி முக்கனிகளுடன் தோட்டம்.   இங்க வந்திட்டு, எங்க போய், ஏன் வெளில தங்கனும்னு சத்தம் போட்டு, வீட்டுல வந்து தங்கிட்டுப் போக சொல்லிட்டாங்க.  கொஞ்சம் கூட முன்னறிவிப்பில்லாம, வெறுங்கையோட அவங்க வீட்டுல போயி தூங்கினோம்.  நைட்டு எல்லாருக்கும் குடிக்க பால், உபசரிப்புகள்.  தாத்தா எங்களுக்காக முழிச்சிட்டு இருந்து எங்களோட பேசிட்டுத் தான் தூங்கப் போனார்.  பாட்டி காலங்காத்தால எழுந்து பெருமாளுக்குப் பூஜை, ஶ்லோகம் எல்லாம்.   அப்பா காலைல தான் மதுரைலேந்து வந்தார், வரும்போது, குழந்தைகள் வந்திருக்குன்னு பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வந்திட்டார்.

06 பிப்ரவரி, 2017, திங்கட்கிழமை.

4. நெய்வேலி நடராஜர்:  ஐம்பொன்னாலான சிலைகளில் உலகில் பெரிய சிலைகளில் இங்குள்ள நடராஜர் சிலை குறிப்பிடத்தக்கது.  10 அடிக்கும் மேல் இருக்கும் ப்ரம்மாண்டமான நடராஜர் சிலை,  நெய்வேலி டவுன்ஷிப்ல இருக்கும் இந்தக் கோவில் இருக்கற ஏரியாவ சிவபுரம்னே அழைக்கின்றனர்.  63 நாயன்மார்களுக்குத் தனியா கோவில்.  காலங்காத்தால இப்படி ஒரு சிவ தரிசனம்.

5. வடலூர் வள்ளலார்:  நெய்வேலிலேந்து வடலூர் சத்ய ஞான சபைக்குப் போனா,  அங்க திருமுறை பாடிட்டு இருக்கறவங்க 11 மணிக்கும், மாலை 7 மணிக்கும் தான் நடை திறப்பாங்கன்னு சொன்னாங்க.  மணி இப்பத்தான் 9-9.30 ஆகுது.  ராமலிங்க அடிகள் காலத்துல வாழ்ந்த எங்க அப்பா வழி தாத்தாவும், அவரும் ரொம்ப நெருங்கின நண்பர்கள்.  எங்க தாத்தாவும் ரொம்ப ஆசார சீலர், வள்ளலார் அரூப வழிபாட்டுக்குப் போகும் முன் தான் பூஜித்த விக்ரஹத்த, தாத்தா கிட்ட கொடுத்துட்டு, பூஜையத் தொடர சொல்லிட்டுப் போயிருக்கார்.  இன்னும் எங்க வீட்டு பரம்பரை பூஜைல அந்த விக்ரஹம் முக்ய இடத்துல இருக்கு.   அதனால எங்களுக்கு வள்ளலார் மேல தனி இஷ்டம்.  அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம்ங்கிற ஊருக்குப் போனோம்.  3-4 கி.மீட்டர்ல இருக்கு அந்த வீடு,  அவர் த்யானத்துல இருந்து, சித்தி அடைஞ்ச ரூம் பூட்டி இருக்கு,  வருஷத்துல முக்ய நாட்கள்ல தான் திறக்கறாங்க.  அந்த நாட்கள் குறிச்சிருந்த காலண்டர் ஒன்னு 20₹, ரெண்டு வாங்கிக்கிட்டோம்.   இன்னும் ரெண்டு நாள்ல இந்த வருஷத்து தைப்பூசம், இந்த வீடு, அந்த சபைன்னு எல்லா இடமும் கோலாகலத்துக்குத் தயாராயிட்டு இருக்கு.  11 மணிவாக்குல திரும்பி சபைக்கு வந்தோம்,  பூஜை ஏற்கனவே ஆரம்பிச்சு நடந்திட்டு இருந்துது.  அடிகளார் முதல் கதவுகளைத் திறந்து வச்சு, அங்க இருந்த ஒரு அணையா தீபத்துக்குப் பூஜை, தீபாராதனை எல்லாம் பண்ணிட்டு இருந்தார்.  30 நிமிஷங்கள், இந்த பூஜைக்கே ஒரு 200-300 பேர் கூடி இருந்தாங்க.  ஆம்பள, பொம்பளன்னு நெறையா பேர் அடிகளார் கூடவே திருமுறைகளப் பாடிட்டு இருந்தாங்க.  பூஜை முடிஞ்சு எல்லாருக்கும் தூள் வெல்லம் ப்ரசாதமா குடுத்தாங்க.  வாங்கிட்டு, இன்டர்நெட், ஃபோன் எதுலயுமே சபை பூஜை காலங்கள் பத்தி நேரங்கள் சரியா கிடைக்க மாட்டேங்குது, கொஞ்சம் சரி பண்ணுங்க, எங்கள மாதிரி வெளியூர்லேந்து முதல் தடவ வர்றவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு சொல்லிட்டு வந்தோம்.

6. வ்ருத்தாசலம்:
- இந்த ஏரியால இருக்கற அருமையான பெரிய கோவில்
- ஊருக்கு ப்ரதானமா இருக்கு.
- வடலூர்-வ்ருத்தாசலம் ரோடு தைப்பூசத்துக்காக வழக்கம் போல டெம்ப்ரவரியா ரெடியாயிட்டு இருக்கு.  இப்படி எல்லாரையும் வாழ வைக்கறார் வள்ளலார் ! !
- வழி நெடுக மாமரங்கள் ரெண்டு பக்கத்துலயும்,  நெறையா மாவடு பொறுக்கி சாப்டோம்.
- அசலம் ன்னா மலை, வ்ருத்த - முதுமை,  எல்லா மலைகளையும் விடப் பழமையான தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்
- 18 படிகளுக்குக் கீழே இருக்கார் ஒரு பிள்ளையார் இங்க,  ஆழத்து வினாயகர் ன்னு.
- அருமையான சுதை, சிற்ப கோபுரங்கள்.
- சிவபூஜையில் முக்யமாக 28 முறைகள் உண்டு,  இங்கு அந்த ஒவ்வொரு முறைக்கும் ஒரு சிவன் என ப்ரதிஷ்டை செய்து, தகப்பனாரை வழிபட்டுள்ளார் வேலவர்.  அதற்கென்று தனி சன்னதியே உள்ளது பெயர்களோடு.
- ஆத்துல போட்டுட்டு, குளத்துல தேடின கதைன்னு ஒரு பழமொழி.  திருவாரூரில் கைங்கர்யம் செய்ய எல்லா இடத்துலயும் பொருள் வேண்டிப் பெற்றுக்கொண்டிருந்த சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள், இந்த ஊருக்கு வந்த போது, இந்த ஊர் ஸ்வாமி அவருக்கு ஆயிரக்கணக்குல பொன் குடுத்தார்.  சுந்தரருக்கு ஒன்னும் புரியல, இல்ல தலைகால் புரியல, ஒன்னு இது நெஜம்தானான்னு, இன்னொன்னு இத எப்படி திருவாரூர் வரைக்கும் திருடங்க கிட்ட மாட்டாம எடுத்திட்டு போறதுன்னு.   அப்ப திருடறதுக்குன்னு தனியாவே ஒரு கும்பல் இருந்திருக்கு!! ஸ்வாமி பிள்ளையார சாக்ஷியா வச்சிட்டு, தங்கத்தை உரசி, சுத்தத்தைக் காமிச்சார்,  மாற்றுரைத்த பிள்ளையார்னே இங்க ஒரு சன்னிதி இருக்கு.  திருடங்க ப்ரச்னைக்கும் ஸ்வாமி ஒரு வழி பண்ணி குடுத்தார்.  பக்கத்துல ஓடற மணிமுத்தாறு நதில அத்தனை தங்கத்தையும் போட்டு,  திருவாரூர் குளத்துல போய் எடுத்துக்கோ, அனுப்பிச்சி வைக்கறேன்னார்.   கொரியர், இல்ல கார்கோ !! அப்படியே செஞ்சார்,  அன்னிலேந்து வந்தது இந்த பழமொழி.

7. புவனகிரி: மாத்வ சம்ப்ரதாய முக்ய குருவான ஸ்ரீ ராகவேந்த்ரர் பிறந்த ஸ்தலம்.  அருமையா பழமை மாறாமல் வெச்சு, பராமரிக்கறாங்க.  தரிசனம் செஞ்சிட்டு, அங்கயே ஒரு ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சோம்.

8. பிச்சாவரம் தில்லை வனக் காடுகள்( மாங்க்ரோவ் ஃபாரஸ்ட், சதுப்பு நிலக் காடுகள், அலையாத்திக் காடுகள்):  இந்த தில்லை மரங்கள் நெறையா இருந்ததாலையே சிதம்பரத்துக்குத் தில்லைன்னு ஒரு பெயர்.   ரொம்ப அரிய காடுகள்,  இந்தியால ரெண்டு, மூணு எடத்துல தான் இருக்கு.  இந்தக் காட்டுகளுக்குள்ள போட்டிங் கூட்டிட்டுப் போறாங்க, தமிழக சுற்றுலாத் துறையினர்.  நாங்க துடுப்புப் போட்டுல போனோம்.  ஒரு மணி நேரம்னு நெனைக்கறேன்.  நல்ல அடர்த்தியான மரங்களுக்குள்ள பயணம்,   மருத்துவ குணம் கொண்டவை என 30, 40 க்கும் மேற்பட்ட தாவரங்கள், மரங்கள்.  வித, விதமான பறவைகள்,  இன்னும் கொஞ்சம் காசு, இன்னும் கொஞ்சம் தூரம்னு ஆசை காட்டினார் துடுப்பாளர்.  போனவரை போதும், குழந்தைங்க இருக்காங்கன்னு வந்துட்டோம்.  கோவில், கோவில்னு ஸ்தல புராணம் பாடினதுக்கு என் பொண்ணுக்கும் இந்த இடம் ஒரு த்ரில்லிங் அனுபவம்.

9. திருவதிகை:  கடலூர் ஏற்கனவே போயாச்சு, திரும்பி வந்த வழிலயே போனா திருவதிகை தரிசனம் பண்ணிட்டுப் போலாம்.  ஆனா மணி இப்பவே மாலை 4,  வேண்டாம், இன்னொரு சமயம் பாத்துக்கலாம்னுனு விழுப்புரம் நோக்கிக் கெளம்பினோம்.  பண்ருட்டி கிட்ட டேக் டைவர்ஶன், டேக் டைவர்ஶன்னு திருப்பித் திருப்பி விட்டிட்டிருந்தாங்க ஏதோ ரோடு வேலை நடக்குதுன்னு,  பாத்தா வழில திருவதிகை வீரட்டானேஶ்வரர் கோவில்னு போர்டு.  போட்டோம் ப்ரேக்க.
- பாடல் பெற்ற ஸ்தலம்
- அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்று (சிவன் கோபங்கொண்ட எட்டு இடங்கள்):  திரிபுர ஸம்ஹாரம் நிகழ்த்திய ஸ்தலம்.  தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களும் பெரும் தவத்தால் வரங்களைப் பெற்றனர்.  மனதால் நினைக்குமிடத்திற்கு உடனே பறந்து செல்லும் ஊர்களை  தங்கம், வெள்ளி, இரும்பால் முறையே அமைத்துக் கொண்டனர்.  இந்த திரி புரங்களும் சேரும் இமைப் பொழுதில், சிவனைத் தவிர வேறாராலும் அழிவில்லை என்ற இருமாப்பில் எல்லாரையும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு துன்புறுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.  தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் அவர்களை அவ்வாறே அழித்த இடம் இதுவே.
- மற்ற வீரட்டத் தலங்கள்: தஞ்சை கண்டியூர் - அகந்தை கொண்ட ப்ரஹ்மாவின் சிரத்தைக் கொய்த ப்ரஹ்ம சிர கண்டீஶ்வரர், விழுப்புரம் திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதைத்த வீரட்டேஶ்வரர், நாகை திருப்பறியலூர் (பரசலூர்)- தக்ஷன் தலையைக் கொய்த இடம்,  நாகை திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதைத்த இடம்,  நாகை திருவழுவூர் - தாருகா வனத்து முனிவர்கள் யாகத்தில் வெளிப்பட்ட யானையைக் கிழித்துக் கொன்று, அதன் தோலைப் போர்த்திக் கொண்ட கஜ ஸம் ஹார மூர்த்தி,, நாகை திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது, நாகை திருக்கடவூர் - காலனைக் காலால் உதைத்தது.
- சமண மதத்தில் தீராத வயிற்று வலியை,  திலகவதியார் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, அவரது தம்பி மருள் நீக்கியாருக்குத் (அப்பர், நாவுக்கரசர், வாகீசர்) தன் திருநீற்றால் தீர்த்து ஆட்கொண்ட ஸ்தலம்.

10. திண்டிவனம்: திந்திரி வனம் (புளியங்காடு) திரிந்து திண்டிவனம் என்றாயிற்று,  திந்திரிணீஶ்வரர்,

இந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் மட்டும் நைட் 8.15 க்குப் போனோம், பூட்டி இருந்துது,  அடுத்த டூர்ல காலை 6.30 க்குப் போனோம், பூட்டி இருக்கு,  பார்ப்போம்  எப்ப தரிசனம் கிடைக்கறதுன்னு.  மீண்டும் சந்திப்போம்.