பரிவு கொண்டு பகழ்த் துதி புரிந்து எதிர்தனை வணங்கி உளம் உருகி நின்று பக்தி கொண்டாடுவோம் .
நிகழும் லோக வாழ்வதை சதமென அனு தினமும் மாய மாதர் மோக வலையினில் உழலும் காம க்ரோத லோப மதமதில் சுழலும் பாவி ஆகி வாழ்வில் இடர்பட. அகமும் வாடி நோய்களாலே மெலியவும் அமுதும் வாயிலேகிடாமல் ஒழுகிட வகையில்லாது சேய்களோடு மனைவியும் கதறி வீழ நாடி பேத கனமதில். நமனும் வந்துயிரை கவரவும் பிணமாய் சுடலை எண்டி நமதுடலும் வெந்தழியும் நாளிலே.
நம் நாடு எங்கே? பெரும் வீடு எங்கே? காப்பு நஞ்சை எங்கே? தோப்புப் புஞ்சை எங்கே? அதிகாரம் எங்கே? வ்யாபாரம் எங்கே? மனைவி மக்கள் எங்கே? வைத்த ரொக்கம் எங்கே? வாங்கின வட்டி எங்கே? இரும்புப் பெட்டி எங்கே? அவையெல்லாம் கூட வருமோ அங்கே? நாடி வருவதெது பாவபுண்யமல்லாது நாம் அரையில் அணியும் கோமணமும் வராது , நன்குணர்ந்து கொண்டு சிந்தையும் தெளிந்து கும்பிடுங்களென்றும், தவ நிலை நாட்டும் அருளமுதூட்டும் பதவி காட்டும் பக்தி கொண்டாடுவோம் ,
அத வண்டிலேந்தே பாத்துட்டு, நிமிஷாம்பா கோவில்னு ஒரு கோவில், ஸ்ரீரங்கப்பட்டினத்துல. அதுக்கிட்ட ஒரு த்ரிவேணிசங்கமம் இருக்கு. அங்க காவேரி கூட இன்னும் ரெண்டு நதிகள் சேர்றது. பாலம் இருக்கு. தோணியும் இருக்கு. அவ்ளவா ஆழம் இல்ல. தண்ணி நல்ல ஓட்டம். சாயந்தரம் நல்ல குளியல். மிஸஸ் பத்மநாபனத் தவிர அவர் கொழந்த மொதற்கொண்டு எல்லாருமே அருமையா மூழ்கிக் குளிச்சோம். அங்கேந்து மடியா!! போயி ஸ்ரீரங்கநாதர தரிசனம் பண்ணினோம். பசி. ஆனா கெளம்பனும். கடை ஒன்னும் உருப்படியா கண்ணுக்குத் தெரியல. ஒரு டீக்கடைல வடை, பஜ்ஜி, டீ, காபிய முடிச்சுட்டு, வண்டில ஏறியாச்சு.
ஹன்சூர் வழியா மடிக்கேரி (கூர்க், குடகு) போய்ச் சேரனும். நெட்ல மேப் பாத்தாச்சு. வழி ரொம்ப மோசம்னு போட்ருந்தாங்க. ட்ரைவர் இனிமே ரூட் தெரியாது. கேட்டுனே போலாம்னு தெளிவா சொல்லிட்டாரு. நாங்க ரெடி, கோவில்ல ஆரம்பிச்சு, கூர்க் வரைக்கும் ஒரு பத்து பேரையாவது விசாரிச்சினே போய் சேந்தாச்சு. இப்ப குசால்நகர் வரைக்கும் புது ரோடு போட்ருக்காங்க. சூப்பரா இருக்கு. குசால்நகர்லேந்து கூர்க் ஒரு முப்பது கி.மீ. இருக்கும். அந்த ரோடு தான் கொஞ்சம் மோசம். ஹோம் ஸ்டே இஞ்சார்ஜ காண்டக்ட் பண்ணி, ராத்திரி 12 மணிக்கு ரூமுக்குப் போய் சேந்தோம். கூர்க் குளிரும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. மூட்ட, மூட்டையா ஸ்வெட்டர், போர்வைன்னு வெயிட் தூக்கினு போயிருந்தோம். எல்லாம் வேஸ்ட். பெட் ரூம் சைசுல ரெண்டு ஹால், ரெண்டு பெட் ரூம், ரெண்டு பாத்ரூம், டாய்லெட், கிச்சென், மொட்ட மாடி. கீசர் இன்டேன் கேஸ்ல ஓடறது. அவருக்கே எப்டி அத ஆபரேட் பண்றதுன்னு தெரியல. அது இன்னொருத்தர் வீடாம், அவரு ஊர்ல இல்லியாம். சமையல் கட்டு பூட்டி இருக்கு. வேற வழி. அடுப்புக்காக அந்த பூட்ட, அவுங்க ஒத்துழைப்போட ஒடச்சோம். ட்ரைவர் அண்ணாவையும் உள்ள வந்து படுக்க சொன்னோம். காலம்பர ஆறரை மணிக்கு காலி பண்ணிடுவோம்னு சொல்லிட்டு, அலாரத்த வெச்சுட்டு, தூக்கத்த போட்டோம்.
28.12.2008, காலை ஆறு மணி. எல்லாரும் எழுந்தாச்சு. பல்ல மட்டும் தேச்சுட்டு, போற எடத்துல குளிச்சுக்கலாம்னு ப்ளான். வீட்ட சுத்தி போட்டோ எடுத்து ஒன்றை மணி நேரம் டும் ஆய்டுச்சு. மொதல் நாள் புளிசாதத்த பசங்க காலி பண்ணினாங்க. இருக்கற எடத்துலேந்து 45 கி.மீ. ல பாகமண்டலானு இன்னொரு த்ரிவேணி சங்கமம். அங்கேயே பக்கத்துல தலைக்காவேரி. தலக்காவேரில இடுப்பளவு ஆழத்துக்கு ஒரு தொட்டில தான் எல்லாரும் புண்ய ஸ்நானம். எச்ச துப்பாத, சோப்புப் போடாதன்னு போர்டுகள். குளிச்சோம். அந்த தொட்டியோட ஒரு பக்கத்துல ஒரு சின்னத் தொட்டி. அதுக்கு திருவாசி வெச்சு, ஒரு பூசாரி பூஜை பண்ணினு இருக்கார். அவர்கிட்ட போனா அந்த சின்னத்தொட்டிலேந்து சொம்புல தண்ணிய எடுத்து நம்ம மூஞ்சில ஊத்தறார். நாங்களும் ஊத்திண்டோம். பக்கத்துலையே ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனியா குளிக்க, ட்ரெஸ் சேஞ் பண்ண (ஓசி பா) இடம், ஏற்பாடு பண்ணி இருக்காங்க. ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு, டீ, காபி குடிச்சுட்டு பாகமண்டலா போய், த்ரிவேணி தீர்த்தத்தப் ப்ரோக்ஷணம் பண்ணிண்டு, அங்க இருந்த ஒரு வெஜ். மெஸ்ஸுல டிபன் சாப்டலாம்னு போனோம். நூறு ரூபா தண்டம், வேகல, உப்பு ஜாஸ்தி. அங்கேயே இன்னொன்னு மெஸ்ஸுக்குப் போயி, செகண்ட் ரௌண்ட முடிச்சோம். சுப்ரி திருட்டுக் குளியலுக்குப் போயிட்டு, எங்களத் தேடி கொஞ்ச நேரம் அலஞ்சாரு. என்னோட பேண்ட்டக் காணோம். ரூம்லேயே விட்டுட்டு வந்திருக்கேன். ஒருத்தர்மேலயும் பழியும் போட முடியல. அவருக்குப் போன் பண்ணினா, வெளில இருக்கறதாகவும், ரூம்க்கு பக்கத்து வீட்ல தான் சாவி இருக்கு, வாங்கி எடுத்துக்கோங்கன்னு சொன்னாரு. அங்க போனா, பக்கத்து வீட்டுக்காரர் ஞாயித்துக்கெழம ப்ரேயர்க்குப் போயிருக்கார். ஒரு ஆண்ட்டி, அங்க இருந்த ஒரு பொட்டிக்கடைல அவர் நம்பர வாங்கிக்குடுத்தாங்க. ரொம்ப நல்லவர். ஒடனே வந்து தெறந்து உட்டார். பேண்ட் எடுக்கறதுல ஒரு அரை மணி நேரமாவது வேஸ்ட் ஆச்சு.
ராஜா சீட்டுன்னு (ஒக்காந்துக்கற இடம்!!) ஒரு இடம். இப்ப பார்க் அமைச்சிருக்காங்க. ஒரு நாலு கால் மண்டபம். ராஜா அங்க ஒக்காந்து காத்து வாங்குவாராம். ஒண்ணும் ஸ்பெசலாத் தெரியல. உள்ளேயும் போகல. போட்டோ எடுத்துண்டு, ஓம்காரேச்வர் கோவிலுக்குப் போனோம். கோவில் பூட்டியாச்சு. மொகல், கேரளா, சாயல்ல கட்டியிருந்தாங்க. கொளம் இருந்துது. சுத்தி, சுத்தி போட்டோ எடுத்துட்டு, அபி அருவிக்கு போனோம். கொஞ்ச தூரம் நடை. மாலை நேர சூரியன். அருமையான அருவி. தொங்கு பாலம். எறங்கிப் போயி குளிக்கணும். டயம் இல்ல. ஓடறோம். குளிக்கறதுக்கு ரெடியாயினு இருந்த சுப்ரியையும், அவன் மந்திரத்துக்கு மயங்கி, அவன் கூடப் போயிருந்த முகுந்தனையும் போன்ல புடிச்சு, வண்டில இழுத்துப் போட்டுண்டோம்.
ஒரு இடம் கூட உருப்படியா சாப்ட கெடைக்கல. ஒரு வெஜ். ஹோட்டலுக்குப் போனோம். அம்பது ரூபாய்க்கு அன்லிமிடெட் மீல்ஸுன்னு போர்டு வெச்சிருந்தான். செல்ப் சர்வீஸ்தான். பசங்க போயி ஒரே தட்டுல (அதுவும் டிபன் ப்ளேட்டு) சப்பாத்தி, குருமா, சாம்பாரு, காய், சாதம்னு எல்லாத்தையும் வாங்கினு வந்துட்டானுங்க. என் மனைவிக்கு இந்த மாசம் வாய்ப்புண்ணு!! அவ சாப்பாட்டையும் பசங்க தட்டுல போட்டா. போய் மோரு சாதம் வாங்கினு வந்து சாப்டா, இதுக்கு 50 ரூபா.
பெங்களூர்ல 9.30 மணிக்கு பஸ்ஸப் புடிக்கணும். இப்போ மணி நாலு. வழில துபேரேன்னு ஒரு எடத்துல யானை பயிற்சி முகாம் இருக்கு, காவேரில உண்டான நிசர்கதமான்னு ஒரு தீவு இருக்கு. திபெத்தியர்களோட ஒரு முகாமும், புத்தருக்கு ஒரு தங்கக் கோவிலும் இருக்கு. எதப் பாக்க, எத உட.? நேரா தீவுக்குப் போனோம், ஜம்முன்னு ஒரு குளியலப் போட்டோம். சுப்ரி அவரோட வசீகர தபத்தால எல்லாரையும் கவர்ந்திழுத்தார். ஒண்ணும் சிக்கல. இனிமே எதப் பாத்தாலும், பாக்காட்டியும் பஸ்ஸப்புடிக்க முடியாதுன்னு தெளிவா தெரியுது. எனக்கு ட்ரைவர் மேல ஒரு நம்பிக்கை. அவரும் சான்ஸ் இல்லன்னுட்டார். கொழப்பம், டென்ஷன் தீந்துது. நிம்மதியா, நிதானமா அடுத்த இடத்தைப் பாக்கக் கெளம்பிட்டோம்!! டிக்கெட்டையும் கேன்சல் பண்ண முடியல. யானை கேம்ப் ரோட்லேந்து உள்ள ஒரு பத்து கி.மீ. க்கு போகனுமாம். போகலை. தங்கக் கோவில். என்னமா இருக்கு. டீம்ல மேக்ஸிமம் எல்லாருக்குமே இது முதல் தடவை. ஜெட்லி, ஜாக்கிசான் படத்துலையே பாத்துனு இருந்த கோவில். பெரிய மணி, ட்ரம்ஸ், கோவில் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசியிருக்கறதாகவும், உள்ள இருக்கற மூணு பெரிய சிலைகளுக்கும் தங்க ப்ளேட் போட்டுருக்கறதாகவும் ஒரு பிக்ஷு சொன்னார். புத்தர நமஸ்கரிச்சோம். நல்ல வேலைப்பாடுகள் அவங்க ஊர் சாயல்ல.
மைசூர் தாண்டி ரெண்டு ஹோட்டல்ல !! டின்னர முடிச்சோம். மெஜஸ்டிக்ல பசங்கள எறக்கி விட்டோம். பத்மநாபன் போய் விசாரிச்சதுல மெட்ராஸ் பஸ்ஸெல்லாம் சாந்தி நகர் பஸ் ஸ்டேண்ட்லதான் போய் புடிக்கனும்னு தெரிஞ்சுது. அவருக்கு ஒரு ஜே போட்டுட்டு, பசங்களத் திருப்பி ஏத்தினு போயி, சாந்திநகர் பஸ் ஸ்டேண்ட்ல, ரெடியா இருந்த தமிழ்நாடு விரைவு சொகுசுப் பேருந்துல ஏத்தி விட்டோம்.