Jan 16, 2009

பட்டினத்தார்

பக்தி  கொண்டாடுவோம் ,
தெய்வ பக்தி கொண்டாடுவோம்
பவ சாகரத்திலே கிடந்து தவியாவிதத்திலே உழன்று
பக்தி கொண்டாடுவோம் .

பணிவோடு நின்று திருநீறணிந்து மறவாத
சிந்தை கொண்டு தெய்வ பக்தி கொண்டாடுவோம்
.

பரிவு கொண்டு பகழ்த் துதி புரிந்து
எதிர்தனை வணங்கி உளம் உருகி நின்று பக்தி கொண்டாடுவோம் .

நிகழும் லோக வாழ்வதை சதமென அனு
தினமும் மாய மாதர் மோக வலையினில்
உழலும் காம க்ரோத லோப மதமதில்
சுழலும் பாவி ஆகி வாழ்வில் இடர்பட.
அகமும் வாடி நோய்களாலே மெலியவும்
அமுதும் வாயிலேகிடாமல் ஒழுகிட
வகையில்லாது சேய்களோடு மனைவியும்
கதறி வீழ நாடி பேத கனமதில்.
நமனும் வந்துயிரை கவரவும்
பிணமாய் சுடலை எண்டி நமதுடலும் வெந்தழியும் நாளிலே.

நம் நாடு எங்கே? பெரும் வீடு எங்கே?
காப்பு நஞ்சை எங்கே? தோப்புப் புஞ்சை எங்கே?
அதிகாரம் எங்கே? வ்யாபாரம் எங்கே?
மனைவி மக்கள் எங்கே? வைத்த ரொக்கம் எங்கே?
வாங்கின வட்டி எங்கே? இரும்புப் பெட்டி எங்கே?
அவையெல்லாம் கூட வருமோ அங்கே?
நாடி வருவதெது பாவபுண்யமல்லாது
நாம் அரையில் அணியும் கோமணமும் வராது ,
நன்குணர்ந்து கொண்டு சிந்தையும் தெளிந்து
கும்பிடுங்களென்றும்,
தவ நிலை நாட்டும் அருளமுதூட்டும்
பதவி காட்டும் பக்தி கொண்டாடுவோம் ,


Jan 4, 2009

பெங்களூர் டூர்

டிசம்பர் 2008, கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஆச்சு. 1998 - M.C.A மொதல் செமெஸ்டர் பெங்களூர்லதான் படிச்சேன். பெரிம்மாவோட தங்கை மாலாக்கா ஆத்துல தங்கிண்டு. அப்பறம் இன்னொரு சித்தி தங்கை, ஷோபா சித்தியும் அங்கதான் இருக்கா. அந்த வருஷம் தீபாவளி அவங்க வீட்லதான். இப்டி அங்க இருந்தவங்க வீட்டுக்கெல்லாம் இன்னும் போகவே இல்ல. ஒரு வழியா ப்ளான் ரெடி.

மன்னார்குடி முகுந்த், கல்கட்டா வினோத் சர்மா, திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் எல்லாம் இப்போ பெங்களூர்லதான் இருக்காங்க. க்றிஸ்மஸ் வ்யாழக்கெழம. வெள்ளிகிழம ஒருநாள் லீவு போட்டா நாலு நாள் லீவு. ஆனா சனி, ஞாயிறு மட்டும் ப்ளான் போடலாம்னு ஆரம்பிச்சாச்சு. பெங்களூர், மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், கூர்க், மந்த்ராலயம், நந்தி ஹில்ஸ், கோகர்ணம், உடுப்பி, ஸ்ருங்கேரி, இப்படி பல இடங்கள். மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஒரு நாள், லோக்கல் பெங்களூர் ஒரு நாள்னு முடிவாச்சு. பஞ்சபாண்டவாஸ், பத்மநாபன் குடும்பம் ரெண்டும் கூட வர்றதா சொல்லியாச்சு. சரின்னு ஒரு சுமோ இல்ல க்வாலிஸ் ஏற்பாடு பண்ண சொன்னோம், ஷேர் பண்ணிக்கலாம்னு. கிலோ மீட்டருக்கு எட்டு ரூபா, ஒம்பது ரூபான்னு இருந்துது. சர்மாஜி கடின முயற்சி பண்ணி அவர் நண்பர் மூல்யமா, 6.50 -க்கு ஒரு க்வாலிஸ் ஏற்பாடு பண்ணினார்.

பெங்களூர் போயிட்டு வர டிக்கெட் புக் பண்ணனும். நம்ம தமிழ்நாடு பஸ்களுக்கு இன்டர்நெட் புக்கிங் கிடையாது. என் மிஸஸ்க்கு இந்த ட்ரிப்ப பத்தி ஒண்ணும் சொல்லாம சஸ்பென்ஸ் குடுக்கலாம்னு பாக்கறேன். சுப்ரிய தி.நகர் தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கௌண்டர்ல பண்ண சொல்லலாம்னா, அங்க பெரிய க்யூ.
கர்நாடகா பஸ்ல புக் பண்ணலாம்னா, அவனுங்க கடன்காரங்க மட்டும்தான் (கிரெடிட் கார்ட் வெச்சிருக்கறவங்க) புக்கிங் பண்ண முடியும்னு சைட்ல சொல்லி இருக்கானுங்க. சுப்ரியும் பாவம். நம்ம பத்மநாபன் ஒரு கிரெடிட் கார்டு ஹோல்டர். அவரு நான், என் மனைவி, சுப்ரி, கார்த்தி, கமல் அஞ்சு பேருக்கும் போக வர டிக்கெட் புக் பண்ணிட்டாரு. போக, வர பண்ணினா கர்நாடகா பஸ்ல பத்து பெர்சென்ட் டிஸ்கௌன்ட். பஸ் டயத்துக்கு முன்னாடி ரெண்டு மணி நேரம் கர்நாடகா ஸிட்டி பஸ்ல ஃப்ரீயா போகலாம்.

26.12.2008
வெள்ளிக்கிழம நைட்டு பஸ் ஏற வேண்டியது. 27, 28 அங்க சுத்தவேண்டியது. திரும்பி 28 நைட்டு அங்க பஸ் ஏறி, திங்கக்கிழம ஆபீசுக்கு வந்துட வேண்டியது. இதுதான் ப்ளான். க்வாலிஸ் ரெண்டு நாள்ல 500 கி.மீ. க்கு மேல சுத்தினாதான் கி.மீ. க்கு 6.50. அதுனால ரெண்டாம் நாள் ப்ரோக்ராம் திருப்பி யோசிக்கணும். மைசூர்லேந்து அப்டியே கூர்க் போகலாம்னு பத்மநாபனும், நானும் யோசிச்சோம். நான் முதல் நாள் நைட் மைசூர் இல்ல ஸ்ரீரங்கப்பட்டினத்துல தங்கிடலாம், ரூம் ரெண்ட் விசாரின்னேன். அவரு கூர்க்ல தான் தங்கனும்கறதுல ரொம்ப தெளிவா இருந்தாரு. நெட்ல பாத்தா ஒரு வெஜிடேரியன் ஹோட்டலும் கண்ல படல. ஹோட்டல், ஹோம் ஸ்டே எல்லாம் பயங்கர காஸ்ட்லி. அவனவன் கூர்க் இந்தியாவோட லண்டன், ரொம்ப கூல், குளிக்கவே முடியாது, அது இதுன்னு எழுதித் தள்ளியிருக்கான். பத்மநாபனே கொஞ்சம் ட்ரை பண்ணி, ஒரு ஹோம் ஸ்டேய எட்டு பேருக்கு, ஒரு ராத்திரிக்கு 2,200 ரூபாய்க்கு பேசி முடிச்சாரு.
சோ, முதல் நாள் மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், ரெண்டாம் நாள் கூர்க் .

ட்ரைவர், பசங்க யாருக்கும் எங்கெங்க போகப்போறோம்னு ஒண்ணும் தெளிவா தெரியாது. நாங்களே ட்ரைவர் கடைசில வண்டி மலையெல்லாம் ஏறாது, வரும்... ஆனா... வராதுன்னு ஏதாச்சும் சொல்லி, ஏதாவது வெடி வெப்பாரோன்னு யோசிச்சினு இருந்தோம். முகுந்தன் மனைவி கன்ஸீவா மன்னார்குடில இருக்காங்க. அவரு தானும் சர்மாஜீயும் முதல் நாளைக்கு சாதம், உருளக்கெழங்கு கறி பண்ணிட்றதாகவும், நாங்க வரும்போது புளிக்காச்சல் மட்டும் கொண்டு வந்தா, புளிசாதமும், தயிர்சாதமும் செஞ்சு எடுத்துனு போலாம்னு உருப்படியா, தைரியமா ஒரு யோசனைய சொல்லி, வேலைய ஏத்துண்டாரு. ஆனா அவர் குக்கர் ரொம்ப சின்னது, அதுனால சர்மாஜி வெள்ளிகிழம நைட்டு, ஒரு பெரிய குக்கரோட முகுந்து வீட்டுக்கு வந்துட வேண்டியது. அவர் சமையல் பண்ண வேண்டியது. முகுந்த் அவருக்கு ஹெல்ப் பண்ணவேண்டியது. (முகுந்துக்கு சமையல் கட்டுல ஒரு சுக்கும் தெரியாது, ஆனா, சுப்ரி, சர்மாஜீக்கெல்லாம் ஐடியா உண்டு). நைட்டு ஒரு ரெண்டர மணிக்கா ஆரம்பிச்சு, ஆறு டம்ளர் சாதமும், ஒரு கிலோ உருளக் கெழங்கும் வேக வெக்க சொல்லிட்டோம்.

பத்மநாபனுக்கு ஒன்றை வயசுல ஒரு கைக்கொழந்த, இருபது, இருபத்தஞ்சு வயசுல இன்னொரு கைக்கொழந்த !(அவன் பொண்டாட்டிதான் !!). அதுனால சனிக்கெழம காலைல அவன குடும்பத்தோட அவன் வீட்லயே பிக்-அப் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சுட்டோம். இந்த பசங்க தயார் பண்ற சாதம் போறாதுன்னு, அவன் வேற காலம்பற டிஃபனுக்குன்னு ஒரு அறுபது இட்டிலி, தேங்கா சட்னி, வெங்காயம், தக்காளி சட்னி, போறாததுக்கு ரெடிமேட் பேல் பூரி, கொழந்தைக்கு பிஸ்கட்டு, பாலு, கஞ்சி மாவு, ஹா ... நாங்க இங்கேந்து சிப்ஸ், பேப்பர் ப்ளேட், ... முகுந்த் வீட்ல ஒரு இருபத்தஞ்சு லிட்டர் தண்ணி கேன் பைப்போட இருந்துது. அத ரொப்பி வண்டில ஏத்திக்க வேண்டியது. முடிஞ்சா அவனோட அடுப்பு, சிலிண்டர் (வழில, வீட்ல, கைல கெடைக்கறதெல்லாத்தையும் , ரெண்டு நாள் பிராம்மணாள், ரிலீஜியஸ் டூராச்சே !!).

26
நைட், மெட்ராஸ்-பெங்களூர் K.S.R.T.C பஸ் கெளம்பியாச்சு. சர்மாஜீட்டேந்து ஃபோன், " சார், சாரி சார், தப்பா நெனச்சுகாதீங்க, எங்க ரிலேடிவ் ஒருத்தருக்கு (தெளிவா சொன்னாரு. நமக்கு மறந்து போச்சு) ஒடம்பு சரியில்ல. நான் போய் மெட்ராஸ்ல சனி, ஞாயிறு கூட இருந்து பாத்துக்க வேண்டியிருக்கு !!!!!!!!!". எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவோமா நாம? "சரி, போய்க்கோங்க, போய்க் கூட இருந்து பத்ரமா பாத்துக்கோங்க" -னு சொல்லிட்டு, முகுந்தன சமையக் கட்டுக்குள்ள தெரியாம போய் மாட்டிக்காம காப்பாத்தாலாம்னு ஃபோன் பண்ணினோம். அவரு "வந்தா சேந்து, வராட்டி தனியா, எதிர்த்தா எதிர்த்து, எப்படியும் நான் குக்கர் வெக்கறது உறுதி" -னு தீத்து சொல்லிட்டாரு. பஸ்லேந்து நானு, என் வொய்ஃப், பத்மநாபன் அவன் வீட்லேந்து, முகுந்தன் வொய்ஃப் மன்னார்குடிலேந்து, இப்படி எல்லாரும் அவருக்கு சமையல் குறிப்பு குடுத்துனே இருக்கோம். எதுக்கும் பக்கத்து வீட்லயும், குக்கர நேர்ல காமிச்சு தண்ணி, அரிசி அளவு கேட்டுக்க சொல்றோம். அவர் வெள்ளிகிழம ராத்திரி ஒம்போது மணிக்கு!! குளிச்சு ரெடியா வேலைய ஆரம்பிச்சுட்டார். பஸ்ல எல்லாரும் தூங்கியாச்சு. நான் எங்க பஸ் எப்டி அடுத்த வண்டியேல்லாம் ஓவர்டேக் பண்றது, ரெண்டு நாளைக்கு பசங்கள எங்கெல்லாம் ஓட்டிண்டு, சாரி, கூட்டிண்டு போறது, முகுந்தன் என்ன பண்ணின்றுக்கானோ குக்கரோடன்னு பல சிந்தனைல தூங்காம, ஆர்வமா டூர எதிர்கொண்டு போய்ன்றுக்கேன். என் வொய்ஃபும் தூங்கல. சீட்டு நெறையா மூட்டப்பூச்சி வேற. குக்கர் சைஸ் தெரியாம நாங்க சொன்ன அளவுல அரிசி, தண்ணிய வெச்சுப்புட்டு, அதோட சித்து விளையாட்டு வேலையாடின்னு முகுந்து ஒரு வழியா ரெண்டு தபா குக்கர வெற்றிகொண்டார்.

27
காலை 3.30. மடிவாலா ஐயப்பன்கோவில் பஸ் ஸ்டாப்ல இறங்கியாச்சு. கார்த்தி பெங்களுர்ல வேல பாத்தபோது முகுந்த் கூட தான் தங்கியிருந்தார். நெறையா லேடீஸ் ஹாஸ்டல்ஸ அடையாளமா வெச்சுக்கினு, கரீக்டா முகுந்த் வீட்டுக்கு கூட்டியாந்துட்டார். எங்களப் பாத்தவொடனே அவருக்கு சந்தோஷம் தாங்க முடியல. பாத்தா அவர் குக்கர் ஒன்ற டம்ளர் சாதம் வடிக்கற குக்கர். அவர பாராட்டிட்டு, ஏழாம் தடவ வெச்ச குக்கர் சாதத்தோட சூப்பரா புளி சாதம் ரெடி. இனிமே தயிர் சாதத்துக்கு ஒரு ஏழு குக்கர் வைக்கோணும்!! வெச்சோம். ஆண்டவர் ரொம்ப கருணை மனம் கொண்டவர். எட்டாந்தரவ வெச்ச கொஞ்ச நேரத்துலையே கேஸ் காலி. முகுந்த அடிசனல் சிலிண்டர கொண்டு வரச் சொன்னோம். முகுந்த்: "சார், இதுவே ப்ளாக்ல வாங்கினது சார். இன்னொரு சிலிண்டர் இல்ல சார்" ன்னுட்டார். எல்லாரும் குளிச்சோம், முகுந்தனத் தவிர, முதல் நாள் ஒம்பது மணிக்கு தானே குளிச்சிருக்கார். இன்னிக்கு நைட் ஒன்பது மணி வர அது போறும்.

பத்மநாபன் ஃபேமிலிய கூட்டிண்டு, வண்டி முகுந்த் வீட்டுக்கு வந்தாச்சு. மணி 5.
பத்மநாபன் வீட்லேந்து: ஒரு அஞ்சு லிட்டர் வாட்டர் கேன், கொழந்த பால், ஃப்ளாஸ்க், கஞ்சிமாவுகள், பிஸ்கட்டுகள், பதினஞ்சு டப்பா பேல் பூரி, இத்யாதிகள். முகுந்த் வீட்லேந்து: ஒரு ஒம்போது டம்ளர் புளி சாதம், அரை லிட்டர் தயிரு, 25 லிட்டர் வாட்டர் கேன், கத்தி, எலுமிச்சம் பழம், சக்கர, சால்ட், மெட்ராஸ் டி. நகர்லேந்து உருளக்கெழங்கு சிப்ஸ், நேந்திரங்கா சிப்ஸ், பேப்பர் ப்ளேட், எட்டு பசங்களோட ட்ரெஸ் பேக்ஸ் (கூர்குக்குன்னு அவனவன் போர்வ, ஸ்வெட்டர், கொரங்குக் குல்லா, இதெல்லாம் வேற). கெளம்பிட்டோம்யா.

பெங்களுர்ல, அங்கேந்து மைசூர் போற ரோட்ல எங்கயும் ஒரு பயலும் டீ, காபி கடைய தெறக்கல. எவனாவது வந்தால்ல தெறந்துவைக்க. நடுப்பற ஒரு எடத்துல டீக்கடைய பாத்துட்டானுங்க. ப்ரேக். ட்ரைவர் தம்மு. பசங்க டீ, காபி. ட்ரைவர்கிட்ட சொல்றோம், நைட்டு அப்டியே கூர்க் போய்த்தங்கிடரோம்னு. அவருக்கு அப்பத்தான் தெரியும். . கே சொல்லிட்டார்.

அவரு பெங்களுரத் தாண்டினது இல்ல போல இருக்கு. மைசூர்ல அவரு, சுப்ரி ரெண்டு பேரும் வழியக் கேட்டுக் கேட்டு ஒரு வழியா சாமுண்டி ஹில்ஸுக்கு கொண்டாந்து வுட்டாங்க. சரியான கும்பல். நாங்க கொஞ்சம் யோசிக்கறதுக்குள்ள இருபது ரூபா க்யூவும் ரொம்பியாச்சு!!. பத்மநாபன் போய் டிக்கெட் வாங்கிண்டு வந்தார். போய் சாமுண்டேஸ்வரிய தரிசிச்சோம். வழில 20 ரூபா, 100 ரூபா, தர்ம தரிசனம் சேர்ற எடத்துல கொஞ்சம் பிரச்னை. வெளில வந்தோம். பத்மநாபன் ஒரு கண்ணுக்குட்டியோட ஃபோட்டோ எடுத்துக்க ட்ரை பண்றார். எல்லாப் பசங்களும் சேந்துக்கறாங்க. ஒரு ஃபோட்டோல ஒரு பெரிய நந்தியப் பாத்துப்புட்டு, அத விசாரிச்சினு போறோம். நந்தியத்தவிர எல்லாத்தையும் தரிசனம் பண்ணியாச்சு. நந்தி ரொம்ப தூரமாம். திரும்பி வந்துட்டோம் வண்டிக்கு. அங்க இட்லிகள காலி பண்ணிட்டு, கீழ இறங்கக் கிளம்பினா நந்தி வழில இருக்கு. போய் தரிசனம் பண்ணிட்டு, அங்க ஒரு குகை லிங்கம் இருக்கு. அதையும் பாத்துட்டு லலித மஹால்க்குப்போறோம். பத்மநாபன் அது ஒரு பேலஸ், அது, இது ஒரே கதை. போற வழில மலை மேலேந்து ரேஸ் கோர்ஸ் தெரியுது. வண்டிய நிறுத்தி ஃபோட்டோ எடுத்துண்டு, லலித மஹாலுக்கு போனா, அது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாம்!! முத்து படத்துல வர்றா மாதிரி ஒரு மஹாராஜா சேரட் அங்க இருக்கு. தலைக்கு 50 ரூபாயாம் அதுல ஒரு ரவுண்டு அடிக்க. எல்லாரும் பக்கத்துல நின்னுண்டு ஃபோட்டோ எடுத்துண்டோம், நம்ம மஹாராஜா இல்லேல்ல.

அடுத்து மைசூர் பேலஸ். ட்ரைவர் பேலஸ்ஸுக்குக் கொல்லைப்பக்கமா எங்கள விட்டுட்டு, வண்டீல ஏதோ வேல இருக்குன்னு பாக்கப்போயிட்டார். அங்கேயே ஆளுக்கு ஒண்ணு, ரெண்டு கரும்பு ஜுஸக் குடிச்சிட்டு (ஐஸ் போட்டா ஏழு ரூபா, போடாட்டி எட்டு ரூபா), விசாரிச்சுனு முன் பக்கம் டிக்கெட் கௌண்டருக்குப் போனோம். ஒருத்தருக்கு இருபது ரூபா. பேக் எல்லாம் ஸ்கேன் பண்றாங்க. கேமரா இருக்கான்னு கேக்கறாங்க. இல்லனுட்டு உள்ள போயாச்சு. கமலோட செல் கேமரால நாலஞ்சு ஃபோட்டோ எடுத்திருப்போம். ஒரு புண்யவான் வந்து புடுங்கினு போயிட்டார். நாங்க தோ, தோ மாதிரி அவர் பின்னாடியே கெஞ்சினே போறோம். ஒருத்தனும் உள்ளூர் இல்லேன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சுருக்கு. எடுக்கறவங்களையெல்லாம் அவருக்கு காமிக்கறோம். கொஞ்சம், கொஞ்சமா 500 ரூபா ஃபைன்லேந்து கீழெறங்கி, 300, 200 ஏதாச்சும் அவருக்கு குடுத்துட்டு போக சொல்றாரு. இல்லேன்னா வரும் விளைவுகளைப் பத்தி சொல்றாரு. ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் பத்மநாபன் வந்து கன்னடத்துல விளக்கி, 100 ரூபா தர்றதா பேரத்த முடிச்சு செல் ஃபோன வாங்கினு வந்தார். அப்பறம் என்ன நினச்சாங்களோ தெரியல, அவுங்களும் கண்டுக்கல, நாங்களும் கண்டுக்கல. ஒரு வேள, மஹாராஜா இருந்துருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா? இதுக்கப்பறமும் கமல் செல்லுல நாங்க ஃபோட்டோ எடுப்போமா? நோ சான்ஸ். கார்த்தி செல்லுல எடுத்தோம். மஹாராஜா சும்மா பூந்து வெளையாடிருக்கார். கண்ணாடி, விதானம், கோபுரம், தரை, செவுரு ன்னு ஒன்னத்த வுடல. எல்லாத்துலயும் அற்புதமான வேலைப்பாடுகள், செஞ்சவங்களையும் சும்மா சொல்லக்கூடாது. கூலிக்கு வேலை செய்யாம அவனவன் போட்டி போட்டுனு தன்னோட தெறமைய காமிச்சிருக்கான். நல்ல மொதலாளி. நல்ல தொழிலாளி.

மைசூர் சூ (அதான், ஜூ பா, ச்ச! வனவிலங்குகள் இருக்குமிடம்) சூப்பரா இருக்குமாம், என்ன பண்றது. டயம் இல்லியே. சாயந்தரம் நாலு மணிக்கா, ஸ்ரீரங்கப்பட்டிணம் டரியா தௌலத் பாகுக்கு போய் சேந்தோம். இது "மைசூர் புலி" திப்பு சுல்தானோட கோடைகால அரண்மனை. உள்ள போகல. லஞ்ச் புளிசாதம், பக்கோடா, . கிழங்கு சிப்ஸ், புளிக்காத தயிரு. ரெண்டு எலுமிச்சம் பழத்த நறுக்கி, ரெண்டு லிட்டர் வாட்டர் பாட்டில்ல சாற ஊத்தி, சக்கர, சால்ட்ட குத்து மதிப்பா போட்டு, தண்ணிய ரொப்பி, குலுக்கி, ஜூஸ் ரெடி. குடிச்சோம். கொறயக் கொறைய தண்ணிய ரொப்பி ரொப்பி குடிச்சோம். கெளம்பினோம். கர்னல் பெய்லி செத்துப்போன திப்பு சுல்தானோட ஜெயிலப் பாத்தோம். ஒரு பக்கம் காவேரி. சங்கிலியோட ஒரு முனை செவுத்துல. இன்னுரு முனை கைதிய கட்ட. வேணும்னா கைதி மூழ்கி சாகற அளவுக்கு தண்ணியும் ரொப்பலாம் (ராஜா படத்துலெல்லாம் பாத்துருப்போம்ல, அதே தான்). பிரிட்டிஷ் தாக்குதல்ல ஜெயிலுக்குள்ள விழுந்துருக்கற திப்புவோட ஒரு பீரங்கியும் இன்னும் அங்கேயேதான் கெடக்கு. வழில திப்புவோட ஒடம்பு கெடச்ச இடம்னு ஒரு எடத்துல கல்வெட்டு வெச்சு, சுத்தி தளம் போட்டு, கம்பி வேலி போட்டிருக்காங்க.


அத வண்டிலேந்தே பாத்துட்டு, நிமிஷாம்பா கோவில்னு ஒரு கோவில், ஸ்ரீரங்கப்பட்டினத்துல. அதுக்கிட்ட ஒரு த்ரிவேணிசங்கமம் இருக்கு. அங்க காவேரி கூட இன்னும் ரெண்டு நதிகள் சேர்றது. பாலம் இருக்கு. தோணியும் இருக்கு. அவ்ளவா ஆழம் இல்ல. தண்ணி நல்ல ஓட்டம். சாயந்தரம் நல்ல குளியல். மிஸஸ் பத்மநாபனத் தவிர அவர் கொழந்த மொதற்கொண்டு எல்லாருமே அருமையா மூழ்கிக் குளிச்சோம். அங்கேந்து மடியா!! போயி ஸ்ரீரங்கநாதர தரிசனம் பண்ணினோம். பசி. ஆனா கெளம்பனும். கடை ஒன்னும் உருப்படியா கண்ணுக்குத் தெரியல. ஒரு டீக்கடைல வடை, பஜ்ஜி, டீ, காபிய முடிச்சுட்டு, வண்டில ஏறியாச்சு.

ஹன்சூர் வழியா மடிக்கேரி (கூர்க், குடகு) போய்ச் சேரனும். நெட்ல மேப் பாத்தாச்சு. வழி ரொம்ப மோசம்னு போட்ருந்தாங்க. ட்ரைவர் இனிமே ரூட் தெரியாது. கேட்டுனே போலாம்னு தெளிவா சொல்லிட்டாரு. நாங்க ரெடி, கோவில்ல ஆரம்பிச்சு, கூர்க் வரைக்கும் ஒரு பத்து பேரையாவது விசாரிச்சினே போய் சேந்தாச்சு. இப்ப குசால்நகர் வரைக்கும் புது ரோடு போட்ருக்காங்க. சூப்பரா இருக்கு. குசால்நகர்லேந்து கூர்க் ஒரு முப்பது கி.மீ. இருக்கும். அந்த ரோடு தான் கொஞ்சம் மோசம். ஹோம் ஸ்டே இஞ்சார்ஜ காண்டக்ட் பண்ணி, ராத்திரி 12 மணிக்கு ரூமுக்குப் போய் சேந்தோம். கூர்க் குளிரும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. மூட்ட, மூட்டையா ஸ்வெட்டர், போர்வைன்னு வெயிட் தூக்கினு போயிருந்தோம். எல்லாம் வேஸ்ட். பெட் ரூம் சைசுல ரெண்டு ஹால், ரெண்டு பெட் ரூம், ரெண்டு பாத்ரூம், டாய்லெட், கிச்சென், மொட்ட மாடி. கீசர் இன்டேன் கேஸ்ல ஓடறது. அவருக்கே எப்டி அத ஆபரேட் பண்றதுன்னு தெரியல. அது இன்னொருத்தர் வீடாம், அவரு ஊர்ல இல்லியாம். சமையல் கட்டு பூட்டி இருக்கு. வேற வழி. அடுப்புக்காக அந்த பூட்ட, அவுங்க ஒத்துழைப்போட ஒடச்சோம். ட்ரைவர் அண்ணாவையும் உள்ள வந்து படுக்க சொன்னோம். காலம்பர ஆறரை மணிக்கு காலி பண்ணிடுவோம்னு சொல்லிட்டு, அலாரத்த வெச்சுட்டு, தூக்கத்த போட்டோம்.

28.12.2008, காலை ஆறு மணி. எல்லாரும் எழுந்தாச்சு. பல்ல மட்டும் தேச்சுட்டு, போற எடத்துல குளிச்சுக்கலாம்னு ப்ளான். வீட்ட சுத்தி போட்டோ எடுத்து ஒன்றை மணி நேரம் டும் ஆய்டுச்சு. மொதல் நாள் புளிசாதத்த பசங்க காலி பண்ணினாங்க. இருக்கற எடத்துலேந்து 45 கி.மீ. ல பாகமண்டலானு இன்னொரு த்ரிவேணி சங்கமம். அங்கேயே பக்கத்துல தலைக்காவேரி. தலக்காவேரில இடுப்பளவு ஆழத்துக்கு ஒரு தொட்டில தான் எல்லாரும் புண்ய ஸ்நானம். எச்ச துப்பாத, சோப்புப் போடாதன்னு போர்டுகள். குளிச்சோம். அந்த தொட்டியோட ஒரு பக்கத்துல ஒரு சின்னத் தொட்டி. அதுக்கு திருவாசி வெச்சு, ஒரு பூசாரி பூஜை பண்ணினு இருக்கார். அவர்கிட்ட போனா அந்த சின்னத்தொட்டிலேந்து சொம்புல தண்ணிய எடுத்து நம்ம மூஞ்சில ஊத்தறார். நாங்களும் ஊத்திண்டோம். பக்கத்துலையே ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனியா குளிக்க, ட்ரெஸ் சேஞ் பண்ண (ஓசி பா) இடம், ஏற்பாடு பண்ணி இருக்காங்க. ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு, டீ, காபி குடிச்சுட்டு பாகமண்டலா போய், த்ரிவேணி தீர்த்தத்தப் ப்ரோக்ஷணம் பண்ணிண்டு, அங்க இருந்த ஒரு வெஜ். மெஸ்ஸுல டிபன் சாப்டலாம்னு போனோம். நூறு ரூபா தண்டம், வேகல, உப்பு ஜாஸ்தி. அங்கேயே இன்னொன்னு மெஸ்ஸுக்குப் போயி, செகண்ட் ரௌண்ட முடிச்சோம். சுப்ரி திருட்டுக் குளியலுக்குப் போயிட்டு, எங்களத் தேடி கொஞ்ச நேரம் அலஞ்சாரு. என்னோட பேண்ட்டக் காணோம். ரூம்லேயே விட்டுட்டு வந்திருக்கேன். ஒருத்தர்மேலயும் பழியும் போட முடியல. அவருக்குப் போன் பண்ணினா, வெளில இருக்கறதாகவும், ரூம்க்கு பக்கத்து வீட்ல தான் சாவி இருக்கு, வாங்கி எடுத்துக்கோங்கன்னு சொன்னாரு. அங்க போனா, பக்கத்து வீட்டுக்காரர் ஞாயித்துக்கெழம ப்ரேயர்க்குப் போயிருக்கார். ஒரு ஆண்ட்டி, அங்க இருந்த ஒரு பொட்டிக்கடைல அவர் நம்பர வாங்கிக்குடுத்தாங்க. ரொம்ப நல்லவர். ஒடனே வந்து தெறந்து உட்டார். பேண்ட் எடுக்கறதுல ஒரு அரை மணி நேரமாவது வேஸ்ட் ஆச்சு.

ராஜா சீட்டுன்னு (ஒக்காந்துக்கற இடம்!!) ஒரு இடம். இப்ப பார்க் அமைச்சிருக்காங்க. ஒரு நாலு கால் மண்டபம். ராஜா அங்க ஒக்காந்து காத்து வாங்குவாராம். ஒண்ணும் ஸ்பெசலாத் தெரியல. உள்ளேயும் போகல. போட்டோ எடுத்துண்டு, ஓம்காரேச்வர் கோவிலுக்குப் போனோம். கோவில் பூட்டியாச்சு. மொகல், கேரளா, சாயல்ல கட்டியிருந்தாங்க. கொளம் இருந்துது. சுத்தி, சுத்தி போட்டோ எடுத்துட்டு, அபி அருவிக்கு போனோம். கொஞ்ச தூரம் நடை. மாலை நேர சூரியன். அருமையான அருவி. தொங்கு பாலம். எறங்கிப் போயி குளிக்கணும். டயம் இல்ல. ஓடறோம். குளிக்கறதுக்கு ரெடியாயினு இருந்த சுப்ரியையும், அவன் மந்திரத்துக்கு மயங்கி, அவன் கூடப் போயிருந்த முகுந்தனையும் போன்ல புடிச்சு, வண்டில இழுத்துப் போட்டுண்டோம்.

ஒரு இடம் கூட உருப்படியா சாப்ட கெடைக்கல. ஒரு வெஜ். ஹோட்டலுக்குப் போனோம். அம்பது ரூபாய்க்கு அன்லிமிடெட் மீல்ஸுன்னு போர்டு வெச்சிருந்தான். செல்ப் சர்வீஸ்தான். பசங்க போயி ஒரே தட்டுல (அதுவும் டிபன் ப்ளேட்டு) சப்பாத்தி, குருமா, சாம்பாரு, காய், சாதம்னு எல்லாத்தையும் வாங்கினு வந்துட்டானுங்க. என் மனைவிக்கு இந்த மாசம் வாய்ப்புண்ணு!! அவ சாப்பாட்டையும் பசங்க தட்டுல போட்டா. போய் மோரு சாதம் வாங்கினு வந்து சாப்டா, இதுக்கு 50 ரூபா.

பெங்களூர்ல 9.30 மணிக்கு பஸ்ஸப் புடிக்கணும். இப்போ மணி நாலு. வழில துபேரேன்னு ஒரு எடத்துல யானை பயிற்சி முகாம் இருக்கு, காவேரில உண்டான நிசர்கதமான்னு ஒரு தீவு இருக்கு. திபெத்தியர்களோட ஒரு முகாமும், புத்தருக்கு ஒரு தங்கக் கோவிலும் இருக்கு. எதப் பாக்க, எத உட.? நேரா தீவுக்குப் போனோம், ஜம்முன்னு ஒரு குளியலப் போட்டோம். சுப்ரி அவரோட வசீகர தபத்தால எல்லாரையும் கவர்ந்திழுத்தார். ஒண்ணும் சிக்கல. இனிமே எதப் பாத்தாலும், பாக்காட்டியும் பஸ்ஸப்புடிக்க முடியாதுன்னு தெளிவா தெரியுது. எனக்கு ட்ரைவர் மேல ஒரு நம்பிக்கை. அவரும் சான்ஸ் இல்லன்னுட்டார். கொழப்பம், டென்ஷன் தீந்துது. நிம்மதியா, நிதானமா அடுத்த இடத்தைப் பாக்கக் கெளம்பிட்டோம்!! டிக்கெட்டையும் கேன்சல் பண்ண முடியல. யானை கேம்ப் ரோட்லேந்து உள்ள ஒரு பத்து கி.மீ. க்கு போகனுமாம். போகலை. தங்கக் கோவில். என்னமா இருக்கு. டீம்ல மேக்ஸிமம் எல்லாருக்குமே இது முதல் தடவை. ஜெட்லி, ஜாக்கிசான் படத்துலையே பாத்துனு இருந்த கோவில். பெரிய மணி, ட்ரம்ஸ், கோவில் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசியிருக்கறதாகவும், உள்ள இருக்கற மூணு பெரிய சிலைகளுக்கும் தங்க ப்ளேட் போட்டுருக்கறதாகவும் ஒரு பிக்ஷு சொன்னார். புத்தர நமஸ்கரிச்சோம். நல்ல வேலைப்பாடுகள் அவங்க ஊர் சாயல்ல.

மைசூர் தாண்டி ரெண்டு ஹோட்டல்ல !! டின்னர முடிச்சோம். மெஜஸ்டிக்ல பசங்கள எறக்கி விட்டோம். பத்மநாபன் போய் விசாரிச்சதுல மெட்ராஸ் பஸ்ஸெல்லாம் சாந்தி நகர் பஸ் ஸ்டேண்ட்லதான் போய் புடிக்கனும்னு தெரிஞ்சுது. அவருக்கு ஒரு ஜே போட்டுட்டு, பசங்களத் திருப்பி ஏத்தினு போயி, சாந்திநகர் பஸ் ஸ்டேண்ட்ல, ரெடியா இருந்த தமிழ்நாடு விரைவு சொகுசுப் பேருந்துல ஏத்தி விட்டோம்.

29.12.2008, திங்கக்கிழமை கமல் ஆபீசுக்கு வந்தாச்சு. சுப்ரி ரெஸ்ட். கார்த்தி போட்டோவெல்லாம் நெட்ல ஏத்தினு இருக்கார். முகுந்த் ஆபீஸ். பத்மநாபன் வீட்ல நானும், என் மனைவியும் ரெண்டு நாள் ரெஸ்ட்.

25.12.2008 - வ்யாழகிழமை - கிறிஸ்மஸ் - ஆபீஸ் லீவு.
26 - ஆபீஸ்.
27, 28 - சனி, ஞாயிறு ஆபீஸ் லீவு.
29, 30 - நான் ஆபீசுக்கு லீவு.
31 - ஆபீஸ், டூர் கணக்கெல்லாம் ரெடி.
01.01.2009 - வ்யாழக்கிழமை, ஹேப்பி ந்யூ இயர், ஆபீஸ் லீவு.
2 - ஆபீஸ்
3, 4 - சனி, ஞாயிறு ஆபீஸ் லீவு.

என்ன ஒரு வர வாரம் !!!