Sep 22, 2009

பெங்களூர் A. R. ரமணி அம்மாள் பாடியவைகளில் சில

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம், பொம்ம பொம்மத்தா, முத்தான முத்துக்குமரா, பிள்ளையார் பிள்ளையார், ... இவையில்லாத கோவில் திருவிழாக்களே இருக்காது. நான் கேட்டு ரஸித்த அத்தகைய பாடல் வரிகளில் சிலவற்றை இதோ கீழே தந்துள்ளேன். 24 பாடல்கள், சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்டவை சேர்ந்து இருக்கும்.

1. ஆடு மயிலே, கூத்தாடு மயிலே
கதிர்காம ஸ்கந்தனைக் கூத்தாடு மயிலே (ஆடு)

அருகினில் நின்று அருள் புரியும் குஹன் - ஸ்கந்தன்
அருமையாய் அந்தரங்கத்திருக்கும் குஹன்
கருவிழி வள்ளிமானுக் குகந்த குஹன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் - ஸ்கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

மனமது கனிந்திடில் மருவும் குஹன் - ஸ்கந்தன்
கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் (காக்கும்) குஹன்
தனதென தான் பரிந்து பேசும் குஹன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

அருகினில் நின்று அருள் புரியும் குஹன் - ஸ்கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறும் அடியார்கள் குறை (வினை) தீர்க்கும் குஹன் - ஸ்கந்தன்
திருவடித் தாங்கி நின்று ஆடு மயிலே (ஆடு)

2. அகரமு மாகி யதிபனு மாகி
யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே

3. ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

உத்தர நாளில் அவதரித்தாய்
சத்ரு சம்ஹாரம் செய்ய வந்தாய்
சரவண பவகுஹ சோதரனே
சபரி மாமலையின் நாயகனே (ஐயப்பா)

கார்த்திகை நல்லநாள் மாலையிட்டு
மார்கழி நல்லநாள் கட்டும்கட்டி
பஜனை செய்வோம் வீர மணிகண்டா
பம்பையின் பாலனே சரணம் பொன்னையப்பா (ஐயப்பா)

விரதம் உனக்காக இருந்தேனப்பா
இருமுடி சுமந்தே வந்தேனப்பா
கல்லோடும் முள்ளோடும் நடந்தேனப்பா
சொல்லாலே உன்புகழை சொன்னேனப்பா (ஐயப்பா)

இருமுடி சுமந்து எரிமேலி வந்து
ஒருமனதாக பேட்டை துள்ளி
நண்பராம் வாவரைத் தொழுதுநின்று
சபரிமாமலையை நாடிடுவோம் (ஐயப்பா)

சரணம் சரணம் என்று கூவிவந்தோம்
படி பதினெட்டும் ஏறிவந்தோம்
மகர ஜோதியின் அழகினிலே
அப்பா ஐயப்பா உந்தன் எழிலைக் கண்டோம் (ஐயப்பா)


4. ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணமென்றே
ஐயப்பா சரணமென்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
மோஹினி பாலனென்றும் மோஹன குமாரனென்றும்
வில்லாளி வீரனென்றும் வீரமணி கண்டனென்றும் (ஐயப்பா)

பந்தள வீரனென்றும் பதினெட்டும் படியென்றும்
பக்தர்கள் தாசனென்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம் (ஐயப்பா)

காந்தமலை ஜோதியென்றும் காருண்ய மூர்த்தியென்றும்
கம்பங்குடி தாஸனென்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம் (ஐயப்பா)

பம்பாநதிக் கரையில் பக்குவமாய் நீராடி
பத்துஎட்டுப் படிகளேறி எட்டுபத்துப் படிகளேறி
ஒம்பதுரெண்டு படிகளேறி ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
எட்டுபத்துப் படிகளேறி பதினெட்டாம் படிகளேறி ஆனந்தமாய்க் கூப்பிடுவோம் (ஐயப்பா)


5. பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா (பொம்ம)

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா (திம்மிகிடுகிட)

அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா (பொம்ம)


6. கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் - முருகன்

தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
சாமியாக நின்றான்

பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்

7. குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் (குன்றத்திலே)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா வெற்றிவேல் முருகா ஹரோஹரா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா வடிவேல் முருகா (குன்றத்திலே)


8. மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனை சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

சரணம் குஹாய சரணம் குஹாய சரவணபவ குஹ ஹரோஹரா
கஜமுக சோதர கார்த்திகேயா சரணம் சரணம் ஹரோஹரா


9. மஞ்சு நிகர் குந்தளமின்னே ஸப்தஸ்தலங்கள் விகசிதம் செய்
வாரிஜாசனத்தில் வாழ்பொன்னே செய்ய வண்ணமே ஒளிர் சொர்ணமே நடை
அன்னமே இடை பின்னமே பெற வந்தபுய பார வஞ்சியே
அதி விருப்பத்துடன் உரைக்கும் வார்த்தையைக் கேள் ஆசை மிஞ்சியே

ஐந்து வயதானபருவம் தனில் எனது சிறு மனை முன்
அங்கஜவேல் போல உருவம் பெற்றே அன்று வந்து நயந்து மாலையில்
நெஞ்சழிந்து மயங்கவே புணர் ஆறு முக வேலவனையே
நினைவு கொண்டே மதி மருண்டே ஆறுதில்லை என்ன வினையே

என்னிரண்டு கண்ணும் தேடுதே கனவிலும் மனது நினைத்தே
ஏக்கமுற் றலைந்து வாடுதே முன்னம் என்றன் ஆகம டொன்றவே புணர்ந்து
அன்று போன குஹன்தன் ஆவலை எண்ணி எண்ணி என்ன பயனே
உருகி நிதம் மருகி விழ இப்படி விதித்தான் அயனே

சென்னிக் குளமேவிய வாசன் இனிய துதி அனுதினமும்
செய்திடும் அண்ணாமலை தாஸன் பாடும் சிந்து மீது மிகுந்த நேசமும் கொண்ட
சீல குஹன் ஸரோருஹ திவ்விய முகங்கள் ஆறுமே
கண்களில் கண்டால் அன்பருக் கெல்லாம் சேவையின்ப வெள்ளம் ஊறுமே


10. முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா
தணிகாசலனே தவமா மணியே - அரஹரோஹரா
தானவர் போற்றும் தீனதயாளா - அரஹரோஹரா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா - அரஹரோஹரா
கந்தா கடம்பா கார்த்திகேயா - அரஹரோஹரா
செந்திலாண்டவா செங்கல்வராயா - அரஹரோஹரா
சிவஷண்முகனே சேனைத் தலைவா - அரஹரோஹரா

அக்கினிகர்ப்பா ஆறுபடை வீடா - அரஹரோஹரா
ஆவினன்குடிவாழ் அழகிய வேலா - அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா

மயில் வாஹனனே மாதவக் கொழுந்தே - அரஹரோஹரா
பழனியம் பதிவாழ் பாலகுமாரா - அரஹரோஹரா
சேவற் கொடியோய் செங்கதிர் வேலா - அரஹரோஹரா
சிவனார் மகனே செந்திலாதிபா - அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா

ஸ்வாமிநாதா சக்தி வேலா - அரஹரோஹரா
மூவர் முதல்வா முத்துக்குமாரா - அரஹரோஹரா
வள்ளி மணாளா வானவர் வேந்தே - அரஹரோஹரா
வடிவேல் முருகா திருமால் மருகா - அரஹரோஹரா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா - அரஹரோஹரா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா - அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா - அரஹரோஹரா
மால் மருகா மருகா மருகா மருகா - அரஹரோஹரா

11. முத்தான முத்துக்குமரா முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா வா

நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா (முத்தான)

பன்னீரில் குளிக்கவைத்து பட்டாடை உடுத்திவைத்து
சந்தனத்தில் சாந்தனுக்கு அங்கமெல்லாம் பூசிவைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்றுபூத்த மலரால் உன்னை அர்ச்சிப்போம் வருவாய் அப்பா (முத்தான)

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
க்ருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்
மயிலையும் அவன் திருக்கை அயிலையும்
அவன் கடைக்கண் இயலையையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ...
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து மெழுபுவி புறந்திரிக்கும்
அரசென நிறந்தரிக்க வாழலாம் - இங்கு (நாமும்)

சொல்லுங்கோ...

அடைபெறுவதென்று முக்தி அதிமதுர செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம், சித்தியாகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல் முருகா வேல் முருகா...

நாளை எம படர் தொடர்ந்தழைக்க - நம்மை
அவருடன் எதிர்ந்திருக்க இனிஎன முழங்கி வெற்றி பேசலாம் (எமனுடன்)
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல் முருகா வேல் முருகா...

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே - முருகன்
மெள்ளத் தவழ்ந்துவரும் பாலனாம்
தெள்ளித்தெளித்த தினை அள்ளிக்கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மணவாளனாம்

சொல்லுங்கோ...

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான்
உங்கள் உள்ளத்திலே முருகன் தோன்றுவான்
ஒவ்வொருவர் பக்கத்திலே முருகன் தோன்றுவான்
அவன் பாதத்தையே என்றும் பற்றிக்கொண்டால்
உங்கள் பக்கத்திலே முருகன் தோன்றுவான்

சொல்லுங்கோ...

வேலனுக்கு ஹரோஹரா முருகனுக்கு ஹரோஹரா
கந்தனுக்கு ஹரோஹரா எங்கப்பனுக்கு ஹரோஹரா
சிவபாலனுக்கு ஹரோஹரா வடிவேலனுக்கு ஹரோஹரா
சொல்லுங்கோ...

12. நீர்க்கொண்ட சடைமுடியோன் நெற்றி விழிகளில் பிறந்து
சீர்கொண்ட சரவணத்தின் செங்கமலமிசை வளர்ந்து
கார்த்திகையின் முலைப்பாலும் கௌரியின் முலைப்பாலும் உண்டு
ஆர்த்த திரைக்கடல் இடைச் சென்று அசுரர் குலங்களைத் தொலைத்து
தேவர் சிறைதனை மீட்டு தெய்வ மடப்பிடி மணந்து
மூவர் தொழும் திருத்தணிகை முதுகிரியில் எழும் சுடரே

பக்தியால் யானுன்னை பலகாலம்
பற்றியே மாத்திருப் புகழ்பாடி
முத்தனா மாறனைப் பெருவாழ்வில்
முக்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தம தான சத்குண நேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே

13. பாலும் பழம் உண்டு பக்திக்குப் பொருள் உண்டு
தேனும் தினை உண்டு தித்திக்கும் தமிழ் உண்டு
ஞானப் பழம் உண்டு பழனிமலை மேலே
வேலன் அருள் உண்டு வேண்டுவோர் மனம் போல
வேலன் துணை வருவான் நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு வேண்டிடும் அடியார்க்கு
வேலன் துணை வருவான்

கூவும் குயில் உண்டு குதூகலம் பல உண்டு
தாவும் மான் உண்டு மோஹனக் கிளி உண்டு
மாலைப் பொழுதினிலே சோலை அழகினிலே
மாலை நிலவொளியில் பன்னிரு கையோடு (வேலன் துணை )

சந்தனம் மணம் வீசும் ஷண்முக நதி உண்டு
சான்றோர்கள் நீராடும் சரவணப் பொய்கை உண்டு
சுந்தர வடிவேலன் சிங்கார மயில் ஏறி
அன்பர்கள் குறை தீர்க்க அருள் என்னும் பொருள் தந்து (வேலன் துணை )


வேற்காடு வாழ்ந்திருக்கும் தேவி கருமாரியம்மா
சந்ததமும் உந்தன் பாதம் பணிந்தோமம்மா

அண்டபகி ரண்டமெல்லாம் ஆண்டுவரும் சக்தி நீயே
அங்கமெல்லாம் கூசிடுதே அருட்ஜோதி வீசிடுதே
ஆதாரப் பெருக்குநீ ஆத்திரத்தைக் காத்திடுவாய்
அன்போடு வருவோர்க்கு அபயமே தந்திடுவாய்

ஓங்கார மானவளே உத்தமியே பத்தினியே
உன்னை வணங்குகின்றோம் உலகத்து நாயகியே
சிங்காரப் பொட்டழகி செந்தூரப் பொட்டழகி
சீரான ஆபரண அலங்காரப் பெட்டகமே

ஆத்தங்கரை ஓரத்திலே வேப்பமர நிழலிலே
காத்திருக்கும் காத்தாயி கண்பாரு மாரியம்மா
எத்தனையோ பேருனக்கு எடுத்துச் சொல்லலாகாது
எங்களைக் காத்திடுவாய் என்றும் துணைநீ யிருப்பாய்

ஆயிமகமாயி பத்ரகாளி உமையவளே
ஆயிரம் கண்ணுடையாய் ஆதாரம்நீ யிருப்பாய்
சமயபுரத்தாளே சங்கரி ஆத்தாளே
சந்ததமும் உந்தன் பாதம் பணிந்தோமம்மா


14. சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி
சரணம் சரணம் சரணம் சரணம் மாமலைவாசா மாமலைவாசா

தாயும் நீயே தந்தையும் நீயே சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வம் நீயே மாமலைவாசா
பூதநாதா விபூதிநாதா சரணம் ஐயப்பா
எங்களையும் காத்தருள்வாய் மாமலைவாசா

கலியுக வரதனேநீ சரணம் ஐயப்பா
காருண்ய ரூபணேநீ மாமலைவாசா
கற்பூர ஜோதியேநீ சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியேநீ மாமலைவாசா

ஏறாத மலைகளெல்லாம் சரணம் ஐயப்பா
எங்களையும் ஏறவைத்தாய் சரணம் ஐயப்பா
படிபதினெட்டு ஏறிவந்தோம் சரணம் ஐயப்பா
உன் திருவடி காணவந்தோம் மாமலைவாசா


15. சரணம் சரணம் ஜகதாம்பா
சரணம் தருவாள் ஓம்காரி
சோட்டாணிக்கரையில் நின்றிடுவாள்
சொல்லிய குறைகளைத் தீர்த்திடுவாள்
மதுரையில் வாழ்ந்திடும் மீனாட்சி
மனக்குறை எல்லாம் தீர்த்திடுவாள்
அங்கயற்கன்னி என்பவளாம்
அடியார் சக்தியைக் கொண்டவளாம்

நெல்லையிலே அவள் காந்திமதி
தில்லையிலே அவள் சிவகாமி
காஞ்சியில் வாழ்ந்திடும் காமாட்சி
காசியில் வாழும் விசாலாட்சி
திருக்கடையூரில் அபிராமி
திருவேற்காட்டில் கருமாரி
அழைத்ததும் ஓடி வந்திடுவாள்
அல்லலை எல்லாம் போக்கிடுவாள்

சமரச குணத்தைக் கொண்டவளாம்
சமத்துவ நீதியை சொல்பவளாம்
சமயபுரத்து மகமாயி
தக்கசமயத்தில் வந்திடுவாள்
தேவி மஹாத்ம்யம் சொல்பவர்க்கு
தெய்வங்கள் அனைத்தும் அருள் தருமாம்
தேவி ராஜேச்வரி யுமாவாள் - அவள்
தெய்வீக சக்தியை யாரறிவார்
குங்கும மஹிமையைத் தந்தவளாம்
கங்கண பூஜித ரஞ்சனியாம்
மங்கள கௌரி என்பவளாம்
மங்காத ஒளியாய் இருந்திடுவாள்



16. தணிகைமலை பெருந்துரையே வா வா வா
தயாநிதியே தர்மதுரையே வா வா வா
அடியவர்க்கு அருளும் அரசே வா வா வா
ஆலமுண்டோன் பாலகனே வா வா வா
பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தே வா வா வா
ஆறுமுக கருணைக் கோவே வா வா வா
என் ஆவிபிரியும் சமயம் முன்னே வா வா வா
பாவி என்னை மறந்திடாதே வா வா வா

வேல் பிடிக்கும் செஞ்சுடரே வா வா வா
வேல் எடுத்து வினையைத் தீர்க்க வா வா வா
என் மரண பயம் தீர்க்க நீயும் வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி வா வா வா
திருத்தணிகைமலை, ஸ்வாமிமலை, பழனிமலை,
சோலைமலை, பெருந்துரையே வா வா வா
தயாநிதியே தர்மதுரையே வா வா வா


சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா ...... ரம்பமாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா ...... நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே ...... துன்புறாமே
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ ...... யன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே ...... விஞ்சையூரா
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே ...... சன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ ...... தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் ...... தம்பிரானே.


17. வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
வள்ளி மணவாளனுக்கு ஹரோஹரா

வேலவா வடிவேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா (வேலவா)

சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா - உன்னை
சின்னஞ்சிறு சிவக்குமரா ஓடிவா (வேலவா)

முத்தே ரத்தினமே முருகையா
முழுமதி முகத்தவனே கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலய்யா,
வடி வேலய்யா, உன் கையில் வேலய்யா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா (வேலவா)


18. விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

யானைமுகம் கொண்டவர் ஐந்துகரங்கள் உடையவர்
பானைவயிறு படைத்தவர் பக்தர் குறையைத் தீர்ப்பவர்
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
ஓம் நம: சிவாய எனும் மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

கலியுகத்தின் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின்மீது ஏறியே இஷ்டம்போல சுற்றுவார்
ஜயகணேச ஜயகணேச ஜயகணேச பாஹிமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்



19. என் அப்பனே என் ஐயனே
கந்தப்பனே கந்தக் காருண்யனே
பன்னிருகை வேலவனே கன்னிவள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல் வேல்
வேல்முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

பார்வதியாள் பாலகனே பக்தர்களுக்கு அனுகூலனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல் வேல்
வேல்முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

எட்டுக்குடி வேலவனே சுட்டப் பழம் தந்தவனே - ஔவைக்கு
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல் வேல்
வேல்முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

கால்களில் பொற்சிலம்பு - முருகன் கைகளில் பொற்சதங்கை
கல் கல் கல் என வருவான்


20. உள்ளத்திலே கோயில் கட்டி உன்னை அங்கு குடிவைத்தேன்
எண்ணத்திலே தொட்டில் கட்டி என்னரசே தாலாட்டினேன் (உள்ளத்திலே)

கள்ளமில்லாத பிள்ளையப்பா கருணையுள்ள தெய்வமப்பா
வாழ்வுதரும் கந்தப்பா வந்தருள்வாய் வேலப்பா (உள்ளத்திலே)

உன்புகழைப் பாடிவந்தேன் உனதருளை நாடி நின்றேன்
ஓம்கார குருவே வா வா உயர் ஞான குருவே வா வா (உள்ளத்திலே)

தத்திமிதோம் என்று ஆடிவரும் வீரவேல்
தஞ்சமென்றோர்க்கருள் தருமமிகு சக்திவேல்
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல்
தயவுடன் அன்பர்க்கு அருள்தரும் ஞானவேல்
தஜ்ஜதம் தகிடஜம் என்றாடும் வைரவேல்
தத்துவப் புகழ்பாடும் ஷண்முகன் கைவேல்
வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் ஷண்முகன் கைவேல்

21. தென்பழனி தேவனடி கண்ணம்மா - முருகன்
தேவர்களின் தலைவனடி கண்ணம்மா

பொங்கல் வைத்துப் பூசையிட்டு
புதுமலரால் மாலையிட்டு
வாராயோ என்றழைத்தால் கண்ணம்மா - முருகன்
மாறாமல் வந்து நிற்பான் கண்ணம்மா

காவடிகள் ஆடிவரும் - கந்தன்
திருப்புகழைப் பாடிவரும்
வேலாடும் வண்ண மயிலாடும்
வேலன் கால் சிலம்பு தானாடும்
அலையாடும் தமிழ்க் கவிபாடும்
ஆறுமுகன் அன்புமனம் கூத்தாடும்
நெற்றியிலே நீறிருக்கும்
நெஞ்சில் அடியார்கள் நினைவிருக்கும்


22. ஸ்வாமியே சரணம் ஐயா - தர்ம
சாஸ்தாவே சரணம் ஐயா
அனுதினம் பூஜை செய்தோம் - உனக்கு
அனந்தகோடி நமஸ்காரம்

வன்புலியின் மீதினிலே - ஏறி
வீரமணிகண்டனே வா
வீரவிளையாடல்களை பாட
வாணி தடை கூறவில்லை

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி உந்தன்
பிஞ்சு மொழி கேட்டிடவே
அந்தப் பந்தளத்தோர் செய்த தவம்
இந்தப் பாமரன் நான் செய்யவில்லையா

பாலெடுக்கப் புலி எதற்கோ - உன்
பார்வையின் பால் சக்தியற்றதோ
உன் பார்வை ஒன்றே போதுமையா
எங்கள் மேல் பால் பொழிய வேண்டுமையா

வில்லும் அம்பும் கையில் எதற்கோ - அந்த
வாவரை நீ வெற்றி கொல்லவா
பக்தர் வினைகளின் துயர்களையே
வேட்டையாடி விரட்டிடவோ

காந்தமலை ஜோதி எங்களை
காந்தமின்றி இழுக்குதப்பா
அதை காமக்கோடி நாதன் உருவில்
காண அருள் வேண்டுமையா

23. பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே
பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே - அப்பப்பா
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

தேன் இருக்குது தினை இருக்குது தென் பழனியிலே
தெருவைச் சுற்றிக் காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்ப்பக் காவடி மச்சக்காவடி புஷ்பக்காவடியாம்
மலையைச் சுற்றிக் காவடியாட்டம் தினமும் நடக்குதாம்

வேலனுக்கு ஹரோஹரா
முருகனுக்கு ஹரோஹரா
கந்தனுக்கு ஹரோஹரா
அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தான்டி
அவன் போனா போறான்டி முருகன் தானா வாரான்டி

வேல் இருக்குது மயில் இருக்குது வ்ராலிமலையிலே
மலையைச் சுற்றிக் காவடியாட்டம் தினமும் நடக்குதாம் - வ்ராலி
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

24. யானைமுகன் சோதரனே சரணமே ஐயப்பா
ஆறுமுகன் தம்பியேநீ சரணமே ஐயப்பா
ஹரிஹரனார் புத்திரனே சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

கண்ணழகு கொண்டவனே சரணமே ஐயப்பா
கர்மவினை தீர்க்க வேண்டும் சரணமே ஐயப்பா
நீலவண்ண கட்டழகா சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

முடிவளர்த்தோம் தீக்ஷை கொண்டோம் சரணமே ஐயப்பா
இருமுடிகள் சுமந்துவந்தோம் சரணமே ஐயப்பா
சபரிமலை வாசனே சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

ஆறுவாரம் நோன்பிருந்தோம் சரணமே ஐயப்பா
ஆறு மலை தாண்டிவந்தோம் சரணமே ஐயப்பா
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

எரிமேலி வந்தடைந்தோம் சரணமே ஐயப்பா
வாவரைத் தொழுதுநின்றோம் சரணமே ஐயப்பா
திந்திமித்திப் பாடிவந்தோம் சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா

துளசிமணி மார்பழகா சரணமே ஐயப்பா
துன்பமெல்லாம் தீர்க்க வேண்டும் சரணமே ஐயப்பா
ஆறுவாரம் நோன்பிருந்தோம் சரணமே ஐயப்பா
முப்போதும் பூஜைசெய்தோம் சரணமே ஐயப்பா

நீலிமலை ஏறிவந்தோம் சரணமே ஐயப்பா
சரங்குத்தி எடுத்துவந்தோம் சரணமே ஐயப்பா
அப்பாச்சிமேடு ஏறிவந்தோம் சரணமே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் சரணமே ஐயப்பா